Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg&key=a590aa3e80084064fdbd7a50c74fde1b4810ba80b5662fe19074fdbc5aca2d64

Ragging-at-UP-college-150-freshers-made-to-tonsure-735x389.jpg

 

Continued..Part:3

நள்ளிரவு 12:45 மணி..

பயணப் பொதிகளை தூக்கிக்கொண்டு நான்காம் ஆண்டு சீனியர் மாணவரோடு விடுதி அலுவலகத்திற்கு சென்றால் அங்கே கதவு பூட்டியிருந்தது.

சீனியர் மாணவர், எனது கல்லூரி அனுமதி கடிதத்தை வாங்கி அதிலுள்ள அனுமதி எண்களை பார்த்துவிட்டு அருகிலுள்ள தகவல் பலகையில் ஒட்டியிருந்த சமீபத்திய அறிவிப்புகளை நோட்டம் விட்டர். என்னைப் போன்றே சில முதலாம் வருட மாணவர்களும் அங்கே கூடிவிட்டனர். ஒருவழியாக எனது பெயரை பார்த்துவிட்டு,

"டேய்.. ஒனக்கு முதலாம் வருட விடுதியில் முதல் தளத்தில் அறை எண்... தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. நீ இன்னமும் விடுதிக்கு பணம் கட்டலையா..?" எனக் கேட்டார்.

“இல்லை சார், இப்போதானே வரேன், பணம் என்னிடம் இருக்கு..” என்றேன்.

“சரி,என்னுடன் வா, எனக்குத் தெரிந்த இரண்டாம் வருட ஜூனியர் அறையில் இன்று இரவு தங்க ஏற்பாடு செய்றேன், நாளை காலை முதல் வேலையா கல்லுரி முதல்தளத்திலிருக்கும் வங்கியில் இந்த அனுமதி கடிதத்தைக் காட்டி விடுதிக்கு பணம் கட்டிவிடு..” என்றவர், என்னை அழைத்துக்கொண்டு இரண்டாம் வருட மாணவர் தங்கியிருக்கும் அறைக்கு கூட்டிச் சென்றார்.

கதவை தட்டியவுடன் ஒருவர் திறந்து பார்த்துவிட்டு என்ன சார்… இன்னேரம்..? யார் இது ஃபர்ஸ்ட் இயரா..?” என சிரித்தார்.

“ஆமான்டா.. இவனை இன்னைக்கு ஒன் ரூமில் சேர்த்துக்கொள், நாளை பேங்க் கவுண்டர் இருக்குமிடத்தை காட்டி பணத்தை கட்டி ரூம் ஒதுக்கீட்டை வாங்கிக் குடு”  என சொல்லிவிட்டு அங்கிருந்து விடை பெற்றார்.

“ம்ம் உள்ளே வாடா, ஒன் பேர் என்ன..?” எனக் கேட்டவாறு என்னுடைய பெட்டிகளை உள்ளே எடுத்துகொண்டு அழைத்துச் சென்றார்.

உள்ளே தயங்கியவாறு சென்றவுடன் அறையை பார்த்தேன்.. பெரிய அறையில் நான்கு இரண்டாம் ஆண்டு பயிலும் சீனியர் மாணவர்கள் அவர்களின் கட்டிலில் உட்கார்ந்திருந்தனர்.

“ஒன் பேரு என்னடா..? எந்த ஊர்..?” என நால்வரும் விசாரித்தனர். நான் ஒருவித மன அழுத்தத்தில் மெதுவாக சொல்ல, டேய் சத்தமா சொல்லுடா..” என மிரட்டினர்.

“இருங்கடா..” என அவர்களை அடக்கிவிட்டு ம்..ஒன் பெட்டியை தொறந்து டிரஸ்ஸை மாத்திக்கோ.. “ என முதலில் கதவைத் திறந்தவர் கூறினார்.

 

நானும் கூலாக பெட்டியை திறந்து சட்டையை மாத்திவிட்டு லுங்கியை எடுத்து மாத்த ஆரம்பித்தேன்.

அவ்வளவுதான்.. கட்டிலிலிருந்த இருவர் பாய்ந்து என்னை நோக்கி வந்து லுங்கியை பிடுங்கி என் பெட்டி மீது வீசிவிட்டனர்.

"ஏன்டா என்ன தில்லு இருந்தால் எங்கள் முன் நீ லுங்கி கட்டுவே..?" என சத்தம் போட்டனர்.

நான் அதிர்ந்து முழிக்க, மேலே சட்டையுடனும், கீழே உள்ளாடையுடனும் கூனிக் குறுகி நின்றேன்.

"சட்டையைக் கழட்டுடா" அடுத்த உத்தரவு.

இப்பொழுது வெறும் உள்ளாடைகளுடன் நான் நிற்க, நால்வருக்கும் ஒரே சிரிப்பு.

