Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

June 17, 2021
spacer.png

சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்று வந்த முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புனரமைக்கப்படும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இராணுவத்தினரின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.

இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தளபதி  மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்ஸவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது

தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, குறித்த கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக, குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது. கடந்த ஒருமாத காலமாகப் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இறுக்கமான சுகாதார நடைமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான பூஜை வழிபாடுகள் நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளரம குறிப்பிடத்தக்கது

 

https://globaltamilnews.net/2021/162432/

  • Replies 64
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

புத்தன் அண்ணா,
அவன் விகாரை கட்டினால் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு சோறு முக்கியம் அதுக்காக அவங்கடை *** கழுவவும் தயங்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாதவூரான் said:

புத்தன் அண்ணா,
அவன் விகாரை கட்டினால் உங்களுக்கு என்ன பிரச்சினை. உங்களுக்கு சோறு முக்கியம் அதுக்காக அவங்கடை *** கழுவவும் தயங்க கூடாது.

அதுதானே எனக்கு என்ன?ஆனால் ஒன்று சொல்ல தானே வேணும் "நாங்கள் மாறினாலும் அவங்கள் மாறமாட்டாங்கள்" என்பதை ஏனையோருக்கு அறிய தரவேண்டியது இருப்பது எமது கடமையல்லோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

யார் அந்த கறுப்பாடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, putthan said:

யார் அந்த கறுப்பாடு

நான் பெயர் சொல்ல மாட்ட்ன். பிறகு தெரியும் தானே. உள்ள வெடிகுண்டுகள் எல்லாம் இதுக்கை நிண்டு ஒரே டும் டும் தான்.💣 😜

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

எவன் புலி என்று உச்சரிக்கிறானோ அவன் எங்களுக்கு விரோதி....
நான் நேசனல் ஜொகிரபி  சனலை பார்ப்பதில்லை காரணம் அவர்கள் அதிகம் புலி சிங்கத்தை வேட்டை ஆடுவது போல அடிக்கடி காட்டுகிறார்கள் ....பக்கசார்பான சனல் போல தெரிகின்றது புலம் பெயர்ந்த கோஸ்டிகள் அந்த சனலுக்கு காசு கொடுக்கினம் போல இருக்கு..... 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நாங்கள் 1987/88 புலம் பெயரும் பொழுது இருந்த நிலையை  விட அதி தீவிர முயற்சியில் சிங்கள பெளத்த பெரினவாதம்  செயல் படுகிறது.....நாங்கள் மாறவேண்டும் அவர்கள் அதே மனநிலையிலிருந்து செயற்படுகிறது

48க்கு முன்பே திட்டமிடப்பட்டு படிப்படியாக முன்னேறி வரும் திட்டம் இது.

70 களிலேயே கொக்காவிலில் ஒரு குடியேற்றத்தை நிறுவ யோசித்துள்ளார்கள்.

83-2009 வேகம் மட்டுப்பட்டிருந்தது. இப்போ மட்டற்று தொடக்கிறது.

இதை செய்தியாக படித்து ஆதங்கத்தை பகிர்வதை தவிர எதையும் செய்ய கூடிய நிலையில் யாரும் இல்லை.

 

 

53 minutes ago, குமாரசாமி said:

எங்கடை நாட்டை விடுவம். பக்கத்து நாட்டிலை ஒரு தமிழ்,தமிழ் எண்டு கத்திக்கொண்டு ஒரு இனவாதி இருக்கிறார். அதை முதல்லை கவனிப்பம்.
நாங்கள் சகோதரய 😁

ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது. 

