Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த காரணம்?: நெகிழ்ந்த சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Maruthankerny said:

என்று கத்தி கோடாரியை தூக்கிக்கொண்டு திரிந்து 
தம்பாட்டில் மேயும் வெள்ளாடுகளையும் பயமுறுத்துகிறீர்கள் 
தெரிந்தோ தெரியாமலோ இந்த தவறு நடக்கிறது 

நான் இப்படி எழுதுவது உங்களுக்கு சிரிப்பாக இருக்கலாம் 
யாழ்களத்தில் சேற்றுக்குள் இறங்கி நின்று சேறு கலக்கியவன் நான் 
இப்போது அதை ஒரு அறிவற்ற செயலாகவே எண்ணுகிறேன் 

இப்படியான திரிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் பலாபலனை 
அனுபவிப்பதால்தான் எழுதுகிறேன் இதில் ஆக்கபூர்வமான எதுவுமே இல்லை 

அடக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை பார்க்கும் போது வரும் இரத்த அழுத்தத்தை 
அடக்க முடியவில்லை. முகநூலிலும் இதே பிரச்சனைதான் சில யூதர்கள் நண்பர்களாக இருந்தார்கள் 
தற்போதைய இஸ்ரேல் அடாவடித்ததானத்தை ஆக்கிரோஷமாக எழுதி அவர்களை பகைத்துக்கொண்டேன் யாழிலும் சிலர் தாம் தான் மேதாவிகள் போல சிலரை சில்லறை சிலேடைகள் செய்வதை பார்த்து பொறுமை இழந்து  எழுத நேர்ந்துவிடுகிறது ......அதையும் கடந்துவிடவே முயற்சிக்கிறேன் 

ஒரே காரணம் வெளியில் நிறைய ஆக்கபூர்வமான வேலைகளை செய்ய கூடியதாக இருக்கிறது. 
புத்திசம் காஜலிசம் சமணம் போன்றவற்றில் இருந்து பொறுமையை கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

இப்போது பல தவறுகளுக்கு எந்த மனிதரும் காரணம் இல்லை 
கொம்ப்யூட்டரும் அல்கேரிதமும் தான் காரணம். நாம் கொம்ப்யூட்டரை கொண்டு வேலை வாங்க  
அதுக்கு வேலை பழக்கினோம் அவை இப்போ திறன்பட செயலாற்ற தொடக்கி இருக்கிறது. 
இனி மார்க் சூசகபெர்க் விரும்பினால் கூட முகநூலை கட்டுப்படுத்த முடியாது ... சுந்தர் பிச்சை விரும்பினால் கூட  கூகிளை கட்டுப்படுத்த முடியாது.இதே கோசான் உங்களுடைய அதே கைபேசி கொண்டு நீங்கள் வேறு வேறு இடங்களுக்கு சென்று is Brexit good or bad?  என்று கூகிளில் தேடினால் 
வேறு வேறு விடை வரும். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு என்ன பிடிக்கும் என்பதையும்  
எதை பரப்புரை செய்யவேண்டும் என்பதையும் அல்கோரிதம் மிக துல்லியமாக கணித்து செயலாற்றுகிறது. ஒரு சாராருக்கு உண்மை சென்றடையவே போவதில்லை ஒரு புதுவித மூளைசலவைக்கு ஆளாக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதைய புதிய தலைமுறை 2கே கிட்ஸ் மிகவும் பரிதாபமானவர்கள் .. அவர்களுடைய பல செயல்பாடுகள்  உங்களுக்கு கோபத்தை உண்டுபண்ணலாம் .... உண்மையில் அவர்கள் மூளை அவர்கள் வசம் இல்லை. தப்பை உண்மை என்று அடித்து வாதிடுவார்கள் ... அதுக்கு காரணம் அவர்களுக்கு உண்மை எது என்றே தெரியாது   நன்மை தீமை தெரியாது. அவர்கள் இடத்தில் எமக்கு நிறைய பொறுமை வேண்டும் .இந்த கே லெஸ்பியன் (gay Lesbian) உறவு எல்லாம் காட்டு தீ போல பரவுகிறது ... உண்மையில் அவர்கள் கே லெஸ்பையன் இல்லை  ... ஒரு பாலியல் தூண்டல் எழும்போதே அதுக்கு இரையாகி விடுகிறார்கள். காரணம் அவர்களை சென்றடையும்  தகவல்கள் விளம்பரங்கள் பொழுபோக்கு என்பன எல்லாமே அதை சார்ந்தே இருக்கும். இதை எந்த மனிதரும்  திட்டம் இட்டு செய்யவில்லை ........... அல்கோரிதம்தான் செய்கிறது. 

ஸ்டாக் மார்க்கெட்டில் பெரிய கொம்பனிகள் திடீர் நஷ்ட்டம் அடைகிறார்கள் 
எங்களை   போனற்வர்கள் ( பொருளாதார அறிவு இல்லாத) அதிக லாபம் அடைகிறோம்.
காரணம் இப்போ மனிதர்கள் பங்குகள் வாங்கி விற்பது இல்லை கொம்ப்யூட்டர்கள் எங்களைவிட 
1-2 நிமிடம் வேகமாக இருப்பதால் இப்போ கொம்ப்யூட்டர்தான் மார்க்கெட்டை கையாள்கிறது. 

சம்பத் பலிகப்பிட்டிய ( Chamath Palihapitiya) என்ற சிங்களவரை பின்தொடர தொடங்கியபின்தான் நாம் கொஞ்சம் வருமானம் பார்க்கிறோம். அவர்கள் புத்திசாலிகள் என்ன திரைமறைவில் நடக்கிறது என்பதை சில காலம் முன்பே அறிந்து  பில்லியன்களில் சம்பாதித்து கொண்டார்கள். அவர்கள் நல்லவர்கள் என்பதால் வெளியில் வந்து துணிந்து உண்மையை  பேசுகிறார்கள்.  இல்லாவிட்டால் நாம் தேவையற்ற புத்தகம் கட்டுரைகளை வாசித்து எப்படி முதலீடு செய்வது என்று பழகி ... அதை நம்பி மோசம் போயிருப்போம். இவ்வளவு காலமும் அதுதான் நடந்தது. 

நீங்கள் சொன்ன பலதில் மாற்று கருத்தில்லை மருதர்.

கறுப்பாடு

ஆனால் இதுவரை நான் எத்தனை ஆடுகளின் பின்னால் கோடாலியோடு ஓடி நீங்கள் கண்டிருக்கிறீகள்? ஒரே ஒரு ஆடுதான்.

பையன்26 ஐ விட இங்கே சீமானின் ஆதரவாளர் இருக்க முடியுமா? அவரோடு நான் செய்யாத கருத்து மோதலா?

நானும் நெடுக்கும்? ஏன் நீங்களும் நானும்? நம்மிருவருக்கும் உள்ள ஒரே எச்சரிக்கை புள்ளி பரஸ்பரம் எடுத்து கொடுத்ததுதான்.

இவர்களையோ வேறு எவரையோ பார்த்து எப்போதாவது இந்த கறுப்பாடு சந்தேகத்தை வெளியிட்டுள்ளேனா?

இது நான் வருட கணக்கில் அவதானித்த விடயம் மருதர். யாழ் களத்தில் எழுதாத நாட்கள் எல்லாம் தரவு பார்க்கும் நாட்கள்தான்.

சீமான்

2009 இல் ஜொயல், கேபி இப்படி வரிசையாக கறுப்பாடுகள் வெளி வந்த போது - சே இவர்களை எல்லாம் அடையாளம் கண்டிருந்தால் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும் என மனமுடைந்து போனோமே? மறந்து விட்டீர்களா?

இப்போ அதே வேலையை சீமானை வைத்து றோ செய்கிறது என எத்தனை circumstantial evidence ஐ அடுக்குகிறேன்.

அத்தனைக்கும் யாரிடமும் பதில் இல்லை. 

இனி என்ன றோவின் அறிக்கையையா எதிர்பார்கிறீகள்? அல்லது சீமானின் ஒப்புதல் வாக்குமூலத்தையா?

இதை எச்சரிக்காமல் கடந்து போனால் - பிறகேன் தமிழன் என்ற உணர்வு? யாழ் களத்தில் எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன?

