Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன கணவன் பற்றி தகவல் தாருங்கள் ; கைக்குழந்தையுடன் கணவனை தேடி அலையும் முல்லைத்தீவு பெண் !

Featured Replies

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடொன்று  பதிவு செய்யப்பட்டுள்ளது .

 

IMG_5642_1600_1067.JPG

புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தர் கடந்த 07.10.2019 இரவு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று சாப்பாடு வாங்கிவருவதாக மனைவிக்கு சொல்லிவிட்டு சென்ற நிலையில் வீடுதிரும்பவில்லை இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பன அருகில் உள்ள ஒழுங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன .

 

thanushan.jpg

தனது கணவர் காணாமல் போனது பற்றி கருத்து தெரிவித்த மனைவி  கராத்தே வகுப்புகளை நடத்திவரும் எனது கணவர்  சமூக செயற்பாட்டாளராவார். போரால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவி திட்டங்களை பெற்று  வழங்கி வரும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருபவர். எமக்கு ஐந்து வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கின்றார். 

மற்றைய குழந்தை பிறந்து 39 நாட்கள் தான் ஆகின்றன. எனது கணவரிடம் அடிக்கடி அரச புலனாய்வாளர்கள் வீட்டுக்கு வந்தும் வெளியில் அழைத்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காணாமல் போயுள்ளார் . கைக்குழந்தையுடன் எனது கணவரை தேடி அலைகின்றேன் . எனது கணவரை பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். எனது தொலைபேசி இலக்கம் 0778116528 என வேண்டுகோள் விடுத்துள்ளார் .

accident.jpg

இந்தநிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட  முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் . இந்த சம்பவம் குறித்து  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறையிடவுள்ளதாக காணாமல் போயுள்ளவரின் மனைவி தெரிவித்துள்ளார் .

https://www.virakesari.lk/article/66548

  • தொடங்கியவர்

ரணில் / மைத்திரி ஆட்சியிலும் வெள்ளைவான் இல்லாவிட்டாலும், தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டவண்ணம் தான் உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

இத  யாரும் pipe dream என  சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.😆

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன எம்மக்களின் அழிவு நீங்கள் ஆசைப்பட்ட மாரியே துரிதமாகிறது. கோட்ட வர முன்னமே இப்படி.

உடனடியாக உங்கள் சர்வதேச வலைப்பின்னலை அவிழ்துவிட்டு, இந்த விடயத்தில் சர்வதேச அழுத்தம் கொடுக்கலாமே?

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பிறகென்ன எம்மக்களின் அழிவு நீங்கள் ஆசைப்பட்ட மாரியே துரிதமாகிறது. கோட்ட வர முன்னமே இப்படி.

உடனடியாக உங்கள் சர்வதேச வலைப்பின்னலை அவிழ்துவிட்டு, இந்த விடயத்தில் சர்வதேச அழுத்தம் கொடுக்கலாமே?

 

அம்பனை தான் தெளிவாக சொல்லியிருக்கிறாரே? இப்படி தெட்டந்தெட்டமாக நடந்தால் சர்வதேச சமூகம் கேட்காதாம்! பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக சாவதும் காணாமல் போவதும் நடந்தால் தான் கேட்குமாம்! உங்களுக்குப் புரியவில்லை! 😎

 

5 hours ago, kalyani said:

இத  யாரும் pipe dream என  சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.😆

Pipe dream என்பதற்கு என்ன அர்த்தம் என்றாவது தெரியுமா? உங்கள் கருத்தைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியாது என்று தான் படுகிறது! 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

அம்பனை தான் தெளிவாக சொல்லியிருக்கிறாரே? இப்படி தெட்டந்தெட்டமாக நடந்தால் சர்வதேச சமூகம் கேட்காதாம்! பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக சாவதும் காணாமல் போவதும் நடந்தால் தான் கேட்குமாம்! உங்களுக்குப் புரியவில்லை! 😎

 

Pipe dream என்பதற்கு என்ன அர்த்தம் என்றாவது தெரியுமா? உங்கள் கருத்தைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியாது என்று தான் படுகிறது! 

 

 

ஏன் இப்போ ஆங்கிலத்தை உங்கசளூக்கு எழுதி வைத்து விட்டார்களா??

