Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பச்சைத்தமிழனாக மாறிய பொரிஸ் ஜோன்சன்: தமிழ் மக்களிற்கு விடுத்துள்ள முக்கிய செய்தி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%
 

பிரித்தானிய தேர்தலில் அமோக வெற்றியீட்டி, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன் தமிழ் மக்களிற்கு வீடியோ வழியாக நன்றி தெரிவித்துள்ளார்.

பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. வெற்றியீட்டியதும், தமிழ் மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார்.

பிரித்தானிய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் தமிழ் சமூகம் ஆற்றும் அளப்பரிய பணியை பாராட்டிய ஜோன்சன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

http://www.pagetamil.com/93918/

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணர் நன்றி வணக்கம் போட்டுட்டர். சுபம்.

சோணகிரி தமிழர்கள்: “அப்ப இரெட்டை தேச இலங்கை இல்லையா கோபால்“.

பிகு: இந்தாள் நம்ம ரஜனிகாந்துக்கே tough கொடுப்பார் போல இருக்கே😂.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

வலியுறுத்தாமல்.. கிடைக்கும்.. தருவார்கள் என்று காத்துக்கிடந்தால்.. காற்றுக்கூட கிடைக்காது கோபால். காற்றைக் கூட உள்ளெடுக்க மூச்செனும் இயக்கம் அவசியம். 

ஜோன்சனோ.. எவருமோ.. பிரித்தானியாவுக்கு ஈழத்தில் தமிழர்களின் அரசியல் உரிமையை மீட்டுக்கொடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புள்ளதை உணர வைப்பதும் செயற்பட வைப்பதும் மிக அவசியம்.

காரணம்.. எமது நிலத்தை சிங்களவர்கள் ஆளக் கையளித்தது.. பிரித்தானியாவும்.. பிரித்தானியாவின் சேர் பட்டங்களுக்கு அடிபணிந்த கூலித் தமிழர்களும் தான். 

"வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார்." 

இது ஒரு 'சிம்போலிக்' செயலாக இருந்தாலும் எமது அடுத்த தலைமுறைக்கு பலம் சேர்க்கும் செய்தி.  

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:
%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%
 

பிரித்தானிய தேர்தலில் அமோக வெற்றியீட்டி, மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள பொரிஸ் ஜோன்சன் தமிழ் மக்களிற்கு வீடியோ வழியாக நன்றி தெரிவித்துள்ளார்.

பொரிஸ் ஜோன்சனின் கொன்சர்வேடிவ் கட்சி நடந்து முடிந்த பிரித்தானிய பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியது. வெற்றியீட்டியதும், தமிழ் மக்களிற்கு நன்றி தெரிவிக்கும் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார்.

பிரித்தானிய பொருளாதாரத்திற்கும், சமூகத்திற்கும் தமிழ் சமூகம் ஆற்றும் அளப்பரிய பணியை பாராட்டிய ஜோன்சன், இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீடித்து நிலைத்து நிற்கும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

http://www.pagetamil.com/93918/

 பேஜ்தமிழ் கன்சேவேடிவ் தமிழ்-கூஜாக்கள் (லைக்கா வகையறாக்கள்) யாரிடமோ நல்லா வாங்கிக்கொண்டு பொய்ச் செய்தியாக வெளியிடுகிறனர்.

இந்த காணொளி வந்தது தேர்தலுக்கு முன். இவர்கள் வெற்றி பெற்றதும் வீடியோ வெளியிட்டதாக புனைகிறார்கள்.

கூடவே பகுதி நேர தமிழ் ராஜதந்திரிகள் வேறு  ஜோன்சனுக்கு எம் போராட்டத்தை புரிய வைக்க  போகிறார்களாம். இவர்கள் எல்லாருக்கும் எல்லாம் தெரியும் புரிய வைக்க இங்கே ஏதும் இல்லை.

நம் புவிசார் பலம் அல்லது பிரித்தானியாவில் நம் வாக்குப் பலம் இவை இவர்களுக்கு தேவைபடும் போது, இவர்களை ஒரு பொது மேடைக்கு அழைத்து, ஜோன்சன், கோபின் வராவிட்டாலும் அடுத்த நிலை, குரல்தரவல்ல நபர்கள் வந்து, இதுதான் எம் அணுகுமுறை, இதை இப்படி செய்து தருவோம் என வாக்கு கொடுக்கும் படி, வலியுறுத்தி. கொடுத்த வாக்கை காப்பாற்ற நிர்பந்திப்பதே பயனுள்ள ராஜத்ந்திரம்.