Edited by goshan_che

  • Replies 275
  • Views 23.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, வல்வை சகாறா said:

தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர் என்றால் சுய கருத்தை வெளிப்படுத்தினால் அந்த நிறுவனம் பாதிக்கப்படும். சுய தொழில் வைத்திருப்பவரும் சுரணையற்றவராக இருந்தால் முன்னேற முடியும். உண்மைதான்.

கடந்த காலத்தில் நமக்காகப் போராடியவர்கள் எல்லோருக்கும் அறிவுரை சொல்ல உங்களைப் போன்றவர்கள் இல்லாததே எங்களின் தலைவிதியை இப்படி மாற்றிவிட்டது.

தொழில் , தொண்டு என்பதைக் கருத்தில்கொண்டுதான் இந்த உலக இயக்கம் இருக்கிறது. தொல் திருமா 2009 இல் மகிந்தவைச் சந்தித்தது தவறு என்றுதான் நிறையக் கூப்பாடுகளை இக்களத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்கள் கூற்றின் படி அது தவறல்ல, காரணம் தொல் திருமா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு தலைவன் அந்த மக்களுக்காக அன்றைய நிலையில் ஆட்சியில் இருந்தவர்களுடன் இணைந்து நடக்கவேண்டிய கடப்பாடு அவருக்கு முன்னே இருந்தது. அவர்களுடைய நலனுக்காக அவர் செயற்பட்டார். உங்கள் கூற்றின் அடிப்படையில் அவரின் மீதான சேறடிப்பு விலத்தப்படுகிறது. இது உதாரணந்தான் நாதம்.

 

நேற்று வரைக்கும் வீரமாகவும் மொக்கையாகவும் கர்ச்சித்தவர் இன்று கும்பிடு போட்டு கூனலாக மாறிய பொழுதில் உரையாடுகிறோம். வீரமாக  கர்ச்சித்தவர் மொக்கையாகவும் கர்ச்சிப்பதை முன்னர் சுட்டிக்காட்டி இருந்தேன். அப்போதும் மென்போக்காக சில எச்சரிக்கைகளை நாதம் நீங்கள் மட்டுமல்ல இன்னும் சிலரும் முன்வைத்திருந்தீர்கள் என்பது எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. உங்கள் எவரிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே பல்லவி. எல்லோரையும் எதிர்ப்பதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் நிறைய எதிரிகளை உருவாக்குமேயன்றி வளர்ச்சியைத் தராது. தோற்போம் என்று தெரிந்தும் மிகத் தீவிரமாக எதிர்ப்போம். எதிர்ப்பக்கம் வென்றபின் மண்டியிடுவோம். இதெல்லாம் எதற்கு? ஓ... உங்கள் பார்வையில் நமது பொது வளர்ச்சிக்கு என்பதாக இருககும். இதனை நீங்கள் சரியென்று ஆணித்தரமாக ஆதரிப்பவராக இருந்தால் சாந்தியையோ என்னையோ ஏன் எச்சரிக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை.

 

ஆக சூழலுக்கேற்ப மாறிப்பயணித்தாலே வளர்ச்சி என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். கொள்கை கோதாரியெல்லாம் நம்ம வளர்ச்சிக்கு உதவாது அப்படித்தானே.

என்னய்யா நாதம் உங்கள் அத்திவாரமே ஜெலி மாதிரி நொழுநொழுக்கிறது.

 

 

 

இங்க பாருங்கோவன் மருதற்ற சீண்டலை......

போற போக்கில  தேன் கூட்டில கல்லெறியிறன் என்று நம்ம மருதர் நினைத்தால் பாவம் மருதர் ஏமாந்து போவார். குளம் குட்டையில கல்லெறிந்தால் எதிர் வினை வராது கண்டியளே.

தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர் என்றால் சுய கருத்தை வெளிப்படுத்தினால் அந்த நிறுவனம் பாதிக்கப்படும்.

ஆம் நிச்சயமாக காரணம் அந்த நிறுவனத்துக்கு எல்லா கருத்து உடையவர்களும் நன்கொடை கொடுத்து கொண்டு இருப்பார்கள் ஒரு சாராரை கருத்தால் சீண்டும்போது அவர்கள் தங்கள் நன்கொடையை நிறுத்திக்கொள்வார்கள். ஆதலால்தான் பல பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தமது கருத்துக்களுக்கு அடிக்கடி அப்போலீஜிஸ் செய்வதை செய்திகளில் படித்து இருப்பீர்கள். 

சுய தொழில் வைத்திருப்பவரும் சுரணையற்றவராக இருந்தால் முன்னேற முடியும். உண்மைதான்.

அது  உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பதை பொறுத்தது 
சில தொழிலில் சுரனையுடன் இருந்தால் அதிக லாபம் ஈட்ட முடியும்  

 

நேற்று வரைக்கும் வீரமாகவும் மொக்கையாகவும் கர்ச்சித்தவர் இன்று கும்பிடு போட்டு கூனலாக மாறிய பொழுதில் உரையாடுகிறோம்.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் நலனுக்காக ஒரு கட்சி நடத்துகிறவர் 
தமிழ்நாட்டு முதல்வரை சென்று சந்திப்பது எப்படி கூனல் ஆகி குறுகும்?

புலிகள் சந்திரிக்கா ரணில் மகிந்த வென்ற போது வாழ்த்து தெரிவிக்கவில்லையா?
ஏன் அப்போது இந்த கூனல் கும்பிடு பற்றி நீங்கள் எழுதவில்லை? 

 

உங்கள் எவரிலும் எந்த மாற்றமும் இல்லை.

உண்மையுடனும் உரிமைக்காகவும் நிற்கும்போது எந்த மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
ஏன் மாறவேண்டும்? எப்படி மாறவேண்டும்? என்பதை நீங்கள் எழுதினால் ... மேற்கொண்டு எழுதலாம். 
மாறுவதுக்கு ஒரு இஞ்சி கூட இல்லை வென்றாகவேண்டும் விடுதலை என்பதே எமது பேச்சு 

எல்லோரையும் எதிர்ப்பதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் நிறைய எதிரிகளை உருவாக்குமேயன்றி வளர்ச்சியைத் தராது.

அப்படியே பிளேட்டை மாற்றுகிறீர்கள் ...
தலைப்பு சீமான் தமிழக முதல்வரை சந்தித்தார் 
கருத்துக்கள் போதுமான சாணியை சீமான் மீது அடித்தல் 
ஆமையை ஓட விடுதல் நடக்க விடுதல் என்று சித்திர வேலையெல்லாம் செய்துவிட்டு (உங்கள் தரப்பு) 
இப்படி ஒரு வார்த்தையை எப்படி எழுதுகிறீர்கள்? 

தமிழ் இனத்தின் எதிரிகள் எல்லா வேஷத்திலும் இருகிறார்கள் அவர்கள் வேஷங்களை 
வெளிக்கொணர வேண்டிய தேவை இப்பொது இருக்கிறது. யார் அடிக்கிறான் என்பதே தெரியாமல் 
எமது இனம் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறது .. அடையாளம் காட்டினால் கொஞ்சம் விழிப்புணர்வு இருக்கும். தமிழகத்தில் இந்த விழிப்புணர்வு இப்போ வர தொடங்கி இருக்கிறது 

"கூடாதார் நட்பு கூடாதே" என்பது எம் மூதையாரின் உபதேசம் பல இடங்களில் எனக்கு கை கொடுத்து இருக்கிறது நீங்களும் நம்பி கடைப்பிடிக்கலாம்.  

தோற்போம் என்று தெரிந்தும் மிகத் தீவிரமாக எதிர்ப்போம். எதிர்ப்பக்கம் வென்றபின் மண்டியிடுவோம்

"தன்னிலை தாழாமையும் தாழும் இடத்து உயிர் வாழாமையும் மானம் எனப்படும்"  

எதிரி எவ்வளவு பெரியவன் என்பது துரதிஷ்டாவசமாக களத்தை நிர்ணயிப்பது இல்லை 
எமது இனம் சூழல் எவ்வளவு அழிவின் ஆபத்தில் இருக்கிறது என்பதே களத்தை நிர்ணயிக்கிறது.
வரலாறு பூராக தோல்விகள் இருக்கிறது என்பதுக்காக புதிய வரலாறை எழுத போராடாதே என்பதுதான் 
மிக பெருத்த தோல்வி. மற்றது எல்லாம் அதற்கு அடுத்தாற் போல் வருவதுதான். 
 