  • தொடங்கியவர்

காணாமல் போன குடும்பஸ்தர் கண்டுபிடிப்பு -  கண்களை கட்டி கடத்தி சென்று தாக்கியதாக தெரிவிப்பு !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம்குடும்பஸ்தர் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் நேற்று இரவு (9)கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

20191009125744_IMG_5669.JPG

புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தனுஷன் என்பவர் தற்காப்பு கலை ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான இளம்குடும்பஸ்தரை காணவில்லை என தெரிவித்து அவரது மனைவியால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் குறித்த நபர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கூழாமுறிப்பு எனும் இடத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வாகனம் ஒன்றில் ஏற்றி வரப்பட்டு தள்ளி வீழ்த்தப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய குடுபத்தினர் ஒட்டுசுட்டான் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த நபர் மீட்கபட்டு ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கபட்டு வீடு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த நபரை இன்றையத்தினம் நடந்த சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளனர்.  

அதன்படி சம்பவம் இடம்பெற்ற 7ஆம் திகதி இரவு உணவு வாங்கிக்கொண்டு வீடு செல்லும் வழியில் வாகனம் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்கள் தன்னிடம் வவுனியா செல்வதற்கான வழியை கேட்டு விட்டு தன்னை இழுத்து வாகனத்தின் உள்ளே போட்டு கண்களை கட்டி கொண்டு சென்றதாகவும் 45 நிமிடங்கள் வளைந்து வளைந்து சென்ற வாகனம் இறுதியில் ஒரு காட்டு பகுதியை போன்ற இடத்தில் உள்ள வீட்டு அறையொன்றில் தன்னை விட்டு அடைத்து விட்டு அடுத்தநாள் காலை அதாவது 8 ஆம் திகதி முதல் ஒருவர் தன்னை விசாரித்ததாகவும் நீ புலம்பெயர் புலிகளிடம் இருந்து நிதி பெறுகின்றாய் . நீ விடுதலை புலி ஆதரவாளர் என்று தாக்கியதாகவும் உண்மையை கூறு எவ்வாறு பணம் வருகின்றது என கேட்டு தொடர்ந்து இரண்டு நாட்களாக தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார். 

இறுதியாக நேற்று இரவு மீண்டும் வேன் ஒன்றில் ஏற்றி கண்களை கட்டி மீண்டும் 30 நிமிடங்கள் பயணித்து வீதி ஒன்றில் வானிலிருந்து உதைந்து வீழ்த்தி விட்டு சென்றுவிட்டாதகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/66630

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, kalyani said:

 

 

ஏன் இப்போ ஆங்கிலத்தை உங்கசளூக்கு எழுதி வைத்து விட்டார்களா??

அர்த்தம் தெரியாமல் எந்த மொழியின் வார்த்தையையும் பாவிப்பது உங்களுக்கு அந்த மொழி தெரியவில்லை என்று தான் காட்டிக் கொடுக்கும்! அதுவே நடந்தது!

இந்த லட்சணத்தில் யாருக்கு எந்த மொழி எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்று கவலை வேறா? போய் அர்த்தம் கண்டு பிடியுங்கள், பிறகு வந்து நீங்கள் பயன்படுத்தியது சரியா என்று யோசியுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, kalyani said:

pipe dream 

இப்படியென்றால், நிறைவேற்றமுடியாத கனவுகள் அல்லது சாத்தியமில்லாத ஆசைகள் என்றல்லவா பொருள்? எமக்குத் தெரிந்த சொற்களில் சொல்வதானால் கானல் நீரென்று கூடச் சொல்லலாம். 

இதை ஏன் இங்கே பாவித்தீர்கள் என்று கூறமுடியுமா? அல்லது இதற்கு வேறேதும் விளக்கம் இருக்கிறதா? அறிந்துகொள்ளக் கேட்கிறேன். 

  • தொடங்கியவர்
2 hours ago, ampanai said:

இறுதியாக நேற்று இரவு மீண்டும் வேன் ஒன்றில் ஏற்றி கண்களை கட்டி மீண்டும் 30 நிமிடங்கள் பயணித்து வீதி ஒன்றில் வானிலிருந்து உதைந்து வீழ்த்தி விட்டு சென்றுவிட்டாதகவும் தெரிவித்துள்ளார்.

'அவர்கள்' மீண்டும்  வருவார்கள் 😞 

  • கருத்துக்கள உறவுகள்

a hope, wish, or dream that is impossible to achieve or not practical.