கோபி யூத விரோதி என்றதும், கட்சி பேதமின்றி தலைமை ரபாய் தொட்டு சகல யூதர்களும் ஓரணியில் திரண்டு அளுத்தம் கொடுத்தனர்.

ஆனால்,தேர்தலுக்கு தேர்தல், sensational வீடியோ, படங்களை போட்டு, தமிழர்களின் வோட்டுக்களை இரெண்டு கட்சிகளுக்கும் "கூட்டிக் கொடுக்கும்" "மாமா வேலை"யை மட்டுமே பிரிதானிய தமிழர் பிரதிநிதிகள் என கோட், சூட் போடுவோர் செய்கிறனர்.

ஜோன்சனும், லேபரும் இன்னும் 5 வருடத்து இதை மறந்து விட்டு, மறுபடியும் தேர்தல் வரும்போது வந்து நன்றி, வணக்கம் என்பார்கள் நாமும், பச்சை தமிழனை பாருங்கள் கோபால், நீலத் தமிழனை பாருங்கள் கோபால் எனப் புல்லரிபோம்.

இதுக்கு பேசாம நித்தியிண்ட கைலாசாவில "தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சராக" போகலாம் 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

பேஜ்தமிழ் கன்சேவேடிவ் தமிழ்-கூஜாக்கள் (லைக்கா வகையறாக்கள்) யாரிடமோ நல்லா வாங்கிக்கொண்டு பொய்ச் செய்தியாக வெளியிடுகிறனர்.

பேஜ் செய்திகள் கட்டுரைகளும் பெரும்பாலும் தமிழருக்கு எதிரானவையாக காணப்படும் உதாரணம் பீஸ்மரின் புளுகு  கட்டுரை 2009 க்கு பிறந்த தமிழ் இணையங்கள் மீது எனக்கு நமபிக்கை கிடையாது ஒண்டுக்கு இரண்டுமுறை சரிபார்த்தும் சிலசமயம் ஏண்டா இணைத்தம் என்று கிடக்கும் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ampanai said:

"வணக்கம் என தமிழில் கூறி உரையை ஆரம்பிக்கும் ஜோன்சன், உரையின் முடிவில் நன்றி என கூறி முடித்தார்." 

இது ஒரு 'சிம்போலிக்' செயலாக இருந்தாலும் எமது அடுத்த தலைமுறைக்கு பலம் சேர்க்கும் செய்தி.  

புலம் பெயர் தமிழர்கள் இன்று ஓர் பலமான சக்தியாக உருவாகி வருகிறார்கள். இவர்கள் 
கடுமையாக உழைத்து சக்தி மிக்க அரசியல் தலைவர்களுடன் நட்புஉறவை பேணி ஈழத் தமிழருக்கான நிரந்தரமானதும் அதி கூடிய அரசியல் தீர்வை பெற்று தர உழைக்க வேண்டும்.நாமே நமக்கான தீர்வை பெற போராடி வந்த போதும் இந்த உலகம் 
தர்மத்தின் அடிப்படையில் இல்லாததாலும் உலக ஒழுங்கு அரசியலை நாமும் சரியாக புரிந்துளாது போனதாலும் இன்று நமது மக்கள் பெரும் துயரோடு வாழ்கின்றனர்.ஆகவே இவர்களுக்கான சரியான தீர்வை பெற இளைய தமிழ் சமுதாயம் உழைக்க வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

 பேஜ்தமிழ் கன்சேவேடிவ் தமிழ்-கூஜாக்கள் (லைக்கா வகையறாக்கள்) யாரிடமோ நல்லா வாங்கிக்கொண்டு பொய்ச் செய்தியாக வெளியிடுகிறனர்.

இந்த காணொளி வந்தது தேர்தலுக்கு முன். இவர்கள் வெற்றி பெற்றதும் வீடியோ வெளியிட்டதாக புனைகிறார்கள்.

கூடவே பகுதி நேர தமிழ் ராஜதந்திரிகள் வேறு  ஜோன்சனுக்கு எம் போராட்டத்தை புரிய வைக்க  போகிறார்களாம். இவர்கள் எல்லாருக்கும் எல்லாம் தெரியும் புரிய வைக்க இங்கே ஏதும் இல்லை.

