Jump to content

தமிழின அழிப்புப் போரின் இறுதிநாட்களில் இந்தியாவின் நிலைப்பாடும் ராஜதந்திர நகர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையிலிருந்து வெளிவரும் பார்பணீய நாளிதழும், தமிழர் விரோத சக்தியுமான "தி ஹிந்து" பத்திரிக்கையில் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி நிருபமா சுப்ரமணியன் எழுதிய கட்டுரையில் இந்தியா போர் தொடர்ந்து நடைபெற்று புலிகள் முற்றாக அழிக்கப்படுவதை விரும்பியதாகவும், இதன்பொருட்டு, சர்வதேசத்திலிருந்து வரும் போரினை நிறுத்தும் அழுத்தங்களை இந்தியா சாதுரியமாகத் தடுத்து நிறுத்தி, போர் தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் கூறுகிறார்.

அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இதோ.......

"யுத்தத்தின் இறுதிநாட்களில், இந்தியா பல்வேறு தளங்களில் இலங்கைக்குச் சார்பாகச் செயலாற்றிக்கொண்டிருந்தது. அதில் முக்கியமானது இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் கொண்டுவர எத்தனித்த நடவடிக்கைகளை தடுப்பது மற்றும், போரினை நிறுத்தும்படி சர்வதேசம் இலங்கைமீது செலுத்திய அழுத்தத்தினை இல்லாமலாக்கியது என்பவையாகும். போரை நிறுத்தி, புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு மேற்குநாடுகள் விடுத்த வேண்டுகோள்களை இந்தியா முன்னின்று தடுத்ததுடன், புலிகள் மீண்டும் உயிர்பெறுவதை அனுமதிக்கப்போவதில்லை என்பதில் இந்தியா திடமாக இருந்ததென்பது கொழும்பிலிருந்த அமெரிக்க உயர்ஸ்த்தானிகராலயத்தின் தகவல்ப் பரிமாற்றத்தினை மேற்கோள்காட்டி விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்த தகவல்கள் ஹிந்துவுக்குப் பிரத்தியோகமாகக் கிடைத்திருந்தது".

"யுத்தத்தில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கை மற்றும் மக்களுக்கேற்பட்டுக்கொண்டிருந்த அவலங்கள் தொடர்பாக இலங்கையுடன் தொடர்ச்சியாகத் தொடர்பிலிருந்த இந்தியா, புலிகளுக்கெதிராக இலங்கை நடத்திக்கொண்டிருந்த யுத்தத்தில் இலங்கைக்கு மிகவும் சாதகமான போக்கினையே கடைப்பிடித்தது".

"மகிந்த ராஜபக்ஷவின் போரின்பின்னரான திட்டங்கள் பற்றி இந்தியா சந்தேகத்துடனேயே இருந்தாலும்கூட, போர் முடியும்வரை தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகப் பேசுவதில்லை என்கிற நிலைப்பாட்டிலேயே இருந்தது".

"சர்வதேச மத்தியஸ்த்துடனான போர்நிறுத்தம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆகிய இரண்டும் இந்தியாவினால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, அம்முயற்சிகளிலிருந்து பின்வாங்கிய சர்வதேசம் போரின் பின்னரான உதவிகள் மூலம் மீண்டும் தன்னை இலங்கைதொடர்பான விடயங்களில் உட்படுத்திக்கொள்ளலாம் என்கிற நிலைப்பாட்டில் இருந்ததுடன், தனது நிவாரண முயற்சிகளுள் இந்தியாவையும் இணைத்துச் செயற்பட விரும்பியிருந்தன".

"ஜனவரி மாதம் 2009 இல் இந்தியாவின் பிரணாப் முகர்ஜீ அவசர விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இலங்கைக்கான இந்தியாவின் உதவித் தூதர் விக்ரம் மிஸ்ரி இந்த விஜயம் தொடர்பாக அமெரிக்க தூதர அதிகாரிகளுக்கு விளக்கம் கொடுத்ததாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருந்தது".

"சுமார் இரண்டு மணித்தியாலங்களாக இலங்கை ஜனாதிபதியின் வீட்டில் இலங்கையின் ராணுவத்தளபதி, பாதுகாப்புச் செயலாளர், மற்றும் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்திய முகர்ஜீ சிவிலியன்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று இலங்கையின் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டதாக விக்ரம் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்குக் கூறியிருந்தார்".

"அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கமளித்த விக்ரம், இலங்கையின் நடக்கும்போர்பற்றி இந்தியாவுக்கு ஒரு உறுதியான நிலைப்பாடு இருந்தாலும்கூட, இப்போரில் சிவிலியன் அழிவுகள் தொடர்பாக தமிழ்நாடு உட்பட்ட இந்தியா முழுதும் அதிர்வலைகள் கிளம்பியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்".

ஆனால், விக்ரம் மிஸ்ரியின் பிரச்சாரங்களுக்கு அப்பால், முகர்ஜீயின் திடீர் விஜயம் தொடர்பான உண்மையினை இந்திய அரசே பின்னர் வெளியிட்டிருந்தது. அதன்படி, " புலிகள் மீதான முற்றான ராணுவ வெற்றியொன்றின் மூலமே நிரந்தரமான சமாதானத்தையும், தமிழர்களுக்கான தீர்வையும் வழங்கமுடியும் என்று இந்தியா நம்புகிறது. இதனை அடைவதற்கான இலங்கை ஜனாதிபதியின் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா உறுதுணையாக இருக்கும்" என்று முகர்ஜியின் விஜயம் தொடர்பாக பத்திரிக்கையாளர் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக உறுதிப்படுத்தியிருந்தது.

"இலங்கையின் போருக்கான முற்றான ஆதரவு, சர்வதேச அழுத்தத்தினை தடுத்து நிறுத்தல் ஆகியவையே இந்தியாவின் இலங்கை தொடர்பான அன்றைய நிலைப்பாடாக இருந்தபோதிலும், காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக இருந்த தி மு க, போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தமிழகம் கொந்தளித்துக்கொண்டிருந்ததைச் சமாளிக்கமுடியாமல் திண்டாடியது. இதனாலேயே, தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு போக முடியுமா என்று காங்கிரஸ் தலைமைப் பீடத்திடம் வேறு வழியின்றிக் கேட்கவேண்டிய நிலை அதற்கு ஏற்பட்டது".

" ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி, அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு போர்தொடர்பாக விளக்கமளித்த சிவ்ஷங்கர் மேனன், இலங்கையைப் பொறுத்தவரையில் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் போர்தொடர்பாக சமரசத்தில் ஈடுபடுவதை முற்றாக மறுதலிப்பதாகவும், புலிகளுடன் இனிமேல் எந்தப் பேச்சுவார்த்தைகளுக்கும் இலங்கை தயாரில்லை என்றும், ஆகவே யுத்த நிறுத்தம் தொடர்பான எந்தக் கோரிக்கையும் இலங்கையாலும் இந்தியாவினாலும் முற்றாக புறக்கணிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்". இந்தக் கலந்துரையாடல் பற்றிய விபரங்கள் விக்கிலீக்ஸின் வெளியீடுகள் மூலம் ( 202476) ஹிந்துவுக்குக் கிடைத்தது". இதில் கவனிக்கப்படவேண்டிய முக்கியமான விடயம் யாதெனில், இலங்கையில் நடக்கும்போர் தொடர்பாக, கொழும்பிலிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் விளக்கமளிக்கிறார் என்பது. இதுவே, இலங்கையில் போரினை முன்னின்று நடத்தியது இந்தியாதான் என்பதை தெளிவுபடுத்தி விடுகிறது.

"அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேசிய மேனன், சர்வதேசத்தின் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணிக்கவேண்டாம் என்று இந்தியா இலங்கையிடம் கேட்டுக்கொள்வதாகவும், அதேவேளை, புலிகளின் முக்கிய தலைவர்களைத் தவிர்த்த ஏனைய போராளிகளைக் கொல்லவேண்டாம் என்று இந்தியா இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்".

"அதேவேளை, புலிகளியக்கத்தின் முக்கிய தலைவர்கள் யார், சாதாரண போராளிகள் யாரென்று பிரித்தறிவது கடிணமான பணியாக இருக்கலாம் என்பதால், சிலவேளை தனது ஆலோசனைகளை இலங்கை பின்பற்றுவது சாத்தியமில்லாது போகலாம் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார்".

" மேலும், இலங்கை ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின்படி, புலிகளை முற்றாக அழிப்பதே ஒரே இலட்சியமாக இருக்கும்பொழுது, அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் போவதென்பதோ அல்லது யுத்த நிறுத்தம் ஒன்றிற்குப் போவதென்பது அரசியல் தற்கொலையாக மாறும் என்பதால், புலிகளின் தலைவர்களைத் தப்பவிடுதல் அல்லது யுத்தத்தினை தேக்க நிலைக்குக் கொண்டுவருதல் என்பது அவரைப்பொறுத்தவரையில் இயலாத காரியம் என்றும் நியாயப்படுத்தியிருந்தார். இலங்கைக்கெதிரான சர்வதேசக் குரல்கள் அமுக்கப்பட்ட நிலையில், இலங்கையினை சமாதானப் பேச்சுவார்த்தைக்கோ, யுத்த நிறுத்தம் ஒன்றிற்கோ கொண்டுவருவதென்பது மிகக்கடிணமான முயற்சியாக இருக்கும் என்றும் மேனன் குறிப்பிட்டிருந்தார்".

"அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்தும் பேசிய மேனன், பிரபாகரனுக்குச் சார்பாகப் பேசுபவர்கள் யார்? போரின் முடிவு எப்படியானதாக இருக்கப்போகிறதென்பது பற்றிப் பிரபாகரனினது புரிதல் எப்படியானது? என்கிற கேள்விகளை முன்வைத்ததோடு, இந்தியாவில் நடைபெறவிருக்கும் பொதுதேர்தல்கள் இலங்கைக்கும், புலிகளுக்குமிடையிலான யுத்த நிறுத்தம் ஒன்றினையோ, சமாதானப் பேச்சுவார்த்தையொன்றினையோ இந்தியா முன்னின்று நடத்துவதை முற்றாகத் தடுத்துவிட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்".

"இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தை ஒன்றிற்கோ, யுத்த நிறுத்தம் ஒன்றிற்கோ குறுக்கே நிற்கப்போவதில்லை என்று மேனன் மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிகாரிகளிடம் கூறினாலும்கூட, இந்தியாவே யுத்தத்தினை முன்னின்று நடத்துவதை அமெரிக்கர்கள் உணர்ந்தே இருந்தனர்".

"யுத்தத்தில் தனது பங்கினை மறைக்க விரும்பிய மேனன், "உங்களுக்கு இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றினையோ அல்லது பேச்சுவார்த்தை ஒன்றினையோ நடத்தும் நோக்கம் இருக்கிறதா? அப்படியானால் சொல்லுங்கள், இந்தியாவும் அதில் கலந்துகொள்வது பற்றிச் சிந்திக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய நாடுகளுடன் சேர்ந்தே செய்யலாம்" என்றும் அவர் அமெரிக்கத் தூதரிடம் கூறியிருக்கிறார்".

"மூன்று வாரங்களுக்குப் பின்னர், மே மாதம் 6 முதல் 7 வரையான நாட்களில், இலங்கைக்கான அமெரிக்கச் சிறப்புத்தூதர் டெஸ் பிறவுன் அவர்கள் தில்லிக்கு விஜயம் மேற்கொண்டு வெளியுறவுச் செயலர் மேனனையும், பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனையும் சந்தித்து மீண்டும் யுத்த நிறுத்தம் ஒன்றிற்கான தனது கோரிக்கையினை முன்வைத்தார். ஆனால், இந்திய பொதுத்தேர்தல்களினாலும், இனிமேல் போரினை நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளை ஆரம்பிப்பது தொடர்பாக எதுவுமே செய்வதற்கில்லை என்கிற நிலைமையில் இந்தியா அவரது கோரிக்கையினை உதாசீனம் செய்திருந்தது".

"இலங்கையின் பிரித்தானிய தூதரகத்தின் அதிகாரியொருவர் அமெரிக்கத் தூதரகத்துடன் பரிமாறிக்கொண்ட செய்திக்கமைய, "போர்க்களத்தில் ஆயிரக்கணக்கில் கொல்லப்படும் அப்பாவிகள் பற்றி இந்தியா கவலை கொண்டிருந்தாலும்கூட, புலிகள் மீதான முற்றான வெற்றிக்கான அறிகுறிகளும், போர் முடிந்தவுடன் தமிழர்களுக்கான உரிமைகள் தொடர்பாக இலங்கை உறுதிகூறியவாறே நடந்துகொள்ளும் என்கிற நம்பிக்கையும், இந்தியாவைத் தொடர்ந்தும் இலங்கையின் போரினை ஆதரிக்கத் தூண்டுகிறது என்று கூறியிருக்கிறார்".

"இந்தியாவின் சிவ்ஷங்கர் மேனனும் நாராயணனும் யுத்த வெற்றியுனூடான சமாதானம் பற்றி அதிக அக்கறையும், உற்சாகமும் கொண்டிருந்தனர் என்றும், தனியீழத்திற்கான போராட்டம் முற்றாக அழிக்கப்படுமிடத்து, நாட்டில் நிரந்தர அமைதி நிலவும் என்றும், தமிழர்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்றும் இலங்கையினை விட இந்தியாவே அதிக நம்பிக்கையுடன் இருந்ததாக அந்த பிரித்தானிய அதிகாரி கூறியிருக்கிறார். அத்துடன், இந்த இரு இந்திய அதிகாரிகளும் கூறுவதன்படி, யுத்த வெற்றியின்பின்னரான சமாதான முன்னெடுப்புக்களை யுத்தத்தில் வெற்றியீட்டி மிகப்பெரும் அகம்பாவத்துடன் வலம்வரும் ராணுவம் தடுக்குமாயின், இன்னும் சில காலத்திலேயே இன்னொரு தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கும் என்று இவ்விரு இந்திய அதிகாரிகளும் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்".

"பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய மேனனும், நாராயணனும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் கூட்டங்களில் இலங்கை தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்வது நண்மை பயக்கக் கூடும், ஆனால், இலங்கை மீது கடுமையான அழுத்தங்களை சர்வதேசம் பிரயோகிக்க முயன்றால், அது எதிர்வினையாக மாறுவதுடன், சர்வதேசத்தினைத் தூக்கியெறிந்து, தனது ஊள்நாட்டு இனவாதிகளின் சொற்படி மகிந்த நடப்பதை எம்மால் தடுக்கமுடியாதிருக்கும் என்றும் கூறியிருக்கிறார்கள். இது ஒருவகையில், இலங்கைதொடர்பாக பாதுகாப்புக் கவுன்சிலில் விவாதிக்கவேண்டாம் எனும் எச்சரிக்கையினை இந்தியா விடுப்பதற்கு ஒப்பானது என்றும் அந்த அதிகாரி தெரிவித்திருக்கிறார்".

