Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய  விரிவுரையாளர் படுகொலை! | Athavan News

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை!

பிரான்ஸில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டிய விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், சார்லி ஹெப்டோ பத்திரிகையில் வெளியான நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை காண்பித்ததாலும் குறித்த 18 வயது இளைஞன் ஆத்திரம் அடைந்து இந்த கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து குறித்த இளைஞனை கைதுசெய்ய முயன்ற போது, அவர் தப்பியோடியதால், அவரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணைகளை பரிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதன்போது, குறித்த இளைஞனிடமிருந்து சிறிய கைத்துப்பாக்கியும், ஒரு கூரான கத்தியும் பொலிஸார் கைப்பற்றினர்.

தாக்குதல் நடத்திய நபர், செசென் பகுதியைச் சேர்ந்த 18 வயது நிரம்பிய இளைஞர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் மாஸ்கோவில் பிறந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

‘எங்களுடைய குடிமகன் ஒருவரை இழந்துவிட்டோம். ஏனென்றால் அவர் மாணவர்களுக்கு கருத்து சுதந்திதத்தையும், நம்பகத்தன்மையையும் கற்றுக்கொடுத்ததற்காக! ஆசிரியர்களுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பு வழங்கும்’ என கூறினார்.

2015ஆம் ஆண்டு முகமது நபிகள் குறித்த கேலிச் சித்திரங்களை வெளியிட்டதற்காக பரிஸில் அமைந்துள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை நிறுவனம் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஸ்டெஃபேன் கார்போனியர் உட்பட 12பேர் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் நடந்த இரண்டாவது பயங்கரவாத தாக்குதல் இதுவாகும்.

http://athavannews.com/பிரான்ஸில்-நபிகள்-நாயகத்/

  • Replies 82
  • Views 8.8k
  • Created
  • Last Reply

நானிருக்கும் இடத்திற்கு அருகாமையில்தான் நடந்தது. ஆனால் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். போராசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

அவரவர் சமயமும் கடவளும் அவரவர் பிரச்சனை. இதில் இன்னொரு சமயத்தவருக்கு என்ன பிரச்சனை.

அதுசரி இவரென்ன கேலிச்சித்திர விரிவுரையாளரா.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ellam Theringjavar said:

அவரவர் சமயமும் கடவளும் அவரவர் பிரச்சனை. இதில் இன்னொரு சமயத்தவருக்கு என்ன பிரச்சனை.

அதுசரி இவரென்ன கேலிச்சித்திர விரிவுரையாளரா.

செய்தியை பல மூலங்களிலிருந்தும் தேடி வாசியுங்கள். 

அப்போதேனும் உங்களுக்குத் ஏதேனும் தெரிய வருகிறதா எனப் பார்க்கலாம் 

☹️

1 hour ago, Kapithan said:

செய்தியை பல மூலங்களிலிருந்தும் தேடி வாசியுங்கள். 

அப்போதேனும் உங்களுக்குத் ஏதேனும் தெரிய வருகிறதா எனப் பார்க்கலாம் 

☹️

ஆதியும் தேவையில்லை மூலமும் தேவையில்லை. ஒருவர் சமயத்தை இன்னொருவர் ஏன் கேலி செய்யவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனது வகுப்பு மாணவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றி விளக்கப் படுத்துவதற்காக இவர் முன்னர் ஊடகம் ஒன்றில் வெளிவந்த அதனால் பல கொலைகள் நடந்தேறிய சர்ச்சைக்குரிய படங்களை வகுப்பில் காட்டியுள்ளார். அத்துடன் வகுப்பில் இருந்த இசுலாமிய மாணவர்களை இது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் வேண்டுமானால் நீங்கள் வெளியே சென்று வரலாம் என குறிப்பிட்ட பின்பே படங்களை காட்டி பாடம் எடுத்துள்ளார். ஆனால் வெளியேறாமல் இருந்த இசுலாமிய மாணவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு அது பொது வெளியில் பரவவிடப்பட்டே கொலையில் முடிந்துள்ளது. என்னை பொறுத்தவரை இவரும் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ஜெகதா துரை said:

நானிருக்கும் இடத்திற்கு அருகாமையில்தான் நடந்தது. ஆனால் தொலைக்காட்சியில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன். போராசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

 

3 minutes ago, விசுகு said:

தனது வகுப்பு மாணவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றி விளக்கப் படுத்துவதற்காக இவர் முன்னர் ஊடகம் ஒன்றில் வெளிவந்த அதனால் பல கொலைகள் நடந்தேறிய சர்ச்சைக்குரிய படங்களை வகுப்பில் காட்டியுள்ளார். அத்துடன் வகுப்பில் இருந்த இசுலாமிய மாணவர்களை இது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் வேண்டுமானால் நீங்கள் வெளியே சென்று வரலாம் என குறிப்பிட்ட பின்பே படங்களை காட்டி பாடம் எடுத்துள்ளார். ஆனால் வெளியேறாமல் இருந்த இசுலாமிய மாணவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு அது பொது வெளியில் பரவவிடப்பட்டே கொலையில் முடிந்துள்ளது. என்னை பொறுத்தவரை இவரும் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம். 

பிரான்ஸ்சில் இஸ்லாம் வலுப்பெற்று இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ellam Theringjavar said:

ஆதியும் தேவையில்லை மூலமும் தேவையில்லை. ஒருவர் சமயத்தை இன்னொருவர் ஏன் கேலி செய்யவேண்டும்.

செய்தியின் அடிபடையே புரியாமல் / தெரியாமல் கருத்துக் கூறமுற்பட்டால் வாதம் விதண்டாவாதமாய் முடியும். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

 

பிரான்ஸ்சில் இஸ்லாம் வலுப்பெற்று இருக்கின்றதா?

