Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனுக்கு அஞ்சலி: சுரேஷ் விக்கியின் தேசிய அக்கறை!

Featured Replies

   போராட்டம் தவிர தனிப்பட காழ்புணர்வுகளாலும்  மனிதாபிமானம் கொஞ்சம் கூட  இல்லாமலும்  கொலைகளைச் செய்ததில் எல்லா இயக்கத்திற்கும் பங்கு உள்ளது. சிலது அதிகம்.  சிலது குறைவு என்பதை தவிர அதில் எந்த வித்தியாசமும் இல்லை. அப்படி கூடிக் குறைந்ததற்கு அதைச் செய்யக்கூடிய பலம் காரணமாக இருந்ததே தவிர மனிதாபிமானமோ குற்ற உணர்வோ காரணமாக இருக்கவில்லை என்பது இங்கு கருத்தாடும் நாம் உட்பட அனைத்து தமிழ் மக்களும் அறிந்த உண்மை. 

இதற்கான வாழும் சாட்சியங்கள் இன்றும் பல உண்டு. பொது வெளியில் வரத பல விடயங்களை நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல மனிதர்களை எழுமாறாக நாம் சந்திக்கும் போது அறிந்து கொள்ள முடியும். இங்கு பலர் கேட்பது போல் அனைத்து உண்மைகளும் வெளிவருமானால் நாம் மதிப்பு வைத்திருக்கும் பலரின் கைகளில் அப்பாவிகளின் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைவோம். போராட்ட  நியாயத்தின் பால் இந்த அநீதிகளை சகித்து வாழ்ந்த இனமே எமது இனம் என்பதே உண்மை.

இதே கிருபன் புளொட்டின்  உட்கொலைகள் பற்றி இணைத்த பதிவுக்கு யாரும் ஆதாரமும் கேட்கவில்லை பழசை கிளறக்கூடாது என்று அறிவுரையும் கூறவில்லை என்பது ஆச்சரியமல்ல.  

  • Replies 94
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, tulpen said:

   போராட்டம் தவிர தனிப்பட காழ்புணர்வுகளாலும்  மனிதாபிமானம் கொஞ்சம் கூட  இல்லாமலும்  கொலைகளைச் செய்ததில் எல்லா இயக்கத்திற்கும் பங்கு உள்ளது. சிலது அதிகம்.  சிலது குறைவு என்பதை தவிர அதில் எந்த வித்தியாசமும் இல்லை. அப்படி கூடிக் குறைந்ததற்கு அதைச் செய்யக்கூடிய பலம் காரணமாக இருந்ததே தவிர மனிதாபிமானமோ குற்ற உணர்வோ காரணமாக இருக்கவில்லை என்பது இங்கு கருத்தாடும் நாம் உட்பட அனைத்து தமிழ் மக்களும் அறிந்த உண்மை. 

இதற்கான வாழும் சாட்சியங்கள் இன்றும் பல உண்டு. பொது வெளியில் வரத பல விடயங்களை நேரடியாகப் பாதிக்கப்பட்ட பல மனிதர்களை எழுமாறாக நாம் சந்திக்கும் போது அறிந்து கொள்ள முடியும். இங்கு பலர் கேட்பது போல் அனைத்து உண்மைகளும் வெளிவருமானால் நாம் மதிப்பு வைத்திருக்கும் பலரின் கைகளில் அப்பாவிகளின் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைவோம். போராட்ட  நியாயத்தின் பால் இந்த அநீதிகளை சகித்து வாழ்ந்த இனமே எமது இனம் என்பதே உண்மை.

இதே கிருபன் புளொட்டின்  உட்கொலைகள் பற்றி இணைத்த பதிவுக்கு யாரும் ஆதாரமும் கேட்கவில்லை பழசை கிளறக்கூடாது என்று அறிவுரையும் கூறவில்லை என்பது ஆச்சரியமல்ல.  

இதே கிருபன் புளொட்டின்  உட்கொலைகள் பற்றி இணைத்த பதிவுக்கு யாரும் ஆதாரமும் கேட்கவில்லை பழசை கிளறக்கூடாது என்று அறிவுரையும் கூறவில்லை என்பது ஆச்சரியமல்ல.  

ஒருவர் தனது வாழ்வை எழுத்துவத்துக்கும் 

ஒருவர் எழுந்த மாத்திரத்தில் வாந்தி எடுப்பதுக்கும் 
உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா? தெரியாது போல நாடகம் போடுகிறீர்களா?

திலீபன் நல்லூரில் நின்றுகொண்டு ஆயிரம்பேரை சுட்டார் என்றால் 
வாசிக்கும் நீங்கள் சந்திர மண்டலத்தில் இருந்ததுபோல் நாடகம் போடலாம் 
மற்றவரும் ஏன் நாடகம் போட வேண்டும்.?

கிருபனுக்கு இந்த கட்டுரையில் என்ன பொய் இருக்கிறது என்பதை 
எல்லாம் சுட்டி காட்டி மேலே எழுதி இருக்கிறேன் அப்போ தனிமனித தாக்குதல் செய்து 
தன்னை அறிவு சுடராக காட்ட முனைந்த இதே கிருபன் 
இப்போ நந்தன்  எழுதி விட்டாரம் தான் ஏற்று கொள்கிறேனாம் 
இது நாடகம் இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் ஒரு நியாயவாதி மற்றவன் எல்லாம் அடி  முட்டாள் 
என்ற மனநிலையில்தான் உங்கள் அக்கருத்து இருக்கிறது 

தமிழ் இணையத்திலேயே புலிகளுக்கு எதிரான கருத்துக்கள் கட்டுரைகளை 
காவி நிற்பது யாழ்களம்தான் காரணம் இப்படி தேடி தேடி இணைப்பதுதான் 
நாமும் இத களத்தில்தான் கருத்துக்களை பகிர்ந்துவருகிறோம் 

இணைப்பதை யாழ்களத்தின் நலன் கருதி கொஞ்சம் என்றாலும்
வாந்திக்கும் வார்த்தைக்கும் வித்தியாசம் புரிந்து எழுதுங்கள் இணையுங்கள் என்றுதான் கேட்க்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இந்த பதிவை இணைத்தவரின் ஒரே நோக்கம் இத்திரி கொழுந்துவிட்டு எரியவேண்டும் என்பதுதான். அது நன்றாகவே நடக்கிறது. இப்பதிவை ஆதரித்து வாக்களித்தவர்களைப் பொறுத்தவரை இப்பதிவு புலிகளை விமர்சிக்கிறது என்பதே போதுமானது.