"மே மாதம் 15 ஆம் திகதி, மேனனை மீண்டும் தொடர்புகொண்டு பேசிய அமெரிக்க சிறப்புத் தூதர், அரங்கேறிக்கொண்டிருக்கும் பாரிய மனிதாபிமான அவலத்தை உடனேயே தடுத்து நிறுத்த என்ன செய்யலாம் என்று வினவியபோது பதிலளித்த மேனன், உங்களின் கரிசணையை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சிலின் ஊடாகவோ, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைக் கவுன்சிலூடாகவோ எடுக்கும் எந்த முடிவும் இந்த நிலையினை இன்னும் பாதிக்கவே செய்யும், ஆகவே இந்தியா அதனை ஆதரிக்காது, வேண்டுமென்றால், நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர கலந்துரையாடல்கள் மூலம் இந்நிலையினை மேம்படுத்த முயன்று பாருங்கள் என்று கைவிரித்திருக்கிறார்".

"தமிழ்நாட்டின் தி மு க வின் தொந்தரவினால் சலிப்படைந்த காங்கிரஸ் அரசு, இலங்கையிடம் போரில் மென்போக்கினைக் கடைப்பிடிக்கும்படி வேண்டா வெறுப்பாகக் கேட்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதற்கமைய, மேனன் அமெரிக்க தூதருக்கு கொடுத்த வாக்குறுதியின்படி, பிறணாப் முகர்ஜீ அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான சமாதான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக ஹிலாரி கிளின்டனுடன் விரைவில் பேசுவார் என்று கூறியிருந்தார்".

"அவர் மேலும் கூறுகையில், இலங்கையிடம் யுத்தத்தினைத் தற்காலிகமாக நிறுத்தும்படி மீண்டும் கோரவுள்ளோம், அத்துடன் உள்ளே அகப்பட்டிருக்கும் சிவிலியன்களுக்கான நிவாரண உதவிகள்பற்றியும் பேசவுள்ளோம் என்றுக் கூறினார்".

"ஏப்ரல் 24 ஆம் திகதி கொழும்பிற்கு விஜயம் மேற்கொண்ட மேனன் மற்றும் நாராயணன் ஆகியோர், தமது கலந்துரையாடல்களின் பின்னர் மகிந்த ராஜபக்ஷ சிலவேளை யுத்த நிறுத்தத்திற்கு ஒத்துவரலாம் என்கிற தொனியில் கருத்துத் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல், மகிந்த யுத்தநிறுத்தம்பற்றி ஏப்ரல் 27 ஆம் திகதி பகிரங்கமாக அறிவிப்பினை மேற்கொள்ளுவார் என்றும், அதுவரையில் இந்த ரகசியத்தினை வெளியில் விடவேண்டாம் என்று நாராயணன் தன்னைக் கேட்டுக்கொண்டதாகவும் அந்த அமெரிக்க தூதுவர் கூற்னார்".

"அந்த பகிரங்க அறிவிப்பும் வந்தது. யுத்தத்தினை நிறுத்துவதாக அல்ல, மாறாக யுத்தத்தினை முடிவிற்குக் கொண்டுவந்துவிட்டோம் என்று. கனரக ஆயுதங்களைப் பாவிப்பதை மட்டுமே நிறுத்தியிருக்கிறோம், ஆனால் இது யுத்த நிறுத்தம் அல்ல என்று இலங்கையரசு மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தது. அத்துடன், இன்னும் பத்து சதுரக் கிலோமீட்டர்கள் நிலப்பரப்பினுள் பதுங்கியிருக்கும் புலிகளின் தலைவரையும், அவரது நெருங்கிய தோழர்களையும் கொல்வதற்கான ராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெற்றுவருகிறதென்றும் அது தீர்க்கமாக அறிவித்திருந்தது".

"தனது மே மாதத்து 6 ஆம் 7 ஆம் நாட்களின் தில்லி விஜயத்தின்பொழுது இந்திய அதிகாரிகளுக்கு விளக்கமளித்த அமெரிக்கத் தூதர், பொருளாதார அழுத்தங்களை செலுத்துவதன் மூலம் போரின்பின்னரான சர்வதேச நாடுகள் இலங்கையில் நிவாரண வேலைகளை தொடர்வதற்கு இலங்கையைப் பணியவைக்கமுடியும் என்று கூறியிருந்தார்".

"அவர்களுக்குக் கட்டாயமாகப் பணம் தேவைப்படும், ஏனென்றால் இந்த யுத்தத்தில் பெருமளவு பணத்தினை இலங்கையரசு செலவழித்திருந்தது. அத்துடன், இந்தியாவின் பங்குபற்றிக் குறிப்பிடுகையில், இந்தியா பெருமளவு வளங்களை இப்போரில் ஈடுபடுத்தியிருந்தது, போரின் பின்னரான காலத்தில் இந்தியா ஆற்றப்போகும் பங்கு முக்கியமானது" என்றும் கூறியிருந்தார்.

“ ஆனால், போரின்போது இந்தியா கட்டிய அதீத ஈடுபாடும், போரின் போக்கினைத் தீர்மானிப்பதில் இந்தியா காட்டிய ஆர்வமும், போருக்குப் பின்னரான மீள்கட்டுமானம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் இந்தியா காட்டுமென்று தான் நம்பவில்லை என்றும் கூறியிருக்கிறார். அத்துடன், எதிர்காலத்தில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நகர்வுகளுக்கு இந்தியாவினை உட்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்".

முற்றும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தொடர்பில் மகிந்தவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை.

June 9, 2020

Subramania-swamy-mahinda.jpg

தமிழ் மக்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என தனக்கு நன்கு தெரியும் என இந்திய பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகரும் அந்;நாட்டின் ராஜ் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிபிபிட்டுள்ளார்.

எச்சரிக்கை நிலவிய சந்தர்ப்பங்களில் அவற்றை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளும் திறன் மகிந்த ராஜபக்ஸவிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2020/144603/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இந்தியாவுக்கு துதிபாடுவோர் மற்றும் சம்சும் வகையாறாக்கள் டக்ளஸ் போன்ற கழுத்தறுப்பாளர்களின் கைப்பொம்மைகளாகவும் கருத்துரைப்போராகவும்  இருப்பவர்கள்மற்றும்  சனநாயக முதுநிலைமானிகளாகக் காட்டிக்கொண்டு மக்களை கொன்றொழித்தவாறு காட்டாட்சி நடாத்துவதை சனநாயகம் என்றவாறு தமிழ்த் தேசிய எதிர்ப்பினை உமிழ்வோர் போன்ற கிந்திய நேசவுரிமைச் சக்திகள் இந்த கட்டுரையை சரியாக ஆய்வுசெய்து பார்பதனூடாக எதிர்காலத்திலாவது தெளிவான உரையாடல்களையும் தமிழினத்தின் கையறுநிலையிருந்து மீள்தலையும்  வலுப்படுத்த வேண்டிய தேடுதலுக்கு வழிபிறக்கலாம்.இந்த இடத்திலே இரண்டு பக்கமே உள்ளது . ஒன்று தமிழ்த் தேசியத்தைக் காப்பது. இரண்டாவது தமிழ் தேசியத்தை அழிப்போரோடு இருப்பது.

