Jump to content

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!


Recommended Posts

   போராட்டம் தவிர தனிப்பட காழ்புணர்வுகளாலும்  மனிதாபிமானம் கொஞ்சம் கூட  இல்லாமலும்  கொலைகளைச் செய்ததில் எல்லா இயக்கத்திற்கும் பங்கு உள்ளது. சிலது அதிகம்.  சிலது குறைவு என்பதை தவிர அதில் எந்த வித்தியாசமும் இல்லை. அப்படி கூடிக் குறைந்ததற்கு அதைச் செய்யக்கூடிய பலம் காரணமாக இருந்ததே தவிர மனிதாபிமானமோ குற்ற உணர்வோ காரணமாக இருக்கவில்லை என்பது இங்கு கருத்தாடும் நாம் உட்பட அனைத்து தமிழ் மக்களும் அறிந்த உண்மை. 

இதற்கான வாழும் சாட்சியங்கள் இன்றும் பல உண்டு. பொது வெளியில் வரத பல விடயங்களை நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல மனிதர்களை எழுமாறாக நாம் சந்திக்கும் போது அறிந்து கொள்ள முடியும். இங்கு பலர் கேட்பது போல் அனைத்து உண்மைகளும் வெளிவருமானால் நாம் மதிப்பு வைத்திருக்கும் பலரின் கைகளில் அப்பாவிகளின் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைவோம். போராட்ட  நியாயத்தின் பால் இந்த அநீதிகளை சகித்து வாழ்ந்த இனமே எமது இனம் என்பதே உண்மை.

இதே கிருபன் புளொட்டின்  உட்கொலைகள் பற்றி இணைத்த பதிவுக்கு யாரும் ஆதாரமும் கேட்கவில்லை பழசை கிளறக்கூடாது என்று அறிவுரையும் கூறவில்லை என்பது ஆச்சரியமல்ல.  

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

   போராட்டம் தவிர தனிப்பட காழ்புணர்வுகளாலும்  மனிதாபிமானம் கொஞ்சம் கூட  இல்லாமலும்  கொலைகளைச் செய்ததில் எல்லா இயக்கத்திற்கும் பங்கு உள்ளது. சிலது அதிகம்.  சிலது குறைவு என்பதை தவிர அதில் எந்த வித்தியாசமும் இல்லை. அப்படி கூடிக் குறைந்ததற்கு அதைச் செய்யக்கூடிய பலம் காரணமாக இருந்ததே தவிர மனிதாபிமானமோ குற்ற உணர்வோ காரணமாக இருக்கவில்லை என்பது இங்கு கருத்தாடும் நாம் உட்பட அனைத்து தமிழ் மக்களும் அறிந்த உண்மை. 

இதற்கான வாழும் சாட்சியங்கள் இன்றும் பல உண்டு. பொது வெளியில் வரத பல விடயங்களை நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல மனிதர்களை எழுமாறாக நாம் சந்திக்கும் போது அறிந்து கொள்ள முடியும். இங்கு பலர் கேட்பது போல் அனைத்து உண்மைகளும் வெளிவருமானால் நாம் மதிப்பு வைத்திருக்கும் பலரின் கைகளில் அப்பாவிகளின் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைவோம். போராட்ட  நியாயத்தின் பால் இந்த அநீதிகளை சகித்து வாழ்ந்த இனமே எமது இனம் என்பதே உண்மை.

இதே கிருபன் புளொட்டின்  உட்கொலைகள் பற்றி இணைத்த பதிவுக்கு யாரும் ஆதாரமும் கேட்கவில்லை பழசை கிளறக்கூடாது என்று அறிவுரையும் கூறவில்லை என்பது ஆச்சரியமல்ல.  

இதே கிருபன் புளொட்டின்  உட்கொலைகள் பற்றி இணைத்த பதிவுக்கு யாரும் ஆதாரமும் கேட்கவில்லை பழசை கிளறக்கூடாது என்று அறிவுரையும் கூறவில்லை என்பது ஆச்சரியமல்ல.  

ஒருவர் தனது வாழ்வை எழுத்துவத்துக்கும் 

ஒருவர் எழுந்த மாத்திரத்தில் வாந்தி எடுப்பதுக்கும் 
உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா? தெரியாது போல நாடகம் போடுகிறீர்களா?

திலீபன் நல்லூரில் நின்றுகொண்டு ஆயிரம்பேரை சுட்டார் என்றால் 
வாசிக்கும் நீங்கள் சந்திர மண்டலத்தில் இருந்ததுபோல் நாடகம் போடலாம் 
மற்றவரும் ஏன் நாடகம் போட வேண்டும்.?

கிருபனுக்கு இந்த கட்டுரையில் என்ன பொய் இருக்கிறது என்பதை 
எல்லாம் சுட்டி காட்டி மேலே எழுதி இருக்கிறேன் அப்போ தனிமனித தாக்குதல் செய்து 
தன்னை அறிவு சுடராக காட்ட முனைந்த இதே கிருபன் 
இப்போ நந்தன்  எழுதி விட்டாரம் தான் ஏற்று கொள்கிறேனாம் 
இது நாடகம் இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு நியாயவாதி மற்றவன் எல்லாம் அடி  முட்டாள் 
என்ற மனநிலையில்தான் உங்கள் அக்கருத்து இருக்கிறது 

தமிழ் இணையத்திலேயே புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் கட்டுரைகளை 
காவி நிற்பது யாழ்களம்தான் காரணம் இப்படி தேடி தேடி இணைப்பதுதான் 
நாமும் இத களத்தில்தான் கருத்துக்களை பகிர்ந்துவருகிறோம் 

இணைப்பதை யாழ்களத்தின் நலன் கருதி கொஞ்சம் என்றாலும்
வாந்திக்கும் வார்த்தைக்கும் வித்தியாசம் புரிந்து எழுதுங்கள் இணையுங்கள் என்றுதான் கேட்க்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இந்த பதிவை இணைத்தவரின் ஒரே நோக்கம் இத்திரி கொழுந்துவிட்டு எரியவேண்டும் என்பதுதான். அது நன்றாகவே நடக்கிறது. இப்பதிவை ஆதரித்து வாக்களித்தவர்களைப் பொறுத்தவரை இப்பதிவு புலிகளை விமர்சிக்கிறது என்பதே போதுமானது.

மற்றும்படி, இக்கட்டுரையாளர் செய்திருப்பது இவை மட்டும்தான்.

1. தமிழ்த் தேசியம் பற்றி எவர் பேசினாலும் பிழை. ஏனென்றால் அப்படியொன்று தேவையற்றது.

2. விக்கியும், சுரேஷும் போர்க்குற்றவாளிகள் அல்லது புலிகளை அதிகபட்ச தஆண்டனைக்கு உள்ளாக்கியவர்கள், ஆகவே அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுடன் அவர்களுக்கு தமிழர்பற்றிப் பேச அருகதையில்லை.

3. புலிகள் முதலாளித்துவ பாஸிசவாதிகள், அப்பாவிகளை நூற்றுக்கணக்கில் கொன்றவர்கள், ஆகவே அவர்களுக்காக யாரும் பேசத் தேவையில்லை.

4. மாற்றியக்கங்களில் இருந்த பெருமளவு அறிஞர்களையும், கோட்பாட்டாளர்களையும் புலிகள் அநியாயமாகக் கொன்றனர். அதுவரையில் மக்களுக்காக அல்லும் பகலும் போரிட்ட இந்த மாற்றியக்கங்கள் புலிகளைப் பழிவாங்கவே இந்திய இலங்கை ராணுவத்துடன் இணைந்துகொண்டனர், ஆகவே இது தவறென்று பார்க்கப்படக் கூடாது.