நம் புவிசார் பலம் அல்லது பிரித்தானியாவில் நம் வாக்குப் பலம் இவை இவர்களுக்கு தேவைபடும் போது, இவர்களை ஒரு பொது மேடைக்கு அழைத்து, ஜோன்சன், கோபின் வராவிட்டாலும் அடுத்த நிலை, குரல்தரவல்ல நபர்கள் வந்து, இதுதான் எம் அணுகுமுறை, இதை இப்படி செய்து தருவோம் என வாக்கு கொடுக்கும் படி, வலியுறுத்தி. கொடுத்த வாக்கை காப்பாற்ற நிர்பந்திப்பதே பயனுள்ள ராஜத்ந்திரம்.

கோபி யூத விரோதி என்றதும், கட்சி பேதமின்றி தலைமை ரபாய் தொட்டு சகல யூதர்களும் ஓரணியில் திரண்டு அளுத்தம் கொடுத்தனர்.

ஆனால்,தேர்தலுக்கு தேர்தல், sensational வீடியோ, படங்களை போட்டு, தமிழர்களின் வோட்டுக்களை இரெண்டு கட்சிகளுக்கும் "கூட்டிக் கொடுக்கும்" "மாமா வேலை"யை மட்டுமே பிரிதானிய தமிழர் பிரதிநிதிகள் என கோட், சூட் போடுவோர் செய்கிறனர்.

ஜோன்சனும், லேபரும் இன்னும் 5 வருடத்து இதை மறந்து விட்டு, மறுபடியும் தேர்தல் வரும்போது வந்து நன்றி, வணக்கம் என்பார்கள் நாமும், பச்சை தமிழனை பாருங்கள் கோபால், நீலத் தமிழனை பாருங்கள் கோபால் எனப் புல்லரிபோம்.

இதுக்கு பேசாம நித்தியிண்ட கைலாசாவில "தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சராக" போகலாம் 😜

இரெத்தினச் சுருக்கம்.👍

வேறு எந்த பிரித்தானிய பிரதமரும் இவ்வாறு தமிழ் மக்களை, அவர்களின் கடின உழைப்பை பாராட்டி ஒரு ஒளிப்பதிவை விட்டார்களா இல்லையா என்பதையும் இதை தேர்தலின் வெற்றிற்கு முன்னராக  வாக்குகளை சேகரிக்கும் நோக்கத்தில் விட்டிருந்தாலும் - இது தான் இன்றைய அரசியலில் ஒரு பாகம். 

இதை சரியாக தமக்கு பாவிக்கும் சிறுபான்மை சமூகங்கள் தம்மை புலம்பெயர்ந்த நாடுகளில் பலப்படுத்துவதுடன், தேவையான நேரங்களில் தாம் புலப்பெயர்ந்து வந்த தாயக தேசத்திற்கும் உதவுகிறார்கள்.  

போரிஸ் என்றதும் சிலருக்கு இன்றைய உருசியாவை உருவாக்கிய போரிஸ் எல்சனும் ஞாபகத்திற்கு வரலாம். இந்த எல்சனே உருசியாவை ஒரு திறந்த வர்த்த கொள்கைக்கு உள்ளாக்கினார். 

இன்று, பிரித்தானிய போரிஸ் ஒரு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்து பொருளாதார சுபீட்சத்தை பெற்றுத்தருவேன் என கூறி -பெரும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அவரின் திட்டம் தான் என்ன ?

ஒரு திட்டம் - நாட்டில் திறந்த, வரிகள் குறைந்த துறைமுகங்களை உருவாக்குவது. சிங்கப்பூரை ஒத்ததாக இந்த திட்டம் இருக்கும் என  போரிஸ் கூறுகிறார். 

உதாரணத்திற்கு, ஜப்பானில் வடிவமைக்கப்படும் மகிழூந்து ஒரு பிரித்தானிய துறைமுகத்தில் சேர்க்கப்பட்டு இன்னொரு நாட்டில் விற்கப்படும். இதனால் துறைமுகத்தை அண்டிய நகரில் வேலைவாய்ப்பு உருவாகும். 

அப்படியானால் ஏன் இதுவரை இவ்வாறு முயற்சிக்கவில்லை ?   

9 minutes ago, ampanai said:

அப்படியானால் ஏன் இதுவரை இவ்வாறு முயற்சிக்கவில்லை ?  

முன்னர் பிரித்தானிய பிரதமராக மார்கிரெட் தச்சர் இருந்த பொழுது இவ்வாறு Canary Wharfஇல் செய்தார், வெற்றியும் பெற்றார். அதே வெற்றிக்கு பிரித்தானிய வரி செலுத்துபவர்கள் சிறந்த வீதிகள், தொழில் வல்லுநர்களை தந்தார்கள். இந்த வெற்றியை அவர் வேறு நகரங்களுக்கும் விஸ்தரித்தார். 

