Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஆகவே சீமானை, ஈழம் என்ற கண்ணாடியினை போட்டுக் கொண்டு பார்க்காமல், தமிழக அரசியல் என்று மட்டும் பாருங்கள்.

சீமானும் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டு விடயங்களை தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் நாங்கள் ஏன் கதைக்கப்போகின்றோம்?

ஆனால் அது அவரால் முடியாதே! புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஒரு சிலர் இவரின் உசுப்பேத்தல்களுக்கு பின்னால் இழுபட்டு திரிவதை நாம்தான் தினமும் பார்க்கின்றோமே😄

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

சீமானும் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டு விடயங்களை தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் நாங்கள் ஏன் கதைக்கப்போகின்றோம்?

ஆனால் அது அவரால் முடியாதே! புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஒரு சிலர் இவரின் உசுப்பேத்தல்களுக்கு பின்னால் இழுபட்டு திரிவதை நாம்தான் தினமும் பார்க்கின்றோமே😄

கிருப‌ன் அண்ணா
எம் இன‌த்து சாவ‌க்கேடு எது தெரியுமா , எம் இன‌த்துக்கு உண்மையும் நேர்மையுமா எவை போராடின‌மோ அவையை கேவ‌ல‌ப் ப‌டுத்துவ‌து /

உதார‌ன‌த்துக்கு இந்த‌ யாழ் க‌ள‌த்தை எடுத்து கொள்வோம் , 2006 ம‌ற்றும் 2007 இந்த‌ கால‌ப் ப‌குதியில் யாழில் எம் த‌லைவ‌ரையும் எம் போராட்ட‌த்தையும் இழிவு ப‌டித்தின‌வையை ( மோக‌ன் அண்ணா அவ‌ர்க‌ளை யாழில் க‌ருத்து ப‌திய‌ விடாம‌ல் நிர‌ந்த‌ர‌மாய் நீக்கின‌வ‌ர் )

த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் த‌ன்ர‌ பிள்ளைக‌ளை வைத்து கொண்டு மாற்றான் பிள்ளைக‌ளை போர்க‌ள‌த்துக்கு அனுப்புகிறார் என்று எம் த‌லைவ‌ரை வ‌சை பாடாத‌ ஆட்க‌ளா /


உங்க‌ளுக்கு அண்ண‌ன் சீமான் முன் எடுக்கும் அர‌சிய‌ல் பிடிக்க‌ல‌ என்றால் ஓர‌மாய் ஒதுங்கி நிப்ப‌து ந‌ல்ல‌ம் அத‌ விடுத்து ஓதின‌ ம‌ந்திர‌த்தை திருப்ப‌ திருப்ப‌ ஓத‌ வேண்டாம் /

எம் இன‌த்தை அழித்த‌ திராவிட‌த்துக்கு எதிராக‌ ப‌ல‌ இன்ன‌ல்க‌ளுக்கு ம‌த்தியில் அவ‌ர் முன்னொடுக்கும் அர‌சிய‌லை விம‌ர்சிக்க‌ உங்க‌ளுக்கோ என‌க்கோ சிறு த‌குதியும் இல்ல‌ /

உங்க‌ளை பார்த்து கேக்க‌ ப‌ல‌ நூறு கேள்விக‌ள் இருக்கு கிருப‌ன் அண்ணா , பிற‌க்கு நான் ஆர‌ம்பிக்க‌ அது உங்க‌ளுக்கு கோவ‌த்த‌ கூட‌ வ‌ர‌ வைக்க‌லாம் , ஆன‌ ப‌டியால் அப்ப‌டியான‌ கேள்விக‌ளை த‌விர்கிறேன் 😉 /


 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கிருபன் said:

சீமானும் தலைவர் பிரபாகரனையும், ஈழத் தமிழர்களையும் தனது கட்சி அரசியலுக்குப் பாவிக்காமல் தமிழ்நாட்டு விடயங்களை தனது பிரச்சாரத்திற்கு பாவித்தால் நாங்கள் ஏன் கதைக்கப்போகின்றோம்?

ஆனால் அது அவரால் முடியாதே! புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் ஒரு சிலர் இவரின் உசுப்பேத்தல்களுக்கு பின்னால் இழுபட்டு திரிவதை நாம்தான் தினமும் பார்க்கின்றோமே😄

இதே கேள்வி எனக்கும் எழுந்தது. 

நமது வீடுகளில் காந்தியும், நேருவும் படங்களாக இருந்தார்களே ஏன்?

முக்கியமான ஒரு விடயத்தினை மறந்து விடாதீர்கள்....

இலங்கையிலும் இருந்தது தான் சாதிய வேறுபாடு. பொது எதிரியாக சிங்களவன் வந்தபோது, பிரபாகரன் ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

திராவிட, ஆரிய கைங்கரியத்தில் சாதி வேற்றுமை தமிழகத்தில் கொடி கட்டி பறக்கிறது.

எதிரி, திராவிட போர்வையினை போட்டுக் கொண்டு, ஆள வசதியாக, சாதிய வன்மத்தினை கிளப்பி விட்டிருக்கிறான்.

இந்த வன்மத்தின் உக்கிரமாக, தமிழ் தலைவர்கள் பெயர்களில் ஓடிய பேரூந்துகள் கூட, சாதிய ரீதியில் அடையாளமாகப் பட்டு எரிக்கப்பட்டன. இறுதியில் பெயரே இல்லாமல் ஓடுகின்றன.

