Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமைக்கறி, உடும்புக்கறி சாப்பிட்டேன்... உங்களுக்கு என்ன பிரச்சினை? - செந்தமிழன் சீமான்

Featured Replies

17 minutes ago, Nathamuni said:

உங்களுடன் ஒரு ஆக்கபூர்வமான விவாதம் ஆரம்பித்த சில நேரங்களில் குழம்பி விடுகிறீர்கள்.

சுவிஸில் உங்களால் தலை கீழாக நின்றாலும் ஜனாதிபதியாக முடியாது. இதனை ஒரு அரசியல் வாதி வாயால் சொல்ல வேண்டியதில்லை. தவறான உதாரணம். அங்குள்ள சில காண்டோன்களில், வெளியூர்க்கார்களுக்கு குடியுரிமை கொடுக்கவே உள்ளூர் தேர்தல் நடத்தப்பட்டு, பெரும்பாலானவை இனவாதம் காரணமாக நிராகரிக்கப்படுள்ளது.

அமெரிக்காவில் ஆஸ்திரேலியாவில் பிறந்த வெள்ளை தோல் ஆர்னோல்ட் ஜனாதிபதியாக முடியாத வகையில் சட்டம் உள்ளது. அது இனவாதம் இல்லையே. 

நான் தெளிவாக கூறியும் நீங்கள் தான் குழம்புகின்றீர்கள் அல்லது நடிக்கின்றீர்கள். எனவே மீண்டும் தெளிவாக கூறுகின்றேன்.  தமிழனாகிய எனது வம்சாவளியில் பிறந்த  எனது நான்காம் அல்லது ஐந்தாம் தலைமுறைப் பிள்ளை ஒன்று தமிழ் வம்சாவளி என்ற ஒரே காரணத்திற்காக சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதியாக முடியாது என்று இங்கு சுவிற்சர்லாந்தின்  ஒரு அரசியல் தலைவர் வெளிப்படையாக கூறுவரானால் இங்கு அது இனவாதமாகத் தான்  இங்கு உள்ள மக்களால்  பார்க்கப்படும். அது இனவாதம் தான். 

கெனிய நாட்டு வம்சாவளி ஒபாமா எப்படி அமெரிக்க ஜனாதிபதியானார்? 

ஹங்கேரி வம்சாவளி நிகோலோஸ் சார்கோசி எப்படி பிரெஞ்ச் ஜனாதிபதியானார்?

Edited by tulpen

  • Replies 777
  • Views 64k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, tulpen said:

நான் தெளிவாக கூறியும் நீங்கள் தான் குழம்புகின்றீர்கள் அல்லது நடிக்கின்றீர்கள். எனவே மீண்டும் தெளிவாக கூறுகின்றேன்.  தமிழனாகிய எனது வம்சாவளியில் பிறந்த  எனது நான்காம் அல்லது ஐந்தாம் தலைமுறைப் பிள்ளை ஒன்று தமிழ் வம்சாவளி என்ற ஒரே காரணத்திற்காக சுவிற்சர்லாந்தின் ஜனாதிபதியாக முடியாது என்று இங்கு சுவிற்சர்லாந்தின்  ஒரு அரசியல் தலைவர் வெளிப்படையாக கூறுவரானால் இங்கு அது இனவாதமாக இங்கு உள்ள மக்களால்  தான் பார்க்கபடும்.

கெனிய நாட்டு வம்சாவளி ஒபாமா எப்படி அமெரிக்க ஜனாதிபதியானார்? 

ஹங்கேரி வம்சாவளி நிகோலோஸ் சார்கோசி எப்படி பிரெஞ்ச் ஜனாதிபதியானார்?

தலைவா, நீங்களோ, உங்கள் வம்சமோ, ஜனாதிபதியாக முடியாது என்பது நிதர்சனம் என்பதால், ஒரு சுவிஸ் அரசியல் வாதி அதனை மினக்கட்டு சொல்லப்போவதில்லை.

அடுத்து, நீங்கள் தப்பித்தவறி ஜனாதிபதியாகி, நாட்டினை கொள்ளையடித்து, உங்கள் வம்சமே அடுத்த தலைவராக வரவேண்டும் என நடந்தால், சுவிஸ்காரர்கள் எதிர்த்தால், அதனை இனவாதம் என்று சொல்வீர்களா?

ஒபாமா ஜனாதிபதி ஆகியது அவரது மிகச்சிறந்த பேச்சு வன்மை. ஒபாமா கென்யா வம்சாவளி அல்ல. அமெரிக்க வெள்ளை தாய்க்கும், கல்வி கற்க வந்த கென்யக்காரர் ஒருவருக்குமான சிலநாள் தொடர்பு. அவர் தாயின் வெள்ளைக் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட அமெரிக்க பிரஜை. தந்தை ஓடி விட்டார், கென்யாவுக்கு. 

ஹிட்லர், வெள்ளைத்தோல், அவரது மிகச்சிறந்த பேச்சு வன்மை.

நிக்ளோஸ்  வெள்ளைத்தோல்
 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

அடேங்கப்பா விளக்கம் !!

500 வருசத்துக்கு முன்னம் வந்த தெலுங்கன் இன்னும் தமிழ் பேசி ஆளலாம்.

72 வருசத்துக்கு முன்னம் ஆளத்தொடங்கிய சிங்களவன் தமிழ் இன்னும் பேசாததால், ஆளப்படாது.

அதுதான் நம்ம இனவாத தத்துவம்.