அச்சமயம் அறைக்கு வெளியே பல கூக்குரல்களும், அதட்டும் சத்தமும், அதற்கு பதிலாக சில மாணவர்களின் கெஞ்சலும் ஒலித்தன.

“டேய் வாங்கடா வெளியே போவோம்.. இவனையும் கூட்டுக்கொண்டு போகலாம்..” என்றவாறு சொல்லிவிட்டு அந்த நால்வரும் என்னை நெட்டித் தள்ளி அறைக்கு வெளியே அழைத்துச் சென்றனர்.

வெளியே வந்து பார்த்தால் ஏறக்குறைய இருபத்தைந்து முதலாமாண்டு மாணவர்கள் ஜட்டி பனியனோடு குழுவாக வராந்தாவில் நின்றிருந்தனர்.

அவர்களை சுற்றி ஐம்பது அறுபது இரண்டாமாண்டு மாணவர்கள் ஒரே கொக்கரிப்புடன்...!

அதில் இருவர் அன்றைய ராகிங்கிற்கு தலைமை ஏற்பது போல சொற்பொழிவாற்ற ஆரம்பித்தார்.

என்னையும் அந்த முதலாமாண்டு மாணவர்கள் கூட்டத்தில் இணைத்தனர்.

“டியர் ஃபர்ஸ்ட் இயர் எஞ்சினியர்ஸ்..! வெல்கம் டு ஃபெகல்டி ஆஃப் எஞ்சினியரிங்..”

“டுடே இஸ் வெரி ஸ்பெசல் டே, டு ப்ளே..” என்றவர்,

"டேய் எல்லோரும் ரெயிலை பார்த்திருக்கீங்களா..?"

"யெஸ் சார்" என நாங்கள் மெதுவாக தலையாட்ட,

 

"பே......களா, நாங்கள் இப்போ சொல்றபடி நீங்கள் செய்யணும்.. ஓ.கே..?" என அரட்டினார்.

"ஓ.கே சார்" என நாங்கள் ஈனஸ்வரத்தில் பதிலலிக்க,

சில இரண்டாமாண்டு மாணவர்கள் உள்ளாடைகளுடன் நின்ற எங்களை வரிசையாக ஒருவர் பின் ஒருவராக நிற்கச் சொன்னார்கள்.

எப்படி..?

ஒவ்வொருவரின் பின்னாடி நின்றுகொண்டு முன்னாலிருப்பவரின் ஜட்டியின் மேல்விளிம்பை இறுக்க பிடித்துக்கொள்ள வேண்டும்..

நின்றோம்.. ரெயில் மாதிரி...!

 வேறு வழி..?

அந்த விடுதியின் அமைப்பு, மூன்று தளங்கள் கொண்ட செவ்வக வடிப்பைக் கொண்டது.. நடுவில் விளையாட சிறு மைதானமும், செடிகொடிகளும்..

முதலாமாண்டு மாணவர்களின் ரெயில், இப்பொழுது புறப்பட தயாரானது..

தலமை ஏற்ற இரண்டாமாண்டு மாணவர், கட்டளையிட்டார்.

நாங்கள் மைதானத்தில் ரெயில் மாதிரி உள்ளாடைகளுடன் ஓட ஆரம்பித்தோம்..

உடனே அதட்டல் வந்ததது.

"டேய் பரதேசிகளா..ரெயில் என்னடா சத்தமே போடாமல் ஓடுது..?" என அவர் கத்த, அந்த கட்டிடம் முழுவதும் மாடிகளின் வராந்தாவில் பல இரண்டாமாண்டு மாணவர்களும் நின்றுகொண்டு கூச்சலிட்டனர்.

தலமை எற்ற மற்றொரு சீனியர், எங்கள் முன் வந்து இதோ பாருங்கடா.. ரெயில் போகும்போதுகட கட”வென போகும்தானே..? ஆனால் அந்த சத்தத்திற்கு பதிலாக நாங்கள் சொல்வதை சத்தமாக எல்லோரும் சேர்ந்து கத்தியவாறு நீங்கள் இந்த மைதானத்தை பத்து முறை சுத்தி வரணும்..” என அந்த சொற்களை சொல்லிக் கொடுத்தார்..

அது..

"டக்கு......... க்கு.........."

"கூ.........."

பாலத்தின் மீது ரெயில் ஓடும்போது,

"............................."

விதியே என நினைத்துக்கொண்டு எங்கள் ரெயில், அவர்கள் சொல்லிக் கொடுத்த அந்த தகாத வார்த்தைகளின் ஓங்கிய குரலோடு ஓட ஆரம்பித்தது..

அத்தனை சீனியர்களுக்கும் ஒரே மகிழ்ச்சி, ஆரவாரம், கைதட்டல்கள்...