நிச்சயமாக. அது ஐரோப்பா முழுவதும் வலுப்பெற்று இருக்கு. ஒரு நாள் உலகை ஆளும் அவர்களது கனவு வெகு தொலைவில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

தனது வகுப்பு மாணவர்களுக்கு ஊடக சுதந்திரம் பற்றி விளக்கப் படுத்துவதற்காக இவர் முன்னர் ஊடகம் ஒன்றில் வெளிவந்த அதனால் பல கொலைகள் நடந்தேறிய சர்ச்சைக்குரிய படங்களை வகுப்பில் காட்டியுள்ளார். அத்துடன் வகுப்பில் இருந்த இசுலாமிய மாணவர்களை இது உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் வேண்டுமானால் நீங்கள் வெளியே சென்று வரலாம் என குறிப்பிட்ட பின்பே படங்களை காட்டி பாடம் எடுத்துள்ளார். ஆனால் வெளியேறாமல் இருந்த இசுலாமிய மாணவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு அது பொது வெளியில் பரவவிடப்பட்டே கொலையில் முடிந்துள்ளது. என்னை பொறுத்தவரை இவரும் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம். 

தனது கடமையைச் செய்த ஒருவரை நெருப்புடன் விளையாடுவதாக எப்படிக் கூறலாம் 🤥

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

தனது கடமையைச் செய்த ஒருவரை நெருப்புடன் விளையாடுவதாக எப்படிக் கூறலாம் 🤥

ப்ரான்ஸ் தோற்றுவிட்டது ! 

ஆசிரியரின் சிரைச் சேதத்தைத் தொடர்ந்து.....
பிரஞ்சு அரசியல் கட்சிகள் அனைத்தும் ( மெலோன்சோனின் "அடங்காத பிரான்சைத்" தவிர) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளவிடயம் வெளிநாட்டவர்களின் கட்டற்ற வருகையே எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். 

சிலர் வெளிப்படையகவே இஸ்லாமியரைப் பொதுவாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். இஸ்லாம் குடியரசுப் பெறுமானங்களுடன் ஒத்துப்போக முடியாத ஒன்று எனப் பிரலாபம் செய்கின்றனர். தீவிர வலதுசாரிக் கட்சிகளோ தாம் சொல்லுவதை அனேகமாக எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து நகைத்துக்கொண்டிருக்கிறார்கள். 
இம்மானுவெல் ஆசியர் பிரான்சில் வாழும் செச்சீனியா நாட்டின் இளைஞர் ஒருவரால் சிரைச்சேதம் செய்யப்பட்டதையடுத்து பிரான்சில் போரால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டவர்கள் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் வாழ்கின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிவிக்ப்படுகிறது. 

மீளவும் வெளிநாட்டவர்கள் வருகை தொடர்பாகவும், இஸ்லாம்-குடியரசு அவற்றிக்கிடையேயான உடன்பாடு-முரண்பாடு தொடர்பாகவும் விவாதங்கள் மேலெழுந்த வண்ணமுள்ளன. 

இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த வேளையில், அழிவுகளிலிருந்த நாட்டை மீள்கட்டுமானம் செய்யும் நோக்கில் தமது காலணியாகவிருந்த வட ஆபிரிக்காபிலிருந்து ஏராளமான இஸ்லாமியத் தொழிலாளர்கள் பிரான்சுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களில் பலர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தார்கள். இக்காலத்தில் அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்கள் பலர் ஆண்களாக இருந்தனர். 72 ம் ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் தமது குடும்பங்களையும் பிரான்சுக்குக் கூட்டிவரும் உரிமை வழங்கப்பட்டது. 
இவ்வாறான தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடுப்பங்களுக்குமென மத்திய நகரிலிருந்து சற்றுத் தொலைவிலான புறநகரங்களில்தொடர்மாடிக் கட்டடங்கள அமைக்கப்பட்டன. பிரான்சின் முக்கிய நகரங்களில் அனைத்தைச் சுற்றியும் இது நடைபெற்றது. பொருளாதார மையங்களாக இருந்த, இருக்கின்ற பெருநகரங்களின் யதாரத்தம் இதுதான். 
(சுருக்கமான முன்னோட்டமாக....) 

2019ம் ஆண்டு "மதசார்பின்மை அவதான மையம்" வெளியிட்ட அறிக்கையொன்றின்படி, பிரான்சில் ஒரு மதத்தைப் பினபற்றுபவதாகப் பிரகடனம் செய்பவர்களில் 14 வீதமானவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். 
இவர்களில் 18-29 வயதுக்கிடைப்பட்டவர்களில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களும் உள்ளனர். அண்ணளவாகப் பார்த்தால், 1990 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்சில் பிறந்த குழந்தைகளில் இருமதத்தினரும் சம எண்ணிக்கையில் உள்ளனர். 

ஒட்டுமொத்த பிரான்சின் சனத்தொகையில் 6 வீதத்தினரே இஸ்லாமியராக இருக்கும்போதும் (4,1 மில்லியன்) கத்தோலிக்கர்களின் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் மத்திய கிழக்கை அடியாகக் கொண்ட இஸ்லாமியத் தீவிரவாதம் சவூதி போன்ற நாடுகளின் பாரிய நிதிப்பங்களிப்புடன் பிரான்சில் வளர்ச்சியடைந்துள்ளது என்பது பொதுவான அவதானிப்பாக உள்ளது. பிரான்சில் உள்ள (பள்ளிவாசல்கள் உட்பட்ட) இஸ்லாமிய வழிபாட்டிடங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் அதிகமானதாகும். இவற்றுள் தீவிரவாதத்தைப் போதிக்கும் இடங்களாக நூற்றுக்கும் மேற்பட்டவையுள்ளன என்கிறது உள்நாட்டமைச்சின் அறிக்கை யொன்று. 