தெலுங்கு நாயக்கர்களின் வம்சத்தை 500 வருடங்களுக்கு பின்னரும் தமிழர் என்று ஏற்கவில்லை என்றால் இனவாதம்தானே. ஏனென்றால் அவர்களின் இன்றைய வம்சத்தினர் தெலுங்கர்கள் என்று தம்மைக் கருதுவதில்லையே. சீமான் போன்ற உசுப்பேத்துபவர்கள்தான் அப்படிச் சொல்லி அரசியல் செய்கின்றார்கள்!

உங்கள் வாதப்படி அவர்கள் தெலுங்கர்கள் என்றால், 1500 வருடங்களுக்கு முன்னர் சேரநாடாக இருந்த கேரளாவில் இன்று வசிக்கும் மலையாளிகளும் கேரளத்து தமிழர்தான். அவர்களை மலையாளிகள் என்று திட்டமுடியாது. அவர்களும் தமிழர்களை “பாண்டி” என்று எள்ளிநகையாடமுடியாது!

இன்னும் கொஞ்சம் பின்னே போனால் கி.மு. 543 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட விஜயனுக்கும் 700 தோழர்களுக்கும் மணம்முடிக்க 700 பாண்டித் தமிழ்ப்பெண்களைக் கொடுத்ததனால், அவர்கள் வழிவந்த ஒட்டுமொத்த சிங்கள இனமே தமிழர்கள்தான் என்றும் சொல்லலாம்😆

9 minutes ago, Nathamuni said:

தலைவா, நீங்களோ, உங்கள் வம்சமோ, ஜனாதிபதியாக முடியாது என்பது நிதர்சனம் என்பதால், ஒரு சுவிஸ் அரசியல் வாதி அதனை மினக்கட்டு சொல்லப்போவதில்லை.

அடுத்து, நீங்கள் தப்பித்தவறி ஜனாதிபதியாகி, நாட்டினை கொள்ளையடித்து, உங்கள் வம்சமே அடுத்த தலைவராக வரவேண்டும் என நடந்தால், சுவிஸ்காரர்கள் எதிர்த்தால், அதனை இனவாதம் என்று சொல்வீர்களா?

ஒபாமா ஜனாதிபதி ஆகியது அவரது மிகச்சிறந்த பேச்சு வன்மை. ஒபாமா கென்யா வம்சாவளி அல்ல. அமெரிக்க வெள்ளை தாய்க்கும், கல்வி கற்க வந்த கென்யக்காரர் ஒருவருக்குமான சிலநாள் தொடர்பு. அவர் தாயின் வெள்ளைக் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட அமெரிக்க பிரஜை. தந்தை ஓடி விட்டார், கென்யாவுக்கு. 

ஹிட்லர், வெள்ளைத்தோல், அவரது மிகச்சிறந்த பேச்சு வன்மை.

நிக்ளோஸ்  வெள்ளைத்தோல்
 

நிக்கோலோஸ் வெள்ளை தோல் ஆதலால் ஹங்கேரி  வம்சாவளி என்றாலும் பிரெஞ்ச் நாட்டை  ஆளலாம். தெலுங்கு பேசும் மக்கள் எத்தனை வம்சாவளியானாலும்  அவர்கள் கறுப்பு தோல் ஆகவே தமிழகத்தை ஆளமுடியாது.  சிறந்த கருத்து. நன்றி.

ஒபாமா பேச்சு வன்மை கொண்டாவர். ஆகவே கறுப்பு நிறம் என்றாலும் கெனியா தகப்பனை கொண்டவர் என்றாலும் அமெரிக்காவை ஆளலாம். தெலுங்கு மக்கள் எத்தனை தலமுறை சென்றாலும் சிறந்த பேச்சு வன்மை இல்லாமல் விட்டால் தமிழகத்தை ஆள முடியாது.  

இதுவும் சிறந்த கருத்து தான்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

 

எதிர்பார்த்த எதிர்வினைதான் வந்துள்ளது. நாம் மற்றவர்கள் எப்படிச் சிந்திப்பார்கள் என்று உய்த்தறியும்நுண்ணறிவையும் கொண்டுள்ளோம் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.😎

சாமானியர்கள்தான் இந்த உலகை வடிவமைக்கின்றார்கள் என்ற கருத்தியலை விதைத்து பெரும்பான்மையானவர்களை கோர்ப்பரேட் உலகம் அடிமையாக வைத்திருக்கின்றது என்று நாளை புலம்பக்கூடாது. இலுமினாட்டி, freemasons போன்ற அமைப்புக்களில் இருப்பவர்கள்தான் உலகை ஆளுகின்றார்கள் என்றும் நம்பக்கூடாது. ஆமா!

"வடிவமைப்பு" என்ற வார்த்தையை நீங்கள் சரியாக புரியவில்லை 
அல்லது புரியாத மாதிரி நடிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

சுற்றும் உலகில் சேர்ந்து சுற்றுவது வடிவமைப்பல்ல 
கடவுள்களை காட்டி காலம் காலமாக மக்களை ஏய்த்துவரும் 
உலகில் திடீரென கடவுளே இல்லை என்பதுதான் மாற்றம் 
அதுக்காக கடவுளை காட்டி மக்களை எவ்வாறு ஏய்த்து பிழைக்கிறார்கள் என்பதை 
பற்றி பேசாது இருக்க வேண்டும் என்பது புரியவில்லை? 

தி மு கா  அ மு தி கா தான் இனி வரும் ஆயிரம் வருடத்துக்கும் 
தமிழ்நாட்டுக்கு அரசியல் கட்சி என்ற மாயைக்குள் இருந்து மக்களை மீட்பதுதான் 
தமிழ் நாட்டை வடிவமைக்கும். 

