Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது ஆசிய நாடக தாய்வான் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

60679888_2258840010868985_3055815659976916992_n.jpg?_nc_cat=111&efg=eyJpIjoidCJ9&_nc_eui2=AeEsGmIQSnfFYhQoyjCRIvWCZKkmTPfYNnwzjSxC2GYx9_YwCfoGHGdITh-PsN6TMw6vRdynW3Mvor_bPq4X-H1D4-6aJVEqk-0HUsuOwNEi5Q&_nc_ht=scontent-atl3-1.xx&oh=6aea4780d1b78ab74e49070ea955c26e&oe=5D689E67

 

அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம்

செய்துகொள்ள சட்ட அங்கீகாராம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கிழக்காசியா கண்டத்தில் உள்ள நாடுகளில் ஒன்றான தைவானிலும் இந்த கோரிக்கை சமீபகாலமாக வலுத்து வந்தது.

இதுதொடர்பாக, அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரிக்கும் வகையில் 24-5-2019 அன்றைய தினத்துக்குள் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என இரண்டாண்டு கெடு விதித்து கடந்த 2017-ம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்கள் மீது கடந்த சில நாட்களாக விவாதம் நடைபெற்று இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து இணைந்து வாழ்வதற்கு ஆதரவாக 66 எம்.பி.க்களும்  எதிராக 27 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.
இதன் மூலம் ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்து கொள்வதை அங்கீகரித்த முதல் நாடு என்ற சிறப்பை தைவான் பெற்றுள்ளது.
ஓரின சேர்க்கையை இலங்கையில் அனுமதிக்க இந்த நல்லாட்சி அரசு 3 தடவைகள் அமைச்சரவைக்கு யோசனை கொண்டுவந்ததாக முன்னாள் நல்லாட்சி அமைச்சர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க சட்டம் போட்டிட்டியள் சரி. இயற்கையின் பிரகாரம்.. ஓர் உயிரினம்.. எனப்படுவது.. இயற்கையாக அதன் வளமான சந்ததியை பெருக்கக் கூடிய ஒன்றாகும். இந்தக் கூட்டம்.. அந்த உயிரின வரம்புக்குள் வருமா என்ன..??!

மேலும் ஆண் - பெண் கலப்பு என்பது சாதாரண ஒன்றல்ல. அதுவே மனித இனம் கூர்ப்படைந்து செல்வதற்கும் சூழலுக்கு ஏற்ப இயல்புகளைப் பெற்று வாழ்ந்து பெருகவும்.. காரணம். 

இயற்கை அப்படி இருக்க..

இப்படியான இயற்கைக்கு எந்த வகையிலும் உதவாத தனிநபர் இச்சைகளுக்கு சட்ட இசைவுகள் வழங்குவது எப்படி சட்டமாகும்..?????!

Edited by nedukkalapoovan

ஒருபால் திருமணத்திற்கான சட்ட அங்கீகாரம் படிப்படியாக ஏனைய ஆசிய நாடுகளுக்கும் பரவி ஒருநாள் இலங்கைக்கும் வரும்.

Edited by Lara

4 hours ago, colomban said:

ஓரின சேர்க்கையை இலங்கையில் அனுமதிக்க இந்த நல்லாட்சி அரசு 3 தடவைகள் அமைச்சரவைக்கு யோசனை கொண்டுவந்ததாக முன்னாள் நல்லாட்சி அமைச்சர்கள் குற்றம் சுமத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஏற்கனவே சிங்களவர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. சட்டபூர்வ அனுமதி காலம் தாழ்த்தி தான் கொண்டு வருவார்கள். (ஏனைய நாடுகளில் நடந்தது, நடப்பது போல் சட்டபூர்வ அனுமதிக்கு முன் ஓரினச்சேர்க்கையை பரப்புதல் என்ற அடிப்படையில்)

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

இலங்கையில் ஏற்கனவே சிங்களவர்கள் மத்தியில் ஓரினச்சேர்க்கை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. சட்டபூர்வ அனுமதி காலம் தாழ்த்தி தான் கொண்டு வருவார்கள். (ஏனைய நாடுகளில் நடந்தது, நடப்பது போல் சட்டபூர்வ அனுமதிக்கு முன் ஓரினச்சேர்க்கையை பரப்புதல் என்ற அடிப்படையில்)