5. இந்திய ராணுவத்திற்கெதிராக பிரேமதாசாவுடம் சேர்ந்து புலிகள் போராடியது தமிழர்களைக் காட்டிக் கொடுத்ததாகிறது. இந்திய ராணுவத்துடன் சண்டையிட்டு அவர்கள் அழிந்திருந்தால் வரவேற்றிருக்கலாம். 

6. தமிழ்த்தேசியம் பேசுவது சர்வ உலக சோஷலிசத்திற்கு எதிரானது, ஆகவே தமிழர்கள் தமக்கான சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதை விட்டு சிங்களவர்கள் உடபட மொத்த இலங்கையர்களுக்காகவும் போராட வேண்டும்.

தண்ணியடிச்சாக் குப்புற விழுந்து படுக்கிறதை விட்டுட்டு, கருத்தெழுதிக்கொண்டிருக்கிறது இந்தச் சோஷலிஸக் கும்பல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

கிருபனுக்கு இந்த கட்டுரையில் என்ன பொய் இருக்கிறது என்பதை 
எல்லாம் சுட்டி காட்டி மேலே எழுதி இருக்கிறேன்

மேற்கோள் எல்லாம் சுருக்கப்பட்டதால் நீங்கள் நீலத்திலும் சிவப்பிலும் எழுதியதைக் கவனிக்கவில்லை😱

இப்போதுதான் expand பண்ணி படித்தேன். 

 

2 minutes ago, ரஞ்சித் said:

இங்கே இந்த பதிவை இணைத்தவரின் ஒரே நோக்கம் இத்திரி கொழுந்துவிட்டு எரியவேண்டும் என்பதுதான். அது நன்றாகவே நடக்கிறது

கருத்தாடல் களத்தில் திரி எரியத்தானே வேண்டும்😁! சும்மா வெட்டி ஒட்டி பக்கங்களை நிரப்பி என்ன பிரயோசனம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை இணைத்தவரைத் திட்டித் தீர்க்கும் ஒரு புதிய போக்கு உருவாகி வருகிறது என நினைக்கிறேன். சில நாட்கள் முன்பு ஒரு கொல்லப் பட்ட அரசியல் தலைவரைப் பற்றி கனேடிய எழுத்தாளர் எழுதிய கட்டுரையை இணைத்தவரை எவரும் திட்டவில்லை! மாறாக நன்றாக ஒரு புதுத்தியரி கயிறு திரிக்க அதைப் பயன்படுத்தினர்.

எனவே, யார் இணைக்கிறார் என்பது தான் இங்க பிரச்சினை போலிருக்கு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

கட்டுரையை இணைத்தவரைத் திட்டித் தீர்க்கும் ஒரு புதிய போக்கு உருவாகி வருகிறது என நினைக்கிறேன்

இணைக்கும்போது என்ன மாதிரியான கருத்துக்கள் வரும் என்று தெரியாமலா இருக்கின்றேன். 😀

தமிழர்கள் பழமைவாதத்தில் ஊறிய வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டுள்ளவர்கள். ஆனால் புரட்சிகரமான சிந்தனையுள்ளவர்கள் என்று தங்களை ஏமாற்றுபவர்கள்.

இடதுசாரிச் சிந்தனை மூலம் உலகுக்கு கிடைத்த நன்மைகள் என்னவென்று தெரியாமல் சும்மா எழுதுபவர்கள் எல்லாம் ஒரு 20 வருடம் ட்ரம்ப் போன்றவர்களின் கீழ் வாழ்ந்தால்தான் புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:
2 minutes ago, கிருபன் said:

 

 

சுத்தியிருந்து கூட்டாய் ஒப்பாரி வைக்கிற இன்னும் இரண்டு பேரை காணேல்லை :grin:

அதிலை ஒருத்தர் எப்பவும் சோடியாய்த்தான் வருவார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இணைக்கப்பட்ட பதிவு நடுநிலைமையானதோ, திலீபனின் தியாகத்தை மெச்சுவதோ அல்ல. மாறாக, நடுநிலைமை என்கிற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட, இன்றும் ஈடுபடும் பலரை குற்றஞ்சாட்டி எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்த் தேசியம் என்று இல்லாமல் மொத்த இலங்கை மக்களினது சுயநிர்ணய உரிமை என்று என்ன எழுதுவதென்று தெரியாமலேயே எழுதி முடிக்கப்பட்டிருக்கிறது.

நோக்கம் ஒன்றுதான், திலீபனின் மரணம் போற்றப்படவேண்டியதொன்றல்ல, அதற்கு சாதகமாகப் பேசுவோர் கொலைகாரர்கள். அவர்கள் போடுவது வேசம். 

சரி, இப்பந்தியை இணைத்தவர் அண்மைக்காலமாக இக்களத்தில் இணைத்துவரும் பதிவுகளால் அடைந்தது என்ன? முக்கியமாக தெற்கு நோக்கிச் சாயும் கிழக்கு மக்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பதிவிற்கு பதிலாக ஸ்டான்லி எழுதிய வடக்குத் தமிழர்மீதான் காழ்ப்புணர்வினைக் கொட்டும் பதிவை இங்கே கொண்டுவந்து இணைத்ததன் மூலம் அவர் அடைய விரும்பியதும், அடைந்ததும் என்ன? இதனால் ஏற்பட்ட நண்மையென்ன? கருத்தாளர்களிடையே கசப்புணர்வும் விரிசலும் மட்டும்தானே? இந்த இணைப்புகளால் ஆக்கபூர்வமான எந்த முடிவையும் இப்பதிவுகள் அடையவில்லை என்பது நிதர்சனம்.

கருத்தாளர்களிடையே பிணக்குகளையும், தர்க்கங்களையும் ஏற்படுத்தும் நோக்கம் மட்டுமே இங்கு எனக்குத் தெரிகிறது. 

5 hours ago, கிருபன் said:

சும்மா வெட்டி ஒட்டி பக்கங்களை நிரப்பி என்ன பிரயோசனம்?

இந்த ஆக்கம் உங்களதா? எங்கிருந்தும் வெட்டியொட்டப்படவில்லையென்று உங்களால் உறுதியாகக் கூறமுடியுமா? 

13 minutes ago, கிருபன் said:

ஆனால் புரட்சிகரமான சிந்தனையுள்ளவர்கள் என்று தங்களை ஏமாற்றுபவர்கள்.

இடதுசாரிச் சிந்தனை மூலம் உலகுக்கு கிடைத்த நன்மைகள்

தங்களைப் புரட்சியாளர்கள் என்று எண்ணிக்கொண்டு மதுபோதையில் உளறும் போலிச் சோசலிச கூப்பாடுகளே இன்றும் தமது கனவுகளை மற்றையவர்மேலான காழ்ப்புணர்வுகளாக கொட்டி வருகிறார்கள். அதிலொருவர்தான் இந்த சபா நாவலன்.

அடுத்ததாக சோசலிசத்தித்தினால் அழிந்தவைதான் உண்டேயன்றி வாழ்ந்தவை ஏதும் இல்லை. ரஷ்ஷியாவும், சீனாவும் செய்வதுதான் சோஷலிசம் என்று எண்ணினால் அது மற்றையவர் தவறல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

 

அடுத்ததாக சோசலிசத்தித்தினால் அழிந்தவைதான் உண்டேயன்றி வாழ்ந்தவை ஏதும் இல்லை. ரஷ்ஷியாவும், சீனாவும் செய்வதுதான் சோஷலிசம் என்று எண்ணினால் அது மற்றையவர் தவறல்ல. 

