Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 - முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழகன் said:

ஆனால் பெரும்பாலான உறவுகள் தீம்காவை எதிரிகளாக கொண்டுள்ளார்கள் என்பதும் அண்ணணை மேதகுவின் மறு அவதாரமாகவே கொண்டுள்ளார்கள் என்பதும் இங்கே எழுதும் பல உறவுகளின் உணர்வை அவதானித்ததில் தெரிகிறது.

மேதகுவிற்கு  மறு அவதாரம் உலகில் எங்கும் இதுவரையில்லை....இனிமேலும்  வரப்போவதுமில்லை...மேதகு தான் மேதகு  மற்றவர்கள். மேதகுவாகமுடியாது..எங்களுக்கு உதவவில்லை என்பதற்காக  தமிழ்நாட்டுமக்களை எதிரியாகப்பார்க்கும் மனநிலை ஈழத்தமிழரிடமில்லை.....உதவவில்லை என்று சொல்வதை வைத்து அவர்களை நாங்கள் எதிரியாகக்கருதுவதாய் எண்ணவேண்டாம் ...

  • Replies 152
  • Views 14.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

கமல் வெற்றி பறிக்கப்பட்டிருக்கலாம்.

கமல் என்ற ஒருவரின் இடத்தைப் பறிப்பதை   விட அ  தி மு க வின் பல இடங்களை பறித்திருக்கலாம்
தி மு கவின் சில இடங்களைப் பறித்திருக்கலாம்
அப்படிப் பறித்திருந்தால் பா ஜ க விசுவரூபம் எடுத்திருக்கலாம்  
எது சுலபம் எனப்பார்க்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:
தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் ஆட்சி அமைவதனால் இலங்கைத் தமிழரின் இன விடுதலைக்கும் பேராதரவு கிடைக்குமென நம்பிக்கை கொண்டுள்ளோம்.
 
- மாவை சேனாதிராஜா.-
 
யாருக்கு தளபதி??? 😊

சும்மா இருங்கோ சிறித்தம்பி!  லண்டனிலை  கிழவனுக்கும் இளவரசர் பட்டம் மாதிரி தமிழ்நாட்டிலை ஒருத்தருக்கு தளபதி  பட்டம். இந்த பட்டத்துக்கு அடுத்த வாரிசு  ரெடி.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாத்தியார் said:

கமல் என்ற ஒருவரின் இடத்தைப் பறிப்பதை   விட அ  தி மு க வின் பல இடங்களை பறித்திருக்கலாம்
தி மு கவின் சில இடங்களைப் பறித்திருக்கலாம்
அப்படிப் பறித்திருந்தால் பா ஜ க விசுவரூபம் எடுத்திருக்கலாம்  
எது சுலபம் எனப்பார்க்க வேண்டும்

அப்படி இல்லை, வாத்தியார்,

அதிமுக தான் பிஜேபியின் அடிப்படை உறுப்பினர் பலம், அதன் மேலதான், திமுக கூட்டணியில் இருந்து கிளப்ப போகிறார்கள்.

பிஜேபியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்து வராத ஆட்களை அரசியலுக்கு வெளியே நிறுத்தி விடப்பட்டிருக்கலாம்.

பலர் நினைப்பதுபோல, வாக்கு இயந்திரம், பாதுகாப்பில் இருக்கும் போது, வாக்குகளை மாத்துவது முடியாத காரியம்.

எண்ணப்படுவதுக்காக மீண்டும், இயக்க நிலைக்கு வரும்போது, இலகுவாக கும்பலோடு, கும்பலாக நின்று, கையில் உள்ள போன் மூலமாக  அண்மையில் இருந்து மாத்தி விடுவார்கள். மாத்த முடியும்.

