Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவிற்கு சுமந்திரன் அனுப்பிய சர்சைக்குரிய ஆவணம்: கூட்டமைப்பிற்குள் விரிசல்..

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

எங்கே செருகி இருக்கிறார் என்றது தெரியவில்லையே? காட்டுங்களேன்? சுமந்திரன் இந்த ஆவணத்தை விக்கிக்கும் கஜனுக்கும் அனுப்பியதே, எடுப்பபதை எல்லாம் எடுத்துவிட்டு

13 minutes ago, கற்பகதரு said:

சுமந்திரன் இந்த ஆவணத்தை விக்கிக்கும் கஜனுக்கும் அனுப்பியதே, எடுப்பபதை எல்லாம் எடுத்துவிட்டு செருகுவதை எல்லாம் செருகிவிடுங்கள் என்று கேட்டல்லவா?

செருகுவதை எல்லாம் செருகிவிடுங்கள் என்று கேட்டல்லவா? அவர்கள் இருவருமோ, இப்படி எடுப்பதை எடுத்துவிட்டு செருகுவதை செருகாமல், ஏதோ தாங்கள் தான் ஐ. நா. என்று நினைத்துக்கொண்டு “இதை நிராகரிக்கிறோம்” என்று பேட்டி கொடுக்க, நீங்களும் அடுத்த துரோகியை கண்ட அமர்க்களத்தில் விளக்குக்கம்பத்தை தயார்படுத்துகிறீர்கள்.😄

சுமத்திரனின் அனுமதி இல்லாமல் அந்த பிரதி வெளிவராது என்று விக்கியர்  சொன்னதாய்  நினைவு ஆனல் இங்கு அறிக்கை இங்கு வந்தால் நல்லது என்று வணங்காமுடி கேட்க கேட்டு ஒருமணி நேரத்துக்குள் இங்கு எங்கிருந்து பெறப்பட்டது என்று மூலம் குறிப்பிடாமல் அந்த அறிக்கை இங்கு இணைக்கப்பட்டது உங்களால் பிறகு உங்களாலேயே 

1.
Adopt a further resolution in March 2021, in line with what was agreed by all members of the UNHRC, not once but three times, including by Sri Lanka; இந்த வரிகளை போட்டு அவர்களுக்கு இதில்தான் பிரச்சனை என்கிறீர்கள் .
மேலே சிவப்பில் உள்ளது உங்களுக்கு சொல்லப்பட்டது ஆனால் சும்  மாற்றம் எதுவும் தேவையில்லை என்ற தொனியில் முதலில் அவரின் முகநூலிலும் அறிக்கை விட்டவர் உடனே கொப்பி  பண்ண வெளிக்கிட  அந்த அறிக்கை காணாமல் போகுது அது வழக்கமானது தானே 😄
  • Replies 78
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

எது எப்படியோ, அமெரிக்கா, இண்டைக்கு பிரிட்டன், ஐநா வதிவிட பிரதிநிதி எல்லாரும் கூட்டமைப்பை அதுவும் சும்மைதான் கூப்பிட்டு கதைக்கினம்.

தன்னைவிட யாரும் யாரோடும் கதைக்க கூடாது என்பதற்காகவே சம்பந்தரையும்,  மாவையையும் யாரும் அணுக விடாமல் தன் கக்கத்துகை வைத்து எல்லோரையும் விரட்டியடித்து, வெளிநாடுகளுக்கு ஓடியோடி தனக்கு போட்டி என்று தான் நினைத்தவர்கள், அரசுக்கு சவாலானவர்கள் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இவர் சாதித்தவை. கனடாவில் இருக்கும் பெரியவர் ஒருவர் சொல்கிறார்; சுமந்திரனைப்போல் சிறந்த அறிவாளி வேறொருவர் இல்லையாம். சுமந்திரன் அரசியலுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டன? சாதித்தது என்ன? ஏன் இன்னும் நம்ம பிரச்சனையை அந்த சிறந்த அறிவாளியால் தீர்த்து வைக்க முடியவில்லை? தமிழர் என்ன இல்லாததையா கேக்கிறார்கள்?  எதை வைத்து அவரை அறிவாளி என்று அடையாளம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாய் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் குந்தியிருந்து, அரசாங்கத்தின் சமாவுக்கு தவில் வாசித்ததை தவிர சாதித்தது என்ன? என்று விளக்கினால் நாமும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.   இப்போ விக்கினேஸ்வரனும், கஜேந்திரனும் அரசாங்கத்தை கேள்வி கேட்டு, தங்கள் பக்க நிஞாயத்தை விளக்க தொடங்கியதும் அவர்கள் குரல் வெளியில் மக்கள் காதில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக ஒப்புக்கு சப்பாக அப்பப்ப முழங்குகினம். இதற்கே  விக்கியர், கஜன் வரவு வேண்டியிருந்தது.   

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலுள்ள தமிழ் சிஙகளத்தலைவர்கள் இனவாதம்  மதவாதம்   பேசித்தான் அரசியல்செய்கிறர்கள் எனவே மக்களுக்கும்இனவாத் மதவாதம் தான் தெரியும் இந்தரசியல்தலைவர்கள் மக்களுக்கு அரசியலறிவு  வளரயேந்த முயற்ச்சியும் எடுத்ததில்லை .மாறக வாக்குச்சீட்டில் புள்ளடிபோடமட்டும்  பழக்கி வைத்துள்ளர்கள்  விக்கியர் மக்கள்முன் உண்மைபேசுபவர் இது ஒரு தலைவனுக்கு தேவையானயடிப்படைத்தகுதியகும். பாரளுமன்ற உறுப்பினரகள் தங்களுக்கு நிதியை ஒதுக்கும்படியம்...வேலைவாய்ப்புக்களையும் கோரப்கூடாது. இப்படியானசெயல்பட்டினல். மாகணசபைவலுவிழந்துபோகிறது. விக்கியர் வந்தபின் மக்களுக்கு. ஒரளவு அரசியலறிவு வளர்ந்துள்ளது கூட்டமைப்பு விக்கியையழுந்துவந்தது கட்சியை வளர்க்க ..தமிழர்பிரச்சனைததீர்க்கவே..தமிழ்ப்பகுதியையபிவிருத்தி செய்யாவேல்லை 😜😁