விளைவாக, தெலுங்கு அண்ணாவும்,  கருணாநிதியும், கன்னட ஜெயலலிதாவும், மலையாள MGR ம் ஆண்டார்கள்.

ரஜனிக்கும், கமலுக்கும், விஷாலுக்கும், ராகவா லாரன்ஸ்க்கும் கூட ஆசை வந்தது.

சரி சாதியம் காரணமாக வெளியில் இருந்து வரும் தலைமை தான், அதுவும் தமிழர்கள் இல்லாத தலைமை தான் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது என தெளிவாக புரிந்தது.

இந்நிலையில், ஈழத்தின் பிரபாகரன், வெளியில் இருந்து கொண்டுவரப்பட்டு, சாதிய வட்டத்துக்குள் குறுக்கப்படாமல் தமிழர் என்கிற ரீதியில் தலைவரானார். சீமானும், தான் சாதிய வட்டத்துக்குள் குறுக்கப்படலாம் என்பதால், தான் தலைவன் அல்ல. தலைவனின் தம்பி என்கிறார்.  இதுவரை 17 லட்ச்சம் தமிழர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அது தேறாது என்று இருந்து, இப்போது தீவிரமாவதால் பிரபாகரன், திமுகவால் கடுமையாக இப்போது, எதிர்க்கப்படும் நிலை. ரஜனி பின்வாங்கி விட்டார்.

புரியும் என்று நினைக்கிறேன்.

புரியாவிடில், சாதிய பார்வையாக இருக்கலாமோ என்று கருதவும் இடம் உண்டு. (மன்னிக்க வேண்டும், எனக்கு புரிய வைத்தவர், உபயோகித்த வார்த்தைகள்).

ஈழத்தமிழர்கள் 1520 ல் போர்த்துகேயர்களிடம் வீழ்ந்தது போலவே 1529ல் தெலுங்கு நாயகர்களிடம் வீழ்ந்தவர்கள் தமிழகத்து தமிழர்கள்.

இரு பக்கமும் அடிமைகள். அடிமைகளில், ஒரு அடிமை, இன்னோரு அடிமைக்கு ஆதரவு தரலாமே அன்றி, எதிர்க்க கூடாது.

அநேகமாக, மேற்குலகில் வாழ்வதால், எமது சிந்தனைகள் வேறு விதமாக உள்ளனவோ தெரியவில்லை. ஆனால் தாயகத்தில், ஒருவருமே நீட்டி, முழக்குவதில்லை. யாழில் உள்ள தாயக உறவுகள் கூட. 

இன்றைய நிலையில், பெரும் பணம் வாங்கிக் கொண்டு சீமான் ஒரு திராவிட கட்சியுடன் அல்லது ரஜனியுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு MLA, MP ஆக முடியும்.

அது செய்யாதவரை, வாக்குக்கு காசு கொடுக்கும் அரசியல் செய்யாதவரை, எனக்கு சந்தேகம் வர காரணம் இல்லை. உங்கே இரண்டொருவர் செய்யும் அலம்பரைகளை வைத்து, ஈழத்தமிழர் பெரும் பொருளாதாரவு கொடுப்பதாக கருதமுடியாது. 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

உங்க‌ளை பார்த்து கேக்க‌ ப‌ல‌ நூறு கேள்விக‌ள் இருக்கு கிருப‌ன் அண்ணா , பிற‌க்கு நான் ஆர‌ம்பிக்க‌ அது உங்க‌ளுக்கு கோவ‌த்த‌ கூட‌ வ‌ர‌ வைக்க‌லாம் , ஆன‌ ப‌டியால் அப்ப‌டியான‌ கேள்விக‌ளை த‌விர்கிறேன் 😉

பையன் 2009 மே மாதத்திற்குப் பின்னர் கோபம் எல்லாம் வருவதில்லை. எனவே தாராளமாக எதையும் கேட்கலாம்😎 தெரிந்தால் சொல்வதில் தயக்கமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

பையன் 2009 மே மாதத்திற்குப் பின்னர் கோபம் எல்லாம் வருவதில்லை. எனவே தாராளமாக எதையும் கேட்கலாம்😎 தெரிந்தால் சொல்வதில் தயக்கமில்லை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

விளைவாக, தெலுங்கு அண்ணாவும்,  கருணாநிதியும், கன்னட ஜெயலலிதாவும், மலையாள MGR ம் ஆண்டார்கள்.

ரஜனிக்கும், கமலுக்கும், விஷாலுக்கும், ராகவா லாரன்ஸ்க்கும் கூட ஆசை வந்தது.

சரி சாதியம் காரணமாக வெளியில் இருந்து வரும் தலைமை தான், அதுவும் தமிழர்கள் இல்லாத தலைமை தான் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது என தெளிவாக புரிந்தது.

 

நாதம்ஸ்,

தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை. தமிழ்நாட்டை தமிழ்நாட்டில் வாழும் யாரும் ஆளலாம். பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்பவும்,  கல்வியறிவை முன்னேற்றவும் அரசியல் ரீதியில் மத்திய அரசுக்குப் பணியாமல் பலமாக இருக்கவும் தேவையான கொள்கைகளே போதும்.

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சாதிய ரீதியாக வேற்றுமைகள் தொடர்ந்தும் காட்டப்படுவது உண்மைதான். இவற்றைக் களைய தூரநோக்குள்ள தலைவர்கள் தேவை. பிளவுகளை ஏற்படுத்துபவர்களால் சாதியத்தின்  வீரியத்தைக் குறைக்கமுடியாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

நாதம்ஸ்,

தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை. தமிழ்நாட்டை தமிழ்நாட்டில் வாழும் யாரும் ஆளலாம். பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்பவும்,  கல்வியறிவை முன்னேற்றவும் அரசியல் ரீதியில் மத்திய அரசுக்குப் பணியாமல் பலமாக இருக்கவும் தேவையான கொள்கைகளே போதும்.

இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் சாதிய ரீதியாக வேற்றுமைகள் தொடர்ந்தும் காட்டப்படுவது உண்மைதான். இவற்றைக் களைய தூரநோக்குள்ள தலைவர்கள் தேவை. பிளவுகளை ஏற்படுத்துபவர்களால் சாதியத்தின்  வீரியத்தைக் குறைக்கமுடியாது.

 

ஈழத்தினை சிங்களவன் எப்படி ஆளலாம் என்று கேட்டு சண்டை பிடித்து பெரும் உயிர்பலி கொடுத்து, அகதியாக வந்து, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த Excel போனேன் என்று சொல்லிக் கொண்டே, தமிழ் நாட்டினை, தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை என்பது எந்த வகை நியாயம்?

இனவெறி வேறு, மண், மலை, ஆறு இந்த தமிழரல்லாதவர்களால் கொள்ளை அடிக்கப்பட்டு நாசமாகின்றதே என்கிற நாட்டுப் பற்று வேறு. இன்று கூட ரவிகரன், முள்ளிவாய்க்காலின் சகல பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு நடக்கின்றது என்று புலம்புகிறார்.

றிசாட், தனது ஆதரவளருக்காக, முல்லை காடுகளை அழித்த போது, மக்கள் போராடியது, இனவாதமா?

தமிழகத்தில், இந்த கண்ணை வாங்கி (வளங்களை வித்து) சித்திரம் கையில் (வாக்குக்கு அந்த பணத்தினை தரும் ) தரும் திராவிட கொளகைகளை நிறுத்த வேண்டும் யாராவது. 

சாதியத்தின் வீறு குறையாமலா, 17 லட்ச்சத்துக்கு மேலே இணைந்திருக்கிறார்கள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பையன்26 said:

 

Quote

 

இங்கு சிலர் பெரியாரின் தமிழர் அழிப்பு.. மாயை வாதமான திராவிடத்தை கட்டிக்காக்க.. தமிழர்கள் யார் என்று சிங்களவர்கள் கேட்குமாப் போல கேள்வி கேட்கிறார்கள். இன்னும் சிலர் தங்களின் கண்டுபிடிப்பினூடு.. தமிழ் தேசிய அடையாளப்படுத்தலை.. தூய தமிழின வாதம் என்கின்றனர். பின்னர் தங்கள் கண்டுபிடிப்பையே பிற்போக்கும் என்றும் வகுக்கின்றனர். என்னே வேடிக்கை மனிதர்கள்.

அதுபோக.. ஈழத்தில் இருப்பது தமிழ் தேசியமாம்.. தமிழகத்தில் இருப்பது திராவிடமாம்.. இப்படி இன்னொரு குண்டையும் சுயமுரண்பாட்டோடு.. தூக்கிப் போடுகின்றனர். ஆனால் ஈழத்தமிழன் தமிழக தொப்புள் கொடி உறவும் என்றும் சொல்கின்றனர்.

இவர்களின் பெரியார் காப்பு..சுயமுரண்பாட்டு வாதங்களையும் சப்பைக் கட்டுக்களையும் வைத்துப் பார்க்கின்ற போது கோத்தாவும்.. சிங்களத் தேரர்களும் பறுவாயில்லை என்று தோன்றுகிறது.

தமிழர்கள் யார்...???! territorial எல்லை வகுத்து.. தனித்துவ மொழி பேசி.. தனித்து சமூக கலை.. பண்பாட்டியல் விழுமியம் காத்து.. ஆட்சி அதிகாரம் தக்க வைத்து சிறப்புற சமூக வாழ்வியல் வகுத்து.. தெற்காசிய பிராந்தியத்தில் வாழ்ந்த வாழ்ந்து வருகின்ற ஒரு மனிதர்கள் கூட்டமே தமிழர்கள். அவர்களின் மொழி தமிழ்...1

இவர்களை திராவிடர்கள் என்று வகுத்துக் கொள்ள எந்த தேவையும் இல்லை. தமிழர்கள் தமிழர்களாகவே தான் இனங்காட்டப்பட வேண்டும். தமிழ் மொழி மருவி வந்த பிற மொழி பேசுபவர்களும் கூட தங்களை தமிழர்களாகத்தான் அடையாளப்படுத்த வேண்டுமே தவிர.. திராவிடர்கள் என்ற பொது கொள்கை அவசியமில்லை. அப்படி இனங்காட்ட விரும்பாதவர்கள் தங்களின் தற்கால மொழி.. நிலம் பற்றி தங்கள் சொந்த அடையாளம் பற்றி வாழட்டும். அதற்கு தமிழர்கள் எப்போதும் தடையாக இருக்கமாட்டார்கள்.

