Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கவில்லை: இராஜதந்திரமே நடந்தது- செல்வம் எம்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கவில்லை: இராஜதந்திரமே நடந்தது- செல்வம் எம்.பி.

     by : Litharsan

Selvam-Adaikkalanathan.jpg

கடந்த அரசாங்கத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முண்டுகொடுக்கவில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூட்டமைப்பு தமிழரின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இராஜதந்திர முயற்சியையே மேற்கொண்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கம் தேசியத் தலைவருடையது. அந்த உருவாக்கத்தில்தான் நாம் எல்லோரும் பயணித்தோம். அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராகவே உள்ளது.

இவ்வாறு கூட்டமைப்பின் ஜோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ரவிராஜ் போன்ற உறுப்பினர்கள் உயிரைக் கொடுத்த வரலாறு உள்ளது. இவ்வாறு பல நெருக்குதல் சூழ்நிலைகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருந்தது. ஆனால், இந்த வரலாறுகளை மக்களுக்கு நாம் சொல்வதில்லை.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த ஐந்து ஆண்டுகள் அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்தது என்று சொல்கிறார்கள். ஆனால், கடந்த அரசாங்கத்தில் அரசியல் சாசன திருத்தங்கள் சம்பந்தமாக நிறைய விடயங்கள் நடந்தன.

அது நடைமுறைக்கு வராதபோதும், அது சம்பந்தமான எழுத்து மூலமான நகல் ஐ.நா. வரைக்கும் சாட்சி சொல்லக்கூடிய வகையில் பெறப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் இருக்கும் அரசியல்வாதிகள் எவராக இருந்தாலும், புத்த பிக்குகளாக இருந்தாலும் யாருமே இனப் பிரச்சிகைக்குத் தீர்வைத் தரமாட்டர்கள் என்ற வரலாற்றை எழுத்துமூலமாக நாம் பெற்றுள்ளோம். இதனை நாம் சர்வதேசத்துக்கு சாட்சிபகிர முடியும்.

எனவே, நாம் முண்டுகொடுக்கவில்லை. எமது அரசியல் நடவடிக்கைகள் வெல்லப்பட வேண்டும் என்பதற்காக சில விடயங்களுக்கு ஆதரவு தெரிவித்தோம். இவ்வாறு ஆதரவு தெரிவிக்கும்போது கம்பரெலிய போன்ற பல விடயங்களும் முன்னெடுக்கப்பட்டன.

அதேபோல, இன்றைக்கு உள்ளதுபோல் அப்போது இராணுவ சோதனைச் சாவடிகள் இருக்கவில்லை. முக்கியமாக ஜனநாயக வழியில் போராடிய தியாகி திலீபனுடைய அஞ்சலி நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடையுத்தரவு போடுகின்றன.

அதைப்போல, கடந்த ஆண்டுகளில் எழுச்சியாக மாவீரர் துயிலுமில்லங்களில் நடைபெற்ற நினைவுகூரல் நிகழ்வுகளை இம்முறை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையுள்ளது.

மேலும், கடந்த அரசாங்கத்தில் பல போராட்டங்கள் நடந்தன. இப்போது போராட்டங்கள் நடந்தால் எந்தப் பிரிவுகளில் என்ன பிரச்சினை வரும் என்று தெரியாது.

ஆகவே, கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு இராஜதந்திர நகர்வை செய்ததே தவிர யாருக்கும் முண்டுகொடுக்கவில்லை.

இதேவேளை, நாம் மக்களைக் குறைசொல்ல முடியாது, ஏனென்றால் கூட்டமைப்புக்குள்ளே சண்டை, விடுதலைப் போராட்டத்தை சிலர் ஆதரிக்காத போக்கு போன்றவை கூட்டமைப்பு மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தன. இதற்கு இன்னொரு காரணம், கூட்டமைப்பின் நகர்வுகளை நேரடியாக நாம் மக்களுக்குச் சொல்லவில்லை.

என்றாலும், ஒரு சிலதைத் தவிர கூட்டமைப்புக்கு கிடைக்காத ஆசனங்கள் தேசியத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கே கிடைத்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/கடந்த-அரசாங்கத்துக்கு-மு/

இரண்டு கோடி ஏன் கொடுக்கப்பட்டது ஏன வாங்கப்பட்து என விளக்கம் சொன்னால் நல்லாய் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மிக சிறந்த ராய தந்திரி..👍

IMG-20200918-155753.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கேக்கிறவன் கேனையன் என்றால்.... 🐃எருமை மாடு, ஏரோப்பிளேன் ✈️   ஓடினது... என்று சொல்வானாம்.

Edited by தமிழ் சிறி

On 18/9/2020 at 18:34, தமிழ் சிறி said:

கேக்கிறவன் கேனையன் என்றால்.... 🐃எருமை மாடு, ஏரோப்பிளேன் ✈️   ஓடினது... என்று சொல்வானாம்.