இதன் விளைவுகளாகச் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்: 

முக்காடு போடும் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. இரண்டாயிரமாம் ஆண்டு ஒரேயொரு இஸ்லாமியத் தனியார் பாடசாலையே பிரான்சில் இருந்தது. இன்று அது எண்ணிக்கையில் 120 ஆக உயர்ந்துள்ளது. வேலை செய்யும் இடங்களில் தொழுகைக்கான இட ஒதுக்கீடும் அதற்கான இலவச நேரமும் கோரப்படுகிறது. பாடசலை உணவகங்களில் "ஹலால்" உணவு கோரப்படுகிறது. பெண்களுக்குப் பெண்கள்தான் வைத்தியம் செய்ய வேண்டும் எனக் கோரப்படுகிறது. சுருக்கமாகக் கூறுவதானால், பிரான்சில் உள்ள இஸ்லாமியர்கள் தம்மதக் கோட்பாடுகளுக்கு அமைவான வகையிலான வாழ்வுரிமையைக் கோருகிறார்கள். அல்லது நடைமுறைப்படுத்துகிறார்கள். 
ஆனால், பிரஞ்சுக் குடியரசு தான் மதசார்பற்றது என்ற கோசத்தைக்கொண்டது. அதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. இங்கேதான் முரண்பாடுகள் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன. 

இதில் சில விடயங்களை நாம் துல்லியமாகக் கருத்திலெடுக்க வேண்டும். 

- பிரான்சில் சமூக-பொருளாதார ரீதியாக இஸ்லாமிய சமூகம் திட்டமிட்ட வகையில் தாழ்த்தப்பட்டுள்ளது, 
- பிரான்சில் இஸ்லாமியருக்கு எதிராக குறிப்பாகப் பிரான்சில் வாழும்அரபுகளுக்கு எதிரான இனவாதம் பாரிய அளவில் வளர்ச்சிகண்டுள்ளது. 
- இதன்காரணமாக அது தன்னையொரு ஒதுக்கப்பட்ட தனித்த அலகாக்க கருதி இஸ்லாமை மையப்படுத்திய வாழ்கையை நோக்கிச் சென்றுடிகொண்டிருக்கிறது, 
- இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமான அளவில் உள்ளன. 
- இஸ்லாமியக் குழந்தைகளின் பிறப்புவீதம் அதிகரித்துள்ளது. 

ஆக மொத்தத்தில் பிரஞ்சும் சமூகம் மிகக் குறுகிய காலத்துள் "சமூகங்களாகப்" பிரியும் ஆபத்து யாதார்த்தமாகிவிட்டது. தற்போது அரசியல் வாதிகளும் சமூக விஞ்ஞானிகளும் இவ்விடயத்தைத் தெளிவாகப் புரிந்து அதற்குரிய, இந்நிலையைத் தடுக்கும் வகையிலான சட்ட மாற்றங்களை முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 

இஸ்லாமியப் பிறப்பு வீதத்தைக் குறைக்க வேண்டுமானால் இஸ்லாமியப் பெண்களின் "சுதந்திரத்தை" வலியுறுத்வேண்டும் எனும் நோக்கில், பொதுவாகவே குடும்பத்தில் பெண் சுயாதின உரிமையுடையவாக வாழவேண்டும் எனும் முற்போக்குக் கருத்தை முன்நிறுத்திச்   சட்டவியல் திருத்தங்கள் செய்தார்கள். பெண்விடுதலையெனும் கோசத்தை முன்வைத்த பொதுச்சங்களுக்கு அரசு பாரிய நிதியை ஒதுக்கியது. 
விளைவு: பிரான்சில் குடும்பப் பிளவுகள் பாரிய அளவில் ஏற்பட்டன. விவாக ரத்துகள் அதிகரித்தன. தீவிர பெண்ணியம் தலையெடுத்து ஆண்-பெண் உறவுகளை மேலும் விரிசலாகின. திருமண வீதங்கள்வீழ்ச்சியடைந்தன. பிரஞ்சுக் காரரின் பிறப்புவீதம் சரிவடைந்தது. சமபால் உறவுகள் அதிகரித்தன. ஆனால் இச்சட்டங்கள் இஸ்லாமியக் குடும்பங்களைச் சென்றடையவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாத்தின் இறுக்கமாக சுவர்களை இச்சட்டங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. 

தற்போதைய மக்ரோனின் அரசாங்கள் "பிரிவினை" க்கெதிரான சட்ட ஆக்கங்களுக்கான முனைப்பில் உள்ளது. அதுவும் வெற்றுத் தோட்டாவாக முடியவடையலாம். 

லெபனான் ஹிஸ்பொள்ளா இயக்கம் பிரான்ஸ் விரைவில் இஸ்லாமியக் குடியரசாக மாறும் என்று வேறு கட்டியம் கூறியுள்ளது. 

இப்பின்னணியில்தான், "சார்லி எப்டோவின்"கேலிச் சித்திரங்களை ஆராய வேண்டும். இக்கேலிச்சித்திரங்கள் முதலில் ஆத்திரமூட்டும் நோக்கத்திலேயே வரைந்து வெளியிடப்பட்டன. இஸ்லாமியர்களின் இறைதூதரைக் வேகலப்படுத்தி மலினப்படுத்தி இஸ்லாமியரை வம்புக்கிழுத்தார்கள் இந்த கேலிச் சித்திரக்காரர்கள். இவர்களுக்குப் பின்னால் அதிகார மையங்களின் கரம் இருந்ததை பலர் கண்டுகொள்ளவில்லை. "கருத்துச் சுதந்திரம்" பறிபோகிறது என்று அலறினார்கள். 
ஆனால், மற்றைய மதங்களைக் கேலி செய்தவர்களின் "கருத்துச் சுதந்திரத்தை" குழிதோண்டிப் புதைத்தவர்கள் பலரும் இவர்கள்தான் என்பது முரண்நகை. 

சிரைச்சேதம் செய்யப்பட்ட அப்பாவி ஆசிரியர் யாருக்குப் பலியானார் ? ஒரு பதினெட்டு வயது மடையன் யாரோ சொன்னவற்றைக் கேட்டு அந்த ஆசரியரைச் சிரைச்சேதம் செய்தான். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. "இல்-து-பிரான்ஸ்" என அழைக்கப்படும் பரிசையும் அதனைச் சுற்றிய மாவட்டங்களிலும் எந்தப்பாடசாலையை எடுத்தாலும் அங்கு இஸ்லாமிய மாணவர்கள் இல்லாதிருப்பது அரிது. 

