Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னணி உறுப்பினர் செந்தூரனை காணவில்லை; மோ.சைக்கிள் மீட்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னணி உறுப்பினர் செந்தூரனை காணவில்லை; மோ.சைக்கிள் மீட்பு!

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரனை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் இன்று (24) இரவு சற்றுமுன் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவத்தையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரதேச சபை உறுப்பினரின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

தொண்டமனாறு, மயிலந்தனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இன்று (24) இரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர். அத்துடன் அது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.

இரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலங்கநாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.

அதன் பின்னர் அவரது மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றை பொலிஸார் மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட்டுக்கு அறிவிக்கப்பட்டது. இதனையறிந்த உறவினர்கள், செந்தூரனின் நண்பர்களுடன் தொண்டமனாறு பகுதியில் தேடி வருகின்றனர். அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியவில்லை என்று உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப்பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.

 

https://newuthayan.com/முன்னணி-உறுப்பினர்-ச/

 

காணாமல் போன முன்னணி உறுப்பினர் சடலமாக மீட்பு!

நேற்று (24) இரவு முதல் காணாமல் போன வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் (37-வயது) இன்று (25) காலை தொண்டமனாறு, மயிலந்தனை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தொண்டமனாறு மயிலந்தனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் செந்தூரனின் மோட்டார் சைக்கிள், இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும தலைக்கவசம் உள்ளிட்டவை நேற்று இரவு 7.20 மணியளவில் காணப்பட்ட நிலையில் பொலிஸார் அவற்றை மீட்டனர்.

இதன் பின்னரே அவர் காணாமல் போனார். இது குறித்து குடும்பத்தினருக்கும் அறிவிக்கப்பட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையிலேயே இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது

https://newuthayan.com/காணாமல்-போன-முன்னணி-உறுப/

 

என்ன நடக்கிறது?. ☹️

  • கருத்துக்கள உறவுகள்

IMG_8731-720x450.jpg

காணாமல் போயிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக கண்டெடுப்பு!

காணாமல் போயிருந்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் (வயது 37) இன்று(சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவரது மோட்டார் சைக்கிள், தேசிய அடையாள அட்டை, அலைபேசி உள்ளிட்ட உடமைகள் தொண்டமனாறு இந்து மயானத்துக்கு அருகாமையில் நேற்றிரவு மீட்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அத்துடன்,  உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அவரைத் தேடும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்

இந்நிலையில், இன்று சனிக்கிழமை காலை தொண்டமனாறு கடற்கரையில் அவர் சடலமாக கண்டுக்கப்பட்டுள்ளார். சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_8730.jpg

a35abca5-17ad-4ece-98bb-0745f4ec95db.jpg

http://athavannews.com/காணாமல்-போயிருந்த-வலிகாம/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செந்துரன் நீரில் மூழ்கியே மரணித்தார்; மரண விசாரணையில் தகவல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை எனவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன், நேற்று (24) மாலை முதல் காணாமற்போன நிலையில் தொண்டமனாறு கடலில் இன்று (25) அதிகாலை அவரது சடலம் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் பருத்தித்துறை நீதிவானின் உத்தரவில் அவரது சடலம் மந்திகை வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் இன்று முற்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது “சடலத்தின் கழுத்து உட்பட உடலில் எந்தவொரு அடிகாயமும் இல்லை. கடல் விலங்குகளால் சடலத்தில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகத்தில் உரசல் காயம் காணப்படுகிறது.

நுரையீரல் பெரியளவில் வீக்கம் அடைந்துள்ளது. அதனால் அவரது இறப்பு நீரில் மூழ்கி இடம்பெற்றுள்ளது” என்று சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://newuthayan.com/செந்துரன்-நீரில்-மூழ்க/

 
 

 

7 hours ago, puthalvan said:

இயக்கம் நிறுத்தப்பட்ட அலைபேசி, முகக்கவசம் மற்றும தலைக்கவசம் உள்ளிட்டவை நேற்று இரவு 7.20 மணியளவில் காணப்பட்ட நிலையில் பொலிஸார் அவற்றை மீட்டனர்.