மற்றும்படி, இக்கட்டுரையாளர் செய்திருப்பது இவை மட்டும்தான்.

1. தமிழ்த் தேசியம் பற்றி எவர் பேசினாலும் பிழை. ஏனென்றால் அப்படியொன்று தேவையற்றது.

2. விக்கியும், சுரேஷும் போர்க்குற்றவாளிகள் அல்லது புலிகளை அதிகபட்ச தஆண்டனைக்கு உள்ளாக்கியவர்கள், ஆகவே அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுடன் அவர்களுக்கு தமிழர்பற்றிப் பேச அருகதையில்லை.

3. புலிகள் முதலாளித்துவ பாஸிசவாதிகள், அப்பாவிகளை நூற்றுக்கணக்கில் கொன்றவர்கள், ஆகவே அவர்களுக்காக யாரும் பேசத் தேவையில்லை.

4. மாற்றியக்கங்களில் இருந்த பெருமளவு அறிஞர்களையும், கோட்பாட்டாளர்களையும் புலிகள் அநியாயமாகக் கொன்றனர். அதுவரையில் மக்களுக்காக அல்லும் பகலும் போரிட்ட இந்த மாற்றியக்கங்கள் புலிகளைப் பழிவாங்கவே இந்திய இலங்கை ராணுவத்துடன் இணைந்துகொண்டனர், ஆகவே இது தவறென்று பார்க்கப்படக் கூடாது.

5. இந்திய ராணுவத்திற்கெதிராக பிரேமதாசாவுடம் சேர்ந்து புலிகள் போராடியது தமிழர்களைக் காட்டிக் கொடுத்ததாகிறது. இந்திய ராணுவத்துடன் சண்டையிட்டு அவர்கள் அழிந்திருந்தால் வரவேற்றிருக்கலாம். 

6. தமிழ்த்தேசியம் பேசுவது சர்வ உலக சோஷலிசத்திற்கு எதிரானது, ஆகவே தமிழர்கள் தமக்கான சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுவதை விட்டு சிங்களவர்கள் உடபட மொத்த இலங்கையர்களுக்காகவும் போராட வேண்டும்.

தண்ணியடிச்சாக் குப்புற விழுந்து படுக்கிறதை விட்டுட்டு, கருத்தெழுதிக்கொண்டிருக்கிறது இந்தச் சோஷலிஸக் கும்பல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

கிருபனுக்கு இந்த கட்டுரையில் என்ன பொய் இருக்கிறது என்பதை 
எல்லாம் சுட்டி காட்டி மேலே எழுதி இருக்கிறேன்

மேற்கோள் எல்லாம் சுருக்கப்பட்டதால் நீங்கள் நீலத்திலும் சிவப்பிலும் எழுதியதைக் கவனிக்கவில்லை😱

இப்போதுதான் expand பண்ணி படித்தேன். 

 

2 minutes ago, ரஞ்சித் said:

இங்கே இந்த பதிவை இணைத்தவரின் ஒரே நோக்கம் இத்திரி கொழுந்துவிட்டு எரியவேண்டும் என்பதுதான். அது நன்றாகவே நடக்கிறது

கருத்தாடல் களத்தில் திரி எரியத்தானே வேண்டும்😁! சும்மா வெட்டி ஒட்டி பக்கங்களை நிரப்பி என்ன பிரயோசனம்?

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையை இணைத்தவரைத் திட்டித் தீர்க்கும் ஒரு புதிய போக்கு உருவாகி வருகிறது என நினைக்கிறேன். சில நாட்கள் முன்பு ஒரு கொல்லப் பட்ட அரசியல் தலைவரைப் பற்றி கனேடிய எழுத்தாளர் எழுதிய கட்டுரையை இணைத்தவரை எவரும் திட்டவில்லை! மாறாக நன்றாக ஒரு புதுத்தியரி கயிறு திரிக்க அதைப் பயன்படுத்தினர்.

எனவே, யார் இணைக்கிறார் என்பது தான் இங்க பிரச்சினை போலிருக்கு! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

கட்டுரையை இணைத்தவரைத் திட்டித் தீர்க்கும் ஒரு புதிய போக்கு உருவாகி வருகிறது என நினைக்கிறேன்

இணைக்கும்போது என்ன மாதிரியான கருத்துக்கள் வரும் என்று தெரியாமலா இருக்கின்றேன். 😀

தமிழர்கள் பழமைவாதத்தில் ஊறிய வலதுசாரிக் கொள்கைகளைக் கொண்டுள்ளவர்கள். ஆனால் புரட்சிகரமான சிந்தனையுள்ளவர்கள் என்று தங்களை ஏமாற்றுபவர்கள்.

இடதுசாரிச் சிந்தனை மூலம் உலகுக்கு கிடைத்த நன்மைகள் என்னவென்று தெரியாமல் சும்மா எழுதுபவர்கள் எல்லாம் ஒரு 20 வருடம் ட்ரம்ப் போன்றவர்களின் கீழ் வாழ்ந்தால்தான் புரியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Justin said:
2 minutes ago, கிருபன் said:

 

 

சுத்தியிருந்து கூட்டாய் ஒப்பாரி வைக்கிற இன்னும் இரண்டு பேரை காணேல்லை :grin:

அதிலை ஒருத்தர் எப்பவும் சோடியாய்த்தான் வருவார் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இணைக்கப்பட்ட பதிவு நடுநிலைமையானதோ, திலீபனின் தியாகத்தை மெச்சுவதோ அல்ல. மாறாக, நடுநிலைமை என்கிற பெயரில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட, இன்றும் ஈடுபடும் பலரை குற்றஞ்சாட்டி எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்த் தேசியம் என்று இல்லாமல் மொத்த இலங்கை மக்களினது சுயநிர்ணய உரிமை என்று என்ன எழுதுவதென்று தெரியாமலேயே எழுதி முடிக்கப்பட்டிருக்கிறது.