 கிந்தியக் கொலைகார நாசகார அரசு தனது முன்னைய தோல்விக்குப் பழிவாங்க  35-40இலட்சம் மக்கள் தொயைக்கொண்ட தமிழீழ தேசத்தவரோடு பின்கதவால் நின்று உருமறைப்புச் செய்து மோதியதை பார்க்கும்போது எவளவு கோளைத்தனமான அரசு என்பதைக் காட்டுகிறது. கேட்டால் இதனை  இராசதந்திரம் என்று வேறு சொல்லுவார்கள்.  தமிழினம் தன் அழிவிலிருந்து மீள வேண்டின் தனக்கான சரியான பாதையை கடந்துவந்த பட்டறிவின் வழி கண்டடைதலும் அரசியல் கட்சிகளைக் கடந்து ஒரு மக்கள் திரளாக எழுதலும் அவசியம் என்பதை மேலுள்ள கட்டுரை கற்பிக்கின்றது. 

ரஞ்சித் அவர்களே இணைப்புக்கு நன்றி! இந்தக் கட்டுரையின் மூலத்தை இணைத்தால் முழுமையாக வாசிக்கலாம்.

4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழ் மக்கள் தொடர்பில் மகிந்தவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை.

June 9, 2020

Subramania-swamy-mahinda.jpg

தமிழ் மக்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என தனக்கு நன்கு தெரியும் என இந்திய பிரதமரின் சிரேஸ்ட ஆலோசகரும் அந்;நாட்டின் ராஜ் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிபிபிட்டுள்ளார்.

எச்சரிக்கை நிலவிய சந்தர்ப்பங்களில் அவற்றை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளும் திறன் மகிந்த ராஜபக்ஸவிடம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://globaltamilnews.net/2020/144603/

இந்தக் கட்டுரைக்கு இதனை இணைத்ததன் மூலம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்.

1. மகிந்த நல்லவர். அவருக்கு வாக்குப்போடச் சொல்கிறீர்களா?

2. கொலைகார கிந்தியக் கூட்டுத்தின் எடுபிடியான் சு.சுவாமியின் குசும்புதனத்தை சொல்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நொச்சி,

இதோ நீங்கள் கேட்ட இணைப்பு.

 

https://www.thehindu.com/opinion/lead/How-India-kept-pressure-off-Sri-Lanka/article14950828.ece

 

இந்தியர்கள் தாமே திட்டமிட்டு இந்த யுத்தத்தினை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். எம்மில் பலர் சீனாவின் பக்கமும், அமெரிக்காவின் பக்கமும் கையைக் காட்டிக்கொண்டு நிற்கிறோம்.

ஆரம்பம் முதல், இறுதிவரை அது இந்தியா ...இந்தியா...இந்தியாதான்.

மேற்குலகும், அமெரிக்காவும் யுத்தநிறுத்தம் ஒன்றிற்கு முயன்றதும், பேச்சுவார்த்தை ஒன்றிற்கு முயன்றதும் உண்மையே. அமெரிக்க தூதரகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. அதையே ஹிந்துவும் வெளியிட்டது. புலிகளை அழித்தோம் என்று சந்தோசப்பட்டு எழுதும்போது, தம்மையறியாமலேயே இந்தியாவின் கோரமுகத்தினையும் காட்டிவிட்டார்கள். 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

வணக்கம் நொச்சி,

இதோ நீங்கள் கேட்ட இணைப்பு.

 

https://www.thehindu.com/opinion/lead/How-India-kept-pressure-off-Sri-Lanka/article14950828.ece

 

இந்தியர்கள் தாமே திட்டமிட்டு இந்த யுத்தத்தினை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். எம்மில் பலர் சீனாவின் பக்கமும், அமெரிக்காவின் பக்கமும் கையைக் காட்டிக்கொண்டு நிற்கிறோம்.

ஆரம்பம் முதல், இறுதிவரை அது இந்தியா ...இந்தியா...இந்தியாதான்.

மேற்குலகும், அமெரிக்காவும் யுத்தநிறுத்தம் ஒன்றிற்கு முயன்றதும், பேச்சுவார்த்தை ஒன்றிற்கு முயன்றதும் உண்மையே. அமெரிக்க தூதரகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. அதையே ஹிந்துவும் வெளியிட்டது. புலிகளை அழித்தோம் என்று சந்தோசப்பட்டு எழுதும்போது, தம்மையறியாமலேயே இந்தியாவின் கோரமுகத்தினையும் காட்டிவிட்டார்கள். 

 

 

 

யுத்தத்தோடு நிற்கவில்லையே ரஞ்சித்.
கடைசி நேரத்திலும் ராஜதந்திரத்தைப் பாவித்து ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை சகல போர் மரபுகளையும் மீறி இந்தியா தனது தனிப்பட்ட செல்வாக்கை வைத்து அத்தனை பேரையுமே சுட்டுக் கொன்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

யுத்தத்தோடு நிற்கவில்லையே ரஞ்சித்.
கடைசி நேரத்திலும் ராஜதந்திரத்தைப் பாவித்து ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு கொண்டு வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களை சகல போர் மரபுகளையும் மீறி இந்தியா தனது தனிப்பட்ட செல்வாக்கை வைத்து அத்தனை பேரையுமே சுட்டுக் கொன்றது.

உண்மைதான். இந்தியா எம்மை திட்டமிட்டே கருவறுத்தது. 

இந்தியாவின் துரோகம் வெளியே தெரியத் தெரிய, இவர்கள்மேல் வெறுப்பும், கோபமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

இந்தியா இல்லாமல், இலங்கையால் இப்போரில் நிச்சயமாக வென்றிருக்க முடியாது. எமது மக்களும், போராளிகளும், எமது தாயக விடுதலைப் போராட்டமும் முற்றாக அழிக்கப்பட ஒற்றைக்காரணம் இந்தியா.

தனிப்பட்ட பழிவாங்கலுக்காக எம்மை அழித்தது காங்கிரஸ், துணைபோனது தி மு க. 

மேனன் எழுதிய "தெரிவுகள்" எனும் புத்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பையும், தமிழக அரசியல்த் தலைவர்களின் யுத்தத்திற்கான ஆதரவையும் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். தேடிப்பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

ஆரம்பம் முதல், இறுதிவரை அது இந்தியா ...இந்தியா...இந்தியாதான்.

சகல தளபதிகள் உட்பட 300 பேர் ஒன்று சேர்ந்து நடத்த முயன்ற தாக்குதலையும் தடைசெய்யப்பட்ட இரசாயனங்களை பாவித்து அந்த சமரை நடாத்தியதும் இந்தியா தான்.

அந்த சமர் மட்டும் வெற்றிகரமாக நடந்திருந்தால் இன்று கதையே வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

சகல தளபதிகள் உட்பட 300 பேர் ஒன்று சேர்ந்து நடத்த முயன்ற தாக்குதலையும் தடைசெய்யப்பட்ட இரசாயனங்களை பாவித்து அந்த சமரை நடாத்தியதும் இந்தியா தான்.

அந்த சமர் மட்டும் வெற்றிகரமாக நடந்திருந்தால் இன்று கதையே வேறு.