அப்படியா? ரஷ்யாவும் சீனாவும் மட்டும் தான் உங்களுக்கு சோசலிசம் என்றதும் மனதில் வரும் நாடுகளா? இலங்கையின் முழுமையான பெயர் என்ன ரஞ்சித்? உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

சரி, இப்பந்தியை இணைத்தவர் அண்மைக்காலமாக இக்களத்தில் இணைத்துவரும் பதிவுகளால் அடைந்தது என்ன? முக்கியமாக தெற்கு நோக்கிச் சாயும் கிழக்கு மக்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பதிவிற்கு பதிலாக ஸ்டான்லி எழுதிய வடக்குத் தமிழர்மீதான் காழ்ப்புணர்வினைக் கொட்டும் பதிவை இங்கே கொண்டுவந்து இணைத்ததன் மூலம் அவர் அடைய விரும்பியதும், அடைந்ததும் என்ன? இதனால் ஏற்பட்ட நண்மையென்ன? கருத்தாளர்களிடையே கசப்புணர்வும் விரிசலும் மட்டும்தானே? இந்த இணைப்புகளால் ஆக்கபூர்வமான எந்த முடிவையும் இப்பதிவுகள் அடையவில்லை என்பது நிதர்சனம்.

ரஞ்சித்,

பதிவுகளை இணைப்பது அவற்றைப் பற்றிக் கருத்தாடலையும் விமர்சனங்களையும் வைக்கத் தூண்டத்தான். இல்லாவிட்டால் கருத்துக்களம் எதற்கு? 

கருத்துக்கள் வைப்பதன் மூலம் கசப்புணர்வு வருவதற்கு உணர்ச்சிவசப்படுவதுதான் காரணம். 

MR ஸ்ராலின் எழுதிய நீண்ட விமர்சனம் நிலாந்தனின் கட்டுரைக்கானது. அதனால்தான் இணைத்திருந்தேன். ஸ்ராலினதும் பிள்ளையானினதும் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களை விரும்பாதற்கு தனிப்பட்ட காரணம் எனக்கு உள்ளது. அதை யாழில் சந்தர்ப்பம் வரும்போது அதற்குரிய திரியில் எழுதுகின்றேன்.

1 hour ago, ரஞ்சித் said:

இந்த ஆக்கம் உங்களதா? எங்கிருந்தும் வெட்டியொட்டப்படவில்லையென்று உங்களால் உறுதியாகக் கூறமுடியுமா?

முதல் கட்டுரை வெட்டி ஒட்டப்பட்டது என்பது அதன் இணைப்பின் மூலம் தெரியவில்லையா?

நான் சொல்ல வந்தது ஒரே திரியில் பக்கம் பக்கமாக வெட்டி ஒட்டுவதை.

1 hour ago, ரஞ்சித் said:

மதுபோதையில் உளறும் போலிச் சோசலிச கூப்பாடுகளே இன்றும் தமது கனவுகளை மற்றையவர்மேலான காழ்ப்புணர்வுகளாக கொட்டி வருகிறார்கள். அதிலொருவர்தான் இந்த சபா நாவலன்.

சபா நாவலன் மதுபோதையில் உளறுகின்றார் என்பதற்கும், அவர்தான் இணைத்த கட்டுரையை எழுதினார் என்பதற்கும் ஆதாரமில்லை. ஆதாரங்களை வைக்குமாறு கேட்டுக்கொண்டே அவதூறு எழுதலாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

இங்கு பலர் கேட்பது போல் அனைத்து உண்மைகளும் வெளிவருமானால் நாம் மதிப்பு வைத்திருக்கும் பலரின் கைகளில் அப்பாவிகளின் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைவோம். போராட்ட  நியாயத்தின் பால் இந்த அநீதிகளை சகித்து வாழ்ந்த இனமே எமது இனம் என்பதே உண்மை.

மறுக்கவே முடியாத உண்மைகள்.

54 minutes ago, Justin said:

உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

இலங்கையின் முறையை பின்பற்றி நான் முதல் அமைச்சராக வந்தால் எல்லோருக்கும் இலவச கல்வி இலவச மருத்துவம் என்று சொல்லும் சீமானின் கொள்கையும் அதை சார்ந்ததே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

அது இதோ?

அது இதோ?

சுரேஷ் பிரேமசந்திரன் பற்றி ஆக்கபூர்வனமான ஏதும் கட்டுரை இருந்தால் கொண்டுவாருங்கள் 
விக்கியர் நீதிபதியாக இருந்தார் அவரின் கடந்த காலம் எப்படி என்று இங்கு பலருக்கும் தெரியாது 
அது பற்றி ஏதும் இருந்தால் கொண்டுவாருங்கள் 

எந்த ஆதாரமும் அற்று ஒருவன் வெறும் வாந்தியாகவே எடுத்திருக்கும் 
ஒரு வாந்தியை காவி நீங்கள் உங்கள் தரத்தை தாழ்த்தி கொள்கிறீர்கள் 

என்னுடைய கேள்வியே அதுதான்?

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இலங்கையின் முழுமையான பெயர் என்ன ரஞ்சித்? உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

ஏன் எதற்கெடுத்தாலும் எனக்கு இலவசக் கல்வியைத் தந்த நாடு எது என்று இங்கே சிலர் கேட்கிறீர்கள்? எனக்கு இலவசக் கல்வியைத் தந்ததற்காக மட்டுமே என்மீதான முழுக் கட்டுப்பாட்டையும், என்னை என்னவேண்டுமானாலும் செய்துவிடலாம் என்னும் அதிகாரத்தையும் அந்த நாடு பெற்றுவிடுகிறதா என்ன? 

அடுத்ததாக இலவசக் கல்வியைத் தரும் நாடு இலங்கை மட்டுமல்லவே. உலகில் தரமான இலவசக் கல்வியை வழங்கும் முதல்ப் பத்து நாடுகளின் பட்டியலை நான் இடுகிறேன், இவற்றுள் எத்தனை சோசலிச நாடுகள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

1. ஜேர்மனி  2. நோர்வே  3. சுவீடன்  4. ஒஸ்ட்ரியா  5. பின்லாந்து  6.  செக் குடியரசு  7. பிரான்ஸ்  8. பெல்ஜியம்  9. கிரேக்கம்  10. ஸ்பெயின். 