கன்னட மொழியாகட்டும்.. மலையாளம் ஆகட்டும்.. தெலுங்காகட்டும்.. தமிழ் மொழி மருவி வந்த மொழிகள் தான்..! இன்று அந்த மொழிகளுக்கு எல்லாம் ஒரு தனித்துவமான territorial எல்லை உண்டு. அதனால் தான் அவை மாநில வாரியான மொழிகளாக்கப்பட்டுள்ளன. அந்த நிலை தமிழுக்கும் உண்டு. ஆனால் தமிழர்கள் என்போர் தமிழர்களால் ஆளப்படும் நிலை இன்றி.. பிறமொழி பேசுவோரால் ஆளப்படும் நிலை உள்ளது. இந்த நிலை பிறமொழி மாநிலங்களில் இல்லை. இது பண்டைய தமிழ் ஆட்சி மரபில் இருந்தும் மாறுபட்டுள்ளது. நவீன இனத்துவ கருத்தியலில் இருந்தும் தமிழர்களை பிறழ வைத்து பலவீனப்படுத்தி நிற்கிறது.

தமிழர்கள் மத்தியில் உள்ளது போன்று.. பிறமொழி பேசுவோர் மத்தியிலும் சாதி.. வகுப்பு வாதங்கள்.. பிரிவினைகள்.. பிளவுகள் உள்ளன. அவர்களை எல்லாம் ஒற்றுமைப்படுத்த.. திராவிடம் அல்ல காரணியாக நிற்கிறது. ஆனால் தமிழர்கள் மத்தியில் மட்டும் அவர்களின் மொழி.. நில.. ஆட்சியுரிமை தொன்மை மறைத்து திராவிடம் திணிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இது தமிழர்கள் இலகுவாக பிறமொழி பேசுபோரால் ஆளப்படவும் அடிமைப்படுத்தப்படவும் வாய்ப்பளிப்பதோடு.. தமிழர்கள் தங்கள் நிலத்தில் தங்கள் நிலை தளர்வதை உணராது வாழவும் செய்கிறது.

இவற்றைக் கடந்து.. இந்த நவீன இனத்துவ உலகில்.. தமிழர்களின் இனத்துவம் நிறுவி மீண்டும்.. territorial எல்லைகளோடு தமிழர்களும் ஆட்சி உரிமை கொண்ட வாழ்வுரிமை கொண்ட மனித கூட்டமாக பூமிப்பந்தில் வாழ வேண்டின்.. திராவிடம் என்ற மாயைப் பதமாடல் முதலில் வெட்டி வீழ்த்தப்பட வேண்டும். தமிழின தேசிய உணர்வான.. தமிழ் தேசிய அடையாளமும்.. உணர்வும் மேலெழவும்.. மக்கள் அதன்பால் ஒற்றுமைப்பட்டு.. சாதி.. மத.. சமூக வேறுபாடுகளுக்கு அப்பால் மொழி.. நிலம்.. கலை.. பண்பாடு.. விழுமியம் சார்ந்து தமிழர்களாக வாழவும் தூண்டப்பட வேண்டும்.

தமிழகத்தில் எழும் இந்த மாற்றமே.. ஈழத்திலும்.. தமிழர்களின் இருப்பை காக்கும். மற்றும்படி.. திராவிடம்.. பேசுக் கொண்டிருப்பதால்.. தமிழர்களின் அழிவைப் பற்றி கவலைப்படவோ அக்கறை செய்யவோ மாட்டாத கன்னடர்களையும்.. மலையாளிகளையும்.. தெலுங்கர்களையும் அயலில் மாயைப் பதமான திராவிடத்தால் கட்டி.. தமிழர்கள் எதனையுமே இந்த உலகில் சாதிக்கப் போவதில்லை.

திராவிடம் என்பது ஒரு செத்துப் போன மாயைக் கருத்தியல். இதனை அறிந்திருக்கும் பலர்.. பெரியார் போன்ற சிலரின் காலத்துக்கு ஒவ்வாத பழைய கால வாதங்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்கின்றனர். ஆனால் மக்களோ.. இவர்களின் வாதங்களில் அர்த்தம் உணர்பவர்களாக இன்று இல்லை..!

இதனை தெளிவாக உணர்ந்து கொண்டு.. மொழி.. நில எல்லை.. கலை.. பண்பாடு.. விழுமியம் சார்ந்து தமிழர்கள் யார் என்பதையும் அவர்களின் தேசியம் என்ன என்பதையும் மக்கள் உணரச் செய்து.. அதன் கீழ் அந்த மக்களை ஒற்றுமைப்படுத்தி.. அவர்களின் ஒத்துழைப்போடு.. தமிழர்களே தமிழர்களை ஆளக் கூடிய நிலை வருதல் அவசியம்.

"தூய தமிழினம்".. என்ற சொல்லாடல் எக்காலத்துக்கும் எவருக்கும் பொருந்தப் போறதில்லை. இந்த உலகில் எவரும் தூய இனத்தினர் கிடையாது. எல்லோருக்குள்ளும் ஒரு கலப்பு நிலை உண்டு. அதற்காக.. மற்றைய இனத்தவர்கள் தங்களின் territorial எல்லைகளை விட்டுக்கொடுத்து.. மொழி.. பண்பாடு.. விழுமியம் தொலைத்து.. பொதுக்கொள்கை ஒன்றின் கீழ்.. தங்களை மற்றவர்களாக இனங்காட்டி வாழத் தயார் இல்லை.