இதனை நீங்கள் சரியென்று ஆணித்தரமாக ஆதரிப்பவராக இருந்தால் சாந்தியையோ என்னையோ ஏன் எச்சரிக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை.

இப்படி ஒரு புது புரளியை ஏன் கிளப்புகிறீர்கள் என்பதுதான் இங்கு புரியாதது .
வரப்போகும் எதிர்வினையை முன் கூட்டியே சொல்லப்பட்டு இருக்கிறது 
நேசக்கரம் தோல்வியடைய சாந்தியக்காவின் இப்படியான எழுத்துக்கள்தான் காரணம் 
அதை அவர் புரியவில்லை எனபதுக்காக... பார்த்துக்கொண்டு இருக்கும் நாமும் சேர்ந்து கவிழ்த்துவிட வேண்டுமா? 

ஆக சூழலுக்கேற்ப மாறிப்பயணித்தாலே வளர்ச்சி என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். கொள்கை கோதாரியெல்லாம் நம்ம வளர்ச்சிக்கு உதவாது அப்படித்தானே.

என்னய்யா நாதம் உங்கள் அத்திவாரமே ஜெலி மாதிரி நொழுநொழுக்கிறது.

சூழலுக்கு ஏற்ற மாறுதல் என்பதே இலக்கு நோக்கி நகர்வதுக்குத்தான் 
இலக்கு இல்லாதவன் அந்த இடத்திலேயே நின்று கொள்ளலாம் ஒரு நஷடமும் இல்லை 
இலக்கு இருப்பவன் எந்த சூழலையும் தனக்கு சாதகமா பயன்படுத்தி முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் 
ஏற்ற சூழலுக்காக காத்திருக்க முடியாது ....... எந்த சூழலையும் தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் 

வெளித்தோற்றத்தை ஒரு சூழலால் ஜொலி மாதிரி வைத்த்திருந்தால் பரவாயில்லை 
உள்ளுக்குள் அந்த இரும்பு பிடி என்பது கொள்கையில் இருக்கவேண்டும் 

தொல் திருமா 2009 இல் மகிந்தவைச் சந்தித்தது தவறு என்றுதான் நிறையக் கூப்பாடுகளை இக்களத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்கள் கூற்றின் படி அது தவறல்ல, காரணம் தொல் திருமா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு தலைவன் அந்த மக்களுக்காக அன்றைய நிலையில் ஆட்சியில் இருந்தவர்களுடன் இணைந்து நடக்கவேண்டிய கடப்பாடு அவருக்கு முன்னே இருந்தது. அவர்களுடைய நலனுக்காக அவர் செயற்பட்டார். உங்கள் கூற்றின் அடிப்படையில் அவரின் மீதான சேறடிப்பு விலத்தப்படுகிறது. இது உதாரணந்தான் நாதம்.

துரோகத்துக்கு தெரிந்தே துணை போவதும் 
மக்களுக்காக பணி செய்வதையும் எப்படி ஒரே தராசில் போட்டு 
நிறுவுகிறீர்கள் என்பது புரியவில்லை. மகிந்த மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆக 2009இல் என்ன இருந்தது?
ஏன் சென்றார்கள்? என்ன செய்தார்கள் என்பது எல்லாம் எமக்கு காலம்தாழ்த்தி என்றாலும் 
எமக்கு தெரிந்த பின்பும் ஏன் இதை பற்றி விவாதிக்க வேண்டும்?
திருமாவும் இதில் ஏமாளித்தான் ..... அந்த அறிவாவது அவருக்கு இனி வரட்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு. 
இழைத்த துரோகங்களை இனி மாற்ற முடியாது என்றாலும் ....... தொடர் துரோகங்களை தடுக்க வேண்டிய தேவை இருக்கிறது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, shanthy said:

கள்ள மௌனம் காத்து அதை தங்களுக்குள் ரசித்த கதைகளையும் பார்வையாளர்கள் வரிசையில் நின்று தான் பார்த்தது வீரம்.

நானும் கள்ள மெளனம் காத்து பார்வையாளர் வரிசையில் இருக்கலாமா என்று பார்க்கின்றேன்😁

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

நீங்கள் சொன்ன பலதில் மாற்று கருத்தில்லை மருதர்.

கறுப்பாடு

ஆனால் இதுவரை நான் எத்தனை ஆடுகளின் பின்னால் கோடாலியோடு ஓடி நீங்கள் கண்டிருக்கிறீகள்? ஒரே ஒரு ஆடுதான்.

பையன்26 ஐ விட இங்கே சீமானின் ஆதரவாளர் இருக்க முடியுமா? அவரோடு நான் செய்யாத கருத்து மோதலா?

நானும் நெடுக்கும்? ஏன் நீங்களும் நானும்? நம்மிருவருக்கும் உள்ள ஒரே எச்சரிக்கை புள்ளி பரஸ்பரம் எடுத்து கொடுத்ததுதான்.

இவர்களையோ வேறு எவரையோ பார்த்து எப்போதாவது இந்த கறுப்பாடு சந்தேகத்தை வெளியிட்டுள்ளேனா?

இது நான் வருட கணக்கில் அவதானித்த விடயம் மருதர். யாழ் களத்தில் எழுதாத நாட்கள் எல்லாம் தரவு பார்க்கும் நாட்கள்தான்.

சீமான்

2009 இல் ஜொயல், கேபி இப்படி வரிசையாக கறுப்பாடுகள் வெளி வந்த போது - சே இவர்களை எல்லாம் அடையாளம் கண்டிருந்தால் நிலை வேறு மாதிரி இருந்திருக்கும் என மனமுடைந்து போனோமே? மறந்து விட்டீர்களா?

இப்போ அதே வேலையை சீமானை வைத்து றோ செய்கிறது என எத்தனை circumstantial evidence ஐ அடுக்குகிறேன்.

அத்தனைக்கும் யாரிடமும் பதில் இல்லை. 

இனி என்ன றோவின் அறிக்கையையா எதிர்பார்கிறீகள்? அல்லது சீமானின் ஒப்புதல் வாக்குமூலத்தையா?

இதை எச்சரிக்காமல் கடந்து போனால் - பிறகேன் தமிழன் என்ற உணர்வு? யாழ் களத்தில் எழுதினால் என்ன எழுதாவிட்டால் என்ன?

காஜலை கணவன் நனவில் வைத்து கொள்ளட்டும் 
நாங்கள் கனவில் வைத்துக்கொள்கிறோம் 

இந்த சமரசத்துக்கே நாம் உடன்பட்டுவிட்டோம் 

இன்னொருவரின் மனைவி இல்லையா? என்றால் 
நாங்கள் வைத்திருந்தவரை அவர் தூக்கிய போது ஏன் நீங்கள் இப்படி கேட்கவில்லை?
உங்கள் கனவு கன்னி காஜல் என்று எங்களை உசுப்பேத்திய போது உங்கள் "பெண்ணியம்" எல்லாம் 
எந்த கடையில் அடகு வைத்தீர்கள்? சும்மா இருந்த எங்கள் உணர்வுடன் விளையாடும் போது தெரியாத 
நியாயம் எல்லாம் உங்களுக்கு இப்போதான் தெரிகிறதா? 
அதுபோலவே ......
(இது பகிடி என்று தெரியாமல் யார் யார் சண்டைக்கு வாறானோ தெரியவில்லை) 

சீமானை றோ வைத்துக்கொள்ளட்டும் 
நாம் சீமானின் "தமிழ் தேசியத்தை" வைத்துக்கொள்வோம் 

றோ வோ சீமானோ வாக்குமூலம் தரும்போது சீமானை போட்டுத்தள்ளிவிட்டு 
போய்க்கொண்டே இருப்போம்.

