Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்பாணத்திற்கும் கேரளாவுக்கும் உள்ள நீண்ட கால வரலாற்றுத் தொடர்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

1. அவர்களை போலவே இவர்களும் ஒரு காலகட்டத்தில் இலங்கையில் அளவில் குறைவாக இருந்தாலும்  அரச, தனியார் வேலைகளில் கோலோச்சினார்கள்.

அது வேறு போக்கிடம் இல்லாதபடியால் சந்தர்ப்பவசமாக நடந்த ஒன்றாகவே நான் பார்க்கிறேன் சிங்களவர்களின் கல்வி அறிவு சிறிது பின்தள்ளப்பட்ட கால இடைவெளியில் நடந்த ஒன்றாகவே பார்க்கணும் தற்போது நீங்கள் குறிப்பிடுவது போன்று உள்ளதா நிலைமை ?

9 minutes ago, goshan_che said:

2. ஹட்டனுக்கு ஸ்ரேசன் மாஸ்டராய் போன யாழ்பாணத்தவர் அங்கே பூந்தொட்டிக்கு தண்ணி ஊற்றும் வேலை முதல் அத்தனை வேலைகளுக்கும் ஊரில் இருந்து ஆட்களை எடுப்பித்தார். இது இலங்கையில் எல்லா இடங்களிலும், துறைகளிலும் நடந்தது.

ஒரு சில இடங்களில் நடந்து இருக்கலாம் .

 

10 minutes ago, goshan_che said:

3. வெளிநாடு வந்த பலர், அப்படியே தமது ஊரையே அழைத்து கொண்டார்கள். இங்கே யாழில் கூட உள்ளார்கள். தப்பில்லை பெருமைதான். ஆனால் இதுவும் மலையாளிகளின் குணம்.

இங்குதான் அப்படி இறக்கி உள்ள கடனுக்கு வட்டி கூட அதனால் சொந்த இனத்தால் குறிப்பிட்டவர்கள் வளர்த்தார்கள் மலையாளி இங்குவரும்  முறைகள் சட்ட ரீதியானதை லூப் கோல் ஓட்டையை உடைத்து வருவார்கள் தங்களுக்குள்ளே ரகசியமாய் வைத்து கொள்ளுவார்கள் மெயின் உணர்வு தாக்கத்துக்கு  உற்படமாட்டார்கள் நாங்கள் அப்படி அல்ல .

 

15 minutes ago, goshan_che said:

4. பல துரோகங்கள் கண்ணுக்கு தெரிந்தாலும், ஒரு ஒட்டு மொத்த மக்கட் கூட்டமே, 90% பெரும் துன்பங்களுக்கு மத்தியில், மூன்று தசாப்தங்களா தலைவர் பின்னால் நின்றார்கள். இதுவும் மலையாளிகள் போலத்தான்.

இங்குதான் பிழை விடுகிறீர்கள் அவர்களுக்கு தலைவனே தேவையில்லை ஏதோ  ஒரு மந்திரக்கயிறு மூலம் இணைத்து வைத்தது போல் செயற்படுவார்கள் . இங்கு ஒற்றுமைக்கு தலைவர் தேவைப்பட்டார் அவரின் பின் ஏன் ஒற்றுமை இல்லாமல் போனது ?

 

20 minutes ago, goshan_che said:

5. இன்றைக்கும் வெளிநாட்டில் உழைக்கும் காசை கேரளா, மன்னிகவும் யாழ்பாணம் அனுப்பி அங்கே வீடும், மதிலும் கட்டுகிறார்கள். கோவில் கட்டுகிறார்கள், பள்ளிகூடத்துக்கு உதவி செய்கிறார்கள். ஆனால் தம்மை வாழ வைக்கும் நாட்டில் அந்த நாட்டினர்கு தர்மகாரியம் செய்ய பின்னடிப்பார்கள். 

இது ஒரு பொதுவான விடயம் அனைத்து இனத்தினருக்கும் உள்ள குணம் .

  • Replies 104
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மலையாளிகளில்  ஈழவர் எனும் இனம் உண்டு அதையும் நம்மவரையும் போட்டு மிக்சியில் அடித்தால் இந்த திரி பல பக்கம் ஓடும் .

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

ஆனால் சீமான் விசயத்திலை வேற லெவெல்லை பதில் சொல்லுவீங்கள்?🤣
 

ஸ்டாலின் வீசிய ஸ்விங் பலில் , சீமான் கிளீன் அவுட். சீமான் இப்ப நம்ம ஆள், no comments.🤣😜

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

அது வேறு போக்கிடம் இல்லாதபடியால் சந்தர்ப்பவசமாக நடந்த ஒன்றாகவே நான் பார்க்கிறேன் சிங்களவர்களின் கல்வி அறிவு சிறிது பின்தள்ளப்பட்ட கால இடைவெளியில் நடந்த ஒன்றாகவே பார்க்கணும் தற்போது நீங்கள் குறிப்பிடுவது போன்று உள்ளதா நிலைமை ?

ஒரு சில இடங்களில் நடந்து இருக்கலாம் .

 

இங்குதான் அப்படி இறக்கி உள்ள கடனுக்கு வட்டி கூட அதனால் சொந்த இனத்தால் குறிப்பிட்டவர்கள் வளர்த்தார்கள் மலையாளி இங்குவரும்  முறைகள் சட்ட ரீதியானதை லூப் கோல் ஓட்டையை உடைத்து வருவார்கள் தங்களுக்குள்ளே ரகசியமாய் வைத்து கொள்ளுவார்கள் மெயின் உணர்வு தாக்கத்துக்கு  உற்படமாட்டார்கள் நாங்கள் அப்படி அல்ல .

