Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகளை இணைத்து பயங்கரவாதத்தை தலைதூக்கச் செய்ய புலம்பெயர் தரப்பு முயற்சி- பாதுகாப்புச் செயலாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

முன்னர் இருந்தே சொல்லி வருவது
ஈழத்தமிழர்கள் தமிழீழம் வேண்டாம் என்றாலும் இந்தியா அமெரிக்காவுக்கு தேவை என்றால் பிறந்தே தீரும்.அதற்கேற்ற உலக சூழல் அனேகமாக அடுத்த 5 வருடத்தில் ஏற்படலாம்.
எல்லாம் எனது கனவே.
தமிழ்நாட்டில் இரண்டு பெரும் திராவிட கட்சிகளும் ஊழலுக்குள் அமிழ்ந்து வெளியே வர முடியாதவாறு இருக்கிறார்கள்.
பிஜேபி தமிழ்நாட்டை ஒரு சவாலாக எடுத்து காலடி வைக்கிறது போலவே தெரிகிறது.
2021 தேர்தலில் இதன் எண்ணக் கரு வெளியே தெரிய வரும்.

இப்போ உள்ள குழப்பம் இந்தி படிப்பதா சீன பாசை படிப்பதா?

சிங்களமும் படிக்கலாம். மன்டரினும் கற்கலாம். ஆனால் No Hindhi at all 😂

இதுதான் என்னுடைய நிலைப்பாடு. 😀

  • Replies 152
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Robinson cruso said:

இந்தியா தனது சுய நலத்துக்காக எதுவும் செய்யும். அங்குதான் தேசியவாதிகள் மாட்டிக்கொள்ளுகிறார்கள். போராளிகள் மாட்டிக்கொண்டதும் அங்குதான். தேசியவாதிகள், சைக்கிளில் போட்டியிடடவர்கள் இப்போது என்ன சொல்லுகிறார்கள். ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வாம், ஒற்றையாட்சியை ஏற்றுத்தான் சத்யபிரமணமாம். அவர்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாற்றுவார்களோ, நீங்கள்தான் எதனை காலத்துக்கு ஏமாறப்போகிறீர்களோ?

யார் இவர்களை நம்பியது ...? வீட்டின் தேசியவாதிகள் என்றாப்போல என்ன , இலங்கை பாராளுமன்றத்திற்கு போவதென்றால் ஒற்றையாட்சிற்கு உட்பட்டுத்தான் போகமுடியும் என்பது வாக்கு கேட்பவர்களுக்கும் தெரியும், வாக்கு போடுபவர்களுக்கும் தெரியும், எங்களுக்கு கூத்தமைப்பும் சரி கூட்டணியும் சரி ரெண்டுமே மோடு முட்டிகள் தான், ஒன்று எமக்காதரவான சக்திகள் என்று பேய்க்காட்டும் மற்றயது இந்தியாவை வைத்துக்கொண்டு பம்மும்,
ஆனால் கோக்குமாக்கில்  கூட்டணியை விட கூத்தமைப்பு ஒரு படி மேலே காரணம் அதனிடமிருக்கும் இந்திய Proxy அரசியல்வியாதிகள், இவையனைத்தையும் வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியவாதிகளை கோபித்து பயனில்லை, தமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்     

Just now, அக்னியஷ்த்ரா said:

யார் இவர்களை நம்பியது ...? வீட்டின் தேசியவாதிகள் என்றாப்போல என்ன , இலங்கை பாராளுமன்றத்திற்கு போவதென்றால் ஒற்றையாட்சிற்கு உட்பட்டுத்தான் போகமுடியும் என்பது வாக்கு கேட்பவர்களுக்கும் தெரியும், வாக்கு போடுபவர்களுக்கும் தெரியும், எங்களுக்கு கூத்தமைப்பும் சரி கூட்டணியும் சரி ரெண்டுமே மோடு முட்டிகள் தான், ஒன்று எமக்காதரவான சக்திகள் என்று பேய்க்காட்டும் மற்றயது இந்தியாவை வைத்துக்கொண்டு பம்மும்,
ஆனால் கோக்குமாக்கில்  கூட்டணியை விட கூத்தமைப்பு ஒரு படி மேலே காரணம் அதனிடமிருக்கும் இந்திய Proxy அரசியல்வியாதிகள், இவையனைத்தையும் வைத்துக்கொண்டு தமிழ்த்தேசியவாதிகளை கோபித்து பயனில்லை, தமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்     

தமிழ் தேசியவாதிகளும், போலி தமிழ் தேசியம் பேசும் அரசியல் வாதிகளும் என இரண்டு கூடடம் இருக்கின்றது. நான் எதிர்ப்பது தமிழ் தேசியம் பேசி , வயிறு வளர்க்கும் அரசியல்வாதிகளைப்பற்றியது. தமிழர்களை நாடு ரோட்டுக்கு கொண்டுவந்த அரசியல்வாதிகளைப்பற்றியது. கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் மக்கள் இப்போது விழித்துக்கொண்டார்கள்.