இது இப்படியிருக்க, 

- புவியியல்-வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் எதற்காக "கருத்துச் சுதந்திரம்" கற்பிக்க வேண்டும் ? 
- ஏற்கெனவே குற்றமயப்படுத்தப்பட்டும், இனவாதத்திற்கும் உட்பட்டுள்ள ஒரு சிறுபான்மையைக் காயப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் எதற்காக குறிப்பிட்ட அந்தக் கேலிச் சித்திரத்தை உதாரணமாக எடுத்திருக்க வேண்டும் ? கேலிச்சித்திரங்களுக்கா பஞ்சம். 
- குடியரசின் பாடசாலையில் மாணவர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டுமாயின் அவர்களில் ஒரு பகுதியினரை (விரும்பினால்) வெளியேறுமாறு ஏன் ஆசரியர் கேட்க வேண்டும் ? 
- குடியரசு மதசார்பற்றதென்றால் எதற்காக மதத் தொடர்புடைய விடயங்களை பாடத்துள் எடுத்திருக்க வேண்டும் ? வோல்தயரைக் கற்பித்தாலே போதுமே !

இங்கேதான் ஒரு அரசியல் தெளிவாக முன்வந்து நிற்கிறது. ஆற்றாமையின் அரசியல். பிரஞ்சுக் குடியரசு தன் அரசியலில் அதாவது மக்கள் தொகை, குடிவரவு போன்ற விடயங்களில் பாரிய தோல்வியை அடைந்துவிட்டது. இஸ்லாம் ஒரு நாள் தன்தேசத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் எனும் தூரப்பார்வையை அது கொண்டிருக்கவில்லை. இறுதியில் ஆத்திரமூட்டல்களால் மிதவாத இஸ்லாமியர்களையும் தீவிர வாதத்தை நோக்கி நகர்திக்கொண்டிருக்கிறது. 

தற்போது "ஆற்றா நண்டு" தணலைக் கவ்வும் வேலையைச் செய்கிறது. அதாவது, கல்வி அமைச்சின் ஊடாக இஸ்லாமியச் சந்ததியை அதன் மத நம்பிக்கைகளிலிருந்து பிடுங்க நினைக்கின்றது பிரஞ்சுக் குடியரசு. அதற்குக் கருவியாகிப் பலியாகிவர்தான் பாவம் அந்த சாமுவேல் பத்தி ஆசிரியர். இது அரசின் ஆராக்கியமான போக்கல்ல. அரசின் கல்விக் கொள்ளை நிiதானமானதாக இல்லை. சமூக அமைதியைப் பேணுவதாக இல்லை. ஆத்திமூட்டல்களால் ஏதும் நடைபெறப்போவதில்லை. 

எத்தனை ஊர்வலங்களை நடாத்தினாலென்ன, மெழுகுவரத்திகளை ஏற்றினாலென்ன, பூங்கொத்துகள் விதைத்தாலென்ன, கோசங்களை எழுப்பினாலென்ன, எத்தனை சட்டங்களைப் போட்டாலென்ன, மிதவாதச் சத்திகளை தன்னுடன் இணைத்து ஆத்திரமூட்டல்களைத் தவிர்த்து முன்நகர்ந்தாலன்றி, பாரிய சமூக சச்சரவுகளுக்கு ஒட்டுமொத்தத் பிரஞ்சு தேசமும் முகம் கொடுக்கவேண்டியேற்படும் என்பதை உணரக்கூடியதாக உள்ளது. 

வாசு தேவன்
18.10.2020.

6 minutes ago, Kapithan said:

தனது கடமையைச் செய்த ஒருவரை நெருப்புடன் விளையாடுவதாக எப்படிக் கூறலாம் 🤥

புவியியல்-வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் எதற்காக "கருத்துச் சுதந்திரம்" கற்பிக்க வேண்டும் ? 
- ஏற்கெனவே குற்றமயப்படுத்தப்பட்டும், இனவாதத்திற்கும் உட்பட்டுள்ள ஒரு சிறுபான்மையைக் காயப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் எதற்காக குறிப்பிட்ட அந்தக் கேலிச் சித்திரத்தை உதாரணமாக எடுத்திருக்க வேண்டும் ? கேலிச்சித்திரங்களுக்கா பஞ்சம்
- குடியரசின் பாடசாலையில் மாணவர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டுமாயின் அவர்களில் ஒரு பகுதியினரை (விரும்பினால்) வெளியேறுமாறு ஏன் ஆசரியர் கேட்க வேண்டும் ? 
- குடியரசு மதசார்பற்றதென்றால் எதற்காக மதத் தொடர்புடைய விடயங்களை பாடத்துள் எடுத்திருக்க வேண்டும் ? வோல்தயரைக் கற்பித்தாலே போதுமே !

மன்னிக்கவும் சகோ நேரமின்மையால் இதை இணைக்கின்றேன் போதுமான விளக்கம் இதில் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கின்றேன். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

ப்ரான்ஸ் தோற்றுவிட்டது ! 

ஆசிரியரின் சிரைச் சேதத்தைத் தொடர்ந்து.....
பிரஞ்சு அரசியல் கட்சிகள் அனைத்தும் ( மெலோன்சோனின் "அடங்காத பிரான்சைத்" தவிர) தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பயங்கரவாதச் செயற்பாடுகள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணமாக உள்ளவிடயம் வெளிநாட்டவர்களின் கட்டற்ற வருகையே எனக் கூறிக்கொண்டிருக்கிறார்கள். 

சிலர் வெளிப்படையகவே இஸ்லாமியரைப் பொதுவாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். இஸ்லாம் குடியரசுப் பெறுமானங்களுடன் ஒத்துப்போக முடியாத ஒன்று எனப் பிரலாபம் செய்கின்றனர். தீவிர வலதுசாரிக் கட்சிகளோ தாம் சொல்லுவதை அனேகமாக எல்லோரும் ஒத்துக்கொள்கிறார்கள் என்பதை அறிந்து நகைத்துக்கொண்டிருக்கிறார்கள். 
இம்மானுவெல் ஆசியர் பிரான்சில் வாழும் செச்சீனியா நாட்டின் இளைஞர் ஒருவரால் சிரைச்சேதம் செய்யப்பட்டதையடுத்து பிரான்சில் போரால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டவர்கள் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டோர் வாழ்கின்றார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிவிக்ப்படுகிறது. 