மணி அதிகாலை மூன்று ஆகிவிட்டது..

ராகிங்கின் அடுத்த கட்டம் ஆரம்பமானது..!

 (தொடரும்..)

  • Replies 63
  • Views 10.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

வெளியே வந்து பார்த்தால் ஏறக்குறைய இருபத்தைந்து முதலாமாண்டு மாணவர்கள் ஜட்டி பனியனோடு குழுவாக வராந்தாவில் நின்றிருந்தனர்.

தனியே என்றால்த் தான் ரொம்ப கஸ்டம் ஊரோடு என்றால் பரவாயில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

தனியே என்றால்த் தான் ரொம்ப கஸ்டம் ஊரோடு என்றால் பரவாயில்லை.

என்ன சார், குழுவோடு என்றால பரவாயில்லையா..? அன்றைக்கு நான் அவமானபட்டது போல என்றும் வாழ்க்கையில் சந்தித்ததில்லை. :(

 

பின்னர் எனக்கு அன்றிரவு ரூம் கொடுத்த இரண்டாமாண்டு சீனியர் மாணவர், பின்னாளில் சொன்னது,

"எலேய்.. ஒங்களை 'நிர்வாணமாக ஓட வைக்கவில்லையே' என சந்தோசப் படு...! மற்ற கல்லூரிகளில் ராகிங் நம்ம கல்லூரியை விட மிக மோசமாக இருக்கும், இங்கே யாரும் யாரையும் அடிப்பதில்லை, குறிப்பிட்ட அளவுக்கு மேல் கொடுமை செய்வதில்லை, நானும் சென்ற வருடம் இதே போல இங்கே உள்ளாடைகளுடன் ஓடியிருக்கிறேன்.." என்றார்.

அதற்கு நான் "ஏன் சார், நீங்க பட்டதை ஏன் எங்களிடம் காட்டுகிறீர்கள்...?" என்றேன்..

"இது ஒரு செயின் ரியாக்சன் மாதிரி.. யாம் பெற்ற துன்பத்தை மற்றவரிடம் செய்து பார்க்கும் ஒரு குரூர திருப்தி.." என்றார்.

டிஸ்கி:

(கல்லூரி படிப்பு முடிந்து, பின்னாளில் பொறியாளர்களாக, ஒரே அரசு அலுவலகத்தில் இருவரும் சில வருடங்கள் பணியாற்றியபோது, அவரை நான் கிண்டலடித்து காலை வாருவது வழக்கம் என்பது வேறு கதை..! :))

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

அதற்கு நான் "ஏன் சார், நீங்க பட்டதை ஏன் எங்களிடம் காட்டுகிறீர்கள்...?" என்றேன்..

வன்னியன் நீங்க இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவனாக இருந்த போது புதிதாக வந்த முதலாமாண்டு மாணவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியன் நீங்க இரண்டாம் மூன்றாம் ஆண்டு மாணவனாக இருந்த போது புதிதாக வந்த முதலாமாண்டு மாணவரிடம் எப்படி நடந்து கொண்டீர்கள்?

நான் ராகிங் செய்ததில்லை என சொன்னால் அது உண்மையில்லை.

நாங்கள் விடுதியில் தங்கியிருக்கும்போது ஒரு அறையில் நான்கு பேர் இருப்பார்கள்..

இரண்டாம், மூன்றாம், நான்காம் வருடங்கள் படிக்கும்போது எங்கள் அறைக்கு சக ரூம்  தோழர்கள் முதலாமாண்டு மாணவர்களை அழைத்து வருவதுண்டு.

என் ரூம்  தோழர்கள், வேண்டுமென்றே என்னிடம் அவர்களை அனுப்பி "சார் சொல்வது மாதிரி செய்..!" என சீண்டுவதுண்டு. நானும் சில கேள்விகளை கிண்டலாக கேட்க, அவர்கள் முழிக்க, நான் பட்ட துன்பங்கள் நினைவுக்கு வரும், "அவர்களிடமே போங்கடா..!" என அனுப்பிவிடுவதுண்டு.

ராகிங் செய்வதற்கும் சில திறமைகள்(?) வேணும் சார்,  நிச்சயம் எனக்கில்லை...!:)

சிலருக்கு என்னுடைய புத்தகங்கள், நோட்ஸ்களை கொடுத்திருக்கிறேன்.

(பெரும்பாலும் ஐந்தாம் ஆண்டு பொறியியல் மாணவர்கள் முதிர்ச்சி (Well matured Engineers..!) அடைந்திருப்பார்கள், அவர்கள் அதிகம் ராகிங் செய்வதில்லை, ஆனால் அகப்பட்டால், சில நேரம் அதோ கதிதான்..!)

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

முதலாமாண்டு மாணவர்களின் ரெயில், இப்பொழுது புறப்பட தயாரானது..