கடைசி வரை உயர்வில் இருந்த, கமல் வெற்றியை இழந்த விதம் சந்தேகமானது. அதேபோல கடம்பூர் ராஜு தினகரனை வீழ்த்தியதும், மதுரையில் விஞ்ஞானி வெற்றியும் சந்தேகமானது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற வெற்றியாளர்களை  கொண்டாடும் ஈழத்தமிழர்களை நினைக்க மிகவும் பரிதாபமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற வெற்றியாளர்களை  கொண்டாடும் ஈழத்தமிழர்களை நினைக்க மிகவும் பரிதாபமாக உள்ளது.

செலவழித்த பணத்தினை எடுக்க ஓவர் தடவை வேலைகள் செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

 

1 நபர் மற்றும் , ’வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி தொடரும் எங்கள் முயற்சி இது எளிய மக்களின் அரசியல் புரட்சி.! A 5 2021 மனம்தக்க நூ தமிர் புரட்சி எப்போதும் வெல்லும்..! அதை நாளை மலரும் நாம் தமிழர் அரசு சொல்லும்.’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

தமிழ்நாட்டில். 40%தெலுங்கர் வீட்டிலே தெலுங்கு பேசியும் வீட்டுக்கு வெளியில் தமிழில் படித்தும்...கதைத்தும் வாழ்கிறார்கள்  ...பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்தில் படித்தும்...பேசியும் வாழ்கிறார்கள்  மேற்படி 40%தெலுங்கரையும்  தமிழர்களென்று  எற்று நாம்தமிழர் அரசியல் செய்யுமாயின். வெற்றி வாய்ப்புண்டு  இல்லையேல் நாமதமிழருக்கு  எதிர்காலமில்லை ..தமிழ்நாட்டல் ஆட்சியும் அமைக்கமாட்டார்கள் 

அடிபடவரவேண்டாம்..அமைதியாக. கருத்துக்களை வைக்கவும்  நன்றி வணக்கம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Nathamuni said:

செலவழித்த பணத்தினை எடுக்க ஓவர் தடவை வேலைகள் செய்ய வேண்டும்.

சீமானுக்கு ஆதரவு கொடுத்தவர்களை திட்டுபவர்கள் எதற்காக திமுக வை ஆதரிக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழகன் said:

அடுத்த 5 வருடம் அண்ணனுக்கு கடினமாக இருக்கும். அதற்காக அண்ணன் பிஜேபி பக்கம் தந்திரோபாயமாக சார வேண்டியும் வரலாம்.

ஐயா,
தங்களுடைய வெளிப்படை தன்மை எனக்கு பிடித்திருக்கின்றது. நாதக என்பது பிஜேபி இன் B டீம் என்பதனை நாம் திருப்பி திருப்பி சொன்னதை நீங்கள் அக் கட்சியின் உள்ளக உறுப்பினராக உறுதி செய்து உள்ளீர்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

தமிழ்நாட்டில். 40%தெலுங்கர் வீட்டிலே தெலுங்கு பேசியும் வீட்டுக்கு வெளியில் தமிழில் படித்தும்...கதைத்தும் வாழ்கிறார்கள்  ...பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்தில் படித்தும்...பேசியும் வாழ்கிறார்கள்  மேற்படி 40%தெலுங்கரையும்  தமிழர்களென்று  எற்று நாம்தமிழர் அரசியல் செய்யுமாயின். வெற்றி வாய்ப்புண்டு  இல்லையேல் நாமதமிழருக்கு  எதிர்காலமில்லை ..தமிழ்நாட்டல் ஆட்சியும் அமைக்கமாட்டார்கள் 

அடிபடவரவேண்டாம்..அமைதியாக. கருத்துக்களை வைக்கவும்  நன்றி வணக்கம்..

40%தெலுங்கர்??

only 6% but 42 MLAs in last Assembly including speaker

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

எண்ணப்படுவதுக்காக மீண்டும், இயக்க நிலைக்கு வரும்போது, இலகுவாக கும்பலோடு, கும்பலாக நின்று, கையில் உள்ள போன் மூலமாக  அண்மையில் இருந்து மாத்தி விடுவார்கள். மாத்த முடியும்.