நோக்கம் ஒன்றுதான், திலீபனின் மரணம் போற்றப்படவேண்டியதொன்றல்ல, அதற்கு சாதகமாகப் பேசுவோர் கொலைகாரர்கள். அவர்கள் போடுவது வேசம். 

சரி, இப்பந்தியை இணைத்தவர் அண்மைக்காலமாக இக்களத்தில் இணைத்துவரும் பதிவுகளால் அடைந்தது என்ன? முக்கியமாக தெற்கு நோக்கிச் சாயும் கிழக்கு மக்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பதிவிற்கு பதிலாக ஸ்டான்லி எழுதிய வடக்குத் தமிழர்மீதான் காழ்ப்புணர்வினைக் கொட்டும் பதிவை இங்கே கொண்டுவந்து இணைத்ததன் மூலம் அவர் அடைய விரும்பியதும், அடைந்ததும் என்ன? இதனால் ஏற்பட்ட நண்மையென்ன? கருத்தாளர்களிடையே கசப்புணர்வும் விரிசலும் மட்டும்தானே? இந்த இணைப்புகளால் ஆக்கபூர்வமான எந்த முடிவையும் இப்பதிவுகள் அடையவில்லை என்பது நிதர்சனம்.

கருத்தாளர்களிடையே பிணக்குகளையும், தர்க்கங்களையும் ஏற்படுத்தும் நோக்கம் மட்டுமே இங்கு எனக்குத் தெரிகிறது. 

5 hours ago, கிருபன் said:

சும்மா வெட்டி ஒட்டி பக்கங்களை நிரப்பி என்ன பிரயோசனம்?

இந்த ஆக்கம் உங்களதா? எங்கிருந்தும் வெட்டியொட்டப்படவில்லையென்று உங்களால் உறுதியாகக் கூறமுடியுமா? 

13 minutes ago, கிருபன் said:

ஆனால் புரட்சிகரமான சிந்தனையுள்ளவர்கள் என்று தங்களை ஏமாற்றுபவர்கள்.

இடதுசாரிச் சிந்தனை மூலம் உலகுக்கு கிடைத்த நன்மைகள்

தங்களைப் புரட்சியாளர்கள் என்று எண்ணிக்கொண்டு மதுபோதையில் உளறும் போலிச் சோசலிச கூப்பாடுகளே இன்றும் தமது கனவுகளை மற்றையவர்மேலான காழ்ப்புணர்வுகளாக கொட்டி வருகிறார்கள். அதிலொருவர்தான் இந்த சபா நாவலன்.

அடுத்ததாக சோசலிசத்தித்தினால் அழிந்தவைதான் உண்டேயன்றி வாழ்ந்தவை ஏதும் இல்லை. ரஷ்ஷியாவும், சீனாவும் செய்வதுதான் சோஷலிசம் என்று எண்ணினால் அது மற்றையவர் தவறல்ல. 

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

 

அடுத்ததாக சோசலிசத்தித்தினால் அழிந்தவைதான் உண்டேயன்றி வாழ்ந்தவை ஏதும் இல்லை. ரஷ்ஷியாவும், சீனாவும் செய்வதுதான் சோஷலிசம் என்று எண்ணினால் அது மற்றையவர் தவறல்ல. 

அப்படியா? ரஷ்யாவும் சீனாவும் மட்டும் தான் உங்களுக்கு சோசலிசம் என்றதும் மனதில் வரும் நாடுகளா? இலங்கையின் முழுமையான பெயர் என்ன ரஞ்சித்? உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

சரி, இப்பந்தியை இணைத்தவர் அண்மைக்காலமாக இக்களத்தில் இணைத்துவரும் பதிவுகளால் அடைந்தது என்ன? முக்கியமாக தெற்கு நோக்கிச் சாயும் கிழக்கு மக்கள் எனும் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட பதிவிற்கு பதிலாக ஸ்டான்லி எழுதிய வடக்குத் தமிழர்மீதான் காழ்ப்புணர்வினைக் கொட்டும் பதிவை இங்கே கொண்டுவந்து இணைத்ததன் மூலம் அவர் அடைய விரும்பியதும், அடைந்ததும் என்ன? இதனால் ஏற்பட்ட நண்மையென்ன? கருத்தாளர்களிடையே கசப்புணர்வும் விரிசலும் மட்டும்தானே? இந்த இணைப்புகளால் ஆக்கபூர்வமான எந்த முடிவையும் இப்பதிவுகள் அடையவில்லை என்பது நிதர்சனம்.

ரஞ்சித்,

பதிவுகளை இணைப்பது அவற்றைப் பற்றிக் கருத்தாடலையும் விமர்சனங்களையும் வைக்கத் தூண்டத்தான். இல்லாவிட்டால் கருத்துக்களம் எதற்கு? 

கருத்துக்கள் வைப்பதன் மூலம் கசப்புணர்வு வருவதற்கு உணர்ச்சிவசப்படுவதுதான் காரணம். 

MR ஸ்ராலின் எழுதிய நீண்ட விமர்சனம் நிலாந்தனின் கட்டுரைக்கானது. அதனால்தான் இணைத்திருந்தேன். ஸ்ராலினதும் பிள்ளையானினதும் கொள்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களை விரும்பாதற்கு தனிப்பட்ட காரணம் எனக்கு உள்ளது. அதை யாழில் சந்தர்ப்பம் வரும்போது அதற்குரிய திரியில் எழுதுகின்றேன்.