விதைகள் வளரும் சத்தம் கேட்பதில்லை 
ஒரு பாரிய மரம் வீழும்போது பாரிய சத்தம் கேட்க்கும் 
அந்த சத்தத்தை சத்தம் இன்றி வளரும் விதைதான் உருவாக்கியது 
என்ற உண்மை உலகம் உருண்டை எனும்போது அவனை கொலை கூட 
செய்யவேண்டும் என்ற மனநிலைகளால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

சீமான் தோற்றுப்போகலாம் .......
ராஜ ராஜ சோழன்  இறந்துபோகலாம் 
தமிழ் மொழி  அறம் தமிழ் மானம் காக்க 
இன்னொரு பிரபாகரனை அது 1954இல் பிறப்பிக்கும் என்பதுதான் 
உலக வரலாறு ..... அது பொய் என்றால் நாம் இப்போதும் 
ரோம இராச்சியத்துக்கும்  கிரேக்க இராச்சியத்துக்கும் அடிமைப்பட்டு கிடந்திருப்போம். 

1958இல் சிங்களவர்கள் தனி சிங்கள சட்டத்தை அமுலாக்கினார்கள் 
இன்று உலகம் பூராக பகுதி நேரமாக என்றாலும் ஈழத்தமிழர்கள் தமிழ் பள்ளிகளை நிறுவினார்கள்  
தமிழ் பள்ளிகளின் உதயம் சாமானிய ஈழத்தமிழரின் சாதாரண சிந்தனைதான் 1989களில் 

இப்போதான் சீ இந்தப்பழம் புளிக்கும் என்று எட்டி நின்ற 
அறிவாளிகள் கொஞ்சம் உள் வருவதோடு ஆட்டையை போடவும் பார்க்கிறார்கள் 
அந்த எண்ணம் இலகுவாக ஈடேறும் காரணம் சாமினியருக்கு தமிழ் வளரவேண்டும் என்பதுதான் 
இலக்கே தவிர அடுத்தவனை சொறிந்துகொண்டு இருப்பது இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

நிக்கோலோஸ் வெள்ளை தோல் ஆதலால் ஹங்கேரி  வம்சாவளி என்றாலும் பிரெஞ்ச் நாட்டை  ஆளலாம். தெலுங்கு பேசும் மக்கள் எத்தனை வம்சாவளியானாலும்  அவர்கள் கறுப்பு தோல் ஆகவே தமிழகத்தை ஆளமுடியாது.  சிறந்த கருத்து. நன்றி.

ஒபாமா பேச்சு வன்மை கொண்டாவர். ஆகவே கறுப்பு நிறம் என்றாலும் கெனியா தகப்பனை கொண்டவர் என்றாலும் அமெரிக்காவை ஆளலாம். தெலுங்கு மக்கள் எத்தனை தலமுறை சென்றாலும் சிறந்த பேச்சு வன்மை இல்லாமல் விட்டால் தமிழகத்தை ஆள முடியாது.  

இதுவும் சிறந்த கருத்து தான்

ம்...முடியல

நீங்கள் ஏன் அங்கு தவுகிறீர்கள்?

முதலில் இனவாத புலிகளுக்கு ஆதரவு தந்த காரணத்தினை சொல்லுங்கள்?

Edited by Nathamuni

1 minute ago, Nathamuni said:

நீங்கள் ஏன் அங்கு தவுகிறீர்கள்?

முதலில் இனவாத புலிகளுக்கு ஆதரவு தந்த காரணத்தினை சொல்லுங்கள்?

அந்த தவறின் பலனை ஒட்டு மொத்த இனமே அனுபவித்த பின்னர் என்னைப்பார்த்து மட்டும் இந்த கேள்வி ஏன்? எல்லா தமிழரோடும் சேர்ந்து நானும் அந்த தவறை செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

அந்த தவறின் பலனை ஒட்டு மொத்த இனமே அனுபவித்த பின்னர் என்னைப்பார்த்து மட்டும் இந்த கேள்வி ஏன்? எல்லா தமிழரோடும் சேர்ந்து நானும் அந்த தவறை செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.

அப்படியானால், நீங்கள் சிங்களவர்கள் ஆள்வதற்கு பேராதரவு தருகிறீர்கள், சரிதானா

3 minutes ago, Nathamuni said:

அப்படியானால், நீங்கள் சிங்களவர்கள் ஆள்வதற்கு பேராதரவு தருகிறீர்கள். 

சீமானின் இன்றைய அணுகு முறைக்கும் விடுதலைப் புலிகளின் அன்றைய அணுகுமுறைக்கும்   இடையில் இருந்த  பாரிய வேறுபாடே என்னை அவர்களை ஆதரிக்க வைத்ததாக நான் கருதுகிறேன். அதில் தவறிருப்பதாக நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்தருளுக. 

சிங்களவர்கள் எம்மை  ஆள்வதற்கு எனது பேராதரவு அவர்களுக்கு தேவை இல்லை. புலிகளின் அரசியல்த் துறை அந்த பேராதரவை அவர்களுக்கு வரமாக அதை வழங்கிச்சென்று விட்டனர். 

நன்றி good night 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

நிக்கோலோஸ் வெள்ளை தோல் ஆதலால் ஹங்கேரி  வம்சாவளி என்றாலும் பிரெஞ்ச் நாட்டை  ஆளலாம். தெலுங்கு பேசும் மக்கள் எத்தனை வம்சாவளியானாலும்  அவர்கள் கறுப்பு தோல் ஆகவே தமிழகத்தை ஆளமுடியாது.  சிறந்த கருத்து. நன்றி.

