Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம்கள் மீது வெறுப்­ப­டையச் செய்­வதை ஊட­கங்கள் தவிர்க்க வேண்­டி­யது அவ­சியம் -ரவூப் ஹக்கீம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் மீது வெறுப்­ப­டையச் செய்­வதை ஊட­கங்கள் தவிர்க்க வேண்­டி­யது அவ­சியம் -ரவூப் ஹக்கீம்

இன்­றைய பதற்­ற­மான சூழ்­நி­லையில் சந்­தே­கங்­களும், நிச்­ச­ய­மற்ற தன்­மையும் மக்­க­ளது உள்­ளங்­களில் குடி­கொண்­டுள்ள வேளையில், சமகங்­க­ளுக்­கி­டையில் அமை­தியும் ஒற்­று­மையும் நிலவச் செய்வதற்கு உரிய பங்­க­ளிப்பைச் செய்­வது ஊட­கங்­களின் கடமையும், பொறுப்­பு­மாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

hakeem.jpg

பெரும்­பான்மை சமூ­கத்­தினர் முஸ்­லிம்கள் மீது வெறுப்­ப­டையக் கூடி­ய­வாறு சாதா­ரண சம்­ப­வங்­களை கூட ஊதிப் பெருப்­பித்து பூதாக­ர­மாக்­கு­வதை ஊட­கங்­களில் பணி­பு­ரிவோர் தவிர்த்து கொள்ள வேண்­டு­மென வின­ய­மாக வேண்டிக் கொள்­வ­தா­கவும் அவர் கூறி­யுள்ளார்.

நாட்டின் பிர­தான செய்தி ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்கையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

உயிர்த்­தெ­ழுந்த ஞாயிறு தினத்­தன்று தீவி­ர­வாத முஸ்­லிம்கள் சிலர் மேற்­கொண்ட கீழ்த்­த­ர­மா­னதும் மிலேச்­சத்­த­ன­மா­ன­து­மான படுகொ­லை­களின் விளை­வாக பெரும்­பா­லான முஸ்­லிம்கள் அச்சத்­திலும், அதிர்ச்­சி­யிலும் ஆழ்ந்து அவ­திப்­ப­டு­கின்­றனர்.  

இந்த இக்­கட்­டான வேளையில் மேற்­கொள்ளும் நோன்பில் மிக்க பயத்­தி­னூ­டாக இலங்கை முஸ்­லிம்கள் தாம் இத்­த­கைய ஆபத்தில் சிக்கிக் கொள்­வ­தற்கு வழி­கோ­லிய ஏதுக்கள் பற்றி சுய­ப­ரி­சோ­தனை செய்து கொள்ள வேண்­டிய அவ­சியம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 

பிர­தான ஊட­கங்­க­ளினால் தொடர்ச்­சி­யாக மேற்கொள்ளப்பட்டுவரும் மிகவும் பார­தூ­ர­மான செயற்­பா­டு­களை தளர்த்­தி­னா­லே­யன்றி சகிப்­புத்­தன்­மை­யோடும், பச்­சாத்­தா­பத்­தோடும் சுய­வி­மர்­ச­னத்­திற்­கான வழி­வ­கை­களை கண்­ட­றி­வது எமது சமூ­கத்தைப் பொறுத்­த­வரை மிகவும் சிக்­க­லான காரி­ய­மாக ஆகி­விடும். 

அர­சியல் ரீதி­யாக நெறிப்­ப­டுத்­தப்­படும் ஊடக நிறு­வ­னங்கள் ஒரு சமூ­கத்­த­வரை மற்­றொரு சமூ­கத்­தவர் மீது ஆத்­தி­ர­மூட்டச் செய்­வதன் மூலம் மோதலை வளர்ப்­ப­தல்­லாது, அர­சாங்­கத்­தையும் ஆளும் தரப்­பி­லுள்ள அர­சியல் கட்­சி­க­ளையும் அவ­மா­னத்­திற்கு உள்­ளாக்­கு­வ­தாகும். சில பிர­தான ஊட­கங்கள் “இஸ்­லா­மோ­போ­பியா” எனப்­படும் இஸ்­லாத்தின் மீதான பீதி மனப்­பான்­மையை நய­வஞ்­ச­கத்­தன்­மை­யோடு கையாண்டு, சட்டம் தனது கட­மையை நிறை­வேற்­று­வ­தற்கு முன்­னரே தாமாக தீர்ப்பை வழங்­கி­வி­டு­கின்­றன. 

அரசியல் உள்நோக்கங்கள் கொண்ட சக்திகள் அரசாங்கத்தின் மீது அடர்ந்தேற மக்களை தூண்டுகின்ற வேளையில், அரசாங்கம் அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்; போது ஊடகங்கள் தமது சொல்லாட்சியை உரிய முறையில் கையாள்வதற்கான பாரிய பொறுப்பை சுமந்திருக்கின்றன.

 

http://www.virakesari.lk/article/57181

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பிர­தான ஊட­கங்­க­ளினால் தொடர்ச்­சி­யாக மேற்கொள்ளப்பட்டுவரும் மிகவும் பார­தூ­ர­மான செயற்­பா­டு­களை தளர்த்­தி­னா­லே­யன்றி சகிப்­புத்­தன்­மை­யோடும், பச்­சாத்­தா­பத்­தோடும் சுய­வி­மர்­ச­னத்­திற்­கான வழி­வ­கை­களை கண்­ட­றி­வது எமது சமூ­கத்தைப் பொறுத்­த­வரை மிகவும் சிக்­க­லான காரி­ய­மாக ஆகி­விடும். 