1 hour ago, ரஞ்சித் said:

இந்த ஆக்கம் உங்களதா? எங்கிருந்தும் வெட்டியொட்டப்படவில்லையென்று உங்களால் உறுதியாகக் கூறமுடியுமா?

முதல் கட்டுரை வெட்டி ஒட்டப்பட்டது என்பது அதன் இணைப்பின் மூலம் தெரியவில்லையா?

நான் சொல்ல வந்தது ஒரே திரியில் பக்கம் பக்கமாக வெட்டி ஒட்டுவதை.

1 hour ago, ரஞ்சித் said:

மதுபோதையில் உளறும் போலிச் சோசலிச கூப்பாடுகளே இன்றும் தமது கனவுகளை மற்றையவர்மேலான காழ்ப்புணர்வுகளாக கொட்டி வருகிறார்கள். அதிலொருவர்தான் இந்த சபா நாவலன்.

சபா நாவலன் மதுபோதையில் உளறுகின்றார் என்பதற்கும், அவர்தான் இணைத்த கட்டுரையை எழுதினார் என்பதற்கும் ஆதாரமில்லை. ஆதாரங்களை வைக்குமாறு கேட்டுக்கொண்டே அவதூறு எழுதலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

இங்கு பலர் கேட்பது போல் அனைத்து உண்மைகளும் வெளிவருமானால் நாம் மதிப்பு வைத்திருக்கும் பலரின் கைகளில் அப்பாவிகளின் இரத்தக்கறை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைவோம். போராட்ட  நியாயத்தின் பால் இந்த அநீதிகளை சகித்து வாழ்ந்த இனமே எமது இனம் என்பதே உண்மை.

மறுக்கவே முடியாத உண்மைகள்.

54 minutes ago, Justin said:

உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

இலங்கையின் முறையை பின்பற்றி நான் முதல் அமைச்சராக வந்தால் எல்லோருக்கும் இலவச கல்வி இலவச மருத்துவம் என்று சொல்லும் சீமானின் கொள்கையும் அதை சார்ந்ததே

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

அது இதோ?

அது இதோ?

சுரேஷ் பிரேமசந்திரன் பற்றி ஆக்கபூர்வனமான ஏதும் கட்டுரை இருந்தால் கொண்டுவாருங்கள் 
விக்கியர் நீதிபதியாக இருந்தார் அவரின் கடந்த காலம் எப்படி என்று இங்கு பலருக்கும் தெரியாது 
அது பற்றி ஏதும் இருந்தால் கொண்டுவாருங்கள் 

எந்த ஆதாரமும் அற்று ஒருவன் வெறும் வாந்தியாகவே எடுத்திருக்கும் 
ஒரு வாந்தியை காவி நீங்கள் உங்கள் தரத்தை தாழ்த்தி கொள்கிறீர்கள் 

என்னுடைய கேள்வியே அதுதான்?

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

இலங்கையின் முழுமையான பெயர் என்ன ரஞ்சித்? உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

ஏன் எதற்கெடுத்தாலும் எனக்கு இலவசக் கல்வியைத் தந்த நாடு எது என்று இங்கே சிலர் கேட்கிறீர்கள்? எனக்கு இலவசக் கல்வியைத் தந்ததற்காக மட்டுமே என்மீதான முழுக் கட்டுப்பாட்டையும், என்னை என்னவேண்டுமானாலும் செய்துவிடலாம் என்னும் அதிகாரத்தையும் அந்த நாடு பெற்றுவிடுகிறதா என்ன? 

அடுத்ததாக இலவசக் கல்வியைத் தரும் நாடு இலங்கை மட்டுமல்லவே. உலகில் தரமான இலவசக் கல்வியை வழங்கும் முதல்ப் பத்து நாடுகளின் பட்டியலை நான் இடுகிறேன், இவற்றுள் எத்தனை சோசலிச நாடுகள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

1. ஜேர்மனி  2. நோர்வே  3. சுவீடன்  4. ஒஸ்ட்ரியா  5. பின்லாந்து  6.  செக் குடியரசு  7. பிரான்ஸ்  8. பெல்ஜியம்  9. கிரேக்கம்  10. ஸ்பெயின். 

இவையெல்லாமே தரமான, இலவசக் கல்விக்கொள்கையைக் கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக இலங்கையின் பெயருக்கு வருவோம். "சனநாயக சோசலிசக் குடியரசு". இந்தப் பெயரில் சொல்லப்படும் விடயங்களான நாட்டின் மொத்த பொருட்களின் உற்பத்தி, பகிர்வு, பண்டமாற்று ஆகியன மொத்த மக்களுக்கும் இடையே சமமாகப் பகிரப்படும் நடைமுறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையாகவே இலங்கையில் தற்போது நடக்கிறதா? அதிகாரம் ஒரு இனக்குழுமத்தின் கைகளில் ஒதுங்கிக் கிடப்பது சோசலிஷமா? ஒரு இனம் இன்னொரு இனத்தின் வாழ்வாதாரங்களைப் பாழாக்கி, அதனது வாழிடங்களையும், பொருளாதார வளங்களையும் அழித்து, அவ்வினத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்குவது சோசலிசமா? சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி முறைமைக்கும் சோசலிசத்திற்குமிடையிலான தொடர்பு என்ன? 20 ஆவது சட்டமூலத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? இன்று உயிரற்றுக் கிடக்கும் லங்கா சம சமாஜக் கட்சியினைத்தவிர, சோசலிசத்தை வரிந்துகொண்ட இலங்கை சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் இன்றைய நிலைப்பாடும், செல்லும் திசையும் என்ன? 1950 களில் சோசலிசத்தை வரிந்துகொண்ட பண்டாரநாயக்காதான் இலங்கையில் இன ஒதுக்கல்களை ஆரம்பித்தார் என்பதும், பின்னாட்களில் அவரது மனைவி சோசலிசத்தை நடத்துகிறேன் என்று இரும்புக் கரம்கொண்டு அடக்கி, மார்க்ஸிய - லெனினிஸ்ட் இடதுசாரிகளை அழிக்க இந்தியாவிலிருந்து ராணுவ உதவியும் கேட்டது சோசலிசமா? அல்லது, அன்று மார்க்ஸிய சித்தாந்தம் பேசிய மக்கள் விடுதலை முன்னணி இன்று செல்லும் பாதை சோசலிசமா? சிங்கள பெளத்த இனத்திற்கு ஆதரவாக, அரசியலை நடத்தும் இவர்களை எப்படிச் சோசலிசவாதிகளாகப் பார்க்கிறீர்கள்? வெறுமனே பெயரில் மட்டுமே சோசலிசம் இருந்தால் அது சோசலிச நாடெனும் அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகிறதா? 

