Jump to content

கொறோனாவே என்னிடம் நெருங்காதே...


Recommended Posts

கொறோனாவே என்னிடம் நெருங்காதே! நீ நினைக்கும் உணவு நான் இல்லை...
கொறோனாவே என்னிடம் மயங்காதே! நீ தேடும் partner என்னிலில்லை.... 

Winterல் சில நாள் flu வரலாம்! நீ seasonஏ பார்க்காமல் வந்தாயே! (2)
குடிநீரும், ரசமும் வாங்கி வைத்தேன் - அது Peace of mindக்குத் தான் என யாரறிவார்?!

கொறோனாவே என்னிடம் நெருங்காதே.....

Normal flu வரும் காலத்திலே, வேலைக்கு லீவு போட்டு மெடிக்கல் கொடுப்பேன்... (2)
இப்ப Work-from-home செய்கின்றேன் - இனி மெடிக்கலை எந்த மனேஜர் கேட்பார்?!

கொறோனாவே என்னிடம் நெருங்காதே...

"தனித்திரு" என்று அந்நாளில், ஞானியர் இறைவனை அடைய வழி கூறினரே! (2)
உன் பயத்தால் இன்று தனித்துள்ளேன் - எனினும் நீ பீடித்தால் நானும் இறைவனைக் காண்பேனோ?!

கொறோனாவே என்னிடம் நெருங்காதே...

('நிலவே என்னிடம் நெருங்காதே' பாடலின் மெட்டில் படிக்கவும். நகைச்சுவைக்காக மட்டுமே!) 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசத்துக்கு கொண்டவள் வரலாம் கொரோனா வருமோ தெரியாது.எதற்கும் ஜாக்கிரதை......!  👍

Link to comment
Share on other sites

16 hours ago, ஜெகதா துரை said:

தனித்திருத்தல்,  நிறையவே சிந்திக்க தூண்டுகிறதோ?

ஹிஹி... பொதுவாகவே தனித்திருத்தல் சிந்தனையைத் தூண்டும் தான். ஆனால் இது விளையாட்டாக எழுதியது. மருந்தே இல்லாத வியாதி ஒன்று இன்று நம் எல்லோரையும் அச்சுறுத்துகிறது. தனித்திருத்தல் தான் மருந்து என்றால், தனித்திருத்தலால் வரும் வியாதிகளுக்கு என்ன மருந்து? எதையும் விளையாட்டாக எடுத்துச் சிரித்து மகிழுதலே மருந்து! அதன் விளைவு தான் இது!

கருத்துக்கு நன்றி ஜெகதா. :)

Link to comment
Share on other sites

16 hours ago, suvy said:

மல்லிகை வாசத்துக்கு கொண்டவள் வரலாம் கொரோனா வருமோ தெரியாது.எதற்கும் ஜாக்கிரதை......!  👍

அது சரி தான் சுவி அண்ணா!

கொண்டவளும், கொரோனவும் வேறென்பர் அறிவிலார் 
கொண்டவளே கொரோனா ஆவது யாரும் அறிகிலார் 
கொண்டவளே கொரோனா ஆவது யாரும் அறிந்தபின் 
கொண்டவளே கொரோனாவாய் அமுக்கியபடி இருப்பாரே! 😄

கருத்துக்கு நன்றி சுவி அண்ணா! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை மல்லிகைவாசம்.இனி பாட்டென்ன வரப் போகும் ரிசேட்களில் எப்படியான வைரசுகள் ரொய்லெற் பேப்பர் என்று அடித்து கலக்குவார்கள்.
 சீனாவில் ஏற்கனவே அடித்து ரெடியாக இருக்கோ தெரியாது.
எல்லாவற்றையும் பார்க்க எல்லோரும் உயிர் வாழனுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, மல்லிகை வாசம் said:

Normal flu வரும் காலத்திலே, வேலைக்கு லீவு போட்டு மெடிக்கல் கொடுப்பேன்... (2)
இப்ப Work-from-home செய்கின்றேன் - இனி மெடிக்கலை எந்த மனேஜர் கேட்பார்?!

சும்மா லீவு கொடுத்தாலே.... மனேஜர்  விடுத்து, விடுத்து... என்ன வருத்தம் என்று கேட்பார்.
போதாக் குறைக்கு... வீட்டிற்கும்  "ரெலிபோன்" எடுத்து,  எப்படி நிலைமை என்று கேட்பார்.
இந்தக் கொரோனா.... இவன் வீட்டிலை  இருக்குறது தான் 
நல்லம் என  அவரை நினைக்க வைத்து விட்டது. :grin:

கவிதைக்கு நன்றி மல்லிகை வாசம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மல்லிகை வாசம் said:

கொண்டவளும், கொரோனவும் வேறென்பர் அறிவிலார் 
கொண்டவளே கொரோனா ஆவது யாரும் அறிகிலார் 
கொண்டவளே கொரோனா ஆவது யாரும் அறிந்தபின் 
கொண்டவளே கொரோனாவாய் அமுக்கியபடி இருப்பாரே! 😄

 