சீமான் போன்றவர்கள் முன் வைப்பது.. தூய தமிழின வாதம் அல்ல. தமிழர்கள் தங்கள் நிலத்தில் தங்கள் தேசியம் போற்றி.. தங்களை தாங்களே ஆளுதல்... இதனையே அவர் முன்னிறுத்துகிறார். தமிழர்களின் நிலத்தில் மற்றவர்கள் வாழ வேண்டாம் என்பதல்ல.. சீமானின் வாதம். மற்றவர்கள் அவர்களின் உரிமைகளோடு வாழலாம். அதேவேளை தமிழர்களின் நிலத்தில் தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்ட.. தமிழர்களின் ஆட்சி உரிமையே இருக்க வேண்டும் என்பது சீமானின் வேண்டுகோள். இது தூய தமிழின வாதம் என்று சில திராவிட விசமிகளால் இனங்காட்டப்படுகின்றது. இது தவறாகும்.

யூதர்கள்.. தூய யூத இனம் அல்ல. அரேபியர்கள் தங்களை தூய அரேபியர்கள் என்று சொல்வதில்லை. ஆனால் எல்லோருக்கும்.. ஒரு தேசிய அடையாளம்.. நிலம்.. பண்பாடு.. விழுமியம்.. ஆட்சியுரிமம் உண்டு. ஆனால் தமிழர்களிடம் மட்டும் அது.. ஆரியத்தாலும்.. திராவிடத்தாலும் கூட்டுப்பறிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதனையே சீமான் நிராகரிக்கிறார்.

தமிழர்களை தமிழர்களிடமே கையளியுங்கள் என்று தான் அவர் கோருகிறார். இதனை தான் ஈழத்திலும் தமிழ் மக்கள் சிங்களர்களிடம் கோருகின்றனர். இங்கு தமிழர்கள்.. அது தமிழகம் ஆகட்டும்.. ஈழமாகட்டும்.. ஒரே இன உணர்வு பற்றியே உள்ளனர். இதனை சில திராவிட... பெரியார் விசமிகள்... தவறாக இனங்காட்டி தங்கள் வெட்டிப் புகழ் வளர்க்க முயல்கின்றனர்.

மக்கள் இவற்றை உணர்ந்து மற்றைய மொழி பேசுவோர் மத்தியிலும்.. புதிய தலைமுறை தமிழர்கள் மத்தியிலும்.. செத்துப் போன திராவிடத்தை கைவிட்டு.. தமிழ் தேசிய உணர்வு வளர்த்து.. தமிழர்கள்.. தங்களை தாங்களே தங்கள் நிலத்தில் ஆளும் நிலை பெற உதவிக் கொண்டு.. உலகில் பிற இனங்களோடு.. தம் தனித்துவமும் ஆட்சியுரிமையும்.. நில உரிமையும்.. காத்து ஒற்றுமையாக வாழ வேண்டும். இதுதான் தமிழர்களின் எதிர்பார்ப்பும் ஆகும். திராவிடம் காப்பதால்.. இதில் எதுவுமே தமிழர்களுக்கு சாத்தியமாகாது..! :icon_idea:

 

8 ஆண்டுகளுக்கு முன் இதே யாழ் களத்தில் பதிந்தது...! இன்று பேசு பொருளாகி விட்டது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

ஈழத்தினை சிங்களவன் எப்படி ஆளலாம் என்று கேட்டு சண்டை பிடித்து பெரும் உயிர்பலி கொடுத்து, அகதியாக வந்து, தமிழ் நாட்டினை, தமிழன் மட்டுமே ஆளவேண்டும் என்பது இனவெறிப் பார்வை என்பது எந்த வகை நியாயம்?

தமிழ்நாட்டை தனது வாழ்விடமாகக் கொண்டு தமிழில் சரளமாகப் பேசக்கூடியவர் ஆள்வதற்கும், தமிழ் ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிங்களம் பேசும் சிங்களவர் ஆள்வதற்கும் உள்ள வித்தியாசம் புரியாமலே கேட்கின்றீர்கள்?🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, கிருபன் said:

தமிழ்நாட்டை தனது வாழ்விடமாகக் கொண்டு தமிழில் சரளமாகப் பேசக்கூடியவர் ஆள்வதற்கும், தமிழ் ஈழத்தை ஆக்கிரமித்துள்ள சிங்களம் பேசும் சிங்களவர் ஆள்வதற்கும் உள்ள வித்தியாசம் புரியாமலே கேட்கின்றீர்கள்?🤔

கிருபன், உங்களிடம் இருந்து இப்படி (மொக்கை) கேள்வியா?

1529ல் ஆக்கிரமித்தவர்கள் தமிழ் பேசுகிறார்கள். ஆள்கின்றனர்.

அப்படியானால் சிங்களவர்கள், இப்போது தமிழ் நன்கு படிக்கிறார்கள். பிறகென்ன, அவர்கள் ஆடசியில் சேர்ந்து வாழலாம் தானே. அவர்கள் தமிழ் படிப்பது குறித்து வேறு திரி ஒன்றும் உள்ளது.

பண்டாரநாயக்க (உண்மையில் தெலுங்கு நாயக்கர்) ஒரு தமிழராக அறியப்பட்டு சிங்களவராக நடித்தவர்...அரசியலுக்காக கண்டிய சிங்கள ரத்வத்தை குடும்ப பெண்ணை கட்டினார். அவர்தானே சிங்கள மொழி மட்டும் சட்டம் கொண்டு வந்தார். 