 இலங்கையில் எங்கே, எப்போது  எல்லா இனங்களும் சமமாக நடத்தப்படிருக்கின்றன என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். 

 

நீங்கள் தரமான சோசலிச நாடெனும் உதரணத்திற்காக இலங்கையினை எனக்குக் காட்டியபோது உங்களுகே அது அபத்தமாகப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அதனை மறுத்தாலும் நான் ஆச்சரியப்படவில்லை. 


 

5 hours ago, கிருபன் said:

முதல் கட்டுரை வெட்டி ஒட்டப்பட்டது என்பது அதன் இணைப்பின் மூலம் தெரியவில்லையா?

அதனால்த்தான் அந்தக் கேள்வியையே கேட்டேன். மற்றையவர்களை வெட்டி ஒட்டுபவர்கள் என்று விமர்சனம் செய்யுமுன் நாம் இணைப்பதுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான் என்கிற தெளிவு எமக்கு இருக்கவேண்டும். 

நான் நீங்கள் செய்வதைத் தவறென்று சொல்லவில்லை. கருத்துக்களம் கருத்தாடத்தானே, அதில் பிறகு எல்லோரும் சமரசமாகப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல, ஆகவே உங்கள் மீதான தாக்குதலாக இதைப் பார்க்க வேண்டாம். 

5 hours ago, கிருபன் said:

சபா நாவலன் மதுபோதையில் உளறுகின்றார் என்பதற்கும், அவர்தான் இணைத்த கட்டுரையை எழுதினார் என்பதற்கும் ஆதாரமில்லை. ஆதாரங்களை வைக்குமாறு கேட்டுக்கொண்டே அவதூறு எழுதலாமா?

என்னிடம் ஆதாரம் இல்லை. மேலே ஒரு கருத்தில் இனியொரு இணையத்தில் எழுதும் சபா நாவலனே இதையும் எழுதுகிறார் என்கிற கருத்தினை அடிப்படையாக வைத்தே அதை எழுதினேன். மற்றும்படி, இன்று நடைமுறையில் இல்லாத சித்தாத்தங்களைப் பேசுவோர் நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட வெளியில் வாழ்கிறார்கள் எனும் கருத்தினையே "மதுபோதையில் உளருதல்" என்று தொனிப்பட எழுதினேன். சத்தியமாக சபா நாவலன் தண்னியடிப்பாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. 

Edited by ரஞ்சித்
spelling

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

 

உலக அரசியலில் யார் சுத்தம் எண்டு ஒருக்கால்  சொல்லுங்கோ பாப்பம் தங்கச்சி?
 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

அவர் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடவில்லையென்பதை எவரும் நம்பவில்லை. ஆனால், அவர்மீதான குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடம் இங்கே எழுதினால் இக்கட்டுரைபற்றிய தெளிவு கிடைக்கும் என்கிற நோக்கிலேயே எழுதப்பட்டது.

அவ்வாறே முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் மீதான எழுந்தமானமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும். தான் எழுதும் அபத்தமான விமர்சனத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக மட்டுமே போகிறபோக்கில் புலிச் சந்தேக நபர்களுக்கு அதியுட்ச தண்டனைகளை அவர் வாங்கிக்கொடுத்தார் எனும் கட்டுரையாளரின் விசமத்தனத்திற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் படிப்பவர்களுக்கு இக்கட்டுரையின் உண்மைத்தன்மை புரியும் என்பதனாலேயே அது கேட்கப்பட்டது.

மற்றும்படி சுரேஷின் கடந்தகாலம் பற்றிப் பலருக்கும் தெளிவான பார்வையே இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Justin said:

அப்படியா? ரஷ்யாவும் சீனாவும் மட்டும் தான் உங்களுக்கு சோசலிசம் என்றதும் மனதில் வரும் நாடுகளா? இலங்கையின் முழுமையான பெயர் என்ன ரஞ்சித்? உங்களுக்கும் இங்கே பலருக்கும் இலவசக் கல்வி முதல் மருத்துவம் வரை தந்த இலங்கையின் பொருளாதார முறைமையின் பெயர் என்ன? 

நானும் கன காலமாய் பாத்துக்கொண்டுவாறன் உங்கை கன சனம் இந்துசமுத்திர முத்து இலங்கை இலவசக்கல்வி தந்தது...தந்தது...தந்தது எண்டு கத்திக்கொண்டு திரியுதுகள். அப்ப ஏன் பள்ளிக்கூட பொடியள் எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு அலையுதுகள்?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

அப்ப ஏன் பள்ளிக்கூட பொடியள் எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு அலையுதுகள்?

இலங்கை தமிழர்கள் எங்கே எல்லாம் இருக்கிறார்களோ அங்கே எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு தான் அலைகிறார்கள். சுவிட்சலாந்தில் இருந்து பிள்ளையை லண்டனுக்கு படிக்க அனுப்புவதும் அவுஸ்ரேலியாவில் இருந்து லண்டனுக்கு படிக்க அனுப்புவதும்  கூட  நடைபெறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, ரஞ்சித் said:

ஏன் எதற்கெடுத்தாலும் எனக்கு இலவசக் கல்வியைத் தந்த நாடு எது என்று இங்கே சிலர் கேட்கிறீர்கள்? எனக்கு இலவசக் கல்வியைத் தந்ததற்காக மட்டுமே என்மீதான முழுக் கட்டுப்பாட்டையும், என்னை என்னவேண்டுமானாலும் செய்துவிடலாம் என்னும் அதிகாரத்தையும் அந்த நாடு பெற்றுவிடுகிறதா என்ன? 