ஒன்றில் தற்கொலையாக இருக்க வேண்டும் அல்லது படுகொலையாக இருக்க வேண்டும்.  படுகொலையாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

மனுஷனுக்கு வீட்டில ஏதும் பிரச்சினையோ தெரியல்ல.

கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், உரை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான இ.செந்தூரன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செந்தூரன் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கான அரசியல் பயணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தன்னை முழுமையாக அற்பணித்து உழைத்தவர்.

உறுதியான தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரான செந்தூரன் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது தமிழ்ச் சமூகத்திற்கும் எமது கட்சிக்கும் ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பகும்.

செந்தூரனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்காறோம்.

தமிழ்த் தேசத்தின் அற்பணிப்பு மிக்க செயற்பாட்டாளன் செந்தூரனிற்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரமான செய்தி. 

  • கருத்துக்கள உறவுகள்

போட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

3 hours ago, Rajesh said:

மனுஷனுக்கு வீட்டில ஏதும் பிரச்சினையோ தெரியல்ல.

எப்படி உங்களால் இப்படி சிந்திக்க முடிகிறது.

உங்களுக்கு பிடிக்காத ஆளோ?

7 hours ago, ஈழப்பிரியன் said:

போட்டுத் தள்ளியிருக்கிறார்கள்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

நானும் முதலில் அப்படிதான் யோசித்தேன்। இருந்தாலும் தற்போதைய செய்தியின்படி , வைத்திய அறிக்கையின்படி நீரில் மூழ்கி இறந்ததாகவும் , வீட்டில் பிரச்சினை இருந்ததாகவும் அறிய முடிகிறது। எப்படி இருந்தாலும் மூழ்கியா , மூழ்கடிக்கப்படடர என்பது தெரியவில்லை।

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் இப்போது..... பிடிபடாமல் கொலைகளை செய்வதில், 
"மாஃபியா" போன்று... கைதேர்ந்தவர்கள் என்பதை,  கவனத்தில் கொள்ள வேண்டும்.

Edited by தமிழ் சிறி

20 hours ago, ஈழப்பிரியன் said:

எப்படி உங்களால் இப்படி சிந்திக்க முடிகிறது.

உங்களுக்கு பிடிக்காத ஆளோ?

உண்மை வெளிவர வீட்டுக்காரர் வாய் திறக்க வேணும் என்டு தான். வேற வித்தியாசமா நெச்சிடாதேங்கோ.
இப்ப கொலைகாரர் யார் என்டு தெரிஞ்சு போச்சு.

ஒரு பிரதேசசபை உறுப்பினரின், கடந்த சில நாட்களாக ஓடியோடி மக்களுக்கு நிவாரப்பொருட்களை வழங்கி வந்த ஒருவரின், கொலை பற்றிய உண்மைகளை அறிந்த வடமாகாண அரசியல்வாதிகள் வழமைபோல மௌனமாக இருப்பது அவர்கள் முழுச் சுயநலவாதிகள் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்துகிறது.

அவ்வப்போது பத்திரிகைகளில் அறிக்கைகளை விட்டு மகிழ்ப்பவர்கள் குறைந்தது ஒரு கண்டனம், முழுமையான விசாரணைக் கோரிக்கைதனும் வைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, போல் said:

ஒரு பிரதேசசபை உறுப்பினரின், கடந்த சில நாட்களாக ஓடியோடி மக்களுக்கு நிவாரப்பொருட்களை வழங்கி வந்த ஒருவரின், கொலை பற்றிய உண்மைகளை அறிந்த வடமாகாண அரசியல்வாதிகள் வழமைபோல மௌனமாக இருப்பது அவர்கள் முழுச் சுயநலவாதிகள் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்துகிறது.

அவ்வப்போது பத்திரிகைகளில் அறிக்கைகளை விட்டு மகிழ்ப்பவர்கள் குறைந்தது ஒரு கண்டனம், முழுமையான விசாரணைக் கோரிக்கைதனும் வைக்கவில்லை.

அவர்களுக்கு தெரிந்தே நடந்த கொலை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.