தலமை ஏற்ற இரண்டாமாண்டு மாணவர், கட்டளையிட்டார்.

நாங்கள் மைதானத்தில் ரெயில் மாதிரி உள்ளாடைகளுடன் ஓட ஆரம்பித்தோம்..

அட.... இவ்வளவும் நடந்த பின்பும்,  அந்த ரயிலுக்கு....
முதலாமாண்டு மாணவர்களின் ரயில், 🚂🚞🚋 என்று பெயரும் வைத்தாச்சு.:grin:

அந்த ரயிலில்.... ராஜவன்னியர்  எத்தனையாவது பெட்டி.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் உங்களுக்கு செய்த ராகிங்கும் பத்தாது, நீங்கள் செய்த ராகிங்கும் பத்தாது. நீங்கள் சும்மா படிக்கிறதுக்கு மட்டும்தான் லாயக்கு. அதுக்கு சரிவர மாட்டியள் .......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அட.... இவ்வளவும் நடந்த பின்பும்,  அந்த ரயிலுக்கு....
முதலாமாண்டு மாணவர்களின் ரயில், 🚂🚞🚋 என்று பெயரும் வைத்தாச்சு.:grin:

அந்த ரயிலில்.... ராஜவன்னியர்  எத்தனையாவது பெட்டி.  🤣

 

பதினைந்தோ, பதினாறாவது ஆளாக(ரெயில் பெட்டியாக) இருக்கும் என நினைக்கிறேன், தமிழ் சிறி..! :)

 

சமீபத்தில் நடந்த சுவாரசியமான விடயம்:

சமீபத்தில் தொலைபேசியில் ஒரு குரல் என்னை அழைத்தது..!

'இது என்னடா, புது நம்பரா இருக்கே..?' என எடுத்து "ஹலோ.." சொன்னேன்.

"டேய் யார் பேசுறது, தெரியுமாடா..?" என்றது மறுமுனையில் குரல்..!

குரலை எங்கோ கேட்டது மாதிரி இருந்தது ஆனால் உடனே நினைவிற்கு வரவில்லை.

"தெரியலையே, நீங்கள் யாரு..?" என்றேன்.

"அடப்பாவி, ஃபர்ஸ்ட் இயரில் ஒன் ஜட்டியை பிடித்துக்கொண்டு ஓடி வந்தேனடா... மறந்துட்டையே..?" என மறுமுனையில் குரல் சிரித்தது. ஆனால் குரலில் சிறிது தடுமாற்றம் தெரிந்தது..

எனக்கு புரிந்துவிட்டது, ஆள் தீர்த்தம் போட்டிருக்கிறார்.. அடுத்தடுத்து இரண்டு குரல்கள் அவனுக்கடுத்து பேசினர்.

'அடடா.. இவன் நம்ம ........னந்தன்'ஆச்சே..? இவன் எப்படி துபாயில்..?' என அதிசயித்து "டேய் .........னந்தன்,  நீ எங்கேடா இந்தப் பக்கம்..?" என ஆவலுடன் கேட்டேன்..

"இல்லையடா, நாங்கள் அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டோம், சும்மா ஜாலியாக ஒரு ரவுண்டு துபாயை பார்க்க வந்தோம், நீயும் இங்கே வாடா.." என அழைத்தனர்.

அடுத்து வழக்கம் போல கல்லூரி நண்பர்களின் சந்திப்பு, இத்தியாதிகள்..!  feux-artifice.gif

இந்த பகுதியை எழுதும்போது அன்று என்னை பின் தொடர்ந்த அந்தக் கல்லூரி நண்பனின் ஞாபகம் வந்தது.

( கொசுறு: என்னுடைய உள்ளாடையை பிடித்துக்கொண்டு, பின்னாடி அடுத்த ரெயில் பெட்டியாக வந்த அந்த நண்பன், மூன்று வருடங்களுக்கு முன் அரசின் ஒரு துறையில் தலைமை பொறியாளராக உயர்பதவியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றான். )

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Picture1.jpg&key=a590aa3e80084064fdbd7a50c74fde1b4810ba80b5662fe19074fdbc5aca2d64

1513077158phpuJPj5y.jpeg

Continued..Part: 4

அதிகாலை மூனு மணிக்கு மேல் நடந்த ராகிங் வதைகளை இங்கே எழுத இயலாது, ஏனெனில் அவ்வளவு கொடுமை..! :(

பொழுதும் விடிந்துவிட்டது..!

'சரி எல்லாம் முடிஞ்சது' என அறைக்கு போய் மறுபடியும் லுங்கியை எடுத்து கட்டலாமென நினைத்து எடுத்தால், மறுபடியும் அறையிலிருந்த சீனியர்கள்,

"டேய் ஹாஸ்டல்ல இருக்குற இன்னும் ரெண்டு மாசத்துக்கு நீ லுங்கியே கட்டக் கூடாது..!" என 144 தடை போட்டனர்..!