இந்தியாவுக்கு இப்போது மத்தலையும் இல்லை, கொழும்பு துறைமுகமும் இல்லை, திருகோணமலை குதங்களும் இல்லாமல் போகும் நிலைமை வருகின்றது. இப்போது அந்தமானுக்கு இந்தியா போய் துறைமுகம் அமைக்கப்போகிறார்கள். இங்கு இனி இந்தியாவுக்கு இடமில்லை. வடக்கிலும் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பிரச்சினைதான். ரோடு வேலை எல்லாம் சீனாவுக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

தமிழ் தேசியத்தை வாடகைக்கு எடுத்துவைத்து கூத்தாடும் இந்த கூத்தாடிகளைத்தான் சுளுக்கெடுக்க வேண்டும், கிழக்கு மாகாணம் இம்முறை சாம்பிள் காட்டியுள்ளது, மிகமுக்கியமாக நாம் செய்யவேண்டியது எமது அரசியல் அரங்கிலிருந்து இந்தியாவை அகற்றுவது , அதன் முதல் படியாக அதன் Proxy அரசியல் வியாதிகளுக்கு மரண அடி கொடுப்பது. தனது பிடி தளர்வதையும் சிங்களப்பக்கம் சீனாவின் பிடி இறுகுவதையும் பார்த்து இந்தியா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பவேண்டும்     

அக்னியும் நானும் என்றுமே ஒரே கருத்தை கொண்டிருப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு மேலே உள்ள கருத்து பெரும் ஆச்சரியமாக உள்ளது. கிழக்கு மட்டுமல்ல - வடக்கும் தான். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதி கூடிய வாக்குகளை பெற்ற அங்கஜன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கை சின்னத்தில் போட்டியிட்டவர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2020 at 16:32, Kapithan said:

உண்மை. 

 

பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் என்ன செய்திருக்கலாம் 
அது என்ன விளைவை உண்டு பண்ணியிருக்கும்?
என்று சற்று சுருக்கமாகவும் 

இவை ஏதும் ஏன் குர்திஸ் இன மக்களுக்கு இதுவரை நிகழவில்லை 
என்பதையும் 
தயவு செய்து உங்களால் எழுத முடியுமா?

வாசித்து தவறுகள் இனியும் நடக்காது நடந்துகொள்ளவத்துக்காக கேட்க்கிறேன் 

On 18/8/2020 at 09:12, tulpen said:

புலிகள் வீழ்ந்ததில்  பெரும் பங்கு வகித்தது பேச்சுவார்ததை காலத்தில் புலிகளின் அரசியல்துறை எடுத்த பல தவறான முடிவுகள் தான். பேச்சுவார்ததை காலத்தில் பல உலக ராஜதந்திரிகளுடன் நெருங்கி பழக சிறந்த வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம்  உலக நாடுகளின் தமிழீழம் தொடர்பான எண்ணக்கருவை நாடி பிடித்து அறியவும் அதன் மூலம் சில நெகிழ்வுத்தன்மையையும் செய்திருக்கலாம். அதன் மூலம் தமிழீழம் என்ற இலக்கு உடனடியாக அடையமுடியமல் பின் தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் இலக்கு நோக்கி மெதுவாக முன்னே நகரக் கூடிய சாத்தியக் கூறு இருந்தது.  

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஈகத்திலும் வீரம் மிகு போராட்டத்திலும் எனக்கு மிகுந்த மரியாதை  உண்டு. ஆனால் அவர்களின் தவறுகளை மறைப்பதன் மூலம் அந்த மரியாதையை காட்ட முனைவது வெறும் ஈகோவாக தான் இருக்கும். அந்த ஈகோ மனப்பான்மை புலிகளின் கொள்கைகளை எடுத்து செல்ல உதவாது. மாறாக எதிர்மறையான விளைவுகளையே தரும்.  