மேற்படி சம்பவத்தை ஜஸ்டின் அப்படி கூறி விடுவாரோ என கூறி இருந்தேன். அவர் நினைக்கிறார் தான் ஆங்கிலத்தை குத்தகை எடுத்து விட்டட்காக. சில நொடிகளில் கருத்து தெரியாவிட்டாலும் அதனை கண்டு பிடிக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என விதண்டாவாதம் செய்யும் ஜஸ்டின் புரிந்து கொள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

1 minute ago, kalyani said:

a hope, wish, or dream that is impossible to achieve or not practical.

மேற்படி சம்பவத்தை ஜஸ்டின் அப்படி கூறி விடுவாரோ என கூறி இருந்தேன். அவர் நினைக்கிறார் தான் ஆங்கிலத்தை குத்தகை எடுத்து விட்டட்காக. சில நொடிகளில் கருத்து தெரியாவிட்டாலும் அதனை கண்டு பிடிக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என விதண்டாவாதம் செய்யும் ஜஸ்டின் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பயனற்ற விதண்டாவாதத்தை ஆரம்பித்ததே "மகிந்த வந்தால் சர்வதேசம் தலையிடும் என்ற pipe dream ஐ 2005 இல் ஊக்குவித்தார்கள்.." என்ற என் வேறுதிரிக் கருத்தை இங்கே காவி வந்த நீங்கள் தான்!

சொல்லின் அர்த்தம் புரியாமல் பொருத்தமற்ற பின்புலத்தில் பயன்படுத்தி விட்டு இப்ப "உடனே தேடலாம், அதனால் பரவாயில்லை" என்ற அலட்சியம் உங்களை பல மொழிகளுக்குச் சொந்தக் காரராக மாற்றும் என நம்பலாம்! 😎

  • கருத்துக்கள உறவுகள்

வேறு திரி கருத்தை அல்ல. வேறு திரியில் பாவித்த சொல்லை என்பதை மழுப்பாமல் எழுத பழகுங்கள்.
நான் எழுதிய கருத்தினை விளங்க முடியாமல் இருப்பது தெரிகிறது,  மீண்டும் திரிகளில் விதண்டாவாதம் செய்வதை நிறுத்துங்கள்.😐

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2019 at 5:55 PM, kalyani said:

வேறு திரி கருத்தை அல்ல. வேறு திரியில் பாவித்த சொல்லை என்பதை மழுப்பாமல் எழுத பழகுங்கள்.
நான் எழுதிய கருத்தினை விளங்க முடியாமல் இருப்பது தெரிகிறது,  மீண்டும் திரிகளில் விதண்டாவாதம் செய்வதை நிறுத்துங்கள்.😐

விடுங்கள் கல்யாணி, ஆங்கிலம் என்பது ஒரு மொழியே அது அறிவல்ல என்பது இங்கு பலருக்கு தெரிவதில்லை!

1 hour ago, Eppothum Thamizhan said:

விடுங்கள் கல்யாணி, ஆங்கிலம் என்பது ஒரு மொழியே அது அறிவல்ல என்பது இங்கு பலருக்கு தெரிவதில்லை!

இந்த வசனம் சொல்வதற்கும. கேட்பதற்கும் இனிமையாக இருக்கலாம். ஆனால் அறிவியலில்  எந்த துறையை எடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் கற்பதற்கு  தமிழில் நூல்கள் இல்லை என்பது தான் யதார்த்தம். தமிழை அறிவியல் மொழியாக மாற்றுவதற்கான முனைப்பு காட்டாமல்  வெறும் பழம் பெருமை பேசுவதில்  மட்டுமே தமிழ் மொழி அறிஞர்கள் தமது நேரத்தை  செலவு செய்யும் வரை இந்த நிலையே நீடிக்கும். அறிவியலை விடுங்கள் ஒரு தகவலை விரைவாக அறிய  சாதாரண மக்களுக்கு உதவும் விக்கிபிடியாவில் பெருமளவு கட்டுரைகள்  மற்றய மொழிகளில் பக்கம் பக்கமாக  இருக்க தமிழில்  இரண்டு அல்லது மூன்று பந்தியுடன் கட்டுரை முடிந்துவிடும்.  