ஆனந்தபுரம் சமரைச் சொல்கிறீர்களா? அச்சமர் தொடர்பான விபரங்களை உள்ளிருந்தவர்களே ராணுவத்திற்குச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கொல்லப்பட்ட தளபதிகள் தீபன் மற்றும் விதுஷா ஆகியோரது உடல்கள் கடுமையான எரிகாயங்களுடன் காணப்பட்டன. வெள்ளைப் பொஸ்பரஸ் எனும் கொத்தணிக் குண்டுகளோ அல்லது விஷவாயுவோ பாவித்துத் தாக்கியிருக்கிறார்கள். 

ராணுவத்தின் அணியொன்றினைச் சுற்றிவளைக்க முற்பட்ட சுமார் 1000 புலிகளை, ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியிருக்கிறது. 

எமது போராட்டம் தோற்றதற்குக் கருணா எனும் இனத்துரோகியின் பங்கும் கணிசமானது. 

Link to comment
Share on other sites

8 minutes ago, ஈழப்பிரியன் said:

சகல தளபதிகள் உட்பட 300 பேர் ஒன்று சேர்ந்து நடத்த முயன்ற தாக்குதலையும் தடைசெய்யப்பட்ட இரசாயனங்களை பாவித்து அந்த சமரை நடாத்தியதும் இந்தியா தான்.

அந்த சமர் மட்டும் வெற்றிகரமாக நடந்திருந்தால் இன்று கதையே வேறு.

 

3 minutes ago, ரஞ்சித் said:

ஆனந்தபுரம் சமரைச் சொல்கிறீர்களா? அச்சமர் தொடர்பான விபரங்களை உள்ளிருந்தவர்களே ராணுவத்திற்குச் சொல்லியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், கொல்லப்பட்ட தளபதிகள் தீபன் மற்றும் விதுஷா ஆகியோரது உடல்கள் கடுமையான எரிகாயங்களுடன் காணப்பட்டன. வெள்ளைப் பொஸ்பரஸ் எனும் கொத்தணிக் குண்டுகளோ அல்லது விஷவாயுவோ பாவித்துத் தாக்கியிருக்கிறார்கள். 

ராணுவத்தின் அணியொன்றினைச் சுற்றிவளைக்க முற்பட்ட சுமார் 1000 புலிகளை, ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியிருக்கிறது. 

எமது போராட்டம் தோற்றதற்குக் கருணா எனும் இனத்துரோகியின் பங்கும் கணிசமானது. 

தாக்குதலுக்கு புலிகள் தயாராகியதில் இருந்து அவர்கள் எந்தெந்த இடங்களில் இருந்து தாக்குகின்றார்கள், அணிகளின் பலம், எண்ணிக்கை வரைக்கும் செய்மதிகளின் துணைகொண்டு இலங்கை அரசுக்கு தகவல் அனைத்தும் வழங்கியது இந்தியா தான் என்று பொன்சேகா (அல்லது இன்றைய இராணுவத் தளபதியின் ஆங்கில நூலில்) ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

 

தாக்குதலுக்கு புலிகள் தயாராகியதில் இருந்து அவர்கள் எந்தெந்த இடங்களில் இருந்து தாக்குகின்றார்கள், அணிகளின் பலம், எண்ணிக்கை வரைக்கும் செய்மதிகளின் துணைகொண்டு இலங்கை அரசுக்கு தகவல் அனைத்தும் வழங்கியது இந்தியா தான் என்று பொன்சேகா (அல்லது இன்றைய இராணுவத் தளபதியின் ஆங்கில நூலில்) ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் என நினைக்கின்றேன்.

அதற்காகத் தானே இந்தியாவின் சவுத் புளக் தென்பகுதியில் பாரிய முகாமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

Link to comment
Share on other sites

27 minutes ago, ரஞ்சித் said:

உண்மைதான். இந்தியா எம்மை திட்டமிட்டே கருவறுத்தது. 

இந்தியாவின் துரோகம் வெளியே தெரியத் தெரிய, இவர்கள்மேல் வெறுப்பும், கோபமும் அதிகரித்துக்கொண்டே போகிறது. 

இந்தியா இல்லாமல், இலங்கையால் இப்போரில் நிச்சயமாக வென்றிருக்க முடியாது. எமது மக்களும், போராளிகளும், எமது தாயக விடுதலைப் போராட்டமும் முற்றாக அழிக்கப்பட ஒற்றைக்காரணம் இந்தியா.

தனிப்பட்ட பழிவாங்கலுக்காக எம்மை அழித்தது காங்கிரஸ், துணைபோனது தி மு க. 

மேனன் எழுதிய "தெரிவுகள்" எனும் புத்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பையும், தமிழக அரசியல்த் தலைவர்களின் யுத்தத்திற்கான ஆதரவையும் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். தேடிப்பாருங்கள். 

தென்னாசியாவில் இருக்கும் சின்னஞ்சிறு இனக்குழுமமான இலங்கைத் தமிழர்கள் அரசியல் ரீதியிலான போராட்டத்தினை அமைதி வழியில் எடுத்துச் சென்று கொண்டு இருக்கையில், அதை சுய நலத்துக்காக ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்து தன் சொல்லுக்கும் சுயநல அரசியலுக்கும் செவி சாய்க்கவில்லை என்பதற்காக எதிரியை வைத்தே பல்லாயிரக்கணக்கில் கொன்றழித்து சின்னாபின்னமாக்கி, எதிரியின் காலடியிலேயே கிடக்க வைத்த இந்தியாவின் மீதான கோபமும், ஆத்திரமும் அதை வெளிக்காட்ட முடியாத எம் இயலாமையும் வாழ் நாளில் என்றுமே தணியப் போவதில்லை. 

எந்த சூழ்ச்சியையும் புத்திக் கூர்மையும், திட்டமிடலும், செயலூக்கமும் கொண்ட தலைமையால் முறியடிக்க முடியும். ஆனால் இன்றிருக்கும் எம் தமிழ் தலைமைகளோ அந்த சூழ்ச்சிக்கு தம்மை தாமே மட்டுமல்லாமல் முழு இனத்தையும் தாரை வார்க்கும் தலைமையாகவே கிடப்பது மேலும் மேலும் சினத்தைத் தான் தருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டைம்ஸ் ஒf இந்தியா எனும் பத்திரிக்கையின் இந்திய பாதுகாப்புத்துறை கட்டுரையாளர் நிதின் கோக்லே எழுதிய கட்டுரையில் இந்தியா இலங்கை விமானப்படைக்கு வழங்கிய 5 எம் ஐ 17 ரக உலங்கு வானூர்திகள் இலங்கை ராணுவத்தின் ஆள ஊடுருவும் படையணிக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருந்ததாகவும், இந்த உலங்குவானூர்திகளின் செயற்பாட்டினாலேயே பல தளபதிகளைத் தாம் கொன்றதாகவும் இலங்கை கூறியிருக்கிறது.

அத்துடன், புலிகளின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில் குறைந்தது 10 கப்பல்களை இந்திய கடற்படையும் விமானப்படையும் நேரடியாகவே தாக்கியழித்ததாக நிதின் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல், புலிகளின் அனைத்து வழங்கற்பாதைகளையும் முடக்கியது இந்தியக் கடற்படையே என்றும் உரிமை கோரியிருக்கிறார்.