 

இங்குதான் பிழை விடுகிறீர்கள் அவர்களுக்கு தலைவனே தேவையில்லை ஏதோ  ஒரு மந்திரக்கயிறு மூலம் இணைத்து வைத்தது போல் செயற்படுவார்கள் . இங்கு ஒற்றுமைக்கு தலைவர் தேவைப்பட்டார் அவரின் பின் ஏன் ஒற்றுமை இல்லாமல் போனது ?

 

இது ஒரு பொதுவான விடயம் அனைத்து இனத்தினருக்கும் உள்ள குணம் .

1. இல்லை. 48 க்கு முன்பு  யாழ் தமிழர் காலனிய ஆட்சியின் செல்ல பிள்ளைகளாக இருந்து தமது எண்ணிக்கைக்கும் அதிகமாக பெற்ற அனுகூலங்களை, 48 க்கு பின் வலுகட்டயாமாக சிங்களவர் பறித்து கொண்டார்கள். எமது பிரச்சனையின் அடிப்படைகளில் இது ஒன்று. அப்படி பறித்து அடக்குவதால் இப்போ அந்த நிலை இல்லை.

2. ஒரு சில அல்ல, பல இடங்களில். மலேசியாவில் ஏன் இலங்கையரில் யாழ் தமிழர் மட்டும் இருக்கிறர்கள்? யாழ்பாணத்துக்கு வெளியே ஒரு தமிழ் மலாயன் பென்சரை காட்டுவது ஏன் கடினமாயுள்ளது. மச்சான் போய் மச்சானை இழுத்து எடுத்ததுதான் காரணம்.

3. உங்களுக்கு மலையாளிகள் மேல் ஒரு பயம் கலந்த மரியாதை இருப்பது போல படுகிறது🤣. அவர்களும் டுபாய்க்கு எடுத்து விட்டு வட்டி காசு பார்ப்பவர்கள்தான்.

4. எம்மை போல் இந்தியா சிங்களம் என இரு தந்திரமான பெரும் எதிரிகள் இருந்தால் மலையாளிகளுக்கும் ஒரு பிரபாகரன் தேவை பட்டிருப்பார். மந்திர கயிரு ஏதும் இல்லை. எதிரிகள் இல்லை என்பதால் தலைவர் போல் ஒரு தலைமை தேவையில்லை.

5. இருக்கலாம்.

 

5 minutes ago, பெருமாள் said:

மலையாளிகளில்  ஈழவர் எனும் இனம் உண்டு அதையும் நம்மவரையும் போட்டு மிக்சியில் அடித்தால் இந்த திரி பல பக்கம் ஓடும் .

அதற்கு நீங்கள் நம்பும் “ஆராய்சியாளர்க களம் இறங்க வேண்டும்.

ஆனால் இந்த ஈழவர் மக்கள் பற்றியும் யாழில் முன்னரே அலசியாகிவிட்டது.

ஆனாலும் உங்கள் தைரியத்தை மெச்சுகிறேன்.

ஆய்வு அறிக்கை விட்ட்வர் யாழ் பல்கலை தமிழ் துறை தலைவர், பேராசிரியர்.

அவர் சொன்ன ஒரு விடயத்தைதானும் தர்க ரீதியாக மறுக்காமல் - அவரின் ஆய்வை டுபாக்கூர் ஆய்வுகளுடன் சமபடுத்தி எழுதுகிறீர்கள் பாருங்கள்…..

இதுக்கு ஒரு தனி கெத்து வேணும்😀.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

. உங்களுக்கு மலையாளிகள் மேல் ஒரு பயம் கலந்த மரியாதை இருப்பது போல படுகிறது🤣. அவர்களும் டுபாய்க்கு எடுத்து விட்டு வட்டி காசு பார்ப்பவர்கள்தான்.

பயமும் கிடையாது மரியாதையும் கிடையாது அவர்களுடைய ஒரு பொருளை இங்கிலாந்துக்கு சப்பிளை பண்ண பணம் கட்டி  ரைட்ஸ் எடுத்தேன் அன்று தொடக்கம் நான் அவர்களின் எதிரியானேன் இன்னும் விட்டுக்கொடுக்கவில்லை மோதிக்கொண்டே உள்ளார்கள் நாங்கதான் யாழ்ப்பாண  பணம்காட்டு பொக்ஸ் ஆச்சே .🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அவர் சொன்ன ஒரு விடயத்தைதானும் தர்க ரீதியாக மறுக்காமல் - அவரின் ஆய்வை டுபாக்கூர் ஆய்வுகளுடன் சமபடுத்தி எழுதுகிறீர்கள் பாருங்கள்…..

தர்க்க ரீதியாக என்று  பெரிதாக போகவேண்டாம்  இரண்டுவகையாக அணுகலாம் முதலாவது கடவுள் உள்ளார் என்று தனது பேச்சால் கூட்டத்தில் நம்ப வைப்பது இடைவேளைக்கு  பின் அதே பேச்சாளர் உலகில் கடவுள் இல்லை என்று அதே மக்களை நம்ப வைப்பது . இரண்டாவது கடவுளே இல்லை என்று சொல்பவர் அல்லது இருக்குது என்பவர் .

இந்த முதலாவது ரகத்தில் நீங்கள்  வல்லவர் உங்களை அடிக்க முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

பயமும் கிடையாது மரியாதையும் கிடையாது அவர்களுடைய ஒரு பொருளை இங்கிலாந்துக்கு சப்பிளை பண்ண பணம் கட்டி  ரைட்ஸ் எடுத்தேன் அன்று தொடக்கம் நான் அவர்களின் எதிரியானேன் இன்னும் விட்டுக்கொடுக்கவில்லை மோதிக்கொண்டே உள்ளார்கள் நாங்கதான் யாழ்ப்பாண  பணம்காட்டு பொக்ஸ் ஆச்சே .🤣

🤣 diamond cutting diamond. 