சொந்த நாட்டில் நிகழும் நில அபகரிப்பை தடுக்க எதுவும் செய்ய வக்கற்ற நிலையில் - தமிழ் நாட்டில் ஒரு குறித்த அரசியல்வாதியை எதிர்த்தும், ஆதரித்தும் நாம் ஏதோ வரலாற்று கடமை செய்வதாக நம்மை நாமே ஏமாற்றுகிறோம்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட சட்டாம்பியார் நீதிமன்றத்துக்கு இதுகளை கொண்டுபோக மாட்டார். அரபிக்கல்லூரி, துமிந்த சில்வா போன்றோருக்காகத்தான் வாதாடுவார். பயணத்தடை அமுலில், கொரோனாத்தடை உள்ள நேரத்தில் இதுகள் செய்யலாமோ, கூடலாமோ? ஏழைத்தமிழர் வயிற்று பிழைப்புக்காக வெளியில் வந்தால் மட்டும் தண்டிப்பது என்ன நீதி? என்று நீதிமன்றத்தில் கேட்கக்கூடாதோ? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

83-2009 வேகம் மட்டுப்பட்டிருந்தது. இப்போ மட்டற்று தொடக்கிறது.

இதை செய்தியாக படித்து ஆதங்கத்தை பகிர்வதை தவிர எதையும் செய்ய கூடிய நிலையில் யாரும் இல்லை.

 

 

 

 

 

உண்மை புலம்பிக் கொண்டு மண்டையை போட வேண்டியது . தான்....வேறு என்னத்தை செய்ய ?கிட்ட தட்ட 30 வருடங்கள் உயிர் தியாகம் செய்து தடுத்த சகல போராளிகளுக்கும் 🙏🙏

Just now, satan said:

எங்கட சட்டாம்பியார் நீதிமன்றத்துக்கு இதுகளை கொண்டுபோக மாட்டார். அரபிக்கல்லூரி, துமிந்த சில்வா போன்றோருக்காகத்தான் வாதாடுவார். பயணத்தடை அமுலில், கொரோனாத்தடை உள்ள நேரத்தில் இதுகள் செய்யலாமோ, கூடலாமோ? ஏழைத்தமிழர் வயிற்று பிழைப்புக்காக வெளியில் வந்தால் மட்டும் தண்டிப்பது என்ன நீதி? என்று நீதிமன்றத்தில் கேட்கக்கூடாதோ? 

மீன் விற்றால் கைது விகாரை கட்டினால் விசிலடிக்கும் சிங்கள ஜனதாவ

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் எங்கட தலையள் விடுகிற பிழை. சிங்களவனுக்காக வாதாடுவினம். தன் மக்களுக்காக, உரிமைக்காக வாயே திறக்க மாட்டினம். பிறகு தாங்கள் தான்  தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பல்லவி பாடுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, satan said:

உதெல்லாம் எங்கட தலையள் விடுகிற பிழை. சிங்களவனுக்காக வாதாடுவினம். தன் மக்களுக்காக, உரிமைக்காக வாயே திறக்க மாட்டினம். பிறகு தாங்கள் தான்  தமிழரின் ஏக பிரதிநிதிகள் என்று பல்லவி பாடுவினம்.

அதுகளும் கலைச்சு போட்டுதுகள் ....இவ்வளவு காலமும் குத்திமுறிந்து வெளிநாட்டு தூதுவர்களுடன் கதைத்தது தான் மிச்சம்... இருந்தும் அதில் சில நன்மைகள் உண்டு...இரத்தம் சிந்தியும்,உயிர் தியாகம் செய்தும் சரவதேசம் பார்க்காத நிலையில் இன்று சில காய் நகர்த்தல்கள் (சர்வதேசம் அவர்கள் நலன் சார்ந்து) நடை பெறுகிறது....

  • கருத்துக்கள உறவுகள்

தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது ஒரு இனம் ஆனாலும் சரி அடிபட்டு தோற்றுவிட்டால் அடிமாடாய் போய்விடுவோம் அடிமைப்பட்டுவிடுவோம்.

ஆயுதங்கள் கொண்டு ஒரு கொடூர எதிரியுடன் மோதியவர்கள் தோற்றுவிட்டால் ஊரைவிட்டு வெளியேறிவிடவேண்டும் அல்லது உயிரை விட்டுவிடவேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் எதிரியின் அவமானபடுத்தலை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் அதை பார்த்துக்கொண்டே  வாழ்ந்து முடிக்கவேண்டும்.

