Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

வெளிநாட்டுக்கு வந்துவிட்ட எனக்கு தனிப்பட எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இனவாதத்தினையே முழு கொள்கையாக கொண்ட ஒரு தேசத்தின் கொலை இயந்திரத்துக்கு, தமிழர்களை கொன்று குவித்த ஒரு இராணுவத்துக்கு அதே தமிழர்களை சேர்ப்பது நிச்சயம் தாயக மக்களுக்கு சிறிலங்கா அரசு நல்லது செய்வதற்காக என்பதில் தெளிவு இருக்கின்றது. 

அரசு நல்லதற்கு செய்யாட்டிலும் இனி மேல் தீமை செய்யாது என்ற நம்பிக்கை இருக்கு ...இனி யுத்தம் செய்வதற்கு புலிகள் இல்லாத நிலையில்  இன்னொரு ஆயுத போராட்டம் சாத்தியமில்லை என்ற நிலையில் அந்த மக்கள் தங்களை தாங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இதில் சேருவதில் தப்பே இல்லை
யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

  • Replies 70
  • Views 7k
  • Created
  • Last Reply
38 minutes ago, ரதி said:

அரசு நல்லதற்கு செய்யாட்டிலும் இனி மேல் தீமை செய்யாது என்ற நம்பிக்கை இருக்கு ...இனி யுத்தம் செய்வதற்கு புலிகள் இல்லாத நிலையில்  இன்னொரு ஆயுத போராட்டம் சாத்தியமில்லை என்ற நிலையில் அந்த மக்கள் தங்களை தாங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இதில் சேருவதில் தப்பே இல்லை
யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

ரதி,
இது எப்படி இருக்கின்றது என்றால், புலிகள் இருந்தமையால் தான் சிங்கள அரசுகள் தமிழர்களை அழித்தொழித்தது என்றும் இப்ப அவர்கள் இல்லமையால் தமிழர்களை சக பிரஜைகளாக கருதி நல்லது மட்டுமே செய்யும் என்றும் நம்பலாம் என்ற கருத்தில் இருக்கின்றது.

சரி, அப்படியே நீங்கள் எண்ணுவது போன்று எனில், இன்று புலிகள் இல்லாமல் போனபின் ஏன் தமிழர்களுக்கு சொந்தமான மேச்சல் காணிகளை கூட விட்டு வைக்காமல் சிங்கள மக்களுக்கு அடாத்தாக பறித்து கொடுக்கின்றனர் என்பதற்கோ, அல்லது முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் அடாத்தாத்தாக சிங்கள விவசாயிகள் பறித்தெடுக்கின்றனர் என்பதற்கோ, வடமராச்சி கிழக்கில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான வாடிகளை தீ வைத்து எரித்து விட்டு அதில் சிங்கள மீனவர்கள் வந்து தம் கொட்டில்களை அமைத்து இருக்கின்றார்கள் என்பதற்கோ அல்லது இவற்றுக்கெல்லாம் சிங்கள இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதற்கோ உங்களின் மேலான பதில் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டரை இலச்சம் சிங்கள இராணுவத்திற்கு புல்லுப் புடுங்க 100 தமிழ் பேசும் கூலிகள் தேவை என்று விளம்பரம் போட்டிருக்கலாம்.

இது உலகத்திற்கு காட்ட சொறீலங்கா இராணுவத்தில் தமிழரும் இருக்கினம். அது இனப்படுகொலை இராணுவமல்ல என்று சொல்ல வசதிக்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

எந்த நாட்டை? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

இந்த திட்டம் எப்படி செயல்வடிவம் பெறக்கூடும் என்ற மேலதிக தகவல்களையும் சொல்லிவிடுங்களேன்?

2 hours ago, goshan_che said:

இந்த திட்டம் எப்படி செயல்வடிவம் பெறக்கூடும் என்ற மேலதிக தகவல்களையும் சொல்லிவிடுங்களேன்?

அதை பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரதி அக்காவுக்கு அந்தளவு தூரத்துக்கு போக முடியுமோ தெரியவில்லை. இதட்கு பாகிஸ்தான், மியன்மார் , பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கேடடாள் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

அதை பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரதி அக்காவுக்கு அந்தளவு தூரத்துக்கு போக முடியுமோ தெரியவில்லை. இதட்கு பாகிஸ்தான், மியன்மார் , பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கேடடாள் நல்லது.

எனகென்னமோ 1988 மாலைதீவு பயணம்தான் கண்ணுக்கு வந்து, வந்து போகுது🤣

அல்லது 1987 தனிநாட்டு பிரகடனம் செய்து விட்டு கப்பல் ஏறி இந்தியா போனது போலவும் இருக்கலாம்🤣.