24 minutes ago, பெருமாள் said:

தர்க்க ரீதியாக என்று  பெரிதாக போகவேண்டாம்  இரண்டுவகையாக அணுகலாம் முதலாவது கடவுள் உள்ளார் என்று தனது பேச்சால் கூட்டத்தில் நம்ப வைப்பது இடைவேளைக்கு  பின் அதே பேச்சாளர் உலகில் கடவுள் இல்லை என்று அதே மக்களை நம்ப வைப்பது . இரண்டாவது கடவுளே இல்லை என்று சொல்பவர் அல்லது இருக்குது என்பவர் .

இந்த முதலாவது ரகத்தில் நீங்கள்  வல்லவர் உங்களை அடிக்க முடியாது .

என்னை விடுங்கோ நான் மாறி மாறி கதைக்கும் வெறும்பயல்.

பேராசிரியரின் ஆய்வுக்கு என்ன பதில்?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

...என்னதான் அடிபட்டாலும் கொள்ளுப்பட்டாலும் தங்களுக்குள்ளே விடயங்களை வைத்து கொள்ளுவார்கள் @ராசவன்னியன் அண்ணருக்கு  தெரிந்த விடயம் நல்லதொரு சம்பளம் கொடுக்கும் கொம்பனிக்குள் ஒரே ஒரு மலையாளி புகுந்தால் காணும் கரப்பான் பூச்சியை விட அதிகமாக பெருகி மலையாளி மயமாய்  இருப்பார்கள் .அதே கதையை நமக்கு பொருத்தி பாருங்க இருக்கிறவனை  மேல் அதிகாரியிடம் மாறி மாறி  போட்டு கொடுத்தே அழிந்து போய்  இருப்பார்கள் .இந்த பிட்டுகேட்டுக்குள்  மலையாளி வம்சமாம் இந்த கருத்தை பார்த்து சிரித்தே வயிறு நோகுது .

இது உண்மைதான்.

அந்த ***களோட 20 வருசம் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்ததுண்டு. பலமுறை சேட்டை விட்டு பார்த்தார்கள், ஒன்னும் அசைக்க முடியவில்லை, ஏனென்றால் மேல் அதிகாரி ஒரு அரபி. இறுதியில் ஒரு இந்தியன்(மல்லு அல்ல) குறைத்த காலத்துக்கு மேல் அதிகாரியாக வந்தார், இப்பொழுது நான் தமிழர்கள் இருக்கும் அலுவலகத்தில்..! இங்கேயும் மேல் அதிகாரி அரபி. என்ன பிரயோசனம்..? ஒரே புடுங்குபாடு. நண்டுகள் குணம்..தேறாது..!

(என் பழைய அலுவகத்தில் இப்பொழுது முற்றிலும் 100% மல்லுகள் .மேல் அதிகாரியாக வந்த அந்த இந்தியன் குறைந்த காலத்திலேயே வேலையை விட்டு வெளியேற்றப்பட்டார்.)

மல்லுகளுக்குள்ளும் மோதல்கள் வருவதுண்டு, ஆனால் வெளியாட்கள் அதை தங்களுக்கு அனுகூலமாக எடுத்துக்கொள்ள வந்தால், ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ராசவன்னியன் said:

இது உண்மைதான்.

அந்த ***களோட 20 வருசம் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்ததுண்டு. பலமுறை சேட்டை விட்டு பார்த்தார்கள், ஒன்னும் அசைக்க முடியவில்லை, ஏனென்றால் மேல் அதிகாரி ஒரு அரபி. இறுதியில் ஒரு இந்தியன்(மல்லு அல்ல) குறைத்த காலத்துக்கு மேல் அதிகாரியாக வந்தார், இப்பொழுது நான் தமிழர்கள் இருக்கும் அலுவலகத்தில்..! இங்கேயும் மேல் அதிகாரி அரபி. என்ன பிரயோசனம்..? ஒரே புடுங்குபாடு. நண்டுகள் குணம்..தேறாது..!

(என் பழைய அலுவகத்தில் இப்பொழுது முற்றிலும் 100% மல்லுகள் .மேல் அதிகாரியாக வந்த அந்த இந்தியன் குறைந்த காலத்திலேயே வேலையை விட்டு வெளியேற்றப்பட்டார்.)

மல்லுகளுக்குள்ளும் மோதல்கள் வருவதுண்டு, ஆனால் வெளியாட்கள் அதை தங்களுக்கு அனுகூலமாக எடுத்துக்கொள்ள வந்தால், ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.

இதை நான் மறுக்கவில்லை வன்னியர்.

நீங்கள் மல்லுகள் பற்றி எழுதியதை 100/100 யாழ் தமிழர்கள் மீது விமர்சனமாக வைக்கும் பிற இனத்தவர் அல்ல, பிற இலங்கை தமிழர்களே உள்ளார்கள்.

நான் அறிந்தவரை, யூதர், பிராமணர், மலையாளிகள், தமிழர் (குறிப்பாக யாழில் இருந்து வருபவர்கள்) மீது இந்த விமர்சனம் வைக்கபடுவது வழமைதான்.