மீளவும் வெளிநாட்டவர்கள் வருகை தொடர்பாகவும், இஸ்லாம்-குடியரசு அவற்றிக்கிடையேயான உடன்பாடு-முரண்பாடு தொடர்பாகவும் விவாதங்கள் மேலெழுந்த வண்ணமுள்ளன. 

இரண்டாவது உலகயுத்தம் முடிவடைந்த வேளையில், அழிவுகளிலிருந்த நாட்டை மீள்கட்டுமானம் செய்யும் நோக்கில் தமது காலணியாகவிருந்த வட ஆபிரிக்காபிலிருந்து ஏராளமான இஸ்லாமியத் தொழிலாளர்கள் பிரான்சுக்குக் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களில் பலர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தார்கள். இக்காலத்தில் அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்கள் பலர் ஆண்களாக இருந்தனர். 72 ம் ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் தமது குடும்பங்களையும் பிரான்சுக்குக் கூட்டிவரும் உரிமை வழங்கப்பட்டது. 
இவ்வாறான தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடுப்பங்களுக்குமென மத்திய நகரிலிருந்து சற்றுத் தொலைவிலான புறநகரங்களில்தொடர்மாடிக் கட்டடங்கள அமைக்கப்பட்டன. பிரான்சின் முக்கிய நகரங்களில் அனைத்தைச் சுற்றியும் இது நடைபெற்றது. பொருளாதார மையங்களாக இருந்த, இருக்கின்ற பெருநகரங்களின் யதாரத்தம் இதுதான். 
(சுருக்கமான முன்னோட்டமாக....) 

2019ம் ஆண்டு "மதசார்பின்மை அவதான மையம்" வெளியிட்ட அறிக்கையொன்றின்படி, பிரான்சில் ஒரு மதத்தைப் பினபற்றுபவதாகப் பிரகடனம் செய்பவர்களில் 14 வீதமானவர்கள் இஸ்லாமியர்களாக உள்ளனர். 
இவர்களில் 18-29 வயதுக்கிடைப்பட்டவர்களில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையில் இஸ்லாமியர்களும் உள்ளனர். அண்ணளவாகப் பார்த்தால், 1990 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரான்சில் பிறந்த குழந்தைகளில் இருமதத்தினரும் சம எண்ணிக்கையில் உள்ளனர். 

ஒட்டுமொத்த பிரான்சின் சனத்தொகையில் 6 வீதத்தினரே இஸ்லாமியராக இருக்கும்போதும் (4,1 மில்லியன்) கத்தோலிக்கர்களின் பிறப்பு வீதம் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் மத்திய கிழக்கை அடியாகக் கொண்ட இஸ்லாமியத் தீவிரவாதம் சவூதி போன்ற நாடுகளின் பாரிய நிதிப்பங்களிப்புடன் பிரான்சில் வளர்ச்சியடைந்துள்ளது என்பது பொதுவான அவதானிப்பாக உள்ளது. பிரான்சில் உள்ள (பள்ளிவாசல்கள் உட்பட்ட) இஸ்லாமிய வழிபாட்டிடங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் அதிகமானதாகும். இவற்றுள் தீவிரவாதத்தைப் போதிக்கும் இடங்களாக நூற்றுக்கும் மேற்பட்டவையுள்ளன என்கிறது உள்நாட்டமைச்சின் அறிக்கை யொன்று. 

இதன் விளைவுகளாகச் ஏற்பட்ட சமூக மாற்றங்கள்: 

முக்காடு போடும் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. இரண்டாயிரமாம் ஆண்டு ஒரேயொரு இஸ்லாமியத் தனியார் பாடசாலையே பிரான்சில் இருந்தது. இன்று அது எண்ணிக்கையில் 120 ஆக உயர்ந்துள்ளது. வேலை செய்யும் இடங்களில் தொழுகைக்கான இட ஒதுக்கீடும் அதற்கான இலவச நேரமும் கோரப்படுகிறது. பாடசலை உணவகங்களில் "ஹலால்" உணவு கோரப்படுகிறது. பெண்களுக்குப் பெண்கள்தான் வைத்தியம் செய்ய வேண்டும் எனக் கோரப்படுகிறது. சுருக்கமாகக் கூறுவதானால், பிரான்சில் உள்ள இஸ்லாமியர்கள் தம்மதக் கோட்பாடுகளுக்கு அமைவான வகையிலான வாழ்வுரிமையைக் கோருகிறார்கள். அல்லது நடைமுறைப்படுத்துகிறார்கள். 
ஆனால், பிரஞ்சுக் குடியரசு தான் மதசார்பற்றது என்ற கோசத்தைக்கொண்டது. அதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. இங்கேதான் முரண்பாடுகள் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன. 

இதில் சில விடயங்களை நாம் துல்லியமாகக் கருத்திலெடுக்க வேண்டும். 

- பிரான்சில் சமூக-பொருளாதார ரீதியாக இஸ்லாமிய சமூகம் திட்டமிட்ட வகையில் தாழ்த்தப்பட்டுள்ளது, 
- பிரான்சில் இஸ்லாமியருக்கு எதிராக குறிப்பாகப் பிரான்சில் வாழும்அரபுகளுக்கு எதிரான இனவாதம் பாரிய அளவில் வளர்ச்சிகண்டுள்ளது. 
- இதன்காரணமாக அது தன்னையொரு ஒதுக்கப்பட்ட தனித்த அலகாக்க கருதி இஸ்லாமை மையப்படுத்திய வாழ்கையை நோக்கிச் சென்றுடிகொண்டிருக்கிறது, 
- இஸ்லாமியர்களின் வாக்குகள் கணிசமான அளவில் உள்ளன. 
- இஸ்லாமியக் குழந்தைகளின் பிறப்புவீதம் அதிகரித்துள்ளது. 