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, satan said:

தன்னைவிட யாரும் யாரோடும் கதைக்க கூடாது என்பதற்காகவே சம்பந்தரையும்,  மாவையையும் யாரும் அணுக விடாமல் தன் கக்கத்துகை வைத்து எல்லோரையும் விரட்டியடித்து, வெளிநாடுகளுக்கு ஓடியோடி தனக்கு போட்டி என்று தான் நினைத்தவர்கள், அரசுக்கு சவாலானவர்கள் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இவர் சாதித்தவை. கனடாவில் இருக்கும் பெரியவர் ஒருவர் சொல்கிறார்; சுமந்திரனைப்போல் சிறந்த அறிவாளி வேறொருவர் இல்லையாம். சுமந்திரன் அரசியலுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டன? சாதித்தது என்ன? ஏன் இன்னும் நம்ம பிரச்சனையை அந்த சிறந்த அறிவாளியால் தீர்த்து வைக்க முடியவில்லை? தமிழர் என்ன இல்லாததையா கேக்கிறார்கள்?  எதை வைத்து அவரை அறிவாளி என்று அடையாளம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாய் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் குந்தியிருந்து, அரசாங்கத்தின் சமாவுக்கு தவில் வாசித்ததை தவிர சாதித்தது என்ன? என்று விளக்கினால் நாமும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.   இப்போ விக்கினேஸ்வரனும், கஜேந்திரனும் அரசாங்கத்தை கேள்வி கேட்டு, தங்கள் பக்க நிஞாயத்தை விளக்க தொடங்கியதும் அவர்கள் குரல் வெளியில் மக்கள் காதில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக ஒப்புக்கு சப்பாக அப்பப்ப முழங்குகினம். இதற்கே  விக்கியர், கஜன் வரவு வேண்டியிருந்தது.   

சாத்தான்,

நீங்கள் மேற்குறிப்பிட்ட எனது கருத்திலேயே realpolitik பற்றி கூறியுள்ளேன் அல்லவா?

ஒன்றில் கஜனும், விக்கியரும் அவர்களை அமெரிக்கா அழைத்து கதைக்கும் நிலையில் தம்மை வைத்திருக்க வேண்டும்.

அது இல்லாத பட்சத்தில் யாரை கூப்பிட்டு கதைகிறார்களோ அவர்கள் மூலம் ஒரு ஒற்றுமைபட்ட கோரிக்கைய முன் வைக்க வேண்டும்.

இந்த வரைபை அமெரிக்காவை, மேற்கை பகைத்தபடி முன் நகர்த முடியாது என்பதை நீங்கள் ஏற்பீர்கள் என நினைகிறேன்.

எனக்கு ஒரு தமிழனா இந்த வரைபை ஜெனிவாவில் எப்படி செய்து முடிப்பது என்ற கிளியின் கழுத்து மட்டுமே தெரிகிறது. 

சுமந்திரனிடம் கோவிச்சு கொண்டு நான் கால் கழுவாமல் இருந்தால் என் வீடுதான் நாறும்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தன்னைவிட யாரும் யாரோடும் கதைக்க கூடாது என்பதற்காகவே சம்பந்தரையும்,  மாவையையும் யாரும் அணுக விடாமல் தன் கக்கத்துகை வைத்து எல்லோரையும் விரட்டியடித்து, வெளிநாடுகளுக்கு ஓடியோடி தனக்கு போட்டி என்று தான் நினைத்தவர்கள், அரசுக்கு சவாலானவர்கள் பதவி விலகவேண்டும் என்று கோரிக்கை விடுத்து இவர் சாதித்தவை. கனடாவில் இருக்கும் பெரியவர் ஒருவர் சொல்கிறார்; சுமந்திரனைப்போல் சிறந்த அறிவாளி வேறொருவர் இல்லையாம். சுமந்திரன் அரசியலுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டன? சாதித்தது என்ன? ஏன் இன்னும் நம்ம பிரச்சனையை அந்த சிறந்த அறிவாளியால் தீர்த்து வைக்க முடியவில்லை? தமிழர் என்ன இல்லாததையா கேக்கிறார்கள்?  எதை வைத்து அவரை அறிவாளி என்று அடையாளம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாய் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் குந்தியிருந்து, அரசாங்கத்தின் சமாவுக்கு தவில் வாசித்ததை தவிர சாதித்தது என்ன? என்று விளக்கினால் நாமும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.   இப்போ விக்கினேஸ்வரனும், கஜேந்திரனும் அரசாங்கத்தை கேள்வி கேட்டு, தங்கள் பக்க நிஞாயத்தை விளக்க தொடங்கியதும் அவர்கள் குரல் வெளியில் மக்கள் காதில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக ஒப்புக்கு சப்பாக அப்பப்ப முழங்குகினம். இதற்கே  விக்கியர், கஜன் வரவு வேண்டியிருந்தது.   