பிறகேன் சண்டை பிடித்தனர் முட்டாள் தமிழ் மக்கள்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

ம‌றுப‌டியும் ஆர‌ம்ப‌த்தில் இருந்தா கிருப‌ன் அண்ணா /
2005ம் ஆண்டு எம்ம‌வ‌ர்க‌ள் வன்னியில் ப‌ல‌மா இருந்த‌ போதும் கூட‌ சொன்னார்க‌ள் இந்தியா த‌லையிட்டு எம‌க்கு தீர்வு பெற்று த‌ற‌னும் என்று /
நீங்க‌ள் சொல்லும் திராவிட‌ க‌ட்சிக‌ள் அப்ப‌ என்ன‌ செய்தார்க‌ள் , 
2009ம் ஆண்டு எம் இன‌ம் அழிய‌ இந்த‌ ப‌த‌வியை வைத்து என்னால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று க‌ருணாநிதி சொன்ன‌த‌ ம‌ற‌ந்து போனிங்க‌லா ,

இப்ப‌ ஸ்ராலின் தானே எதிர் க‌ட்சி த‌லைவ‌ர் , ஏதாவ‌து ஈழ‌ம் ப‌ற்றி வாய் திற‌ந்தாரா , 

திமுக்கா
ஆதிமுக்கா இவ‌ர்க‌ளால் தான் முடியும் என்றால் இந்த‌ 11 ஆண்டில் என்ன‌த்த‌ இவ‌ர்க‌ள் செய்தார்க‌ள் , ப‌தில‌ சொல்லுங்கோ கிருப‌ன் அண்ணா 

கிருப‌ன் அண்ணா  , அப்போது உங்க‌ளின் ப‌திலுக்கு என் ப‌தில‌ எழுதி இருந்தேன் , நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ க‌ட‌த்தி விட்டதாக‌வே உண‌ருகிறேன் 😉/

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் நான் இணைத்த‌ காணொளியை பாருங்கோ , ப‌ல‌ உண்மைக‌ள் வெளியில் வ‌ரும் /

என‌க்கு திராவிட‌மும் ஒன்னு தான் சிங்க‌ள‌வ‌னும் ஒன்னு தான்  😉/

இந்த‌ துரோக‌ கும்ப‌ல் எம‌க்காக‌ உண்மையும் நேர்மையுமா குர‌ல் கொடுப்பார்க‌ள் என்றால் சுத்த‌மாய் இல்லை /

புத்தி உள்ள‌வ‌ன் என்ன‌ நினைப்பான் இந்த‌ திருட்டு கும்ப‌ல‌ இனியும் ந‌ம்ப‌க் கூடாது என்று /

திருமாள‌வ‌ன் திமுக்காவுட‌னும் காங்கிர‌ஸ்சுட‌னும் கூட்ட‌னி வைத்து விட்டு ல‌ண்ட‌னுக்கு வ‌ந்த‌ போது அவ‌ர் ப‌ட்ட‌ அவ‌மான‌த்தை பார்த்திங்க‌ள் தானே , 

வைக்கோவுக்கும் அதே நில‌மை தான் வ‌ரும்  , வைக்கோ கொஞ்ச‌ம் விப‌ர‌ம் ஆன‌வ‌ர் , இனி புல‌ம்பெய‌ர் நாடுக‌ளுக்கு வ‌ந்து ஈழ‌ த‌மிழ‌ர‌ ச‌ந்திக்க‌ மாட்டார் / வ‌ந்தா செருப்பு மாலை வைக்கோவுக்கு போட‌ப் ப‌டும் 😠

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன நந்தன் 
உங்களை கிங் எண்டெல்லாவோ நினைச்சன் ,அடுத்தவனை கிண்டலடிக்க போய் நீங்களும் பிழையாய் அல்லவோ எழுதுகிறீர்கள் , .203 துப்பாக்கியோ ....? ஒரு வேளை போராளிகள் இப்படிச்சொல்லித்தான் உங்களுக்கு பயிற்சி தந்தவினமோ, துப்பாக்கியின் பெயர் அதுவல்ல கீழே பொருத்தியிருக்கும் Grenade launcher தான் M 203 (Single shot 40mm) .
துப்பாக்கியின் பெயர் M16A1, கண்ணை கட்டிக்கொண்டு துப்பாக்கியை கழட்டி பூட்டுமளவுக்கு பயிற்சியளித்த புலிகள் துப்பாக்கியின் பெயரை கூட ஒழுங்காக சொல்லித்தரவில்லையோ 

தாரு, இவர், நந்தன் இயக்கத்திலே இருந்தவரே?

அப்ப... பின்ன நானும்... இயக்கத்திலே நிண்டனான் 😉:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, tulpen said:

இதற்க்குள் சம் சும் எப்படி வந்தார்கள் . மருந்து மாத்திரை எடுப்பது போல் நீங்கள் எபோதும் சம் சும்மை சாப்பாட்டு முன்பு ஒருமுறை சாப்பாட்டிற்கு பின்பு ஒரு முறை திட்டுவது உங்கள் வாடிக்கை.  இங்கு சம் சும்மை திட்டுவபர்களிடம் நான் கேட்பது 2009 க்கு முன்பு அரசியல் செய்து தப்பு தாளம் ஆடியவர்களிடம் இப்படி உரிமையுடன்  கேட்டிருந்தால் சம் சும் போன்றவரகள் எம்மை ஏமாற்றும் நிலை வந்திருக்காது.

ஈழத்தமிழர் பிரச்சனைகளை கதைக்கும் போது சம்சும் பேர்வளிகள் வராமல் நயன்தாரா நமிதாவே வருவினம்?

