Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் உறவுகள் தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் – டக்ளஸ் அழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

புலம்பெயர் உறவுகள் தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் – டக்ளஸ் அழைப்பு!

நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்காக உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று( வியாழக்கிழமை) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ”பொருத்தமான சூழலை உருவாக்குவதல் மற்றும் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய நீண்ட கால கோட்பாட்டின் அடிப்படையில் தற்போது உருவாகியுள்ள அரசியல் சூழலை தமிழ் மக்களும் தமிழ் தரப்புக்களும் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திய போதிலும் தமிழ் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டோர் அவற்றை சரியாக கையாளவில்லை எனவும் இடைத் தரகர்கள் சிலர் தங்களுடைய குறுகிய நலன்களுக்காக புலம்பெயர் முதலீட்டாளர்களை தவறாக பயன்படுத்த முயற்சித்திருந்தனர் அமைச்சரினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், தற்போது நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில், ஜனாதிபதி   மற்றும் பிரதமர்  ஆகியோர் தவறான செயற்பாடுகள் எவற்றையும் அனுமதிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்ற நிலையில், அதற்கான உத்தரவாதத்தினை தன்னால் வழங்க முடியும் எனவும் தெரிவித்;தார்.

அத்துடன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புலம்பெயர் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில், தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் தமக்கிருக்கும் தார்மீக கடமையை உணர்ந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புலம்பெயர்-உறவுகள்-தாயக/

அது மட்டும் நடக்காது. அதுக்கு பல காரணங்கள் உண்டு.எழுத விரும்பவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Robinson cruso said:

அது மட்டும் நடக்காது. அதுக்கு பல காரணங்கள் உண்டு.எழுத விரும்பவில்லை.

கனக்க வேண்டாம்... ஒரு காரணத்தையாவது,  சொல்லுங்கோவன். :grin: 🤣

9 minutes ago, தமிழ் சிறி said:

கனக்க வேண்டாம்... ஒரு காரணத்தையாவது,  சொல்லுங்கோவன். :grin: 🤣

எதுக்கு வீண் வம்பு. உண்மையை எழுதினால் தமிழ் தேசியத்துக்கு எதிராக எழுதுகிறேன் என்று அப்படி இப்படி எல்லாம் எழுதுகிறார்கள்.

அதாவது அவல் என்று நினைத்து உரலை போட்டு இடிக்கிறார்கள். இனி இடித்தால் உலக்கை , உரல் இரண்டுமே உடைந்து போகும். வேணாம் சாமி.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்.. இவர் கப்பம் வாங்கவும்.. இலஞ்சம் வாங்கவும்.. பொக்கட்டுக்குள் போடவுமா. 

டக்கிளஸ் முதலில்.. ஆயுத அரசியலில்.. சிங்கள பெளத்த பேரினவாத எடுபிடி அரசியலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

தமிழர்களின் தாயகம் என்பதை வரையறுக்க வேண்டும்.

தமிழர்களின் தாயகத்தில்.. தமிழர்கள் தமது பொருண்மியத்தை அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்க வகை செய்ய வேண்டும்.

இவை இல்லாமல்.... சிங்கள பெளத்த பேரினவாதத்திற்கு அதன் அடக்குமுறைக்கு ஆக்கிரமிப்புக்கு தீனிபோட தமிழர்கள் முதலீடு செய்ய முடியாது. டக்கிளசுக்கு கப்பம் கொடுக்க.. மகிந்த கும்பலுக்கு கப்பம் கொடுக்க.. புலம்பெயர் தமிழர்கள் தயார் இல்லை.

வெளிநாட்டு முதலீட்டாளர்களே சொறீலங்காவில் தனிக்குடும்ப ஆட்சியை அடுத்து.. வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில்.. இந்த ஓநாய் எதற்கு ஊளையிடுகிறது என்பது வெளிப்படையாகும். 

Edited by nedukkalapoovan

2 hours ago, தமிழ் சிறி said:

கனக்க வேண்டாம்... ஒரு காரணத்தையாவது,  சொல்லுங்கோவன். :grin: 🤣

நான் ஒன்றும் எழுத தேவை இல்லை. இங்கு கருத்து எழுதுபவர்கள் அதட்கான பதிலை வழங்க தொடங்கிவிடடார்கள். இது போதுமா? இல்லை இன்னும் வேணுமா?

1 hour ago, nedukkalapoovan said:

 

வெளிநாட்டு முதலீட்டாளர்களே சொறீலங்காவில் தனிக்குடும்ப ஆட்சியை அடுத்து.. வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில்.. இந்த ஓநாய் எதற்கு ஊளையிடுகிறது என்பது வெளிப்படையாகும். 

