Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா அச்சத்தில் உலகம்: அசராத கிம் ஜோங் உன் - இரண்டு ஏவுகணைகளை சோதித்த வட கொரியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறது வட கொரியா.

வட கொரியா இரண்டு ஏவுகணைகளைச் சோதனை செய்ததாக கூறுகிறது தென் கொரியா ராணுவம்.

வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இது.

கொரோனா அச்சத்தில் உலகம், இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்த கிம் ஜோங் உன்படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம்

ஜப்பானை ஒட்டி உள்ள வட கொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

குறுகிய தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணை இது என்கிறது தென் கொரியா ராணுவ தலைமை.

ராணுவ வலிமை

தென் கொரியாவும், அமெரிக்காவும் மேற்கொள்ளவிருந்த ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைக்க அண்மையில் முடிவு செய்தது. இப்படியான சூழலில் வட கொரியா ஏவுகணை சோதனை செய்திருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தென் கொரியாவின் இவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஈஸ்லே, "வட கொரியா தனது ராணுவ திறனைத் தொடர்ந்து வலிமைப்படுத்த விரும்புகிறது என்பதையே இது காட்டுகிறது," என்கிறார்.

மேலும் அவர், "தென் கொரியாவும், அமெரிக்காவும் தங்களது ராணுவ கூட்டுப்பயிற்சியைத் தள்ளி வைத்தது கிம் அரசாங்கத்திடம் எந்த நல்லெண்ணத்தையும் ஏற்படுத்தவில்லை," என்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வட கொரியா ஏவுகணை சோதனை செய்தது.

அமெரிக்கா - வட கொரியா

அமெரிக்காவும், வட கொரியாவும் பேச்சு வார்த்தையில் ஈட்டுப்பட்டிருந்தது. கிம் ஜோங் உன்னும், டொனால்ட் டிரம்பும் 2018-இல் சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். ஆனால், இந்த பேச்சு வார்த்தையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சத்தில் உலகம், இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்த கிம் ஜோங் உன்படத்தின் காப்புரிமை Getty Images

பேச்சுவார்த்தை தடைப்பட்டதை அடுத்து, இடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அணு ஆயுதத் திட்டங்களுக்கு புத்துயிர் கொடுத்தார் கிம்.

அதுமட்டுமல்லாமல், மிகப்பெரிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்ய இருப்பதாகவும் வட கொரியா தெரிவித்து இருந்தது.

தென் கொரியா மிக மோசமாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 26 பேர் பலியாகி உள்ளனர்.

வட கொரியாவில் கொரோனாவின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து எந்த தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/global-51704009

  • கருத்துக்கள உறவுகள்

பொழுது போகலைன்னா இரண்டு ஏவுகணையை வானத்தை நோக்கி விடுவது கிம்மின் வாடிக்கையாகிவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

varanda-madura-micheal-simbus-aaa-teaser

ஊரே கோரனோ கோரோனா என்டு பத்தி எரியும் போது என்ன வேலை செய்யுறார் கிம்மு.? 😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, பிழம்பு said:

தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் நேரத்தில், ஏவுகணை சோதனையில் ஈட்டுப்பட்டிருக்கிறது வட கொரியா.

நீ கலக்கு தல 😎

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்குள்ள கண்டபடி அட்கள்  போகேலாது கொரோனா உட்பட. அவருக்கு என்ன பயம் ???✴️

8 hours ago, பிழம்பு said:

வட கொரியா இவ்வாண்டு செய்யும் முதல் ஏவுகணை சோதனை இது.

தெரிந்ததை தானே செய்ய முடியும் இவரால் என்ன மருந்தா கண்டு பிடிக்க முடியும் 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ampanai said:

தெரிந்ததை தானே செய்ய முடியும் இவரால் என்ன மருந்தா கண்டு பிடிக்க முடியும் 🙂 

வட கொரியா தொடர்பாக மிகவும் நன்றாகத் தெரிந்து பேசுகிறீர்கள் போல 😂

  • கருத்துக்கள உறவுகள்

அடையாளம் தெரியாத இரு ஏவுகணைகளை சோதித்த வடகொரியா!

 

by : Anojkiyan

50190311_303-720x450.jpg

வட கொரியா அடையாளம் தெரியாத வகையிலான இரு ஏவுகணைகளை கடலில் ஏவி பரிசோதித்ததாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) வட கொரியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள வோன்சான் பகுதியிலிருந்து கடல் பரப்பில் கிழக்கு நோக்கி இந்த இரு ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை செய்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

சுமார் 240 கி.மீ. தூரம் பயணித்த அந்த ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறைந்த தொலைவு ஏவுகணைகளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இதுபோன்ற ஏவுகணைகள் மேலும் ஏவப்படலாம் எனவும் இதனை தொடர்ச்சியாக கண்காணித்து வருவதுடன், எதற்கும் தயார் நிலையில் இருந்து வருவதாகவும் தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.

நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடிய வகையிலான ஏவுகணைகளின் பரிசோதனைக்கான தடை உத்தரவை விலக்கிக் கொள்வதாக வட கொரியா அறிவித்து சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாடு ஏவுகணைச் சோதனை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

http://athavannews.com/அடையாளம்-தெரியாத-இரு-ஏவு/

  • 3 weeks later...

வட கொரியா நாட்டில் ஒருவருக்கும் கோவிட்19 இல்லையாம். ஏற்கனவே தனிமைப்படுத்த நாடு, சீனாவுடனான எல்லையையும் மூடியுள்ளது. 

இது உண்மையாக இருக்கலாம். இல்லை, அங்கு அவர்களுக்கு இந்த தொற்று பற்றி சோதிக்க தெரியாமல் இருக்கும். இல்லை, சுவாசம் மறுத்து இறக்க முன்னர், பாதிக்கப்பட்டவர் பசியால் இறந்து விடுவார். 

வட கொரியா என்றுமே ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நாடாகவே உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் வடகொரியா ஏவுகணை பரிசோதனை!

கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்பரப்பில் இரு ஏவுகணைகளை வடகொரியா ஏவிப் பரிசோதனை செய்துள்ளதாக தென் கொரியா இராணுவம் இன்றைய தினம் தெரிவித்துள்ளது.

bdf867654807438bbcb0c854047e39b5_18.jpg

வடகொரியாவின் பியோங்கன் மாகாணத்தில் இருந்தே இந்த ஏவுகணைகள் இன்று அதிகாலை ஏவிப் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இந்த மாத ஆரம்பத்தில் துப்பாக்கி சூடு பயிற்சிகளில் ஒரு பகுதியாக வடகொரியா பல ஏவுகணைகளை ஏவியுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த தென்கொரியாவின் கூட்டுத் தலைமை அதிகாரி, இந்த ஏவுகணைகளானது 50 கிலோ மீற்றர் உயரத்தில் 410 கிலோ மீற்றர் தூரம் வரை பயணம் செய்துள்ளது.

கொரோனா தொற்று வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இவ்வாறான நடவடிக்கைகளானது மிகவும் பொருத்தமாற்றது என்று அறிவித்துள்ளார்.

இதேவளை ஜப்பானின் கடலோர காவல்படை ஒரு ஏவுகணை அதன் கடற் பிராந்தியத்தில் வீழ்ந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

இந் நிலையில் அமெரிக்காவும் சீனாவும் பியோங்யாங்கிற்கு அதன் அணு மற்றும் ஏவுகணை சோதனைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/78339

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.