இதுதான் இன்றைய எம் இனத்தின் நிலை, இது இனிமேல் போக போக  இதைவிட மோசமாக  இருக்கபோகிறது என்பதை நினைத்தால் பல ஆயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் சிங்களவன் கைகளுக்கு இடையே எம் கழுத்து நெரிக்கப்படுவதுபோல் மூச்சு திணறும் உணர்வு.

அந்த இரக்கமற்ற தேசத்திலிருந்து எஸ்கேப் ஆன எங்களுக்கே அப்படியென்றால் அங்கே  இருக்கும் எம்மவர்களின் நிலையை  நினைத்தால், என்னவாக போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஆயுதபோராட்டம் நடந்த காலத்தில் போர்க்கால இருளாகதான் இருந்தது ஆனால் பார்வை இருந்தது, என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

தற்போது இருளுக்குள் வாழும்போது பார்வையும் சேர்த்து பறி போய்விட்டது. என்னதான் ஆக போகுதோ எம்மினத்தின் எதிர்காலமும் இருப்பும்?

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் பறிபோகும் தமிழர் நிலங்கள்: பயணத்தடையிலும் விகாரைக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

 
21-60c9fe922669d-696x522.jpeg
 48 Views
இலங்கையில்  கோவிட் 19 தீவிர பரவல்நிலை காரணமாகப் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் சர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவந்த முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புனருஸ்தானம் செய்யப்பட்டுவரும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் தொல்லியல் திணைக்கள அலுவலகத்துக்குமான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
 
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 13 .06.2021 (ஞாயிற்றுக்கிழமை ) முல்லைத்தீவு பாதுகாப்புப் படைகளின் பிரதானி மேஜர் ஜென்ரல் உபாலி ராஜபக்சவின் பங்கேற்புடன் இடம்பெற்றுள்ளது.
 
21-60c9fe9244fb8-1024x768.jpeg
 
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியுடன், திணைக்களத்தின் திட்டங்களின்படி, 13.06.2021 அன்று இந்த கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக குருந்தூர் மலை விகாரைக்கான உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த மே 18 அன்று குருந்தூர் மலையில் தொல்பொருள் துறை புராதன ஸ்தூபியின் அகழ்வாராய்ச்சியை முடித்த நிலையில், குருந்தாவசோக ரஜமாஹா விகாரைக்கான புனருஸ்தான பணிகள் பிரித்தோதும் பூசை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அத்தோடு பண்டைய சிலை இல்லமும் விரைவில் தோண்டப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.
21-60c9fe9217012.jpeg
 
இந்த நிலையிலேயே மீண்டும் மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.
 
ஒன்றுகூடுவதற்கு ஆலயங்களில் சமய நிகழ்வுகளை நடாத்துவதற்குத் தடைகள் விதிக்கப்பட்டு தமிழர் பரதேசங்களில் கைது நடவடிக்கையில் இடம்பெற்று வரும் நிலையில், அந்த நிலைமைகளுக்கு மாறாக குருந்தூர் மலையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
21-60c9fe925fa6a.jpeg
 
ஏற்கனவே நில அளவை திணைக்களத்தால் 79 ஏக்கர் நிலங்கள் குருந்தூர் மலை தொல்லியல் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு எல்லையிடப்பட்டுள்ளன.
 
குருந்தூர் மலை புராதன விகாரையின் பிரதான தளம் தற்போது 420 ஏக்கர் என வரையறுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் பாரிய சிதைவுகளைக் கொண்ட நிலப்பரப்பைக் கொண்ட பௌத்த பூமி குருந்தூர் மலை எனவும் மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் குருந்தூர் மலை விகாரைக்கான புனித பூமி தொல்பொருள் தளத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று தொல்பொருள் துறை குறிப்பிடுவதாகவும் குருந்தூர்மலை விகாரைக்கான உத்தியோக பூர்வ முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
21-60c9fe92354e9.jpeg
 
குருந்தூர் மலையைச் சூழவும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான வயல் நிலங்கள், குடியிருப்பு விவசாய காணிகள் என்பன காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது
 
 
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, valavan said:

தனி மனிதன் ஆனாலும் சரி அல்லது ஒரு இனம் ஆனாலும் சரி அடிபட்டு தோற்றுவிட்டால் அடிமாடாய் போய்விடுவோம் அடிமைப்பட்டுவிடுவோம்.

