Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு வழங்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் முயற்சிக்கு இந்தியா ஆதரவு வழங்கும்

 
WhatsApp-Image-2021-06-17-at-3.30.01-PM-
 6 Views

“அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும், ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு இருக்கும்.” என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று சந்திப்பு நடத்த இருந்த போதும் குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்தியத் தூதுவருடனான  சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட தமிழ் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் இதன்போது பேசப்பட்டன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற சூழலில் இந்தத் திடீர் சந்திப்பு  முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகின்றது.

 

 

https://www.ilakku.org/?p=52625

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும்  இலங்கையின் நல்லிணக்கத்துக்கு முழு ஆதரவு: இந்திய உயரஸ்தானிகர்

(எம்.மனோசித்ரா)


13 ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். 

195194112_473532920407318_76097103492404

பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர் இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்து கலந்துயையாடியுள்ளனர். இந்த சந்திப்பு இன்று முற்பகல்  இந்திய இல்லத்தில் இடம்பெற்றது. 

இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளது. 13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார்.

 

 

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான  சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் என்று இந்திய உயர்ஸ்தானிகரத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவு தெரிவித்துள்ளது. 

வடக்கு கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி,அதிகாரப் பகிர்வு குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டுள்ளதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் கட்சித்தலைவர்களான மாவை.சேனாதிராஜா, சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்  மற்றும் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய ஐந்துபேரடங்கிய குழுவினர் பங்கேற்றனர். 

இதேவேளை, இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் இந்தியாவின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் பொருளாதார,உட்கட்டமைப்பு அபிவிருத்திட்டங்கள் மீளவும் உத்வேகத்துடன் முன்னேடுக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். அண்மைய கொரோனா காலநெருக்கடிகளால் டெல்லியில் அதுபற்றி விடயங்கள் சற்று மந்த கதியில் இருந்ததாகவும் எதிர்காலத்தில் அவை மிகவும் துரித கதியில் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். 

மேலும், தொழில்நுட்பம், நிதி மற்றும் மூலதனம் ஆகிய துறைகளில் தொடர்புடைய சவால்களை எதிர்கொள்வதற்காகவும் சூரியகல மின்சக்தி துறையில் பாரிய அபிவிருத்தியினை முன்னெடுப்பதற்காகவும் இலங்கை அரசாங்கத்திற்கு 100மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியமையை சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், வடக்குகிழக்கில் முன்னெடுக்கப்பட வேண்டிய பொருளாதார விடயங்களில் அதீத கரிசனை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அத்துடன், பலாலி விமான நிலையத்தினை மீள இயக்குவதன் அவசியத்தினை நாம் வெளிப்படுத்தியபோது, அவ்விமான நிலையத்தின் விஸ்தரிப்பிற்கான மேலும் நிதி உதவிகளைவழங்கவுள்ளதாகவும் சென்னை-பலாலி விமான சேவையை மீள ஆரம்பிபதற்கான நடவடிக்கைளை எடுத்துவருவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் பயணிகள் தனிமைப்படுத்தல் விடயத்தில் காணப்படுகின்ற சில விடயங்களால் தாமதங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார். 

அதேநேரம், காங்கேசன்துறை, மன்னார் ஆகியபகுதிகளிலிருந்து தமிழகத்திற்கான படகுசேவையை மீள ஆரம்பிக்குமாறும் நாம் வலியுறுத்தினோம். அதேநேரம், காங்கசேன் துறைமுக மீள் நிர்மாணப்பகிளும் விரைவாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். அதற்கு விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார். 

இதேவேளை, தமிழகத்திலிருந்து நாடு திரும்புவதற்கு தயாராகவுள்ள மூவாயிரம் குடும்பங்கள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதோடு அவர்கள் தாயகம் திரும்புவதற்கும் அவர்களுக்கான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசிகளைப் பெற்றுக்கொடுப்பதிலும் உயர்ஸ்தானிகர் கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் என்று சுமந்திரன் மேலும் கூறினார்.

தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும்  இலங்கையின் நல்லிணக்கத்துக்கு முழு ஆதரவு: இந்திய உயரஸ்தானிகர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, உடையார் said:

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும்

70 வருசமாய் பூர்த்தி செய்யுது.இன்னும் முடியேல்லை.
தானும் படுக்காதுகள் தள்ளியும் படுக்காதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கே ஒரு  கேள்வி  வரும்

நாம  எத்தைன பேர் மாறிட்டம்

இது கள்  எப்பவும் ஒரே ஆட்கள் தானே  என்று???

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சந்தேகம்....
கோட்டாபய ராஜபக்சவுடனான   சந்திப்பு ரத்தானதால்,
இந்தியத் தூதுவரின் சந்திப்பு, திடீரென ஒழுங்கு படுத்தப் பட்டதா?
அல்லது... ஒரே நாளில், இரண்டு சந்திப்புக்களுக்கும் முன்பே  தீர்மானிக்கப் பட்டதா?

ஏதோ... அவசரமாக காய் நகர்த்துகின்றார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு ஒரு சந்தேகம்....
கோட்டாபய ராஜபக்சவுடனான   சந்திப்பு ரத்தானதால்,
இந்தியத் தூதுவரின் சந்திப்பு, திடீரென ஒழுங்கு படுத்தப் பட்டதா?
அல்லது... ஒரே நாளில், இரண்டு சந்திப்புக்களுக்கும் முன்பே  தீர்மானிக்கப் பட்டதா?

