Jump to content

மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும்


Recommended Posts

மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பது முஸ்லிம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும்.

மத்ரஸா பதிவு நடவடிக்கைகள் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் ஊடாகவே மேற்கொள்ளவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாட்டில உள்ள குர்ஆன் மத்ரஸாக்கனை பதிவுசெய்யும் நடவடிக்கைக்கு பொறுப்பாக ராணுவ அதிகாரி ஒருவரை நியமித்திருப்பது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளை மீளப் பதிவு செய்து முழுமையான மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நாம் அறிகிறோம். இருந்தபோதும் நாட்டிலுள்ள அனைத்து மத்ரஸாக்களும் அரபுக் கல்லூரிகளும் கலாசார அமைச்சின் கீழுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2015 க்கு முன்னர் மத்ரஸாக்கள் பதிவு செய்தல் மற்றும் அரபுக் கலாசாலைகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சர் அப்துல் ஹலீமின் முயற்சியினால் பெரும்பாலான மத்ரஸாக்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையில்இன்னும் பதிவுசெய்யப்படாத மத்ரஸாக்கள் இருப்பின் அவற்றை பதிவுசெய்து கொள்வதற்கான கால அவகாசத்தை அரசாங்கத்தால் வழங்க முடியும்.

இதனை தவிர்த்து அனைத்து மத்ரஸாக்கள் மற்றும் அரபுக் கல்லூரிகளையும் மீண்டும் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதுகால விரயத்தை வீணாக்குவதுடன் அரசுக்கு மேலும் செலவீனத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. அதனால் கடந்தகாலப் பதிவுகளை பேணுவதே சிறப்பானதாக அமையும்.
அத்துடன் மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது முஸ்விம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/74609

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அரபுக்காரன் வந்து தீவிரவாதம் படிப்பிக்க முடியாதே...யு.என்.பீயை ஏமாற்றி செய்யிறதெல்லம் செய்தாயிற்று....இப்ப ஒன்றுமே செய்யேலாமல் கிடக்கு....இல்லையென்றால் வன்னியும் யாழ்ப்பாணமும் பறிபோயிருக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு வந்தால் இரத்தம். எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னி. 

இந்த நிலை மாறவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

மிகவும், சிறப்பான செய்தி. :)
நாங்கள், இதை வர வேர்(ற்)க்கின்றோம். 👓

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

அத்துடன் மத்ரஸாக்களை பதிவு செய்யும் நடவடிக்கைக்குப் பொறுப்பாக இராணுவ அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது முஸ்விம் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடாகும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

பாம்பின் கால் பாம்பறியும் என்றதால இருக்கும்.

Link to comment
Share on other sites

இப்படியான ஒருவர் இருந்தால்தான் அது மதரஸவா இல்லை வேறு ஏதும் சடடவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படும் இடமா எண்டு கண்டு பிடிக்கலாம்। மடியில் கனம் இல்லாவிடடாள் வழியில் பயப்பட தேவையில்லை। 

Link to comment
Share on other sites

On 1/31/2020 at 6:11 PM, alvayan said:

ஏன் அரபுக்காரன் வந்து தீவிரவாதம் படிப்பிக்க முடியாதே...யு.என்.பீயை ஏமாற்றி செய்யிறதெல்லம் செய்தாயிற்று....இப்ப ஒன்றுமே செய்யேலாமல் கிடக்கு....இல்லையென்றால் வன்னியும் யாழ்ப்பாணமும் பறிபோயிருக்கும்..

இது தவறான ஊகம்... பல தமிழ் மக்கள் ஜ.தே.க காலத்தில் தான் வன்னியில் முஸ்லிம் குடியேற்றங்கள் நடந்ததாக நினைக்கின்றனர்..ஆனால் அது தவறு முஸ்லிம் குடியேற்றங்கள் கடந்த ராஜபக்‌ஷ காலத்தில் தான் நடந்தது. இன்னமும் தெளிவாக சொன்னால் நல்லாட்சி அரசாங்கம் வந்த படியால் தான் இந்த்ஹ முஸ்லிம் குடியேற்றங்கள்  தடுத்து நிறுத்தப்பட்டன; மஹிந்த காலதில் வடக்கின்    அடாவடி அமைச்சர்    அரசுடன் இருந்தபடியால் அவர் சட்ட விரோத குடியேற்றங்கள் நடத்திய போது அவரை மக்களால் எதிர்க்க முடியவில்லை; எதிர்த்தவர்களையும் தனது அதிகாரம் மூலம் அடாவடி அமைச்சர் அடக்கினார். உதாரணமாக மன்னார் குடியேற்றங்கள்,வில்பத்து குடியேற்றம்,பம்பைமடு வவுனியா குடியேற்றங்கள் எல்லாம் மகிந்தவின் காலத்தில் தான் நடந்தன. இந்த நேரத்தில் மன்னார் மாவட்ட நீதிபதி அச்சுற்த்தப்பட்டார்,மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்பும் ஒரு மத குரு என்றும் பாராமல் கேவலப்படுத்தப்பட்டார் ஆனால் வத்திக்கனின் தலையீட்டை அடுத்து அமைச்சர் கொஞ்சம் அடங்கினார்.அதே போல் வவுனியாவில் புற்று நோய் வைத்தியசாலை அமைய இருந்த இடத்தை குடியேற்றத்துக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்த இரண்டு அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்து மூன்றாவதாக ஒருத்தரை நியமித்து வெற்றி கண்டார் அமைச்சர்.