அடுத்ததாக இலவசக் கல்வியைத் தரும் நாடு இலங்கை மட்டுமல்லவே. உலகில் தரமான இலவசக் கல்வியை வழங்கும் முதல்ப் பத்து நாடுகளின் பட்டியலை நான் இடுகிறேன், இவற்றுள் எத்தனை சோசலிச நாடுகள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

1. ஜேர்மனி  2. நோர்வே  3. சுவீடன்  4. ஒஸ்ட்ரியா  5. பின்லாந்து  6.  செக் குடியரசு  7. பிரான்ஸ்  8. பெல்ஜியம்  9. கிரேக்கம்  10. ஸ்பெயின். 

இவையெல்லாமே தரமான, இலவசக் கல்விக்கொள்கையைக் கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக இலங்கையின் பெயருக்கு வருவோம். "சனநாயக சோசலிசக் குடியரசு". இந்தப் பெயரில் சொல்லப்படும் விடயங்களான நாட்டின் மொத்த பொருட்களின் உற்பத்தி, பகிர்வு, பண்டமாற்று ஆகியன மொத்த மக்களுக்கும் இடையே சமமாகப் பகிரப்படும் நடைமுறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையாகவே இலங்கையில் தற்போது நடக்கிறதா? அதிகாரம் ஒரு இனக்குழுமத்தின் கைகளில் ஒதுங்கிக் கிடப்பது சோசலிஷமா? ஒரு இனம் இன்னொரு இனத்தின் வாழ்வாதாரங்களைப் பாழாக்கி, அதனது வாழிடங்களையும், பொருளாதார வளங்களையும் அழித்து, அவ்வினத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்குவது சோசலிசமா? சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி முறைமைக்கும் சோசலிசத்திற்குமிடையிலான தொடர்பு என்ன? 20 ஆவது சட்டமூலத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? இன்று உயிரற்றுக் கிடக்கும் லங்கா சம சமாஜக் கட்சியினைத்தவிர, சோசலிசத்தை வரிந்துகொண்ட இலங்கை சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் இன்றைய நிலைப்பாடும், செல்லும் திசையும் என்ன? 1950 களில் சோசலிசத்தை வரிந்துகொண்ட பண்டாரநாயக்காதான் இலங்கையில் இன ஒதுக்கல்களை ஆரம்பித்தார் என்பதும், பின்னாட்களில் அவரது மனைவி சோசலிசத்தை நடத்துகிறேன் என்று இரும்புக் கரம்கொண்டு அடக்கி, மார்க்ஸிய - லெனினிஸ்ட் இடதுசாரிகளை அழிக்க இந்தியாவிலிருந்து ராணுவ உதவியும் கேட்டது சோசலிசமா? அல்லது, அன்று மார்க்ஸிய சித்தாந்தம் பேசிய மக்கள் விடுதலை முன்னணி இன்று செல்லும் பாதை சோசலிசமா? சிங்கள பெளத்த இனத்திற்கு ஆதரவாக, அரசியலை நடத்தும் இவர்களை எப்படிச் சோசலிசவாதிகளாகப் பார்க்கிறீர்கள்? வெறுமனே பெயரில் மட்டுமே சோசலிசம் இருந்தால் அது சோசலிச நாடெனும் அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகிறதா? 

 இலங்கையில் எங்கே, எப்போது  எல்லா இனங்களும் சமமாக நடத்தப்படிருக்கின்றன என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். 

 

நீங்கள் தரமான சோசலிச நாடெனும் உதரணத்திற்காக இலங்கையினை எனக்குக் காட்டியபோது உங்களுகே அது அபத்தமாகப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அதனை மறுத்தாலும் நான் ஆச்சரியப்படவில்லை. 


 

அதனால்த்தான் அந்தக் கேள்வியையே கேட்டேன். மற்றையவர்களை வெட்டி ஒட்டுபவர்கள் என்று விமர்சனம் செய்யுமுன் நாம் இணைப்பதுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான் என்கிற தெளிவு எமக்கு இருக்கவேண்டும். 

நான் நீங்கள் செய்வதைத் தவறென்று சொல்லவில்லை. கருத்துக்களம் கருத்தாடத்தானே, அதில் பிறகு எல்லோரும் சமரசமாகப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல, ஆகவே உங்கள் மீதான தாக்குதலாக இதைப் பார்க்க வேண்டாம். 

என்னிடம் ஆதாரம் இல்லை. மேலே ஒரு கருத்தில் இனியொரு இணையத்தில் எழுதும் சபா நாவலனே இதையும் எழுதுகிறார் என்கிற கருத்தினை அடிப்படையாக வைத்தே அதை எழுதினேன். மற்றும்படி, இன்று நடைமுறையில் இல்லாத சித்தாத்தங்களைப் பேசுவோர் நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட வெளியில் வாழ்கிறார்கள் எனும் கருத்தினையே "மதுபோதையில் உளருதல்" என்று தொனிப்பட எழுதினேன். சத்தியமாக சபா நாவலன் தண்னியடிப்பாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. 

இலங்கையைத் தெரியாதவர்களுக்கு புரியும்படியாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.மிகவும் நன்றி ரஞசித்.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

36 minutes ago, குமாரசாமி said:

நானும் கன காலமாய் பாத்துக்கொண்டுவாறன் உங்கை கன சனம் இந்துசமுத்திர முத்து இலங்கை இலவசக்கல்வி தந்தது...தந்தது...தந்தது எண்டு கத்திக்கொண்டு திரியுதுகள். அப்ப ஏன் பள்ளிக்கூட பொடியள் எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு அலையுதுகள்?