  • கருத்துக்கள உறவுகள்

99439971_147013236904378_7288975932751085568_n.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeEChimZ9HcY1Oli9eHax_xflog16dUDXLeWiDXp1QNctyPKHvihkaLmnpoFKAvEsiOMrNhGrheMK8DrAo9w53mj&_nc_ohc=dwjC3t62SmkAX8NWUWA&_nc_ht=scontent-frx5-1.xx&oh=2f9bef3dee7adbeaf573bbc2a06aa129&oe=5EF6C4F4

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2020 at 10:19, அக்னியஷ்த்ரா said:

என்ன நந்தன் 
உங்களை கிங் எண்டெல்லாவோ நினைச்சன் ,அடுத்தவனை கிண்டலடிக்க போய் நீங்களும் பிழையாய் அல்லவோ எழுதுகிறீர்கள் , .203 துப்பாக்கியோ ....? ஒரு வேளை போராளிகள் இப்படிச்சொல்லித்தான் உங்களுக்கு பயிற்சி தந்தவினமோ, துப்பாக்கியின் பெயர் அதுவல்ல கீழே பொருத்தியிருக்கும் Grenade launcher தான் M 203 (Single shot 40mm) .
துப்பாக்கியின் பெயர் M16A1, கண்ணை கட்டிக்கொண்டு துப்பாக்கியை கழட்டி பூட்டுமளவுக்கு பயிற்சியளித்த புலிகள் துப்பாக்கியின் பெயரை கூட ஒழுங்காக சொல்லித்தரவில்லையோ 

என்ன அக்கினி நீங்களும் ஆரம்பகால போராட்ட காலத்தில் துப்பாக்கிகளின் பெயரை சொல்வதில்லை எல்லாம் ஒரு கோட் பெயர்தான் அதாவது உன்மையான பெயரை சொல்வதில்லை.  என நான் நினைக்கிறன் 

ஆனால் துப்பாக்கிகளின் பெயர் அதுவாக இருக்கலாம்  நீங்கள் சொல்வது போல

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன அக்கினி நீங்களும் ஆரம்பகால போராட்ட காலத்தில் துப்பாக்கிகளின் பெயரை சொல்வதில்லை எல்லாம் ஒரு கோட் பெயர்தான் அதாவது உன்மையான பெயரை சொல்வதில்லை.  என நான் நினைக்கிறன் 

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ,ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, அவர்கள் கோட் வேர்ட் பாவிப்பதுண்டு 
தொலைத்தொடர்பு ஒட்டுக்கேட்டலில் தெரியாமலிருக்கவே அதிகமாக பயன்படுத்துவர் 
ஆனால் போராளிகளுக்கு ஆயுதத்தை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளங்கப்படுத்தப்பட்டுவிடும் என்று  , 
உ+ம் :டொங்கான் --இதுவும் போராளிகளால் பயன்படுத்தப்பட்ட கோட் வேர்ட் தான், ஆனால் கருத்துக்களத்தில் இப்படி எழுத முடியாது பாருங்கோ   

  • கருத்துக்கள உறவுகள்
Just now, அக்னியஷ்த்ரா said:

நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் ,ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, அவர்கள் கோட் வேர்ட் பாவிப்பதுண்டு 
தொலைத்தொடர்பு ஒட்டுக்கேட்டலில் தெரியாமலிருக்கவே அதிகமாக பயன்படுத்துவர் 
ஆனால் போராளிகளுக்கு ஆயுதத்தை பற்றி அக்கு வேறு ஆணி வேறாக விளங்கப்படுத்தப்பட்டுவிடும் என்று  , 
உ+ம் :டொங்கான் --இதுவும் போராளிகளால் பயன்படுத்தப்பட்ட கோட் வேர்ட் தான், ஆனால் கருத்துக்களத்தில் இப்படி எழுத முடியாது பாருங்கோ   

ம்  ஆனாலும் ஆயுத பற்றாக்குறை காணப்பட்ட காலத்தில் ஊருக்கு ஒன்றே வழங்கப்பட்டது அது சிலருக்கு தெரியாமல் கூட இருந்திருக்கலாம் .பின்னர் ஒரு குறுப்பில் ஒருவருக்கு பின்னர் ஆளாளுக்கு ஒன்று அதன் பின்னர் அடிச்சு எடுத்தது ஏராளம் அப்பவும் கோட்தான் 

ஒரு நாள் சித்திரம் கீறி கொண்டுவா என்றார்கள் நண்பரிடம் நான் முளிச்சு முளிச்சு திரிஞ்சன் என்ன சித்திரம் என தெரியாமல்😉

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

99439971_147013236904378_7288975932751085568_n.jpg?_nc_cat=105&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeEChimZ9HcY1Oli9eHax_xflog16dUDXLeWiDXp1QNctyPKHvihkaLmnpoFKAvEsiOMrNhGrheMK8DrAo9w53mj&_nc_ohc=dwjC3t62SmkAX8NWUWA&_nc_ht=scontent-frx5-1.xx&oh=2f9bef3dee7adbeaf573bbc2a06aa129&oe=5EF6C4F4


அண்ணனின் தத்துவங்கள் அனைத்துமே மிகவும் எளிமையானவை. “எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.

😆

- வினவு

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, கிருபன் said:


அண்ணனின் தத்துவங்கள் அனைத்துமே மிகவும் எளிமையானவை. “எனக்கு ஓட்டுப் போடலைன்னா தொலைஞ்சீங்கடா”, “என் மேல் கேசு போட்டவங்களை நான் அதிகாரத்துக்கு வந்து தீர்த்துப்புடுவேன்”, “தேர்தலில் வென்றால் எல்லோருக்கும் கார் இலவசமாக வழங்கப்படும்”, “ஆடு மாடு மேய்ப்பது அரசு வேலை”. போதும், இதற்கு மேல் தெம்பில்லை.