இதை நான் இட்டுகட்டியோ யாரையும் சீண்டவோ எழுதவில்லை

உணவு, தொனி, சுத்தமாக ஊரை வைத்து கொள்வது, கல்விக்கு உயிரை விட முக்கியதுவம் கொடுப்பது, ஊக்கமாக இருப்பது, ஒரு சின்ன வியாபாரமாக தொடங்கி அதை பெரிதாக கட்டி எழுப்புவது, திரை கவர்சிக்கு இழுபடாமை இப்படி பல நற்பண்புகளிலும், மேலே சொன்ன துர்பண்புகளிலும் யாழ் மக்களுக்கும் மலையாளிகளுக்கும் பல ஒற்றுமையை நான் காண்கிறேன்.

இதை வைத்து எதையும் நிறுவ முடியாது ஆனால் இந்த ஒற்றுமைகள் பொய்யில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

ஸ்டாலின் வீசிய ஸ்விங் பலில் , சீமான் கிளீன் அவுட். சீமான் இப்ப நம்ம ஆள், no comments.🤣😜

கிளீன் போல்ட் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறன், கிளீன் அவுட் புதுசா இருக்கே?!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்னை விடுங்கோ நான் மாறி மாறி கதைக்கும் வெறும்பயல்.

பேராசிரியரின் ஆய்வுக்கு என்ன பதில்?

கொஞ்சகாலத்துக்கு முன்புதான் வேறு ஏதோ  இனம் என்று நிறுவியவர்களில் நீங்களும் ஒராள் இப்போ மலையாளியில் வந்து நிக்கிறியள் அது இடைவேளைக்கு முன்பு இது இடைவேளைக்கு பின்பு ஆக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

உணவு, தொனி, சுத்தமாக ஊரை வைத்து கொள்வது, கல்விக்கு உயிரை விட முக்கியதுவம் கொடுப்பது, ஊக்கமாக இருப்பது, ஒரு சின்ன வியாபாரமாக தொடங்கி அதை பெரிதாக கட்டி எழுப்புவது, திரை கவர்சிக்கு இழுபடாமை இப்படி பல நற்பண்புகளிலும், மேலே சொன்ன துர்பண்புகளிலும் யாழ் மக்களுக்கும் மலையாளிகளுக்கும் பல ஒற்றுமையை நான் காண்கிறேன்.

இதை வைத்து எதையும் நிறுவ முடியாது ஆனால் இந்த ஒற்றுமைகள் பொய்யில்லை.

இந்தாள் எனதூரை மலையாளிகளின் பரம்பரை  என  நிறுவாமல்  தூங்காது போலிருக்கு???🤣

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க எப்பவும் கிளியின் கழுத்துதான் சுமத்திரன் பிழையானவர் என்று ஆரம்பம் முதல் கத்தினோம் நீங்கள்  இல்லை கொஞ்சம் நேரம் கொடுத்து பார்ப்பம் என்று விட்டு பிடித்தியல் அந்த இடைவெளி இன்னமும் தமிழருக்கு எதிரான மறைமுக வேலைகளை செய்ய அனுமதி கொடுத்தது போல் இடம் எடுத்துக்கொண்டார் இப்ப கழுத்துக்கு மேல் வெள்ளம் ஓடவிட்டு சுமத்திரனில்  நம்பிக்கை இல்லை என்கிறீர்கள் .

இங்கும் திராவிடத்துக்கு பால் ஊத்துகிறீர்கள் ஒரு நாள் கடிச்சு போட்டுது என்று வந்து நிற்பீர்கள் .

உங்களுக்கு நான் எழுதியது விளங்கும் இனி இந்த திரியில் விளங்கப்படுத்த என்னிடம் கருத்துக்கள்  இல்லை பாஸ் .

15 minutes ago, விசுகு said:

இந்தாள் எனதூரை மலையாளிகளின் பரம்பரை  என  நிறுவாமல்  தூங்காது போலிருக்கு?

என்னை மலையாளி என்றே சொல்லியிட்டார்  விசுகண்ணே diamond cutting diamond. என்று 🤣

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

நாங்க எப்பவும் கிளியின் கழுத்துதான் சுமத்திரன் பிழையானவர் என்று ஆரம்பம் முதல் கத்தினோம் நீங்கள்  இல்லை கொஞ்சம் நேரம் கொடுத்து பார்ப்பம் என்று விட்டு பிடித்தியல் அந்த இடைவெளி இன்னமும் தமிழருக்கு எதிரான மறைமுக வேலைகளை செய்ய அனுமதி கொடுத்தது போல் இடம் எடுத்துக்கொண்டார் இப்ப கழுத்துக்கு மேல் வெள்ளம் ஓடவிட்டு சுமத்திரனில்  நம்பிக்கை இல்லை என்கிறீர்கள் .

இங்கும் திராவிடத்துக்கு பால் ஊத்துகிறீர்கள் ஒரு நாள் கடிச்சு போட்டுது என்று வந்து நிற்பீர்கள் .

உங்களுக்கு நான் எழுதியது விளங்கும் இனி இந்த திரியில் விளங்கப்படுத்த என்னிடம் கருத்துக்கள்  இல்லை பாஸ் .

என்னை மலையாளி என்றே சொல்லியிட்டுது விசுகண்ணே diamond cutting diamond. என்று 🤣

 

இது முதலே தெரிந்திருந்தா

கருணாநிதியின் காலில் விழுந்ததற்கு  பதிலாக மேனனின்  காலில் விழுந்திருக்கலாம்😂

இந்தாள்  வேண்டுமென்று தான்  லேற்பண்ணி சொல்லுது போல...??🤣

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஏராளன் said:

கிளீன் போல்ட் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறன், கிளீன் அவுட் புதுசா இருக்கே?!

