Jump to content

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து


Recommended Posts

On 5/7/2021 at 17:36, கற்பகதரு said:

ஏனண்ணை சரணடைஞ்சவை? அழிப்பாங்கள் எண்டு விளக்கமிருக்கேலையோ? 

 

2 hours ago, பெருமாள் said:

அப்ப  என்ன செய்ய சொல்ல வருகிறீர்கள் ?

வெண்டிருக்கலாம் இல்லையோ? தலைவர் உலகத்திலேயே சிறந்த இராணுவத்தளபதி. வரலாறு காணாத இராணுவ திபுணர். இப்படியிருக்க இவங்கள் சரணடைஞ்சு இப்படி எல்லாத்தையும் தோத்துப்போக செய்திட்டாங்களே…

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

ஜேபி & சமாதான நீதவான்  இரண்டுக்கும் என்ன வித்தியாசம் கோஷான்?

இரெண்டு ஒண்டுதான் உடையார்.

ஜஸ்டிஸ் ஒவ் த பீஸ் என்பதன் சுருக்கம்தான் ஜேபி.

ஆனால் இங்கிலாந்தில் இவர்களில் மிக பெரும்பான்மையானோர் மஜிஸ்றேட் கோர்ட்களில், மஜிஸ்ரேட்டாக கடமை புரிவர். 6 மாதம் வரை சிறைக்கு அனுப்பும் சிறு குற்றங்களை விசாரிப்பர். இங்கே மஹிஸ்ரேட் ஆக சட்ட படிப்பு தேவையில்லை.

ஆனால் இலங்கையில் மஜிஸ்ரேட் ஆக சட்டப்படிப்பு அவசியம்.

இலங்கையில் 3 வகை ஜேபி உண்டு.

1. உத்தியோக பற்றற்ற மஜிஸ்ரேட் ஜேபி -இவர்கள்  சட்டத்தரணிகள். மஜிஸ்ரேர்ட்க்கு வரமுடியாத நேரத்தில் மஜிஸ்ர்ரெட்டாக இவர்கள் தற்காலிகமாக செயல்படலாம்.

2. அகில இலங்கை ஜேபி - இவர்கள் சட்டதரணிகள் அல்ல. ஒப்பம் இடல், அத்தாட்சி படுத்தல் அதிகாரம் மட்டும் உடையோர்.

3. மாவட்ட ஜேபி - 2ஐ போலவே ஆனால் ஒரு மாவட்டத்தில் மட்டும் அதிகாரம் உள்ளோர்.

10 hours ago, குமாரசாமி said:

கோதாரிவிழ என்னெண்டப்பா எல்லாத்தையும் ஞாபகம் வைச்சிருக்கிறியள்?😂
நானே மறந்து போனன்... 🤣

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இரெண்டு ஒண்டுதான் உடையார்.

ஜஸ்டிஸ் ஒவ் த பீஸ் என்பதன் சுருக்கம்தான் ஜேபி.

ஆனால் இங்கிலாந்தில் இவர்களில் மிக பெரும்பான்மையானோர் மஜிஸ்றேட் கோர்ட்களில், மஜிஸ்ரேட்டாக கடமை புரிவர். 6 மாதம் வரை சிறைக்கு அனுப்பும் சிறு குற்றங்களை விசாரிப்பர். இங்கே மஹிஸ்ரேட் ஆக சட்ட படிப்பு தேவையில்லை.

ஆனால் இலங்கையில் மஜிஸ்ரேட் ஆக சட்டப்படிப்பு அவசியம்.

இலங்கையில் 3 வகை ஜேபி உண்டு.

1. உத்தியோக பற்றற்ற மஜிஸ்ரேட் ஜேபி -இவர்கள்  சட்டத்தரணிகள். மஜிஸ்ரேர்ட்க்கு வரமுடியாத நேரத்தில் மஜிஸ்ர்ரெட்டாக இவர்கள் தற்காலிகமாக செயல்படலாம்.

2. அகில இலங்கை ஜேபி - இவர்கள் சட்டதரணிகள் அல்ல. ஒப்பம் இடல், அத்தாட்சி படுத்தல் அதிகாரம் மட்டும் உடையோர்.

3. மாவட்ட ஜேபி - 2ஐ போலவே ஆனால் ஒரு மாவட்டத்தில் மட்டும் அதிகாரம் உள்ளோர்.

🤣

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

பிரெஞ்சு சிஸ்டம் பற்றி எனக்கு போதிய அறிவில்லை அண்ணை.

இங்கே மஜிஸ்ரேட்டாக வர நாங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களாக கூப்பிடுவதில்லை.

ஆனால் யூரி சேவைக்கு அவர்களாகவே கூப்பிடுவார்கள்.