சரி, இப்ப தான் விக்கி ஐயாவும் கஜனும் வந்து விட்டார்கள் அல்லவா? இனி "அறிவாளி"யான சுமந்திரனை ஏன் நம்புவான்? என்ன நடக்குதெண்டு பார்ப்பமென் எல்லாரும் பொப்கோர்னோட குந்தியிருந்து!:grin:

விக்கி ஐயா BJP வானதி சீனிவாசனின் நேரடி நெறியாள்கைக்கு உட்பட்டவர். இலங்கை அரசிற்கு எதிராக உண்மையான ஒரு நிலையை எடுக்க அனுமதிப்பார்களோ தெரிவில்லை, B-Team architects?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பராபரன் said:

விக்கி ஐயா BJP வானதி சீனிவாசனின் நேரடி நெறியாள்கைக்கு உட்பட்டவர். இலங்கை அரசிற்கு எதிராக உண்மையான ஒரு நிலையை எடுக்க அனுமதிப்பார்களோ தெரிவில்லை, B-Team architects?

அப்ப  சுமத்திரன்  யாரின் நெறியாள்கை ?

  • கருத்துக்கள உறவுகள்

132750923_2890201817971251_8301852737171

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

சுமந்திரன் அரசியலுக்கு வந்து எத்தனை ஆண்டுகள் கழிந்து விட்டன? சாதித்தது என்ன? ஏன் இன்னும் நம்ம பிரச்சனையை அந்த சிறந்த அறிவாளியால் தீர்த்து வைக்க முடியவில்லை? தமிழர் என்ன இல்லாததையா கேக்கிறார்கள்? 

பிரபாகரனை விடச்சிறந்த போரியல் அறிவாளி இன்றைய சமகாலத்தில் இருக்கவில்லை என்பதை அவரின் எதிரிகள் கூட சிலாகித்து வியப்புடன் கூறுகிறார்கள். 30 வருடம் அவருடைய தலைமையில் அனைத்து மக்களும் திரெண்டெழுந்து, தமிழ்நாட்டு மக்களின் தளராத ஆதரவுடன் போராடியும் ஈழத்தமிழர் பிரச்சினையை பிரபாகரனால் ஏன் தீர்த்து வைக்க முடியவில்லை? பிரபாகரனுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு சுமந்திரன் சாமனியர். அவரிடம் 11 வருடத்தில் தீர்வு கேட்கிறீர்களே? சுமந்திரன் அரசியலுக்கு வந்து 11 ஆண்டுகள்.

28 minutes ago, பராபரன் said:

விக்கி ஐயா BJP வானதி சீனிவாசனின் நேரடி நெறியாள்கைக்கு உட்பட்டவர். இலங்கை அரசிற்கு எதிராக உண்மையான ஒரு நிலையை எடுக்க அனுமதிப்பார்களோ தெரிவில்லை, B-Team architects?

 

12 minutes ago, பெருமாள் said:

அப்ப  சுமத்திரன்  யாரின் நெறியாள்கை ?

இதென்ன விடிய விடிய இராமாயணம், விடிஞ்சபின் இராமனுக்கு சீதை என்ன முறை, என்று கேட்கிறீர்களே? 

சுமந்திரன் அமெரிக்க அரசின் நெறியாள்கையில், அதை வெளிப்படையாக சொல்லியே செய்கிறார், இன்னமும் புரியவில்லையா?? 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கஜனும், விக்கியரும் அவர்களை அமெரிக்கா அழைத்து கதைக்கும் நிலையில் தம்மை வைத்திருக்க வேண்டும்.

ஒரு பிரேரணையை அனுப்புவதற்கு முதல் தமிழ்த் தலைமைகள் கூடி, ஆராய்ந்து முடிவெடுக்காமல் அவர்களது பார்வைக்கு அனுப்பியவுடன் ஐ. நா. வுக்கும் முந்திக்கொண்டு அனுப்பியதன் மர்மம் என்னவோ? அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ளவோ அல்லது தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்கிற எண்ணமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

ஒரு பிரேரணையை அனுப்புவதற்கு முதல் தமிழ்த் தலைமைகள் கூடி, ஆராய்ந்து முடிவெடுக்காமல் அவர்களது பார்வைக்கு அனுப்பியவுடன் ஐ. நா. வுக்கும் முந்திக்கொண்டு அனுப்பியதன் மர்மம் என்னவோ? அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ளவோ அல்லது தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்கிற எண்ணமா?

அனுப்பிய பின்னர்தான் விக்கி கஜனுக்கு கொப்பி  போயிருக்கு இதை என்னவென்று சொல்வது 

10 minutes ago, கற்பகதரு said:

சுமந்திரன் அமெரிக்க அரசின் நெறியாள்கையில், அதை வெளிப்படையாக சொல்லியே செய்கிறார், இன்னமும் புரியவில்லையா?? 

சிலவேளை அமெரிக்கன் எம்பஸியில் கக்கூசு கிளீன் பண்ணும் கொன்ராக்ட்  அவருக்கு கிடைத்து இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பராபரன் said:

விக்கி ஐயா BJP வானதி சீனிவாசனின் நேரடி நெறியாள்கைக்கு உட்பட்டவர். இலங்கை அரசிற்கு எதிராக உண்மையான ஒரு நிலையை எடுக்க அனுமதிப்பார்களோ தெரிவில்லை, B-Team architects?

C team ல் விராட் கோலியை போடலாம் என யோசிக்கிறம்.😜

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பெருமாள் said:

அனுப்பிய பின்னர்தான் விக்கி கஜனுக்கு கொப்பி  போயிருக்கு இதை என்னவென்று சொல்வது 

இதைத்தான் முயற்சி செய்தல் என்று சொல்வது. விக்கி, கஜன் ஏன் தாம் அனுப்பவில்லை என்று தெரியுமா? அவர்களால் முடிந்ததெல்லாம் வெறும் வெட்டிப்பேச்சுத்தான்.

14 minutes ago, பெருமாள் said:

சிலவேளை அமெரிக்கன் எம்பஸியில் கக்கூசு கிளீன் பண்ணும் கொன்ராக்ட்  அவருக்கு கிடைத்து இருக்கலாம் .