அவர்கள் அப்படித்தான் கண்டுகொள்ளாதீங்க 🤣

1 minute ago, விசுகு said:

இது முதலே தெரிந்திருந்தா

கருணாநிதியின் காலில் விழுந்ததற்கு  பதிலாக மேனனின்  காலில் விழுந்திருக்கலாம்😂

இந்தாள்  வேண்டுமென்று தான்  லேற்பண்ணி சொல்லுது போல...??

வந்தால் சிங்கம் இரவுபகலா  இங்குதான் நிற்பார் அந்தாளுக்கு பொழுது போகணும் இப்படி ஏதாவது புரளியை கிளப்பி அனைவரையும் கம்பை  தூக்க சொல்லி போட்டு தான் வீச தொடங்கிடுவார் .

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

கொஞ்சகாலத்துக்கு முன்புதான் வேறு ஏதோ  இனம் என்று நிறுவியவர்களில் நீங்களும் ஒராள் இப்போ மலையாளியில் வந்து நிக்கிறியள் அது இடைவேளைக்கு முன்பு இது இடைவேளைக்கு பின்பு ஆக்கும் 

அப்பவே இந்த மலபார் வழித்தோன்றல்கள் எண்ட விசயத்தையும் சொன்னானெல்லே?

நீங்கள் கூட ஆரோ 90 வயசு கம்பு சுத்துற ஐயாவிடம் எல்லாம் போய் விபரம் கேட்டு வந்தனியள். மறந்து போச்சே?

நேற்றே குமாரசாமி அண்ணைக்கு சொல்லியாச்சு.

செல்வநாயகம் தெலுங்கர் என்றது, பண்டாரநாயக்க தெலுங்கர் என்பதற்குரிய உச்சரிப்பை அடிப்படியாக கொண்ட வாதங்கள் செல்வநாயகத்துக்கும் ஏனைய நாயகம் என முடியும் அத்தனை தமிழ் பெயர்களுக்கும் பொருந்தும் என்பதை சுட்டி காட்ட கூறப்பட்டது.

யாழ்பாண மலையாள தொடர்பு அப்படி அல்ல - மேலே ஒரு பேராசிரியர் நிறுவுகிறார்.

26 minutes ago, விசுகு said:

இந்தாள் எனதூரை மலையாளிகளின் பரம்பரை  என  நிறுவாமல்  தூங்காது போலிருக்கு???🤣

🤣தொப்பி வாங்கலியோ தொப்பி, நன்னாயிட்டு இருக்கும் கேரளத்து தொப்பி🤣.

அண்ணை உத தொடக்கினது மருதர் நானில்லை.

27 minutes ago, பெருமாள் said:

நாங்க எப்பவும் கிளியின் கழுத்துதான் சுமத்திரன் பிழையானவர் என்று ஆரம்பம் முதல் கத்தினோம் நீங்கள்  இல்லை கொஞ்சம் நேரம் கொடுத்து பார்ப்பம் என்று விட்டு பிடித்தியல் அந்த இடைவெளி இன்னமும் தமிழருக்கு எதிரான மறைமுக வேலைகளை செய்ய அனுமதி கொடுத்தது போல் இடம் எடுத்துக்கொண்டார் இப்ப கழுத்துக்கு மேல் வெள்ளம் ஓடவிட்டு சுமத்திரனில்  நம்பிக்கை இல்லை என்கிறீர்கள் .

இங்கும் திராவிடத்துக்கு பால் ஊத்துகிறீர்கள் ஒரு நாள் கடிச்சு போட்டுது என்று வந்து நிற்பீர்கள் .

உங்களுக்கு நான் எழுதியது விளங்கும் இனி இந்த திரியில் விளங்கப்படுத்த என்னிடம் கருத்துக்கள்  இல்லை பாஸ் .

என்னை மலையாளி என்றே சொல்லியிட்டுது விசுகண்ணே diamond cutting diamond. என்று 🤣

உங்கள் அளவுக்கு எனக்கு அரசியல் அறிவோ, தூர நோக்கோ இல்லை என்பதை ஏற்று கொள்ள நான் என்றும் தயங்கியதில்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

 

இது முதலே தெரிந்திருந்தா

கருணாநிதியின் காலில் விழுந்ததற்கு  பதிலாக மேனனின்  காலில் விழுந்திருக்கலாம்😂

இந்தாள்  வேண்டுமென்று தான்  லேற்பண்ணி சொல்லுது போல...??🤣

இதுல ஒரு மேட்டர் இருக்கு. கடஞ்சா தொட்டுப் போனார்.

சேரத்தமிழருக்கு பிராமணர் செய்த பெருங்கொடுமையே அதன் தொடர்சியே மேனனும், நாராயணனும் எமக்கு செய்தது.

பெண்கள் polyandry எனும் ஒரே நேரத்தில் பலதார உறவு வைக்கும் முறையை சேர தமிழ் குடிகளில் நம்பூதிரி பிராமணர்கள் புகுத்தியது முதல் ஆரம்பிக்கிறது இந்த கதை.

இதை புரிந்து கொண்டால் சேர தமிழருக்கும் ஏனை தமிழருக்கும் ஒரு வரலாற்று பகை எப்படி உருவாகியது, இல்லை பிராமண சதியால் உருவாக்கப்பட்டது அது முள்ளிவாய்க்கால் வரை எப்படி நீண்டது என்பது பற்றி அறியலாம்.