புதிதாக வேலைகளை உருவாக்குவதற்கு பதிலாக, நிறுவனங்கள் இந்த வியாபார பயன்தரு இடங்களுக்கு தமது நிறுவனத்தை மாற்றினார்கள். புதிதாக உருவாக்கட்ட ஒவ்வொரு வேலைக்கும் 17 ஆயிரம் பவுட்ஸ்களை அரசு செலவு செய்தது. 2012 அளவில் இந்த 'இலவசங்களை' அரசு நிறுத்தியது. 

அப்படியானால், ஏன் போரிஸ் மீண்டும் அந்த பாதையில் பயணிக்க விரும்புகிறார் ? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

வேறு எந்த பிரித்தானிய பிரதமரும் இவ்வாறு தமிழ் மக்களை, அவர்களின் கடின உழைப்பை பாராட்டி ஒரு ஒளிப்பதிவை விட்டார்களா இல்லையா என்பதையும் இதை தேர்தலின் வெற்றிற்கு முன்னராக  வாக்குகளை சேகரிக்கும் நோக்கத்தில் விட்டிருந்தாலும் - இது தான் இன்றைய அரசியலில் ஒரு பாகம். 

இதை சரியாக தமக்கு பாவிக்கும் சிறுபான்மை சமூகங்கள் தம்மை புலம்பெயர்ந்த நாடுகளில் பலப்படுத்துவதுடன், தேவையான நேரங்களில் தாம் புலப்பெயர்ந்து வந்த தாயக தேசத்திற்கும் உதவுகிறார்கள்.  

 

 

இங்கே போரிஸ் செய்வது எதுவுமே புதிது இல்லை. 2009 இல் இருந்து தமிழர் வாக்கை களவாட இருபகுதியும் கடைப்பிடிக்கும் அதே உத்திதான். டேவிட் கமெரன் யாழ் போன சமயம் அவரை “கடவுள்” என்றே தமிழர்கள் அழைத்தார்கள் என்ற ரீதியில் கூட கார்டியன் பத்திரிகை எழுதியது.

 

6 minutes ago, ampanai said:

அப்படியானால், ஏன் போரிஸ் மீண்டும் அந்த பாதையில் பயணிக்க விரும்புகிறார் ?

இவ்வாறான சிறப்பு துறைமுகங்கள் 80 அளவில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளன. ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளிலும் ஒரு சிறப்பு வர்த்த எண்ணத்தை ( உதாரணத்திற்கு சூரிய மின்வலு உபகரணங்கள் ) ஊக்குவிற்கவே இவ்வாறான அனுமதிகளை வழங்கின. 
 
அதனால், பிரித்தானியாவில் இவ்வாறான சிறப்பு துறைமுகங்கள் திறக்கப்படவில்லை. 

போரிஸ், இவ்வாறான ஒரு புதிய அணுகுமுறை என்ற மெருகூட்டிய பழைய முறையை அணுக உள்ளார். ஆரம்பத்தில் இரு உதவினாலும் மீண்டும் மார்கிரெட் தட்ச்சர் நிலைமையே வரலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஏமாந்த சோணகிரிகள்,  புகழ் விரும்பிகள் அவர்களை வல்லவர் நல்லவர் எனப் புகழ்ந்தால் - வாக்கை அள்ளி வழங்குவார்கள் என கன்சேவேடிவ் கட்சிக்கு யாரோ சரியான ஆலோசனை வழங்குகிறார்கள். அதுதான் வரிசையாய் வந்து வாழ்துகிறார்கள்.

Just now, ampanai said:

போரிஸ், இவ்வாறான ஒரு புதிய அணுகுமுறை என்ற மெருகூட்டிய பழைய முறையை அணுக உள்ளார். ஆரம்பத்தில் இரு உதவினாலும் மீண்டும் மார்கிரெட் தட்ச்சர் நிலைமையே வரலாம். 

இலங்கையில் கூட மகிந்த அண்ட் கோ மற்றும் சீன அரசும் கூட அம்பாந்தோட்டையிலும் கொழும்பிலும் இதேபோன்ற அணுகுமுறையை செய்ய முயற்சிக்கின்றன. 