ஆயுதங்கள் கொண்டு ஒரு கொடூர எதிரியுடன் மோதியவர்கள் தோற்றுவிட்டால் ஊரைவிட்டு வெளியேறிவிடவேண்டும் அல்லது உயிரை விட்டுவிடவேண்டும் இல்லையேல் காலம் முழுவதும் எதிரியின் அவமானபடுத்தலை எதிர்த்து எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் அதை பார்த்துக்கொண்டே  வாழ்ந்து முடிக்கவேண்டும்.

இதுதான் இன்றைய எம் இனத்தின் நிலை, இது இனிமேல் போக போக  இதைவிட மோசமாக  இருக்கபோகிறது என்பதை நினைத்தால் பல ஆயிரம் மைல்கள் கடந்து வாழ்ந்தாலும் சிங்களவன் கைகளுக்கு இடையே எம் கழுத்து நெரிக்கப்படுவதுபோல் மூச்சு திணறும் உணர்வு.

அந்த இரக்கமற்ற தேசத்திலிருந்து எஸ்கேப் ஆன எங்களுக்கே அப்படியென்றால் அங்கே  இருக்கும் எம்மவர்களின் நிலையை  நினைத்தால், என்னவாக போகிறார்களோ என்று தெரியவில்லை.

ஆயுதபோராட்டம் நடந்த காலத்தில் போர்க்கால இருளாகதான் இருந்தது ஆனால் பார்வை இருந்தது, என்றாவது ஒருநாள் வெளிச்சத்தை பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

தற்போது இருளுக்குள் வாழும்போது பார்வையும் சேர்த்து பறி போய்விட்டது. என்னதான் ஆக போகுதோ எம்மினத்தின் எதிர்காலமும் இருப்பும்?

நான் ஓர் நாட்டுக்கு செல்கிறேன் அது எனக்கு புதிது எனது கலை கலாச்சாரங்கள் முற்று முழுதாக களையப்பட்டு வாழப்பழகிக்கொள்கிறேன்  அது எனது இசைவாக்கமாகிறது 

தற்போது இலங்கையும் யுத்தம் முடிந்து புதிய நாடு அவர்கள் சட்டம் அதற்குள் நாங்களும் இதை எதிர்ப்பவர்கள் மேல் நான் சொன்ன வசனத்துக்குள் புதுந்துகொண்டவர்கள்  அவர்கள் அங்கே வாழப்பழகிக்கொண்டவர்கள். நாங்கள் பழகிக்கொள்ள பழக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் ,  இதை உங்களைப்போல் புரிந்து கொண்டவர்களிடம் மட்டுமே இப்படியான பதிலகளை எதிர்பார்க்கலாம் . 😍

 

அதாவது  கு*** டி கழுவுறம்  கிழக்கில் கு... சொல்ல மாட்டார்கள் வடக்கில்  சொல்வார்கள் என நினைக்கிறன் பழக்க தோசம் எந்த நாடு சென்றாலும் மாறாது எனவும் நினைக்கிறன் .🤐

 

  • கருத்துக்கள உறவுகள்

புது நாட்டுக்குள் வாழப் போகிறவர்கள் அந்த நாட்டு பழக்க வழக்கங்களோடு தங்கள் வழக்கங்களையும் சேர்த்தே கொண்டுசெல்கிறார்கள். தங்களது வழக்கங்களை களைந்து சோரம் போய் வாழவில்லை என நினைக்கின்றேன். இங்கு நாம் பிறந்து, வளர்ந்தநாடு. எமது உரிமைகள் பலவந்தமாக பிடுங்கப்பட்டிருக்கிறது. தட்டிக்கேட்க முடியாவிட்டாலும் முண்டுகொடுக்காமலிருக்கலாம். அப்படி அடிமையாய் வாழுவதற்கு இது ஒன்றும் முடிக்குரிய நாடல்ல, ஜனநாயக நாட்டில் எமது உரிமைகளை பெற முடியாத  போது நமக்கு  தேர்தல்களும் தேவையில்லை, பிரதிநிதிகளும் தேவையில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நான் ஓர் நாட்டுக்கு செல்கிறேன் அது எனக்கு புதிது எனது கலை கலாச்சாரங்கள் முற்று முழுதாக களையப்பட்டு வாழப்பழகிக்கொள்கிறேன்  அது எனது இசைவாக்கமாகிறது 

