Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் சுமணரட்ன தேரர்! ஞானசாரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கும் சுமணரட்ன தேரர்! ஞானசாரரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

Report us Gokulan 4 hours ago

வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சொத்துகள் இல்லை, காணிகள் இல்லை என ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை நான் தேரர் என்ற வகையில் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன், அத்துடன் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஞானசாரதேரர் தெரிவித்த கருத்து தொடர்பாக தமிழ் பெற்றோர்களும் பிள்ளைகளும் வேதனையடைந்துள்ளனர். எனவே நான் தேரர் என்ற முறையில் மன்னிப்பு கேட்கின்றேன் . அதேவேளை ஞானசாரதேரர் மற்றும் சில தேரர்கள் சில சந்தர்ப்பங்களில் சில விடயங்களை வெளிப்படுத்தும் போது எங்கள் நாட்டில் வாழுகின்ற மக்களை கருத்தில் கொண்டு கருத்து தெரிவிப்பதில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

தமிழர்கள் அவர்களது பிரதேசங்களில் தங்களது அடையாளங்களை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இம் மக்களுக்கு இவ்வாறான கதையைக் கேட்கும்போது தங்களது சந்ததியினரின் எதிர்காலம் என்ன நடக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டதுடன் மீண்டும் மதவாத, இனவாத, வைராக்கியம் குரோதங்கள் ஏற்பட வழிவகுக்கும்.

நான் தேர்தலில் முன்னிற்பது இனவாத, மதவாதத்தை கிளர்ச்சியடையச் செய்வதற்கல்ல இந்த அப்பாவி மக்களை நிர்க்கதியாக்கும் எண்ணம் எனக்கில்லை. மக்களின் எதிர்கால சுபீட்சத்துக்கு என்ன செய்ய முடியும். இந்த நாட்டில் தயாரிக்கப்படும் கொள்கையின் அடிப்படையில் அந்த வேலைத்திட்டங்களுக்கு உதவிவழங்கி அடிமட்டத்திலிருந்து அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவதே இன்று அரசியலில் தேவையாகவுள்ளது.

தர்மத்தை எடுத்துக் கூறும் தேரர் என்ற வகையில் இம் மக்கள் மீண்டும் மீண்டும் இன்னல்களுக்கு முகம் கொடுக்காத வகையில் சில பொறுப்புக்களை கையில் எடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் தங்களது பிரதேசங்களில் தங்களுக்கான வேலைகளை உரிய முறையில் செய்து கொண்டு வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் தேவை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் எப்போதும் யுத்தம் செய்து கொண்டிருக்க முடியாது. ஒவ்வொருவரும் சிங்களம் தமிழ் என பிழைகளைக் கூறிக்கொண்டிருக்க முடியாது. தேர்தல் என்ற வகையில் எனக்கு 50 வீத மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உதவிகளை வழங்குகின்றதுடன் என்னை நாடாளுமன்றம் அனுப்பும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக நாடாளுமன்றம் சென்று நாட்டின் ஆட்சியாளரிடம் உண்மைவிடயங்களை கூறி இந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை இன, மத ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் அப்போது தான் என் கண்கள் மூடும்போது நிம்மதியாக மூடிக்கொள்ள முடியும்.

தேர்தலில் நிற்கும் ஏனைய வேட்பாளரிடம் கேட்பது என்னவென்றால் ஒவ்வொருவரைப் பற்றி அசிங்கப்படுத்த வேண்டாம். நாங்கள் மற்றவர்களை அசிங்கப்படுத்தும் போது நம்மை அசிங்கப்படுத்த அதிகமிருக்கின்றது எனவே இன்று யோசித்து மக்களுக்காக பாடுபடுங்கள்.