இப்படி யதார்தத நிலை இருக்க “ஆங்கிலம் என்பது அறிவல்ல” என்ற கூற்று வெறும்  சப்பை கட்டு வாதமாகவே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, tulpen said:

இந்த வசனம் சொல்வதற்கும. கேட்பதற்கும் இனிமையாக இருக்கலாம். ஆனால் அறிவியலில்  எந்த துறையை எடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் கற்பதற்கு  தமிழில் நூல்கள் இல்லை என்பது தான் யதார்த்தம். தமிழை அறிவியல் மொழியாக மாற்றுவதற்கான முனைப்பு காட்டாமல்  வெறும் பழம் பெருமை பேசுவதில்  மட்டுமே தமிழ் மொழி அறிஞர்கள் தமது நேரத்தை  செலவு செய்யும் வரை இந்த நிலையே நீடிக்கும். அறிவியலை விடுங்கள் ஒரு தகவலை விரைவாக அறிய  சாதாரண மக்களுக்கு உதவும் விக்கிபிடியாவில் பெருமளவு கட்டுரைகள்  மற்றய மொழிகளில் பக்கம் பக்கமாக  இருக்க தமிழில்  இரண்டு அல்லது மூன்று பந்தியுடன் கட்டுரை முடிந்துவிடும்.  

இப்படி யதார்தத நிலை இருக்க “ஆங்கிலம் என்பது அறிவல்ல” என்ற கூற்று வெறும்  சப்பை கட்டு வாதமாகவே இருக்கும். 

இது பல திரிகளில் எ.த மீள மீளச் சொல்லித்திரியும் ஒரு கருத்துத் தான்! அவர் ஆங்கிலம் தெரிந்தவர்களை விடத் தான் அறிவாளி எனச் சுட்டிக் காட்டப் பாவிக்கும் ஒரு கருத்தே ஒழிய வேறெதுவும் இல்லை!

ஆங்கிலம் மட்டுமல்ல, ஒருவருக்குத் தெரிகிற ஒவ்வொரு மேலதிக மொழியும் ஒரு ஜன்னலைத் திறந்து வைப்பது போலத் தான்! 

இப்போது கூகிள் மொழிபெயர்ப்பும் செயலிகளும் வந்த பின்னர் அவை அவசரத்திற்கு எந்த மொழியிலும் உதவலாம்! ஆனால், ஆங்கிலம் தெரியாததால் சிறிலங்காவில் தாம் படித்த படிப்பிற்குரிய வேலைகளைப் பெற முடியாமல் இருப்போர், ஒரு படிவம் நிரப்ப உதவி தேடுவோர்,  தமிழில் மட்டும் போலிப் பரியாரி மார் வெளியிடும் யுரியூப் வீடியோக்கள் மட்டுமே உலகம் என்று நம்புவோர், இது போன்றோரிடம் தான் ஆங்கிலம் மொழி மட்டுமா அல்லது அதற்கு மேலுமா என்று கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்! 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2019 at 4:30 PM, kalyani said:

a hope, wish, or dream that is impossible to achieve or not practical.

மேற்படி சம்பவத்தை ஜஸ்டின் அப்படி கூறி விடுவாரோ என கூறி இருந்தேன். அவர் நினைக்கிறார் தான் ஆங்கிலத்தை குத்தகை எடுத்து விட்டட்காக. சில நொடிகளில் கருத்து தெரியாவிட்டாலும் அதனை கண்டு பிடிக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என விதண்டாவாதம் செய்யும் ஜஸ்டின் புரிந்து கொள்ள வேண்டும்.

கல்யாணி,

நீங்கள் தந்துள்ள விளக்கம் சரிதான் ஆனால் இந்த வார்த்தையை நீங்கள் பாவித்த களம் (context) தப்பு.

Pipe dream என்பது நடந்த ஒரு விடயத்தை (ஆள் காணமல் போதல்) நடக்கவில்லை என மறுப்பதல்ல. 

Pipe dream என்பது நடக்க முடியாத ஒரு விடயத்தை நடக்கும் என நம்புவது.

தமிழில் இதற்கு தக்க வார்தைகளாக கானல் நீரை விடவும், “பகற்கனவு” அமையும் என்பதே என் கருத்து.

BJP forming the government in Tamil Nadu will remain a pipe dream for the RSS.

தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி அமைப்பதென்பது RSSற்கு வெறும் பகற்கனவாகவே நிலைக்கும்.

