Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறா - சினிமா விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
மாதவன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மாதவன் - கோப்புப்படம்

 

மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து 2015ஆம் ஆண்டில் வெளிவந்த சார்லி திரைப்படத்தின் ரீ - மேக்தான் மாறா.

சார்லி விமர்சன ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற படம் என்பதால், இந்த ரீ - மேக் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

பாரு என்ற பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் கலைஞர். கேரளாவில் உள்ள ஒரு சிறு நகருக்குச் செல்லும்போது, அங்குள்ள கட்டடச் சுவர்களில் தான் சிறுவயதில் கேட்ட ஒரு கதையின் காட்சிகள் வரையப்பட்டிருப்பதைப் பார்க்கிறாள். மாறா (மாதவன்) என்பவன்தான் அந்த ஓவியங்களை வரைந்தது எனத் தெரியவருகிறது. மாறனின் வீட்டில் கிடைக்கும் ஒரு நோட்டுப் புத்தகத்தில், சில சம்பவங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அதில் உள்ள மனிதர்களைச் சந்தித்து, அவர்கள் கதைகளைக் கேட்கிறாள் பார்வதி. இந்தப் பயணம் அவளை எங்கே இட்டுச் செல்கிறது என்பதுதான் மீதிக் கதை.

சார்லி படத்திலிருந்து சின்னச் சின்ன திரைக்கதை மாற்றங்களோடு இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் துவக்கத்தில், பார்வதி ரயிலில் கதையைக் கேட்க ஆரம்பிக்கும்போது, அந்தக் கதையும் அதில் வரும் காட்சிகளும் மிக சுவாரஸ்யமாகவே விரிகின்றன. இதற்குப் பிறகு, பார்வதி கேரளாவுக்கு வந்து மாறனைப் பற்றி தெரிந்துகொள்ளும் பயணத்தைத் துவங்கும்போது படம் மிக மெதுவாக நகர ஆரம்பிக்கிறது. பிறகு, முடிவை நெருங்கும்போது மீண்டும் சற்று வேகமெடுக்கிறது.

இந்தப் படத்தின் மிக அட்டகாசமான அம்சங்கள் எவை என்றால் அது ஒளிப்பதிவும் வரைகலையும்தான் (கிராஃபிக்ஸ்). படத்தின் துவக்கத்தில் கதை சொல்லும் தருணங்களிலும் சரி, பார்வதி கேரளாவுக்கு வந்த பிறகு பார்க்கும் காட்சிகளும் சரி, ஒவ்வொரு ஃப்ரேமும் அசத்துகின்றன. படம் நெடுகவே, ஒளிப்பதிவாளர்கள் காட்சிகளைச் செதுக்கியிருக்கிறார்கள்.

ஆனால், படத்தின் மிகப் பெரிய பிரச்சனை திரைக்கதைதான். பார்வதி கேரளாவுக்கு வந்த பிறகு நடக்கும் காட்சிகளில் பெரும்பாலானவை மிக செயற்கையாக இருக்கின்றன. வித்தியாசமான பல பாத்திரங்கள் புதிது புதிதாக அறிமுகமாகிறார்கள். எந்தப் பாத்திரத்தோடும் பார்வையாளர்களால் ஒன்ற முடியவில்லை. இந்த அம்சம்தான் படத்தின் மிகப் பெரிய பலவீனம். படத்தின் இறுதியில், திரைக்கதை சற்று வேகமெடுத்தாலும் அதுவரை பொறுமை காக்க வேண்டியிருப்பது கடினமாக உள்ளது.

இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாதவன், மௌலி ஆகிய மூவரின் நடிப்பும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

பின்னணி இசையும் பாடல்களும் நன்றாக இருக்கின்றன. 'ஒரு அறை உனது', 'யார் அழைப்பது' பாடல்கள் ஒரு முறை கேட்டவுடனேயே மனதில் ஒட்டிக்கொள்கின்றன. பிற பாடல்களும் ஒரு சிறந்த இசை அடிப்படையிலான திரைப்படத்திற்கு உரியவை.