இதுதான் விட்ட பிழை. உங்கள் கருத்து சரியானதே.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

 

இந்தியாவுக்கு இப்போது மத்தலையும் இல்லை, கொழும்பு துறைமுகமும் இல்லை, திருகோணமலை குதங்களும் இல்லாமல் போகும் நிலைமை வருகின்றது. இப்போது அந்தமானுக்கு இந்தியா போய் துறைமுகம் அமைக்கப்போகிறார்கள். இங்கு இனி இந்தியாவுக்கு இடமில்லை. வடக்கிலும் வரும் காலங்களில் இந்தியாவுக்கு பிரச்சினைதான். ரோடு வேலை எல்லாம் சீனாவுக்குத்தான்.

கச்சதீவை திரும்பி தரும்படி கேட்பார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
On 17/8/2020 at 20:31, கற்பகதரு said:

ஊர்ப்பக்கம் போகாமல் கடுப்பேறி, தேசியம் பேசுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்களோ என்ற பயம்தான்.

இங்கிருக்கும் யாருக்குமே திரும்ப சண்டை என்று சொன்னால் சொன்னவனுக்கு மேல்மாடியில்லை  என்றுதான் பார்ப்பார்கள் உங்களுக்கும் உங்கள் சிங்கள எஜமானர்களுக்கும் தான்  இப்போ அவசர அவசரமாய் புலிச்சண்டை  தேவையாயிருக்கு .சண்டை நேரம் இருந்த சிங்கள அரசியல்வாதிகளில் எல்லாருமே உலகப்பணக்காரர் வரிசையில் வந்து விட்டினம்  உங்க ஊரில் செவென் லெவெனில் இரவு நித்திரை முழித்து கஷ்ட்டப்பட்டு வேலைசெய்தசிங்களவன்  எல்லாம் இப்ப பில்லியனர். 

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் என்று சொல்லுவது இந்தியாவாக இருக்குமோ இந்தியாவை நேரடியாக குற்றம் சாட்டாமல் புலம்பெயர்ந்தவர்களை குற்றம் சாட்டுகிறார் போலும் கமல்குணம்

சிறிலங்காவில் 1971 ஆம் ஆண்டு ஜெ.வி.பி கிளர்ச்சி உருவாகுவதற்கு பின்புலமாக இருந்தது  சீனாவாக (மாவோ) த்தான் இருக்கவேண்டும் அது தோல்வியில் முடிவடைய,புதிய உக்தியை கடை பிடிக்க தொடங்கியது அரசுகளுக்கு கடன் கொடுத்து அரசுகளை வளைத்து போடுதல் அது நன்றாகவே வேலை செய்கின்றது...சீனா முன்பு தனது பக்கமாக நாடுகளை ஈர்க்க புரட்சிவாதிகளை உருவாக்கி கொண்டிருந்தது அது வெற்றியளிக்கவில்லை ,

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

1) பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் என்ன செய்திருக்கலாம் 
அது என்ன விளைவை உண்டு பண்ணியிருக்கும்?
என்று சற்று சுருக்கமாகவும் 

2) இவை ஏதும் ஏன் குர்திஸ் இன மக்களுக்கு இதுவரை நிகழவில்லை 
என்பதையும் 
தயவு செய்து உங்களால் எழுத முடியுமா?

வாசித்து தவறுகள் இனியும் நடக்காது நடந்துகொள்ளவத்துக்காக கேட்க்கிறேன் 

என்னைப்பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் அழிவு என்பது அவர்கள் ""கொண்ட கொள்கைக்கு நேர்மையாக இருத்தல்"" என்ற கோட்பாட்டினால் ஏற்பட்டதாகவே கருதுகிறேன். 

1) பேச்சுவார்த்தைக் காலத்தில் புலிகள் ஏதாவது(?) ஒரு தீர்வுக்கு ஒத்துளைத்திருக்கலாம். இதன் அர்த்தம் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுதல் என்பதல்ல. ஏனென்றால் போராட்டம் ஒன்றை தொடர்ந்து நடாத்துவதற்கு போராட்ட உணர்வைத் தக்க வைத்தல் என்பது இன்றிய்மையாதது. அத்துடன் நேர்மையான, கொண்ட கொள்கைக்கு தன்னை ஒப்படைக்கும் தலைமை  மிக முக்கியம்.. 