இலங்கையில்... 50 வீதமான புத்த பிக்குகள் ஓரினச் சேர்க்கையாளர்களாம்.
இது சட்ட பூர்வமாக்கப் பட்டால், பிக்குகளுக்கு கொண்டாட்டம் தான். :grin:

46 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையில்... 50 வீதமான புத்த பிக்குகள் ஓரினச் சேர்க்கையாளர்களாம்.
இது சட்ட பூர்வமாக்கப் பட்டால், பிக்குகளுக்கு கொண்டாட்டம் தான். :grin:

பிக்குகளுக்கு மட்டுமல்ல பல அரசியல்வாதிகளுக்கும் கொண்டாட்டம் தான். ஆனாலும் வெளிக்கு தம்மை ஓரினச்சேர்க்கையாளர்களாக காட்டிக்கொள்ள மாட்டார்களே. 😎

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சகல இனங்களையும் ஒன்றிணைக்க அதன் நல்லாட்சி அரசியல் தலைவர்கள் படாத பாடு படுகின்றனர். இதில் ஓரினம் சேர்ந்தால் என்ன, பல இனம் சேர்ந்தால் என்ன. எனக்கொன்றும் விளங்கவில்லை அண்ணே. 

roflphotos-dot-com-tamilstickers-20170327100826.jpg

37 minutes ago, Paanch said:

இலங்கையில் சகல இனங்களையும் ஒன்றிணைக்க அதன் நல்லாட்சி அரசியல் தலைவர்கள் படாத பாடு படுகின்றனர். இதில் ஓரினம் சேர்ந்தால் என்ன, பல இனம் சேர்ந்தால் என்ன. எனக்கொன்றும் விளங்கவில்லை அண்ணே. 

roflphotos-dot-com-tamilstickers-20170327100826.jpg

பாஞ்ச் அவர்களின் பாஞ்ச் வரிகள். எப்பிடி இப்பிடில்லாம் யோசிக்கிறீங்கள். 😂

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

ஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்கள்.

இவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியே அமெரிக்கா ஐரோப்பா ஆசியா என்று எல்லோரும் ஓரினச் சேர்க்கையில் கொடிகட்டி பறக்க முஸ்லீம் நாடுகள் ஒன்றுக்கு இரண்டு மூன்று திருமணம் செய்து இனத்தைப் பெருக்கி உலகிலேயே அதி கூடிய மக்கள் தொகையாக வரப் போகிறார்கள்.

33 minutes ago, Nathamuni said:

ஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்கள்.

இவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.

ஓரினச்சேர்க்கையை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் கூட பலர் தாம் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பதை வெளியில் கூற மாட்டார்கள். சிலர் மட்டுமே கூறுவர்.

இனப்பெருக்கத்தை குறைப்பதற்காக இப்படியானவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் படங்கள், நாடகங்கள், பாடல்களில் gay, lesbien, bisexual காட்சிகளை அனேகமாக உட்புகுத்தி மக்களை அதன்பால் ஈர்க்க முற்படுவர். இதை இப்ப இந்திய படங்களிலும் ஆரம்பிக்க வெளிக்கிட்டார்கள். பத்மாவதி (padmavati/padmaavat) படத்தில் ரன்வீர் சிங்கை bisexual ஆளாக காட்டியிருப்பார்கள்.

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாட்டின்மீது படையெடுத்துச் சென்ற கிட்லர் பலவாரங்கள் ஆளரவமில்லாத வனத்தில் தங்க நேரிட்டதாம். அச்சமயம் படை வீரர்களுக்கு வீட்டுப் பிரிவு (Home sick) நோய்வந்து போரில் ஆர்வம் குறைந்ததும் கண்டு இந்த ஓரினச் சேர்க்கையை முதன்முதலில் சட்டபூர்வமாக்கி அனுமதித்ததாகச் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலே இருப்பவர்கள் இலங்கயில் இணைந்து வாழூம் ஒரினச் சேர்கையாளர்கள். பெண் வடிவத்தில் இருப்பவர். ஓர் ஆண். அவரை ஓர் பெண்ணாக இலங்கை அரசு அங்கிகரித்துள்ளதாக பேட்டியில் குறிப்பிடுகின்ரார்.(சிஙகளத்தில் உள்ளது)