இதென்ன புதுக்கூத்து..?

"ஏன் சார்.. ஏன் லுங்கி கட்டக்கூடாது, பின் எப்படிதான் ரூமில் இருப்பது..?" என வினவினேன்..

"இங்கிருக்கும் பொறியியல் கல்லூரி வளாகத்தினுள் ஒவ்வொரு வருட மாணவர்களுக்கும் தனித்தனி விடுதிகள் இருந்தாலும், அனைத்தும் ஒரே காம்பவுண்ட்க்குள் தான் இருக்கின்றன. எங்களுக்கு முதல் வருட மாணவர்கள் யார், மற்ற வருட மாணவர்கள் யாரென அடையாளம் தெரிய வேணுமே..? தவறுதலாக மற்ற வருட மாணவர்களை ராகிங் செய்துவிட்டால், பெரிய கலவரமே மூண்டுவிடும்..அதை தடுக்கவே இந்த ஏற்பாடு.. அதுவரை நீங்கள் வேட்டிதான் கட்ட வேணும்டா..!" என்று சிரித்தனர்.

அதைக் கேட்டவுடன், முந்தின நாள் பகலில், மதுரை ரெயில் நிலையத்தில் நான் வேட்டியுடன் ரெயிலுக்கு காத்திருந்த நேரம், அந்த இரண்டு சீனியர் மாணவர்கள் "முன்னாடியே ஒனக்கு தெரியுமா.. வேட்டியுடன் வந்திருகே..?" என சிரித்து நக்கலடித்த காரணம் புரிந்தது.

'ஆகா என்ன கண்டுபிடுப்பு..!' என நொந்துகொண்டு, மறுபடியும் வேட்டியை கட்டிக்கொண்டு குளிக்கப் போனேன்.

குளித்து முடித்து வந்தவுடன், அறையிலிருந்த நான்கு சீனியர் மாணவர்களும் என்னை மெஸ்ஸுக்கு சாப்பிட அழைத்துச் சென்றனர். அங்கே பார்த்தால் எனக்கு முன்னதாக சாப்பிட வந்திருந்த சில முதலாமாண்டு மாணவர்கள் கையில் இலையை வைத்துக்கொண்டு மற்ற சீனியர் மாணவர்களின் அதட்டல்படி பிச்சை எடுத்துக்கொண்டிருந்தனர்.

மெஸ் ஊழியர்களுக்கு, 'இது ஒவ்வொரு வருடமும் நடக்கும் வழக்கமான நிகழ்ச்சி' என்பதால் யாரும் தடுக்க வரவில்லை.சிரித்துக்கொண்டு அவர்களின் வேலைகளை கவனித்தனர்.

அன்று முழு இரவும் தூங்கவில்லை, முந்தைய நாள் பிரயாணக் களைப்பு...! எனது கண்கள் தூக்கத்திற்கு ஏங்கின.

'முதல்நாள் கல்லூரி வகுப்புகள் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும், முதல் வருட மாணவர்கள் எல்லோரும் முதல் மாடியிலிருக்கும் குறிப்பிட்ட லெக்சர் ஹாலுக்கு வரச் சொல்லி' அறிவிப்பு அங்கே ஒட்டப்பட்டிருந்தது.

அறையிலிருந்த அந்த இரண்டாம் வருட சீனியர், "சீக்கிரம் சாப்பிடு, ஒனக்கு கல்லூரியிலிருக்கும் 'பேங்க் கவுண்டரை' காட்டுறேன், விடுதிக்கும் கல்லூரிக்கும் பணத்தைக் கட்டிவிட்டு, ஒன் அறையின் சாவியை விடுதி அலுவலகத்தில் வாங்கி தாரேன்" என சொல்லி அழைத்துச் சென்று அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.

இந்த அலுவல்களை முடித்து கல்லூரி முதல் மாடியிலுள்ள லெக்சர் ஹாலுக்கு போய் அமர்ந்தேன். தூக்கம் கண்ணை சொக்கியது.

ஒரு மணி நேரத்தில், முதல் வருட மாணவர்களின் வரவேற்பு நிகழ்ச்சியை கல்லூரி முதல்வரும், மற்றைய பேராசிரியர்களும் வாழ்த்தி வரவேற்றுவிட்டு கல்லூரியில் பல வசதிகள், வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்கினர்.

'எல்லாம் சரி இந்த ராகிங் பற்றி ஏதாவது சொல்வார்'களென பார்த்தால் ஒருத்தரும் மூச் விடவில்லை..!