வெளிநாட்டு முத்லீட்டாளர்கள் வெளியேறியதாக எந்த்வொரு இடத்திலையும் நான் பார்க்கவில்லையேவ்......!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவர்களால் தான் நாடு சிங்கபூராக மாறவில்லை என்றார்கள் பிறகு என்ன இப்ப அவர்களிடம்  டிசன்டா பெக் பண்ணினம்....அபிவிருத்தியை நீங்கள் செய்யுங்கோ மத்திய அரசுடன் இணைந்த்து....நீங்கள் மாநிலத்தில் முடிசூடா மன்னாக வலம் வரும் பொழுது நிச்சயம் அபிவிருத்திக்கு புலம் பெயர் மக்கள் கொட்டோ கொட்டு என கொட்டுவார்கள்.....நீஙகள் அள்ளோ அள்ளு என அள்ளிக்கொள்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

டக்கிளஸ் முதலில்.. ஆயுத அரசியலில்.. சிங்கள பெளத்த பேரினவாத எடுபிடி அரசியலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

இதிலிருந்து விலகி இவரால் வாழ முடியுமா? தண்ணியில்லாமல் வெறுந்தரையில்  மீன் வாழுமா??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Robinson cruso said:

அது மட்டும் நடக்காது. அதுக்கு பல காரணங்கள் உண்டு.எழுத விரும்பவில்லை.

கொஞ்சம் பிரயோசனமாக ஏதேனும் செய்யலாமே. 😀 

எழுதுங்கள். 🙏

6 minutes ago, Kapithan said:

கொஞ்சம் பிரயோசனமாக ஏதேனும் செய்யலாமே. 😀 

எழுதுங்கள். 🙏

கொஞ்சம் பொறுங்கள் . அவர்களாகவே எழுதுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Robinson cruso said:

கொஞ்சம் பொறுங்கள் . அவர்களாகவே எழுதுவார்கள்.

தமிழினத்துக்ககாக தமிழரின் ஒற்றுமையைவிட தமிழ்தேசியத்தை நினைப்பவர்களுக்கு எதிரான தமிழரின் ஒற்றுமைதான் வியக்க வைக்கிறது 🤔🤔🤔.  

பறவாயில்லை யமாயுங்கள் உங்கள் காட்டில் தானே எனி மழையே.

Just now, ragaa said:

தமிழினத்துக்ககாக தமிழரின் ஒற்றுமையைவிட தமிழ்தேசியத்தை நினைப்பவர்களுக்கு எதிரான தமிழரின் ஒற்றுமைதான் வியக்க வைக்கிறது 🤔🤔🤔.  

பறவாயில்லை யமாயுங்கள் உங்கள் காட்டில் தானே எனி மழையே.

தமிழ் தேசியம், தமிழர் ஒற்றுமை? எங்கே இருக்கிறது? அங்கிருந்து எழுதுவது இலகு. இங்கிருப்பவர்களுக்குத்தான் தெரியும் மக்களின் நிலைமை.

நாளுக்கு நாள் தமிழன் கீழே போகிறானே ஒழியே மேல வந்தது கிடையாது. இப்படியே போனால் தமிழன் இன்னும் கொஞ்ச காலத்தில் முஸ்லிமின் அடிமையாக மாறிவிடுவான்.

பிறகு தமிழ் தேசியம் எண்டு முஸ்லிமகளுக்கு எதிராகவும் ஒரு போராட்டம் தொடங்க வேண்டும். இப்போதே அந்த நிலைமை வந்து விட்ட்து.

அப்படி என்றால் உங்களைப்போல எல்லா தமிழனும் வசதி தேடி வெளிநாடு சென்றால் தமிழ் தேசியம் செழித்தோங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

தமிழ் தேசியம், தமிழர் ஒற்றுமை? எங்கே இருக்கிறது? அங்கிருந்து எழுதுவது இலகு. இங்கிருப்பவர்களுக்குத்தான் தெரியும் மக்களின் நிலைமை.

நாளுக்கு நாள் தமிழன் கீழே போகிறானே ஒழியே மேல வந்தது கிடையாது. இப்படியே போனால் தமிழன் இன்னும் கொஞ்ச காலத்தில் முஸ்லிமின் அடிமையாக மாறிவிடுவான்.

பிறகு தமிழ் தேசியம் எண்டு முஸ்லிமகளுக்கு எதிராகவும் ஒரு போராட்டம் தொடங்க வேண்டும். இப்போதே அந்த நிலைமை வந்து விட்ட்து.

அப்படி என்றால் உங்களைப்போல எல்லா தமிழனும் வசதி தேடி வெளிநாடு சென்றால் தமிழ் தேசியம் செழித்தோங்கும்.

எனது ஊரை பார்த்தவர் என்றால் இப்படி எழுத வராது. 😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.