தமிழகத்திலும் கூட பல மகிழூந்து இணைப்பு நிறுவனங்கள் இவ்வாறான ஒத்த அணுகுமுறையை கொண்டுள்ளன. மாறாக, தென்கொரிய நிறுவனங்கள் போன்றன தமது நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பை வைத்துள்ளன. காரணம், அவையே உண்மையான நிலையான வேலை வாய்ப்புக்கள்.  

Just now, ampanai said:

தமிழகத்திலும் கூட பல மகிழூந்து இணைப்பு நிறுவனங்கள் இவ்வாறான ஒத்த அணுகுமுறையை கொண்டுள்ளன. மாறாக, தென்கொரிய நிறுவனங்கள் போன்றன தமது நாட்டிலேயே ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பை வைத்துள்ளன. காரணம், அவையே உண்மையான நிலையான வேலை வாய்ப்புக்கள்.

ஆனால், இந்த சிக்கலான பொருளாதார வலைக்குள் தன்னை சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் மற்றையவர்கள் வியக்கும் வண்ணமும் வளர்ந்து வருபவர்கள் - சிங்கப்பூரியர்கள். அங்கும் தமிழர்கள் உள்ளார்கள், வெற்றியின் பாதையில் அவர்களும் தமக்கென ஒரு இடத்தை வைத்துள்ளார்கள். 

பிரித்தானியா வெற்றியிலும் தமிழர்கள் இருப்பார்கள் !

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ampanai said:

முன்னர் பிரித்தானிய பிரதமராக மார்கிரெட் தச்சர் இருந்த பொழுது இவ்வாறு Canary Wharfஇல் செய்தார், வெற்றியும் பெற்றார். அதே வெற்றிக்கு பிரித்தானிய வரி செலுத்துபவர்கள் சிறந்த வீதிகள், தொழில் வல்லுநர்களை தந்தார்கள். இந்த வெற்றியை அவர் வேறு நகரங்களுக்கும் விஸ்தரித்தார். 

புதிதாக வேலைகளை உருவாக்குவதற்கு பதிலாக, நிறுவனங்கள் இந்த வியாபார பயன்தரு இடங்களுக்கு தமது நிறுவனத்தை மாற்றினார்கள். புதிதாக உருவாக்கட்ட ஒவ்வொரு வேலைக்கும் 17 ஆயிரம் பவுட்ஸ்களை அரசு செலவு செய்தது. 2012 அளவில் இந்த 'இலவசங்களை' அரசு நிறுத்தியது. 

அப்படியானால், ஏன் போரிஸ் மீண்டும் அந்த பாதையில் பயணிக்க விரும்புகிறார் ? 

அவரின் பெயர் பொரிஸ் யெல்சின். பெரும் குடிகாரர். அரச விழாக்களில் கூட குடி வெறியில் கோமாளித்தனம் பண்ணியவர்.

ரஸ்யாவை உலகின் கோமாளியாக மாற்றிய பெருமைக்குரியவர். இப்பவும் கோபர்சேவ்வுக்கு அடுத்து ரஸ்யர்கள் வெறுப்பது யெல்சினைத்தான்.

யெல்சின் காலத்தில் அமெரிகாவிடம் கையேந்தி பிழைத்தது ரஸ்யா.

Sunderland இல் நிசான்

Swindon இல் ஹொண்டா

Burnaston இல் டொயோட்டா

இன்னும் பல வெளிநாட்டு கார்கள் இப்பவே யூகேயில் அசெம்பிளி செய்யப்பட்டு கொண்டுதான் இருக்கிறன. இப்போ இவை எந்த வரியும் இல்லாமல் ஈயூ முழுமைக்கும் ஏற்றுமதியாகிறன.

இந்த ஏற்பாட்டை குழப்பி, உலக வர்த்தக மையங்களை உருவாக்கினாலும், காரை ஈயூவில்தான் விற்க வேண்டும். அவர்கள் வரி போட்டால்? ஆனால் அவர்களின் கார்களுக்கு யூகேதான் முதன்மை சந்தை என்பதால் - வரியற்ற ஓர் ஏற்பாடு வாகனங்களுக்கு அமையலாம்.

 

ராஜபக்சேக்களுக்கும் போரிசுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

தேம்ஸ் நடுவே விமான நிலையம்

லண்டனில் பூங்காப் பாலம் 

என ராஜபக்சேக்களின் மத்தள விமான நிலையம் போல் மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஒரு மண்ணுக்கும் பயன்படதா திட்டங்களை செயல்படுத்துவதில் இருவருமே சூரர்கள் 😂.