அறிமுக வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, நான்கு வகுப்பு குழுக்களாக நாங்கள் பிரிக்கப்பட்டு அவரவர் வகுப்புகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

நான் எனது வகுப்பிற்கு சென்று இரண்டாம் வரிசையிலுள்ள மேசை இருக்கையில் உட்கார்ந்தேன். அப்பொழுதைய வகுப்பு 'எலெக்ட்ரிகல் எஞ்சினீயரிங்' பற்றியது..

உதவி பேராசிரியர் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, ஓவ்வொரு மாணவர்களையும் எழுந்து பெயர், இதற்கு முன் படித்த கல்லூரி, சொந்த ஊர் முதலியவற்றை சொல்லி அறிமுகப்படுத்திகொள்ள சொன்னார்.

அனைத்து முடிந்ததும் கரும்பலகையில் அடிப்படை மின்சாரப் பொறியியல் பற்றி சிறிது விளக்கிவிட்டு, 'என்னென்ன புத்தகங்களை இதற்கு படிக்க வாங்க வேண்டு'மென விளக்கினார்..

எனக்கு அசதியில் பயங்கர தூக்கம்..

அவர் கூறியவைகள் அரைகுறையாக காதில் விழ, கொஞ்ச நேரம் அசந்துவிட்டேன்..!

திடீரென அப்பேராசிரியர் என்னை நோக்கி அழைத்து எழச் சொல்லி, தான் சற்றுமுன் படிக்கக் கூறிய புத்தக ஆசிரியரின் பெயரை கூறச் சொன்னார்.

நான் காதில் அரைகுறையாக விழுந்த அவரின் சொற்களை நினைவுபடுத்தி "தண்டோரா, சார்.." என்றேன்.

வகுப்பு முழுவதும் 'கொல்'லென சிரித்துவிட்டது..!

ஏனெனில் அவர் கூறிய புத்தக ஆசிரியரின் பெயர் "டெல்டோரா.."

பேராசிரியர் என் கண்களைப் பார்த்து நிலமையை உணர்ந்திருக்க வேண்டும், சிரித்துவிட்டு உட்கார சொல்லிவிட்டார்..

அந்நிகழ்ச்சியை இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை.  5.gif

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
On 2/18/2020 at 12:57 PM, ராசவன்னியன் said:

ராகிங் செய்யபட்டதினால் சில நல்ல விசயங்களும், பயன்களும் கிட்டின.

அழகான அந்த பழைய நினைவுகளை மீண்டும் நினைக்க வைக்கிறது உங்களது இந்த பதிவு அங்கிள்.. 

ராகிங்கினால் நீங்கள் கூறிய நன்மைகள் உண்டு .. அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.. 

ஆனால் இப்பொழுது உள்ள மாணவர்கள்  வரம்பை/மரபை மீறுவதால் ராகிங்கை ஆதரிக்க முடியவில்லை.. 

ஆனாலும் பல்கலைகழக வாழ்க்கையில் அந்த முதலாமாண்டு ராகிங்கும் ஒரு இனிமையான காலப்பகுதி ..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அழகான அந்த பழைய நினைவுகளை மீண்டும் நினைக்க வைக்கிறது உங்களது இந்த பதிவு அங்கிள்.. 

ராகிங்கினால் நீங்கள் கூறிய நன்மைகள் உண்டு .. அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.. 

ஆனால் இப்பொழுது உள்ள மாணவர்கள்  வரம்பை/மரபை மீறுவதால் ராகிங்கை ஆதரிக்க முடியவில்லை.. 

ஆனாலும் பல்கலைகழக வாழ்க்கையில் அந்த முதலாமாண்டு ராகிங்கும் ஒரு இனிமையான காலப்பகுதி ..

உண்மைதான் அம்மணி.

'ராகிங்' ஒரு எல்லைக்குள் உடல், உளவியல் ரீதியாக துன்புறுத்தல் இல்லாமல், மென்மையாக இருந்தால் அறிமுகப்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும், வரவேற்கலாம்.

நானும் பல சுவாரசியமான, சிலசமயம் ரொம்ப நகைச்சுவையாக அனுபவித்த வதைகளும் உண்டு. பல நிகழ்வுகள் மறந்தே போச்சு.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரானா பாதிப்பின் அவசர நிலையை கவனத்தில் கொள்வோம்.

நேரமிருக்கும் பட்சத்தில் பிறிதொரு சமயத்தில் தொடர்கிறேன்.

இதுவரை பார்வையிட்டு, ஊக்குவித்த அனைவருக்கும் மிக்க நன்றி..!