கொள்கையில் சமரசம் இல்லை 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

யாழ் களத்திலுள்ள அங்கத்தவர் அனைவரும்  சம உரிமையுடையவர்கள்  எவராயினும் ஒரு யாழ்கள உறுப்பினர். எந்தவொரு சக உறுப்பினரைப்பார்த்து  நீ செய்யும் தொழில் இது  ஆகவே. இப்படிக்கருத்து எழுதாதே  ...அப்படி எழுதானால்  உன் தொழில் பாதிக்கப்படலாம்...என்பது  கருத்து இல்லை.  இது  அந்த உறுப்பினாரின்  சுயவிதி. அல்லது  அவரின் விருப்பமாகும். யாழ்களவிதிகளின்படி  சாந்தி  என்பவரின் அங்கத்துவத்தை  யாழ்களம் எற்று உள்ளது எனவே அவர் மற்றைய உறுப்பினர் போல் கருத்து எழுதமுடியும்  சமூக சேவை செய்வோர்  கருத்து எழுதுவதில் கட்டுப்பாடு இருத்தால் தயவுசெய்அது தனை அறியத்தாருங்கள்

 

உவப்பில்லாத கருத்தை பெண்கள் எழுத யாழ் கள ஆண்கள் விரும்புவதில்லை. அரசியல் திரிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்று முன்னர் திரி ஒன்றில் பெண் உறுப்பினர் ஒருவரை ஆசாரவாதிகள் நேரிடையாகவே கேட்டிருந்தார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

 

உவப்பில்லாத கருத்தை பெண்கள் எழுத யாழ் கள ஆண்கள் விரும்புவதில்லை. அரசியல் திரிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்று முன்னர் திரி ஒன்றில் பெண் உறுப்பினர் ஒருவரை ஆசாரவாதிகள் நேரிடையாகவே கேட்டிருந்தார்கள்.

 

அட நீங்களும் கவனித்திருக்கிறீர்கள்!😂

(வலதுசாரிகள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், யார் பக்கம் நின்றாலும் ஒரே மாதிரித் தான் யோசிப்பர்!)

  • கருத்துக்கள உறவுகள்

Thats why 

its called "RIGHT" 

wrong is always wrong .....

doesn't matter

how many are  கூவுகிறார்கள் .............

சிங்கம் சிங்கிளாத்தான் நிற்கும் 
பன்றிகள்தான் கூட்டமா வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

Thats why 

its called "RIGHT" 

wrong is always wrong .....

doesn't matter

how many are  கூவுகிறார்கள் .............

சிங்கம் சிங்கிளாத்தான் நிற்கும் 
பன்றிகள்தான் கூட்டமா வரும் 

சரி சிங்கம், அந்த ஒ.ரி.ரி வெளியிட்ட அறிக்கையை ஒருக்கா இணைச்சு விடலாமே கேட்ட திரியில போய், ஒளிச்சுத் திரியாமல்? 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Maruthankerny said:

Thats why 

its called "RIGHT" 

wrong is always wrong .....

doesn't matter

how many are  கூவுகிறார்கள் .............

சிங்கம் சிங்கிளாத்தான் நிற்கும் 
பன்றிகள்தான் கூட்டமா வரும் 

இதனால்தான் “அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்” என்று யாரோ சொல்லியிருக்கிறான். அவர்கள் எப்போதுமே RIGHT! 😂😂🤣🤣

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்துக்கு 
தான் சிங்கம் என்று கூவ வேண்டிய எந்த தேவையும் இல்லை 

சிங்கம் அடுத்தவர்களுக்கு தரகு வேலை பார்ப்பதில்லை 

2 minutes ago, கிருபன் said:

இதனால்தான் “அறிவாளிகளாய் தம்மை நினைப்பவர்களை கையாள்வது மிக கடினம்” என்று யாரோ சொல்லியிருக்கிறான். அவர்கள் எப்போதுமே RIGHT! 😂😂🤣🤣

 

பச்சை முடிந்துவிட்டது 

எனக்கு எதிராக என்று நீங்கள் எழுதினாலும் 

உண்மையான உண்மையை தோல் உரித்து எழுதி இருக்கிறீர்கள் 
நன்றி 

RIGHT என்றாலே RIGHT தானே 
 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

சிங்கத்துக்கு 
தான் சிங்கம் என்று கூவ வேண்டிய எந்த தேவையும் இல்லை 

சிங்கம் அடுத்தவர்களுக்கு தரகு வேலை பார்ப்பதில்லை 

பச்சை முடிந்துவிட்டது 

எனக்கு எதிராக என்று நீங்கள் எழுதினாலும் 

உண்மையான உண்மையை தோல் உரித்து எழுதி இருக்கிறீர்கள் 
நன்றி 

RIGHT என்றாலே RIGHT தானே 
 

அமேசன் பிறைம் இந்தியா நீங்கள் சொன்னது போல ஒரு அறிக்கையும் விடவில்லையாமே சிங்கம்? ஒரு வேளை டார்க் நெற்றில் மட்டும் வந்திருக்குமோ?😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

உவப்பில்லாத கருத்தை பெண்கள் எழுத யாழ் கள ஆண்கள் விரும்புவதில்லை. அரசியல் திரிகளில் இருந்து விலகி இருக்கவேண்டும் என்று முன்னர் திரி ஒன்றில் பெண் உறுப்பினர் ஒருவரை ஆசாரவாதிகள் நேரிடையாகவே கேட்டிருந்தார்கள்.

இன்றைய அரசியலா?

சேவையா என்றால் சேவை தான் என்பேன் நான்.

அதையே சாந்தி அக்கா போன்றோருக்கும் பரிந்துரைப்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

காஜலை கணவன் நனவில் வைத்து கொள்ளட்டும் 
நாங்கள் கனவில் வைத்துக்கொள்கிறோம் 

இந்த சமரசத்துக்கே நாம் உடன்பட்டுவிட்டோம் 

இன்னொருவரின் மனைவி இல்லையா? என்றால் 
நாங்கள் வைத்திருந்தவரை அவர் தூக்கிய போது ஏன் நீங்கள் இப்படி கேட்கவில்லை?
உங்கள் கனவு கன்னி காஜல் என்று எங்களை உசுப்பேத்திய போது உங்கள் "பெண்ணியம்" எல்லாம் 
எந்த கடையில் அடகு வைத்தீர்கள்? சும்மா இருந்த எங்கள் உணர்வுடன் விளையாடும் போது தெரியாத 
நியாயம் எல்லாம் உங்களுக்கு இப்போதான் தெரிகிறதா? 
அதுபோலவே ......
(இது பகிடி என்று தெரியாமல் யார் யார் சண்டைக்கு வாறானோ தெரியவில்லை) 

சீமானை றோ வைத்துக்கொள்ளட்டும் 
நாம் சீமானின் "தமிழ் தேசியத்தை" வைத்துக்கொள்வோம் 

றோ வோ சீமானோ வாக்குமூலம் தரும்போது சீமானை போட்டுத்தள்ளிவிட்டு 
போய்க்கொண்டே இருப்போம்.

கொள்கையில் சமரசம் இல்லை 

மருதர்,

நான் இந்த திரியில் எங்கும் பெண்ணியம் பேசவில்லை. அனந்தி மீது சேறடித்தது அவர் ஒரு போராளியின் மனைவி என்று பாராமல் - அதைத்தான் சொன்னேன். ஒரு பெண் பிள்ளைகளின் தாய் என்று பாராமல். சந்திரிகாவின் மீது எத்தனை விமர்சனத்தை வைத்தார்கள் புலிகள். ஒரு கணமேனும் பாலியல் குற்றச்சாடு அடுக்கினார்களா. எதிரியையே அப்படி கையாண்ட கண்ணியம் மிக்க வரலாறு நம்மது. சொந்த சகோதரிகள் மீது ஏன் இந்த வன்மம்? எவனோ ஒரு றோ எஜெண்டுக்காக?

மூச்சுக்கு முன்னூறுதரம் தலைவர் என்று சொல்வதில் பலனில்லை - பாலியல் ஆசையில் துரோகம் செய்தவரை கூட அதை வெளியில் சொல்லாத பண்பாளர் அவர். அவரின் தளபதியின் மனைவியை பற்றி ஆதராமற்ற அவதூறை பரப்பும் போது ஒரு தரமாவது யோசிக்க வராதா?

ஆரம்பகாலம் புலிகளும் பிழை விட்டார்கள் என்ற கதை வேண்டாம். அவர்கள் வரலாற்றில் முதல் நாள் முதல் அவர்கள் கண்ணியம் தவறியதில்லை.

இதற்குள் ஏன் காஜலை இழுத்து வாறியள்? அது ஒரு முழு நீளப் பகிடி. (அப்படித்தானே🤔). நான் பெண்ணியவாதி இல்லை. ஆனால் எமக்காக போராடிவர்கள் மீது கொஞ்சம் கண்ணியமாவது வையுங்கள் என்பதே நான் சொல்ல வருவது.