அப்படியா? அனுபவம் பேசுகிறது, நாம் இதிலே சொல்வதற்கு எதுவுமில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கற்பகதரு said:

இதைத்தான் முயற்சி செய்தல் என்று சொல்வது. விக்கி, கஜன் ஏன் தாம் அனுப்பவில்லை என்று தெரியுமா? அவர்களால் முடிந்ததெல்லாம் வெறும் வெட்டிப்பேச்சுத்தான்.

ஒன்றுபட்டு கதைத்து  முடிவு எடுத்து அனுப்புதல் அதுதான் முறை அதைவிட்டு கேனத்தனமாய் விக்கி ஏன் அனுப்பவில்லை கஜன் ஏன் அனுப்பவில்லை என்று கேள்வி வேறை .

இதை  விட்டு கால்மாறின பின் மாப்பிளை எப்படி என்ற தோரணையில் சுமத்திரனால் விக்கிக்கும் கஜனுக்கும் திட்ட வரைபு அனுப்பப்பட்டு இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கே நடக்கும் விவாதங்களில் பங்குகொள்ள விரும்பவில்லை. 

ஆனாலும் எனக்குச் சில விடயங்கள் புரிவதில்லை. மனிதவுரிமை மீறல்களையோ, போர்க்குற்றங்களையோ ஐநாவும், பின்னாலிருக்கும் அமெரிக்க இந்தியக் கூட்டும் கையிலெடுப்பது தமது நண்மைக்காக மட்டுமே என்றாகிறபோது நாம் இதுபற்றி அலட்டிக்கொள்ளவேண்டுமா? 

அல்லது இந்த அமெரிக்க - இந்திய நலன்பேணலுக்கான மனிதவுரிமை மீறல்கள் விசாரணை என்பதை எமக்கும் சாதகமாகப் பாவிக்கும் வழிவகைகள் இருக்கின்றனவா? அப்படியிருந்தால் அதனை யாராவது இங்கே விளக்கமுடியுமா?

சரி, இவை எதுவுமே வேண்டாம், இந்த மனிதவுரிமை தீர்மானத்திற்கும் எமக்கும் சம்பந்தமில்லை, ஆகவே விலகி நிற்கலாம் என்றால், வேறு என்ன வழிமுறைகள் மூலம் இன்றுநடக்கும் வெளிப்படையான ஆக்கிரமிப்பையும், இனச்சிதைவையும் தடுக்க முடியும்?

குறிப்பு : தயவுசெய்து அரசுக்கு முண்டுகொடுத்து சரணாகதி அரசியல் செய்து அபிவிருத்தி செய்யுங்கள் என்றோ, வீதிக்கு இறங்கி ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்கலாம் என்றோ சொல்லவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒற்றுமைக்காக நல்லெண்ணத்தோடு முயற்சிக்கையில் குற்றங்காண்பதா?

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஒன்றுபட்டு கதைத்து  முடிவு எடுத்து அனுப்புதல் அதுதான் முறை

அப்படி கதைக்கத்தான் விக்கிக்கும் கஜனுக்கும் அனுப்பினவர் சுமந்திரன். அவர்கள் கதைப்பதை விட்டுவிட்டு தாம் இதை நிராகரிக்கிறோம் என்று பத்திரிகையாளர் மகாநாடு நடத்தினவை. 


 

கேள்வி

1 hour ago, ரஞ்சித் said:

நான் இங்கே நடக்கும் விவாதங்களில் பங்குகொள்ள விரும்பவில்லை. 

ஆனாலும் எனக்குச் சில விடயங்கள் புரிவதில்லை. மனிதவுரிமை மீறல்களையோ, போர்க்குற்றங்களையோ ஐநாவும், பின்னாலிருக்கும் அமெரிக்க இந்தியக் கூட்டும் கையிலெடுப்பது தமது நண்மைக்காக மட்டுமே என்றாகிறபோது நாம் இதுபற்றி அலட்டிக்கொள்ளவேண்டுமா? 

பதில்

1 hour ago, ரஞ்சித் said:

இந்த மனிதவுரிமை தீர்மானத்திற்கும் எமக்கும் சம்பந்தமில்லை, ஆகவே விலகி நிற்கலாம் என்றால், வேறு என்ன வழிமுறைகள் மூலம் இன்றுநடக்கும் வெளிப்படையான ஆக்கிரமிப்பையும், இனச்சிதைவையும் தடுக்க முடியும்?

வேறு வழிமுறைகள் இல்லை.

 

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

ஒரு பிரேரணையை அனுப்புவதற்கு முதல் தமிழ்த் தலைமைகள் கூடி, ஆராய்ந்து முடிவெடுக்காமல் அவர்களது பார்வைக்கு அனுப்பியவுடன் ஐ. நா. வுக்கும் முந்திக்கொண்டு அனுப்பியதன் மர்மம் என்னவோ? அவர்களின் கருத்து ஏற்றுக்கொள்ளவோ அல்லது தான் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்கிற எண்ணமா?

சாத்தான்,

சுமந்திரன் என்று ஒரு அரசியல்வாதியை நீங்கள் எப்படி நம்புவதில்லையோ (நானும்தான்) அப்படி இன்னும் இரு நம்பமுடியாத அரசியல்வாதிகள்தான் கஜனும், சீவியும்.

இங்கே எப்போது சுமந்திரன் வரைபை இவர்களுக்கு அனுப்பினார், எப்போது ஐநாவுக்கு அனுப்பினார் என்பதில் நம் யாருக்கும் தெளிவில்லை.