ஆக மொத்தத்தில் பிரஞ்சும் சமூகம் மிகக் குறுகிய காலத்துள் "சமூகங்களாகப்" பிரியும் ஆபத்து யாதார்த்தமாகிவிட்டது. தற்போது அரசியல் வாதிகளும் சமூக விஞ்ஞானிகளும் இவ்விடயத்தைத் தெளிவாகப் புரிந்து அதற்குரிய, இந்நிலையைத் தடுக்கும் வகையிலான சட்ட மாற்றங்களை முன்னெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். 

இஸ்லாமியப் பிறப்பு வீதத்தைக் குறைக்க வேண்டுமானால் இஸ்லாமியப் பெண்களின் "சுதந்திரத்தை" வலியுறுத்வேண்டும் எனும் நோக்கில், பொதுவாகவே குடும்பத்தில் பெண் சுயாதின உரிமையுடையவாக வாழவேண்டும் எனும் முற்போக்குக் கருத்தை முன்நிறுத்திச்   சட்டவியல் திருத்தங்கள் செய்தார்கள். பெண்விடுதலையெனும் கோசத்தை முன்வைத்த பொதுச்சங்களுக்கு அரசு பாரிய நிதியை ஒதுக்கியது. 
விளைவு: பிரான்சில் குடும்பப் பிளவுகள் பாரிய அளவில் ஏற்பட்டன. விவாக ரத்துகள் அதிகரித்தன. தீவிர பெண்ணியம் தலையெடுத்து ஆண்-பெண் உறவுகளை மேலும் விரிசலாகின. திருமண வீதங்கள்வீழ்ச்சியடைந்தன. பிரஞ்சுக் காரரின் பிறப்புவீதம் சரிவடைந்தது. சமபால் உறவுகள் அதிகரித்தன. ஆனால் இச்சட்டங்கள் இஸ்லாமியக் குடும்பங்களைச் சென்றடையவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாத்தின் இறுக்கமாக சுவர்களை இச்சட்டங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. 

தற்போதைய மக்ரோனின் அரசாங்கள் "பிரிவினை" க்கெதிரான சட்ட ஆக்கங்களுக்கான முனைப்பில் உள்ளது. அதுவும் வெற்றுத் தோட்டாவாக முடியவடையலாம். 

லெபனான் ஹிஸ்பொள்ளா இயக்கம் பிரான்ஸ் விரைவில் இஸ்லாமியக் குடியரசாக மாறும் என்று வேறு கட்டியம் கூறியுள்ளது. 

இப்பின்னணியில்தான், "சார்லி எப்டோவின்"கேலிச் சித்திரங்களை ஆராய வேண்டும். இக்கேலிச்சித்திரங்கள் முதலில் ஆத்திரமூட்டும் நோக்கத்திலேயே வரைந்து வெளியிடப்பட்டன. இஸ்லாமியர்களின் இறைதூதரைக் வேகலப்படுத்தி மலினப்படுத்தி இஸ்லாமியரை வம்புக்கிழுத்தார்கள் இந்த கேலிச் சித்திரக்காரர்கள். இவர்களுக்குப் பின்னால் அதிகார மையங்களின் கரம் இருந்ததை பலர் கண்டுகொள்ளவில்லை. "கருத்துச் சுதந்திரம்" பறிபோகிறது என்று அலறினார்கள். 
ஆனால், மற்றைய மதங்களைக் கேலி செய்தவர்களின் "கருத்துச் சுதந்திரத்தை" குழிதோண்டிப் புதைத்தவர்கள் பலரும் இவர்கள்தான் என்பது முரண்நகை. 

சிரைச்சேதம் செய்யப்பட்ட அப்பாவி ஆசிரியர் யாருக்குப் பலியானார் ? ஒரு பதினெட்டு வயது மடையன் யாரோ சொன்னவற்றைக் கேட்டு அந்த ஆசரியரைச் சிரைச்சேதம் செய்தான். இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. "இல்-து-பிரான்ஸ்" என அழைக்கப்படும் பரிசையும் அதனைச் சுற்றிய மாவட்டங்களிலும் எந்தப்பாடசாலையை எடுத்தாலும் அங்கு இஸ்லாமிய மாணவர்கள் இல்லாதிருப்பது அரிது. 

இது இப்படியிருக்க, 

- புவியியல்-வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் எதற்காக "கருத்துச் சுதந்திரம்" கற்பிக்க வேண்டும் ? 
- ஏற்கெனவே குற்றமயப்படுத்தப்பட்டும், இனவாதத்திற்கும் உட்பட்டுள்ள ஒரு சிறுபான்மையைக் காயப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் எதற்காக குறிப்பிட்ட அந்தக் கேலிச் சித்திரத்தை உதாரணமாக எடுத்திருக்க வேண்டும் ? கேலிச்சித்திரங்களுக்கா பஞ்சம். 
- குடியரசின் பாடசாலையில் மாணவர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டுமாயின் அவர்களில் ஒரு பகுதியினரை (விரும்பினால்) வெளியேறுமாறு ஏன் ஆசரியர் கேட்க வேண்டும் ? 
- குடியரசு மதசார்பற்றதென்றால் எதற்காக மதத் தொடர்புடைய விடயங்களை பாடத்துள் எடுத்திருக்க வேண்டும் ? வோல்தயரைக் கற்பித்தாலே போதுமே !

இங்கேதான் ஒரு அரசியல் தெளிவாக முன்வந்து நிற்கிறது. ஆற்றாமையின் அரசியல். பிரஞ்சுக் குடியரசு தன் அரசியலில் அதாவது மக்கள் தொகை, குடிவரவு போன்ற விடயங்களில் பாரிய தோல்வியை அடைந்துவிட்டது. இஸ்லாம் ஒரு நாள் தன்தேசத்திற்கு நெருக்கடியைக் கொடுக்கும் எனும் தூரப்பார்வையை அது கொண்டிருக்கவில்லை. இறுதியில் ஆத்திரமூட்டல்களால் மிதவாத இஸ்லாமியர்களையும் தீவிர வாதத்தை நோக்கி நகர்திக்கொண்டிருக்கிறது. 