சற்று கற்பனை செய்துபாருங்கள். பேச்சுவார்த்தை வெற்றிபெற்றிருந்தால் எமது நிலை எவ்வாறு இருந்திருக்கும்🤥

பிரபாகரன் மாதிரியான ஒரு தலைமை உயிரோடு இருந்திருந்தால் நாம் எத்தனை வருடங்கள்தானும் போராட்ட உணர்வை அடைகாத்து வைத்திருந்திருக்கலாம் அல்லவா 👍

2) குர்திஸ் இனத்துடனோ அல்லதி வேறு போராட்டங்களுடனோ எமது போராட்டத்தை ஒப்பிடுவது நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. ஒவ்வொரு கலாச்சாரங்களும் அதன் நம்பிக்கைகளும் வேறுபட்டவை. ஒவ்வொரு போராட்டங்களும் வேறுபட்டவை. ஒவ்வொன்றுடன் பிறிதொன்றை ஒப்பிடிவது முறையற்றது. போராட்டத்தை / போராட்ட உணர்வை தக்கவைத்தல்தான் இன்றியமையாதது. 

ஓடுமீன் ஓடி உறுமீன் வரும்வரை வாடி வதங்கி காத்திருக்குமாங் கொக்கு

 

3 hours ago, putthan said:

கச்சதீவை திரும்பி தரும்படி கேட்பார்கள்....

நான் நினைக்கவில்லை அது ஒரு இலகுவான காரியமாக இருக்குமென்று. இந்திரா அம்மையாரின் காலத்தில் அது வழங்கப்பட்டு  இலங்கையுடன் இணைக்கப்பட்டு விட்ட்து. அதை திருப்பி கேட்பதட்கு சீனாவை கரணம் காடட முடியாது. பொருளாதார ரீதியாக இலங்கை உதவி செய்யவில்லை, அல்லது இந்தியாவை அழைத்தபோது அவர்கள் முதலீடு செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

On 17/8/2020 at 23:57, கற்பகதரு said:

அப்ப கபிதான் சொல்லும்  றோ .... பொய்யா? அப்படி ஒன்றுமில்லையா ?

 நீங்கள் சொன்னால், கபிதான் சொன்னமாதிரி. கபிதான் சொன்னால், நீங்கள் சொன்னமாதிரி நம்பி. விட்டோமே! 

Edited by satan
duplicate message

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 

 நீங்கள் சொன்னால், கபிதான் சொன்னமாதிரி. கபிதான் சொன்னால், நீங்கள் சொன்னமாதிரி நம்பி. விட்டோமே! 

சாத்தான் 🙂

உங்கள் அப்பாவித்தனத்தை(ஏமாளித்தனத்தை) நினைக்க பாவமாக இருக்கிறது. ☹️

கருத்தாடலுக்கும் கருத்தாடும் ஆட்களைப் பந்தாடுவதற்கும் வேறுபாடு இருக்கிறது 😂. அதாவது...

உதைபந்தாட்டத்தில் திறமையான விளையாட்டு வீரனை எதிர்கொள்ள முடியாமல் பந்திற்குப் பதிலாக அவனுடைய காலுக்கு அடிப்பதற்கு ஒப்பானது (உ)ஒங்கள் கரு(பந்)த்தாடல்  முறை.

இவ்வாறான செயற்பாட்டை Foul Play என்று கூறுவார்கள்(உதைபந்தில்) 😂

Soccer / Football தெரியுமோ மோனுக்கு ? இல்லாட்டி Line ல் நின்று ""அடியடா அடியடா அவன்ர காலுக்கு அடியடா"" என்று கத்தும் கோஸ்ரியா நீங்கள் 😀

(நகைச்சுவையாகத்தான் கூறினேன். மோனே கோவிச்சுப்போடாதயடா😉)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் கோவிச்சுக்கக்கூடாது, இருவரின் ஆட்டமுறையும் ஒரு  பாசறையில் பயின்றதுபோல் உள்ளது.  அதைத்தான் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, satan said:

நீங்களும் கோவிச்சுக்கக்கூடாது, இருவரின் ஆட்டமுறையும் ஒரு  பாசறையில் பயின்றதுபோல் உள்ளது.  அதைத்தான் சொன்னேன்.