மஜிஸ்ரேட் கோர்ட்டுக்கு மேல் பட்ட குற்ற வழக்குகள் யூரி சபை முறையில் நடத்தபடும்.

வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

உங்களுக்கு வந்த கடிதம் இது போன்றதா, அல்லது வேறு ஏதுமா என என்னால் சரியாக கூற முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

பிரெஞ்சு சிஸ்டம் பற்றி எனக்கு போதிய அறிவில்லை அண்ணை.

இங்கே மஜிஸ்ரேட்டாக வர நாங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களாக கூப்பிடுவதில்லை.

ஆனால் யூரி சேவைக்கு அவர்களாகவே கூப்பிடுவார்கள்.

மஜிஸ்ரேட் கோர்ட்டுக்கு மேல் பட்ட குற்ற வழக்குகள் யூரி சபை முறையில் நடத்தபடும்.

வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

உங்களுக்கு வந்த கடிதம் இது போன்றதா, அல்லது வேறு ஏதுமா என என்னால் சரியாக கூற முடியவில்லை.

அதே தான். 

யூரிகள் சபை என்பதை எழுத மறந்து விட்டேன்.

மக்களுக்கும் இதில் பெரிய அளவிலான தெளிவில்லாது விட்டாலும் உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார்கள்.

என்னுடைய பைல் கொஞ்சம்........ ஆனது என்பதால் கூடுதலாக யோசித்தேன். 

(வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

அதனால் தான் வெளியே சொல்வது குற்றம் என்று சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

அதே தான். 

யூரிகள் சபை என்பதை எழுத மறந்து விட்டேன்.

மக்களுக்கும் இதில் பெரிய அளவிலான தெளிவில்லாது விட்டாலும் உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார்கள்.

என்னுடைய பைல் கொஞ்சம்........ ஆனது என்பதால் கூடுதலாக யோசித்தேன். 

(வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

அதனால் தான் வெளியே சொல்வது குற்றம் என்று சொன்னேன்.

ஓம், நடக்கும் விசயத்தை வெளியே சொல்லகூடாது. அடுத்த முறை வந்தால் கட்டாயம் போங்கள். இது ஒரு கடமை அத்தோடு வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஓம், நடக்கும் விசயத்தை வெளியே சொல்லகூடாது. அடுத்த முறை வந்தால் கட்டாயம் போங்கள். இது ஒரு கடமை அத்தோடு வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும்.

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

 

நாம விட்டாத்தான்  தம்பிமாரும் அவிட்டு  விடுகிறார்கள்😍

வாழ்த்துக்கள்

இதுவும் ஒரு அங்கீகாரம் தான்

 

 

Link to comment
Share on other sites

45 minutes ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

ஆம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

நான் எதுவித தனியார் சம்பத்தப்பட்ட விடயங்களை பகிரவில்லை தானே ஸுவாமி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

 வேலையில் இருந்து சம்பளத்தோடு விடுப்பு வேற கிடைக்கும். உங்கள் அதிஸ்டம் நல்லதொரு இண்டெரெஸ்டிங்கான வழக்கில் வேலை பார்த்துள்ளீர்கள். சில high profile வழக்குகளுக்கு ஹோட்டலும் புக் பண்ணி தருவார்கள்.

வழக்கு நடக்கும் போது எதையும் யாரிடமும் பகிர கூடாது.

வழக்கு முடிந்த பின் கோர்ட்டில் நடந்தவை பற்றி கதைக்கலாம், ஆனால் யூரி அறையில் நடந்தவை பற்றி அப்போதும் பேச முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி கோஷன். வேலை தளத்தில் இருந்து சம்பளம் தடையில்லாமல் வந்தது. 
ஜூரி கடமை செய்ததினால் ஒரு சிறிய (அளாவான்ஸ்) பணமும்  கிடைத்தது. 
வழக்கின் தீர்ப்புக்கு முதல்நாள் "டெலிபரேஷன்" ஒரு நாள் நடந்தது. அப்போது நீங்கள் சொன்னதை போல ஒரு நீதிமன்றத்துக்கு பக்கத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தனிஅறையும் தந்தார்கள். 
தொலைக்காட்சி, கைத்தொலைபேசி, பத்திரிகை, மடிக்கணனி எதுவும் எங்களுடன் வைத்திருக்க தடை இருந்தது. ஒருவர புகை பிடிக்க வெளியே போனாலும் 13 ஐயும் பேரும் சேர்த்தே கூட்டிச்செல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 20:45, விசுகு said:

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Sasi_varnam said:

 

பிறகென்ன யூரி அனுபவத்தை பாட்டாகவே படித்து விட்டீர்கள்👏🏾👏🏾👏🏾.