தற்போது இலங்கையும் யுத்தம் முடிந்து புதிய நாடு அவர்கள் சட்டம் அதற்குள் நாங்களும் இதை எதிர்ப்பவர்கள் மேல் நான் சொன்ன வசனத்துக்குள் புதுந்துகொண்டவர்கள்  அவர்கள் அங்கே வாழப்பழகிக்கொண்டவர்கள். நாங்கள் பழகிக்கொள்ள பழக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் ,  இதை உங்களைப்போல் புரிந்து கொண்டவர்களிடம் மட்டுமே இப்படியான பதிலகளை எதிர்பார்க்கலாம் . 😍

 

அதாவது  கு*** டி கழுவுறம்  கிழக்கில் கு... சொல்ல மாட்டார்கள் வடக்கில்  சொல்வார்கள் என நினைக்கிறன் பழக்க தோசம் எந்த நாடு சென்றாலும் மாறாது எனவும் நினைக்கிறன் .🤐

 

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வாதவூரான் said:

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உலகு இலகுவானது. இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களுக்கு அது சவாலானது.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2021 at 14:26, வாதவூரான் said:

தனி,
முக்கியமான விசயத்தை மறந்து கதைக்கிறியள். இங்கே யாரும் உங்களுடைய கலை கலாச்சாரங்களை மறந்து வாழுங்கோ என்று வற்புறுத்தவில்லை. ஆனால் இலங்கையில் அப்படியல்ல. ஒன்றைத்திணிக்கும் போது பெரும்பாலான மக்கள் எதிர்க்கிறார்கள். உங்களைப் போன்றவர்கள் அடிமையாகிறார்கள்.நீங்கள் எல்லாத்தையும் மறந்து வாழப்போறன் எண்டால் வாழுங்கோ யாரும் உங்களைக் கேட்கமாட்டினம். ஆனால்நான் வாழுறன் ஆகவேநீயும் வாழு என்றோ,நீங்கள் வாழுவது தான் சரியானது ,மற்றவர்கள் செய்வது எல்லாம் பிழையானது என்று சொல்லமுடியாது. உங்கள் எசமானர்களுக்கு வெள்ளையடிப்பதற்காக அடிமையாக வாழக்கூட தீர்மானித்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

பல விளக்குகள் அணைந்து இருக்கிறது  ஒரு விளக்கு எரிந்து வெளிச்சம் காண்பிக்க போவதில்லை  

யுத்தம் முடிந்த பிறது  ஆர்ப்பாட்டகள் , கண்டனங்களால் , பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது  இதனால் சாதகமான சம்பவங்கள் ஏதேனும் நடந்திருக்கிறதா சொல்லுங்கள் , வடகிழக்கு பிரிக்கப்பட்டது நல்லாட்சி அரசாங்கத்துக்கு வெள்ளையடித்தார்கள் இணைக்கமுடிந்தததா அரசியல் வாதிகளாலே ஒன்றையும் அசைக்கமுடியவில்லை அடிமையாகி போனமக்களால என்ன செய்யமுடியும் சொல்லுங்கள்  நீங்கள் சொன்ன அடிமையான மக்கள்தான் இங்கே ஓரலவுக்கேனும்  கைது காணாமல் போதல் என்பவற்றில் இருந்து  நிம்மதியாக வாழ்கிறார்கள் .