😆

- வினவு

அவ‌ர் எத‌ற்காக‌ இப்ப‌டி சொன்னார் என்ற‌த‌ முழு காணொளி பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு புரியும் , அவ‌ர் என்ன‌ சொல்ல‌ வ‌ந்தார் என்று /
200ரூபாய்க்கு கூலிக்கி மார் அடிக்கும் கூட்ட‌ம் வெளியிடும் காணொளிக‌ளை தானே நீங்க‌ள் பார்த்து ம‌கிழ்ந்து விப‌ர‌ம் தெரியாம‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து ,

நேற்று நான் இணைத்த‌ 40நிமிட‌ காணொளி கூட‌ நீங்க‌ள் பார்த்து இருக்க‌ மாட்டிங்க‌ள் /

உங்க‌ட‌ விவாதாம் எம் இன‌த்தை அழித்த‌ திமுக்கா ம‌ற்றும் ஆதிமுக்காவால் தான் விடிவு கால‌ம் பிற‌க்கும் என்று /

இந்த‌ திராவிட‌ கூட்ட‌ம் ஓவ‌ரா கூவினா ஈழ‌ விடைய‌த்தில் இவ‌ர்க‌ள் செய்த‌ ஊழ‌லை வைத்து வ‌ட‌ நாட்டான் மிர‌ட்டுவான் , பிற‌க்கு என்ன‌ அவ‌ங்க‌ளின் மிர‌ட்ட‌லுக்கு திராவிட‌ம் அட‌க்கி தான் வாசிப்பின‌ம் , 
2ஜீ ஊழ‌லில் 2009ம் ஆண்டு காங்கிர‌ஸ் க‌ருணாநிதியை இந்த‌ ஊழ‌லை வைத்து எப்ப‌டி மிர‌ட்டினார்க‌ள் என்ற‌து த‌மிழ் நாட்டில் ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம் 😠😉

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

நேற்று நான் இணைத்த‌ 40நிமிட‌ காணொளி கூட‌ நீங்க‌ள் பார்த்து இருக்க‌ மாட்டிங்க‌ள் /

பொன்னான 40 நிமிடத் துளிகளை வீணாக்கமுடியுமா!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

உங்க‌ட‌ விவாதாம் எம் இன‌த்தை அழித்த‌ திமுக்கா ம‌ற்றும் ஆதிமுக்காவால் தான் விடிவு கால‌ம் பிற‌க்கும் என்று /

 

என்னுடைய கருத்து தமிழகத்தில் உள்ள உதிரிக்கட்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே. இறுதி யுத்த நேரத்தில் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற உதிரிகள் எதையும் செய்யமுடியாமல் கையாலாகாது நின்றார்கள். தங்கள் குற்றவுணர்வை மறைக்க வைகோவும், நெடுமாறனும் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று தமக்குத்தாமே சொல்லி சமாதானம் அடைந்தனர்!

எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான். 

நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

என்னுடைய கருத்து தமிழகத்தில் உள்ள உதிரிக்கட்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே. இறுதி யுத்த நேரத்தில் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற உதிரிகள் எதையும் செய்யமுடியாமல் கையாலாகாது நின்றார்கள். தங்கள் குற்றவுணர்வை மறைக்க வைகோவும், நெடுமாறனும் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று தமக்குத்தாமே சொல்லி சமாதானம் அடைந்தனர்!

எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான். 

நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁

கால‌ம் ப‌தில் சொல்லும் அதுவ‌ர‌ பொறுத்து இருங்கோ கிருப‌ண் அண்ணா 😁😉

46 minutes ago, கிருபன் said:

என்னுடைய கருத்து தமிழகத்தில் உள்ள உதிரிக்கட்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே. இறுதி யுத்த நேரத்தில் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற உதிரிகள் எதையும் செய்யமுடியாமல் கையாலாகாது நின்றார்கள். தங்கள் குற்றவுணர்வை மறைக்க வைகோவும், நெடுமாறனும் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று தமக்குத்தாமே சொல்லி சமாதானம் அடைந்தனர்!

எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான். 

நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁

கிருபன்,  வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றோர் புலிகளுக்கு உண்மையான நிலமையை ஜதாரத்த‍ம் என்ன என்பதை களத்தில் இருந்த புலிகளுக்கு  அவர்களுக்கு புரியும் படி எடுத்து சொல்லி இருக்கலாம் என்பதே எனது கருத்து.  2005 ம் ஆண்டிற்கு பின்னரான பல மாற்றங்கள் என்பது புலிகள் தலைமையில் தான் தங்கி இருந்த‍து. ஆகவே அவர்களுடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நெடுமாறன் போன்றோர் நிலைமையை எடுத்து கூறியிருக்கலாம். அதன் மூலம் புலிகளின் அரசியல் அணுகு முறையில் மாற்றத்தை கொண்டுவந்து முள்ளிவாய்கால் அவலத்தை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். மாறாக புலிகளை மேலும் உசுப்பேற்றுவதை தான் அவர்கள் செய்தார்கள்.

(நான் இவ்வாறு கூறுவதன் மூலம் 1980 களில் இருந்து எமது போராட்டத்தில் அக்கறையுடன் அவர்கள் செய்த பல உதவிகளை மறப்பது என்று நினைக்க கூடாது. அவர்களின் உதவகள் என்றும் நன்றியுடனும் மரியாதையுடனும் நினைத்து பார்க்க கூடியவை)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.