இவற்றினைப் படிக்கும்போது இந்த யுத்ததம் உண்மையாகவே இந்தியா நடத்திய யுத்தம்தான் என்பது புலப்படுகிறது. இலங்கை ராணுவம் வெறும் கருவியாகவே செயற்பட்டிருக்கிறது.

அக்கட்டுரையின் ஆங்கில வடிவத்தின் இணைப்பு கீழே.

https://timesofindia.indiatimes.com/india/India-behind-Lankas-victory-over-LTTE-Book/articleshow/4924585.cms

இறுதிப்போரில் காங்கிரஸ் கட்சியின் போர்முனைப்புகளுக்கு தமிழகத் தலைவர்களின் பங்களிப்புப் பற்றி சிவ்ஷங்கர் மேனன் தனது புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.....

 

"...............................பொதுமக்கள் பாதுகாப்பு வலயம் மீது இலங்கை ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்திக்கொண்டேயிருந்தது. அதேவேளையில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் உடனடியான யுத்த நிறுத்தம் ஒன்றிற்கான முயற்சிகளில் இறங்கியிருந்தன. அத்துடன், புலிகளின் தலைவர் பிரபாகரனை பத்திரமாக யுத்த களத்திலிருந்து வெளியேற்றி, புலிகள் முற்றாக அழிவதைத் தடுத்து, அவர்களின் சுதந்திரப் போராட்டம் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தொடர்ச்சியாக நடைபெறுவதே அந்த நாடுகளின் நோக்கமாக இருந்தது. ஆனால் தில்லியிலும், தமிழ்நாட்டிலுமிருந்த அரசியல்த் தலைவர்களைப் பொறுத்தவரையில், புலிகள் தப்பிக்க விடப்படுவதோ அல்லது பிரபாகரனை உயிருடன் விடுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு முடிவாக அன்று இருந்ததோடு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது பாதகமாக அமையும் என்பதையும் நாம் உறுதியாக நம்பினோம்.

தமிழகத்தில் இரு பிரதான கட்சிகள் உட்பட, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பொறுத்தவரையில் ஈழத்தை அடைவதற்கான பிரபாகரனின் போராட்டத்திற்கு தமிழகத் தலைவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பிற்குப் பிரபாகரன் அச்சுருத்தலாக இருப்பார் என்று நம்பினார்கள்.

மக்கள் முன்னால், தில்லியின் தமிழர் மீதான போருக்கு எதிரானவர்கள் என்று தமிழகத்தலைவர்கள் காட்டிக்கொண்டாலும்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தில்லியின் மத்திய அரசாங்கத்துக்குமிடையே மிகச் சுமூகமான உறவு நிலவி வந்ததுடன், புலிகளை முற்றாக அழிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்தே அன்று நிலவியது. பிரணாப் முகர்ஜீ மற்றும் நாராயணன் ஆகியோரது அயராத முயற்சியினால், தமிழக அரசியல்த்தலைவர்கள், கட்சி பேதமின்றி இப்போருக்குத் தமது ஆதரவினை தனிப்பட்ட ரீதியில் வழங்கியதோடு, என்னுடனான தனிப்பட்ட சந்திப்புகளில் எவ்விலை கொடுத்தாவது புலிகள் அழிக்கப்படவேண்டியதையும் வலியுறுத்தியிருந்தனர்.

ராஜீவ் காந்தியைக் கொன்றதுமுதல், தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பட்டு வந்ததுடன், இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இருந்த பொது எதிரியான புலிகளை அழிக்கவும் இந்த நிலைப்பாடு பெரிதும் உதவியது"

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

வணக்கம் நொச்சி,

இதோ நீங்கள் கேட்ட இணைப்பு.

 

https://www.thehindu.com/opinion/lead/How-India-kept-pressure-off-Sri-Lanka/article14950828.ece

 

இந்தியர்கள் தாமே திட்டமிட்டு இந்த யுத்தத்தினை முன்னின்று நடத்தியிருக்கிறார்கள். எம்மில் பலர் சீனாவின் பக்கமும், அமெரிக்காவின் பக்கமும் கையைக் காட்டிக்கொண்டு நிற்கிறோம்.

ஆரம்பம் முதல், இறுதிவரை அது இந்தியா ...இந்தியா...இந்தியாதான்.

மேற்குலகும், அமெரிக்காவும் யுத்தநிறுத்தம் ஒன்றிற்கு முயன்றதும், பேச்சுவார்த்தை ஒன்றிற்கு முயன்றதும் உண்மையே. அமெரிக்க தூதரகத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. அதையே ஹிந்துவும் வெளியிட்டது. புலிகளை அழித்தோம் என்று சந்தோசப்பட்டு எழுதும்போது, தம்மையறியாமலேயே இந்தியாவின் கோரமுகத்தினையும் காட்டிவிட்டார்கள். 

 

 

 

வ‌ண‌க்க‌ம் ர‌குநாத‌ன் அண்ணா ,
போரை முன் நின்று ந‌ட‌த்தின‌து இந்தியா தான் என்று த‌மிழ‌க‌த்தில் ப‌ல‌ருக்கு தெரியும் ,

போர் க‌ப்ப‌ல்க‌ள் அமெரிக்கா இல‌ங்கைக்கு குடுத்த‌தை  நாம் பார்த்து இருக்கிறோம் , 

பாக்கிஸ்தான் இல‌ங்கைக்கு ஆயுத‌த்தை அள்ளி குடுத்த‌து , ப‌ல் குழ‌ல் ஆயுத‌ம் பாக்கிஸ்தான்ட‌ ,

இறுதிக‌ட்ட‌ போரில் இந்தியாவின் ஆயுத‌ங்க‌ளும் இல‌ங்கை வ‌ந்த‌து , உல‌கில் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ கொத்து குண்டுக‌ள் இல‌ங்கைக்கு யார் குடுத்த‌து தெரியா ?

இறுதிக‌ட்ட‌ போரில் சீனாவின் ஆதிக்க‌ம் பெரிசா இல்லை , 

எல்லாம் க‌ள்ள‌ இந்திய‌ர்க‌ள்  தான் ந‌ம்ம‌வ‌ர்க‌ளை அழித்தார்க‌ள் , 

த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு தெரிந்த‌து எம்ம‌வ‌ருக்கு தெரியாத‌து வேத‌னை தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Water Under the Bridge என்று பதிவிட்டிருந்தேன். அதன் அர்த்தம் என்னவென்று புரிந்து தான் தூக்குனீர்களா, நிழலி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரஞ்சித் said:

தில்லியிலும், தமிழ்நாட்டிலுமிருந்த அரசியல்த் தலைவர்களைப் பொறுத்தவரையில், புலிகள் தப்பிக்க விடப்படுவதோ அல்லது பிரபாகரனை உயிருடன் விடுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு முடிவாக அன்று இருந்ததோடு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது பாதகமாக அமையும் என்பதையும் நாம் உறுதியாக நம்பினோம்.

தமிழகத்தில் இரு பிரதான கட்சிகள் உட்பட, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பொறுத்தவரையில் ஈழத்தை அடைவதற்கான பிரபாகரனின் போராட்டத்திற்கு தமிழகத் தலைவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பிற்குப் பிரபாகரன் அச்சுருத்தலாக இருப்பார் என்று நம்பினார்கள்.