இன்னொரு திரியில் பார்க்கலாம்🤣. இப்பவே பெருமாளுக்கு மூச்சு முட்டுது🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

பல சிங்கள ஊடகங்கள், பத்திரிகையாளர்கள், வரலாற்றுப் பேராசிரியர்கள் தலைவர் பிரபாகரன் அவர்களையும் மலபாரி வழி வந்தவர் என்று (கேலியாகவும்) சிங்கள ஊடகங்களில் குறிப்பிடுவதுண்டு. அதற்கு ஆதாரமாக தலைவரின் தந்தை வழிப் பாட்டா ஒருவரின் பெயரைக் குறிப்பிடுவார்கள் (பெயர் மறந்து விட்டது). அத்துடன் போர்த்துக்கீசர் யாழ்ப்பாண மக்களை மலபாரிகள் என்று குறிப்பிடுவதாகவும், மலபாரிகளின் வழித்தோன்றல்களுக்குத்தான் தமிழீழம் தேவையாக உள்ளதாகவும் நக்கலாக குறிப்பிடுவர்.

நம்மை போலவே சிங்களவர்களும், ஒரு விசயமே படிப்பிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையினை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள்.

அதனையே நாமும் சீரியஸ் ஆக, சிந்திக்காமலே, நம்புகிறோம்.

உண்மையில் அது தவறு என்று சிங்களவர்களுக்கு புரியாத வரையில், நாடு முழவதும் தமதே என்றே நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.

போர்த்துகேயர்களும், ஒல்லாந்தர்களும் இலங்கையின் வடக்கு, தெற்கு  பகுதிகளை தனித்தனியே ஆண்டார்கள், இரு பகுதிகளுக்கு இடையே, நடுவே இருந்த வன்னி பகுதி சுஜாதீனமாக இருந்ததால், நிலத் தொடர்பு இல்லாமல் இருந்தது.

வடக்கே, அந்த நாளில் மலபாரிகள் வந்தாலென்ன, தமிழர்கள் வந்தால் என்ன, சிங்களவர்களுக்கு என்ன பிரச்சனை இருந்திருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

நம்மை போலவே சிங்களவர்களும், ஒரு விசயமே படிப்பிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையினை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் ஆண்டார்கள்.

அதனையே நாமும் சீரியஸ் ஆக, சிந்திக்காமலே, நம்புகிறோம்.

உண்மையில் அது தவறு என்று சிங்களவர்களுக்கு புரியாத வரையில், நாடு முழவதும் தமதே என்றே நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.

போர்த்துகேயர்களும், ஒல்லாந்தர்களும் இலங்கையின் வடக்கு, தெற்கு  பகுதிகளை தனித்தனியே ஆண்டார்கள், இரு பகுதிகளுக்கு இடையே, நடுவே இருந்த வன்னி பகுதி சுஜாதீனமாக இருந்ததால், நிலத் தொடர்பு இல்லாமல் இருந்தது.

வடக்கே, அந்த நாளில் மலபாரிகள் வந்தாலென்ன, தமிழர்கள் வந்தால் என்ன, சிங்களவர்களுக்கு என்ன பிரச்சனை இருந்திருக்கும்?

மன்னிக்க வேண்டும் நாதம்ஸ்,

நீங்கள் சொல்வதை போல் அல்ல.

இலங்கயின் கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் வரலாறும் சமூக கல்வியும் பாடத்திட்டத்தில் போர்த்துகேயர் எங்கே எப்படி வந்தார்கள், அவர்கள் வரும் போது இலங்கையில் இருந்த இராச்சியங்கள் என்ன? 

இந்த ஒவ்வொரு இராச்சியங்களும் எந்த திகதிகளில் அவர்களிடம் வீழ்ந்தது.  அவற்றை எந்த மன்னன் ஆண்டு கொண்டிருந்தார்.

பின்னர் ஒல்லாந்தர் எப்படி வந்தார்கள் அவர்கள் எப்படி போத்துகீசரை பிரதியீடு செய்தார்கள்.

அதன் பின் பிரென்சுகாரர் வர எத்தனித்தது, பின்னர் ஐரோப்பாவில் ஒல்லாந்தில் ஏற்பட்ட மாற்றத்தால் ஒல்லாந்தின் உரிமை பிரிதானியரிடம் போனது.

1815 இல் கண்டி இராச்சியம் வீழ்ந்தது. இலங்கை முழுமையும் பிரித்தானியரின் கீழ் வந்தது.

இவை எல்லாமே வரலாறும் சமூக கல்வியும் ஆண்டு 9, 10, 11 இல் கற்பிக்க படுகின்றன. 

நிழலி 93 AL என நினைக்கிறேன். அவரும் நிச்சயம் இந்த புத்தகத்தை படித்திருப்பார்.

சில வேளை 1990 க்கு முன்னர் இதை படிபிக்காமல் விட்டிருக்க கூடும்.

சிங்களவர் நாடு முழுவதும் தமது என நம்புவது - மஹாவம்சத்தில் இருந்தும், விஹாரமகாதேவி, துட்டு கெமுனிவில் இருந்து வருகிறது.

மூத்த சிவன் என்ற தமிழ் மன்னனை இருட்டடிப்பு செய்து அவன் மகனை சிங்கள மன்னன் என உருமாற்றுவதில் ஆரம்பிக்கிறது.

வடமத்திய இலங்கையில் ஆட்சி செய்த இன்னும் பல தமிழ் மன்னர்களை இருட்டடிப்பு செய்கிறது அல்லது சிங்கள மயப்படுத்துகிறது.