எங்கள் இருவரின் ஆட்டமும் நிச்சயமாக ஒரே விதமாக இல்லை. ஆனால் ஆட்டத்தின் நோக்கம் பெரும்பாலும்  ஒரே நோக்கத்தை / இலக்கைக் கொண்டிருக்கலாம். 👍

ஆனால் நீங்கள் ஆடவேண்டியது அட்களையல்ல, விளையாட்டை. முடிந்தால் வெட்டியாடுங்கள். உங்கள் திறமையைக் காட்டுங்கள். யாருடைய ஆட்டம் சரியான இலக்கை நோக்கியிருக்கிறதென்று பார்க்கலாம். அதற்காக காலுக்கு அடிக்காதீர்கள். அது ஆட்டத்திலீடுபடும் இருவருக்கும் நன்மை பயற்காது. காயங்கள்தான் ஏற்படும். 😉

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2020 at 11:24, Robinson cruso said:

நாடு ரோடில் கொண்டு வந்து விடுவதுதானா தேசியம். நாங்கள் தமிழ் தேசியம் பேசுவதில்லை. தமிழ் தேசியம்  பேசுபவர்கள்தான் இதட்கு விளக்கமளிக்க வேண்டும்.

வங்காலையான், பின்வரும் எனது கேள்விகளுக்கு தாங்கள் விடையளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

1. உண்மைத்தேசியம் மற்றும் போலித்தேசியம் என்று நீங்கள் சொல்வதன் அர்த்தங்களைத் தயவுசெய்து இங்கு விளக்கமுடியுமா? அவ்வாறே இவ்விரண்டு தேசியங்களிலும் இன்று யார் யார் இயங்குகிறார்கள் என்று நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள் என்பதையும் பட்டியலிட முடியுமா?

2. இன்று நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் எந்தத் தேசியத்தில் பயணிக்கிறார்கள்?

3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று செயற்படும் சுமந்திரன் எந்தத் தேசியத்தைப் பின்பற்றுகிறார்

4. நீங்கள் தமிழ்த்தேசியம் இல்லையென்றால், நீங்கள் பின்பற்றும் தேசியம் என்ன? 

5. அல்லது இவை எதுவுமேயில்லாமல் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நடைபெற்ற இனக்கொலைக்கான நீதிவேண்டியும், நிரந்தர அரசியல் தீர்வொன்றிற்காகவும் இன்றுவரை போராடும் தமிழர்களை இழிவுபடுத்த மாத்திரமே "தேசியம்". "போலித்தேசியம்" ஆகிய சொற்றொடர்களை தவறாமல் உங்களின் ஒவ்வொரு கருத்திலும் பதிந்துவருகிறீர்களா? 

4 minutes ago, ரஞ்சித் said:

வங்காலையான், பின்வரும் எனது கேள்விகளுக்கு தாங்கள் விடையளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

1. உண்மைத்தேசியம் மற்றும் போலித்தேசியம் என்று நீங்கள் சொல்வதன் அர்த்தங்களைத் தயவுசெய்து இங்கு விளக்கமுடியுமா? அவ்வாறே இவ்விரண்டு தேசியங்களிலும் இன்று யார் யார் இயங்குகிறார்கள் என்று நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்கள் என்பதையும் பட்டியலிட முடியுமா?

 தமிழர்களை நாடு ரோடில் கொண்டு வந்ததுதான் போலி தமிழ் தேசியம். உண்மையான இலங்கையானாக இருப்பதுதான் தேசியம்.

2. இன்று நீங்கள் மக்கள் பிரதிநிதிகளாக, தலைவர்களாக ஏற்றுக்கொண்டுள்ள கருணா, பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்கள் எந்தத் தேசியத்தில் பயணிக்கிறார்கள்?

ஐக்கிய இலங்கைக்குள் இலங்கையனாக இருப்பது என்று நினைக்கிறேன் . அவர்களிடம்தான் கேட்க வேண்டும்..

3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று செயற்படும் சுமந்திரன் எந்தத் தேசியத்தைப் பின்பற்றுகிறார். 

அதை அவரிடம் கேட்டுப்பாருங்கள் அல்லது உங்கள் விருப்பப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.

4. நீங்கள் தமிழ்த்தேசியம் இல்லையென்றால், நீங்கள் பின்பற்றும் தேசியம் என்ன? நான் இலங்கையனாக  சீவிக்க விரும்புகிறேன். தமிழ் தேசியம் சிங்கள தேசியம் எல்லாம் இல்லை..

5. அல்லது இவை எதுவுமேயில்லாமல் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், நடைபெற்ற இனக்கொலைக்கான நீதிவேண்டியும், நிரந்தர அரசியல் தீர்வொன்றிற்காகவும் இன்றுவரை போராடும் தமிழர்களை இழிவுபடுத்த மாத்திரமே "தேசியம்". "போலித்தேசியம்" ஆகிய சொற்றொடர்களை தவறாமல் உங்களின் ஒவ்வொரு கருத்திலும் பதிந்துவருகிறீர்களா? 