புதிய அரசியல் யாப்பை 30 வருடமாக தலையில் வைத்துக் கொண்டிருந்து சரியான முறையில் தீர்வை எட்டமுடியாமால் போயிற்று. தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது ஈழம் என்ற தனிநாடல்ல என்பதை நான் நன்கு அறிவேன். அம்மக்கள் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்றுக் கொள்வதற்கு இரண்டு கைகளையும் உயர்த்தி வாக்களியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/community/01/249221?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசார றேரர் ; 

நான் பிள்ளையைக் கிள்ளுறன்,

சுமணரட்ண தேரர்;

நான்   தொட்டிலை ஆட்டுறன். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

வடக்கு, கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சொத்துகள் இல்லை, காணிகள் இல்லை என ஞானசாரதேரர் தெரிவித்த கருத்தை நான் தேரர் என்ற வகையில் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன், அத்துடன் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தூசணப்பிக்கு என்ற பட்டப்பெயரால் பெருமைகொண்டவர்தான இந்த மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் என கேள்விப்பட்டுள்ளேன். இவர் என்ன தூசணத்தால் தனது எதிர்ப்பை வெளியிட்டிருப்பார்....?? 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கடவுளே...

எங்கண்ட தூசண பிக்கர், தேர்தலில் நிக்கிறார்.

வாக்குகளுக்காக.... விடுறார்... டிமிக்கா... 😎

3 hours ago, பெருமாள் said:

 

நான் தேர்தலில் முன்னிற்பது இனவாத, மதவாதத்தை கிளர்ச்சியடையச் செய்வதற்கல்ல இந்த அப்பாவி மக்களை நிர்க்கதியாக்கும் எண்ணம் எனக்கில்லை. மக்களின் எதிர்கால சுபீட்சத்துக்கு என்ன செய்ய முடியும். 

தர்மத்தை  தூசணத்தை எடுத்துக் கூறும் தேரர் என்ற வகையில் இம் மக்கள் மீண்டும் மீண்டும் இன்னல்களுக்கு முகம் கொடுக்காத வகையில் சில பொறுப்புக்களை கையில் எடுக்க வேண்டியுள்ளது. அவர்கள் தங்களது பிரதேசங்களில் தங்களுக்கான வேலைகளை உரிய முறையில் செய்து கொண்டு வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக நாடாளுமன்றம் சென்று நாட்டின் ஆட்சியாளரிடம் உண்மைவிடயங்களை கூறி இந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை இன, மத ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் அப்போது தான் என் கண்கள் மூடும்போது நிம்மதியாக மூடிக்கொள்ள முடியும்.

 

https://www.tamilwin.com/community/01/249221?ref=home-imp-parsely

 

Edited by Nathamuni

6 hours ago, பெருமாள் said:

தேர்தல் என்ற வகையில் எனக்கு 50 வீத மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உதவிகளை வழங்குகின்றதுடன் என்னை நாடாளுமன்றம் அனுப்பும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

வரும் தேர்தலில் சிங்கள-பௌத்த காடைத்தனத்தின் பின்னால் மட்டக்களப்பில் எத்தனை பேர் உள்ளனர் என்பது தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இந்த பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக நாடாளுமன்றம் சென்று நாட்டின் ஆட்சியாளரிடம் உண்மைவிடயங்களை கூறி இந்த மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திகளை இன, மத ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும் அப்போது தான் என் கண்கள் மூடும்போது நிம்மதியாக மூடிக்கொள்ள முடியும்.

 இதற்கு நீங்கள் பாராளுமன்றம் போய்த்தான் செய்யவேண்டும் என்கிற கட்டாயம் ஒன்றுமில்லை. நல்ல பிக்குவாக இன, மத பேதம் இல்லாமல் வாழ்ந்தாலே நீங்கள் கூறும் எல்லாம் ஏற்படும். 

