Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா அம்மான், பிள்ளையானுடன் சந்திப்பினை மேற்கொண்ட துணை இந்திய உயர் ஸ்தானிகர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான், பிள்ளையானுடன் சந்திப்பினை மேற்கொண்ட துணை இந்திய உயர் ஸ்தானிகர்

இலங்கைக்கான துணை இந்திய உயர் ஸ்தானிகர் வினோத். கே. ஜேக்கப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பானது கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றுள்ளது.

spacer.png

 

spacer.png

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மற்றும் மாகாண சபைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானியரகம் தனது டுவிட்டர் பதவில் தெரிவித்துள்ளது.

 

https://www.virakesari.lk/article/99702

 

  • கருத்துக்கள உறவுகள்

மேசையின் மேல்புறமா , சுற்றியும் இருப்பது மிலிபன் விசுக்கொத்துகளா.? 👍

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ...புதிய Proxy அரசியல் வியாதிகளுக்கு செலக்ஷன்  இன்டர்வியூ நடக்கிறது போல 
அப்போ அடுத்த தேர்தலில் இவர்களுக்கும் ஒரு காட்டு காட்டவேண்டியது தான், எவன் இந்தியாவின் வாலை பிடிக்கிறானோ  அவனுக்கு ஈழத் தமிழர்களிடையில் அரசியல் எதிர்காலமேயில்லை எனும் நிலைமைக்கு போட்டு தாக்க வேண்டும்  

Quote

 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல்


 

இலங்கை அரசு இதைத் துளியும் மதிக்காது என்று தெரிந்தும் எத்தனை வருடமாக இதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். 

ஒவ்வொரு தடவையும் வேறு விடயங்கள் பற்றிப் பேசிவிட்டு வெளியில் இதைத்தான் வலியுறுத்தினோம் என்று சொல்லிவிட்டுப் போவதே வாடிக்கையாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன், சுமந்திரனை.... இந்தியா கை கழுவி விட்டது போலை கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

1) கிழக்கில் பிரச்சனையை உண்டாக்குவதற்கு இந்தியா முயற்சி ..🤥

2) கூத்தமைப்பு உசார் உசார்.. 😂 கிழக்கில் கூத்தமைப்பைக் கைவிட இந்தியா ஆயத்தம்.. 😜

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

1) கிழக்கில் பிரச்சனையை உண்டாக்குவதற்கு இந்தியா முயற்சி ..🤥

2) கூத்தமைப்பு உசார் உசார்.. 😂 கிழக்கில் கூத்தமைப்பைக் கைவிட இந்தியா ஆயத்தம்.. 😜

 

 

நீங்க என்னதன் சொன்னாலும் இந்தியா தீர்வை பெற்று தரும்  கூட்டமைப்பு சொல்லிச்சு அது மட்டும் இல்லாமல்  இந்தியா ஈழத்தமிழர்களை கை விடாது என்றும் சொன்னவியள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்க என்னதன் சொன்னாலும் இந்தியா தீர்வை பெற்று தரும்  கூட்டமைப்பு சொல்லிச்சு அது மட்டும் இல்லாமல்  இந்தியா ஈழத்தமிழர்களை கை விடாது என்றும் சொன்னவியள்

அதுதான் இந்தியா எல்லாத்தையும் செய்யும் எண்டு அண்டு தொடக்கம் போர்த்து மூடிக்கொண்டு படுத்து குறட்டை விட்டுக்கொண்டிருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இலங்கைக்கான துணை இந்திய உயர் ஸ்தானிகர் வினோத். கே. ஜேக்கப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவர்களோடு பேசி எதைச் சாதிக்கபோகினம்? அதுதான் முடித்து வைத்து விட்டார்களே. இனி யாரை பிரித்து யாரோடு அடிபட வைத்து சுகம் பெறப்போகினமாம்?  ஒருவேளை இருவரையும் அடிபட வைக்க யோசிக்கிறாரோ?  

என்ன செய்தென்ன? எல்லாவற்றையும் சீன்தானே அடக்கியாளுகிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

இவர்களோடு பேசி எதைச் சாதிக்கபோகினம்? அதுதான் முடித்து வைத்து விட்டார்களே. இனி யாரை பிரித்து யாரோடு அடிபட வைத்து சுகம் பெறப்போகினமாம்?  ஒருவேளை இருவரையும் அடிபட வைக்க யோசிக்கிறாரோ?  

என்ன செய்தென்ன? எல்லாவற்றையும் சீன்தானே அடக்கியாளுகிறான்.

இரண்டு நாளைக்கு முன்னர் இந்தியத் தூதரை மகிந்தவும் கோத்தாவும் சென்று சந்தித்தார்களாம். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குப் பகுதியை இந்தியாவுக்குக் கொடுக்கப்போவதில்லையென்கிற தங்கள் முடிவினால் கடுப்பாகிப் போயிருக்கிற இந்தியாவைத் தாஜாப் பண்ண, "உங்களுக்கு மேற்குப்பகுதியைத் தருகிறோம், தாராளமாக அபிவிருத்தி செய்யுங்கோண்ணா!" என்று கெஞ்சியிருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது.

ஆனால் இந்திய கோழைகள் இன்னும் கடுப்பிலதான் இருப்பதாகக் கேள்வி.

எஜமானர்கள் போய்ச் சந்தித்தபின்னர், அவர்களின் வேட்டை நாய்களை இந்தியா கூப்பிட்டிருக்கிறது. ஆரையும் போட்டுத்தள்ள புதிய கான்டிராக்ட் ஏதும் கொடுத்திருப்பாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடிச் செய்ய வெளிக்கிட்டால் வேட்டை நாய்களின் நிலைதான் பரிதாபம். அவர்களை சிங்களம் வேள்விக்கு நேர்ந்து விட்டிருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தியா ஈழத்தமிழர்களை கை விடாது என்றும் சொன்னவியள்

கையைத்தானே விடமாட்டம் என்று சொன்னவை ,காலை விடலாமில்ல 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

கையைத்தானே விடமாட்டம் என்று சொன்னவை ,காலை விடலாமில்ல 

அவங்க என்னத்ததையெண்டாலும் விடட்டும் நாம வீசாவ எடுத்துட்டு கிளம்ப வேண்டியதுதான்🙃🙃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவங்க என்னத்ததையெண்டாலும் விடட்டும் நாம வீசாவ எடுத்துட்டு கிளம்ப வேண்டியதுதான்🙃🙃

எங்கை? துபாய் ,சவூதி,கட்டார்? 😷

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

எங்கை? துபாய் ,சவூதி,கட்டார்? 😷

எங்களால முடிஞ்சது கட்டார் அல்லது துபாய் உங்க பக்கம் எல்லாம் எட்டிப்பார்க்க முடியாதுங்கோ சாமி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்களால முடிஞ்சது கட்டார் அல்லது துபாய் உங்க பக்கம் எல்லாம் எட்டிப்பார்க்க முடியாதுங்கோ சாமி

ஓ....உங்களுக்கு பொய் சொல்லத்தெரியாது. 😁

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2021 at 18:41, கிருபன் said:

இலங்கைக்கான துணை இந்திய உயர் ஸ்தானிகர் வினோத். கே. ஜேக்கப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இவர்களை சந்திக்குமளவுக்கு இந்தியா ஓடிக்களைத்து தரம் தாழ்ந்து நிக்குது. ஆறுதல் தேடி அழைத்திருப்பினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.