இழிவு படுத்த வேண்டுமென்பதல்ல எனது எண்ணம். போலி தமிழ் தேசியம் பேசி தமிழர்களை எல்லாம் பிச்சைக்காரர்களாக மாற்றிவிடடார்களே என்பதுதான் ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசி தமிழர் பிரதேசங்கள் எல்லாம் சிங்கள பிரதேசங்களாக மாற்றிவிடடார்களே என்பதுதான் எனது ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசி மக்களை எல்லாம் முள்ளிவாய்க்கால் கடலுக்குள் தள்ளி விடடார்களே என்றும் ஆதங்கம். போலி தமிழ் தேசியம் பேசிய அவர்கள் எல்லாம் சொகுசு வாழக்கை வாழுவதை காணும்போது ஒரு ஆதங்கம். இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், இனப்பிரச்சினைக்கு நீதி வேண்டும் என்று போலியாக போராடுகிறார்களே அவர்களை காணும்போதும் ஆதங்கம்.இப்படியாக நிறைய ஆதங்கங்களை எழுதலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Robinson cruso said:

 

இதைத்தான் எதிர்பார்த்தேன்.

உங்களின் சுயரூபத்தினை எல்லோரும் அறிந்துகொள்ளவே இக்கேள்விகளைக் கேட்டிருந்தேன். மறைக்கமுடியாமல் உண்மையினை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். உங்களைப் போல பலர் இன்னும் இருக்கிறார்கள்

Just now, ரஞ்சித் said:

இதைத்தான் எதிர்பார்த்தேன்.

உங்களின் சுயரூபத்தினை எல்லோரும் அறிந்துகொள்ளவே இக்கேள்விகளைக் கேட்டிருந்தேன். மறைக்கமுடியாமல் உண்மையினை ஒத்துக்கொண்டுவிட்டீர்கள். உங்களைப் போல பலர் இன்னும் இருக்கிறார்கள்

போலி தமிழ்  தேசியம் பேச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொல்ல அச்சமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Robinson cruso said:

போலி தமிழ்  தேசியம் பேச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையை சொல்ல அச்சமில்லை.

ஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் "இலங்கையனாக"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே "இலங்கையனாக" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள். 

சிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை. 

Just now, ரஞ்சித் said:

ஜூட், கற்பகதரு, ஆகியோரின் கருத்துக்களும் உங்களது கருத்தும், அதாவது சிங்களத்துடன் ஐக்கியப்படுவது, உங்களின் பாஷையில் சொல்வதானால் "இலங்கையனாக"( இலங்கையன் என்பது பெளத்த சிங்களவர்களை மட்டுமே குறிக்கிறதென்பது தெரிந்தும்கூட) அச்சொட்டாக அப்படியே இருப்பது ஏனென்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் கேட்கிறேன் என்றால், தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்கள இனத்தினுள் உள்வாங்கப்படுவது அவசியம் என்று 2009 யுத்தம் முடிந்தவுடன் ஜூட் என்பவர் எழுதிவந்தார், நீங்களும் அதனையே "இலங்கையனாக" எனும் பதத்தின்மூலம் சொல்ல விழைகிறீர்கள். 

சிலவேளை நீங்கள் எல்லோரும் ஒரே ஆள்த்தானோ என்கிற ஐய்யம்தான் , வேறொன்றுமில்லை. 

கடவு சீட்டு, மத்த சீட்டு, அந்த சீட்டு, இந்த சீட்டு எல்லாவற்றிலும் ஸ்ரீலங்கன் , இலங்கையன் எண்டு எழுத தெரியும் , இப்பமட்டும் இலங்கையன் எண்டவுடன் எதோ போலி தமிழ் தேசியத்தை காட்டி கொடுத்து விட்ட்தாக எழுதுகிறீர்கள். நாங்கள் உண்மையான முகத்தை காட்டுபவர்கள். உங்களைப்போல போலி முகம், போலி தேசியம் எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Robinson cruso said:

நாங்கள் உண்மையான முகத்தை காட்டுபவர்கள். உங்களைப்போல போலி முகம், போலி தேசியம் எல்லாம் போட வேண்டிய அவசியம் இல்லை

