Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை – விசேட வைத்திய நிபுணர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை – விசேட வைத்திய நிபுணர்

உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை – விசேட வைத்திய நிபுணர்

உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாம் உண்ணும் உணவுகளின் தரவுகளுக்கு அமைய உலகில் அதிகப்படியான விஷத்தினை இலங்கையர்கள் உண்கின்றனர்.

இவ்விடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளதால் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.

நாம் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்நாட்டில் விஷத்தினை சேர்க்க வேண்டாம் என கோருகிறோம். நாடாளுமன்றம் உங்களின் கைகளில் உள்ளது. விஷம் சேர்க்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/உலகில்-அதிகமாக-விஷத்தினை/

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிருந்து வரும் காய் கறிகளையும்  மீன்களையும் சாப்பிட்டால்தான் பத்தியப்படும்  என்பவர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம் .

5 minutes ago, பெருமாள் said:

அங்கிருந்து வரும் காய் கறிகளையும்  மீன்களையும் சாப்பிட்டால்தான் பத்தியப்படும்  என்பவர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம் .

இங்கு எல்லாம் ஒழுங்காய்தான் இருந்தது. வெளிநாடுகள்தான் தங்கள் வியாபாரத்துக்காக நோயையும் உருவாக்கி , மருந்தையும் உருவாக்கி எல்லாவற்றையும் நச்சு பொருளாகி விடடான். 

  • கருத்துக்கள உறவுகள்

அதீத பூச்சி கொல்லி, செயற்கை உர பாவனையால் மண்வளமும் உயிரினங்களும் பெரும் பாதிப்படைகின்றன.

95ற்கு முன்னரான காலங்களில் செயற்கை உரமும் பூச்சி கொல்லியும் இல்லாத காலத்திலும் விவசாயம் வெற்றிகரமாக நடைபெற்றது.

Edited by ஏராளன்
spelling

53 minutes ago, ஏராளன் said:

அதீத பூச்சி கொல்லி, செயற்கை உர பாவனையால் மண்வளமும் உயிரினங்களும் பெரும் பாதிப்படைகின்றன.

95ற்கு முன்னரான காலங்களில் செயற்கை உரமும் பூச்சி கொல்லியும் இல்லாத காலத்திலும் விவசாயம் வெற்றிகரமாக நடைபெற்றது.

நான் நினைக்கின்றேன், இலங்கையில் அதுவும் வடக்கில் இந்த நச்சுத்தன்மையான உணவுகளை உண்பது இலங்கையின் ஏனைய பகுதிகளை விட அதிகம் என்று. பல இலட்சக்கணக்கான குண்டுகள் வீழ்ந்த மண் என்பதாலும், போரால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை இராணுவத்திடம் பறி கொடுத்து விட்டு மிச்சம் இருக்கும் சிறு நிலப்பகுதியில் பெரிய விளைச்சலை குறிவைத்து பயன்படுத்தப்படும் இரசாயன பசளை மற்றும் பூச்சிக் கொல்லிகளாலும் எங்கள் தாயக மண் அதிகமாக நச்சுத்தன்மையாகிக் கொண்டு வருகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறியவே இன்னும் ஏராளாமான நிலங்கள் தரிசாக இருக்கிறது.உரய முறையில் பயன் படுத்துவோரதான் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் அறியவே இன்னும் ஏராளாமான நிலங்கள் தரிசாக இருக்கிறது.உரய முறையில் பயன் படுத்துவோரதான் இல்லை.

நான் இருக்கேக்கையே யூரியா பொலிடோல்  இல்லாமல் தோட்டம் செய்யேலாது.
இப்ப புளு,வண்டு இருந்தால்தான் மரக்கறி பழங்கள் எல்லாம் சுத்தமானது சுகாதாரமானது எண்டு சொல்லீனம்.
காலம் மாறுது கண்ணா காலம் மாறுது. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

நான் நினைக்கின்றேன், இலங்கையில் அதுவும் வடக்கில் இந்த நச்சுத்தன்மையான உணவுகளை உண்பது இலங்கையின் ஏனைய பகுதிகளை விட அதிகம் என்று. பல இலட்சக்கணக்கான குண்டுகள் வீழ்ந்த மண் என்பதாலும், போரால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை இராணுவத்திடம் பறி கொடுத்து விட்டு மிச்சம் இருக்கும் சிறு நிலப்பகுதியில் பெரிய விளைச்சலை குறிவைத்து பயன்படுத்தப்படும் இரசாயன பசளை மற்றும் பூச்சிக் கொல்லிகளாலும் எங்கள் தாயக மண் அதிகமாக நச்சுத்தன்மையாகிக் கொண்டு வருகின்றது. 

இதுபற்றி நிறைய தடவை கொள்ளுப்பட்டாயிற்று வடக்கில் மற்றைய இடங்களை விட கிருமி நாசினியால் பாதிக்கபட்டவர்கள் கூட சிலவேளை வேணுமென்று கண்டும் காணமல்  விடுகின்றனரோ எனும் ஐயப்பாடு உண்டு .

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாக இருக்கலாம். எனக்கு தெரிந்த பலர் சிறு வயதில் புற்று நோய் போன்ற கொடிய நோயால் மரணித்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

kerala-parotta-recipe.jpeg

நான் கூட புரோட்டாவை நினைத்து வந்தனன் ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

kerala-parotta-recipe.jpeg

நான் கூட புரோட்டாவை நினைத்து வந்தனன் ..

🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2021 at 14:34, குமாரசாமி said:

நான் இருக்கேக்கையே யூரியா பொலிடோல்  இல்லாமல் தோட்டம் செய்யேலாது.
இப்ப புளு,வண்டு இருந்தால்தான் மரக்கறி பழங்கள் எல்லாம் சுத்தமானது சுகாதாரமானது எண்டு சொல்லீனம்.
காலம் மாறுது கண்ணா காலம் மாறுது. :cool:

இப்படி உலகத்திலேயே கூட நச்சு பொருட்களை விளைவிக்கும் நாட்டிலே இருந்து வரும் பொருட்களை தமிழ்க்கடைகளில் தேடி வாங்கி புற்று நோய்  போன்றவற்ரையும் இலவசமாய் வாங்கி கொள்கிறோம் .

சாமி அண்ணெய்  அதுமட்டும் இல்லை அதிகூடிய கிருமி நாசினி பயன்பாடால் வரணி பக்க ஆள் வெள்ளைக்காரனா மாறி இருக்கிறார் பாரிஸில் இருக்கிறார் விசுகு அண்ணெய்க்கு  அநேகமா தெரிந்து இருக்கும் . விசாரித்ததில் தகப்பன் தோட்டங்களுக்கு  கிருமி நாசினி அடிப்பவர் என்கிறார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.