மக்கள் முன்னால், தில்லியின் தமிழர் மீதான போருக்கு எதிரானவர்கள் என்று தமிழகத்தலைவர்கள் காட்டிக்கொண்டாலும்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தில்லியின் மத்திய அரசாங்கத்துக்குமிடையே மிகச் சுமூகமான உறவு நிலவி வந்ததுடன், புலிகளை முற்றாக அழிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்தே அன்று நிலவியது. பிரணாப் முகர்ஜீ மற்றும் நாராயணன் ஆகியோரது அயராத முயற்சியினால், தமிழக அரசியல்த்தலைவர்கள், கட்சி பேதமின்றி இப்போருக்குத் தமது ஆதரவினை தனிப்பட்ட ரீதியில் வழங்கியதோடு, என்னுடனான தனிப்பட்ட சந்திப்புகளில் எவ்விலை கொடுத்தாவது புலிகள் அழிக்கப்படவேண்டியதையும் வலியுறுத்தியிருந்தனர்.

ரஞ்சித் அவர்களே இணைப்புக்கு நன்றி!

மிகவும் ஆழமாக உற்று நோக்க வேண்டிய பகுதி. குறிப்பாகத் தமிழகத் திராவிடக் கட்சித் தலைமைகளின் துரோகத்தனத்தை  தமிழர்கள் கூறவில்லை. இந்திய நடுவனரசின் உளவாளிகள்(இவர்களை நான் ராசதந்திரிகளாகப் பார்க்கவில்லை) கூறுகின்றார்கள். ஏதோ ஒரு திரியில் திராவிடக் கட்சிகளின் கபடநாடகங்களைத் தியாகமாக சுட்டியோரால் மேனனிடமோ முகர்யீயிடமோ  விளக்கம் கேட்க முடியுமா?

தமிழினம் இதிலிருந்து  பாடங்களைக் கற்றுக்கொள்வது அவசியமாகும். வெறுமனே கிந்தியாவை நம்பி எமது உரிமைப் போராட்டத்தைத்  தற்போதைய தமிழ் தலைமைகளாகட்டும் எதிர்காலத் தமிழ் தலைமைகளாகட்டும்  அடகுவைக்காது உலகில் ஒடுக்கப்படும் இனங்கள் போராட்டங்களோடு தொடர்பாடலை ஏற்படுத்தி, சரியாகத் திட்டமிடுவதும் திடம் கொள்ளவதும் அவசியமானது. தொடர்ந்து ஏமாந்துகொண்டு தமிழினம் இருக்காது ஏமாற்றும் தலைமைகளை இனங்காண்பதோடு மதங்களை பிரதேசங்களைக் கடந்து மொழியால் ஒன்றுபட்ட சக்தியாக நிமிர்வோமாயின் எமது சுயநிர்ணய உரிமைப் போராட்டம் வெறறியை நோக்கி நகர்வதை சிங்கள அரசுகளால் தடுக்க முடியுமா?

Link to comment
Share on other sites

3 hours ago, நிழலி said:

தென்னாசியாவில் இருக்கும் சின்னஞ்சிறு இனக்குழுமமான இலங்கைத் தமிழர்கள் அரசியல் ரீதியிலான போராட்டத்தினை அமைதி வழியில் எடுத்துச் சென்று கொண்டு இருக்கையில், அதை சுய நலத்துக்காக ஆயுதப் போராட்டமாக மாற்றியமைத்து தன் சொல்லுக்கும் சுயநல அரசியலுக்கும் செவி சாய்க்கவில்லை என்பதற்காக எதிரியை வைத்தே பல்லாயிரக்கணக்கில் கொன்றழித்து சின்னாபின்னமாக்கி, எதிரியின் காலடியிலேயே கிடக்க வைத்த இந்தியாவின் ...

இது உண்மையா? அல்லது

4 hours ago, ரஞ்சித் said:

தனிப்பட்ட பழிவாங்கலுக்காக எம்மை அழித்தது காங்கிரஸ், துணைபோனது தி மு க. 

இது உண்மையா?

இரெண்டுமே உண்மையானால், எது பெருமளவில் காரணமானது?

Link to comment
Share on other sites

3 hours ago, நிழலி said:

எந்த சூழ்ச்சியையும் புத்திக் கூர்மையும், திட்டமிடலும், செயலூக்கமும் கொண்ட தலைமையால் முறியடிக்க முடியும். ஆனால் இன்றிருக்கும் எம் தமிழ் தலைமைகளோ அந்த சூழ்ச்சிக்கு தம்மை தாமே மட்டுமல்லாமல் முழு இனத்தையும் தாரை வார்க்கும் தலைமையாகவே கிடப்பது மேலும் மேலும் சினத்தைத் தான் தருகின்றது.

எந்த சூழ்ச்சியையும் முறியடிக்கத்தக்க புத்திக் கூர்மையும், திட்டமிடலும், செயலூக்கமும் கொண்ட தலைமை இன்று இல்லை என்று சினப்படுவது பயனற்றது. மாறாக, உங்களை போல சிந்திக்கும் சிலருடன் சேர்ந்து இந்த பிரச்சினையை விஞ்ஞான ரீதியாக திறந்த மனதுடன் ஆய்வு செய்து மக்களுக்கும் தலைவர்களுக்கும் தெளிவு படுத்துவது பயனுள்ளது. பேராசிரியர் திருநாவுக்கரசு  பெயர் போடாமல் சுகந்தம் வெளியீடு என்று பதிப்பிட்டு “இந்தியாவும் தமிழீழ விடுதலையும்” என்ற புத்தகத்தை 1985/86 ல் வெளியிட்டார். இந்திய இராணுவம் வந்து இறங்கும் என்று எழுதி இருந்தார். எம்மை அழிப்பார்கள் என்றும் எழுதினார். அது நடந்தது. அந்த நாட்களில் அவர் மட்டுமே எமது பிரச்சினை பற்றி PhD அளவுக்கு ஆய்வு செய்தவர். புலிகளுக்கும் ஆலோசகராக இருந்தார். இப்படி பலர் தேவை. இந்த களமே இதற்கு வழி செய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே ஊடாக நடந்த பேச்சுவார்த்தைகள் இணைத்தலைமை நாடுகள் என்று நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா இருந்தும், அவை எல்லாம் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலின்படிதான் நடந்தன. வன்னியில் புலிகளைச் சந்தித்தால் சமாதானத் தூதுவர்கள் டெல்லிபோய் இந்தியர்களுடன் பேசித்தான் பின் தம்நாட்டிற்குப் போவார்கள். 

இந்தியாவின் அருகில் இருப்பதால் இந்தியாவை வெட்டியாடி எதுவும் செய்யமுடிந்திருக்கவில்லை. முடிவில் இந்தியா புலிகளை அழிக்க எடுத்த முடிவுக்கு மேற்கு நாடுகள் ஒருமித்த ஆதரவைக்கொடுத்தன. இலங்கையில் சமாதானம் வர புலிகளைப் பலியாக்கினார்கள். கூடவே பல்லாயிரம் பொதுமக்களையும் பலிகொடுத்தார்கள். இந்த விலையெல்லாம் போரில் வென்ற சிங்கள அரசு ஒரு அரசியல் தீர்வுக்கு ஒத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் சிங்களவர்கள் மோடையர் இல்லை. சீனா பக்கம் சாய்ந்து இந்தியாவுக்கும், இணைத்தலைமை நாடுகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை மீறினார்கள்.