 

t

 

1 hour ago, colomban said:

மேலே இருப்பவர்கள் இலங்கயில் இணைந்து வாழூம் ஒரினச் சேர்கையாளர்கள். பெண் வடிவத்தில் இருப்பவர். ஓர் ஆண். அவரை ஓர் பெண்ணாக இலங்கை அரசு அங்கிகரித்துள்ளதாக பேட்டியில் குறிப்பிடுகின்ரார்.(சிஙகளத்தில் உள்ளது)

எனக்கு சிங்களம் தெரியாது. காணொளியிலுள்ள பெண் வடிவத்தில் இருப்பவர் ஒரு ஆண் என்றால் அவர் transgender (transwoman) அல்லவா? அவர் தான் பெண்ணாக இருக்க விரும்பியதை இலங்கை அரசு அங்கீகரித்துள்ளது என்று கூறுகிறீர்களா?

 

Edited by Lara

  • கருத்துக்கள உறவுகள்

ஆண் பெண் பிடிச்ச காலத்திலேயே ... எல்லாம் பிறகு பார்க்கலாம் என்று 
தாமத்தித்து தனிமரமாகி போச்சே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருக்க 

 இனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால் 
நாங்கள் என்ன செய்கிறது? 

மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதிக்கிற மாதிரி இருக்கு 
இப்ப வாற செய்திகள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

இனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால் 
நாங்கள் என்ன செய்கிறது? 

 

இதே முறைப்பாட்டை பெண்ணும் செய்யலாமல்லவா?

 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

இதே முறைப்பாட்டை பெண்ணும் செய்யலாமல்லவா?

 

காலையில் வந்து நெஞ்சில் பால்வார்த்து 
 நம்பிக்கையை ஊட்டியதுக்கு நன்றி !

ஆண்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் ஓடிப்போக கடவ !

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

காலையில் வந்து நெஞ்சில் பால்வார்த்து 
 நம்பிக்கையை ஊட்டியதுக்கு நன்றி !

ஆண்கள் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் ஓடிப்போக கடவ !

மருதர்,

பிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....

இதுதான் நிஜம்.....

ஒரு ஆணின் விந்தில், 500 கோடி உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.

இப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.

வளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.

இதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.

ஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.

எதிர்காலம் பெண்கள் கையில்...
 

1 hour ago, Maruthankerny said:

ஆண் பெண் பிடிச்ச காலத்திலேயே ... எல்லாம் பிறகு பார்க்கலாம் என்று 
தாமத்தித்து தனிமரமாகி போச்சே வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு இருக்க 

 இனி பெண்ணே பெண்ணை கொண்டு போனால் 
நாங்கள் என்ன செய்கிறது? 

மரத்தால் வீழ்ந்தவனை மாடேறி மிதிக்கிற மாதிரி இருக்கு 
இப்ப வாற செய்திகள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மருதர்,

பிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....

இதுதான் நிஜம்.....

ஒரு ஆணின் விந்தில், 500 கோடி உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.

இப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.

வளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.

இதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.

ஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.

எதிர்காலம் பெண்கள் கையில்...
 

பிறந்த எங்களை வாழ விட்டால் போதும் 
இன்னும் ஒரு 50 வருஷம் வண்டியை ஒட்டி விட்டு போய்விடுவோம்.

பிறகு இவகள்  ஆட்ட காரிகள் என்ன எண்டாலும் செய்து தொலைக்கட்டும்.

வாழ்க்கை ஒரு வடடம் என்பார்கள் 
சித்தர் காலத்தில் இந்த பெண் சவகாசமே வேண்டாம் அன்று அவர்கள் 
காடுகளுக்குள் ஒதுங்கினார்கள் 
அப்படியே திரும்பி வாற மாதிரி இருக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Nathamuni said:

மருதர்,

பிரச்சனை என்னெண்டா..... வரும் காலத்தில் ஆம்பிளையளே தேவையில்லை.....