திரிக்கபட்ட இலங்கை வரலாறு - சேனன் குத்திகனோடு குதிரை விற்க வந்தவர்கள் தமிழர், பின்னர் சோழர் படை எடுப்பில் இன்னும் அதிகம் வந்தார்கள், சோழர் ஆட்சியில் சிங்கள தேசமே அடிமைபட்டு கிடந்தது அதை துட்டு காமினி மீட்டான்,  எனினும் காலப்போக்கில் சிங்கள தேசமான முழு இலங்கையில் தமக்கு என வடக்கில் ஒரு கலக இராச்சியத்தை தமிழர் நிறுவி கொண்டார்கள். 

எப்போதெல்லாம் சிங்கள அரசு பலம் பெற்றதோ அப்போதெல்லாம் தமிழர்களின் கலக அரசை அடக்கினார்கள். 

ஆனால் சிங்கள அரசுகள் பலமிழக்கும் சமயத்தில் மீண்டும் கலக தமிழரசுகள் உருவாகின. 

இதுதான் இலங்கையின் போதிக்கபடும் திரிபு வரலாறு.

ஆகவே இலங்கையில் படித்தவர்களுக்கு போத்துகேயர் வரும் போது இலங்கையில் ஒரு தமிழ் அரசு உட்பட பல அரசுகள் இருந்தன என்பதும், அவற்றை தனி தனி நிர்வாக அலகுகளாக போத்துகீசரும் ஒல்லாந்தரும் நிர்வகித்தனர் என்பதும் 1815 இன் பின் பிரித்தானியர் நிர்வாக இலகிற்காக முழு இலங்கையையும் ஒரு நாடாக்கினர் என்பதும் தெரியும்.

ஆனால் யாழ்பாண இராச்சியம் என்பது சிங்கள அரசு பலவீனமாகும் போதெல்லாம் முகிழ்த்தெழும் வந்தேறி தமிழர்களின் கலக அரசு என அவர்களுக்கும், எங்களுக்கும் போதிக்கபடுகிறது.

இதனால்தான் அவர்கள் தம்மை இலங்கை தீவின் உரித்தாளர்களாயும் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே, சோழ, மலபாரி, வந்தேறிகளாயும் நோக்குகிறனர்.

இதைதான் அன்ரன் பாலசிங்கம் “மஹாவம்ச மனோநிலை” என இரெட்டை சொல்லில் கச்சிதமாக கூறினார்.

ஆதாரம் - இலங்கையில் நானே படித்த ஆண்டு 9,10,11 வரலாறு.

தேவைப்படின் கல்வி வெளியீட்டு திணைக்கள புத்தக pdf இணைப்பை தேடிப்பார்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

உங்கள் அளவுக்கு எனக்கு அரசியல் அறிவோ, தூர நோக்கோ இல்லை என்பதை ஏற்று கொள்ள நான் என்றும் தயங்கியதில்லை🤣

பாஸ் உங்க அளவுக்கு நாங்க இல்லை எங்களுக்கு அனுபவம்தான் படிப்பு கத்தரியில்  வாழைக்காய் வராது நீங்க வரும் என்று ஓடிய ஆட்கள் அவ்வளவுதான் வித்தியாசம் சுமத்திரனின் விசுவாசிகள் கூட சமீப காலம்களில் மாறி சும்மை  திட்டுகின்றனர் .

 

6 hours ago, goshan_che said:

இன்னொரு திரியில் பார்க்கலாம்🤣. இப்பவே பெருமாளுக்கு மூச்சு முட்டுது🤣.

உங்கள் அளவுக்கு நேரம் உள்ள ஆட்கள் அல்ல முட்டாளுடன் மோதுவது இலகுவானது நீங்கள்  அந்தவகை இல்லை என் கருத்துக்கு ஒன்றுக்கு இரண்டுதடவை சரி பார்த்து கருத்துக்கள் வைத்து விடணும் நேரம் மிகவும் முக்கியமானது .

 

6 hours ago, goshan_che said:

யாழ்பாண மலையாள தொடர்பு அப்படி அல்ல - மேலே ஒரு பேராசிரியர் நிறுவுகிறார்.

கொரனோ  ஊசி போட்டவர்கள் உடலில் அதி  விரைவாக தான் வாழ உருமாறிக்கொள்கிறது என்ற அதி முட்டாள் கருத்தை நோபல் பரிசு பெற்ற அறிவாளி சமீபத்தில் அறிவித்தவர் கேள்விப்பட்டு இருப்பியல் அந்தகாலத்தில் பட்டம் எடுத்தவன் எழுதும் புத்தகங்கள் உண்மையா என்று மீள்  பரிசோதனை செய்வது நல்லது கடவுள் கூட பிழை விடும் பிரபஞ்சம் இது .

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

பாஸ் உங்க அளவுக்கு நாங்க இல்லை எங்களுக்கு அனுபவம்தான் படிப்பு கத்தரியில்  வாழைக்காய் வராது நீங்க வரும் என்று ஓடிய ஆட்கள் அவ்வளவுதான் வித்தியாசம் சுமத்திரனின் விசுவாசிகள் கூட சமீப காலம்களில் மாறி சும்மை  திட்டுகின்றனர் .

 

உங்கள் அளவுக்கு நேரம் உள்ள ஆட்கள் அல்ல முட்டாளுடன் மோதுவது இலகுவானது நீங்கள்  அந்தவகை இல்லை என் கருத்துக்கு ஒன்றுக்கு இரண்டுதடவை சரி பார்த்து கருத்துக்கள் வைத்து விடணும் நேரம் மிகவும் முக்கியமானது .

 

கொரனோ  ஊசி போட்டவர்கள் உடலில் அதி  விரைவாக தான் வாழ உருமாறிக்கொள்கிறது என்ற அதி முட்டாள் கருத்தை நோபல் பரிசு பெற்ற அறிவாளி சமீபத்தில் அறிவித்தவர் கேள்விப்பட்டு இருப்பியல் அந்தகாலத்தில் பட்டம் எடுத்தவன் எழுதும் புத்தகங்கள் உண்மையா என்று மீள்  பரிசோதனை செய்வது நல்லது கடவுள் கூட பிழை விடும் பிரபஞ்சம் இது .

