Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

800 ஆண்டுகள் பழைமையான சீன மட்பாண்டமொன்று அல்லைப்பிட்டியில் மீட்பு

Featured Replies

2019-11-01 11:39:34

சுமார் 800 ஆண்டுகள் பழைமையான சீனத்தயாரிப்பு மட்பாண்டமொன்று யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பி.புஷ்பரட்ணம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

19702.jpg
 

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி உறவுக்கு இந்த மட்பாண்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.


சீன அகழ்வாராய்ச்சிக்குழுவினரால் அல்லைப்பிட்டி பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

http://valampurii.lk/valampurii/content.php?id=19702&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

சீனர்  அல்லைப்பிட்டியில் ஓர்  துணைத் தூதரகம் திரைப்பதுதான் சரியானதாகப் படுகிறது. 

பேராசிரியர் புஸ்பரட்ணம் குழுவினருக்கும் yarl பல்கலைக்கழகத்துக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் இடையிலான தொடர்பு என்பதே சரியானதாக இருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ampanai said:

சுமார் 800 ஆண்டுகள் பழைமையான சீனத்தயாரிப்பு மட்பாண்டமொன்று யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அப்ப நாங்கள் சீனன்ரை தொப்புள்கொடி உறவுகளா?

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

அப்ப நாங்கள் சீனன்ரை தொப்புள்கொடி உறவுகளா?

இது எதனைக் காட்டுகின்றது என்றால்.....அந்தக் காலத்திலேயே .....உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகள் தாண்டி...கலை....கலாச்சாரம்..என்று பல எல்லைகளைத் தாண்டியிருக்கிறோம்!

யாதும் ஊரே.....யாவரும் கேளிர்....!

சிங்களவன்....அது எங்கட....புஞ்சி மெனிக்காவின்ர ...தண்ணிக்குடம் எல்லோ...என்று வராத வரைக்கும்....சந்தோசம்!

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, புங்கையூரன் said:

இது எதனைக் காட்டுகின்றது என்றால்.....அந்தக் காலத்திலேயே .....உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகள் தாண்டி...கலை....கலாச்சாரம்..என்று பல எல்லைகளைத் தாண்டியிருக்கிறோம்!

யாதும் ஊரே.....யாவரும் கேளிர்....!

சிங்களவன்....அது எங்கட....புஞ்சி மெனிக்காவின்ர ...தண்ணிக்குடம் எல்லோ...என்று வராத வரைக்கும்....சந்தோசம்!

பேராசிரியர் புஸ்பரட்ணம் தன்னுடைய பாதுகாப்பில் கவனமாக இருக்கவேண்டும். இலங்கைத் தமிழர் வரலாற்றில் இவரின் சேவை மகத்தானது. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maharajah said:

பேராசிரியர் புஸ்பரட்ணம் தன்னுடைய பாதுகாப்பில் கவனமாக இருக்கவேண்டும். இலங்கைத் தமிழர் வரலாற்றில் இவரின் சேவை மகத்தானது.

இவர், சமீபத்தில் பனிக்கன் குளம் கிராமத்தில் மாங்குளம் -முல்லைத்தீவினு வீதிக்கு 10 km தெற்கு திசையில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில், ஓர் அருவி ஓரமாக, கிராமத்தவர் பார்த்த  கற்கால உபகாரணகளை பற்றி அறிவித்தல் வந்ததும், எவரிட்ற்கும் அதை வெளியிடாமல், தானாகவே அந்த இடத்திற்கு கிராமத்தவர் உதவியோடு சென்று எடுத்து வந்து பத்திரப்படுத்திய பின், செய்தியாக வந்தது.

எப்போதும் கவனமாகவும், பாதுகாப்பகப்பாகவும் இருக்க வேண்டும்.       

  • கருத்துக்கள உறவுகள்

12.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பத்து வருசத்துக்கு... முன், காணாமல் போன.... 
என் மகனையும்,  கணவரையும் காணாவில்லை.
முதல்ல... அதை கண்டு பிடியுங்க(டா)....

  • கருத்துக்கள உறவுகள்

அன்றே சீனர்கள் அல்லைப்பிட்டி வந்து உலோகத்தில் (வெண்கலம் போலுள்ளது) பாண்டங்கள் செய்யும் வழிமுறையை அறிந்து கொண்டு போயிருக்கிறார்கள் போலுள்ளது......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அப்ப நாங்கள் சீனன்ரை தொப்புள்கொடி உறவுகளா?

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' சரித்திர நாவலில் கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழருக்கும் சீனருக்கும் இடையே இருந்த வர்த்தகத் தொடர்புகள் பற்றியும் அதற்கும் மேலாக இரண்டு நாட்டவர்களுக்கும் ஏற்பட்டிருந்த தோழமை, நட்பு பற்றியும் எழுதியிருந்தார்.  

சீன தலைவர் இலங்கை வந்தா இருநாட்டு (கொலைகாரத்) தலைவர்கள் சந்திப்பு அல்லைப்பிட்டில நடக்கப்போகுது!

  • தொடங்கியவர்

தமிழர்களுக்கும் சீனர்களுக்குமான உறவென்பது பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது. முதலாம் நூற்றாண்டிலிருந்தே சீனர்கள் காஞ்சிபுரம் வந்து சென்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன.

“கி.மு 100-ம் ஆண்டில் கான்-டோ-ஓ என்னும் சீனப் பகுதியிலிருந்து கப்பல் மூலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்து சீனர்கள் காஞ்சி நாட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். இரண்டு மாதங்கள் கப்பலில் பயணம் செய்தால் காஞ்சி நாட்டை அடையலாம். காஞ்சி பரந்தும், மக்கள் மிகுந்தும் பலவிதமான பொருள்களோடு முத்தும், மணி வகைகளும் நிரம்பித் திகழும் நாடு. கி.மு 140 - 86 காலம் முதல் அந்நாட்டுடன் வாணிபம் நடந்துள்ளது” எனக் காஞ்சிபுரத்தைப் பற்றி சீனப்பயணி பான்-கோ எழுதி இருக்கிறார். அதுபோல் கி.பி 550 - 600 காலத்தில் சீன வரலாற்று ஆசிரியர் மா-டவான்-லி அவர்கள், "தமிழர்கள், எழுதப்பட்ட இலக்கியங்கள் மட்டும் அல்லாமல், வானவியல் அறிவும் பெற்றிருக்கிறார்கள். ஆடவர்கள் அனைவரும் சித்தாந்தம் என்னும் வழிகாட்டி நூலைக் (திருக்குறள்) கற்கிறார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

அவ்வாறு வந்தவர்கள், வியாபாரம் செய்தவர்கள் ஈழம் ஊடாகவும் பயணித்திருக்கலாம், வியாபாரம் செய்திருக்கலாம்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.