கஜனும், சீவியும் மின்னஞ்சல்கள்களை பகிரங்க படுத்தி, இத்தனையாம் திகதி, இன்ன நேரத்தில் எமக்கு அனுப்பபட்டது, இததனையாம் திகதி இன்ன நேரத்தில் ஐநாவுக்கு அனுப்ப பட்டது ஆகவே எமக்கு அவகாசம் வழங்கபடவில்லை என்பதை இலகுவில் காட்டலாம். காட்டவில்லை (நான் அறிய).

அதை விட முக்கியமாக, வரைபு என ஜூட் போட்டதில் எனக்கு பெரிதாக ஒரு குறையும் கண்டு பிடிக்க முடியவில்லை. சுமந்திரன் மீது மெகா கடுப்பில் உள்ள கருத்தாளர்கள் கூட “இது ராஜதந்திர மொழியாக இல்லையே” என்பதைதான் விமர்சனமாக முன்வைக்க முடிந்திருக்கிறது.

மிக மிக முக்கியமாக - காலவகாசம் தரப்பட்டது என்பதற்கு அதிலே ஒரு வசனத்தைதானும் என்னால் காட்ட முடியவில்லை.

இதை நுணா தொடக்கம் எல்லாரிடமும் ஒரு யாசகன் பிச்சை எடுப்பது போல நான் கேட்டும், யாராலும் காலாவகாசம் கொடுக்கபட்டது என்ற ஆதாரத்தை காட்ட முடியவில்லை.

இதையும் கஜனும், விக்கியும் இலகுவில் நிறுவலாம். இதோ இதுதான் எமக்கு அனுப்பபட்ட பிரதி, இதிலே காலாவகாச சரத்து இருக்கிறது என ஒரு பிரிண்டவுடை எடுத்து போட்டால் போதும்.

இரெண்டு குற்றசாட்டுகளையும் சுமத்துபவர்கள் மிக இலகுவாக நிருபிக்க முடிந்தும் அப்படி செய்யாமல் இருக்கும் போது, பேஸ்புக்கில், யுடியூப்பிக் நாலு காளான்கள் எழுதியதை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது.

எல்லாவற்றையும் விட பெரிய விடயம்.

இந்த வரைபில் காலாவகாசம் என்பதை தவிர வேறு எதையும் விக்கி கஜன் பிழை கூறவில்லை. நாம் காணும் வரைபில் அந்த சரத்து இல்லை. அப்போ சுமந்திரன் தயாரித்தார் என்பதை விட இந்த வரைபை எதிர்க்க வேறு என்ன காரணம் இருக்கிறது ?

கஜன் கோர்ட்டுக்கு போகாத வக்கீல். லண்டனில் கூட அவர் பாரிஸ்டர் பட்டம் வெளிநாட்டவர் என்றவகையில் எடுத்ததாயும் இலண்டனில் அவர் சட்டத்தை தொழிலாக செய்யவே இல்லை என்றும் சொல்லபடுகிறது.

ஆனால் சிவனே என்று ஆங்கிலதில் புலமை என்று சொல்ல முடியாவிட்டாலும் நல்ல சரளமாக பேச, எழுத முடியுமாக இருக்கிறது. சீவிக்கு சட்ட விற்பனமும் இருக்கிறது, அதீத ஆங்கில புலமையும் இருக்கிறது.

ஆகவே இந்த வரைபில் கால அவகாச சரத்து உள்ளது என இவர்கள் பிழையாக விளங்கி இருக்க முடியாது.

அப்போ அப்படி ஒரு சரத்து இருந்ததாக இவர்கள் சொல்லும் வரைபு எங்கே, அது இவர்களிடம்தானே இருக்க வேண்டும்?

அப்படி ஒரு வரைபு இல்லை என்றால், வேண்டும் என்றே அப்படி ஒரு வரைபு இருந்ததாக இவர்கள் எமது மக்களிடம் பொய்யுரைத்தனரா?

இந்த கேள்விகளுக்கு பதில் தெரியாமல், பழைய கோவங்களை வைத்து சுமந்திரனை போட்டு மிதிப்பதால், எமது இனத்தின் பொது நன்மைதான் பாதிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு விவாதிக்கும் எல்லோருமே குணா கவியழகன் அண்மையில் வெளியிட்ட போர்க்குற்றவிசாரணைகளோ அல்லது ஐ நா மனிதவுரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிராக சில நாடுகள் முன்னெடுக்கலாம் என்று எதிர்பார்க்கிற நடவடிக்கைகளோ அரசியல் ரீதியாக எமக்கான விடுதலையினைப் பெற்றுத்தரப்போவதில்லையென்கிற காணொளியைப் பார்த்திருப்பீர்கள். அதுபற்றிய விளக்கங்கள் தொடர்பான உங்கள் ஒவ்வொருவரினதும் புரிதல்களைக் கொண்டு இங்கே சுமந்திரனால் வடிவமைக்கப்பட்ட, கஜனாலும் விக்கியாலும் விமர்சிக்கப்பட்ட உத்தேச ஆலோசனை எந்தவிதத்தில் பயன் தரும் அல்லது தராது என்று நினைக்கிறீர்கள்? 

ஐ நா மனிதவுரிமை ஆணையத்தில் இலங்கையரசுக்கெதிரான போர்க்குற்ற மற்றும் மனிதகுலத்திற்கெதிரான அநியாயங்கள் ஆகியவற்றிற்கான விசாரணையினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ரீதியிலான தீர்வொன்று நோக்கி இலங்கையரசை நிர்ப்பந்திக்கலாம் என்று இதுவரை நினைத்திருந்தேன், ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று குணாவின் காணொளி சொல்கிறது.