தற்போது "ஆற்றா நண்டு" தணலைக் கவ்வும் வேலையைச் செய்கிறது. அதாவது, கல்வி அமைச்சின் ஊடாக இஸ்லாமியச் சந்ததியை அதன் மத நம்பிக்கைகளிலிருந்து பிடுங்க நினைக்கின்றது பிரஞ்சுக் குடியரசு. அதற்குக் கருவியாகிப் பலியாகிவர்தான் பாவம் அந்த சாமுவேல் பத்தி ஆசிரியர். இது அரசின் ஆராக்கியமான போக்கல்ல. அரசின் கல்விக் கொள்ளை நிiதானமானதாக இல்லை. சமூக அமைதியைப் பேணுவதாக இல்லை. ஆத்திமூட்டல்களால் ஏதும் நடைபெறப்போவதில்லை. 

எத்தனை ஊர்வலங்களை நடாத்தினாலென்ன, மெழுகுவரத்திகளை ஏற்றினாலென்ன, பூங்கொத்துகள் விதைத்தாலென்ன, கோசங்களை எழுப்பினாலென்ன, எத்தனை சட்டங்களைப் போட்டாலென்ன, மிதவாதச் சத்திகளை தன்னுடன் இணைத்து ஆத்திரமூட்டல்களைத் தவிர்த்து முன்நகர்ந்தாலன்றி, பாரிய சமூக சச்சரவுகளுக்கு ஒட்டுமொத்தத் பிரஞ்சு தேசமும் முகம் கொடுக்கவேண்டியேற்படும் என்பதை உணரக்கூடியதாக உள்ளது. 

வாசு தேவன்
18.10.2020.

புவியியல்-வரலாறு கற்பிக்கும் ஆசிரியர் எதற்காக "கருத்துச் சுதந்திரம்" கற்பிக்க வேண்டும் ? 
- ஏற்கெனவே குற்றமயப்படுத்தப்பட்டும், இனவாதத்திற்கும் உட்பட்டுள்ள ஒரு சிறுபான்மையைக் காயப்படுத்தும் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் எதற்காக குறிப்பிட்ட அந்தக் கேலிச் சித்திரத்தை உதாரணமாக எடுத்திருக்க வேண்டும் ? கேலிச்சித்திரங்களுக்கா பஞ்சம்
- குடியரசின் பாடசாலையில் மாணவர்கள் அனைவரும் சமமானவர்கள் அவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வழங்கப்பட வேண்டுமாயின் அவர்களில் ஒரு பகுதியினரை (விரும்பினால்) வெளியேறுமாறு ஏன் ஆசரியர் கேட்க வேண்டும் ? 
- குடியரசு மதசார்பற்றதென்றால் எதற்காக மதத் தொடர்புடைய விடயங்களை பாடத்துள் எடுத்திருக்க வேண்டும் ? வோல்தயரைக் கற்பித்தாலே போதுமே !

மன்னிக்கவும் சகோ நேரமின்மையால் இதை இணைக்கின்றேன் போதுமான விளக்கம் இதில் உங்களுக்கு கிடைக்கும் என்று நினைக்கின்றேன். நன்றி

பிராண்சில்

இருக்கும் நீங்களே இவ்வாறு கூறும்போது பிராண்சைப்பற்றி அறியாத மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் 🤥

உங்களின் கருத்து கொலையை நியாயப்படுத்துவது போல் உள்ளது(உண்மையில் அவ்வாறு இல்லாவிட்டாலும்) ☹️

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து. ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Ellam Theringjavar said:

ஆதியும் தேவையில்லை மூலமும் தேவையில்லை. ஒருவர் சமயத்தை இன்னொருவர் ஏன் கேலி செய்யவேண்டும்.

உண்மையில் உங்கள் கருத்து சரியான கருத்து. 
மதமும் திருமணமும் அவரவர் தனிப்பட்ட விடயம். 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து.

உண்மையான கருத்து.சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பதினால் எம்மவர்கள் பலருக்கு இசுலாமின் மீது மரியாதை (பயம்🤣 உண்டு நெருப்போடு விளையாட கூடாது மதம் தனிப்பட்ட விடயம் அப்படி இப்படி சொல்லி கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமான சமயங்கள் நாகரீகம் அடைந்து விட்டன, இஸ்லாம் இன்னும் கற்காலத்தில் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

உண்மையான கருத்து.சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பதினால் எம்மவர்கள் பலருக்கு இசுலாமின் மீது மரியாதை (பயம்🤣 உண்டு நெருப்போடு விளையாட கூடாது மதம் தனிப்பட்ட விடயம் அப்படி இப்படி சொல்லி கொள்வார்கள்.

நாம் நல்ல காரியங்களுக்காக மெழுகுவர்த்தியும் குத்துவிளக்கும் ஏற்றுகின்றோம். அதுவும் நெருப்பு.
வீடு பற்றி எரிவதும் நெருப்பு.

தாகத்திற்கு குடிப்பதும் தண்ணீர்
சுனாமியாக வருவதும் தண்ணீர்
மல வாசலை கழுவுவதும் தண்ணீர்.

விளங்க நினைப்பவன் இதை விளங்கினால் பிஸ்தா 🤣 :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

அநேகமான சமயங்கள் நாகரீகம் அடைந்து விட்டன, இஸ்லாம் இன்னும் கற்காலத்தில் இருக்கின்றது.

https://www.facebook.com/100021631899416/posts/755326001865123/?extid=0&d=w

எங்கே போய் எங்கே வந்து நிற்கிறோம். 