கேட்டுக்கெண்டிருப்பது கேணயர்கள் தானே அல்லது இவர்களை நம்பி பாராளுமன்றம் இந்த முறை அனுப்பியிருப்பார்களா? இன்னும் பல தமிழ் மக்கள் விழித்தெழ இருக்கு. இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் தமிழ் தேசிய பொது அரசியலுக்கு. அதற்கு இப்பவே வித்திட்டால் 10 வருடங்களுக்கு பிறகாவது நல்ல முன்னேறமிருக்கும்

இராஜதந்திரமே நடந்தது. நிச்சயமாக. அவர்கள் மிக இராஜதந்திரமாக நடந்துகொண்டார்கள் . அவர்கள் மிக கச்சிதமாக தமிழர் வாழ்வில் நிரந்தரமான தீர்வுக்கு எதையும் செய்யாமல் தம்மை சர்வதேசத்தில் இருந்து காப்பாற்ற ஆகக்குறைந்த விடயங்களில் விட்டுக்கொடுப்பை காட்டினார்கள். இல்லாவிடில் ஆட்சி மாறின அடுத்தகணமே எல்லாம் தலைக்கீழாக மாறியிருக்கமாட்டாது. அவர்களது கட்சிகாரர்களே இன்று விடாமல் இனத்துவேசத்தை கக்குகிறார்கள். 

உங்கள் இராஜதந்திரம் அவ்வளவு உறுதியானது என்றால் ஒரு தூதரகமாவது இந்த விடயத்தில் தமது நிலைப்படடை உங்கள் சார்பில் அரசுக்கு சொல்லியுள்ளார்களா ? நீங்கள் மீண்டும் ஆனந்தசங்கரி மாதிரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி, அதில எல்லாரும் கையெழுத்து போடுற படம் எடுத்து எங்களுக்கு காட்ட வேண்டிய அளவுக்கு உங்களது காற்றிலே போன இராஜதந்திரம்!

நேர்மையோடு உங்களை வலுப்படுத்த பாடுபட்டவர்களை பட்டம்  சூட்டி புறம்தள்ளிவிட்டு நீங்கள் அவர்கள் வெட்டிய குழியில் விழுந்ததுதான் மிச்சம். ஓரிருவர் சேர்த்து உங்களுக்கு ஆமா போடுபவர்களையும் வைத்து கொண்டு விடயங்களை நகத்தினீர்கள். தீர்மானகளையும் அதன் விளைவுகளையும் சமகாலத்தில் ஆராய்ந்து எமது நகர்வுகளில் மாற்றம் செய்ய மறுத்தீர்கள். பலருடன் கலந்தாலோசித்து  கருத்துக்களை உள்வாங்கி திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த கூடிய கட்டமைப்புகளை கட்சிக்குள் உருவாக்க மறுத்தீர்கள் அல்லது அவை செயல் வடிவம் பெறாமல் தடை போடுவதில் காலத்தை வீணாக்கினீர்கள். இன்றும், இவ்வளவு நடந்தபின்னும் பலவற்றை சுயபரிசோதனை செய்யவிடாமல் நியாயப்படுத்துவதில் மிக மும்மரமாக உள்ளீர்கள். இதே பாணியில் தான் நீங்கள் பயணிப்பீர்கள் என்று அடம் பிடித்தால் விளைவுகளும் அப்படித்தான் இருக்கும். இன்று எவ்வாறு பலஸ்தீன விவகாரம் நீத்து போயுள்ளதோ அதே விளைவு அடுத்த பத்தாண்டுக்குள் தமிழருக்கு நடந்துவிடும். அவ்வளவே. 

  • கருத்துக்கள உறவுகள்

இதுகள நம்பி ஒரு கூட்டம் இருக்கிறது 😉😉

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுகள நம்பி ஒரு கூட்டம் இருக்கிறது 😉😉

இன்னும் ஒரு வருடம் கொஞ்சம் இருக்கும்.

இவர் எல்லாம் பிழைப்புக்காக அரசியல் செய்பவர். இதை விடடால் வாழ வேறு வலி இல்லை. அல்லது இதை விடடால் செய்யும் தொழிலுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே மக்கள் விழித்தெழும் வரைக்கும் இவர்களது காட்டில் மழைதான். மக்கள் உசார் மடையர்களாக இருக்கும்வரையும், கேணையர்களாக இருக்கும்வரைக்கும் இதே கதைதான். வன்னி மக்கள் எப்போது விழித்தெழுவார்களோ அப்பபோதுதான் இவர்களுக்கு ஆப்பு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொன்னதுபோல கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத அறிவிலிகள். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் களையப்படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

இவர்கள் களையப்படவேண்டும். 

அதேதான் இந்த முதியவர்கள் அனைவரும் களையப்பட்டால்  கட்சி உருப்பட வாய்ப்புள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.