சீமானை றோ வைத்து கொள்ளும் போது. அவரின் அத்தனை நகர்வையும் றோதான் வைத்துகொள்ளும். அவர் பேசுவதும் றோ சொல்லி கொடுத்தபடிதான். இதில் நாங்கள் வைத்து கொள்ள எதுவும் இல்லை.

தமிழ் தேசியம் என்றால் வன்முறை, பழமைவாதம், என்ற பிம்பத்தையும், பெரும்பாலான தமிழ் நாட்டு மக்களின் மனதில் தமிழ் தேசியம், தலைவர், போராளிகள் பற்றிய ஒரு எதிர்புணர்வையுமே இந்த சீமானிசம் அறுவடை செய்து தரும்.

அதுதான் றோவின் திட்டம்.

மீறி யார், சீமானே நடந்தாலும் அவர்கள் முத்துகுமார் போர் மர்மாக இறந்து போவார்கள்.

 

1 hour ago, Maruthankerny said:

றோ வோ சீமானோ வாக்குமூலம் தரும்போது சீமானை போட்டுத்தள்ளிவிட்டு 
போய்க்கொண்டே இருப்போம்.

கொள்கையில் சமரசம் இல்லை 

அவர்கள் ஏன் வாக்குமூலம் தரப்போகிறார்கள். கேபி போல் எல்லாம் முடிந்தபின் தெரியவரும். தெரிய வரமலே போகலாம்.

நீங்கள் போடவும் முடியாது தள்ளவும் முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

 

Image

Image

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

சீமானை றோ வைத்துக்கொள்ளட்டும் 
நாம் சீமானின் "தமிழ் தேசியத்தை" வைத்துக்கொள்வோம் 

றோ வோ சீமானோ வாக்குமூலம் தரும்போது சீமானை போட்டுத்தள்ளிவிட்டு 
போய்க்கொண்டே இருப்போம்.

கொள்கையில் சமரசம் இல்லை 

இது... இது... தான் உண்மையான தமிழன் மனதில்  இருக்க வேண்டிய தகவல்.
கொள்கை சரி.... ஆனால் தலைவன் பிழைவிட்டால்.....
கொள்கைக்காக தலைவனையே உதறித் தள்ளிவிட்டுக் கொள்கையுடன் முன்னேறத் தம்பிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நன்றி மருதர் ஆறு பக்கம் ஓடினாலும் இந்தத் திரியில் இந்த இரண்டு வரிகள் போதும் இதை விளங்கிக் கொள்பவன் தான் கொள்கைவாதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, Maruthankerny said:

 

Image

Image

சிங்களம் ஒத்துக்கொண்டாலும் ஒரு சில தமிழன்கள் ஒத்துக்கொள்ள வேணுமே???????

 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, வாத்தியார் said:

இது... இது... தான் உண்மையான தமிழன் மனதில்  இருக்க வேண்டிய தகவல்.
கொள்கை சரி.... ஆனால் தலைவன் பிழைவிட்டால்.....
கொள்கைக்காக தலைவனையே உதறித் தள்ளிவிட்டுக் கொள்கையுடன் முன்னேறத் தம்பிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

நன்றி மருதர் ஆறு பக்கம் ஓடினாலும் இந்தத் திரியில் இந்த இரண்டு வரிகள் போதும் இதை விளங்கிக் கொள்பவன் தான் கொள்கைவாதி

வணக்கம் அண்ணா,

றோவின் பிடிக்குள் போன எந்த அமைப்பு அதில் இருந்து மீண்டு வந்து தம் தலைவனை உதறி விட்டு கொள்கை வழி நடந்தது? நடக்க கூடியதாக இருந்தது.

புளொட்? ஈபி? டெலோ?

86 க்கு பின்னான ஈ பி ஆர் எல் எவ்வில் தலைமை ரோவின் கைக்குள் போன பின், அதன் உறுப்பினர்களால் என்ன செய்ய முடிந்தது?

நாம் தமிழரில் சீமானை மீறி எவரும் இல்லை. பாக்கியராசன், தடா என அனைவருமே ரோ கிழித்த கோட்டை தாண்டாதவர்கள்தான் 2ம் தலைமையும் கூட.

சீமான் பிழை விடுகிறார் என ஒரு தம்பி சொன்னாலே கட்டம் கட்டி விடுவார்கள். பலருக்கு இது நடந்துள்ளது.

தவிரவும் சீமான் பிழை விடுகிறார் என்பதை எதை வைத்து தீர்மானிப்பது?

சீமான் இப்போ இருப்பதை போலவேதான் ஓடப்போகிறார். சில அரசியல் யு டேர்ன்களை அடித்தபடி. 

ஆனால், தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த அமைப்புகளை தந்திரமாக தமிழ் தேசியத்துக்கு எதிராக நிறுத்தியபடி.

அதுதான் ரோ வேண்டுவதும்.

48 minutes ago, Maruthankerny said:

 

Image

Image

இதை யாரும் மறுக்கவில்லையே மருதர்?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

நீங்கள் எதோ அவசரத்தில் எழுதுகிறீர்கள் 
எல்லாவற்றுக்கும் ஒரு எதிர்வினை உண்டு. சாந்தி என்பவர் இருவேறு நபர் அல்ல 
ஒருவர்தான் ஓரிடத்த்தில் சறுக்குவது என்பது இன்னோர் இடத்திலும் பாதிக்கும் 
அவற்றை எல்லாம் தாண்டி கருத்துக்கும் அவதூறுக்கும் இடையே பெருத்த இடைவெளி இருக்கிறது.
சந்தியாக்க என்ன எழுதுகிறார் என்பதும் ....
அதுக்கு பதில் எழுதினால் என்ன பாதிப்பு வரும் என்பதும் 
எனக்கும் நாதம் அவர்களுக்கும் தெளிவாகவே தெரிகிறது 

பெண்ணுரிமை என்பது வேறு பெண்களுக்கு எல்லா உரிமையும் வேண்டும் என்பது வேறு 
அனந்தி அவர்கள் என்ன பேசினார்? எங்கு பேசினார்?
என்பதை மறைத்துக்கொண்டு 
வரிக்கு வரி அனந்தி அக்கா....  எழிலன் அண்ணாவின்.... என்று எழுதுவதால் 
அனந்தி அவர்களின் பேச்சும் அதனால் விளைந்த பின்விளைவுகளும் மறையாது.

இங்கு அனந்தி அவர்களுக்கு ஆலவட்டம் தூக்கிக்கொண்டு 
யாருக்கு குழி தோண்டுகிறீர்கள்? அனந்தியின் தம்பிக்குதான் குழி தோண்டுகிறீர்கள் 
இங்கு இருவருமே பக்குப்பட வேண்டியவர்கள்தான் 

அனந்தி அவர்கள்  அவர்கள் பெண் எனபதால் தானே இங்கே தூக்கிப்பிடிக்கிறீர்கள்
எல்லோருக்கும் சம உரிமை இருக்கும்போது .. இங்கே அனந்தி அவர்களை பெண் என்பதால் 
மறைமுகமாக தரம் தாழ்த்துவது யார்?   

இது கருத்துக்களம்.  இங்கே ஆண்பால்  பெண்பால் பார்க்ககூடாது. நாம் மனிதர்கள்  என்ற வகையில் கருத்து வைக்க வேண்டும் நேசக்கரத்தின் நிருவனர்  ஒர்ஆணாகவிருத்து  சாந்தி வைத்த கருத்துக்களை  அந்த ஆண்  வைத்திருத்தால் சரியாகுமா?...வல்வைச்சாகரா ஒரு ஆணாயிருத்தால் அவரது தொழில் பாதிக்கப்படாதா ?இந்த களத்திலுள்ள அனைவரும்  தொழில் செயபவர்கள் தான்  மேற்படி  தொழிலாலரினால்  இங்கு எழுதப்படும்  கருத்துக்கள்  அவர்கள்  தொழிலைப் பாதிக்காதா?