ஒபாமா பேச்சு வன்மை கொண்டாவர். ஆகவே கறுப்பு நிறம் என்றாலும் கெனியா தகப்பனை கொண்டவர் என்றாலும் அமெரிக்காவை ஆளலாம். தெலுங்கு மக்கள் எத்தனை தலமுறை சென்றாலும் சிறந்த பேச்சு வன்மை இல்லாமல் விட்டால் தமிழகத்தை ஆள முடியாது.  

இதுவும் சிறந்த கருத்து தான்

உங்கள் கருத்துக்குள் இருக்கும் இனவாதத்தை நீங்கள் புரியவில்லை 

நீங்கள் சீமான் "தமிழர்" என்று கூறும்போது யாரை எண்ணுகிறீர்கள்?
நாம்தமிழர் கட்சியோ  சீமானோ தமிழரை  ஆயிரம் வருட வரலாறில் தேடவில்லை 
தமிழன் என்பது அந்த மண் இனம் கலை கலாச்சாரம் சார்ந்துதான் அறியப்படுகிறார்கள்
சிங்களவரை வெறுப்பவர்கள் தமிழர் என்ற மாயைதான் உங்கள் கருத்தில் இருக்கிறது 
சிங்களவன் தமிழன் என்று சொல்லி ஒருவனை அடிக்கும்போது அந்த வலியை யார் யார் எல்லாம் 
உணர்கிறானோ அவனே தமிழன் என்றுதான் நாம்தமிழர் கட்சி  கூறுகிறது. 

இந்த கருத்து களத்தை பொறுத்தவரை 
புரட்டிப்போட்டு ஆமையை அடிக்கும் வேலைதான் நடக்கிறது 
ஆதலால்  புரிந்தாலும் ... புரியாத மாதிரி ஒரு வேடம் மூலம் 
தங்கள்  கருத்துக்களுக்கு இனி முண்டு கொடுப்பார்களே தவிர யாரும் 
யாரும் கருத்துக்களையோ உண்மைகளையோ உள்வாங்க போவதில்லை 

அமெரிக்கா மற்றும் மேலை நாடுகளைதான் நாம் பின்பற்ற வேண்டும் என்று இல்லை 
இவர்களே இடையில் வந்தவர்கள் இவர்களுக்கு ஆயிரம் வருடம் முன்பே அரசாண்டவர்கள் தமிழர்கள்  
அமெரிக்காவுக்கு வந்த வெள்ளையர்களே ஆதிக்க குடியேறிகள்தான் அவர்கள் நாட்டு 
சட்டம் அதுக்கு உட்பட்டுதான் இருக்கும். அதை மண்சார்ந்த மக்கள் கூட்டம் ஏற்றுக்கொள்ள வேண்டும் 
என்ற எந்த கோட்ப்பாடும் இல்லை. 
கடந்த 50 வருட தமிழக ஆட்சிகளும் அதன் தவறுகளும் .......தவறுகளின் ஆணிவேரும்தான் 
இன்று நாம்தமிழரை உருவாக்கி இருக்கிறது. இல்லது போயிருப்பின் சீமான் என்று ஒருவரை சினிமாவில் 
மட்டுமே நீங்கள் பார்த்து இருப்பீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, tulpen said:

சீமானின் இன்றைய அணுகு முறைக்கும் விடுதலைப் புலிகளின் அன்றைய அணுகுமுறைக்கும்   இடையில் இருந்த  பாரிய வேறுபாடே என்னை அவர்களை ஆதரிக்க வைத்ததாக நான் கருதுகிறேன். அதில் தவறிருப்பதாக நீங்கள் நினைத்தால் என்னை மன்னித்தருளுக. 

சிங்களவர்கள் எம்மை  ஆள்வதற்கு எனது பேராதரவு அவர்களுக்கு தேவை இல்லை. புலிகளின் அரசியல்த் துறை அந்த பேராதரவை அவர்களுக்கு வரமாக அதை வழங்கிச்சென்று விட்டனர். 

நன்றி good night 

கேட்ட கேள்விக்கு ஒரு வரியில் பதில் இல்லை.

சுவிஸ், அமெரிக்கா, பிரான்ஸ், கென்யா, தமிழகம் எல்லாம் போய்  வந்த களைப்பில் நித்திரைக்கு போட்டார், நம்ம தல... :grin:

 நாளைக்கு வந்து வேற நியாயம் பிளப்போம். 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மே 19ம் திகதி இரவு, தலைவரின் உடல் வீடியோ வருகிறது. பார்த்துவிட்டு, அவர்தானோ என்று யோசிக்கும் போது, இரவு 9:30.

முன்னர் போராட்டத்துக்கு பணம் வாங்க வந்து இருந்த ஒருவர் போன் எடுத்தார்... நான் கொடுக்கவுமில்லை, கொடுக்கமாட்டேன் என்று சொல்வதும் இல்லை. காரணம் ஊரில் குடும்பம்.

வீடியோ எல்லாம் சும்மா. கருணா அம்மான் போனார் பார்த்தியலோ. அவர்கள் வேணுமென்றே மக்களைக் குழப்ப  வீடியோ போட்டுள்ளார்கள்.

தலைவர் பெரிய குரூப்புடன் வெளியேறிவிட்டார். பணம் தேவை...

அவர் சொல்ல வந்தது புரிந்தது. நாளை பேசுவோம் என்று துண்டித்தேன். பேசவில்லை.

இன்று பெரிய பணக்காரர். லேண்ட் ரோவர்.... கடைகள்... பெட்ரோல் நிலையங்கள். வீடுகள், கடைத்தொகுதிகள்.... வாடகை வருமானம்.