ஊடகங்களில் உங்கடை இனத்தை நல்லவர்கள் போல் எழுத நீங்கள் மற்றைய இனத்துக்கு என்ன நல்லது செய்து இருகிறீர்கள் ? செய்வது எல்லாம் உங்கடை இனம் வாழ்ந்தால் காணும் எனும் சுயநலம் சிறுபான்மை இனம் இன்னொரு சிறுபான்மை இனத்துடன் அனுசரிச்சு போகணும்.

சிங்கள அரசியல்வாதிகளின் ஏக்கம் இந்த முஸ்லீம் கூட்டமும் தமிழ் கூட்டமும் அடிபட்டு செத்து போகட்டும் என்பதில் மைதிரி தொடக்கம் மகிந்த மட்டும் ஒற்றுமையாய் நிக்கினம் . நீங்கள் என்னடா என்றால் நிறைய பிள்ளைகளை பெற்று நாடு பிடிக்கலாம் எனும் கனவில் மிதகிரீன்ங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

தலையிடியும், காச்சலும் தனுக்கு வந்தால் தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

தலையிடியும், காச்சலும் தனுக்கு வந்தால் தான் தெரியும்.

எப்படி என்றாலும் இவர்களை போற்ற வேண்டும்.ஏனென்றால் இவ்வளவு நடந்தும் துணிந்து எதிராக கதைக்கிறார்களே.
நம்பிக்கையில்லா பிரேரணை எனும் போது முடிந்தால் செய்து பாருங்கள் என்று சவாலும் விடுகிறார்கள்.

 

6 hours ago, பெருமாள் said:

ஊடகங்களில் உங்கடை இனத்தை நல்லவர்கள் போல் எழுத நீங்கள் மற்றைய இனத்துக்கு என்ன நல்லது செய்து இருகிறீர்கள் ? செய்வது எல்லாம் உங்கடை இனம் வாழ்ந்தால் காணும் எனும் சுயநலம் சிறுபான்மை இனம் இன்னொரு சிறுபான்மை இனத்துடன் அனுசரிச்சு போகணும்.

இப்படியான தலைவர்கள் எமக்கில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படி என்றாலும் இவர்களை போற்ற வேண்டும்.ஏனென்றால் இவ்வளவு நடந்தும் துணிந்து எதிராக கதைக்கிறார்களே.
நம்பிக்கையில்லா பிரேரணை எனும் போது முடிந்தால் செய்து பாருங்கள் என்று சவாலும் விடுகிறார்கள்.

 

இப்படியான தலைவர்கள் எமக்கில்லையே.

இது இங்கைமட்டும் இன்னும்  பல இடங்களல்.இதத்தான் கெத்து என்டு சொல்லுது.எங்கடயல் இதை பவிச்சு வெளிநாட்டுக்கு ஓட வெளிக்கிடுங்ள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படி என்றாலும் இவர்களை போற்ற வேண்டும்.ஏனென்றால் இவ்வளவு நடந்தும் துணிந்து எதிராக கதைக்கிறார்களே.
நம்பிக்கையில்லா பிரேரணை எனும் போது முடிந்தால் செய்து பாருங்கள் என்று சவாலும் விடுகிறார்கள்.

 

இப்படியான தலைவர்கள் எமக்கில்லையே.

ஏன் எங்கடை சம்பந்தனாருக்கு என்ன குறைச்சல் எண்டு கேக்கிறன்....முந்தநாளும் அறிக்கை விட்டவர் தானே?
ரெலிபோன் அடிச்சால் ரெலிபோனை தூக்கார்...
உதவி கேக்கப்போனால் நியூஸ்பேப்பர் படிச்சுக்கொண்டு கேட்பார்.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஏன் எங்கடை சம்பந்தனாருக்கு என்ன குறைச்சல் எண்டு கேக்கிறன்....முந்தநாளும் அறிக்கை விட்டவர் தானே?
ரெலிபோன் அடிச்சால் ரெலிபோனை தூக்கார்...
உதவி கேக்கப்போனால் நியூஸ்பேப்பர் படிச்சுக்கொண்டு கேட்பார்.....

உந்தக் கோதாரிகளுக்காகத் தானே 55 வயதில பென்சன் கொடுக்கிறவங்கள்.

இது வைக்கல் பட்டடை நாய் மாதிரி.

முஸ்லிம்கள் கள்ளக்காணிகள் பிடிப்பதையும் ஏனைய சமயத்தவர் வெறுப்படையும் விதத்திலும் அடாவடித்தனமாக நடந்துகொள்வதையும் பள்ளிவாசல்கள் தினமும் 5 தரம் அயலவரை வெறுப்பேற்றுவதையும் முதலில் நிறுத்த வேண்டும் என்று வினயமாக கேட்டுக்கொள்கிறோம்!

புலிகள் மற்றும் தமிழர்களை பயங்கரவாதிகள் என்று முஸ்லிம்கள் பிரச்சாரம் செய்து வெறுப்பேற்றியது மட்டுமல்லாமல், இன அழிப்பை அரங்கேற்ற இலங்கை அரசுடன் முற்றுமுழுதாக துணைபோன நாட்களை நினைத்துப்பார்த்தால், தமிழர்களின் இக்கட்டான நிலையை பயன்படுத்தி தமிழர்கள் பகுதிகளை ஆக்கிரமித்த நாட்களை நினைத்துப்பார்த்தால் அதைவிட இப்பொழுது நடப்பதொன்றும் பெரிய விடயமில்லை.

இலங்கையை குழப்ப நிலையில் வைத்திருப்பது உள்நாட்டில், வெளிநாட்டில் உள்ள பலருக்கு தேவை என்பதால் மீடியாக்களும் அதன் வழி இப்பிடி தான் நடக்கும். 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.