இன்றும் சர்வதேச நாடுகளால் சிங்கள அரசையோ, போரை முன்னின்று நடத்திய இராணுவத் தளபதிகளையோ ஒன்றும் செய்யமுடியவில்லை. இனியும் ஒன்றும் செய்யமுடியாத அளவிற்கு சிங்களவர்களின் இராஜதந்திரம் இருக்கின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

நோர்வே ஊடாக நடந்த பேச்சுவார்த்தைகள் இணைத்தலைமை நாடுகள் என்று நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா இருந்தும், அவை எல்லாம் இந்தியாவின் நிகழ்ச்சிநிரலின்படிதான் நடந்தன. வன்னியில் புலிகளைச் சந்தித்தால் சமாதானத் தூதுவர்கள் டெல்லிபோய் இந்தியர்களுடன் பேசித்தான் பின் தம்நாட்டிற்குப் போவார்கள். 

இந்தியாவின் அருகில் இருப்பதால் இந்தியாவை வெட்டியாடி எதுவும் செய்யமுடிந்திருக்கவில்லை. முடிவில் இந்தியா புலிகளை அழிக்க எடுத்த முடிவுக்கு மேற்கு நாடுகள் ஒருமித்த ஆதரவைக்கொடுத்தன. இலங்கையில் சமாதானம் வர புலிகளைப் பலியாக்கினார்கள். கூடவே பல்லாயிரம் பொதுமக்களையும் பலிகொடுத்தார்கள். இந்த விலையெல்லாம் போரில் வென்ற சிங்கள அரசு ஒரு அரசியல் தீர்வுக்கு ஒத்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையில்தான். ஆனால் சிங்களவர்கள் மோடையர் இல்லை. சீனா பக்கம் சாய்ந்து இந்தியாவுக்கும், இணைத்தலைமை நாடுகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை மீறினார்கள்.

இன்றும் சர்வதேச நாடுகளால் சிங்கள அரசையோ, போரை முன்னின்று நடத்திய இராணுவத் தளபதிகளையோ ஒன்றும் செய்யமுடியவில்லை. இனியும் ஒன்றும் செய்யமுடியாத அளவிற்கு சிங்களவர்களின் இராஜதந்திரம் இருக்கின்றது.

 

சிங்களத்தின் இராசதந்திரம் வரலாற்றுக்காலம் முதல் தெளிவானது. நன்றாக வெட்டியாடி நகர்வதில் வல்லோர்.  அரசென்ற வகையில் சிங்களவர்களை வெளிநாடுகளில் உள்ளஅரசறிவியற் கல்லூரிகளுக்கு அனுப்பிக் கற்பிக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இன்னும் எமது சட்டாம்பிமாரோடுதானே நிற்கின்றோம். புலத்திலே எமது பிள்ளைகளைக்கூட நாம் ஊக்குவிக்கவில்லைத்தானே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

 இந்திய இராணுவம் வந்து இறங்கும் என்று எழுதி இருந்தார். எம்மை அழிப்பார்கள் என்றும் எழுதினார். அது நடந்தது.

1984ஆம் ஆண்டு காலப்பகுதியில்  கிளிநொச்சி ஏ9 நெடுஞ்சாலையில் இருந்து  உதயநகர் நோக்கிச் செல்லும் சிற்றொழுங்கையால்  சென்று தொடருந்துத் தடத்தைக் கடந்து போகிறேன். ஒரு குடிசைக்குள் இருந்து பாடலொன்று கேட்கிறது.  பாடல் இப்படிப் போகிறது. 

                                                                                                   - ஈழத்திலே ரத்தவெள்ளம் 
                                                                                                     இந்தியாவும் சேர்ந்து கொள்ளும்
                                                                                                     அதிலே யேஆர் படகு செல்லும்.... -
பாடலைப் பாடிக்கொணடிருந்தவர் திரு சாந்தன். அந்தக் குடிசை   NLFT   என்ற அமைப்பின் முகாம் என்று பின்னாளில் அறிந்தேன். பலர் தெளிவாகச் சிந்தித்திருக்கிறார்கள் ஆனால் ஏன் வீழ்த்தப்பட்டோம் .!

Link to comment
Share on other sites

10 hours ago, கற்பகதரு said:

பேராசிரியர் திருநாவுக்கரசு  பெயர் போடாமல் சுகந்தம் வெளியீடு என்று பதிப்பிட்டு “இந்தியாவும் தமிழீழ விடுதலையும்” என்ற புத்தகத்தை 1985/86 ல் வெளியிட்டார். இந்திய இராணுவம் வந்து இறங்கும் என்று எழுதி இருந்தார். எம்மை அழிப்பார்கள் என்றும் எழுதினார். அது நடந்தது. அந்த நாட்களில் அவர் மட்டுமே எமது பிரச்சினை பற்றி PhD அளவுக்கு ஆய்வு செய்தவர். புலிகளுக்கும் ஆலோசகராக இருந்தார். இப்படி பலர் தேவை. இந்த களமே இதற்கு வழி செய்யலாம்.

 

9 hours ago, nochchi said:

1984ஆம் ஆண்டு காலப்பகுதியில்  கிளிநொச்சி ஏ9 நெடுஞ்சாலையில் இருந்து  உதயநகர் நோக்கிச் செல்லும் சிற்றொழுங்கையால்  சென்று தொடருந்துத் தடத்தைக் கடந்து போகிறேன். ஒரு குடிசைக்குள் இருந்து பாடலொன்று கேட்கிறது.  பாடல் இப்படிப் போகிறது. 

                                                                                                   - ஈழத்திலே ரத்தவெள்ளம் 
                                                                                                     இந்தியாவும் சேர்ந்து கொள்ளும்
                                                                                                     அதிலே யேஆர் படகு செல்லும்.... -
பாடலைப் பாடிக்கொணடிருந்தவர் திரு சாந்தன். அந்தக் குடிசை   NLFT   என்ற அமைப்பின் முகாம் என்று பின்னாளில் அறிந்தேன். பலர் தெளிவாகச் சிந்தித்திருக்கிறார்கள் ஆனால் ஏன் வீழ்த்தப்பட்டோம் .!

தெளிவான சிந்தனை என்ன நடக்க போகிறது என்பதை தெரிந்து கொள்வதுடன் மட்டுப்படுத்தப் பட்டு விட்டது. நடக்கப் போவதை எப்படி சாதகமானதாக்கலாம், அல்லது அதன் பாதகமான  விளைவுகளை எப்படி குறைக்கலாம் என்பது பற்றிய அறிவு,  தெளிவு குறைந்ததாகவே இருந்தது. பல முயற்சிகள் இடம்பெற்றன, ஆனால், அவை அனைத்தும்  பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக தவிர்க்க முடியாத நிலையில்   செய்யப்பட்ட முயற்சிகள். நடக்கப் போவதை எப்படி சாதகமானதாக்கலாம் என்பதற்கான வெற்றி பெறத்தக்க திட்டம் ஒன்று இருக்கவில்லை. இறுதியாக ஒரு திட்டம் உருவானது: அதுவே பிரேமதாசாவின் ஆதரவுடன் இந்திய இராணுவத்தை வெளியேற்றும் திட்டம். அது அரைவாசிக்கும் மேலாக வெற்றி பெற்ற திட்டம். அதன் தொடர்ச்சியாக உருவான இடைக்கால நிருவாகம், நிரந்தர நிருவாகமாக மாறாதது இந்த திட்டத்தின் தோல்வி கண்ட பாகமாகும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.