மொழி ஒரு கருவி, அறிவல்ல.

ஆனால் எந்தக் கருவியையும் எப்படி கையாளுவது என்பதை கருவியோடு பரிச்சயம் உள்ளவர்களோடு பேசி அறிந்துதான் கையாள வேண்டும்.

கூகிளில் கார் ஓட்டுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, கார் ஓட்ட முடியாதுதானே? மொழிகளும் அப்படித்தான்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

இந்த வசனம் சொல்வதற்கும. கேட்பதற்கும் இனிமையாக இருக்கலாம். ஆனால் அறிவியலில்  எந்த துறையை எடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் கற்பதற்கு  தமிழில் நூல்கள் இல்லை என்பது தான் யதார்த்தம். தமிழை அறிவியல் மொழியாக மாற்றுவதற்கான முனைப்பு காட்டாமல்  வெறும் பழம் பெருமை பேசுவதில்  மட்டுமே தமிழ் மொழி அறிஞர்கள் தமது நேரத்தை  செலவு செய்யும் வரை இந்த நிலையே நீடிக்கும். அறிவியலை விடுங்கள் ஒரு தகவலை விரைவாக அறிய  சாதாரண மக்களுக்கு உதவும் விக்கிபிடியாவில் பெருமளவு கட்டுரைகள்  மற்றய மொழிகளில் பக்கம் பக்கமாக  இருக்க தமிழில்  இரண்டு அல்லது மூன்று பந்தியுடன் கட்டுரை முடிந்துவிடும்.  

இப்படி யதார்தத நிலை இருக்க “ஆங்கிலம் என்பது அறிவல்ல” என்ற கூற்று வெறும்  சப்பை கட்டு வாதமாகவே இருக்கும். 

நான் சொல்ல வந்தது ஆங்கிலம் என்பது ஒரு துறையை கற்பதற்கு பயன்படும்  கருவியே தவிர ஆங்கிலம் மட்டும் தெரிவதால் நீங்கள் துறைசார் வல்லுனர்களாக இருக்கமுடியாது என்பதே! அப்படிப்பார்த்தால் இங்கிலாந்தில் எல்லோரும் உங்களைப்போல் மேதாவியாக அல்லவா இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

இது பல திரிகளில் எ.த மீள மீளச் சொல்லித்திரியும் ஒரு கருத்துத் தான்! அவர் ஆங்கிலம் தெரிந்தவர்களை விடத் தான் அறிவாளி எனச் சுட்டிக் காட்டப் பாவிக்கும் ஒரு கருத்தே ஒழிய வேறெதுவும் இல்லை!

ஆங்கிலம் மட்டுமல்ல, ஒருவருக்குத் தெரிகிற ஒவ்வொரு மேலதிக மொழியும் ஒரு ஜன்னலைத் திறந்து வைப்பது போலத் தான்! 

இப்போது கூகிள் மொழிபெயர்ப்பும் செயலிகளும் வந்த பின்னர் அவை அவசரத்திற்கு எந்த மொழியிலும் உதவலாம்! ஆனால், ஆங்கிலம் தெரியாததால் சிறிலங்காவில் தாம் படித்த படிப்பிற்குரிய வேலைகளைப் பெற முடியாமல் இருப்போர், ஒரு படிவம் நிரப்ப உதவி தேடுவோர்,  தமிழில் மட்டும் போலிப் பரியாரி மார் வெளியிடும் யுரியூப் வீடியோக்கள் மட்டுமே உலகம் என்று நம்புவோர், இது போன்றோரிடம் தான் ஆங்கிலம் மொழி மட்டுமா அல்லது அதற்கு மேலுமா என்று கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்! 

நான்  எந்த திரியிலும் நான்தான் அறிவாளி என்று யாரையும் உங்களைப்போல்  மட்டம் தட்டுவதில்லை. ஆங்கில வார்த்தைகளை  பிரயோகிப்பதும் இல்லை. அதற்காக எனக்கு ஆங்கிலம் தெரியாதென்பதல்ல. 

எத்தனை வளர்ச்சியடைந்த, ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் கட்டாயமாக தேவைப்படுகிறது.  அங்குள்ளவர்கள் யாரும் அறிவாளி இல்லையா?? ஒரு துறைசார் கல்வியை கற்கும் அளவிற்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதுமானதே. அதற்கு ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றிருக்க தேவையில்லை!!