மாறா - சினிமா விமர்சனம் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

நான்இந்த படத்தை  பார்த்தேன் ...சும்மா ஒருக்கால் பார்க்கலாம் ...படத்தில் எல்லோரும் நன்றாய் நடித்திருக்கினம் 
 

சார்லி பார்த்திருந்தால் ..அதனோடு இன்ச் பை இன்ச் ஒப்பிட தோன்றும் 
அது பார்க்காமல் இருந்தால் படம் பிடிக்க சந்தர்ப்பங்கள் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

நான்இந்த படத்தை  பார்த்தேன் ...சும்மா ஒருக்கால் பார்க்கலாம் ...படத்தில் எல்லோரும் நன்றாய் நடித்திருக்கினம் 
 

ரதிக்கு ஒரு பச்சை சட்டை பார்சல்  பட விமர்ச்னத்திற்க்காக

 நூறு கொட்டாவியும் இடையிடையே தூங்கி விழுந்தும் படத்தை பார்த்து முடித்தேன். மலையாள இலக்கியமோ மண்ணின் வாசனையோ அறியாத இயக்குனர் போல இருக்கு....அப்படி ஒரு அந்நியத்தன்மையும் மோசமான திரைக்கதையும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஜிப்ரனின்  இசையில் தாமரையின் வரிகளில் சில பாடல்கள் அருமை. ஒளிப்பதிவு ,கிராபிக்ஸ் கலைஞர்களின் நேர்த்தியான தொழில் நுட்பமும், கடின உழைப்பையும் தமிழ் சினிமா உதாரணமாக எடுக்க வேண்டும். படம் சுமாராக உள்ளது. காட்சிக்கு ஏற்ப நல்ல தேர்வாக நடிக நடிகைகள் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லணும் என்றால் நானும் இரண்டு தரக்காய் பிரிச்சு தான் பார்த்தேன் ...மாதவன் வீங்கி போய் இருக்கிறார் ...இப்பிடியே போனால் விஜய் சேதுபதியை தூக்கி சாப்பிட்டு விடுவார் tw_lol:

 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/1/2021 at 02:38, நிழலி said:

 நூறு கொட்டாவியும் இடையிடையே தூங்கி விழுந்தும் படத்தை பார்த்து முடித்தேன். மலையாள இலக்கியமோ மண்ணின் வாசனையோ அறியாத இயக்குனர் போல இருக்கு....அப்படி ஒரு அந்நியத்தன்மையும் மோசமான திரைக்கதையும்.

 

அட நான் மட்டும்தான் என்று நினைந்தேன்😂🤣, மாதவனுக்கு தொந்தி வைத்துவிட்டது, கதையும் தெரிவு செய்ய தெரியவில்லை, கதாநாயகி சொல்லி வேலையில்லை

15 hours ago, ரதி said:

உண்மையை சொல்லணும் என்றால் நானும் இரண்டு தரக்காய் பிரிச்சு தான் பார்த்தேன் ...மாதவன் வீங்கி போய் இருக்கிறார் ...இப்பிடியே போனால் விஜய் சேதுபதியை தூக்கி சாப்பிட்டு விடுவார் tw_lol:

 

நீங்களும் கண்டு பிடித்துவீட்டீர்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அப்படியே தான் இருந்தது. வண்ணமயமான காட்சிகள், ஒளிப்பதிவு , தேயிலை தோட்டம், இப்படி கண்ணுக்கு விருந்து. ஆனால் என்னவோ படம் தூங்கி விழுந்து தான் பார்த்தேன். 
கதையும் மனசுக்கும் ஒட்டவில்லை. அலெக்ஸ் என்ற தனிநபர் காமெடியனை வீணடித்து இருக்கிறார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கால் பார்க்கலாம். ஒரு நுறு வருஷம் நினைத்து வாழலாம் காதலைத் தொலைத்திருந்தால்......!  💞

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.