Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள்

 
un1-696x447.jpg
 11 Views

எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் பிரித்தானியாவை தலைமையாகக் கொண்ட இணைத்தலைமை நாடுகளால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை விட வலிமையற்றது எனவும் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் சமர்பிக்கவுள்ள தீர்மானத்தின் பூச்சிய இலக்கம் கொண்ட வரைபு இலக்கு ஊடகத்திற்கு கிடைத்துள்ளது.

அதில் உள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்ற வார்த்தைகள் முற்றாக தவிர்க்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்த்துள்ளனர். அதாவது அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் என்பது பொதுவானது. தமிழ் மக்களுக்கு எதிரானது அல்ல என்பது அறிக்கையின் சாராம்சம்.

சிறீலங்காவின் ஒருமைப்பாட்டை தீர்மானம் உறுதிப்படுத்துகின்றது.

சிறீலங்கா அரசு அமைத்த காணாமல்போனோர் அவலுவலகத்தின் செயற்பாட்டை தீர்மானம் பாராட்டியுள்ளது.

முஸ்லீம் மக்களின் இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் அரசின் செயற்பாட்டை கண்டித்துள்ளது.

தீர்மானத்தில் ஒரு இடத்தில் முஸ்லீம் மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சிறீலங்காவில் தமிழ் மக்கள் இருப்பதற்கான அடையாளத்தையே தீர்மானம் மறைத்துள்ளது.

மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என கூறும் தீர்மானம், அதனை பொதுவாகவே தெரிவித்துள்ளது.

சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான எந்தவித கோரிக்கைகளும் இல்லை.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட எந்த விடயங்களும் உள்ளடக்கப்படவில்லை. உதாரணமாக பொருளாதாரத் தடை, பயணத்தடைக்கான கோரிக்கைகள்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஆதாரங்களை ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்கா மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு எதிர்வரும் 49 மற்றும் 51 ஆவது கூட்டத்தொடர்களில் அறிக்கை சமர்ப்பித்து அதனை நாடுகள் விவாதிக்கும் என தீர்மானம் நிறைவு பெறுகின்றது.

https://www.ilakku.org/?p=42806

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப P2P       ஊர்வலத்தில் முசுலிம்கள் கலந்து கொண்டதுக்கு பலன் கிடைச்சிட்டுது....இங்கிலீசில் ...கொடிகட்டிப் பறக்கிறவையின் மொழிபெயர்ப்புத் திறனைக்கண்டு தலை சுத்துது....ஆரப்பா இந்த இலக்குக் காரன்.....

Edited by alvayan

 

 

போர் குற்றமா இனப்படுகொலையா / War Crime or Genocide/Kuna Kaviyalahan/ Human Rights Council /Sri Lanka

https://www.youtube.com/watch?v=ZqRF30gJWFM&t=278s

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய கறையான் பேய்கள் உள்ளே அரிக்க, அமெரிக்கா, UK  பேய் முன் கதவை திறந்து விட்டு உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

கிந்திய கறையான் பேய்கள் உள்ளே அரிக்க, அமெரிக்கா, UK  பேய் முன் கதவை திறந்து விட்டு உள்ளது. 

ஆடத்தெரியாவிட்டால் மேடை சரியில்லை என்று சொல்வதை தவிர வேறு எதை செய்ய முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கற்பகதரு said:

ஆடத்தெரியாவிட்டால் மேடை சரியில்லை என்று சொல்வதை தவிர வேறு எதை செய்ய முடியும்?

US  இல் பிரசுரமாகும் சிறிலங்கா எக்ஸ்பிரஸ் எனும் பத்திரிகையில் கடந்த சில நாட்களுக்குள் வெளிவந்தது.