இங்கு எவராவது இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கூறமுடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

இங்கு விவாதிக்கும் எல்லோருமே குணா கவியழகன் அண்மையில் வெளியிட்ட போர்க்குற்றவிசாரணைகளோ அல்லது ஐ நா மனிதவுரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிராக சில நாடுகள் முன்னெடுக்கலாம் என்று எதிர்பார்க்கிற நடவடிக்கைகளோ அரசியல் ரீதியாக எமக்கான விடுதலையினைப் பெற்றுத்தரப்போவதில்லையென்கிற காணொளியைப் பார்த்திருப்பீர்கள். அதுபற்றிய விளக்கங்கள் தொடர்பான உங்கள் ஒவ்வொருவரினதும் புரிதல்களைக் கொண்டு இங்கே சுமந்திரனால் வடிவமைக்கப்பட்ட, கஜனாலும் விக்கியாலும் விமர்சிக்கப்பட்ட உத்தேச ஆலோசனை எந்தவிதத்தில் பயன் தரும் அல்லது தராது என்று நினைக்கிறீர்கள்? 

ஐ நா மனிதவுரிமை ஆணையத்தில் இலங்கையரசுக்கெதிரான போர்க்குற்ற மற்றும் மனிதகுலத்திற்கெதிரான அநியாயங்கள் ஆகியவற்றிற்கான விசாரணையினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ரீதியிலான தீர்வொன்று நோக்கி இலங்கையரசை நிர்ப்பந்திக்கலாம் என்று இதுவரை நினைத்திருந்தேன், ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று குணாவின் காணொளி சொல்கிறது.

இங்கு எவராவது இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கூறமுடியுமா? 

குணாவின் ஆய்வை நான் பார்க்கவில்லை. ஆனால் சொல்லக் கூடியது: 

1. இலங்கையரசை தீர்வுக்கு இணங்க வைக்கும் உறுதியான துருப்புச் சீட்டு யாரிடமும் இல்லை. சீனாவிடமிருந்து பிரிக்க அமெரிக்கா ஏதாவது செய்யும் என்றும் இதன் பக்க விளைவாக தமிழருக்கு ஏதாவது கிடைக்கும் என்று எழுதுகிறார்கள். அமெரிக்காவில் இருந்து பைடன் நிர்வாகப் பேச்சுக்களை அன்றாடம் பார்க்கிறேன். எனக்கு விளங்குவது அடுத்த 2 வருடங்கள் பொருளாதாரத்தை மீள நிமிர்த்தத் தான் முன்னுரிமை கொடுப்பார்கள். இதற்கு சீனாவுடன் ஒட்டிப் போகா விட்டாலும் win-win என்ற போக்குத் தான் பைடனின் அதிகாரிகளால் எடுக்கப் படும். 

2. சர்வதேச விசாரணைகளின் பயன் என்ன?பாகிஸ்தானின் ஷியாவுல் ஹக் காஷ்மீர் பிரச்சினை பற்றிக் குறிப்பிட்டது போல "பானையை கணக்கான கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும்" என்ற கருத்தே எமக்கும் பொருந்தும். இலங்கையை விலகிச் செல்ல அனுமதிக்காமல் ஒரு பொறிமுறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டியதே சாத்தியமான வழி. இதை ICC, ICJ இல் செய்ய முடியுமா என்பது எனக்குத் தெரியாது. தெரிந்த, இந்தப் பொறிமுறைகளை முன்மொழியும் கஜேந்திரகுமார் தான் சொல்ல வேண்டும். மனித உரிமைப் பேரவையில் இது இயலும் என்பது பொதுவான கருத்து.

3. தீர்வுக்கு என்ன வழி? சமாந்தரமான வழி தான். இலங்கையில் இருப்போர் தான் முன்மொழிவுகளைத் தயாரிக்க வேண்டும் (தயாரிக்கிறார்கள் என அறிகிறேன்). அது தமிழ் தரப்பின் யாராக இருந்தாலும் தயாரித்து பகிரங்கப் படுத்த வேண்டும் என்பது தான் எனது கருத்து. இந்தப் பகிரங்கப் படுத்தல் சிங்கள மக்களையும் சென்றடையக் கூடியவாறு இருக்க வேண்டும். ஏன்? சிங்கள அரசியல் வாதிகள் சொல்வது போல தமிழர்களுக்கான தீர்வு சிங்களவர்களுக்கு ஆப்பு அல்ல என்பது சொல்லப் பட வேண்டும். இது என் அபிப்பிராயம். இப்படிச் சிங்கள மக்களுக்குச் சொன்னால் அவர்கள் தேர்தல் மூலம் ஆணை வழங்குவார்களா? இது மில்லியன் டொலர் கேள்வி. எனக்கும் பதில் தெரியாது.  

  • கருத்துக்கள உறவுகள்

போர்குற்றவிசாரனைக்கு ஏன் கால அவகாசம் கொடுக்கவேண்டும்?  குற்றவாளிகள்  உடனடியாகத்தண்டிக்கப்படவேண்டும். முன்பு கால அவகாசம்கொடுத்ததுபிழையான செயல்.போர்குற்றவிசாரனை தவிர்த்த மற்றையவிடயங்களுக்குக்கால அவகாசம்கொடுக்கலாம்.. இவ்வாறு போர்குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது  இனவாதிகளுக்கு  சிங்களமக்கள் வாக்குபோடும் வீதம் குறைவடையம்.😁😎👍

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

போர்குற்றவிசாரனைக்கு ஏன் கால அவகாசம் கொடுக்கவேண்டும்?  குற்றவாளிகள்  உடனடியாகத்தண்டிக்கப்படவேண்டும். முன்பு கால அவகாசம்கொடுத்ததுபிழையான செயல்.போர்குற்றவிசாரனை தவிர்த்த மற்றையவிடயங்களுக்குக்கால அவகாசம்கொடுக்கலாம்.. இவ்வாறு போர்குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது  இனவாதிகளுக்கு  சிங்களமக்கள் வாக்குபோடும் வீதம் குறைவடையம்.😁😎👍

கந்தையா, யார் கால அவகாசம் கொடுப்பதாக எங்கே சொல்லப்பட்டிருக்கு?