பொருளாதார துறைமுக நகரங்களும் இப்படி ஆகுமா? பொறுத்திருந்து பார்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணை திரண்டு வருகிறபோது நையீரிய பயப்பிராவில் இருந்தல்ல கொசோவா கிழக்கு தீமோர் போன்ற சிறுமக்கள் தொகையைக் கொண்ட வெளி அழுத்தத்தால் வெற்றி கைகூடிய மக்களைப்போல படிபடியாக விடுதலையை நோக்கி என்கிற உபாயத்தை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும். உள்ளதையும் கெடுத்துவிடாமல் முழுவிடுதலை தீர்வு மூல உபாயம் இணைந்த தாயகத்தை வரையறுத்தல்  தீர்வே உடனடியாக அடைவேண்டிய சாத்தியமான  தந்திரோபாயம் என்பதை உணருதல் காலத்தின் தேவை.  

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

நம்பி நம்பி ஏமாந்த கூட்டம் தான் நான்

இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் வெற்றி பெற்று இருக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவரது கட்சிக்கு தான் வோட் போட்டேன்...காரணம் கோமாளிகள் தான்  நாட்டை ஆள வேண்டும் என்பது என் விருப்பம் 😀

 

  • கருத்துக்கள உறவுகள்

A0-C29667-5486-48-B2-8-F41-695-C9-FA7-C2

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

A0-C29667-5486-48-B2-8-F41-695-C9-FA7-C2

வெள்ளைக்காரன் தமிழ் பேசினால்....
வொணக்கம்,  நண்டி  என்று தான் சொல்வார்கள்.

பொரிஸ்-ஜோன்சன், சரியாக உச்சரித்து இருப்பதை பார்க்க....
உண்மையிலேயே... அவர் பச்சைத் தமிழன்தான் ஐயா.... :grin:

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பல நாடுகள், ஒரு குறிப்பிட்ட சில நாடுகளை விட,  பொருளாதார நிலையில்  பின்தங்கை உள்ளன. உதாரணத்திற்கு, குரோஷியாவில் உள்ள துறைமுக நகரில் வாழுபர் 10000 யூரோ உழைக்கையில் பிரித்தானியாவில் வாழுபர் 25000 யூரோ உழைப்பார். 

பிரித்தானியாவில் வாழுபர் இலண்டனில் வாழுபவருடன் ஒப்பிட்டு தான் வறுமையில் இருப்பதாக கூறுவார். அதனால், பிரித்தானிய அரசியலில் மாற்றத்தையும் கொண்டுவரலாம். 

ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் ஒட்டுமொத்தமாக தன்னை வளர்க்க பார்க்கின்றது. இன்று படும் கடினம் நாளைய சுபீட்ஷம் என பார்க்கின்றது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் போட்டியாக நிற்கப்பார்க்கின்றது.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவனவன் பொங்கல் வாழ்த்தும் நன்றி வணக்கமும் தமிழிலை சொல்லி பேய்க்காட்டுவாங்கள்....நாங்கள் குண்டியிலை தட்டின புளுகிலை பினாத்திக்கொண்டு திரிய வேண்டியதுதான்...
இஞ்சை பாருங்கோ மகிந்தரும் தமிழிலை வெளுத்து வாங்குறார்

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

A0-C29667-5486-48-B2-8-F41-695-C9-FA7-C2

ஐயா ,

திருநீரும் குங்குமமும் தவறிவிட்டது.

புலம்பெயர் நாடுகளில் நாம் பலமாக இருப்பதன் காரணமாகத்தான் அவர்கள் ஒரு பச்சைதமிழனாக பார்க்கிறார்கள். இதையே மற்றைய பலமான சமூகங்களிலும் பார்க்கின்றோம். சீக்கிய சமூகமும் யூத சமூகமும் நாம் பார்த்து அரசியலில் பொறாமை பட கூடிய சமுகமாக உள்ளார்கள். 

எமக்குள் உள்ள வாக்குப்பலம். பொருளாதார பலம் மற்றும் அரசியல் பலத்தை பெருக்குவோம். முடிந்தளவு வாழும் நாடுகளில் ஒரு கட்சியில் சேர்ந்து பயணிப்போம். முடிந்தால் எமது தாயக மக்களுக்காக குரல் கொடுக்க வைப்போம். இல்லாவிட்டாலும், எமது புலப்பெயர் நாட்டில் எமது தலைமுறைகள் வாழ அரசியலை அவர்களுக்காக வளமாக்குவோம்    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.