இவையெல்லாமே தரமான, இலவசக் கல்விக்கொள்கையைக் கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக இலங்கையின் பெயருக்கு வருவோம். "சனநாயக சோசலிசக் குடியரசு". இந்தப் பெயரில் சொல்லப்படும் விடயங்களான நாட்டின் மொத்த பொருட்களின் உற்பத்தி, பகிர்வு, பண்டமாற்று ஆகியன மொத்த மக்களுக்கும் இடையே சமமாகப் பகிரப்படும் நடைமுறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையாகவே இலங்கையில் தற்போது நடக்கிறதா? அதிகாரம் ஒரு இனக்குழுமத்தின் கைகளில் ஒதுங்கிக் கிடப்பது சோசலிஷமா? ஒரு இனம் இன்னொரு இனத்தின் வாழ்வாதாரங்களைப் பாழாக்கி, அதனது வாழிடங்களையும், பொருளாதார வளங்களையும் அழித்து, அவ்வினத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்குவது சோசலிசமா? சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி முறைமைக்கும் சோசலிசத்திற்குமிடையிலான தொடர்பு என்ன? 20 ஆவது சட்டமூலத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? இன்று உயிரற்றுக் கிடக்கும் லங்கா சம சமாஜக் கட்சியினைத்தவிர, சோசலிசத்தை வரிந்துகொண்ட இலங்கை சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் இன்றைய நிலைப்பாடும், செல்லும் திசையும் என்ன? 1950 களில் சோசலிசத்தை வரிந்துகொண்ட பண்டாரநாயக்காதான் இலங்கையில் இன ஒதுக்கல்களை ஆரம்பித்தார் என்பதும், பின்னாட்களில் அவரது மனைவி சோசலிசத்தை நடத்துகிறேன் என்று இரும்புக் கரம்கொண்டு அடக்கி, மார்க்ஸிய - லெனினிஸ்ட் இடதுசாரிகளை அழிக்க இந்தியாவிலிருந்து ராணுவ உதவியும் கேட்டது சோசலிசமா? அல்லது, அன்று மார்க்ஸிய சித்தாந்தம் பேசிய மக்கள் விடுதலை முன்னணி இன்று செல்லும் பாதை சோசலிசமா? சிங்கள பெளத்த இனத்திற்கு ஆதரவாக, அரசியலை நடத்தும் இவர்களை எப்படிச் சோசலிசவாதிகளாகப் பார்க்கிறீர்கள்? வெறுமனே பெயரில் மட்டுமே சோசலிசம் இருந்தால் அது சோசலிச நாடெனும் அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகிறதா? 

 இலங்கையில் எங்கே, எப்போது  எல்லா இனங்களும் சமமாக நடத்தப்படிருக்கின்றன என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். 

 

நீங்கள் தரமான சோசலிச நாடெனும் உதரணத்திற்காக இலங்கையினை எனக்குக் காட்டியபோது உங்களுகே அது அபத்தமாகப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அதனை மறுத்தாலும் நான் ஆச்சரியப்படவில்லை. 


 

5 hours ago, கிருபன் said:

முதல் கட்டுரை வெட்டி ஒட்டப்பட்டது என்பது அதன் இணைப்பின் மூலம் தெரியவில்லையா?

அதனால்த்தான் அந்தக் கேள்வியையே கேட்டேன். மற்றையவர்களை வெட்டி ஒட்டுபவர்கள் என்று விமர்சனம் செய்யுமுன் நாம் இணைப்பதுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான் என்கிற தெளிவு எமக்கு இருக்கவேண்டும். 

நான் நீங்கள் செய்வதைத் தவறென்று சொல்லவில்லை. கருத்துக்களம் கருத்தாடத்தானே, அதில் பிறகு எல்லோரும் சமரசமாகப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல, ஆகவே உங்கள் மீதான தாக்குதலாக இதைப் பார்க்க வேண்டாம். 

5 hours ago, கிருபன் said:

சபா நாவலன் மதுபோதையில் உளறுகின்றார் என்பதற்கும், அவர்தான் இணைத்த கட்டுரையை எழுதினார் என்பதற்கும் ஆதாரமில்லை. ஆதாரங்களை வைக்குமாறு கேட்டுக்கொண்டே அவதூறு எழுதலாமா?

என்னிடம் ஆதாரம் இல்லை. மேலே ஒரு கருத்தில் இனியொரு இணையத்தில் எழுதும் சபா நாவலனே இதையும் எழுதுகிறார் என்கிற கருத்தினை அடிப்படையாக வைத்தே அதை எழுதினேன். மற்றும்படி, இன்று நடைமுறையில் இல்லாத சித்தாத்தங்களைப் பேசுவோர் நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட வெளியில் வாழ்கிறார்கள் எனும் கருத்தினையே "மதுபோதையில் உளருதல்" என்று தொனிப்பட எழுதினேன். சத்தியமாக சபா நாவலன் தண்னியடிப்பாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

 

உலக அரசியலில் யார் சுத்தம் எண்டு ஒருக்கால்  சொல்லுங்கோ பாப்பம் தங்கச்சி?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

அவர் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடவில்லையென்பதை எவரும் நம்பவில்லை. ஆனால், அவர்மீதான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடம் இங்கே எழுதினால் இக்கட்டுரைபற்றிய தெளிவு கிடைக்கும் என்கிற நோக்கிலேயே எழுதப்பட்டது.

அவ்வாறே முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் மீதான எழுந்தமானமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும். தான் எழுதும் அபத்தமான விமர்சனத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக மட்டுமே போகிறபோக்கில் புலிச் சந்தேக நபர்களுக்கு அதியுட்ச தண்டனைகளை அவர் வாங்கிக்கொடுத்தார் எனும் கட்டுரையாளரின் விசமத்தனத்திற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் படிப்பவர்களுக்கு இக்கட்டுரையின் உண்மைத்தன்மை புரியும் என்பதனாலேயே அது கேட்கப்பட்டது.

மற்றும்படி சுரேஷின் கடந்தகாலம் பற்றிப் பலருக்கும் தெளிவான பார்வையே இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

அப்படியா? ரஷ்யாவும் சீனாவும் மட்டும் தான் உங்களுக்கு சோசலிசம் என்றதும் மனதில் வரும் நாடுகளா? இலங்கையின் முழுமையான பெயர் என்ன ரஞ்சித்? உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

நானும் கன காலமாய் பாத்துக்கொண்டுவாறன் உங்கை கன சனம் இந்துசமுத்திர முத்து இலங்கை இலவசக்கல்வி தந்தது...தந்தது...தந்தது எண்டு கத்திக்கொண்டு திரியுதுகள். அப்ப ஏன் பள்ளிக்கூட பொடியள் எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு அலையுதுகள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

அப்ப ஏன் பள்ளிக்கூட பொடியள் எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு அலையுதுகள்?

இலங்கை தமிழர்கள் எங்கே எல்லாம் இருக்கிறார்களோ அங்கே எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு தான் அலைகிறார்கள். சுவிட்சலாந்தில் இருந்து பிள்ளையை லண்டனுக்கு படிக்க அனுப்புவதும் அவுஸ்ரேலியாவில் இருந்து லண்டனுக்கு படிக்க அனுப்புவதும்  கூட  நடைபெறுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரஞ்சித் said:

ஏன் எதற்கெடுத்தாலும் எனக்கு இலவசக் கல்வியைத் தந்த நாடு எது என்று இங்கே சிலர் கேட்கிறீர்கள்? எனக்கு இலவசக் கல்வியைத் தந்ததற்காக மட்டுமே என்மீதான முழுக் கட்டுப்பாட்டையும், என்னை என்னவேண்டுமானாலும் செய்துவிடலாம் என்னும் அதிகாரத்தையும் அந்த நாடு பெற்றுவிடுகிறதா என்ன? 

அடுத்ததாக இலவசக் கல்வியைத் தரும் நாடு இலங்கை மட்டுமல்லவே. உலகில் தரமான இலவசக் கல்வியை வழங்கும் முதல்ப் பத்து நாடுகளின் பட்டியலை நான் இடுகிறேன், இவற்றுள் எத்தனை சோசலிச நாடுகள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

1. ஜேர்மனி  2. நோர்வே  3. சுவீடன்  4. ஒஸ்ட்ரியா  5. பின்லாந்து  6.  செக் குடியரசு  7. பிரான்ஸ்  8. பெல்ஜியம்  9. கிரேக்கம்  10. ஸ்பெயின். 