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

கண்டபாட்டிற்க்கு உள்ள விடுவது ,பிறகு குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைப்பது 
அளவுக்கு அதிகமாக மனிதநேயம் இருந்தால் சிலவேளை இப்படியான சம்பவங்கள் ஐரோப்பியர்களின்  நெறிகட்டிப்போன மூளையை நீவி சரிசெய்யக்கூடும், கொத்துக்கொத்தாக செத்துவிழும் போது எதற்காக மற்றைய அரபுநாடுகள் இந்த முஸ்லிம்களுக்காக எல்லையை திறக்கவில்லை என்றும் எதற்க்காக அவர்களது நாடுகளில் வேற்று நாட்டவருக்கு குடியுரிமை இல்லை எனபதையும் ஐரோப்பியர்கள் முதலிலேயே மண்டையை உபயோகித்து சிந்தித்திருந்தால் இப்போது வெங்கிளாந்திகள் போல முழுசும் நிலைக்கு வந்திருக்கமாட்டார்கள்  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

பிராண்சில்

இருக்கும் நீங்களே இவ்வாறு கூறும்போது பிராண்சைப்பற்றி அறியாத மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் 🤥

உங்களின் கருத்து கொலையை நியாயப்படுத்துவது போல் உள்ளது(உண்மையில் அவ்வாறு இல்லாவிட்டாலும்) ☹️

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து. ☹️

மன்னிக்கவும். இசுலாமியர்களின் செயற்பாடுகளை நான் ஒருபோதும் ஆதரிக்காதவன். இங்கு மட்டும் அல்ல தாயகத்திலும். ஆனால் இந்த ஆசிரியர் அவர்களின் மூர்க்கத்தை கணக்கிலெடுக்காமல் சீண்டியதைத்தான் நெருப்போடு விளையாடாமல் இருந்திருக்கலாம் என்றேன் மற்றும் படி இனக்கொலையை எவ்விதத்திலும் ஆதரிக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார்;'...(அல்குர் ஆன் 33:6)   

15 hours ago, Kapithan said:

செய்தியின் அடிபடையே புரியாமல் / தெரியாமல் கருத்துக் கூறமுற்பட்டால் வாதம் விதண்டாவாதமாய் முடியும். ☹️

ஆத்திகரா அல்லது நாத்திகரா. ஒரு சமயத்தை சார்ந்திருந்தால் அந்த சமயத்தை கேலி செய்யும் போது அதன் வேதனை புரியும். இதில் என்ன வாதம் விதண்டா வாதம்.

சொஞ்சம் பின்னாடிப் போனால் சமயமும் அதன் நல்லெண்ணங்களும் புரியும். 1800 களில்  ஆங்கிலேயர்கள்,

இராணி வேலுநாச்சியார், மன்னர் கைதர் அலி, மாமன்னர்கள் சின்னமருது, பெரியமருது, கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள். 

யார் எதை யாருக்காக கட்டிக்கொடுத்தார்கள். புரிந்தால் இங்கே வாதத்திற்கே இடமில்லை.

15 hours ago, Kapithan said:

பிராண்சில்

இருக்கும் நீங்களே இவ்வாறு கூறும்போது பிராண்சைப்பற்றி அறியாத மக்கள் எப்படி புரிந்துகொள்வார்கள் 🤥

உங்களின் கருத்து கொலையை நியாயப்படுத்துவது போல் உள்ளது(உண்மையில் அவ்வாறு இல்லாவிட்டாலும்) ☹️

மேற்கு நாடுகள் எங்களுக்குக் கற்றுத்தந்த பல நல்ல விடயங்களில் ஒன்று சகிப்புத் தன்மை. இஸ்லாம்(சுனி) மதத்தைப் பின்பற்றுவோர் சகிப்புத் தன்மை அறவே அற்றவர்கள் என்பது என் கருத்து. ☹️

மேற்கு நாடுகள்...... எல்லாம் வேண்டாம்.  இப்போதைக்கு இங்கிலாந்து மட்டும். நகரபாதுகவல் படையின் சீருடடை இன்னமும்  அதே காக்கிதான். Police uniform is the same khaki since 1948. This is one of the good thing they left.

They came from another continent and killed all the kings and occupied all island. Another good thing. The current government simply follow the good things which the British left behind. Occupying land in North and East. Any news papers published government corruption, killed the reporter/editor. How many temples British destroyed. Now, how many temple including the land surrounded occupied. These all good things learned from Western. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ellam Theringjavar said:

ஆத்திகரா அல்லது நாத்திகரா. ஒரு சமயத்தை சார்ந்திருந்தால் அந்த சமயத்தை கேலி செய்யும் போது அதன் வேதனை புரியும். இதில் என்ன வாதம் விதண்டா வாதம்.

சொஞ்சம் பின்னாடிப் போனால் சமயமும் அதன் நல்லெண்ணங்களும் புரியும். 1800 களில்  ஆங்கிலேயர்கள்,

இராணி வேலுநாச்சியார், மன்னர் கைதர் அலி, மாமன்னர்கள் சின்னமருது, பெரியமருது, கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள். 

யார் எதை யாருக்காக கட்டிக்கொடுத்தார்கள். புரிந்தால் இங்கே வாதத்திற்கே இடமில்லை.

1) மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்கள். 

2) நீங்கள் கூறுவ்துபோல விரிவுரையாளரின் விரிவுரையில் அவர் கேலி செய்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே

எனவே உங்கள் வாதம் வலுவற்றது. 

🤥

1 hour ago, Ellam Theringjavar said:

மேற்கு நாடுகள்...... எல்லாம் வேண்டாம்.  இப்போதைக்கு இங்கிலாந்து மட்டும். நகரபாதுகவல் படையின் சீருடடை இன்னமும்  அதே காக்கிதான். Police uniform is the same khaki since 1948. This is one of the good thing they left.

They came from another continent and killed all the kings and occupied all island. Another good thing. The current government simply follow the good things which the British left behind. Occupying land in North and East. Any news papers published government corruption, killed the reporter/editor. How many temples British destroyed. Now, how many temple including the land surrounded occupied. These all good things learned from Western. 

இப்ப என்னசொல்ல வாரியள்.. 

விரிவுரையாளரைக் படுகொலை செய்தது சரி. 

அப்படிங்தானே....

😂😂

  • கருத்துக்கள உறவுகள்

மதவெறி கூடியதால் வரும் கொலைவெறி கருத்துக்களை யாழ்களம் அழித்தவிடுததே நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.