நீங்கள் கூறுவது போல் நடப்பதற்குச் சந்தர்ப்பங்கள் உள்ளன தான்
அப்படியென்றால் மொத்த வாக்குச் சாவடிகளிலும் செய்திருக்கலாமே?
ஏன் அப்படி நடக்கவில்லை ? காரணம் என்ன ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kandiah57 said:

தமிழ்நாட்டில். 40%தெலுங்கர் வீட்டிலே தெலுங்கு பேசியும் வீட்டுக்கு வெளியில் தமிழில் படித்தும்...கதைத்தும் வாழ்கிறார்கள்  ...பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்தில் படித்தும்...பேசியும் வாழ்கிறார்கள்  மேற்படி 40%தெலுங்கரையும்  தமிழர்களென்று  எற்று நாம்தமிழர் அரசியல் செய்யுமாயின். வெற்றி வாய்ப்புண்டு  இல்லையேல் நாமதமிழருக்கு  எதிர்காலமில்லை ..தமிழ்நாட்டல் ஆட்சியும் அமைக்கமாட்டார்கள் 

அடிபடவரவேண்டாம்..அமைதியாக. கருத்துக்களை வைக்கவும்  நன்றி வணக்கம்..

 

2 minutes ago, Nathamuni said:

40%தெலுங்கர்??

only 6% but 42 MLAs in last Assembly including speaker

இல்ல நாதமுனி! கந்தையர் ஏதோ சொல்ல வாறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

ஐயா,
தங்களுடைய வெளிப்படை தன்மை எனக்கு பிடித்திருக்கின்றது. நாதக என்பது பிஜேபி இன் B டீம் என்பதனை நாம் திருப்பி திருப்பி சொன்னதை நீங்கள் அக் கட்சியின் உள்ளக உறுப்பினராக உறுதி செய்து உள்ளீர்கள்.
 

ஹெல்லோ அண்ணை,

எப்படி சங்கதிகள்? குளு குளு என்று இருக்குமே....🤔

கெதியா வெக்கை தெரியும்... 😁

2 minutes ago, வாத்தியார் said:

நீங்கள் கூறுவது போல் நடப்பதற்குச் சந்தர்ப்பங்கள் உள்ளன தான்
அப்படியென்றால் மொத்த வாக்குச் சாவடிகளிலும் செய்திருக்கலாமே?
ஏன் அப்படி நடக்கவில்லை ? காரணம் என்ன ?

அப்படி நடந்தால், மெசினில் சுத்தி விட்டார்கள் என்ற உண்மை தெரிந்து விடும்.

தமக்கு சார்பாக இருக்க கூடியவர்கள் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு, அலுப்பு தரக்கூடியவர்கள் வெற்றி மறுதலிக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

அப்படி நடந்தால், மெசினில் சுத்தி விட்டார்கள் என்ற உண்மை தெரிந்து விடும்.

தமக்கு சார்பாக இருக்க கூடியவர்கள் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு, அலுப்பு தரக்கூடியவர்கள் வெற்றி மறுதலிக்கப்பட்டு

மக்கள் மாறிவிட்டார்கள்.. எல்லோருமே தாமரையைத் தான் விரும்புகின்றார்கள்..
இந்தியாவிலேயே தாமரை தான் முன்னணி... என்று கதை விட முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 

இல்ல நாதமுனி! கந்தையர் ஏதோ சொல்ல வாறார்.

கந்தையர், விசயத்தை டபெக்கெண்டு சொல்லி போட்டு, சண்டையும் பிடிக்க வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டு, ஈசிசேர் இல விழுந்து படுத்திருப்பார்.

முதலில் 40% தெலுங்கர்கள் இல்லை என்று சொல்ல வந்தேன்.