கொண்டவள் இருப்பதனால் கொரோனாவும் எமை அண்டாது
கொண்டவன் கொரோனாவாகி உயிரை எடுப்பினும்
கொண்டவள் அஞ்சாது கொரோனாவை எதிர்த்திடுவாள்
குட்டுக்கள் பல வைத்தது கொரோனாவை அழித்திடுவாள்😀 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொண்டவள் இருப்பதனால் கொரோனாவும் எமை அண்டாது
கொண்டவன் கொரோனாவாகி உயிரை எடுப்பினும்
கொண்டவள் அஞ்சாது கொரோனாவை எதிர்த்திடுவாள்
குட்டுக்கள் பல வைத்தது கொரோனாவை அழித்திடுவாள்😀😎

மல்லிகைவாசம் சில நாட்கள் வராமல் இருந்ததால் யாழில் ஒரு சூறாவளி சுழன்று அடிப்பதை தெரியாமல் இருந்திட்டார்.......!  😂

Link to comment
Share on other sites

5 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கொண்டவள் இருப்பதனால் கொரோனாவும் எமை அண்டாது
கொண்டவன் கொரோனாவாகி உயிரை எடுப்பினும்
கொண்டவள் அஞ்சாது கொரோனாவை எதிர்த்திடுவாள்
குட்டுக்கள் பல வைத்தது கொரோனாவை அழித்திடுவாள்😀😎

ஒரு உதாரணத்துக்குத் தான் கொண்டவள் என்று சுவி அண்ணை நூலாகத் தந்ததை வைச்சு சிறு துணியை நெய்தன். அதுக்கு இப்படி சக்தி ஆட்டமா! அன்பே சிவம் பாடலை மாற்றி எழுதினதுக்கு சக்தி என்னைத் தண்டிச்சிட்டா! நான் எழுதினதை கொண்டவன் என்றும் மாதர் குலம் மாத்தி வாசிக்க உரிமை உண்டு. 😀😀😀

கொறோனா வெகு விரைவில் அழிஞ்சிடும் என்ற நம்பிக்கையை ஆத்தா இன்று எனக்குக் காட்டிட்டா! ஓம் சக்தி 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மல்லிகை வாசம் said:

ஒரு உதாரணத்துக்குத் தான் கொண்டவள் என்று சுவி அண்ணை நூலாகத் தந்ததை வைச்சு சிறு துணியை நெய்தன். அதுக்கு இப்படி சக்தி ஆட்டமா! அன்பே சிவம் பாடலை மாற்றி எழுதினதுக்கு சக்தி என்னைத் தண்டிச்சிட்டா! நான் எழுதினதை கொண்டவன் என்றும் மாதர் குலம் மாத்தி வாசிக்க உரிமை உண்டு. 😀😀😀

கொறோனா வெகு விரைவில் அழிஞ்சிடும் என்ற நம்பிக்கையை ஆத்தா இன்று எனக்குக் காட்டிட்டா! ஓம் சக்தி 😀

சிரிச்சு வயிறு நோவுது

🤣😂

10 minutes ago, suvy said:

மல்லிகைவாசம் சில நாட்கள் வராமல் இருந்ததால் யாழில் ஒரு சூறாவளி சுழன்று அடிப்பதை தெரியாமல் இருந்திட்டார்.......!  😂

நாங்கள் தென்றால் காத்தாக்கும் 😃

Link to comment
Share on other sites

8 minutes ago, suvy said:

மல்லிகைவாசம் சில நாட்கள் வராமல் இருந்ததால் யாழில் ஒரு சூறாவளி சுழன்று அடிப்பதை தெரியாமல் இருந்திட்டார்.......!  😂

ஆஹா அது தெரியாமல் வந்து சிக்கிட்டனோ? 🤔

கொறோனாவுக்குப் பயந்து வீட்டுக்கயே முடங்கி இருந்து இணையத்துக்கு வந்தா அத விடக் கொடிய 'பன்டெமிக்' எல்லோ இங்க பரவியிருக்குப் போல. உஷாராத் தான் இருக்கணும். எச்சரிக்கைத் தகவலுக்கு நன்றி சுவி அண்ணா! 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிரிச்சு வயிறு நோவுது

🤣😂

நாங்கள் தென்றால் காத்தாக்கும் 😃

அதை நாங்கள் சொல்ல வேண்டும்......!   😂

Link to comment
Share on other sites

10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சிரிச்சு வயிறு நோவுது

🤣😂

நாங்கள் தென்றால் காத்தாக்கும் 😃

😀😀😀

அது போக, சுவி அண்ணா, சுமே அக்கா உங்கள் சுய ஆக்கங்களைப் பார்த்தேன். இனித் தான் ஆற அமர இருந்து வாசிக்க வேணும். வாசிச்சிட்டுக் கருத்துப் பதிகிறேன். 😀

இன்னும் வேறு சில கள உறவுகளுடைய ஆக்கங்களையும் தான். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/22/2020 at 9:51 AM, மல்லிகை வாசம் said:

"தனித்திரு" என்று அந்நாளில், ஞானியர் இறைவனை அடைய வழி கூறினரே

இப்ப கூட்டத்தில் நெருக்கமாகச் சேர்ந்தால் இறைவனை விரைவாகச் சென்றடைய கொரோனா உதவும்🤭🤭🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.