 

End.jpg

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இலங்கையில் கல்லூரி சென்றதில்லை  ஆதலால் 
இந்த ராகிங் பற்றி தெரியவும் இல்லை புரியவும் இல்லை 

இன்னொருவரை வதை செய்வது என்பது எந்த கோணத்திலும் ஏற்பு உடையது அல்ல. 
இது ஒரு மனித அறிவின் குன்றிய நிலை என்பது எனது கருத்து 

ஈழத்தில் இயக்கங்கள் தொடங்கிய காலங்களில் (ஆரம்ப காலம் இல்லை)
போராடத்தில் இணைந்து பயிற்சிக்கு சென்ற இளைஞர்களை 
ஏற்கனவே பயிற்சி எடுத்த போராளிகள் இப்படி அநியாயமாக புதியவர்களை அடிப்பதுண்டு 
சில இயக்கங்களில் டெலோ ஈப்பி ஆர் எல் வ்  புளொட் போன்ற இயக்கங்களில் 
பல இளைஞர்கள் பயிற்சி காலத்தில் கைகால் முறிந்தது கூட உண்டு 
எனது நண்பர் ஒருவருவருக்கு பயிற்சி முகாமில் மண்டையில் அடித்து அவருக்கு புத்தியே தடுமாறி போய் விட்டது  பின்பு (மந்திகை) மன நல மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார்கள் பெரிதாக பலன் கிடைக்கவில்லை. 

புலிகள் சுய ஒழுக்கம்  பக்குவம் போன்றவற்றையே கடுமையாக கற்பித்தார்கள் 
இவ்வாறான வன்முறைகள் மிக மிக குறைவு 
பின்னாளில் யாரும் யாருக்கும் அடிக்க முடியாது என்று சட்டம் போன்று கட்டளையை பிரபாகரன் பிறப்பித்து 
இருந்ததாக அறிந்துகொண்டேன். மாறாக பனிஸ்மென்ட் கொடுப்பார்கள் 

இவர்கள் மாறாக மூத்தவர்கள் சீக்ரெட்டை ஊதிக்கொண்டே இருப்பார்கள் 
ஊரில் சீகிரெட் பிடிக்காத வயதில் குறைந்தவர்கள் கூட பின்பு இவர்களை பார்த்து பழகியதுண்டு 
இந்த லட்ஷணத்தில் புதியவர்களை அடிப்பார்கள்.

அவர்களின் தனிப்பட்ட குறையாக இப்போது என்னால் இதை பார்க்க முடியவில்லை 
பிற மனிதர்களிடம் சாதி கொடுமை செய்வது துன்புறுத்துவது 
என்று எல்லாமே எமது இனத்தில் இருந்த அறிவற்ற ஒரு மடமை தானம் என்றுதான் நான் எண்ணுகிறேன்.
நாங்கள் ஆண்கள் என்பதால் மிக மிக குறைவு 
இந்த சமூகத்த்தில் பெண்கள் எவ்ளவு கொடுமைகளை பூட்டிய வீடுகளுக்குள் அனுபவித்து இருப்பார்கள்? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ராசவன்னியன் said:

அதிகாலை மூனு மணிக்கு மேல் நடந்த ராகிங் வதைகளை இங்கே எழுத இயலாது, ஏனெனில் அவ்வளவு கொடுமை..! :(

வெளியிலை சொல்லேலாத அளவுக்கு மதுரைக்காரரை உருட்டி பிரட்டி காய்ச்சி எடுத்திருக்கிறாங்கள்.படுபாவியள்.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

வெளியிலை சொல்லேலாத அளவுக்கு மதுரைக்காரரை உருட்டி பிரட்டி காய்ச்சி எடுத்திருக்கிறாங்கள்.படுபாவியள்.😁

யப்பா.. 'பரிமளம் சாமிகளுக்கு' எவ்வளவு சந்தோசம்...!  vil-marre.gif

வாழியவே..!

  • கருத்துக்கள உறவுகள்

நாவல்கள், கட்டுரைகள் படிக்கும்போது அவைகளில் வரும் கதாபாத்திரங்களாக, அவைகளை வாசிக்கும் வாசகர்களை மாற்றிவிடும் திறன் கொண்ட எழுத்தாளர்களே சிறந்த எழுத்தாளர்களாக வரலாற்றில் நிலை பெறுகிறார்கள். அந்தவகையில் ராசவன்னியரின் ராக்கிங் அனுபவக் கட்டுரை என்னைமட்டுமல்ல, கள உறவுகள் பலரையும் ராசவன்னியராகவே மாற்றிவிட்டதை அவர்கள் கருத்துக்கள் வெளிப்படுத்தி உள்ளதை, இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ரவுசர் போடு, டைகட்டு என்று சொல்லாமல், வேட்டிகட்டு என்று ராசவன்னியரை ஒரு பச்சைத் தமிழனாகப் பார்த்து, ராக்கிங்செய்த அந்த பழைய மாணவர்களையும் நான் பாராட்டியே ஆகவேண்டும்.