இவையெல்லாமே தரமான, இலவசக் கல்விக்கொள்கையைக் கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக இலங்கையின் பெயருக்கு வருவோம். "சனநாயக சோசலிசக் குடியரசு". இந்தப் பெயரில் சொல்லப்படும் விடயங்களான நாட்டின் மொத்த பொருட்களின் உற்பத்தி, பகிர்வு, பண்டமாற்று ஆகியன மொத்த மக்களுக்கும் இடையே சமமாகப் பகிரப்படும் நடைமுறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையாகவே இலங்கையில் தற்போது நடக்கிறதா? அதிகாரம் ஒரு இனக்குழுமத்தின் கைகளில் ஒதுங்கிக் கிடப்பது சோசலிஷமா? ஒரு இனம் இன்னொரு இனத்தின் வாழ்வாதாரங்களைப் பாழாக்கி, அதனது வாழிடங்களையும், பொருளாதார வளங்களையும் அழித்து, அவ்வினத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்குவது சோசலிசமா? சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி முறைமைக்கும் சோசலிசத்திற்குமிடையிலான தொடர்பு என்ன? 20 ஆவது சட்டமூலத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? இன்று உயிரற்றுக் கிடக்கும் லங்கா சம சமாஜக் கட்சியினைத்தவிர, சோசலிசத்தை வரிந்துகொண்ட இலங்கை சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் இன்றைய நிலைப்பாடும், செல்லும் திசையும் என்ன? 1950 களில் சோசலிசத்தை வரிந்துகொண்ட பண்டாரநாயக்காதான் இலங்கையில் இன ஒதுக்கல்களை ஆரம்பித்தார் என்பதும், பின்னாட்களில் அவரது மனைவி சோசலிசத்தை நடத்துகிறேன் என்று இரும்புக் கரம்கொண்டு அடக்கி, மார்க்ஸிய - லெனினிஸ்ட் இடதுசாரிகளை அழிக்க இந்தியாவிலிருந்து ராணுவ உதவியும் கேட்டது சோசலிசமா? அல்லது, அன்று மார்க்ஸிய சித்தாந்தம் பேசிய மக்கள் விடுதலை முன்னணி இன்று செல்லும் பாதை சோசலிசமா? சிங்கள பெளத்த இனத்திற்கு ஆதரவாக, அரசியலை நடத்தும் இவர்களை எப்படிச் சோசலிசவாதிகளாகப் பார்க்கிறீர்கள்? வெறுமனே பெயரில் மட்டுமே சோசலிசம் இருந்தால் அது சோசலிச நாடெனும் அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகிறதா? 

 இலங்கையில் எங்கே, எப்போது  எல்லா இனங்களும் சமமாக நடத்தப்படிருக்கின்றன என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். 

 

நீங்கள் தரமான சோசலிச நாடெனும் உதரணத்திற்காக இலங்கையினை எனக்குக் காட்டியபோது உங்களுகே அது அபத்தமாகப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அதனை மறுத்தாலும் நான் ஆச்சரியப்படவில்லை. 


 

அதனால்த்தான் அந்தக் கேள்வியையே கேட்டேன். மற்றையவர்களை வெட்டி ஒட்டுபவர்கள் என்று விமர்சனம் செய்யுமுன் நாம் இணைப்பதுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான் என்கிற தெளிவு எமக்கு இருக்கவேண்டும். 

நான் நீங்கள் செய்வதைத் தவறென்று சொல்லவில்லை. கருத்துக்களம் கருத்தாடத்தானே, அதில் பிறகு எல்லோரும் சமரசமாகப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல, ஆகவே உங்கள் மீதான தாக்குதலாக இதைப் பார்க்க வேண்டாம். 

என்னிடம் ஆதாரம் இல்லை. மேலே ஒரு கருத்தில் இனியொரு இணையத்தில் எழுதும் சபா நாவலனே இதையும் எழுதுகிறார் என்கிற கருத்தினை அடிப்படையாக வைத்தே அதை எழுதினேன். மற்றும்படி, இன்று நடைமுறையில் இல்லாத சித்தாத்தங்களைப் பேசுவோர் நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட வெளியில் வாழ்கிறார்கள் எனும் கருத்தினையே "மதுபோதையில் உளருதல்" என்று தொனிப்பட எழுதினேன். சத்தியமாக சபா நாவலன் தண்னியடிப்பாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. 

இலங்கையைத் தெரியாதவர்களுக்கு புரியும்படியாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.மிகவும் நன்றி ரஞசித்.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

36 minutes ago, குமாரசாமி said:

நானும் கன காலமாய் பாத்துக்கொண்டுவாறன் உங்கை கன சனம் இந்துசமுத்திர முத்து இலங்கை இலவசக்கல்வி தந்தது...தந்தது...தந்தது எண்டு கத்திக்கொண்டு திரியுதுகள். அப்ப ஏன் பள்ளிக்கூட பொடியள் எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு அலையுதுகள்?

இலவச கல்வி தந்தபடியால்த் தான் விரும்பிய நேரங்களில் பாடசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
வாசிகசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
பாடசாலைப் பிள்ளைகளை கற்பழிக்க முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்கள் எங்கே எல்லாம் இருக்கிறார்களோ அங்கே எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு தான் அலைகிறார்கள். சுவிட்சலாந்தில் இருந்து பிள்ளையை லண்டனுக்கு படிக்க அனுப்புவதும் அவுஸ்ரேலியாவில் இருந்து லண்டனுக்கு படிக்க அனுப்புவதும்  கூட  நடைபெறுகிறது.

சார்! ரியூசன் வேறு. மொழிசார் படிப்புகள் வேறு. 

முதல்லை சிலோன் ரியூசன் என்னெண்டு தெரியுமோ?
வகுப்பு வாத்தியாரே சொல்லுவார் நான் அங்கை இன்ன இடத்திலை ரியூசன் நடத்துறன் அங்கை மிச்சத்தை சொல்லித்தல்லாம் எண்டு...

விளங்க நினைப்பவரே நீங்கள் சுமந்திரன் அபிமானியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஏன் எதற்கெடுத்தாலும் எனக்கு இலவசக் கல்வியைத் தந்த நாடு எது என்று இங்கே சிலர் கேட்கிறீர்கள்? எனக்கு இலவசக் கல்வியைத் தந்ததற்காக மட்டுமே என்மீதான முழுக் கட்டுப்பாட்டையும், என்னை என்னவேண்டுமானாலும் செய்துவிடலாம் என்னும் அதிகாரத்தையும் அந்த நாடு பெற்றுவிடுகிறதா என்ன? 

அடுத்ததாக இலவசக் கல்வியைத் தரும் நாடு இலங்கை மட்டுமல்லவே. உலகில் தரமான இலவசக் கல்வியை வழங்கும் முதல்ப் பத்து நாடுகளின் பட்டியலை நான் இடுகிறேன், இவற்றுள் எத்தனை சோசலிச நாடுகள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

1. ஜேர்மனி  2. நோர்வே  3. சுவீடன்  4. ஒஸ்ட்ரியா  5. பின்லாந்து  6.  செக் குடியரசு  7. பிரான்ஸ்  8. பெல்ஜியம்  9. கிரேக்கம்  10. ஸ்பெயின். 