இலங்கையில் இருப்பது இரண்டு தேசியங்கள் மட்டும்தான். ஒன்று தமிழ்த் தேசியம் மற்றையது சிங்களத் தேசியம். இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை. அப்படியொன்று இருந்தால், அதுவே போலித்தேசியம். ஏனென்றால், பிறப்பாலும், பேசும் மொழியாலும், வாழும் தாய்நிலத்தாலும்  தமிழனாகவும், அரசியலால் சிங்களவனாக, மன்னிக்கவேண்டும் "இலங்கையனாகவும்" இருப்பதென்பது சுத்தமாக, கடைந்தெடுக்கப்பட்ட போலித்தேசியம் என்பது எனது எண்ணம். ஏனென்றால், ஒரு தேசியத்தில் பிறந்து, இன்னொரு தேசியத்தில் தானாகவே விரும்பி உள்வாங்கப்பட்டு, இறுதியில் இரு தேசியங்களுக்கும் இல்லாமல் அடையாளம் தொலைத்து நிற்கும் தேசியமே நீங்கள் இன்றிருக்கும் தேசியம், போலித்தேசியம். கச்சிதமாகப் பொருந்துகிறது உங்களுக்கு. 

இவ்வளவு நேரமும் நான் தேடிவந்த போலித்தேசியத்திற்கான உண்மையான விளக்கத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

2 minutes ago, ரஞ்சித் said:

இலங்கையில் இருப்பது இரண்டு தேசியங்கள் மட்டும்தான். ஒன்று தமிழ்த் தேசியம் மற்றையது சிங்களத் தேசியம். இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை. அப்படியொன்று இருந்தால், அதுவே போலித்தேசியம். ஏனென்றால், பிறப்பாலும், பேசும் மொழியாலும், வாழும் தாய்நிலத்தாலும்  தமிழனாகவும், அரசியலால் சிங்களவனாக, மன்னிக்கவேண்டும் "இலங்கையனாகவும்" இருப்பதென்பது சுத்தமாக, கடைந்தெடுக்கப்பட்ட போலித்தேசியம் என்பது எனது எண்ணம். ஏனென்றால், ஒரு தேசியத்தில் பிறந்து, இன்னொரு தேசியத்தில் தானாகவே விரும்பி உள்வாங்கப்பட்டு, இறுதியில் இரு தேசியங்களுக்கும் இல்லாமல் அடையாளம் தொலைத்து நிற்கும் தேசியமே நீங்கள் இன்றிருக்கும் தேசியம், போலித்தேசியம். கச்சிதமாகப் பொருந்துகிறது உங்களுக்கு. 

இவ்வளவு நேரமும் நான் தேடிவந்த போலித்தேசியத்திற்கான உண்மையான விளக்கத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி.

இப்படியே போலி தேசியம் பேசி பேசி வாயிலே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளுங்கள். அப்போ உங்கட கடவு சீட்டில், அந்த சீட்டில், இந்த சீட்டில் உள்ள ஸ்ரீலங்கன், இலங்கையனுக்கு என்ன நடந்தது? ஈழம் எண்டு எழுதுவீங்களோ? சும்மாபுலுடா விடாதிங்க ஐயா. பிரயோசனமா மக்களுக்கு எதையாவது செய்யப்பாருங்க.

முள்ளிவாய்க்காலில் ஈழம் எடுப்பதாக சத்தியப்பிரமாணம், கொழும்பில் ஒற்றையாட்ச்யில் இருப்போம் என சத்தியப்பிரமாணம். யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Robinson cruso said:

இப்படியே போலி தேசியம் பேசி பேசி வாயிலே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ளுங்கள். அப்போ உங்கட கடவு சீட்டில், அந்த சீட்டில், இந்த சீட்டில் உள்ள ஸ்ரீலங்கன், இலங்கையனுக்கு என்ன நடந்தது? ஈழம் எண்டு எழுதுவீங்களோ? சும்மாபுலுடா விடாதிங்க ஐயா. பிரயோசனமா மக்களுக்கு எதையாவது செய்யப்பாருங்க.

முள்ளிவாய்க்காலில் ஈழம் எடுப்பதாக சத்தியப்பிரமாணம், கொழும்பில் ஒற்றையாட்ச்யில் இருப்போம் என சத்தியப்பிரமாணம். யாரை ஏமாத்த பார்க்கிறீர்கள்.

நீங்கள் வாழும் கனவுலகுதான் போலித்தேசியம். உண்மையில் அப்படியொன்று இருப்பதாக நான் நினைக்கவில்லை. சொந்த லாபங்களுக்காக உங்களின் இன அடையாளத்தினை அழித்து, எமதினத்தினை அழித்தவனுடன் சங்கமமாகப் பார்க்கிறீர்கள் பாருங்கள், அதுதான் போலித்தேசியம். 