 

1 minute ago, goshan_che said:

எனகென்னமோ 1988 மாலைதீவு பயணம்தான் கண்ணுக்கு வந்து, வந்து போகுது🤣

அப்படி எண்டால் கச்சதீவைத்தான் பிடிக்க வேண்டும். அதுக்கு மேல போக முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இது உலகத்திற்கு காட்ட சொறீலங்கா இராணுவத்தில் தமிழரும் இருக்கினம். அது இனப்படுகொலை இராணுவமல்ல என்று சொல்ல வசதிக்கு. 

இலங்கை இராணுவம் தமிழருக்கெதிராக இனப்படுகொலை செய்தது எனும் குற்றச்சாட்டை மறுப்பதற்கு செய்யப்படும் ஏற்பாடு.  இராணுவம் தமிழரை  படுகொலை செய்திருந்தால் அந்த இராணுவத்தில் எப்படி தமிழ் இளைஞர் விரும்பி இணைந்தனர்? எனும் கேள்வியை எழுப்பி, தமிழ் மக்களே அந்த இராணுவத்தில் இணைந்து வேலை செய்கிறார்கள்,  அரசியலில் இணைந்து அரசாங்கத்தோடு கைகோர்த்து நாட்டைக் கட்டி எழுப்புகிறார்கள். இங்கே இனப்பிரச்சனை இல்லை, வேறுபாடு இல்லை ஒரே கோட்பாட்டுடன் வாழ்கிறோம், சிங்களத்தில் தேசிய கீதம் பாடுகிறோம், சிங்களக்கொடியை ஏற்று உயர்த்திப்பிடிக்கிறோம், "எங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டாம்" தமிழர் சொல்லுகினம் என்றொரு மாயை காட்ட உதவலாம். அங்கஜன் அண்மையில் ஒரு பேட்டியில், விடுதப்புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அதனால்   மாவீரரை நினைவு கூர தான் அரசாங்கத்திடம் அனுமதி கேட்கவில்லை என தனது பக்க நிஞாயத்தை கூறியிருந்தார். இவர் மக்களின் பிரதிநிதி. அந்த மக்களே நீதிமன்ற தடையையும் மீறி, இராணுவ மிரட்டல்களையும் கடந்து தம் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

எனகென்னமோ 1988 மாலைதீவு பயணம்தான் கண்ணுக்கு வந்து, வந்து போகுது🤣

அல்லது 1987 தனிநாட்டு பிரகடனம் செய்து விட்டு கப்பல் ஏறி இந்தியா போனது போலவும் இருக்கலாம்🤣.

இலங்கை இராணுவத்தில் இணைந்த தமிழர்கள் இராணுவ புரட்சி மூலம் நாட்டை கைப்பற்றி தமிழீழ தனிநாட்டு பிரகடனம் செய்யலாம் பின்பு கொழும்பை விட்டு வெளியேறி யாழ்பாணம் வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நிழலி said:

ரதி,
இது எப்படி இருக்கின்றது என்றால், புலிகள் இருந்தமையால் தான் சிங்கள அரசுகள் தமிழர்களை அழித்தொழித்தது என்றும் இப்ப அவர்கள் இல்லமையால் தமிழர்களை சக பிரஜைகளாக கருதி நல்லது மட்டுமே செய்யும் என்றும் நம்பலாம் என்ற கருத்தில் இருக்கின்றது.

சரி, அப்படியே நீங்கள் எண்ணுவது போன்று எனில், இன்று புலிகள் இல்லாமல் போனபின் ஏன் தமிழர்களுக்கு சொந்தமான மேச்சல் காணிகளை கூட விட்டு வைக்காமல் சிங்கள மக்களுக்கு அடாத்தாக பறித்து கொடுக்கின்றனர் என்பதற்கோ, அல்லது முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் அடாத்தாத்தாக சிங்கள விவசாயிகள் பறித்தெடுக்கின்றனர் என்பதற்கோ, வடமராச்சி கிழக்கில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான வாடிகளை தீ வைத்து எரித்து விட்டு அதில் சிங்கள மீனவர்கள் வந்து தம் கொட்டில்களை அமைத்து இருக்கின்றார்கள் என்பதற்கோ அல்லது இவற்றுக்கெல்லாம் சிங்கள இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதற்கோ உங்களின் மேலான பதில் என்ன?