             மேலும் இந்தியாப் பிரதமராகவிருந்த இந்திரா மரணமடையமாலிருந்துயிருத்தால் எமக்கு தீர்வு. கிடைத்திருக்கலாம். ஆனால் அவரின் மகன் இந்திராவின் கொள்கைக்கு நேர் எதிராகச்செயல்ப்பட்டார். அதானால் தீர்வு எட்டக்கனியாகிவிட்டது ...கருணநிதி  எமக்கு எதிராச்செயல்ப்பட்டார்.  அவரது மகனும்  தந்தையின் கொள்கைக்கு  எதிராகச் செயல்படும் வாய்ப்புயிருத்தது  சீமானை ஆதாரித்ததான் மூலம்  அந்த வாய்ப்பை  நாம் இழந்து விட்டோம்  தமிழக முதல்வருடன்  நாம் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் இந்திராவுடனேயே. நேரடித் தொடர்பிலிருத்தவர்கள்  இப்போ. தமிழகமுதல்வருடன் தொடர்பு போன முடியவில்லை. காரணம் எங்கள்  முன் யோசனையற்ற செயல்ப்பாடு..  உணர்ச்சி பொங்கப் பேசி போராட்டத்தில் ஒரு சிறுபான்மையினம் வெற்றி பெற முடியாது..நாங்கள். 25...30.இலட்சம் மக்களே.... இப்போ 50 இலட்சம் நெருக்கியிருப்போம் போராடியதால். குறைத்துவிட்டது.  இனியும் போரிடிக் மக்கள் தொகையை குறைக்க முடியாது. இலங்கையில் பிரச்சனை தீர்க்கப்படமால்  தொடர்த்துமிருப்பது. இந்தியாவின் ஒரு தேவையாகும்  தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர் கடைப்பிடிக்கவேண்டியது அணிசேரக்கொள்கையாகும்..

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

தொண்டு நிறுவனம் வைத்திருப்பவர் என்றால் சுய கருத்தை வெளிப்படுத்தினால் அந்த நிறுவனம் பாதிக்கப்படும்.

ஆம் நிச்சயமாக காரணம் அந்த நிறுவனத்துக்கு எல்லா கருத்து உடையவர்களும் நன்கொடை கொடுத்து கொண்டு இருப்பார்கள் ஒரு சாராரை கருத்தால் சீண்டும்போது அவர்கள் தங்கள் நன்கொடையை நிறுத்திக்கொள்வார்கள். ஆதலால்தான் பல பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தமது கருத்துக்களுக்கு அடிக்கடி அப்போலீஜிஸ் செய்வதை செய்திகளில் படித்து இருப்பீர்கள். 

சுய தொழில் வைத்திருப்பவரும் சுரணையற்றவராக இருந்தால் முன்னேற முடியும். உண்மைதான்.

அது  உங்கள் வாடிக்கையாளர்கள் யார் என்பதை பொறுத்தது 
சில தொழிலில் சுரனையுடன் இருந்தால் அதிக லாபம் ஈட்ட முடியும்  

 

நேற்று வரைக்கும் வீரமாகவும் மொக்கையாகவும் கர்ச்சித்தவர் இன்று கும்பிடு போட்டு கூனலாக மாறிய பொழுதில் உரையாடுகிறோம்.

தமிழ்நாட்டில் தமிழ் மக்களின் நலனுக்காக ஒரு கட்சி நடத்துகிறவர் 
தமிழ்நாட்டு முதல்வரை சென்று சந்திப்பது எப்படி கூனல் ஆகி குறுகும்?

புலிகள் சந்திரிக்கா ரணில் மகிந்த வென்ற போது வாழ்த்து தெரிவிக்கவில்லையா?
ஏன் அப்போது இந்த கூனல் கும்பிடு பற்றி நீங்கள் எழுதவில்லை? 

 

உங்கள் எவரிலும் எந்த மாற்றமும் இல்லை.

உண்மையுடனும் உரிமைக்காகவும் நிற்கும்போது எந்த மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
ஏன் மாறவேண்டும்? எப்படி மாறவேண்டும்? என்பதை நீங்கள் எழுதினால் ... மேற்கொண்டு எழுதலாம். 
மாறுவதுக்கு ஒரு இஞ்சி கூட இல்லை வென்றாகவேண்டும் விடுதலை என்பதே எமது பேச்சு 

எல்லோரையும் எதிர்ப்பதும் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் நிறைய எதிரிகளை உருவாக்குமேயன்றி வளர்ச்சியைத் தராது.

அப்படியே பிளேட்டை மாற்றுகிறீர்கள் ...
தலைப்பு சீமான் தமிழக முதல்வரை சந்தித்தார் 
கருத்துக்கள் போதுமான சாணியை சீமான் மீது அடித்தல் 
ஆமையை ஓட விடுதல் நடக்க விடுதல் என்று சித்திர வேலையெல்லாம் செய்துவிட்டு (உங்கள் தரப்பு) 
இப்படி ஒரு வார்த்தையை எப்படி எழுதுகிறீர்கள்? 

தமிழ் இனத்தின் எதிரிகள் எல்லா வேஷத்திலும் இருகிறார்கள் அவர்கள் வேஷங்களை 
வெளிக்கொணர வேண்டிய தேவை இப்பொது இருக்கிறது. யார் அடிக்கிறான் என்பதே தெரியாமல் 
எமது இனம் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறது .. அடையாளம் காட்டினால் கொஞ்சம் விழிப்புணர்வு இருக்கும். தமிழகத்தில் இந்த விழிப்புணர்வு இப்போ வர தொடங்கி இருக்கிறது 

"கூடாதார் நட்பு கூடாதே" என்பது எம் மூதையாரின் உபதேசம் பல இடங்களில் எனக்கு கை கொடுத்து இருக்கிறது நீங்களும் நம்பி கடைப்பிடிக்கலாம்.  

தோற்போம் என்று தெரிந்தும் மிகத் தீவிரமாக எதிர்ப்போம். எதிர்ப்பக்கம் வென்றபின் மண்டியிடுவோம்

"தன்னிலை தாழாமையும் தாழும் இடத்து உயிர் வாழாமையும் மானம் எனப்படும்"  

எதிரி எவ்வளவு பெரியவன் என்பது துரதிஷ்டாவசமாக களத்தை நிர்ணயிப்பது இல்லை 
எமது இனம் சூழல் எவ்வளவு அழிவின் ஆபத்தில் இருக்கிறது என்பதே களத்தை நிர்ணயிக்கிறது.
வரலாறு பூராக தோல்விகள் இருக்கிறது என்பதுக்காக புதிய வரலாறை எழுத போராடாதே என்பதுதான் 
மிக பெருத்த தோல்வி. மற்றது எல்லாம் அதற்கு அடுத்தாற் போல் வருவதுதான். 
 

இதனை நீங்கள் சரியென்று ஆணித்தரமாக ஆதரிப்பவராக இருந்தால் சாந்தியையோ என்னையோ ஏன் எச்சரிக்கின்றீர்கள் என்றுதான் புரியவில்லை.

இப்படி ஒரு புது புரளியை ஏன் கிளப்புகிறீர்கள் என்பதுதான் இங்கு புரியாதது .
வரப்போகும் எதிர்வினையை முன் கூட்டியே சொல்லப்பட்டு இருக்கிறது 
நேசக்கரம் தோல்வியடைய சாந்தியக்காவின் இப்படியான எழுத்துக்கள்தான் காரணம் 
அதை அவர் புரியவில்லை எனபதுக்காக... பார்த்துக்கொண்டு இருக்கும் நாமும் சேர்ந்து கவிழ்த்துவிட வேண்டுமா? 

ஆக சூழலுக்கேற்ப மாறிப்பயணித்தாலே வளர்ச்சி என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள். கொள்கை கோதாரியெல்லாம் நம்ம வளர்ச்சிக்கு உதவாது அப்படித்தானே.

என்னய்யா நாதம் உங்கள் அத்திவாரமே ஜெலி மாதிரி நொழுநொழுக்கிறது.

சூழலுக்கு ஏற்ற மாறுதல் என்பதே இலக்கு நோக்கி நகர்வதுக்குத்தான் 
இலக்கு இல்லாதவன் அந்த இடத்திலேயே நின்று கொள்ளலாம் ஒரு நஷடமும் இல்லை 
இலக்கு இருப்பவன் எந்த சூழலையும் தனக்கு சாதகமா பயன்படுத்தி முன்னேறிக்கொண்டே இருக்கவேண்டும் 
ஏற்ற சூழலுக்காக காத்திருக்க முடியாது ....... எந்த சூழலையும் தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் 

வெளித்தோற்றத்தை ஒரு சூழலால் ஜொலி மாதிரி வைத்த்திருந்தால் பரவாயில்லை 
உள்ளுக்குள் அந்த இரும்பு பிடி என்பது கொள்கையில் இருக்கவேண்டும் 

தொல் திருமா 2009 இல் மகிந்தவைச் சந்தித்தது தவறு என்றுதான் நிறையக் கூப்பாடுகளை இக்களத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால் இப்போது உங்கள் கூற்றின் படி அது தவறல்ல, காரணம் தொல் திருமா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுக்கும் ஒரு தலைவன் அந்த மக்களுக்காக அன்றைய நிலையில் ஆட்சியில் இருந்தவர்களுடன் இணைந்து நடக்கவேண்டிய கடப்பாடு அவருக்கு முன்னே இருந்தது. அவர்களுடைய நலனுக்காக அவர் செயற்பட்டார். உங்கள் கூற்றின் அடிப்படையில் அவரின் மீதான சேறடிப்பு விலத்தப்படுகிறது. இது உதாரணந்தான் நாதம்.