கேட்டால் , தகப்பன், கொழும்பு 5ம் குறுக்கு தெருவில், பெரிய அரிசி வியாபாரியாம். எனக்கு தெரிந்து 1983 உடன், கடை எரிந்து... ஊரில்.

அவருக்கும் சீமானை பிடிக்காது. தலைவர் பெயரை வைத்து, அரசியல் செய்கிறாராம். 

பிரான்சில், பங்கு பிரிப்பில் சூடு பட்டுக் கொண்டனர்.

ஆரம்பத்தில், சீமானை பயன்படுத்த முனைந்தனர் இவர்கள். அதனால், அவர் வெளிநாடுகளுக்கு போக முடியாத நிலை இன்று.

அவர் விழித்துக் கொண்டுவிட்டதால்... இவர் போன்ற நபர்களுக்கு பிடிப்பதில்லை.

காரணம் கேட்டால்.... 

மறுபடியும்..... தொப்பி உங்களுக்கு இல்லை... வெளியில் இருப்பவர்களுக்கு... 😀

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

தெலுங்கு நாயக்கர்களின் வம்சத்தை 500 வருடங்களுக்கு பின்னரும் தமிழர் என்று ஏற்கவில்லை என்றால் இனவாதம்தானே. ஏனென்றால் அவர்களின் இன்றைய வம்சத்தினர் தெலுங்கர்கள் என்று தம்மைக் கருதுவதில்லையே. சீமான் போன்ற உசுப்பேத்துபவர்கள்தான் அப்படிச் சொல்லி அரசியல் செய்கின்றார்கள்!

தமிழக அரசியலில். உள்ளவர்கள்,  50 வீதம் தெலுங்கர்கள்.
அவர்கள்... வெளியில் அரசியலுக்கு, தமிழ் பேசினாலும்... 
வீட்டிற்க்குள் தமது மொழியில்... தான் பேசிக் கொள்வார்களாம்.

உதாரணமாக பல தமிழகத்து தலைவர்களை காட்ட முடியும்.

தற்போதுள்ள தமிழக முதலமைச்சர்   பழனிச்சாமி,  ஒரிஜினல் தமிழன்.
இது, தமிழக வரலாற்றில்... மிக நீண்ட வருடங்களின் பின், நடந்த அற்புதம்.

அந்த இடத்தைப் பிடிக்க.... ஸ்ராலின் கருணாநிதி, முயற்சி பண்ணுகிறார்.
அதற்கு...  தமிழகத்து தமிழர், இடம் கொடுப்பார்களா?  என்பது தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Maruthankerny said:

"வடிவமைப்பு" என்ற வார்த்தையை நீங்கள் சரியாக புரியவில்லை 
அல்லது புரியாத மாதிரி நடிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.

சுற்றும் உலகில் சேர்ந்து சுற்றுவது வடிவமைப்பல்ல 
கடவுள்களை காட்டி காலம் காலமாக மக்களை ஏய்த்துவரும் 
உலகில் திடீரென கடவுளே இல்லை என்பதுதான் மாற்றம் 
அதுக்காக கடவுளை காட்டி மக்களை எவ்வாறு ஏய்த்து பிழைக்கிறார்கள் என்பதை 
பற்றி பேசாது இருக்க வேண்டும் என்பது புரியவில்லை? 

தி மு கா  அ மு தி கா தான் இனி வரும் ஆயிரம் வருடத்துக்கும் 
தமிழ்நாட்டுக்கு அரசியல் கட்சி என்ற மாயைக்குள் இருந்து மக்களை மீட்பதுதான் 
தமிழ் நாட்டை வடிவமைக்கும். 

விதைகள் வளரும் சத்தம் கேட்பதில்லை 
ஒரு பாரிய மரம் வீழும்போது பாரிய சத்தம் கேட்க்கும் 
அந்த சத்தத்தை சத்தம் இன்றி வளரும் விதைதான் உருவாக்கியது 
என்ற உண்மை உலகம் உருண்டை எனும்போது அவனை கொலை கூட 
செய்யவேண்டும் என்ற மனநிலைகளால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

சீமான் தோற்றுப்போகலாம் .......
ராஜ ராஜ சோழன்  இறந்துபோகலாம் 
தமிழ் மொழி  அறம் தமிழ் மானம் காக்க 
இன்னொரு பிரபாகரனை அது 1954இல் பிறப்பிக்கும் என்பதுதான் 
உலக வரலாறு ..... அது பொய் என்றால் நாம் இப்போதும் 
ரோம இராச்சியத்துக்கும்  கிரேக்க இராச்சியத்துக்கும் அடிமைப்பட்டு கிடந்திருப்போம். 

1958இல் சிங்களவர்கள் தனி சிங்கள சட்டத்தை அமுலாக்கினார்கள் 
இன்று உலகம் பூராக பகுதி நேரமாக என்றாலும் ஈழத்தமிழர்கள் தமிழ் பள்ளிகளை நிறுவினார்கள்  
தமிழ் பள்ளிகளின் உதயம் சாமானிய ஈழத்தமிழரின் சாதாரண சிந்தனைதான் 1989களில் 

இப்போதான் சீ இந்தப்பழம் புளிக்கும் என்று எட்டி நின்ற 
அறிவாளிகள் கொஞ்சம் உள் வருவதோடு ஆட்டையை போடவும் பார்க்கிறார்கள் 
அந்த எண்ணம் இலகுவாக ஈடேறும் காரணம் சாமினியருக்கு தமிழ் வளரவேண்டும் என்பதுதான் 
இலக்கே தவிர அடுத்தவனை சொறிந்துகொண்டு இருப்பது இல்லை. 

