Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை நடாத்த பொலிஸார் தடை: ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலை படுகொலையின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் அந்த நிகழ்வுகளை நடாத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

ssss.jpg

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006 ஆவணி 14 அன்று இலங்கை விமான படையினர் நடாத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யபட்டதின் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் நாடாத்தபடும் நிலையில் இவ்வருடம் நாளை காலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கபட்டு வந்த நிலையில் ஏற்பாட்டாளர்களை நேற்று (12.08.2020)பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த முடியாது எனவும் அவ்வாறு நடாத்தினால் கைது செய்ய படுவீர்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

என நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/87987

  • கருத்துக்கள உறவுகள்

ssss.jpg

செஞ்சோலை படுகொலை நினைவுகூரல் நிகழ்வை நடத்தத் தடை!

செஞ்சோலை படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.

முல்லைத்தீவு, வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி இலங்கை விமானப் படையினர் நடத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த தினத்தினை நினைவுகூர்ந்து வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டு சந்தியில் நினைவேந்தல் குழுவால் நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்தப்படும்.

அதற்கமைய இம்முறையும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இதனையடுத்து, ஏற்பாட்டாளர்களான ஈசன் மற்றும் ரூபன் ஆகியோரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த புதுக்குடியிருப்பு பொலிஸார், நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த உத்தரவை மீறி நிகழ்வை நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

http://athavannews.com/செஞ்சோலை-படுகொலை-நினைவுக/

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா வலியுறுத்தலை மீண்டும் மகிந்த கோத்தா கும்பல் மீறுகிறது. இந்தக் கும்பலின் தறுதலையாட்டத்தை சர்வதேசத்தின் சர்வதேச அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது.. புலம்பெயர் தமிழர்கள் உட்பட குறிப்பாக இளையோர் அமைப்புக்களின் உலகத்தமிழினத்தின் கடமையாகும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

ஐநா வலியுறுத்தலை மீண்டும் மகிந்த கோத்தா கும்பல் மீறுகிறது. இந்தக் கும்பலின் தறுதலையாட்டத்தை சர்வதேசத்தின் சர்வதேச அமைப்புக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது.. புலம்பெயர் தமிழர்கள் உட்பட குறிப்பாக இளையோர் அமைப்புக்களின் உலகத்தமிழினத்தின் கடமையாகும். 

நாடுகடந்த தமிழீழ அரசை நாடுவது பிரச்சனையாகுமா? 

4 hours ago, nedukkalapoovan said:

 புலம்பெயர் தமிழர்கள் உட்பட குறிப்பாக இளையோர் அமைப்புக்களின் உலகத்தமிழினத்தின் கடமையாகும். 

ஏன் இதெல்லாம் வெளி நாடுகளுக்கு தெரியாதா.....தூங்கிரவனை எழுப்பலாம்

Edited by Dash

2 hours ago, Dash said:

ஏன் இதெல்லாம் வெளி நாடுகளுக்கு தெரியாதா.....தூங்கிரவனை எழுப்பலாம்

தெரியும், நன்றாகவே தெரியும். இப்போது அவர்கள் கூடடணி சேர்ப்பதில் பிசியாக இருக்கிறார்கள். இதெல்லாம் அவர்களுக்கு பெரிய பிரச்சினையே இல்லை. நமது பக்கத்துக்கு ஊர்க்காரன் கூட சிங்களவனின் ஆதரவு கிடைத்தால் நம் பக்கம் திரும்பியும் பார்க்க மாடடான். எல்லோரும் தங்களுக்கு எதாவது ஆதாயம் இருந்தால் வருவார்கள். இல்லாவிட்ட்தால் நீ யாரோ, நான் யாரோ.

  • கருத்துக்கள உறவுகள்

தடையை மீறி செஞ்சோலை அஞ்சலி.!

VALLI.jpeg

கடந்த 2006ஆம் ஆண்டு இன்றைய நாளில் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி பாடசாலை மாணவர்கள் மற்றும் பணியாளர்களது 14 வது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்

இன்றைய நாளில் குறித்த படுகொலை நிகழ்வின் 14வது ஆண்டு நினைவு நிகழ்வு செய்வதற்கு புதுக்குடியிருப்பு பொலிசாரினால் தடை விதிக்கப்பட்ட போதிலும் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் செஞ்சோலை வளாகத்தில் உயிரிழந்த மாணவர்களின் 14ம் ஆண்டு நினைவு கொண்டு உறவினர்களால் கட்டங்கட்டமாக சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது

நிகழ்வு செய்வதற்கு போலீசார் முற்றாக தடை விதித்துள்ளதுடன் குறித்த பகுதிகள் எங்கும் ராணுவத்தினர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/08/80601/

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Dash said:

ஏன் இதெல்லாம் வெளி நாடுகளுக்கு தெரியாதா.....தூங்கிரவனை எழுப்பலாம்

நாம் தாம் எமக்கான கவயீர்ப்பை தொடர்ந்து செய்யனும். உலகம்.. எம்மை மட்டும் உற்றுநோக்கிக் கொண்டில்லை. நாம் தான் அதனை உற்று நோக்க வைக்க வேண்டும்.

வியட்நாம் போரை முடிவுக்கு கொண்டு வர ஒரு போட்டோ உதவியது.. அந்தளவுக்கு அது சர்வதேச மயப்பட்டதால் தான். அப்படிப் பல உதாரணங்கள். முயற்சியே செய்யாமல்.. இப்படி அவைக்கு தெரியாது.. தெரியுமா.. என்று எழுதிக் கொண்டிருப்பதால் மட்டும் எதை சாதிக்கப் போகிறோம்..???!

முயன்று தோற்றாலும்... வரலாறு உண்டு. ஆனால் முயற்சியே இன்றி.. எல்லாத்துக்கு தடையாக இருப்பது மட்டும்.. வீண். இதுவே இப்போ எம்மவர்களின் சோம்பேறி அணுகுமுறை ஆகிட்டுது. மற்றவர்கள் இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி எமக்குள் ஊடுருவி.. எம்மையே இன்னும் இன்னும் பலவீனப்படுத்துகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸ் தடையை மீறி செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!

IMG_20200814_123100.jpg?189db0&189db0

இலங்கை விமானப் படையால் நிகழ்த்தப்பட்ட முல்லைத்தீவு – செஞ்சோலை சிறுவர் இல்ல படுகொலையின் 14ம் ஆண்டு நினைவேந்தல் செஞ்சோலை வளாக வாயிலில் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று (14) காலை சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் இந்த நினைவேந்தலை அனுஷ்டித்தனர்.

இதன்போது பொலிஸாரால் நிகழ்வுக்கு தடை ஏற்படுத்தப்பட்ட போதிலும் அதனை மீறி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

  • FB_IMG_1597385475128.jpg?189db0&189db0
  • FB_IMG_1597385472977.jpg?189db0&189db0
  • FB_IMG_1597385470714.jpg?189db0&189db0

(பட உதவி – மதி)

 

https://newuthayan.com/பொலிஸ்-தடையை-மீறி-செஞ்சோ/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.