யாழில் சில ஞானக்கண் உள்ள சிலர் தவிர வேறு யாருக்கும் இப்போதைய தமிழ் தரப்புகள் எவையும் கால அவகாசம் கொடுக்கும் படி சொன்ன வாக்கியம் தெரியவில்லை! உங்களுக்குத் தெரிகிறதா? 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரே வழி பொருளாதர பலம் தான் எம்மையும் ஒரு தரப்பாய் மதிக்கும்.இதுக்கு நாம் சொல்லும் நியாயமான காரனம் உறுதி இல்லாத கானியில் வீடு கட்ட்க் கூடாது என்பது தான்.ஏன் முயற்ச்சிக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரஞ்சித் said:

இங்கு விவாதிக்கும் எல்லோருமே குணா கவியழகன் அண்மையில் வெளியிட்ட போர்க்குற்றவிசாரணைகளோ அல்லது ஐ நா மனிதவுரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிராக சில நாடுகள் முன்னெடுக்கலாம் என்று எதிர்பார்க்கிற நடவடிக்கைகளோ அரசியல் ரீதியாக எமக்கான விடுதலையினைப் பெற்றுத்தரப்போவதில்லையென்கிற காணொளியைப் பார்த்திருப்பீர்கள். அதுபற்றிய விளக்கங்கள் தொடர்பான உங்கள் ஒவ்வொருவரினதும் புரிதல்களைக் கொண்டு இங்கே சுமந்திரனால் வடிவமைக்கப்பட்ட, கஜனாலும் விக்கியாலும் விமர்சிக்கப்பட்ட உத்தேச ஆலோசனை எந்தவிதத்தில் பயன் தரும் அல்லது தராது என்று நினைக்கிறீர்கள்? 

ஐ நா மனிதவுரிமை ஆணையத்தில் இலங்கையரசுக்கெதிரான போர்க்குற்ற மற்றும் மனிதகுலத்திற்கெதிரான அநியாயங்கள் ஆகியவற்றிற்கான விசாரணையினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ரீதியிலான தீர்வொன்று நோக்கி இலங்கையரசை நிர்ப்பந்திக்கலாம் என்று இதுவரை நினைத்திருந்தேன், ஆனால் அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று குணாவின் காணொளி சொல்கிறது.

இங்கு எவராவது இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கூறமுடியுமா? 

ரஞ்சித்,

இதே போல் சில கேள்விகளை பராபரனும் இன்னொரு திரியில் எழுப்பினார். அவர் அந்த கேள்விகளை rhetorical questions ஆக எழுப்புகிறார் (இதுக்கு என்ன தமிழ்?) என் நினைத்ததால், அவரையே பதிலையும் எழுதும்படி கேட்டேன்.

குணாவின் வீடியோவையும் நான் பார்க்கவில்லை. 

பராபரன் பதிவிடாமல் விட்டால், இந்த கேள்விகளை எல்லாம் ஒரு பட்டியல் இட்டு, அடுத்து என்ன நடக்கும், மனித உரிமை கவின்சில் கடுமையான தீர்மானம் நிறைவேற்றினால், அடுத்த படி என்ன, ஐசிசிக்கு எப்படி போவது? அங்கே வழக்காடும் தரப்பாக யார் இருப்பர் இவற்றை எல்லாம் அலசி எனக்கு தெரிந்தவற்றை ஒரு பதிவு போடலாமா என நினைத்தேன். 

ஆனால் யோசித்து பார்த்தால் இது எல்லாம் ஆடு அறுக்க முதல் செவியை அறுக்கும் வேலையாகவே தெரிகிறது.

முதலில் பின்வரும் மூலோபாய கேள்விக்கு நாம் விடை தேடுவதே இப்போ அவசியமானது.

எமது இலக்கு என்ன?

1. 2009 நேரம் அதிகாரத்தில் இருப்பவர்களை தண்டிப்பதா?

2. தண்டிக்க பட போகிறீர்கள் என்ற பயத்தை காட்டி நமக்கு கிடைக்க கூடிய தீர்வை பெற முயல வேண்டுமா?

1இன் படி அவர்களை நாம் தண்டித்து விட்டால், 2இன் படி எமக்கு தீர்வை தர அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை.

மகிந்தவை, கோட்டவை மின்சார கதிரைக்கு அனுப்பியே விட்டால்? நாமல் வருவார் அவரை எதை வைத்து மேற்கு மிரட்டும்?

இதிலே இவர்களை தண்டிக்கும் போக்கில் கூட்டமைப்பும், மேற்கும் மெதுவான முறையை எடுப்பதற்கு இதுதான் காரணம்.

ஆனால் தொடர்ந்தும் இலங்கை முரண்டு பிடித்தால் - மனித உரிமை கவுன்சிலில் ஒரு காரசாரமான பிரேரணை நிறைவேறலாம்.

இங்கே இந்த பிரேரணையின் காரம் என்ன, கால அவகாசம் என்ன என்பதெல்லாம் உண்மையில் மேற்கும் இந்தியாவும் மட்டுமே தீர்மானிக்கும் விடயங்கள்.

அவர்களின் தீர்மானம் இலங்கை தமக்கு சாதகமாக நடக்கிறதா இல்லையா என்பதில்தான் முழுக்க முழுக்க தங்கியுள்ளது.

இங்கே தமிழர் தரப்பு கால அவகாசம் பற்றியோ, பிரேரணை நிழக்சி நிரல் பற்றியோ முடிவெடுக்கும் தரப்பு அல்ல.

ஆனால் நாம் இலங்கை மீது காரசாரமான தீர்மானம் வேண்டும் என கோர முடியும். அதுதான் நடக்கிறது.