Edited by Paanch

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

நாவல்கள், கட்டுரைகள் படிக்கும்போது அவைகளில் வரும் கதாபாத்திரங்களாக, அவைகளை வாசிக்கும் வாசகர்களை மாற்றிவிடும் திறன் கொண்ட எழுத்தாளர்களே சிறந்த எழுத்தாளர்களாக வரலாற்றில் நிலை பெறுகிறார்கள். அந்தவகையில் ராசவன்னியரின் ராக்கிங் அனுபவக் கட்டுரை என்னைமட்டுமல்ல, கள உறவுகள் பலரையும் ராசவன்னியராகவே மாற்றிவிட்டதை அவர்கள் கருத்துக்கள் வெளிப்படுத்தி உள்ளதை, இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

ரவுசர் போடு, டைகட்டு என்று சொல்லாமல், வேட்டிகட்டு என்று ராசவன்னியரை ஒரு பச்சைத் தமிழனாகப் பார்த்து, ராக்கிங்செய்த அந்த பழைய மாணவர்களையும் நான் பாராட்டியே ஆகவேண்டும்.

ஊக்க கருத்துக்களுக்கு நன்றி, திரு.பாஞ்.

வேட்டி கட்டும் சூழல் இங்கே வந்ததிலிருந்து எல்லாம் மாறிப் போச்சு..!

அலுவலக மீட்டிங்களுக்கு சென்றால் சூட், டை மற்றும் திட்டப்பணிகளுக்கு சென்றால் முழு பாதுகாப்பு கவசங்களுடன்(PPE) தான் செல்ல வேண்டுமென அலுவலக வழிகாட்டல்கள்..

வேட்டிக்கு மாற தமிழகம்தான் செல்ல வேண்டும்..! :(

  • 4 weeks later...

அந்தக் கால ராக்கிங்க்கும் இந்த கால ராகிங்க்கும் எக்கசக்க வித்தியாசம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kali said:

அந்தக் கால ராக்கிங்க்கும் இந்த கால ராகிங்க்கும் எக்கசக்க வித்தியாசம். 

அப்படியா..? கொடுமைகள் குறைந்துள்ளனவா..?

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் இருக்காது என எண்ணுகிறேன்.

4 minutes ago, ராசவன்னியன் said:

அப்படியா..? கொடுமைகள் குறைந்துள்ளனவா..?

பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் இருக்காது என எண்ணுகிறேன்.

இப்ப எல்லாமே கூடியிருக்கு. 
யுனி போக முதலே போன் நம்பர் கண்டுபிடிச்சு ஆரம்பிச்சிடும். 
மனுஷ வேஷத்தில் இருக்கிற மிருகங்களை கஷ்டமேயில்லாமல் அடையாளம் கண்டிடலாம். 

On 1/4/2020 at 23:15, ராசவன்னியன் said:

PPE) தான் செல்ல வேண்டுமென

அங்கே ஒரு PPEஇன் விலை என்ன? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kali said:

..அங்கே ஒரு PPEஇன் விலை என்ன? 

தரமான PPE வேண்டுமெனில் 800 திர்ஹாமிலிருந்து கிடைக்கிறது.

செலவழிக்கும் கம்பெனியை பொறுத்து வாங்கிக் கொடுக்கிறார்கள்.

21 hours ago, ராசவன்னியன் said:

தரமான PPE வேண்டுமெனில் 800 திர்ஹாமிலிருந்து கிடைக்கிறது.

செலவழிக்கும் கம்பெனியை பொறுத்து வாங்கிக் கொடுக்கிறார்கள்.

நன்றி!

பயங்கர விலையா இருக்கே!

200 டொலருக்கு மேல 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kali said:

நன்றி!

பயங்கர விலையா இருக்கே!

200 டொலருக்கு மேல 

நான் சொல்வது தலை, முகம், கண்கள், கைகள், உடைகள் மற்றும் பாதணிகளையும் சேர்த்து..
('கேட்டர் பில்லர்' - Caterpillar நிறுவன பொருட்கள்..)

இந்த நிறுவன பொருட்கள் பெரும்பாலும் அரச நிறுவனகளில் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருக்கும். அனைவரும் அரசு அங்கீகரித்த பொருட்களையே தங்கள் திட்டப்பணிகளுக்கு பயன்படுத்த வேண்டுமென்பது முக்கிய நிபந்தனையாகும்.

இப்ப தான் ராகிங் பாகங்களை முழுமையா படிச்சு முடிச்சன்.
வன்னி அண்ணை சூப்பர் பதிவு!

  • கருத்துக்கள உறவுகள்

எவரெவரெல்லாம் என்னை அதிகமாக ராகிங் செய்தார்களோ அவர்களே என்னுடன் அதிக நட்புடன் இருக்கிறார்கள், தற்போதும் 😀.

அந்த இனிய நாட்களை மீளவும் இங்கே திரும்பவும் கொண்டுவந்ததற்கு இராச வன்னியருக்கு நன்றிகள். 👏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.