துரோகத்துக்கு தெரிந்தே துணை போவதும் 
மக்களுக்காக பணி செய்வதையும் எப்படி ஒரே தராசில் போட்டு 
நிறுவுகிறீர்கள் என்பது புரியவில்லை. மகிந்த மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆக 2009இல் என்ன இருந்தது?
ஏன் சென்றார்கள்? என்ன செய்தார்கள் என்பது எல்லாம் எமக்கு காலம்தாழ்த்தி என்றாலும் 
எமக்கு தெரிந்த பின்பும் ஏன் இதை பற்றி விவாதிக்க வேண்டும்?
திருமாவும் இதில் ஏமாளித்தான் ..... அந்த அறிவாவது அவருக்கு இனி வரட்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு. 
இழைத்த துரோகங்களை இனி மாற்ற முடியாது என்றாலும் ....... தொடர் துரோகங்களை தடுக்க வேண்டிய தேவை இருக்கிறது 

நீண்டகாலமாக இந்த களத்தில் நீங்கள் எழுதுகிறீர்கள். ஏதோ வாதாடுவதாக நிறையவே சொதப்புவது உங்களுக்கு அத்துப் படி மருது. நீங்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை சரியென்று நிறுவ ஏகப்பட்ட சம்பந்தம் இல்லாதவற்றை பத்தி பத்தியாக எழுதுவதொன்றும் உங்களுக்குப் புதியதல்ல. நாதமும் நீங்களும் ஒருவரா? உங்களுக்கு பழைய கதைகள் நிறையத் தெரியும்.  அவ்விடயங்களில் நிறையவே ஏற்புடைய கருத்துகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் விவாதங்களை நீர்த்துப் போகவைக்கும் பாணி உங்களுடையது.  இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள்.  உங்களுடைய சீமான் சொக்கத்தங்கம் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். தயவுசெய்து என்னை என் ஒழுக்கத்தை சேறடித்து விடாதீர்கள் 🤣🤣🤣🤣🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

இது கருத்துக்களம்.  இங்கே ஆண்பால்  பெண்பால் பார்க்ககூடாது. நாம் மனிதர்கள்  என்ற வகையில் கருத்து வைக்க வேண்டும் நேசக்கரத்தின் நிருவனர்  ஒர்ஆணாகவிருத்து  சாந்தி வைத்த கருத்துக்களை  அந்த ஆண்  வைத்திருத்தால் சரியாகுமா?...வல்வைச்சாகரா ஒரு ஆணாயிருத்தால் அவரது தொழில் பாதிக்கப்படாதா ?இந்த களத்திலுள்ள அனைவரும்  தொழில் செயபவர்கள் தான்  மேற்படி  தொழிலாலரினால்  இங்கு எழுதப்படும்  கருத்துக்கள்  அவர்கள்  தொழிலைப் பாதிக்காதா?

             மேலும் இந்தியாப் பிரதமராகவிருந்த இந்திரா மரணமடையமாலிருந்துயிருத்தால் எமக்கு தீர்வு. கிடைத்திருக்கலாம். ஆனால் அவரின் மகன் இந்திராவின் கொள்கைக்கு நேர் எதிராகச்செயல்ப்பட்டார். அதானால் தீர்வு எட்டக்கனியாகிவிட்டது ...கருணநிதி  எமக்கு எதிராச்செயல்ப்பட்டார்.  அவரது மகனும்  தந்தையின் கொள்கைக்கு  எதிராகச் செயல்படும் வாய்ப்புயிருத்தது  சீமானை ஆதாரித்ததான் மூலம்  அந்த வாய்ப்பை  நாம் இழந்து விட்டோம்  தமிழக முதல்வருடன்  நாம் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் இந்திராவுடனேயே. நேரடித் தொடர்பிலிருத்தவர்கள்  இப்போ. தமிழகமுதல்வருடன் தொடர்பு போன முடியவில்லை. காரணம் எங்கள்  முன் யோசனையற்ற செயல்ப்பாடு..  உணர்ச்சி பொங்கப் பேசி போராட்டத்தில் ஒரு சிறுபான்மையினம் வெற்றி பெற முடியாது..நாங்கள். 25...30.இலட்சம் மக்களே.... இப்போ 50 இலட்சம் நெருக்கியிருப்போம் போராடியதால். குறைத்துவிட்டது.  இனியும் போரிடிக் மக்கள் தொகையை குறைக்க முடியாது. இலங்கையில் பிரச்சனை தீர்க்கப்படமால்  தொடர்த்துமிருப்பது. இந்தியாவின் ஒரு தேவையாகும்  தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர் கடைப்பிடிக்கவேண்டியது அணிசேரக்கொள்கையாகும்..

 

கந்தையா ஐம்பத்தியேழு உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

இது கருத்துக்களம்.  இங்கே ஆண்பால்  பெண்பால் பார்க்ககூடாது. நாம் மனிதர்கள்  என்ற வகையில் கருத்து வைக்க வேண்டும் நேசக்கரத்தின் நிருவனர்  ஒர்ஆணாகவிருத்து  சாந்தி வைத்த கருத்துக்களை  அந்த ஆண்  வைத்திருத்தால் சரியாகுமா?...வல்வைச்சாகரா ஒரு ஆணாயிருத்தால் அவரது தொழில் பாதிக்கப்படாதா ?இந்த களத்திலுள்ள அனைவரும்  தொழில் செயபவர்கள் தான்  மேற்படி  தொழிலாலரினால்  இங்கு எழுதப்படும்  கருத்துக்கள்  அவர்கள்  தொழிலைப் பாதிக்காதா?

             மேலும் இந்தியாப் பிரதமராகவிருந்த இந்திரா மரணமடையமாலிருந்துயிருத்தால் எமக்கு தீர்வு. கிடைத்திருக்கலாம். ஆனால் அவரின் மகன் இந்திராவின் கொள்கைக்கு நேர் எதிராகச்செயல்ப்பட்டார். அதானால் தீர்வு எட்டக்கனியாகிவிட்டது ...கருணநிதி  எமக்கு எதிராச்செயல்ப்பட்டார்.  அவரது மகனும்  தந்தையின் கொள்கைக்கு  எதிராகச் செயல்படும் வாய்ப்புயிருத்தது  சீமானை ஆதாரித்ததான் மூலம்  அந்த வாய்ப்பை  நாம் இழந்து விட்டோம்  தமிழக முதல்வருடன்  நாம் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் இந்திராவுடனேயே. நேரடித் தொடர்பிலிருத்தவர்கள்  இப்போ. தமிழகமுதல்வருடன் தொடர்பு போன முடியவில்லை. காரணம் எங்கள்  முன் யோசனையற்ற செயல்ப்பாடு..  உணர்ச்சி பொங்கப் பேசி போராட்டத்தில் ஒரு சிறுபான்மையினம் வெற்றி பெற முடியாது..நாங்கள். 25...30.இலட்சம் மக்களே.... இப்போ 50 இலட்சம் நெருக்கியிருப்போம் போராடியதால். குறைத்துவிட்டது.  இனியும் போரிடிக் மக்கள் தொகையை குறைக்க முடியாது. இலங்கையில் பிரச்சனை தீர்க்கப்படமால்  தொடர்த்துமிருப்பது. இந்தியாவின் ஒரு தேவையாகும்  தமிழ்நாட்டு அரசியலில் ஈழத்தமிழர் கடைப்பிடிக்கவேண்டியது அணிசேரக்கொள்கையாகும்..