இவையெல்லாமே தரமான, இலவசக் கல்விக்கொள்கையைக் கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக இலங்கையின் பெயருக்கு வருவோம். "சனநாயக சோசலிசக் குடியரசு". இந்தப் பெயரில் சொல்லப்படும் விடயங்களான நாட்டின் மொத்த பொருட்களின் உற்பத்தி, பகிர்வு, பண்டமாற்று ஆகியன மொத்த மக்களுக்கும் இடையே சமமாகப் பகிரப்படும் நடைமுறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையாகவே இலங்கையில் தற்போது நடக்கிறதா? அதிகாரம் ஒரு இனக்குழுமத்தின் கைகளில் ஒதுங்கிக் கிடப்பது சோசலிஷமா? ஒரு இனம் இன்னொரு இனத்தின் வாழ்வாதாரங்களைப் பாழாக்கி, அதனது வாழிடங்களையும், பொருளாதார வளங்களையும் அழித்து, அவ்வினத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்குவது சோசலிசமா? சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி முறைமைக்கும் சோசலிசத்திற்குமிடையிலான தொடர்பு என்ன? 20 ஆவது சட்டமூலத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? இன்று உயிரற்றுக் கிடக்கும் லங்கா சம சமாஜக் கட்சியினைத்தவிர, சோசலிசத்தை வரிந்துகொண்ட இலங்கை சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் இன்றைய நிலைப்பாடும், செல்லும் திசையும் என்ன? 1950 களில் சோசலிசத்தை வரிந்துகொண்ட பண்டாரநாயக்காதான் இலங்கையில் இன ஒதுக்கல்களை ஆரம்பித்தார் என்பதும், பின்னாட்களில் அவரது மனைவி சோசலிசத்தை நடத்துகிறேன் என்று இரும்புக் கரம்கொண்டு அடக்கி, மார்க்ஸிய - லெனினிஸ்ட் இடதுசாரிகளை அழிக்க இந்தியாவிலிருந்து ராணுவ உதவியும் கேட்டது சோசலிசமா? அல்லது, அன்று மார்க்ஸிய சித்தாந்தம் பேசிய மக்கள் விடுதலை முன்னணி இன்று செல்லும் பாதை சோசலிசமா? சிங்கள பெளத்த இனத்திற்கு ஆதரவாக, அரசியலை நடத்தும் இவர்களை எப்படிச் சோசலிசவாதிகளாகப் பார்க்கிறீர்கள்? வெறுமனே பெயரில் மட்டுமே சோசலிசம் இருந்தால் அது சோசலிச நாடெனும் அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகிறதா? 

 இலங்கையில் எங்கே, எப்போது  எல்லா இனங்களும் சமமாக நடத்தப்படிருக்கின்றன என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். 

 

நீங்கள் தரமான சோசலிச நாடெனும் உதரணத்திற்காக இலங்கையினை எனக்குக் காட்டியபோது உங்களுகே அது அபத்தமாகப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அதனை மறுத்தாலும் நான் ஆச்சரியப்படவில்லை. 


 

அதனால்த்தான் அந்தக் கேள்வியையே கேட்டேன். மற்றையவர்களை வெட்டி ஒட்டுபவர்கள் என்று விமர்சனம் செய்யுமுன் நாம் இணைப்பதுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான் என்கிற தெளிவு எமக்கு இருக்கவேண்டும். 

நான் நீங்கள் செய்வதைத் தவறென்று சொல்லவில்லை. கருத்துக்களம் கருத்தாடத்தானே, அதில் பிறகு எல்லோரும் சமரசமாகப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல, ஆகவே உங்கள் மீதான தாக்குதலாக இதைப் பார்க்க வேண்டாம். 

என்னிடம் ஆதாரம் இல்லை. மேலே ஒரு கருத்தில் இனியொரு இணையத்தில் எழுதும் சபா நாவலனே இதையும் எழுதுகிறார் என்கிற கருத்தினை அடிப்படையாக வைத்தே அதை எழுதினேன். மற்றும்படி, இன்று நடைமுறையில் இல்லாத சித்தாத்தங்களைப் பேசுவோர் நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட வெளியில் வாழ்கிறார்கள் எனும் கருத்தினையே "மதுபோதையில் உளருதல்" என்று தொனிப்பட எழுதினேன். சத்தியமாக சபா நாவலன் தண்னியடிப்பாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. 

ரஞ்சித், உணர்ச்சி வசப்பட்டு அவசரப் பதில் பந்தி பந்தியாக எழுதாமல் நான் எதற்கு அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று பார்க்க வேண்டும்! 

சோசலிசத்தால் அழிவே என்றீர்கள்! இலங்கையின் கலப்புப் பொருளாதார முறையில் சோசலிசம் இருக்கிறது. அதனால் தான் உங்களுக்கும் எனக்கும் இலவச கல்வியும் வசதிகளும்! உங்களை இதனால் இலங்கையின் அடக்கு முறையை பொறுத்துகொள்ள வேண்டுமென்று எங்கே எழுதினேன்? 

நீங்கள் பட்டியலிட்ட நாடுகளின் சமூக நலன் திட்டங்களும் சோசலிசத்திடமிருந்து கடன் வாங்கப்பட்டவையேயொழிய முதலில் இருந்த மன்னராட்சியாலோ, முதலாளித்துவத்தாலோ மட்டுமே வந்தவையல்ல. சோசலிசம் கலக்காத தனி முதலாளித்துவம் சமூக வளர்ச்சிக்கு என்ன செய்யும் என்பதற்கு நல்ல உதாரணம் அமெரிக்கா! பணம் இருப்பவனுக்கே பல்கலைக் கல்வி சாத்தியம், மற்றவர்கள் மிகவும் கஷ்டப் பட்டே உயர்கல்வி பெறலாம். மருத்துவ சேவைகள் பற்றி காசில்லாதவன் நினைத்தே பார்க்க முடியாது இங்கே.

இலங்கையில் சோசலிசப் பொருளாதார சமூகக் கொள்கைகளின் எல்லா நலன்களையும் அனுபவித்து விட்டு "சோசலிசம் அழிவே" என்று பேசும் நம்மவர் பலரைக் கண்டிருக்கிறேன். நாம் நடந்து வந்த பாதையை மறந்தவர்களாகவே அவர்களை நான் பார்க்கிறேன்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இலங்கையைத் தெரியாதவர்களுக்கு புரியும்படியாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.மிகவும் நன்றி ரஞசித்.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

இலவச கல்வி தந்தபடியால்த் தான் விரும்பிய நேரங்களில் பாடசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
வாசிகசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
பாடசாலைப் பிள்ளைகளை கற்பழிக்க முடிகிறது.

ஈழப்பிரியன் அண்ணை, உரையாடலில் எந்தக் கேள்விக்கு எனது இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டதென்று வடிவாக வாசித்து விட்டு எழுதலாமே? இலங்கையை நீங்கள் எந்த ஆண்டு கடைசியாக நேரே பார்த்தீர்கள் எண்டு ஒருக்கா சொன்னால் யாருக்கு இலங்கை தெரியும் என்று ஒரு தெளிவு வருமல்லவா?😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஈழப்பிரியன் அண்ணை, உரையாடலில் எந்தக் கேள்விக்கு எனது இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டதென்று வடிவாக வாசித்து விட்டு எழுதலாமே? இலங்கையை நீங்கள் எந்த ஆண்டு கடைசியாக நேரே பார்த்தீர்கள் எண்டு ஒருக்கா சொன்னால் யாருக்கு இலங்கை தெரியும் என்று ஒரு தெளிவு வருமல்லவா?😎

இங்கே அடிக்கடி இலவச கல்வி வைத்தியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு விரிவாக விளங்கக் கூடியவாறு எழுதியிருந்தார்.

மற்றும்படி இலங்கையை அறிவதற்கு அங்கு போய் படுத்துக்  கிடக்கவா வேண்டும்?

என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

 

அக்கா என்ன திடீரென தமிழ் மறந்துபோச்சா?
வாசிக்க விளங்குதுதானே? அல்லது ஒரு குத்து மதிப்பில் எழுதுகிறீர்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கே அடிக்கடி இலவச கல்வி வைத்தியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு விரிவாக விளங்கக் கூடியவாறு எழுதியிருந்தார்.