எனது கடவுச்சீட்டில் இலங்கையன் என்று இல்லை. இன்று இலங்கையென்றால் சிங்கள பெளத்தர்களுக்குச் சொந்தமான நாடு மட்டும்தான், ஏனையவர்கள் விரும்பினால் வாழலாம் என்ற நிலை வந்துவிட்டபின்னர் என்னை இலங்கையனாக அடையாளப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாக நான் நினைக்கவில்லை.  ஏனென்றால், எனது இனத்தில் லட்சக்கணக்கானவர்களைக் கொன்ற சிங்கள இனவாதிகளிடமிருந்து நான் எதனையும் எதிர்பார்க்கவில்லை. 

தமிழ்த்தேசியம் இன்று கேட்கும் எம்மீதான அட்டூழியங்களுக்கான நீதியும், உண்மையான அரசியல் தீர்வும், எமது தாயகத்தில் நாமே எம்மை ஆளும் உரிமையும் போலியானவை அல்ல. இவற்றின் அடிப்படையிலேயே தமிழரின் அரசியல் இதுவரையில் நடந்துவருகிறது, இனிமேலும் அப்படித்தான். இவற்றினைத் தவிர்த்து, இவற்றினைப் புறந்தள்ளி, ஏளனம் செய்து நடத்தப்படும் அரசியல் தமிழினத்தின் இருப்பிற்கெதிரான சிங்கள பெளத்த அரசியல்தான். இன்று நீங்கள் ஆதரிப்பதும் அதனைத்தான். ஆனால், அதனைச் சொல்லமுடியாமல் நியாயமான தமிழர்களின் அரசியலைப் போலியென்று ஏளனம் செய்கிறீர்கள்.

சொந்த இனத்தினை விற்று வயிறு வளர்க்கும் உங்களை நீங்கள் தாராளமாக இலங்கையன் என்றோ அல்லது "போலித் தேசியவாதி" என்றோ அழைத்துக்கொள்ளலாம், அதில் தவறேதுமில்லை. அந்தத் தகுதிக்கு நீங்கள் முற்றிலும் உரித்துடையவர்தான்.  நேரத்திற்கொருமுறை பெயர்களையும், கொள்கைகளையும் மாற்றி வலம்வரும் உங்களின் தேசியம் போலியானதென்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

போலி தேசியவாதிகள், தேசியம் என்று உதட்டளவில் பேசி பின்பக்கத்தில் சிங்களவருடன் கூடிக்குலாவி கொழும்பில் இருந்து பணம் பார்ப்பவர்கள். இவர்களுக்குள் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற பல சுயநலவாதிகள் இருக்கின்றார்கள்.

ஆனால் தமிழ் தேசியத்தில் நம்பிக்கையுள்ள பெருமளவிலான மக்கள், தங்கள் அரசியல் உரிமைகளுக்காக 70 வருடங்களுக்கு மேலாக காத்திருக்கின்றார்கள்.

தமிழ்த் தேசியம் என்பது தமிழனாக மொழி மீது பற்றுக்கொண்டு வாழ்வது.    தெரிந்த மொழியைக்கொண்டு சகல கருமங்களையும் ஆற்றுவதோடு,  வேலைவாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் சரிசமமான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்வது.

தென்னாபிரிக்கா போன்று நிற, மத மொழி பேதங்களுக்கு அப்பால் தென்னாபிரிக்கன் என்று உணர்வது நெல்சன் மண்டேலாவின் ஆட்சியோடு ஆரம்பித்தது.  அப்படி இலங்கையில் இலங்கைத் தேசியம் என்று ஒன்றில்லை.  சிங்களவர்களின் மொழி, மத ஆதிக்கம்,  சிறுபான்மை இனங்களுக்கு எதிரான வன்மமான போக்கு, வடக்கு-கிழக்கை சிங்கள மயப்பப்டுத்தல், பெளத்த மயப்படுத்தல் இவை எல்லாம் தமிழ் மக்களையோ, முஸ்லிம்களையோ “நாம் இலங்கையன்” என்று உணர்வால் பெருமைப்படச் செய்யப்போவதில்லை.

அப்படி பெருமைப்படக்கூடியவர் முதுகெலும்பில்லாத, கூழைக்கும்பிடுபோட்டு தனது இருப்பை தக்கவைக்கும் அடிமை மனப்போக்கு உள்ளவர்கள் மட்டும்தான். 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.