ஏதோ... அவசரமாக காய் நகர்த்துகின்றார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிகின்றது.

சில நேரம் நல்ல கொத்து கடையா பார்த்து ஒரு வெட்டு வெட்டலாம் எண்டு டவுணுக்கு போவம்…அங்க பாய் கடைய பூட்டீட்டு பள்ளிக்கு போய் இருப்பார்….சரி வந்ததுதான் வந்திட்டம் எண்டு பக்கத்தில இருக்கிற சைவ கடையில் ஒரு பிளேண்டியும் கோல்ட்லீபும் அடிப்பம்தானே🤣

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

சில நேரம் நல்ல கொத்து கடையா பார்த்து ஒரு வெட்டு வெட்டலாம் எண்டு டவுணுக்கு போவம்…அங்க பாய் கடைய பூட்டீட்டு பள்ளிக்கு போய் இருப்பார்….சரி வந்ததுதான் வந்திட்டம் எண்டு பக்கத்தில இருக்கிற சைவ கடையில் ஒரு பிளேண்டியும் கோல்ட்லீபும் அடிப்பம்தானே🤣

ஊரிலை நிண்ட... மாவையரும், 
லீவிலை நிண்ட சம்பந்தரும்...
மினக்கெட்டு கொழும்புக்கு வந்த பின்,
வெறுங்கையோடை, ஊருக்கு  திரும்பிப் போறது சரியில்லை எண்டு...
  
இந்தியன் எம்பசிக்கு.... போன்  அடித்து, அப்பாயின்மென்ட் கேட்டிருப்பார்களோ...
அல்லது, கோத்தா காய் வெட்டியதை... கேள்விப் பட்ட எம்பசி,
இவர்களை வலிய  அழைத்து... கோத்தாவுக்கு கடுப்பு ஏத்தியிருக்கிறார்கள் போலுள்ளது. :grin:

இதன் பலன்.... இன்னும் இரண்டு, மூன்று நாளில் தெரியும். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இதன் பலன்.... இன்னும் இரண்டு, மூன்று நாளில் தெரியும். :)

சே.. வயித்துகுழப்பம் வாற மாரி எதையும் கொடுத்திருக்க மாட்டார்கள்🤣.

ஆனால் இவர்களை கூப்பிட்டு கோத்த வுக்கு கடுக்காய் கொடுக்கமுடியும் என நான் நினைக்கவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

சே.. வயித்துகுழப்பம் வாற மாரி எதையும் கொடுத்திருக்க மாட்டார்கள்🤣.

ஆனால் இவர்களை கூப்பிட்டு கோத்த வுக்கு கடுக்காய் கொடுக்கமுடியும் என நான் நினைக்கவில்லை.

கோத்தாவுக்கு... கடுக்காய் கொடுக்க முடியாது. 😂
ஆனால்... கடுப்பு (பிரஷர்) ஏத்தலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளார்.

இல்லாதது ஒன்றுக்கு வர்ணம் பூசுகிறார். இதுகளும் தலையாட்டி இன்பம் கண்டு, அனல் தெறிக்க அறிக்கை விடுவினம். எல்லாருக்கும் தலையாட்டியே பழகிப்போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஆட்சியாளர்கள் சந்திக்கவே இல்லை பிறகு எப்படி டமிழ்ஸின் அபிலாசைகளை பூர்த்தி செய்வது

  • கருத்துக்கள உறவுகள்

போனவர்கள், கனவான் தன்மையாக, கால அட்டவணையை வலியுறுத்தி இருந்தால், செய்தி வெளியில் வந்திருக்காது என்று  எண்ணுகிறேன் .  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

சிங்கள ஆட்சியாளர்கள் சந்திக்கவே இல்லை பிறகு எப்படி டமிழ்ஸின் அபிலாசைகளை பூர்த்தி செய்வது

துரோகியின் காலில் விழுவதை விட எதிரியின் காலில் விழலாம் என்று யோசித்து முடிவு எடுத்து அழைப்பும் விட்டிருக்கிறார்கள். நம்ம தலைமைகள் சிங்களவனுக்கு எவ்வளவுதான்  நன்மை செய்தாலும், அவன் இவர்களை நம்பப் போவதில்லை. காரணம்  இவர்களை தெரிந்தெடுத்த மக்களுக்கே இவர்கள் விசுவாசமாய் இருக்கவில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று காட்டினம்,இவர்கள் தான் சிங்களத்தின் தேவையையும்,மற்றும் சர்வதேசத்தின் தேவையையும் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் செய்யக்கூடியவர்கள் என்று சிங்கள ஆட்சியாளர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.70 வருட அனுபவம் உள்ளவர்களை சிங்கள ஆட்சியாளர் வளர்த்து வைத்துள்ளனர்...ஏனைய தமிழ் தேசியம் பேசும்  கட்சிகளை விட இவர்கள் தான் சிறிலங்கா,இந்தியா,சர்வதேசம் போன்ற நாடுகளின் செல்ல பிள்ளைகள் 

10 hours ago, satan said:

துரோகியின் காலில் விழுவதை விட எதிரியின் காலில் விழலாம் என்று யோசித்து முடிவு எடுத்து அழைப்பும் விட்டிருக்கிறார்கள். நம்ம தலைமைகள் சிங்களவனுக்கு எவ்வளவுதான்  நன்மை செய்தாலும், அவன் இவர்களை நம்பப் போவதில்லை. காரணம்  இவர்களை தெரிந்தெடுத்த மக்களுக்கே இவர்கள் விசுவாசமாய் இருக்கவில்லையே.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.