மற்றும்படி இலங்கையை அறிவதற்கு அங்கு போய் படுத்துக்  கிடக்கவா வேண்டும்?

என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

இலவசக் கல்வி பற்றி ஏன் கேள்வி வந்தது என்று உங்களுக்கு விளங்கியதா? இல்லையல்லவா? அது தான் பொயின்ற்.

மற்றபடி கணணித் திரையூடாக மட்டுமே இலங்கையைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் இங்கே பலர் கருத்து வைக்கிறார்கள் என்பது விளங்கக் கஷ்டமில்லையே? அது தான் சொன்னேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU 27 APR, 2024 | 01:12 AM   (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியின் உண்மை இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை. குண்டுத்தாக்குதல் தொடர்பான விவாதம் இடம்பெறும் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க சபைக்கு வருகை தராமல் இருப்பது கவலைக்குரியது.  பிரதான சூத்திரதாரி யார் என்று அனைவரும் கேட்கிறார்கள்.ஆனால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதான சூத்திரதாரியை தான் அறிவதாக குறிப்பிட்டுக் கொண்டு  குற்றப்புலனாய்வு  திணைக்களத்துக்கும்,நீதிமன்றத்துக்கும் இரகசிய வாக்குமூலம் வழங்கியுள்ளார். குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தொடர்பில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் யுடியுப் வலைத்தளத்தில் நேர்காணல் ஒன்று வழங்கியுள்ளார்.இந்த தாக்குதலின் பின்னணியில்  இந்திய பிரதமரின்  பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவால் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இதன் உண்மை என்னவென்பதை ஆராய வேண்டும்.  உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்ட மறு நாளன்று அதாவது 2019.04.22 ஆம் திகதி இந்தியாவில் கோவா பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் வாழும் கத்தோலிக்கர்களுக்கு ஏற்பட்ட நிலையை இந்தியாவில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு நேரிட இடமளிக்க போவதில்லை என்று உத்வேகமாக உரையாற்றினார்.அக்காலப்பகுதியில் அவரது பிரசாரங்கள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை முன்னிலைப்படுத்தியதாகவே காணப்பட்டது.இதனால் இந்தியாவில் வாழும் கத்தோலிக்கர்கள் அவருக்கு வாக்களித்தார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பெறுமளவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. கத்தோலிக்கர்கள் செறிவாக வாழும் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெற்றிப் பெற்றார்.தேர்தலில் வெற்றிப்பெற்ற கோட்டபய ராஜபக்ஷவுக்கு பெருமளவில் வாக்குகள் கிடைக்கப் பெறவில்லை.ஆகவே உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இந்திய தேர்தலில் தான் மாற்றம் ஏற்படுத்தியது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் கத்தோலிக்கர்கள் பாதிக்கப்படுவதற்கு முன்னர் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள். பயங்கரவாதி சஹ்ரான் சுதேசிய முஸ்லிம்களின் பாரம்பரிய மத நம்பிக்கைக்கு எதிராக செயற்பட்டான். 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் சுதேசிய முஸ்லிம்களின் 117 குடியிருப்புக்கள் அழிக்கப்பட்டன.காத்தான்குடி பகுதியில் பயங்கரவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில்  சுதேசிய முஸ்லிம்கள் அப்போதைய அரசாங்கத்திடமும்,பாதுகாப்பு தரப்பினரிடமும் முறைப்பாடளித்தார்கள்.ஆனால் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் சுதேசிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டார்கள்.அதனை அரசாங்கம் அலட்சியப்படுத்தியது.இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலாக உச்சமடைந்தது.ஆகவே சமூக கட்டமைப்பில் மறைந்துள்ள அடிப்படைவாதம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/182060
    • மதுரையைச் சுற்றியுள்ள அதிகம் அறியப்படாத சுற்றுலா தலங்கள் பட மூலாதாரம்,KERALATOURISM படக்குறிப்பு,இடுக்கி ராமக்கல்மேடு 10 நிமிடங்களுக்கு முன்னர் மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கும் கள்ளழகர் திருவிழா, ஜல்லிக்கட்டு போன்ற கலாசார நிகழ்வுகளுக்கும் பெயர் போனது. இவைதவிர பல சுற்றுலா தலங்களும் குறிப்பாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இங்குள்ளன. குறிப்பாக, மதுரைக்கு அருகே உள்ள மாவட்டங்களில் இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பகுதிகள் உள்ளன. தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. அப்படி, இந்த கோடைக்காலத்தில் மதுரைக்கு அருகே உள்ள சில இயற்கை சூழல் நிறைந்த இடங்களையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களையும் இங்கு அறியலாம். இடுக்கி ராமக்கல்மேடு ‘டைட்டானிக்' புகழ் ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகேப்ரியோ, தான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த இடம் என ராமக்கல்மேட்டைக் குறிப்பிட்டுப் புகழ்ந்துள்ளார். பசுமையான மலைகள், குளிர்ச்சியான மலைக்காற்று இரண்டும் ராமக்கல்மேட்டுக்கு செல்பவர்களை மயக்கிவிடும். கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ராமக்கல்மேடு, தேக்கடியில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ராமக்கல்மேடு, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு வீசும் இதமான காற்றுக்கு ராமக்கல்மேடு மிகவும் புகழ்பெற்றது. ஆசியாவிலேயே அதிக காற்று வீசும் பகுதிகளுள் இதுவும் ஒன்று எனக் கூறப்படுகிறது. இங்கு பழங்குடியின தம்பதியான குருவன்-குருவாட்டியின் மிக உயர்ந்த சிலைதான் இங்கு மிகவும் ஈர்க்கக்கூடிய ஒன்று. கேரளாவில் உள்ள மிக உயர்ந்த சிலைகளுள் இதுவும் ஒன்று. ஹைக்கிங், பாரா கிளைடிங் போன்றவற்றை இங்கு மேற்கொள்ளலாம். ‘தமிழ்நாடு வியூ பாயிண்ட்', ‘ஆமைப் பாறை வியூ பாயிண்ட்’ போன்ற இடங்களுக்கும் இங்கு செல்லலாம். இடுக்கியின் நெடுங்கண்டம் எனும் இடத்திலிருந்து சுமார் 12.4 கி.மீ. தொலைவில் உள்ள இந்த இடத்திற்கு நெடுங்கண்டத்தில் இருந்து பேருந்து வசதி உள்ளது.   திண்டுக்கல் மலைக்கோட்டை பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,திண்டுக்கல் மலைக்கோட்டை மலைக்கோட்டை என்றாலே திருச்சிதான் உடனே நம் நினைவுக்கு வரும். ஆனால், திண்டுக்கல் பகுதியிலும் மலைக்கோட்டை உள்ளது. வரலாற்று ரீதியாக பல முக்கியத்துவம் இந்த இடத்திற்கு உண்டு. மதுரை நாயக்கர் வம்சத்தால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, பின்னர் விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர் மற்றும் ஆங்கிலேயர்கள் உட்படப் பல ஆட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டது. சுமார் 280 அடி (85 மீட்டர்) உயரமுள்ள பாறையில் அமைந்துள்ள திண்டுக்கல் மலைக்கோட்டையின் கட்டடக்கலை உண்மையிலேயே நம்மைப் பிரம்மிக்க வைக்கும். இது பண்டைய இந்திய கல்வெட்டு கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கோட்டை வளாகத்தில் கோவில், தானியக் கிடங்கு, தண்ணீர் தொட்டி உட்படப் பல கட்டமைப்புகள் உள்ளன. இவை அனைத்தும் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு மத முக்கியத்துவம் வாய்ந்த பல பழமையான கோவில்களும் உள்ளன. கோட்டையில் உள்ள சிவன் கோவில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு ஆன்மீக பயணத்தில் நாட்டம் உள்ளவர்கள் செல்லலாம். 