பிரித்தானியாவில், கணக்கெடுப்பு நடாத்திய போது, யூதர்கள், 0.1 வீதத்துக்கு குறைவு என்று சொல்லப்பட்டது. பார்த்தால், அவர்கள் ஆங்கிலேய பெயர்களை வைத்துக்கொண்டு, தம்மை ஆங்கிலேயர்களாக இனம் காட்டி இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இலங்கையில், போர்த்துக்கேயர் காலத்தில், மலையாளிகள் பெருமளவில் குடி வந்தார்கள், அவர்களில் பலர் இன்று சிங்களவர்கள், தமிழர்கள். எப்படி தம்மை மலையாளிகள் என்று சொல்ல முடியாதவாறு மொழியே தெரியாதோ, அதேபோலத்தான் தெலுங்கர்களும். 

தெலுங்கு உரிமை என்று சொல்லி கிளம்பிய இரண்டொருவர், அதில் குட்டையினை கிளப்பி, அரசியல் செய்யலாம் என்று கிளம்பியவர்கள். முடியவில்லை. இவர்கள் தான் இந்த 40% கதை விட்டவர்கள்.   

3 minutes ago, வாத்தியார் said:

மக்கள் மாறிவிட்டார்கள்.. எல்லோருமே தாமரையைத் தான் விரும்புகின்றார்கள்..
இந்தியாவிலேயே தாமரை தான் முன்னணி... என்று கதை விட முடியாதா?

அதுக்குரிய வேலைகள் நடக்கின்றன. விரைவில் புரிவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

ஹெல்லோ அண்ணை,

எப்படி சங்கதிகள்? குளு குளு என்று இருக்குமே....🤔

கெதியா வெக்கை தெரியும்... 😁

 

தம்பிகளுக்கு தமிழகத்தில் மரண அடி கிடைத்துள்ளது, அடுத்த முறை தமது எஜமான் சங்கிகளுடன்  இணைத்து தேர்தலை சந்திப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, zuma said:

தம்பிகளுக்கு தமிழகத்தில் மரண அடி கிடைத்துள்ளது, அடுத்த முறை தமது எஜமான் சங்கிகளுடன்  இணைத்து தேர்தலை சந்திப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
 

அப்படியா பார்க்கிறீர்கள்... சரி, சரி...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, Nathamuni said:

பிரித்தானியாவில், கணக்கெடுப்பு நடாத்திய போது, யூதர்கள், 0.1 வீதத்துக்கு குறைவு என்று சொல்லப்பட்டது. பார்த்தால், அவர்கள் ஆங்கிலேய பெயர்களை வைத்துக்கொண்டு, தம்மை ஆங்கிலேயர்களாக இனம் காட்டி இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இதே வழியை இன்று சீனர்களும் கடைப்பிடிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, Nathamuni said:

கந்தையர், விசயத்தை டபெக்கெண்டு சொல்லி போட்டு, சண்டையும் பிடிக்க வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டு, ஈசிசேர் இல விழுந்து படுத்திருப்பார்.

முதலில் 40% தெலுங்கர்கள் இல்லை என்று சொல்ல வந்தேன்.

பிரித்தானியாவில், கணக்கெடுப்பு நடாத்திய போது, யூதர்கள், 0.1 வீதத்துக்கு குறைவு என்று சொல்லப்பட்டது. பார்த்தால், அவர்கள் ஆங்கிலேய பெயர்களை வைத்துக்கொண்டு, தம்மை ஆங்கிலேயர்களாக இனம் காட்டி இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.

இலங்கையில், போர்த்துக்கேயர் காலத்தில், மலையாளிகள் பெருமளவில் குடி வந்தார்கள், அவர்களில் பலர் இன்று சிங்களவர்கள், தமிழர்கள். எப்படி தம்மை மலையாளிகள் என்று சொல்ல முடியாதவாறு மொழியே தெரியாதோ, அதேபோலத்தான் தெலுங்கர்களும். 