ஆட்சியில் இருப்பவர்கள் சிங்களவர்களையும் தமிழர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழ் இராணுவத்தை வைத்து தமிழர்களை கட்டுப்படுத்துவது வெற்றிகரமானது என்பதை, ஈ.பி.டி.பி., புளொட், கருணாகுழு, பிள்ளையான் குழு ஆகிய துணை இராணுவ குழுக்களின் பயன்பாட்டில் இருந்து இராஐபக்‌ஷ அரசு அறிந்துள்ளது. ஆகவே அதனை மேலும் பெருப்பித்து தமது முழுமையான இராணுவ அமைப்புக்குள் உள்வாங்கும் முயற்சியாகவே இது தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை இராணுவத்தில் இணைந்த தமிழர்கள் இராணுவ புரட்சி மூலம் நாட்டை கைப்பற்றி தமிழீழ தனிநாட்டு பிரகடனம் செய்யலாம் பின்பு கொழும்பை விட்டு வெளியேறி யாழ்பாணம் வரலாம்

கனவு காணலாம், ஆனால் இந்தளவுக்கா? இணையப்போகிறவர்களே சிங்கள  புலனாய்வார்களின் கைக்கூலிகள். இதில தமிழீழ தனிநாட்டுப்பிரகடனம்...? உங்களுக்கே இது அதிகமாகத் தெரியவில்லையா? அல்லது நையாண்டியா?   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கனவு காணலாம், ஆனால் இந்தளவுக்கா? இணையப்போகிறவர்களே சிங்கள  புலனாய்வார்களின் கைக்கூலிகள். இதில தமிழீழ தனிநாட்டுப்பிரகடனம்...? உங்களுக்கே இது அதிகமாகத் தெரியவில்லையா? அல்லது நையாண்டியா?   

நக்கலா, உண்மையா என்று தலைமுடியை பிய்த்துகொள்ளும் படி அடிக்கும் நக்கல்தான் அதி உச்ச நக்கல்.

வழமையாக இதில் சச்சின் ரேஞ்சுக்கு இறங்கி ஆடுபவர் யூட்டர் எனப்படும் கற்பகதரு. ஆனால் இப்போ எல்லாரும் கோலி ரேஞ்சுக்கு விளாசுகிறார்கள்😀

  • கருத்துக்கள உறவுகள்

தன்னிகரில்லாத தலைவன், தன்னலம் இல்லாமல், தன் முழுக்குடும்பத்தையுமே பணயம் வைத்து ஆடிய போராட்டத்தை குறை கூறி, கேலி செய்தவர்கள் இந்த வழியில் போய் தமிழீழ பிரகடனம் செய்தாலும் செய்வார்கள். யார் கண்டது? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இப்போ எல்லாரும் கோலி ரேஞ்சுக்கு விளாசுகிறார்கள்

அவதாரங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் களமிறங்கி அபார ஆட்டம்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

அவதாரங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் களமிறங்கி அபார ஆட்டம்.  

சம்பவாமி யுகே, யுகே😀

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சம்பவாமி யுகே, யுகே😀

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், தேவைக்கேற்ப எங்கும் வியாபித்திருப்பார். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎12‎-‎2020 at 19:14, நிழலி said:

ரதி,
இது எப்படி இருக்கின்றது என்றால், புலிகள் இருந்தமையால் தான் சிங்கள அரசுகள் தமிழர்களை அழித்தொழித்தது என்றும் இப்ப அவர்கள் இல்லமையால் தமிழர்களை சக பிரஜைகளாக கருதி நல்லது மட்டுமே செய்யும் என்றும் நம்பலாம் என்ற கருத்தில் இருக்கின்றது.

சரி, அப்படியே நீங்கள் எண்ணுவது போன்று எனில், இன்று புலிகள் இல்லாமல் போனபின் ஏன் தமிழர்களுக்கு சொந்தமான மேச்சல் காணிகளை கூட விட்டு வைக்காமல் சிங்கள மக்களுக்கு அடாத்தாக பறித்து கொடுக்கின்றனர் என்பதற்கோ, அல்லது முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் அடாத்தாத்தாக சிங்கள விவசாயிகள் பறித்தெடுக்கின்றனர் என்பதற்கோ, வடமராச்சி கிழக்கில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான வாடிகளை தீ வைத்து எரித்து விட்டு அதில் சிங்கள மீனவர்கள் வந்து தம் கொட்டில்களை அமைத்து இருக்கின்றார்கள் என்பதற்கோ அல்லது இவற்றுக்கெல்லாம் சிங்கள இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதற்கோ உங்களின் மேலான பதில் என்ன?