அதை நீங்கள் அடிமைகள் என புரிந்துகொண்டால்  நான் ஒன்றும் செய்ய முடியாது நீங்கள் ஒன்றை மறந்து கதைக்கிறியள் நான் இலங்கையை  பற்றி கதைக்கிறன்   நான் இதுவரை எந்த எசமானிக்கும்  வெள்ளையடிப்பதில்லை என் மனதுக்கு பட்டதை எழுதுகிறேன் .

நான் அடிமையாக வாழவில்லை  அதை நீங்கள் இங்கிருந்து பார்த்தால் மட்டுமே உணர்ந்துகொள்ளமுடியும் பசியுள்ளவனுக்கே தெரியும் ஒரு பிடி சோற்றின் அருமை 
நன்றி 

On 18/6/2021 at 15:19, satan said:

எப்படியும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு இந்த உலகு இலகுவானது. இப்படித்தான் வாழவேண்டும் என்று வாழ்பவர்களுக்கு அது சவாலானது.

அப்படியானால் நித்தியானந்தா  போல தனித்தீவு வாங்கவேண்டும்  எப்படி வசதி சாட்டான் இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முயற்சிக்க வேண்டும்  அப்படி தீவு வாங்கினால்  வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை அங்கே குடியிருக்க வசதிகளை செய்யலாம் நாங்கள் இப்படித்தான் வாழ்வோம் என 😜

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

இந்த வெறுப்பு ஏன்? வெளிநாட்டு மதங்கள் தமிழ் தாயகத்தில் எல்லா இடங்களிலும் தங்கள் பிரார்த்தனை வீடுகளை கட்டி வருகின்றன. நம் மக்களும் வெட்கமின்றி வெள்ளைக் கடவுள்களிடம் மண்டியிடுகிறார்கள். தமிழ் தாயகத்தில் பூர்வீக மதம் ஏன் தங்கள் வழிபாட்டுத் தலங்களை உருவாக்க முடியாது? புத்தர் தமிழர்களுக்கு அந்நியமல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Buthan said:

இந்த வெறுப்பு ஏன்? வெளிநாட்டு மதங்கள் தமிழ் தாயகத்தில் எல்லா இடங்களிலும் தங்கள் பிரார்த்தனை வீடுகளை கட்டி வருகின்றன. நம் மக்களும் வெட்கமின்றி வெள்ளைக் கடவுள்களிடம் மண்டியிடுகிறார்கள். தமிழ் தாயகத்தில் பூர்வீக மதம் ஏன் தங்கள் வழிபாட்டுத் தலங்களை உருவாக்க முடியாது? புத்தர் தமிழர்களுக்கு அந்நியமல்ல.

இது வெறுப்பு இல்லை.  குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் புத்த மதத்தினராக இருந்தால் அவர்களே விகாரையைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் கட்டுவது யார்? எதற்காகக் கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லையா? 

சைவ மக்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் தாங்கள் வாழும் இடங்களில் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக கோவில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அமைப்பதை யாரும் எதிர்ப்பதில்லை.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில், பூர்வீக தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி முழு நாடுமே சிங்களப் புத்தர்களுக்குச் சொந்தமானது என்று தம்மதீபக் கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடும், சிங்களப் பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள், மற்றைய இனங்கள் மீது ஏவும் வகையிலும் இராணுவ, அரச இயந்திரங்களை எல்லாம் பாவித்து, அடாத்தாக குருந்தூர் மலையில் விகாரையைக் கட்டும்போது அதனை எதிர்க்கத்தான் வேண்டும்.

அரசின் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டியடிப்பதையும் ஆதரிப்பவர்களால்தான் இப்படியான அடாத்தான அபகரிப்பை சரியென்று சொல்லமுடியும். 

புத்தர் தமிழர்களுக்கு அந்நியமில்லை என்பதால்தான் கந்தரோடையில் தமிழ் பெளத்த சின்னங்க்கள் உள்ளன. ஆனால் தமிழர்கள் இப்போது பெளத்தர்கள் இல்லை.