பெரும்ஸ்,

சரி சரி டென்சன் வேண்டாம். பேராசிரியர் என்ன, நோபல் பரிசாளி என்ன யாரையும் நாம் கேள்வி கேட்கலாம். ஆனால் கேள்விகளும் அந்த தரத்தில் இருக்க வேண்டும்.

அதைதான் நான் சொல்ல வந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

இது நம்ப கூடியதாக இல்லை. இதற்கு ஏதும் குறிப்பு ஆதாரங்கள் உள்ளதா?

ஏனெனில், போத்துக்கேயர் முதலில்  தீவு பகுதி ஊடக யாழ் இராச்சியத்தை பிடிக்க பலதடவைகள் முனைந்த போது இயலாமல் போனது.

அதனால், அங்கு உள்ளூர் மக்கள் இல்லாமல் யாழ் இராச்சிய படைகள் போத்துக்கேயரை தடுத்து இருக்க முடியாது.
  

போர்த்துக்கீசர் ஆளும் நோக்கில் வரவில்லை வணிக நோக்கிலேயே முதலில் வந்தார்கள் 
பண்ட மாற்றுதான் அவர்கள் நோக்கம். பின்பு பலவீனங்களை அறிந்து முன்னேறினார்கள் 
நெடுந்தீவில் தமது குதிரைகளை பராமரிக்கவே அவர்கள் கேரளாவில் இருந்து அடிமைகளாக 
கொண்டுவந்தார்கள்.

இப்போ கொஞ்சம் பிசி பின்பு ஆறுதலாக எழுதுகிறேன் 

(நானும் நெடுந்தீவுதான்) 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

(நானும் நெடுந்தீவுதான்) 

அப்போ என்னாத்துக்கு 'மருதங்கேணி'ன்னு பேரு, ஐயா..? 🤭

நேற்று ராத்திரி முழுசும் சனம் உங்க ஊரை (????) இந்த திரியில் தோண்டினார்களே.. ? 😲

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

அப்போ என்னாத்துக்கு 'மருதங்கேணி'ன்னு பேரு, ஐயா..? 🤭

நேற்று ராத்திரி முழுசும் சனம் உங்க ஊரை (????) இந்த திரியில் தோண்டினார்களே.. ? 😲

 

 

சிறிமாவோ பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 
விவசாய குடியேற்ற திட்டம் அறிமுகமானது 
இலவசமாகவே வீடு காணி வயல் (நஞ்சை புஞ்சை) கொடுத்து வன்னியில் குடியேற்றினார்கள் 
எனது மூதையோரும் அதன் காரணமாக வன்னியில் குடியேறி கொண்டார்கள் 
நான் பிறந்தது ... பண்டாரவன்னியன் பிறந்த ஊரில்.

நான் வளர்ந்த ஊர்தான் மருதங்கேணி .... இங்கு வந்த புதிதில் எனக்கும் கொஞ்சம் 
யாழ்பாணத்து பாஷை ஒரே சிரிப்பாக இருக்கும் .... பின்பு பழகி கொண்டேன். 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2021 at 12:43, goshan_che said:

போத்துகீசர் மட்டும் அல்ல ஒல்லாந்தர் ஆளுனர் Jaques Fabrice Van Senden என்பவரின் 1786 திருகோணமலை சுற்றறிக்கை, கிராமங்களை, தமிழ், முஸ்லீம், மலபார், சிங்கள, மலாய், வேடுவர் என வகைப்படுத்துகிறது.

ஆகவே திருகோணமலையில் மலபார், தமிழ் என்ற வித்தியாசம் ஐரோப்பியரால் அறியபட்டுள்ளது.

தற்செயலாக எனது கண்ணில் பட்டது இந்த கட்டுரை.

https://www.colombotelegraph.com/index.php/surnames-of-sri-lankan-malays-are-gradually-disappearing/


முன்பு சொல்லிய,  முஸ்லீம், மலாய், வேறுபாடே (அதாவது ஏற்கனவே இருந்தவர்கள் முஸ்லீம்கள், வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் மலாய்கள், இரு மக்களும் அடிப்படையில் முஸ்லிம்கள் ஆயினும்.) என்பதே தமிழ், மலபாரிகள் (அதாவது ஏற்கனவே இருந்தவர்கள் தமிழர்கள், வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டவர்கள் மலபாரிகள், அனால் இவர்கள் பாவித்த தமிழ் வேறுபாடாக இருந்திருக்கலாம் )  எனும் வகைப்படுத்தலிலும் இருக்க வேண்டும் என்பதற்கான புற, சூழ்நிலை ஆதாரத்தை உறுதியாக்கிறது.

கட்டுரையில் மற்றும் கீழே உள்ள விமர்சனத்தில் இருந்து சில வரிகள்.

"According to Prof Hussainmiya’s writings, the community’s ancestors are primarily from what is now known as Indonesia, formerly known as Dutch East Indies, which came under Dutch Colonial rule in the 17th century"

விமர்சனத்தில் இருந்து சில வரிகள்

"It is a pitty that all historians and authors who write about the History of the Malay Community in Sri Lanka had always forgotten to remember or mention the Malays of “KINNIYA” a rural village in the district of Trincomalee or the Malays who moved into Colombo from the rural Sri Lanka, then Ceylon and excelled public administration, business/trade and politics."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.