பரியாரிகளின் youtube ஆ எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

  • தொடங்கியவர்
On 10/10/2019 at 8:46 AM, ampanai said:

இறுதியாக நேற்று இரவு மீண்டும் வேன் ஒன்றில் ஏற்றி கண்களை கட்டி மீண்டும் 30 நிமிடங்கள் பயணித்து வீதி ஒன்றில் வானிலிருந்து உதைந்து வீழ்த்தி விட்டு சென்றுவிட்டாதகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றனர்.

இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மௌனமாக இருக்கவேண்டிய அடக்குமுறைக்குள் இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. 

முடிந்தால், இந்த குடும்பத்திற்கு நீதி கேட்டு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் ஒரு  வசனமோ இல்லை இரண்டை பதிந்து விடுங்கள். 

sechrcsl@gmail.com

http://hrcsl.lk/english/contact-us/

பி.கு. நான் எனது பங்கிற்கு எழுதிவிட்டேன்
 

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, Eppothum Thamizhan said:

நான்  எந்த திரியிலும் நான்தான் அறிவாளி என்று யாரையும் உங்களைப்போல்  மட்டம் தட்டுவதில்லை. ஆங்கில வார்த்தைகளை  பிரயோகிப்பதும் இல்லை. அதற்காக எனக்கு ஆங்கிலம் தெரியாதென்பதல்ல. 

எத்தனை வளர்ச்சியடைந்த, ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் கட்டாயமாக தேவைப்படுகிறது.  அங்குள்ளவர்கள் யாரும் அறிவாளி இல்லையா?? ஒரு துறைசார் கல்வியை கற்கும் அளவிற்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதுமானதே. அதற்கு ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றிருக்க தேவையில்லை!!

பரியாரிகளின் youtube ஆ எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

நீங்கள் மேலே எழுதிய தவறான தகவலுக்கே என் பதில்! நான் ஆங்கில வார்த்தைகள் பிரயோகிப்பது சில நேரங்களில் அதற்கு இணையான தமிழ் சொற்கள் உடனே கிடைக்காததால் மட்டுமே! எனக்கு ஆங்கிலம் தெரியுமென்று இங்கே யாரிடமும் காட்டி சான்றிதழ் வாங்கும் நிலையை நான் தாண்டிக் கனகாலம்! உங்களுக்கு வேண்டுமான மொழியில் வேண்டுமான பாண்டித்தியத்தை வைத்திருப்பது உங்கள் உரிமை! ஆனால் , அதற்காக ஒரு மொழியில் பாண்டியத்திற்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்று ஆய்வுகளில் நிரூபிக்காத தகவலை இங்கே பரப்புவது தவறு! ஆங்கிலம் அல்லது போதனை மொழியில் மட்டுப் படுத்தப் பட்டோரின் அறிவுத் திறன், கல்வி முன்னேற்றம் முதல் வேலை வாய்ப்பு என எல்லாமே பாதிக்கப் பட்டிருப்பதாகத் தான் ஏராளமான ஆய்வுகளின் முடிவு! நீங்களே இவற்றைத் தேடிப் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்!

போலிப் பரியாரிகளின் யூரியூப்புகள் இங்கே இணைக்கப் பட்டு நீக்கப் படுகிற நிகழ்வுகள் பல நூற்றாண்டுகள் முன்பல்ல, சில மாதங்களாக நடப்பது தான்! அப்படி தூக்கப் படும் இணைப்புகளின் சொந்தக்காரர் தான் உங்கள் தவறான தகவலுக்கு பச்சை குத்தியிருக்கிறார்!  அப்டேற் ஆக வேண்டியது நீங்கள் தான்! நான் அல்ல!😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Justin said:

போலிப் பரியாரிகளின் யூரியூப்புகள் இங்கே இணைக்கப் பட்டு நீக்கப் படுகிற நிகழ்வுகள் பல நூற்றாண்டுகள் முன்பல்ல, சில மாதங்களாக நடப்பது தான்! அப்படி தூக்கப் படும் இணைப்புகளின் சொந்தக்காரர் தான் உங்கள் தவறான தகவலுக்கு பச்சை குத்தியிருக்கிறார்!  அப்டேற் ஆக வேண்டியது நீங்கள் தான்! நான் அல்ல!😎

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.