 

அவர்கள் பெண்கள் பெண்கள் என்று நீங்கள்தான் அவர்களை தாழ்த்துகிறீர்கள் 
ஏன் இப்படி தாழ்த்துகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை. நேசக்கரத்தை ஒரு ஆண் நிறுவனரான இருந்து 
இவரை போலவே சில நபர்களை நம்பி மோசம் போய்யிருப்பின் .... 
இதே கருத்தைத்தான் நான் எழுதி இருப்பேன் ... காரணம் எனது கருத்து ஒன்றும் எதையும் வெட்டி புடுங்க போவதில்லை நேசக்கரத்தால் தாயகத்தில் சிலருக்கு உதவி கிடைக்கும்  ... எங்கள் கருத்து மோதல்களை விடவும்  நேசக்கரம் சிறப்படைய வேண்டும் என்பதே எனது எண்ணம். அப்படி ஒரு எண்ணம் இல்லை என்றால் 
நானும் இங்கு கம்பு சுத்தி இருப்பேன் ........

நீங்கள் மிக பெருத்த தவறை செய்கிறீர்கள் (கிட்டதட்ட ஒரு தனிமனித தாக்குதல் போன்று)
ஆனால் நீங்கள் அப்படி எண்ணி செய்யவில்லை என்று நம்புகிறேன் ...

அவரை எழுத வேண்டாம் என்று நான் இங்கு எங்கும் எழுதவில்லை 
நான் எழுத மாட்டேன் என்றுதான் எழுதி இருக்கிறேன் 
வீணான பழி சுமத்தி வெறும் கம்பு சுற்றுகிறீர்கள். 

அடிப்படையில் மேலே என்ன எழுதி இருக்கிறது என்பது கூட தெரியாமல் சிலர் உங்களுக்கு வந்து பச்சை கூட குத்தி இருக்கிறார்  அதில் ஒருவர் மட்டுஉறுத்தினர் இவர்கள் வாசிப்பு இந்த அளவில்தான் இருக்கிறது என்று எண்ணுகிறேன். நான் எழுத மாட்டேன் என்பதை நீங்கள் திரித்து அவரை எழுதவேண்டாம் என்று சுமத்தும் வீண் பழிக்கு மட்டுஉரத்தினரின் பச்சை ......... இவ்வாறான புரிதல் இன்மைகள் இங்கு வளர்ந்துகொண்டே வருகின்றது  என்பதால்தான் .... நான் இங்கு பொழுது போக்குமட்டும் வந்து போகிறேன்.

நீங்களும் ஒன்றையும் மனதில் வைத்துக்கொள்ளாதீர்கள் 
ஒரு பகிடி திரியில் சந்தித்து சிரித்து கொள்வோம் 

உங்களை நான் பகைத்தோ 
நான் சாந்தியக்கவை பகைத்தோ ஆகுவதுக்கு ஒன்றும் இல்லை 

இவற்றை தாண்டி நேசக்கரம் போன்ற அமைப்புக்கள் வாழவேண்டும் 
எமது உறவுகளுக்கு தேவையான உதவிகள் சென்று அடைய வேண்டும் 

நீங்கள் எத்தனை பேர் நின்று கம்பு சுத்தினாலும் இந்த எண்ணத்தில் மாற்றம் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வல்வை சகாறா said:

நீண்டகாலமாக இந்த களத்தில் நீங்கள் எழுதுகிறீர்கள். ஏதோ வாதாடுவதாக நிறையவே சொதப்புவது உங்களுக்கு அத்துப் படி மருது. நீங்கள் ஆதரிக்கும் ஒரு விடயத்தை சரியென்று நிறுவ ஏகப்பட்ட சம்பந்தம் இல்லாதவற்றை பத்தி பத்தியாக எழுதுவதொன்றும் உங்களுக்குப் புதியதல்ல. நாதமும் நீங்களும் ஒருவரா? உங்களுக்கு பழைய கதைகள் நிறையத் தெரியும்.  அவ்விடயங்களில் நிறையவே ஏற்புடைய கருத்துகள் உள்ளன. ஆனால் பல இடங்களில் விவாதங்களை நீர்த்துப் போகவைக்கும் பாணி உங்களுடையது.  இப்ப என்ன சொல்ல வருகிறீர்கள்.  உங்களுடைய சீமான் சொக்கத்தங்கம் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்கிறேன். தயவுசெய்து என்னை என் ஒழுக்கத்தை சேறடித்து விடாதீர்கள் 🤣🤣🤣🤣🤣

அதெல்லாம் பழைய மருதங்கேணி அக்கா 
இப்போ எல்லாம் விட்டு ரொம்ப நாளாச்சு 

சீமான் நல்லவர் வல்லவர் என்பதில் எனக்கே சந்தேகம் உண்டு 
காரணம் நாம் கடந்த துரோகங்கள் எம்மை எளிதாக யாரையும் நம்ப விடுகுதில்லை 

அவர் கெட்டவர் என்றால் 
ஏன் கெட்டவர் என்று எழுதுங்கள் 
வாசித்து சீமானுக்கு நாம் கொடுக்கும் ஆதரவை நிறுத்தி கொள்கிறோம் என்றுதான் எழுதுகிறேன் 

இந்த திரியில் இத்தனை கூத்து நடந்தபோதும் வந்து பார்த்துவிட்டு போனேன் 
ஒரு கருத்தையும் எழுதவில்லை எழுத தோன்றுவதும் இல்லை 

உங்கள் மீதும் சாந்தியக்க மீதும் உள்ள சிறு அக்கறையில் மட்டுமே எழுதினேன் 
உங்களிடம் கொஞ்சம் புரிதல் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

சாந்தி அக்கா,

ஒரு சிறு கேள்வி, முடிந்தால் பதில் தாருங்கோ.

எனக்கு தெரிந்து, நீங்கள், நேசக்கரம் என்னும் அமைப்பினை நடாத்திக்கொண்டுதானே இருக்கிறீர்கள்.

அதனை செய்து கொண்டே, இந்த பாழாய்ப்போன அரசியலுகிலை வந்து கருத்து எழுதுவதன் பயன் என்ன?

சீமான் அரசியலை எதிர்த்து பேச, இங்கே பல வித்துவான்கள் உள்ளார்களே. ஒரு தொண்டு அமைப்பினை திறம்பட நடாத்தும் நீங்கள் அந்த சகதிக்குள் இறங்க என்ன காரணம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு பெரிய சேவை செய்யும் பெண்மணி என்ற புரிதல் தான் எனக்கு உண்டு.

இந்த அரசியல், நேசக்கரத்தின் நோக்கத்தினை பாதிக்காதா என்று கவலை கொள்கிறேன்.

எனது கேள்வி தவறானது எனின், இந்த தம்பியை மன்னித்து விடுங்கள் அக்கா. 
 

மன்னிக்கவும் பெருமாள்.  

நேசக்கரம் தன் பணியைத் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. 

எந்தவிதமான உள்நோக்கத்தோடும் எதையும் எழுத வரவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

நீண்ட காலமாக நான் அரசியல் திரிகளில் எழுதாமல் ஒதுங்கியே இருக்கிறேன். எனினும் சீமான் மீதான பக்தியில் எங்கள் இனத்துக்கு எந்த நன்மையும் வரக்கூடாது என்ற நல் நோக்கில் பலரும் இயங்குவதைப் பார்த்து அமைதி காக்க முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

நானும் கள்ள மெளனம் காத்து பார்வையாளர் வரிசையில் இருக்கலாமா என்று பார்க்கின்றேன்😁

அது உங்கள் சித்தம் 😀🤭

13 hours ago, Sasi_varnam said:

என்ன இப்போதெல்லாம் அக்காவுக்கு ஆமை சித்திரத்தில்  🐢🐢🐢🐢🐢🐢 அதிக ஆர்வம்

ஆமைகளால் புனித பூமியை உருவாக்கலாம் என்று ஒரு யோசனை தான் வேறையென்ன தம்பி. 😀

பி. கு - இப்பதில் சசிவர்ணத்துக்கு மட்டுமே. வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை. 🤫

  • கருத்துக்கள உறவுகள்

 ஆமை யின் வெற்றி வருடங்கள் கடந்து நினைவிருக்கும்...

முயல்  லின் வெற்றி பந்தய தோடு பரந்திருக்கும்..

முடியும் என நினைத்து அலட்சியம் செய்பவர்களை விட

முடியாது என நினைக்காமல் முயற்சி செய்பவர்கள். சிறந்தவர்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.