இலவச கல்வி தந்தபடியால்த் தான் விரும்பிய நேரங்களில் பாடசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
வாசிகசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
பாடசாலைப் பிள்ளைகளை கற்பழிக்க முடிகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை தமிழர்கள் எங்கே எல்லாம் இருக்கிறார்களோ அங்கே எல்லாம் ரியூசன் ரியூசன் எண்டு தான் அலைகிறார்கள். சுவிட்சலாந்தில் இருந்து பிள்ளையை லண்டனுக்கு படிக்க அனுப்புவதும் அவுஸ்ரேலியாவில் இருந்து லண்டனுக்கு படிக்க அனுப்புவதும்  கூட  நடைபெறுகிறது.

சார்! ரியூசன் வேறு. மொழிசார் படிப்புகள் வேறு. 

முதல்லை சிலோன் ரியூசன் என்னெண்டு தெரியுமோ?
வகுப்பு வாத்தியாரே சொல்லுவார் நான் அங்கை இன்ன இடத்திலை ரியூசன் நடத்துறன் அங்கை மிச்சத்தை சொல்லித்தல்லாம் எண்டு...

விளங்க நினைப்பவரே நீங்கள் சுமந்திரன் அபிமானியா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஏன் எதற்கெடுத்தாலும் எனக்கு இலவசக் கல்வியைத் தந்த நாடு எது என்று இங்கே சிலர் கேட்கிறீர்கள்? எனக்கு இலவசக் கல்வியைத் தந்ததற்காக மட்டுமே என்மீதான முழுக் கட்டுப்பாட்டையும், என்னை என்னவேண்டுமானாலும் செய்துவிடலாம் என்னும் அதிகாரத்தையும் அந்த நாடு பெற்றுவிடுகிறதா என்ன? 

அடுத்ததாக இலவசக் கல்வியைத் தரும் நாடு இலங்கை மட்டுமல்லவே. உலகில் தரமான இலவசக் கல்வியை வழங்கும் முதல்ப் பத்து நாடுகளின் பட்டியலை நான் இடுகிறேன், இவற்றுள் எத்தனை சோசலிச நாடுகள் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

1. ஜேர்மனி  2. நோர்வே  3. சுவீடன்  4. ஒஸ்ட்ரியா  5. பின்லாந்து  6.  செக் குடியரசு  7. பிரான்ஸ்  8. பெல்ஜியம்  9. கிரேக்கம்  10. ஸ்பெயின். 

இவையெல்லாமே தரமான, இலவசக் கல்விக்கொள்கையைக் கொண்டிருக்கின்றன.

அடுத்ததாக இலங்கையின் பெயருக்கு வருவோம். "சனநாயக சோசலிசக் குடியரசு". இந்தப் பெயரில் சொல்லப்படும் விடயங்களான நாட்டின் மொத்த பொருட்களின் உற்பத்தி, பகிர்வு, பண்டமாற்று ஆகியன மொத்த மக்களுக்கும் இடையே சமமாகப் பகிரப்படும் நடைமுறை என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், அது உண்மையாகவே இலங்கையில் தற்போது நடக்கிறதா? அதிகாரம் ஒரு இனக்குழுமத்தின் கைகளில் ஒதுங்கிக் கிடப்பது சோசலிஷமா? ஒரு இனம் இன்னொரு இனத்தின் வாழ்வாதாரங்களைப் பாழாக்கி, அதனது வாழிடங்களையும், பொருளாதார வளங்களையும் அழித்து, அவ்வினத்தின் இருப்பினைக் கேள்விக்குறியாக்குவது சோசலிசமா? சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி முறைமைக்கும் சோசலிசத்திற்குமிடையிலான தொடர்பு என்ன? 20 ஆவது சட்டமூலத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான தொடர்பு என்ன? இன்று உயிரற்றுக் கிடக்கும் லங்கா சம சமாஜக் கட்சியினைத்தவிர, சோசலிசத்தை வரிந்துகொண்ட இலங்கை சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் இன்றைய நிலைப்பாடும், செல்லும் திசையும் என்ன? 1950 களில் சோசலிசத்தை வரிந்துகொண்ட பண்டாரநாயக்காதான் இலங்கையில் இன ஒதுக்கல்களை ஆரம்பித்தார் என்பதும், பின்னாட்களில் அவரது மனைவி சோசலிசத்தை நடத்துகிறேன் என்று இரும்புக் கரம்கொண்டு அடக்கி, மார்க்ஸிய - லெனினிஸ்ட் இடதுசாரிகளை அழிக்க இந்தியாவிலிருந்து ராணுவ உதவியும் கேட்டது சோசலிசமா? அல்லது, அன்று மார்க்ஸிய சித்தாந்தம் பேசிய மக்கள் விடுதலை முன்னணி இன்று செல்லும் பாதை சோசலிசமா? சிங்கள பெளத்த இனத்திற்கு ஆதரவாக, அரசியலை நடத்தும் இவர்களை எப்படிச் சோசலிசவாதிகளாகப் பார்க்கிறீர்கள்? வெறுமனே பெயரில் மட்டுமே சோசலிசம் இருந்தால் அது சோசலிச நாடெனும் அந்தஸ்த்தைப் பெற்றுவிடுகிறதா? 

 இலங்கையில் எங்கே, எப்போது  எல்லா இனங்களும் சமமாக நடத்தப்படிருக்கின்றன என்பதைச் சொல்லுங்கள் பார்க்கலாம். 

 

நீங்கள் தரமான சோசலிச நாடெனும் உதரணத்திற்காக இலங்கையினை எனக்குக் காட்டியபோது உங்களுகே அது அபத்தமாகப் பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அதனை மறுத்தாலும் நான் ஆச்சரியப்படவில்லை. 


 

அதனால்த்தான் அந்தக் கேள்வியையே கேட்டேன். மற்றையவர்களை வெட்டி ஒட்டுபவர்கள் என்று விமர்சனம் செய்யுமுன் நாம் இணைப்பதுகூட அப்படிப்பட்ட ஒன்றுதான் என்கிற தெளிவு எமக்கு இருக்கவேண்டும். 