இதுதான் நிஜம்.....

ஒரு ஆணின் விந்தில், 500 கோடி உயிரணுக்கள் உள்ளன. அது போதும்.

இப்பவே, கோழிகளில் பேட்டுக் கோழி மட்டுமே இறைச்சியாக வருகின்றன. சேவல் குஞ்சுகள் ஒருவார வயதில் கொல்லப் பட்டு, நாய் உணவாக போகின்றன.

வளரும் போது முட்டை. வளர்ந்ததும் இறைச்சி.

இதுவே ஆடு, மாடு நிலைமை. வளரும் போது பால், வளர்ந்ததும் இறைச்சி.

ஆம்பிளை சிங்கம் என்று மீசை முறுக்கேலாது இனி. சட்டம் இருக்கிற படியால் தப்பி தவறி பிறந்து விடடால், தப்பி பிழைக்கலாம். இல்லாவிடில் ஸ்கேன் பண்ணும் போது கண்டு பிடித்து அழித்து விடுவார்கள்.

எதிர்காலம் பெண்கள் கையில்...
 

 

இன்றைய சமுதாயத்தில் இருப்பவர்கள் அல்லது எதிர்கால சமுதாயத்தினர்  இப்படியான கொடூரங்களை பார்த்த பின்னர் தாவர உணவு வகைகளையே நாடுகின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Nathamuni said:

ஓரின சேர்க்கையாளர், ஒருவரை ஒருவர், சட்டபூர்வமான முறையில், எனது கணவர் என்றோ, பெண்கள் ஆயின், எனது மனைவி என்றோ அழைப்பார்கள்.

இவர்களது தம்பாத்திய உறவு என்பது இயற்கைக்கு மாறானது என்பதே நிஜமாகும்.

 

 இயற்கையையும் மிருகங்கள் பறவைகள் போன்றவற்றை பார்த்தே மனிதன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்.

அவைகள் மாறவேயில்லை.....

ஆனால் மனிதனோ!!!!!

இயற்கைக்கு மாறானதை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 இயற்கையையும் மிருகங்கள் பறவைகள் போன்றவற்றை பார்த்தே மனிதன் வாழ்கையை அமைத்துக்கொண்டான்.

அவைகள் மாறவேயில்லை.....

ஆனால் மனிதனோ!!!!!

இயற்கைக்கு மாறானதை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்

  இனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில்,  ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ? ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ? மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக  'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில்  எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்). 

              பாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல. 

            மற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன ? பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

  இனப்பெருக்க அடிப்படையில் சமநிலை (Balancing ற்கு எனது சுமாரான மொழிபெயர்ப்பு) என்னும் அணுகுமுறையில்,  ஓரினச்சேர்க்கை விடயத்தில் நான் இன்னும் எனக்குள் கருத்தினை அமைத்துக் கொள்ளவில்லை. ஆனால் இயற்கைக்கு முரணான அல்லது ஒழுக்கக் கேடான என்னும் கோணத்தை நான் ஏற்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள் பிரச்சினைகளைத் தவிர்த்து பரஸ்பர அன்புடனும் அமைதியுடனும் வாழ உறவு முறைகள் கொண்ட சமூகத்தையும் அதற்கான விதிகளையும் அமைத்தார்களே, அது இயற்கைக்கு முரண் இல்லையா ? ஆடை உடுத்தியது முதற்கொண்டு மனித நாகரிகமே இயற்கைக்கு முரண்தானே ? மேலும் வியப்பாக, சூழ்நிலை அடிப்படையில் விலங்குகளிடம் ஒருபால் உறவு நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளது. ஒழுக்கம் என்றால் அது இடத்தையும் காலத்தையும் பொருத்தது. உதாரணமாக  'ஒருவனுக்கு ஒருத்தி' என்பது எண்ணிக்கையில் பால்நிலைச் சமன்பாடு உள்ள சமூகத்திற்கானது (தங்கள் எண்ணிக்கையைப் பெருக்க இதில் சமயக் கோட்பாடுகள் வகுப்பதில்  எனக்கு உடன்பாடில்லை என்பது வேறு விடயம்). 

