Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு சுயதொழிலில் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

சுயத்தொழிலால் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

(ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து பத்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதுபற்றிய, பிபிசி தமிழின் மீள்பார்வை தொடரின் ஐந்தாவது பகுதி இது.)

யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட பலர் இன்றும் தமது எதிர்காலத்தை நோக்கி சிந்தித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இறுதிக் கட்ட யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு, இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள பெண் ஒருவர் முல்லைத்தீவில் வாழ்ந்து வருகிறார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலுள்ள கிருஷ்ணதாஸ் சாய்ராணிதான் அவர். கிருஷ்ணதாஸ் சாய்ராணியின் கணவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியாக செயற்பட்டுள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தத்தின் இறுதித் தருணத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் சாய்ராணியின் கணவர் உயிரிழந்தார்.

சுயத்தொழிலால் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

அதனைத் தொடர்ந்து, யுத்தம் வலுப்பெற்ற நிலையில், 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து, இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் சாய்ராணி சென்றுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த முகாமொன்றில் தனது அம்மா மற்றும் மகனுடன் வாழ்ந்த அவர், அந்த இடத்திலேயே தனது சுயதொழிலை ஆரம்பித்துள்ளார்.

தனது இரு தங்கத் தோடுகளை ஒரு வர்த்தகரிடம் வழங்கி, அதற்கு 1300 ரூபாய் பெறுமதியாக பப்பட மா மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பு ஆகியவற்றை கொள்வனவு செய்துள்ளார்.

இந்த இரு பொருட்களை வைத்துக் கொண்டு தனது சுயத்தொழிலை ஆரம்பித்த சாய்ராணி, இன்று தனது உற்பத்திகளை சர்வதேச நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு 10 வருடம் என்ற குறுகிய காலத்திற்குள் முன்னேறியுள்ளார்.

ரசாயண கலவைகள் அற்ற இயற்கை பாரம்பரிய மூலிகை உணவு உற்பத்தி, இன்று அவரை சர்வதேச அளவிற்கு செல்ல கைக்கொடுத்துள்ளது.

சுயத்தொழிலால் சர்வதேச அளவில் சாதித்த சாய்ராணி

குறிப்பாக, இன்று அவரது உற்பத்தி பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அது மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாய்ராணி இன்று தொழில்வாய்ப்புக்களையும் வழங்கியுள்ளமையும் பாராட்டத்தக்கது.

மூலப்பொருள் கொள்வனவில் மாத்திரமே தாம் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக குறிப்பிட்ட அவர், தற்போது தமது உற்பத்திக்கு பெரும் வரவேற்பு காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், தனது உற்பத்திகளில் எந்தவித ரசாயனங்களும் சேர்க்கப்படவில்லை என்பதை வரவேற்கும் வகையில் இலங்கை அரசாங்கம் அவருக்கு தேசிய விருது வழங்கியுள்ளது.

அது மாத்திரமன்றி, சாய்ராணியின் உற்பத்தியை ஊக்கப்படுத்த எதிர்காலத்தில் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க உலக வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சாய்ராணி.

https://www.bbc.com/tamil/sri-lanka-48319110

வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தான் உண்மையான சாதனைப் பெண். குறைந்த வளத்தோடு.. சொந்த மண்ணில் இருந்து.. நிமிர்ந்து நிற்கும்.. தமிழிச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.பலருக்கு முன் மாதிரி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..,💐

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

அது மாத்திரமன்றி, சாய்ராணியின் உற்பத்தியை ஊக்கப்படுத்த எதிர்காலத்தில் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க உலக வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் சாய்ராணி. 

தமிழினப் படுகொலையின் நிதிப் பங்காளர்கள், சாய்ரணி போன்றவர்கள் அழிவிலும், தமிழினப் படுகொலைக்கு சொறி லங்காவிற்கு நிதி வழங்கிய உலகவங்கி ஓநாய்கள், தற்போது சாரணி போன்றவர்கள் களையும் கையையும் முறித்து விட்டு, ஊன்று கோலும், கரண்டியும் கொடுக்கின்றனர்.  

இந்த பயங்கரவாத உலக வாங்கி ஓநாய்களை நம்பாதீர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kadancha said:

தமிழினப் படுகொலையின் நிதிப் பங்காளர்கள், சாய்ரணி போன்றவர்கள் அழிவிலும், தமிழினப் படுகொலைக்கு சொறி லங்காவிற்கு நிதி வழங்கிய உலகவங்கி ஓநாய்கள், தற்போது சாரணி போன்றவர்கள் களையும் கையையும் முறித்து விட்டு, ஊன்று கோலும், கரண்டியும் கொடுக்கின்றனர்.  

இந்த பயங்கரவாத உலக வாங்கி ஓநாய்களை நம்பாதீர்கள்.  

அவை ஓநாய்கள்... அதில் மாற்றுக்கருத்தில்லை. 

அதற்காக இந்த மான்களை விட்டு அவற்றை வேட்டையாட முடியாது.

இந்த மான்கள்.. அந்த ஓநாய்கள் உலகத்தில் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம். அந்த வகையில் இந்த மான்கள் தப்பிப்பிழைக்க வழிகாட்டுதலே இந்தச் சந்தர்ப்பத்தில் தகும். 

வாழ்த்துக்கள்.

இவ்வாறு ஊருக்கு ஒரு பெண் இருந்தால் அது சமுகத்தின் பொருளாதார வளர்ச்சிற்கு வழியிட்டு அவர்களின் அரசியல் விடுதலைக்கும் வழிசமைக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்

 வாழ்த்துக்கள். தன்னம்பிக்கை உள்ளவர்கள் சாதிப்பார்கள் என்பதற்கு ஒரு சாட்சி.

Edited by கிருபன்

வாழ்த்துக்கள்.

உலக வங்கியுடன் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களை பயன்படுத்தி தாம் நினைப்பதை அரங்கேற்றப்பார்ப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.