சிலவேளை நீங்கள் கோரினாலும் இந்த முறை இது சாத்தியமில்லை என யூஎஸ் சுமந்திரனுக்கு சொல்ல கூடும்.

ஆனால் சுமந்திரன் ராஜதந்திரமாக செயல்படின் இதை வெளியே சொல்லாமல், நாங்கள் இப்போதே வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துவோம், நீங்கள் உங்கள் முடிவுபடி நடவுங்கள் என அமெரிகாவிடம் சொல்ல வேண்டும். 

(இதை playing for the domestic audience என்பார்கள். பிரெக்சிற் விசயத்தில் இதை யூகே அரசு செய்வதை காணலாம்).

ஆனால் அப்படி செய்யாமல், மக்களுடன் ஒளிவு மறைவின்றி பேசும் நல்லெண்ணதிலோ அல்லது எனக்கு அமெரிக்கா நண்பன் என காட்டும் அவசர குடுக்கைதனத்திலோ, சுமந்திரன் “கால அவகாசம் கொடுப்போம்” என்று ஏதோ அது தனது (எமது) முடிவு என்பது போல சொல்ல (இந்த முறை வரைபில் இது இல்லை) தருணம் பாத்திருக்கும் கஜனும், விக்கியும் அவரை துவைத்து தொங்க விடுகிறார்கள்.

இதுதான் நடக்கிறது.

சரி இதுவரை மனித உரிமை கவின்சிலின் பிரேரணையின் வீச்சும், காலமும், பாதையும் யாரால் (மட்டுமே) தீர்மானிக்கபடுகிறது அதில் எமது வகிபாகம் என்ன என்பதை நாம் பார்த்து விட்டோம்.

அடுத்து நாம் விரும்பியவாறே தீர்மானம் நிறைவேறிவிட்டது. இலங்கை போர்குற்றம் இழைத்தது என பிரேரணை வந்தாகி விட்டது என வைப்போம். சரி, அடுத்து என்ன?

இஸ்ரேலுக்கு எதிராக நூறூக்கு மேற்பட்ட பிரேரணைகள் உள்ளன. ஆனால் அவற்றை இஸ்ரேலும் கணக்கில் எடுப்பதில்லை. இதன் பயனாக பாலஸ்தீனருக்கு ஒரு சிறிய விடிவுதானும் கிடைக்கவில்லை.

மியன்மாரில் இனப்படுகொலை நடந்ததாக தீர்மானம் ஆயிற்று. என்ன நடந்தது?

இலங்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதையும் முழுக்க முழுக்க தீர்மானிக்க போவது புவிசார் அரசியல் மட்டுமே.

இலங்கை மீதான தீர்மானம் வெற்று காகிதமாகவும் போகலாம். அடுத்து சர்வதேச விசாரணைக்கும் உள்ளாகலாம் ( எப்படி உள்ளாகலாம் என்பது இப்போதைக்கு ஆட்டின் செவி அறுக்கும் வேலை -நடக்கும் போது ஆராய்வோம்). 

ஆனால் இந்த வழித்தடத்தின் ஒவ்வொரு இஞ்சியும் புவிசார் அரசியலால் மட்டுமே தீர்மானிக்கபடும்.

நாம் எல்லாரும் விடும் மின்பெரிய பிழை உள்நாட்டு சட்டகோவை போல சர்வதேச சட்டமும் இருக்கும் என எதிர்பார்ப்பதே.

ஆனால் சர்வதேச சட்டத்தில் நடுநிலையான “பொலீஸ்” இல்லை. பலமான நாடுகள் கூட்டாகவோ, குழுக்களாகவோ, தனியாகவோ தேவைக்கேற்ப (தமது தனி அல்லது கூட்டு தேவைக்கு ஏற்ப) பொலீஸ் உத்தியோகம் பார்ப்பார்கள்.

ஆகவே சர்வதேச சட்டத்தில் சட்டத்துக்கு முன் எல்லாரும் சமன் இல்லை (சிலர் சர்வதேச சட்டம், சட்டமே இல்லை அது ஒருவகை மாபியா-விதி என்பார்கள்). 

பொலீஸ்கார் எமது நண்பனா, பொலீச்காரரின் நலனுடன் எமது நலனை எப்படி ஒருங்கிணைத்து வெல்லுவது என்பவைதான் இங்கே வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவை

எமது விடயம் போல் ஒரே விடயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பொலீஸ்காரகள் இருந்தால், எந்த பொலீஸ்காரை, எப்படி “கவர்” பண்ணுவது என்றும் பார்க்க வேண்டும்.

இது சட்டம் என்ற போர்வையில் நடக்கும் சர்வதேச புவிசார் அரசியல் சதுரங்கம்.

இதில் நாம் காய்கள் கூட இல்லை, சதுரங்க மட்டையில் வீழ்ந்து கிடக்கும் தூசிகள்.

இவற்றை உணர்துகொண்டால் இந்த பிரச்சனையில் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதை கட்டமைக்க தொடங்கலாம். 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

போர்குற்றவிசாரனைக்கு ஏன் கால அவகாசம் கொடுக்கவேண்டும்?  குற்றவாளிகள்  உடனடியாகத்தண்டிக்கப்படவேண்டும். முன்பு கால அவகாசம்கொடுத்ததுபிழையான செயல்.போர்குற்றவிசாரனை தவிர்த்த மற்றையவிடயங்களுக்குக்கால அவகாசம்கொடுக்கலாம்.. இவ்வாறு போர்குற்றவாளிகள் தண்டிக்கப்படும்போது  இனவாதிகளுக்கு  சிங்களமக்கள் வாக்குபோடும் வீதம் குறைவடையம்.😁😎👍

 

உங்கள் கேள்வியையும் மேலே என்பதிவு தொடுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.