US இல் வெளிநாட்டு  முகவராக பதிவு செய்யப்படாத,  பாகிஸ்தான் பூர்விகத்தை கொண்ட, Imaad Shah Zubri எனும் பெயரில்  உள்ள நபர்,  UNHRC  இல்  US ஆல்  சிறிலங்கா நாட்டுக்கு எதிராக எடுக்கப்படும் நகர்வுகளுக்கு எதிராக lobby செய்வதத்திற்கும், அந்த நகர்வுகளை முறியடிப்பதற்கும், 2014 இல் சிறிலங்க அரசாங்கத்தால் 6.5 மில்லியன் டாலர்களை லஞ்சமாக  பெற்றதற்காக   12 வருடங்கள் Los  Angles நீதிமன்றத்தால் சிறைவிதிக்கப்படுகிறார்.  

 

நீங்களே ஊகிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Knowthyself said:

 

 

போர் குற்றமா இனப்படுகொலையா / War Crime or Genocide/Kuna Kaviyalahan/ Human Rights Council /Sri Lanka

https://www.youtube.com/watch?v=ZqRF30gJWFM&t=278s

 

 

 

 

 

 

இலங்கையர்களுக்கு பயணத்தடை என்று சிங்கள அரசுக்கு சார்புபட்டு செய்தி வெளியிட்டு தமிழர்களின் முதுகில் குத்திய ஊடகங்கள் கூகிள் தேடலில் .https://www.google.com/search?rlz=1C1CHBF_en-GBGB878GB878&sxsrf=ALeKk03OObHw6pxiFw2rAHj7Q49koUSZHA%3A1613992310808&ei=dpEzYPvqMPSN1fAPjfeP0A8&q=இலங்கையர்களுக்கு+பயணத்தடை&oq=&gs_lcp=Cgdnd3Mtd2l6EAEYATIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIHCCMQ6gIQJzIJCCMQ6gIQJxATMgcIIxDqAhAnMgcIIxDqAhAnMgcIIxDqAhAnOgcIIxCwAxAnOgcIABCwAxBDOgcIABBHELADOgQIIxAnOg0IABCHAhCxAxCDARAUOgUIABCxAzoCCABQzRpY4iBgnV9oAnACeAKAAX6IAYYHkgEEMTAuMZgBAKABAaoBB2d3cy13aXqwAQrIAQrAAQE&sclient=gws-wiz

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆதங்கமும், கிருபாகரன் சொல்வது தான்.

சுமந்திரன், தன்னிடம் ஈழத்தமிழர் ஏகோபித்த பிரதிநிதித்துவத்தை தந்துவிட்டார் என்ற தோரணையில், எல்லாவற்றிலும், குறிப்பாக வெளிநாட்டு பிரிதிநிதிகளை சந்திப்பது, உரையாடுவது, கோரிக்கைகள் போன்றவற்றில், அவர் தனித்து அவரது பிரதியாக விடயங்களாக தோற்றம் கொடுத்து  பங்கெடுத்துவிட்டு, அது தமிழ் மக்களின், அவரது கட்சியின் (பதிவு செய்யப்படாவிட்டாலும்) கருத்தாக, முடிவாக அறிவிப்பது.

அவர் செய்வதை, கட்சியில் உள்ள ஒருவரேனும், ஒரு விடயத்துக்கு ஆக கூட கருது அளிக்காமல் இருப்பது.

இதில், சுமந்திரனை மர் கேள்வி கேட்க கூடிய தலைமை பண்பை இப்போதைய நிலையில் எடுக்க  கூடியவர், சாணக்கியன். அவர் கூட அமைதியாக இருப்பது.  

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kadancha said:

US  இல் பிரசுரமாகும் சிறிலங்கா எக்ஸ்பிரஸ் எனும் பத்திரிகையில் கடந்த சில நாட்களுக்குள் வெளிவந்தது.