இதெல்லாம் நடந்தது மகிந்த்வின் ஆட்சி காலத்தில். ஆனால் மக்கள் வெளிப்படையாக இக்குடியேற்றங்களை கோத்தா ஆட்சி அதிகாரம் இழந்து  அரச வன்முறை ஓய்வுக்கு வந்த பின்னரே எதிர்க்க தொடங்கினர்.

இவர் மன்னாரை ஒரு வழி பன்னி விட்டு முல்லைத்தீவு மற்றும் வவுனியா,கிளினொச்சியில் கை வைக்க முயன்ற போது மக்கள் எது வித அச்சமும் இல்லாமல் இவர்களை எதிர்த்தார்கள் அதனால் இந்த பிரதேசங்கள் தப்பி பிழைத்தன....ஆனால் இவர்கள் ஓயவில்லை இப்பொழுது இவர்களது யுக்தி என்னவென்றால் தமிழரை வைத்து தமிழர் காணிகளை வாங்கி அங்கு குடியேற்றுவது.....இப்படி தான் சுன்னாகத்திலும்,அராலியிலும் இரண்டு குடியேற்றங்கள் வரப்போகின்றன.

Link to comment
Share on other sites

23 hours ago, Dash said:

இது தவறான ஊகம்... பல தமிழ் மக்கள் ஜ.தே.க காலத்தில் தான் வன்னியில் முஸ்லிம் குடியேற்றங்கள் நடந்ததாக நினைக்கின்றனர்..ஆனால் அது தவறு முஸ்லிம் குடியேற்றங்கள் கடந்த ராஜபக்‌ஷ காலத்தில் தான் நடந்தது. இன்னமும் தெளிவாக சொன்னால் நல்லாட்சி அரசாங்கம் வந்த படியால் தான் இந்த்ஹ முஸ்லிம் குடியேற்றங்கள்  தடுத்து நிறுத்தப்பட்டன; மஹிந்த காலதில் வடக்கின்    அடாவடி அமைச்சர்    அரசுடன் இருந்தபடியால் அவர் சட்ட விரோத குடியேற்றங்கள் நடத்திய போது அவரை மக்களால் எதிர்க்க முடியவில்லை; எதிர்த்தவர்களையும் தனது அதிகாரம் மூலம் அடாவடி அமைச்சர் அடக்கினார். உதாரணமாக மன்னார் குடியேற்றங்கள்,வில்பத்து குடியேற்றம்,பம்பைமடு வவுனியா குடியேற்றங்கள் எல்லாம் மகிந்தவின் காலத்தில் தான் நடந்தன. இந்த நேரத்தில் மன்னார் மாவட்ட நீதிபதி அச்சுற்த்தப்பட்டார்,மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப்பும் ஒரு மத குரு என்றும் பாராமல் கேவலப்படுத்தப்பட்டார் ஆனால் வத்திக்கனின் தலையீட்டை அடுத்து அமைச்சர் கொஞ்சம் அடங்கினார்.அதே போல் வவுனியாவில் புற்று நோய் வைத்தியசாலை அமைய இருந்த இடத்தை குடியேற்றத்துக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மறுத்த இரண்டு அரச அதிகாரிகளை இடமாற்றம் செய்து மூன்றாவதாக ஒருத்தரை நியமித்து வெற்றி கண்டார் அமைச்சர்.

இதெல்லாம் நடந்தது மகிந்த்வின் ஆட்சி காலத்தில். ஆனால் மக்கள் வெளிப்படையாக இக்குடியேற்றங்களை கோத்தா ஆட்சி அதிகாரம் இழந்து  அரச வன்முறை ஓய்வுக்கு வந்த பின்னரே எதிர்க்க தொடங்கினர்.

இவர் மன்னாரை ஒரு வழி பன்னி விட்டு முல்லைத்தீவு மற்றும் வவுனியா,கிளினொச்சியில் கை வைக்க முயன்ற போது மக்கள் எது வித அச்சமும் இல்லாமல் இவர்களை எதிர்த்தார்கள் அதனால் இந்த பிரதேசங்கள் தப்பி பிழைத்தன....ஆனால் இவர்கள் ஓயவில்லை இப்பொழுது இவர்களது யுக்தி என்னவென்றால் தமிழரை வைத்து தமிழர் காணிகளை வாங்கி அங்கு குடியேற்றுவது.....இப்படி தான் சுன்னாகத்திலும்,அராலியிலும் இரண்டு குடியேற்றங்கள் வரப்போகின்றன.

சரியாக பதிவிட்டிருக்கிறீர்கள்। குடியேற்றம்  மட்டுமல்ல , காணி கொள்ளையும் இதே காலத்தில்தான் நடந்தது।  ஷாப்பிங் பையுடன் போனவன் எல்லாம் இப்போது கோடீஸ்வரர்கள்।

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.