அரசும் ,புலிகளும் விரும்பியோ , விரும்பாமலோ யுத்தம் செய்ய வேண்டிய தேவையில் இருந்தது ...புலிகள் இல்லாதவிடத்து யுத்தம்  இல்லை.
அவர்கள் யுத்தத்தில் வென்று விட்டார்கள்...அதை அவர்கள் செயலில் காட்டுகிறார்கள் ....இந்த நிலமைக்கு கொண்டு வந்ததில் புலிகளின் பங்கும்  இருக்குது அல்லவா?
இப்படியே இருந்து கொண்டு சிங்களவன் எமது நிலங்களை ஆக்கிரமித்து விட்டான், வலைகளை அறுத்து விட்டான் என்று புலம்புவதிலோ அல்லது நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதிலோ பிரயோசனம் இல்லை.
என்னுடைய கருத்து அவர்களது வழியில் போய் அவர்களை வளைப்பது 
தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் கால் பாதிக்க வேண்டும் .
நாம் பலமில்லாதவராய் இருக்குமிடத்து எமது நிலங்களை போராடித் தான் பெற வேண்டும்.
வெட்டுவேன் ,குத்துவேன் என்று கதைப்பது சும்மா நாங்கள் தேசியவாதிகள் என்று காட்ட மட்டும் உதவும்.
தங்கள் வயிற்று பிழைப்பிற்காய் அந்த மக்கள் ஆமியிலோ, பொலீசிலோ சேர்ந்தால் துரோகி என்பதும்[கீழே ஒருவர் எழுதியிருக்கார். அவர் அவுசில் இருக்கிறார் . நல்லாய் படித்து நல்ல வேலை ...சிம்பிளாய் துரோகி பட்டம் கொடுத்திருக்கார்.அவருக்கு ஊரில் உள்ளவர்கள் போராடி நாடு எடுத்து கொடுக்கோணும் ..அங்குள்ள மக்கள் வறுமையால் செத்தாலும் பாவாயில்லை இப்படியான வேலைக்கு போக கூடாது .] .
அங்குள்ள மக்கள் தான் தங்களை தங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும் ...அவர்களது நிலங்களை எப்படி மீட்பது என்பது அவர்களுக்கு தெரியும் .
வெளிநாட்டில் இருந்து கொண்டு எம்மால் முடிந்த ஒரு சிலருக்கு நிதியுதவி அளிப்பதை விட வேறு எதுவும் எம்மால் செய்ய முடியாது .
காசை அனுப்பி விட்டு அந்த மக்களை தூண்டி விடுவதை விடுத்து , அவர்களை நிம்மதியாய் இருக்க விடுங்கள் 
 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎12‎-‎2020 at 21:13, குமாரசாமி said:

எந்த நாட்டை? :cool:

நான் பிறந்த நாடுதான்  
 

On ‎03‎-‎12‎-‎2020 at 22:23, goshan_che said:

இந்த திட்டம் எப்படி செயல்வடிவம் பெறக்கூடும் என்ற மேலதிக தகவல்களையும் சொல்லிவிடுங்களேன்?

எல்லாம் ஒரு நப்பாசை தான்...நான் தமிழர்கள் பிரித்து தமிழீழம் அமைப்பார்கள் என்று சொல்லவில்லை ...இராணுவம் மூலம்  ஆட்சி கைப்பற்ற கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்படலாம் ...சிங்களவரும்,தமிழருக்கு உதவலாம் 
 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், தேவைக்கேற்ப எங்கும் வியாபித்திருப்பார். 

அவதாரங்கள் இரு பகுதியிலும்தான் பிறப்பெடுக்கிறன.

இராவண அவதாரம் இராமர் வேசம் போடுவது கூட இந்த யாழ் உலகில் சகஜம்.

அந்த இராவண அவதாரை இராம பக்தர், “இராம, இராமா” என்று பூஜிப்பது கூட நடக்கும் 🤣

அதே நேரத்தில் பார்க்க மிருகம் போல இருப்பதால் நரசிம்மரை அசுரன் என்று சொல்லும் அறியாமையும் இங்கே சகஜம்.

 ஆதலால்தான் நான் அவதாரங்களின் அடி முடி தேடுவதில்லை. அவதாரங்களா இல்லையா என்றும் சிந்திப்பதில்லை. கருத்தை மட்டும் பார்த்தால் போதுமானது.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

சிம்பிளாய் துரோகி பட்டம் கொடுத்திருக்கார்.அவருக்கு ஊரில் உள்ளவர்கள் போராடி நாடு எடுத்து கொடுக்கோணும் ..அங்குள்ள மக்கள் வறுமையால் செத்தாலும் பாவாயில்லை இப்படியான வேலைக்கு போக கூடாது .] .

💯 

அதே நிலையில் வெளிநாடுகளில் பலர் இருப்பதை காண கூடியதாக உள்ளது. இலங்கையில் உள்ளவர்கள் என்ன வேலைகளில் சேர கூடாது எதில் சேரலாம் என்பதை இவர்கள் தான் முடிவு எடுப்பார்கள்.

6 hours ago, ரதி said:

வெளிநாட்டில் இருந்து கொண்டு எம்மால் முடிந்த ஒரு சிலருக்கு நிதியுதவி அளிப்பதை விட வேறு எதுவும் எம்மால் செய்ய முடியாது .
காசை அனுப்பி விட்டு அந்த மக்களை தூண்டி விடுவதை விடுத்து , அவர்களை நிம்மதியாய் இருக்க விடுங்கள் 

👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.