பவுத்த துறவிகள் அரசியலில் ஈடுபட முடியாது என்று ஏதோ சொன்னார்கள். இவர்களோ தேர்தல் களை கட்டி உளறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கரண்ட் பில் கட்டவில்லை என்று, இணைப்பினை துண்டிக்க வந்த மின்சாரத்துறை அதிகாரிகளுக்கு கொடுத்த, சாத்து, அர்ச்சனையில் மட்டக்கிளப்பு பகுதியில் இப்போது மின் இணைப்பு துண்டிக்கும் வேலைக்கே யாருமே போவதில்லை. 🤪

பள்ளி, கோவில் எல்லாம் தொடுறதில்லை. பங்க்சலையில வெட்ட வந்திடியளோ... தொட்டு பாருங்கடா பாப்பம்... தெரியும் எண்ட வேலை...😜

அப்போதைய மின்துறை அமைச்சர் பவித்திராவுக்கும், அப்போதைய ஜனாதிபதிக்கும், பிக்கர் கொடுத்த தூசண அர்ச்சனையால், அவர் அன்று முதல், எம்மால் அன்புடன், 'தூசண பிக்கர்' என்று அழைக்கப்படுகின்றார்.

(ஒரு மேடையில் அம்மணி கொடுத்த லுக், அப்பவே... மகிந்தர் மனிசியை சும்மா, கோபத்தில், அலறவைத்தது.)

Champika and Pavithra at Dispute on Power Hike | Lanka on Globe

 

இவர் MP ஆக தேர்தெடுக்கப்பட்டால், பாராளுமன்றம் அலறும். மகிந்தர்.... காதை பொத்திக் கொண்டு ஓட்டம் பிடிப்பார் என்பதால் தூசண பிக்கருக்கே உங்கள் பொன்னான வாக்களிப்பீர். 

ஹெல்மெட் இல்லாமல் போனால்... தவறு தானே.

என்ன கோதாரியை போதிக்கிறாய்... நீயே ஒழுங்காக சட்டத்தினை மதிக்காமல்?

நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிடடால், சும்மா... எங்கண்ட தூசண பிக்கர், இனவாதி என்று சொல்வதில் அர்த்தமில்லை. :grin: 

போலீசு... இங்க... இவர் ஹெல்மெட் இல்லாமல் போறார்... ஏன் ஆளை பிடிக்காமல் இருக்கிறீர்கள்? சாதாரண மக்கள் என்றால் அமத்திப் பிடிப்பியலோ?

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Nathamuni said:

அப்போதைய மின்துறை அமைச்சர் பவித்திராவுக்கும், அப்போதைய ஜனாதிபதிக்கும், பிக்கர் கொடுத்த தூசண அர்ச்சனையால், அவர் அன்று முதல், எம்மால் அன்புடன், 'தூசண பிக்கர்' என்று அழைக்கப்படுகின்றார்.

(ஒரு மேடையில் அம்மணி கொடுத்த லுக், அப்பவே... மகிந்தர் மனிசியை சும்மா, கோபத்தில், அலறவைத்தது.)

Champika and Pavithra at Dispute on Power Hike | Lanka on Globe

 

இவர் MP ஆக தேர்தெடுக்கப்பட்டால், பாராளுமன்றம் அலறும். மகிந்தர்.... காதை பொத்திக் கொண்டு ஓட்டம் பிடிப்பார் என்பதால் தூசண பிக்கருக்கே உங்கள் பொன்னான வாக்களிப்பீர். 

பவித்திரா... மகிந்தரை பார்க்கிற 😍பார்வை.... 
சிலுக்கு சிமிதா... பார்க்கிற மாதிரியே இருக்கு.  🤩

வருகின்ற தேர்தலில்...  தூசண பிக்கருக்கே எனது வாக்கு.
அவரின் 🗣குரல்... மீண்டும் கேட்கத் தோன்றும், இனிமையான 🎼  மியூசிக் குரல். 😁

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

பவித்திரா... மகிந்தரை பார்க்கிற 😍பார்வை.... 
சிலுக்கு சிமிதா... பார்க்கிற மாதிரியே இருக்கு.  🤩

வருகின்ற தேர்தலில்...  தூசண பிக்கருக்கே எனது வாக்கு.
அவரின் 🗣குரல்... மீண்டும் கேட்கத் தோன்றும், இனிமையான 🎼  மியூசிக் குரல். 😁

Cxz.jpg

எனக்கு பார்வையிலே ஒரு காந்தம் தெரியுது தோழர்..👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.