அருமையான....  கருத்து மருதங்கேணி. 
பத்துத் தரம்  வாசித்தாலும், மீண்டும்... வாசிக்க வேண்டும் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

சுவிஸில் உங்களால் தலை கீழாக நின்றாலும் ஜனாதிபதியாக முடியாது. இதனை ஒரு அரசியல் வாதி வாயால் சொல்ல வேண்டியதில்லை.

என்னது எனது கனவில் மண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

தமிழக அரசியலில். உள்ளவர்கள்,  50 வீதம் தெலுங்கர்கள்.
அவர்கள்... வெளியில் அரசியலுக்கு, தமிழ் பேசினாலும்... 
வீட்டிற்க்குள் தமது மொழியில்... தான் பேசிக் கொள்வார்களாம்.

உதாரணமாக பல தமிழகத்து தலைவர்களை காட்ட முடியும்.

தற்போதுள்ள தமிழக முதலமைச்சர்   பழனிச்சாமி,  ஒரிஜினல் தமிழன்.
இது, தமிழக வரலாற்றில்... மிக நீண்ட வருடங்களின் பின், நடந்த அற்புதம்.

அந்த இடத்தைப் பிடிக்க.... ஸ்ராலின் கருணாநிதி, முயற்சி பண்ணுகிறார்.
அதற்கு...  தமிழகத்து தமிழர், இடம் கொடுப்பார்களா?  என்பது தெரியவில்லை.

முற்றிலும் உண்மை , பெரும் த‌லைவ‌ருக்கு பிற‌க்கு இப்ப‌ தான் ப‌ச்சை த‌மிழ‌ன் த‌மிழ‌க‌த்து முத‌ல் அமைச்ச‌ர் /

விஜ‌ய‌காந் எல்லாம் வீட்டில் த‌மிழ் பேசுவ‌து இல்லையாம் சிறி அண்ணா , ஆனால் அவ‌ர் எதிர் க‌ட்சி த‌லைவ‌ராய் கூட‌ இருந்து இருக்கிறார் /

ஸ்ராலினால் துண்ட‌றிக்கை பார்த்தும் கூட‌ ஒழுங்காய் வாசித்து அழ‌கான‌ த‌மிழில் சொல்ல‌ மாட்டார் , சுத‌ப்பி அடிப்பார் , ஆக‌ ஆக‌ ஆக‌ ஸ்ராலின் மேடை பேச்சை கேட்டால் ஆக ஆக ஆக என்ற‌ சொல் அதிக‌ம் வ‌ரும் 😁

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமையைப்  🐢 புரட்டி கடலில் வேகமாக பயணம் போகப் பழகவேண்டுமென்பதால்  அண்மையில் படித்ததைகொஞ்சம் மாற்றி கீழே தந்திருக்கின்றேன். படிக்காமலும் விடலாம்😎

 

நான்கு வெவ்வேறு வகையான மனிதர்கள் இருக்கின்றார்கள்.

 

எப்படியென்றால் இவர்களிலே முதல் வகையானவர்களை இப்படியாக அடையாளப்படுத்தலாம். குறைவான கல்விகொண்டவர்கள். கிராமப்புறங்களில் வளர்ந்தவர்கள். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். அல்லது நடுத்தரக்குடும்பம். கொஞ்சம் படிக்கும் வழக்கமும் கொஞ்சம் நீதியுணர்ச்சியும் கொஞ்சம் அரசியல் ஆர்வமும் இருக்கும். கொஞ்சம்அப்பாவிகளாகவும் இருப்பார்கள். அந்த வயதில் எல்லாவற்றையும் உதறவேண்டும், எல்லாவற்றையும்எதிர்க்கவேண்டும், எல்லாவற்றையும் கடந்துசெல்லவேண்டும் என்றெல்லாம் கனவுகாண்பார்கள்.

இந்த இளைஞர்கள்தான் இந்த அமைப்புக்களில் பெரும்பாலானவர்கள். இவர்களெல்லாம் ஒருவகை வெகுளிகள். இவர்களுக்கு ஒரு பத்து பக்கத்துக்குள் தான் வாசிப்பறிவோ கேட்ட அறிவோ இருக்கும். ஆனால் பயங்கரமானதன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். உலகத்தையே விளக்கிவிடமுடியும் என்று நம்புவார்கள். எல்லாவற்றையும்ஏளனமாக விமர்சனம் செய்வார்கள். எதற்குமே மசியமாட்டார்கள். தர்க்கம் செய்தபடியே இருப்பார்கள்.

உண்மையில் மிகக்கொஞ்சமாக வாசித்தால் தர்க்கம்செய்வது எளிது. நமக்கு குழப்பமே இருக்காது. நம்முடையகருத்துடன் முரண்படுபவர்களை எல்லாம் நம் எதிரிகள் என்று சொல்லவேண்டும். எதிரிகளை எதிர்க்க நமக்குச்சில கொள்கைகள் இருக்கும். சில சதிக்கோட்பாடுகள் இருக்கும். எதிரி என்ன சொன்னாலும் நாம்நமக்குத்தெரிந்த பதில்களை ஆணித்தரமாகச் சொல்லி ஓட ஓடவிரட்டலாம். இதெல்லாமே நானும்செய்தவன்தான். 😃

 

இன்னொரு வகையினர் உண்டு. ரொம்ப கிராமப்புறத்தான்கள். படிப்பு இருக்காது. இன்னும் அப்பாவிகள். ஒன்றுமே தெரியாது. ஆனால் நேர்மையானவர்கள், நல்ல நோக்கம் கொண்டவர்கள். ஊருக்கு நல்லதுசெய்பவர்கள். இவர்கள் ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்வார்கள். அப்போது சென்று தூண்டில்போட்டுபிடித்துவிடுவார்கள். இவர்களுக்கு இவர்களை தலைவர்கள் சமானமாக நடத்தினாலே போதும் கண்கலங்கிஅடிமைமாதிரி ஆகிவிடுவார்கள்.