தெலுங்கு உரிமை என்று சொல்லி கிளம்பிய இரண்டொருவர், அதில் குட்டையினை கிளப்பி, அரசியல் செய்யலாம் என்று கிளம்பியவர்கள். முடியவில்லை. இவர்கள் தான் இந்த 40% கதை விட்டவர்கள்.   

அதுக்குரிய வேலைகள் நடக்கின்றன. விரைவில் புரிவோம்.

உங்களுக்கு தெரிந்த தெலுங்கரகள் கருணநிதி...வை.கோ...வியகாந்த்...கொளத்தூர்மணி...ஆகும். தெரியாமால் நிறைய இருக்கிறார்கள் ..இந்துயாப்பெணமணியால் எழுதப்படும் துளசி தளத்தில் வாசித்தேன். 40% தெலுங்கு வாம்சவழியினர் வீட்டில்தெலுங்கும்...வெளியில் தமிழும்பேசி வாழ்வதாய்...எனக்கு உண்மை. பொய் தெரியாது...இன்று  கருணநிதியின் 4ஆம் தலைமுறையையும் தெலுங்கர் என்கிறீர்கள். இது எப்படிச் சரியாகும்  ?அவர்கள்  தமிழ் பேசி ..படித்து வாழ்கிறார்கள். எப்படி தெலுங்கராக முடியும்...ஆங்கிலம் பேசி..படித்து. வாழும்  தமிழர் ..தமிழாரா?அல்லது ஆங்கிலேயாரா?நாம்  தமிழர் கட்சி. தமிழ்பேசும் அனைவரையும். தமிழரென எற்கவேண்டும்  அப்போ அரசியலில் வெல்லமுடியும்..

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு தெரிந்த தெலுங்கரகள் கருணநிதி...வை.கோ...வியகாந்த்...கொளத்தூர்மணி...ஆகும். தெரியாமால் நிறைய இருக்கிறார்கள் ..இந்துயாப்பெணமணியால் எழுதப்படும் துளசி தளத்தில் வாசித்தேன். 40% தெலுங்கு வாம்சவழியினர் வீட்டில்தெலுங்கும்...வெளியில் தமிழும்பேசி வாழ்வதாய்...எனக்கு உண்மை. பொய் தெரியாது...இன்று  கருணநிதியின் 4ஆம் தலைமுறையையும் தெலுங்கர் என்கிறீர்கள். இது எப்படிச் சரியாகும்  ?அவர்கள்  தமிழ் பேசி ..படித்து வாழ்கிறார்கள். எப்படி தெலுங்கராக முடியும்...ஆங்கிலம் பேசி..படித்து. வாழும்  தமிழர் ..தமிழாரா?அல்லது ஆங்கிலேயாரா?நாம்  தமிழர் கட்சி. தமிழ்பேசும் அனைவரையும். தமிழரென எற்கவேண்டும்  அப்போ அரசியலில் வெல்லமுடியும்..

வை கோபாலசாமி வீட்டில் தெலுங்குதான் பேச்சுமொழி. இதனை எங்களுக்குக் கூறியவர் அவரது குடும்ப உறுப்பினர். 

🤥

1 hour ago, குமாரசாமி said:

சீமானுக்கு ஆதரவு கொடுத்தவர்களை திட்டுபவர்கள் எதற்காக திமுக வை ஆதரிக்கின்றார்கள்?

இதுக்குப் பதில் இல்லீங்கோ..

😂

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் 5% வாக்குகளையே பெற்றிருப்பதாக சொல்லபடுகிறது. அப்படி பார்த்தால் இந்த தேர்தல் கொஞ்சம் சறுக்கல்தான். அண்ணன் களஞ்சியம் என்ன கூறினாலும்  கட்சி உறுப்பினர்கள், தம்பிகள் சோர்ந்தேதான் காணப்படுகிறனர்.