              பாலியல் விலகல்களில் (sexual deviations) Paedophilia (குழந்தைகளிடம் ஈர்ப்பு எனும் கயமை), Beastiality (விலங்குகளை நோக்கிய ஈர்ப்பு) , sexual sadism (உடலுறவில் மற்றவரைப் துன்புறுத்தல்) போன்றவற்றை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இவற்றில் அறியாதார்க்கும், வலிமை குறைந்தோர்க்கும் அநீதி இழைக்கப்படுவது தெளிவு. இத்தகைய பாலியல் விலகல் உணர்வுகள் சிலரிடம் இயற்கையாய்த் தோன்றினாலும் அவற்றை எதிர்த்துப் போராடத்தான் வேண்டும் - மனித நாகரிகத்தைப் போல. 

            மற்றபடி காதல், அன்பு, புரிதல் இவையெல்லாம் வயதிலும் அறிவிலும் முதிர்ந்தோரிடையே ஏற்படின், அன்னார் எப்பாலினத்தவராயினும், அவர் உரிமையில் தலையிட சமூகத்திற்கு உரிமையுண்டா என்ன ? பரஸ்பர சம்மதத்தில் உறவு கொள்ளும் வயது வந்தோர் விடயத்தில் சட்டம் எனும் பெயரில் சாவித் துவாரம் வழியாகப் பார்க்கும் அநாகரிகத்தை மனித சமூகம் என்று கைவிடப் போகிறது?

சரியான கருத்து. காமம் - அவரவர் விருப்பம், நாம் சொல்வதற்கு ஏதுமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

LBGTi பற்றிய எனது கருத்து. LBGTi என்பது இன்றைக்கு தோன்றிய ஒன்று இல்லையே. புராண இதிகாசங்களில் இவர்களை பற்றி உள்ளது. உதாரணமாக அரவான், கூவாகம் திருநங்கைகள் திருவிழா பற்றிய கதைகள். அதே போல பல பேரரசுகளில் இவர்களைப்பற்றிய குறிப்புகள் உதாரணத்திற்கு ஒன்று:  மொகலாய பேரரசின் அரண்மனை, அந்தபுர காவலர்களாக இந்த அரவானிகள் இருந்துள்ளது பற்றிய குறிப்புகள். மற்றும் வாத்சாயணர் நூலின் படி பண்டைய இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் உறவுகள் இருந்ததை வைத்தே மீரா நாயர் காம சூத்திரவை படமாக  எடுத்தார். அதே மாதிரி 20 வருடங்களுக்கு முன்பு தீபா மேத்தா சாதரண இரு பெண்களுக்கிடையான உறவை தனது Fire எனும் திரைப்படத்தின் கருப்பொருளாக்கி எடுத்தார். அதனால் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய நிலையை நாங்கள் கடந்துவந்துவிட்டோம்.

என்னைப்பொறுத்தவரையில், LBGTi என்பது எமது சமூகத்தில் ஒரு அங்கம். தவிர்க்க முடியாத அங்கம். அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு, காமம் மட்டுமல்ல அவர்களது நோக்கம், பரஸ்பர புரிந்துணர்வு, அன்பு, தோழமை, காதல் என்று எல்லாமே உண்டு. அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி எமக்கு தெரியாது. அதனால் அவர்களையும், அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்பதே நாகரிகமான, பண்பட்ட மனிதர்களின் செயல்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ரஞ்சித் said:

சரியான கருத்து. காமம் - அவரவர் விருப்பம், நாம் சொல்வதற்கு ஏதுமில்லை. 

காமம் அவரவர் விருப்பம் என்பது என்னமோ உண்மைதான்.

நாய்,ஆடு,கழுதை போன்ற மிருகங்களிடமும் உடலுறவு கொள்கிறார்கள் அதுவும் சரிதானே. ஏன் கூடப்பிறந்த சகோதர சகோதரிகளிடமும் காமம் கொண்டு உடலுறவு வைத்துக்கொள்கின்றார்கள்.ஏன் பெற்ற தாயிடம் கூட........
காமம் அவரவர் விருப்பம். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.