350 படிகள் ஏறி மேலே சென்ற பிறகு, பார்வையாளர்கள் அழகான காட்சியை அனுபவிக்க முடியும்.   கும்பக்கரை அருவி பட மூலாதாரம்,TAMILNADUTOURISM படக்குறிப்பு,கும்பக்கரை அருவி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த அழகான கும்பக்கரை அருவி. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் நீர் இருக்கும். கோடை நாட்களில் தண்ணீரின் அடர்த்தி குறைவாகவும், குளிர்கால நாட்களில் அதிகமாகவும் இருக்கும். மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து இதற்கு நீராதாரம் கிடைக்கிறது. எனினும், கும்பக்கரை நீர்வீழ்ச்சி ஆபத்தானது என்பதால், மிகவும் பாதுகாப்பாகவே இங்கு குளிக்கச் செல்ல வேண்டும். கும்பக்கரை அருவிக்குச் சென்றால் அதன் அருகிலுள்ள சுருளி அருவிக்கும் செல்லலாம். சுற்றுலாத் தலமாக விளங்கும் இன்றைய கும்பக்கரை, ஒரு காலத்தில் அருவிகள் நிறைந்த காடாகவே இருந்தது. அந்தக் காலத்தில் பெரியகுளத்தைச் சேர்ந்த வசதியான தொழிலதிபர் கே.செல்லம் ஐயர் கும்பக்கரை நீர்வீழ்ச்சியை குற்றாலத்தைப் போலவே மற்றொரு சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்பி,1942ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசிடம் அனுமதி பெற்று அந்தப் பகுதியில் தனது சொந்த செலவில் ஆடை அறைகள், படிக்கட்டுகள் மற்றும் குளியலறைகளைக் கட்டியதாக, கும்பக்கரை அருவியில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.   தேனி மேகமலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேனி மேகமலை தேனி மாவட்டத்தின் மேகமலை ஊராட்சியில் அமைந்துள்ள மேகமலை, மேகங்களுக்கு நடுவே அமைந்துள்ளது போன்றே இருக்கும். 18 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மேகமலையை அடையும்போது அதற்கு இந்தப் பெயர் எவ்வளவு பொருத்தம் என்பது உங்களுக்கே புரியும். தேயிலைத் தோட்டங்கள், பசுமையான மலைத் தொடர்கள் என மேகமலை உண்மையில் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது. மேகமலை நீர்வீழ்ச்சி, சுருளி நீர்வீழ்ச்சிகள், அணைகள், மகாராஜா மெட்டு ‘வியூ பாயிண்ட்', தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், வெள்ளிமலை ஆகியவை இங்கு குறிப்பிடத்தக்க அடையாளங்கள். யானை, புள்ளிமான் போன்ற காட்டுயிர்களையும் நீங்கள் இங்கு காணலாம். கடல் மட்டத்தில் இருந்து 1650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள வெள்ளி மலைக்குச் செல்லுங்கள். வெள்ளி மலை என்பது, மேகமலை வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். மதுரை யானைமலை பெயருக்கு ஏற்றாற்போல் இந்த மலை பார்ப்பதற்கு யானை உருவில் இருக்கும். விமானத்திலிருந்தோ, வெகு தூரத்திலிருந்தோ பார்த்தால், ஒரு யானை காலை மடக்கிக்கொண்டு படுத்திருப்பது போன்று இருக்கும். இந்த மலையில் சமண படுகைகளும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. மதுரை மாநகரிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் நெடுஞ்சாலையை ஒட்டி, இந்த யானை மலை அமைந்துள்ளது. சுமார் 4 கி.மீ. நீளம் கொண்ட இந்த மலை, சுமார் 1,200 மீட்டர் அகலம் உடையது. பல்வேறு தமிழ் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. யானை மலையில் ஏறுவது சற்று சிரமம் என்பதால், கவனத்துடன் செல்ல வேண்டும். இது, இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. சமணர் மலைகள் பட மூலாதாரம்,TAMILNADUTOURISM மதுரையில் உள்ள சமணர் மலைகள் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும், பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகவும் இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மலை என அழைக்கப்படும் இந்த சமணர் மலை மதுரை மாவட்டத்தில் உள்ள கீழக்குயில்குடி கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. மலைகளில் காணப்படும் நினைவுச் சின்னங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டவை. கோமதேஸ்வரர், மகாவீரர், யக்ஷி மற்றும் யக்ஷா ஆகியோரின் சிற்பங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செட்டிபொடவு தளம் மற்றும் பேச்சிப்பள்ளம் தளம் ஆகியவை இங்குள்ள முக்கிய இடங்கள். செட்டிப்பொடவு தளத்தில் சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் உருவம் உள்ளது. சமண துறவிகள் ஓய்வெடுக்கப் பயன்படுத்திய தட்டையான கற்கள் அல்லது கல் படுக்கைகளையும் இங்கு காணலாம். பேச்சிப்பள்ளத்தில் பாகுபலி, மஹாவீர் மற்றும் பார்ஸ்வநாதர் உள்ளிட்ட எட்டு சமண சிற்பங்கள் அரிய சின்னங்களுடன் உள்ளன. இந்த தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் கிமு 9ஆம் நூற்றாண்டில் சமண துறவிகளால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகள் 200 ஆண்டுகளுக்கும் மேலானவை என நம்பப்படுகிறது. சமணர் மலையில் உள்ள தொல்பொருள் ஆய்வுகள் மலையின் மேல் ஒரு சமணப் பள்ளி இருந்ததாகக் கூறுகின்றன. இந்த இடத்தின் அமைதியான சூழல் மலைகளின் அடிவாரத்தில் உள்ள தாமரைக் குளத்தால் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cv2x075gy0eo
    • 26 APR, 2024 | 09:33 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) மாற்றுத்திறனாளிகளுக்கு  வழங்கப்படும் உதவித்தொகை கொடுப்பனவு  5000 ரூபாவிலிருந்து  7500 ரூபா  வரை அதிகரிக்கப்பட்டாலும் அவை குறித்த திகதிகளில் கிடைப்பதாக இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை இவ்வாறான சிரமங்களுக்கு உள்ளாக்காமல் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர் மேலும் பேசுகையில், பொது நிர்வாக சுற்றறிக்கை 1988/27இன் பிரகாரம், அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்பை வழங்கும்போது மாற்றுத் திறனாளிக்கு 3 வீத  வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் என இருந்தாலும், அது இன்று வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்து புதிய சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டாலும் இதுவரை அது கொண்டுவரப்படவில்லை. குறித்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் என்ன? சனத்தொகை கணக்கெடுப்பின் பிரகாரம், இந்நாட்டில் 17 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.  இவர்களது உரிமைகள் தொடர்பில் பல முறை கேள்வியெழுப்பியுள்ளேன். சைகை மொழி சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து அதை நாட்டின் சட்டமாக மாற்றுங்கள். பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகள் பிரவேச  அணுகல் விடயத்தில் பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு வற்  வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. அவற்றுக்கான தீர்வுகளை வழங்குங்கள். அதுமட்டுமல்லாமல் இவர்களின் காப்புறுதி குறித்து அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/182038
    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.