இந்த தேர்தலுக்கு முந்தைய கலந்தாய்வு கூட்டத்தில் கூட பல மாவட்ட பொறுப்பில் உள்ளவர்கள் அதிமுகவுடன் கூட்டணி போகலாம் என்றார்கள். அண்ணன் கூட தன்னை சந்திக்க மோடி அழைத்த விடயத்தையும் தொட்டு பேசியதாக தெரிகிறது. ஆனால் இந்த தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது அப்போ அவர்களை எம் கூட்டணியில் சேர்ப்போம் என கூறியுள்ளார். ஆனால் முடிவுகள் எதிர்பார்த்த வகையில் இல்லை. 

அண்ணனின் அரசியல் நெகிழ்வுதன்மையை பாவிக்க வேண்டிய தருணம் இது. அண்ணன் மீதுள்ள வழக்குகள் இதர விடயங்களை கருதும் போது - அடுத்த ஐந்து வருடம் தீம்காவை எதிர்ப்பது மிகசிக்கலாகவே இருக்கும்.

அண்ணன் பிஜேபி ஆதரவு நிலை எடுத்தாலும் நம் ஆதரவு தொடரவேண்டும்.

ஏனென்றால் எங்கள் இனத்தின் முதல் எதிரி தீம்காதான்.

14 minutes ago, Kapithan said:

வை கோபாலசாமி வீட்டில் தெலுங்குதான் பேச்சுமொழி. இதனை எங்களுக்குக் கூறியவர் அவரது குடும்ப உறுப்பினர். 

🤥

இதுக்குப் பதில் இல்லீங்கோ..

😂

விசயகாந்த் வீட்டில் கூட.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, Kapithan said:

வை கோபாலசாமி வீட்டில் தெலுங்குதான் பேச்சுமொழி. இதனை எங்களுக்குக் கூறியவர் அவரது குடும்ப உறுப்பினர். 

🤥

கோபாலசாமியின் உறவினர் இங்கு ஒரு யூனியில் வேலை செய்கின்றார். என் நண்பரும் கூட. கோயம்புத்தூரில் வசிக்கின்றார்கள். தமிழில் பட்டங்கள் பல.
ஆனால் வீட்டில் பேசுமொழி தெலுங்கு.

இவர்தான் எனக்கு 15 வருடங்களுக்கு முதலே ரஜனி அரசியலுக்கு வரமாட்டார் என சத்தியம் செய்தவர்.😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

தம்பிகளுக்கு தமிழகத்தில் மரண அடி கிடைத்துள்ளது, அடுத்த முறை தமது எஜமான் சங்கிகளுடன்  இணைத்து தேர்தலை சந்திப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
 

3 ஆவதாக வந்துள்ளது. அதுவும் தனித்து போட்டியிட்டு. கமல் வெல்கிறார், தினகரன் வெல்கிறார். கட்சி சின்னம் இல்லாமல் போகும் என்று பினாத்தியது போல் இருந்தது. இப்போ  இப்படி பல்டி அடிக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

தமிழ்நாட்டில். 40%தெலுங்கர் வீட்டிலே தெலுங்கு பேசியும் வீட்டுக்கு வெளியில் தமிழில் படித்தும்...கதைத்தும் வாழ்கிறார்கள்  ...பெரும்பாலான தமிழர்கள் ஆங்கிலத்தில் படித்தும்...பேசியும் வாழ்கிறார்கள்  மேற்படி 40%தெலுங்கரையும்  தமிழர்களென்று  எற்று நாம்தமிழர் அரசியல் செய்யுமாயின். வெற்றி வாய்ப்புண்டு  இல்லையேல் நாமதமிழருக்கு  எதிர்காலமில்லை ..தமிழ்நாட்டல் ஆட்சியும் அமைக்கமாட்டார்கள் 

அடிபடவரவேண்டாம்..அமைதியாக. கருத்துக்களை வைக்கவும்  நன்றி வணக்கம்..

2001 கணக்கெடுப்பின் படி 5.65% தெலுங்கு பேசும் மக்கள் தமிழ் நாட்டில் உள்ளார்கள். 40% மாக அதிகரிப்பது சாத்தியமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.