17 hours ago, satan said:

வாழ்க்கை என்பது சவால் நிறைந்தது, அங்கு போராடினாற்தான் வாழ முடியும். போராடாமல் தலையாட்டி வாழ்ந்தால் எப்போதுமே அடிமைகளாகவே இருக்க வேண்டும்.

 

9 hours ago, கிருபன் said:

இது வெறுப்பு இல்லை.  குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழர்கள் புத்த மதத்தினராக இருந்தால் அவர்களே விகாரையைக் கட்டிக்கொள்ளலாம். ஆனால் கட்டுவது யார்? எதற்காகக் கட்டுகின்றார்கள் என்று தெரியவில்லையா? 

சைவ மக்கள், கிறிஸ்த்தவர்கள், முஸ்லிம்கள் தாங்கள் வாழும் இடங்களில் தங்கள் மத நம்பிக்கைகளுக்காக கோவில்களையும், தேவாலயங்களையும், மசூதிகளையும் அமைப்பதை யாரும் எதிர்ப்பதில்லை.

புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லாத இடங்களில், பூர்வீக தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்தி முழு நாடுமே சிங்களப் புத்தர்களுக்குச் சொந்தமானது என்று தம்மதீபக் கொள்கையை நிலைநாட்டும் நோக்கோடும், சிங்களப் பெளத்த மேலாதிக்கத்தை தமிழர்கள், மற்றைய இனங்கள் மீது ஏவும் வகையிலும் இராணுவ, அரச இயந்திரங்களை எல்லாம் பாவித்து, அடாத்தாக குருந்தூர் மலையில் விகாரையைக் கட்டும்போது அதனை எதிர்க்கத்தான் வேண்டும்.

அரசின் சிங்களக் குடியேற்றங்களையும், தமிழர் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு, தமிழர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து விரட்டியடிப்பதையும் ஆதரிப்பவர்களால்தான் இப்படியான அடாத்தான அபகரிப்பை சரியென்று சொல்லமுடியும். 

புத்தர் தமிழர்களுக்கு அந்நியமில்லை என்பதால்தான் கந்தரோடையில் தமிழ் பெளத்த சின்னங்க்கள் உள்ளன. ஆனால் தமிழர்கள் இப்போது பெளத்தர்கள் இல்லை.

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கதவுகளைத் தட்டி, ஏழை மக்களை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் தேவாலயங்களைக் கட்டினர், பின்னர் முயற்சித்து மதமாற்றம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சினை, புத்த கோவில்கள் அல்ல. மக்கள் வெளிநாட்டு மதத்திற்கு மாறுவது ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கது? ஆனால் புத்த மதத்திற்கு அல்ல. எந்தவொரு வெளிநாட்டு மதமும் நம் நிலத்தில் புத்த மதத்தை விட மோசமானது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Buthan said:

 

வெளிநாட்டு மதம் காலனித்துவவாதிகள் நம்மீது திணிக்கப்பட்டது, இன்னும் சிலர் அதைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் கதவுகளைத் தட்டி, ஏழை மக்களை வற்புறுத்துகிறார்கள். அவர்கள் தங்கள் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இல்லாத இடங்களில் தேவாலயங்களைக் கட்டினர், பின்னர் முயற்சித்து மதமாற்றம் செய்கிறார்கள். இதுதான் உண்மையான பிரச்சினை, புத்த கோவில்கள் அல்ல. மக்கள் வெளிநாட்டு மதத்திற்கு மாறுவது ஏன் ஏற்றுக்கொள்ளத்தக்கது? ஆனால் புத்த மதத்திற்கு அல்ல. எந்தவொரு வெளிநாட்டு மதமும் நம் நிலத்தில் புத்த மதத்தை விட மோசமானது.

ஆ, அப்படியா..😧

ஐயா.. 

இலங்கைத் தமிழர் சைவர்களா அல்லது இந்துக்களா என்பதற்கு ஆற அமர இருந்து தெளிவான பதிலைத் தாருங்கள். 

பின்னர் எந்தச் சமயம் ஆபத்தானது என்ற விவாதத்திற்கு வருவோம். 

 

 

Edited by Kapithan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.