 

 

இன்னொரு கூட்டம் உண்டு. அவர்கள் அறிவுஜீவிகள். நிறையப்படிப்பார்கள். படிப்பு என்பது இவர்களுக்குமேற்கோள்களை ஞாபகம் வைத்திருப்பதுதான். படிப்பு அதிலிருந்து வரும் அகங்காரம். அவ்வளவுதான். அகங்காரம்தான் முக்கியம். கொள்கை முக்கியமே கிடையாது. கொள்கையை ஐந்தாண்டுக்கு ஒருமுறைநேர்தலைகீழாக மாற்றிக்கொள்வார்கள். ஒரே கொள்கை கொண்டவராக இருந்தாலும் தன்னுடையஆணவத்தைச் சீண்டிவிட்டால் கொதித்துக் கிளம்பிவிடுவார்கள். வசைதான். அவதூறுதான். கொலை செய்யதைரியம் இருக்காது.

 

 

நான்காவது கூட்டம் தலைவர்கள்.. உசுப்பேத்தி, மூளைச்சலவை செய்து அடிமைகளை உருவாக்குவதுஇவர்களின் தொழில். என்ன செய்கின்றோம் என்பதில் மிகவும் தெளிவானவர்கள். உளவுத்துறையினரிடம் மிகவும்நெருக்கமானவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

ஆமையைப்  🐢 புரட்டி கடலில் வேகமாக பயணம் போகப் பழகவேண்டுமென்பதால்  அண்மையில் படித்ததைகொஞ்சம் மாற்றி கீழே தந்திருக்கின்றேன். படிக்காமலும் விடலாம்😎

 

நான்கு வெவ்வேறு வகையான மனிதர்கள் இருக்கின்றார்கள்.

 

எப்படியென்றால் இவர்களிலே முதல் வகையானவர்களை இப்படியாக அடையாளப்படுத்தலாம். குறைவான கல்விகொண்டவர்கள். கிராமப்புறங்களில் வளர்ந்தவர்கள். மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம். அல்லது நடுத்தரக்குடும்பம். கொஞ்சம் படிக்கும் வழக்கமும் கொஞ்சம் நீதியுணர்ச்சியும் கொஞ்சம் அரசியல் ஆர்வமும் இருக்கும். கொஞ்சம்அப்பாவிகளாகவும் இருப்பார்கள். அந்த வயதில் எல்லாவற்றையும் உதறவேண்டும், எல்லாவற்றையும்எதிர்க்கவேண்டும், எல்லாவற்றையும் கடந்துசெல்லவேண்டும் என்றெல்லாம் கனவுகாண்பார்கள்.

இந்த இளைஞர்கள்தான் இந்த அமைப்புக்களில் பெரும்பாலானவர்கள். இவர்களெல்லாம் ஒருவகை வெகுளிகள். இவர்களுக்கு ஒரு பத்து பக்கத்துக்குள் தான் வாசிப்பறிவோ கேட்ட அறிவோ இருக்கும். ஆனால் பயங்கரமானதன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். உலகத்தையே விளக்கிவிடமுடியும் என்று நம்புவார்கள். எல்லாவற்றையும்ஏளனமாக விமர்சனம் செய்வார்கள். எதற்குமே மசியமாட்டார்கள். தர்க்கம் செய்தபடியே இருப்பார்கள்.

உண்மையில் மிகக்கொஞ்சமாக வாசித்தால் தர்க்கம்செய்வது எளிது. நமக்கு குழப்பமே இருக்காது. நம்முடையகருத்துடன் முரண்படுபவர்களை எல்லாம் நம் எதிரிகள் என்று சொல்லவேண்டும். எதிரிகளை எதிர்க்க நமக்குச்சில கொள்கைகள் இருக்கும். சில சதிக்கோட்பாடுகள் இருக்கும். எதிரி என்ன சொன்னாலும் நாம்நமக்குத்தெரிந்த பதில்களை ஆணித்தரமாகச் சொல்லி ஓட ஓடவிரட்டலாம். இதெல்லாமே நானும்செய்தவன்தான். 😃

 

இன்னொரு வகையினர் உண்டு. ரொம்ப கிராமப்புறத்தான்கள். படிப்பு இருக்காது. இன்னும் அப்பாவிகள். ஒன்றுமே தெரியாது. ஆனால் நேர்மையானவர்கள், நல்ல நோக்கம் கொண்டவர்கள். ஊருக்கு நல்லதுசெய்பவர்கள். இவர்கள் ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்வார்கள். அப்போது சென்று தூண்டில்போட்டுபிடித்துவிடுவார்கள். இவர்களுக்கு இவர்களை தலைவர்கள் சமானமாக நடத்தினாலே போதும் கண்கலங்கிஅடிமைமாதிரி ஆகிவிடுவார்கள்.

 

 

இன்னொரு கூட்டம் உண்டு. அவர்கள் அறிவுஜீவிகள். நிறையப்படிப்பார்கள். படிப்பு என்பது இவர்களுக்குமேற்கோள்களை ஞாபகம் வைத்திருப்பதுதான். படிப்பு அதிலிருந்து வரும் அகங்காரம். அவ்வளவுதான். அகங்காரம்தான் முக்கியம். கொள்கை முக்கியமே கிடையாது. கொள்கையை ஐந்தாண்டுக்கு ஒருமுறைநேர்தலைகீழாக மாற்றிக்கொள்வார்கள். ஒரே கொள்கை கொண்டவராக இருந்தாலும் தன்னுடையஆணவத்தைச் சீண்டிவிட்டால் கொதித்துக் கிளம்பிவிடுவார்கள். வசைதான். அவதூறுதான். கொலை செய்யதைரியம் இருக்காது.