நான் நீங்கள் செய்வதைத் தவறென்று சொல்லவில்லை. கருத்துக்களம் கருத்தாடத்தானே, அதில் பிறகு எல்லோரும் சமரசமாகப் போகவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல, ஆகவே உங்கள் மீதான தாக்குதலாக இதைப் பார்க்க வேண்டாம். 

என்னிடம் ஆதாரம் இல்லை. மேலே ஒரு கருத்தில் இனியொரு இணையத்தில் எழுதும் சபா நாவலனே இதையும் எழுதுகிறார் என்கிற கருத்தினை அடிப்படையாக வைத்தே அதை எழுதினேன். மற்றும்படி, இன்று நடைமுறையில் இல்லாத சித்தாத்தங்களைப் பேசுவோர் நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட வெளியில் வாழ்கிறார்கள் எனும் கருத்தினையே "மதுபோதையில் உளருதல்" என்று தொனிப்பட எழுதினேன். சத்தியமாக சபா நாவலன் தண்னியடிப்பாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. 

ரஞ்சித், உணர்ச்சி வசப்பட்டு அவசரப் பதில் பந்தி பந்தியாக எழுதாமல் நான் எதற்கு அந்தக் கேள்வியைக் கேட்டேன் என்று பார்க்க வேண்டும்! 

சோசலிசத்தால் அழிவே என்றீர்கள்! இலங்கையின் கலப்புப் பொருளாதார முறையில் சோசலிசம் இருக்கிறது. அதனால் தான் உங்களுக்கும் எனக்கும் இலவச கல்வியும் வசதிகளும்! உங்களை இதனால் இலங்கையின் அடக்கு முறையை பொறுத்துகொள்ள வேண்டுமென்று எங்கே எழுதினேன்? 

நீங்கள் பட்டியலிட்ட நாடுகளின் சமூக நலன் திட்டங்களும் சோசலிசத்திடமிருந்து கடன் வாங்கப்பட்டவையேயொழிய முதலில் இருந்த மன்னராட்சியாலோ, முதலாளித்துவத்தாலோ மட்டுமே வந்தவையல்ல. சோசலிசம் கலக்காத தனி முதலாளித்துவம் சமூக வளர்ச்சிக்கு என்ன செய்யும் என்பதற்கு நல்ல உதாரணம் அமெரிக்கா! பணம் இருப்பவனுக்கே பல்கலைக் கல்வி சாத்தியம், மற்றவர்கள் மிகவும் கஷ்டப் பட்டே உயர்கல்வி பெறலாம். மருத்துவ சேவைகள் பற்றி காசில்லாதவன் நினைத்தே பார்க்க முடியாது இங்கே.

இலங்கையில் சோசலிசப் பொருளாதார சமூகக் கொள்கைகளின் எல்லா நலன்களையும் அனுபவித்து விட்டு "சோசலிசம் அழிவே" என்று பேசும் நம்மவர் பலரைக் கண்டிருக்கிறேன். நாம் நடந்து வந்த பாதையை மறந்தவர்களாகவே அவர்களை நான் பார்க்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இலங்கையைத் தெரியாதவர்களுக்கு புரியும்படியாக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.மிகவும் நன்றி ரஞசித்.
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

இலவச கல்வி தந்தபடியால்த் தான் விரும்பிய நேரங்களில் பாடசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
வாசிகசாலைகளுக்கு குண்டு போட முடிகிறது.
பாடசாலைப் பிள்ளைகளை கற்பழிக்க முடிகிறது.

ஈழப்பிரியன் அண்ணை, உரையாடலில் எந்தக் கேள்விக்கு எனது இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டதென்று வடிவாக வாசித்து விட்டு எழுதலாமே? இலங்கையை நீங்கள் எந்த ஆண்டு கடைசியாக நேரே பார்த்தீர்கள் எண்டு ஒருக்கா சொன்னால் யாருக்கு இலங்கை தெரியும் என்று ஒரு தெளிவு வருமல்லவா?😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஈழப்பிரியன் அண்ணை, உரையாடலில் எந்தக் கேள்விக்கு எனது இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டதென்று வடிவாக வாசித்து விட்டு எழுதலாமே? இலங்கையை நீங்கள் எந்த ஆண்டு கடைசியாக நேரே பார்த்தீர்கள் எண்டு ஒருக்கா சொன்னால் யாருக்கு இலங்கை தெரியும் என்று ஒரு தெளிவு வருமல்லவா?😎

இங்கே அடிக்கடி இலவச கல்வி வைத்தியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு விரிவாக விளங்கக் கூடியவாறு எழுதியிருந்தார்.

மற்றும்படி இலங்கையை அறிவதற்கு அங்கு போய் படுத்துக்  கிடக்கவா வேண்டும்?

என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

என்னது சுரேஷ் பிரேமசந்திரன் சுத்தமானவரா?...ஆதாரம் வேற வேணுமா உங்களுக்கு:shocked: 

 

அக்கா என்ன திடீரென தமிழ் மறந்துபோச்சா?
வாசிக்க விளங்குதுதானே? அல்லது ஒரு குத்து மதிப்பில் எழுதுகிறீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கே அடிக்கடி இலவச கல்வி வைத்தியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு விரிவாக விளங்கக் கூடியவாறு எழுதியிருந்தார்.

மற்றும்படி இலங்கையை அறிவதற்கு அங்கு போய் படுத்துக்  கிடக்கவா வேண்டும்?

என்ன தான் சொல்ல வருகிறீர்கள்?

இலவசக் கல்வி பற்றி ஏன் கேள்வி வந்தது என்று உங்களுக்கு விளங்கியதா? இல்லையல்லவா? அது தான் பொயின்ற்.

மற்றபடி கணணித் திரையூடாக மட்டுமே இலங்கையைப் பற்றித் தெரிந்து கொண்டு தான் இங்கே பலர் கருத்து வைக்கிறார்கள் என்பது விளங்கக் கஷ்டமில்லையே? அது தான் சொன்னேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.