US இல் வெளிநாட்டு  முகவராக பதிவு செய்யப்படாத,  பாகிஸ்தான் பூர்விகத்தை கொண்ட, Imaad Shah Zubri எனும் பெயரில்  உள்ள நபர்,  UNHRC  இல்  US ஆல்  சிறிலங்கா நாட்டுக்கு எதிராக எடுக்கப்படும் நகர்வுகளுக்கு எதிராக lobby செய்வதத்திற்கும், அந்த நகர்வுகளை முறியடிப்பதற்கும், 2014 இல் சிறிலங்க அரசாங்கத்தால் 6.5 மில்லியன் டாலர்களை லஞ்சமாக  பெற்றதற்காக   12 வருடங்கள் Los  Angles நீதிமன்றத்தால் சிறைவிதிக்கப்படுகிறார்.  

 

நீங்களே ஊகிக்கலாம்.

https://www.srilankaexpress.org/imaad-zuberi-gets-12-year-prison-term

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

சாணக்கியன். அவர் கூட அமைதியாக இருப்பது.  

சுமந்திரனின் மறுவடிவமே சாணக்கியன் என்பதை காலம் தெரிவிக்கும். அதைவிட சாணக்கியனை அரசியலுக்கு கொண்டுவந்ததே சுமந்திரன்தான் என்றொரு கருத்துமுண்டு. சுமந்திரனை இப்போது சாணக்கியன் எதிர்த்தால் சாணக்கியனின் அரசியல் எதிர்காலம் இருண்டுவிடும். அவர் வளர்ந்தாலும் அரசே அவரால் பயனடையும். இலங்கைத் தமிழருக்கு அப்படியொரு எழுதா விதியுண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

 

9 hours ago, Kadancha said:

சுமந்திரன், தன்னிடம் ஈழத்தமிழர் ஏகோபித்த பிரதிநிதித்துவத்தை தந்துவிட்டார் என்ற தோரணையில், எல்லாவற்றிலும், குறிப்பாக வெளிநாட்டு பிரிதிநிதிகளை சந்திப்பது, உரையாடுவது, கோரிக்கைகள் போன்றவற்றில், அவர் தனித்து அவரது பிரதியாக விடயங்களாக தோற்றம் கொடுத்து  பங்கெடுத்துவிட்டு, அது தமிழ் மக்களின், அவரது கட்சியின் (பதிவு செய்யப்படாவிட்டாலும்) கருத்தாக, முடிவாக அறிவிப்பது.

அவர் செய்வதை, கட்சியில் உள்ள ஒருவரேனும், ஒரு விடயத்துக்கு ஆக கூட கருது அளிக்காமல் இருப்பது.

இதில், சுமந்திரனை மர் கேள்வி கேட்க கூடிய தலைமை பண்பை இப்போதைய நிலையில் எடுக்க  கூடியவர், சாணக்கியன். அவர் கூட அமைதியாக இருப்பது.  

 

கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் எல்லாம் தூக்கமா, அல்லது உதவாக்கரைகளா? சுமந்திரனையும் சாணக்கியனையும் தவிர வேறு தலைவர்களே இல்லையா? மற்றவர்களுக்கு போட்ட வாக்குகள் எல்லாம் எதற்காக?

 

 

தமிழர்கள் என்ற நாமத்தைக் கூட தவிர்த்த இணைத்தலைமை நாடுகள்

புதிய தலைமுறை பிள்ளைகள் தமது சொந்த அறிவில் சிந்தத்து புதிய தந்திரோபாய அரசியலை கொண்டு செல்லும் வரை வருடாவருடம் இப்படியே புலம்பிக்கிட்டே இருக்க வேண்டியது தான். பழைய கறள் கட்டிய உதவக்கரை அணுகுமுறைகளை புதிய தலைமுறைக்கு பழக்காமல் இருப்பதே எதிர்கால மக்களுக்கு செய்யும் ஆக்க்குறைந்த உதவி. 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றை வெட்டியாடி தமிழர்களை கரைசேர்க்க கூடிய ஒரே பேர்வழி ....அது வேறு யாருமல்ல 
அம்பிகா அன்றி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்டும் அம்பிகா சற்குணநாதன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.