 

 

நான்காவது கூட்டம் தலைவர்கள்.. உசுப்பேத்தி, மூளைச்சலவை செய்து அடிமைகளை உருவாக்குவதுஇவர்களின் தொழில். என்ன செய்கின்றோம் என்பதில் மிகவும் தெளிவானவர்கள். உளவுத்துறையினரிடம் மிகவும்நெருக்கமானவர்கள்.

நாம எந்த வகை, தல? 🤗

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

நாம எந்த வகை, தல? 🤗

நான் முதலாவது😁. இப்ப நாலாவதற்கு போகவேண்டும் என்பதை இலட்சியமாக வரித்துள்ளேன். 😎

கனடாவில் படம் எடுத்த ஒருவர் எனது குரலும் வசீகரமானது 😍 என்று சொன்னார். ஏற்ற இறக்கங்களைப் பயிற்சி செய்தால் போதும். ஆற்றொழுக்கு நடையில் பேச்சை எழுதி மனப்பாடம் செய்துவிட்டு மனப்பாடம் செய்யாமல் பேசுவது போல இலகுவாகப் பேசலாம். ஒரே கருத்தை மூன்று முறையாவது வெவ்வேறு வார்த்தைகளில் சொன்னால் கேட்கிறவன் மண்டைக்குள் ஆழமாகப் பதிந்துவிடும். அவ்வளவுதான்!

 

நீங்க மூணாவது என்று நினைத்தேன். ஆனால் நம்ம தோஸ்த்தாகத்தான் இருக்கின்றீர்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நான் முதலாவது😁. இப்ப நாலாவதற்கு போகவேண்டும் என்பதை இலட்சியமாக வரித்துள்ளேன். 😎

கனடாவில் படம் எடுத்த ஒருவர் எனது குரலும் வசீகரமானது 😍 என்று சொன்னார். ஏற்ற இறக்கங்களைப் பயிற்சி செய்தால் போதும். ஆற்றொழுக்கு நடையில் பேச்சை எழுதி மனப்பாடம் செய்துவிட்டு மனப்பாடம் செய்யாமல் பேசுவது போல இலகுவாகப் பேசலாம். ஒரே கருத்தை மூன்று முறையாவது வெவ்வேறு வார்த்தைகளில் சொன்னால் கேட்கிறவன் மண்டைக்குள் ஆழமாகப் பதிந்துவிடும். அவ்வளவுதான்!

 

நீங்க மூணாவது என்று நினைத்தேன். ஆனால் நம்ம தோஸ்த்தாகத்தான் இருக்கின்றீர்கள்😂

சரி, தல.. நம்ம ருல்பன் போல, ஒரு விசயத்தை நேரடியாக சொல்லாமல், இப்படி சுத்தி வழைச்சு சொல்ல வருவது என்னவோ?😜

ஒரு சுவிஸ் பிரஜை ஒருவர் என்னையோ அல்லது வேறு ஒரு  நாட்டில் இருந்து வந்த ஒரு பிரஜையையோ நோக்கி  “வேறு நாட்டின் வம்சாவளியில்  வந்த  உனக்கு என்ன தகுதி இருந்தாலும் இன்ன இன்ன பதவிகளுக்கு வரக்கூடாது நீ அதை நினைப்பதே தவறானது. என்னை ஆளும் உரிமை உனக்கு கிடையாது” என்று கூறினால் என்னைப் போல புலம் பெயர்ந்து வாழும் முதலாம் தலைமுறை மனதில் அடையும்  வேதனையை தாங்கிக் கொண்டாலும்  இங்கு  பிறந்த இரண்டாம் தலைமுறைப்  பிள்ளைகளைப்  பார்த்து அவ்வாறு ஒருவர் கூறும் போது அவர்கள்  அடையும்  வேதனையை அவர்களால் தாங்க முடியாது.  அவ்வாறு கூறும் ஒரு சுவிஸ் பிரஜையோ அதற்கு ஆதவு அளிப்பவர்களோ நிச்சயம் இன வெறியர்களாக தான் இருப்பார்கள். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இதுவரைகாலமும்  தமிழ்நாட்டை ஆண்ட வந்தேறு குடிகள் ஊழலில்லாமல் முறைகேடில்லாமல் தமிழினத்திற்கு துரோகம் செய்யாமல் ஆட்சி செய்திருந்தால் சீமானுக்கு வேலை வந்திருக்காது.

இதுக்கை தமிழே ஒழுங்காய் உச்சரிக்கத்தெரியாத  நடிகர் பரட்டை பச்சைத்தமிழனாம். வந்தால் முதல்வராய்த்தான் வருவாராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, ரதி said:

இந்த திரி முடிஞ்சிட்டுதா :unsure:

இந்த திரியை வாசித்தலில் புரிந்தது;
எங்கட சனத்திற்கு உசுப்பேற்ற யாரும் இருந்து கொண்டேயிருக்கோணும்🙂.
விசிலடித்தான் குஞ்சுகளாகவேயிருந்து பழகிட்டோம்😛.
இணையவனும், நுணாவும் சீமானிற்கு சப்போட் 😄
நிழலி இல்லை 😆
மோகன்🤔

மோகன்!  மச்சான்ஸ் புகழ் நமிதாவுக்கு சப்போட் 😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.