12 minutes ago, Sasi_varnam said:

என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 

👆🏼இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே🤣

13 minutes ago, Sasi_varnam said:

இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள்

இங்கே குற்றம்சாட்ட பட்டவர் யூரியை நிராகரிக்க தகுந்த காரணம் சொல்லபட வேண்டும். இனம், நிறம், வேலை இப்படி சொல்ல முடியாது. ஆனால் இவர் செய்யும் வேலை (பத்திரிகையாளர்) ஏற்புடையதல்ல போன்றவை, வழக்கின் தன்மையை பொறுத்து ஜட்ஜால் ஏற்கப்படும்.

இலங்கையில் குற்றம் சாட்டபட்டவருக்கு யூரியை தேர்வதில் அதிக சலுகைகள் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் குற்றம் சாட்டபட்ட இராணுவ வீரர்கள் தனி சிங்கள யூரிகளை மட்டுமே கோருவார்கள்.

அமைதியற்ற சூழல் நிறைந்த வட அயர்லாந்தில் சில அரசியல் சாயம் உள்ள வழக்குகளுக்கு யூரி முறையையை கைவிட்டு 3 ஜட்கள் தீர்க்கும் முறை இருந்தது. யூரிகள் கத்தோலிக்கர், புரிட்டஸ்தாந்து என்ற அடிப்படையில் தீர்பளிக்ககூடாது என்பதால்.

13 hours ago, புங்கையூரன் said:

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

இங்கே அழைப்பு வரும் பத்திரத்தில் தக்க காரணம் சொன்னால் விலக்கு அளிப்பார்கள். விலக்கு கிடைக்காவிட்டால் அழைத்த திகதியன்று போய் ஜட்ஜிடமும் சொல்லலாம். 

சட்டம், காவல்துறை சம்பந்தபட்ட வேலைகளுக்கு தானியங்கி விலக்கு. நீங்கள் விரும்பினாலும் போக முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே🤣

அது ஒரு அயர்ச்சி தரும் சோதனை ... பிறகு எல்லாம் சரியாகி விடும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

நன்றி சகோ. அடுத்து செல்லும் பலருக்கு உதவக் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்.. தனது மக்களின் அரசியல் சமூகத் தேவை என்ன என்பதை கேடிட்டு காட்டிவிட்டு தான் சென்றிருக்கிறார். 

இவர் நோர்வே அரசியலிலும் சரி.. சர்வதேச அரசியல் அரங்கிலும் சரி.. இன்று ஓர் அனாதையானது எப்படி என்று அலசலாமே...!! இவர் இத்தனை பேரை சந்திச்சும்.. ஏன் தோல்வி அடைந்தார் உள்ளூரிலும்.. சர்வதேச அரங்கிலும்.

பிரபாகரன் இவரைப் போன்ற கையாலாகதவர்களின் வாக்குறுதியை நம்பியது தான் இறுதியில் அவருக்கு தோல்வியாக அமைந்துவிட்டது. அவர் தானாக முடிவெடுத்து செயற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் சவால்களை வென்றே வந்திருக்கிறார். 

மொத்தத்தில்.. பிரபாகரன் தனது மக்களின் அரசியல் சமூக தேவை என்ன என்பதை சரியாக விளங்கிக் கொண்டிருந்தார்.. ஆனால் சொல்கைம் போன்றவர்களுக்கு அந்த புரிதல் இல்லை. அதனால்.. சொந்த நாட்டிலும் தோல்வி.. சர்வதேச அரங்கிலும் தோல்வி. இதைப் பற்றி ஏன் செய்தியாளர்கள் ஆழமான கேள்விகளை தொடுக்கவில்லை..???! 

Link to comment
Share on other sites

On 9/7/2021 at 10:10, Sasi_varnam said:


அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள்.

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?
 

On 9/7/2021 at 10:31, goshan_che said:

இலங்கையில் குற்றம் சாட்டபட்டவருக்கு யூரியை தேர்வதில் அதிக சலுகைகள் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் குற்றம் சாட்டபட்ட இராணுவ வீரர்கள் தனி சிங்கள யூரிகளை மட்டுமே கோருவார்கள்.

குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கேட்டு பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
 

23 hours ago, nedukkalapoovan said:

சொல்கைம் போன்றவர்களுக்கு அந்த புரிதல் இல்லை. அதனால்.. சொந்த நாட்டிலும் தோல்வி.. சர்வதேச அரங்கிலும் தோல்வி. இதைப் பற்றி ஏன் செய்தியாளர்கள் ஆழமான கேள்விகளை தொடுக்கவில்லை..???! 

நோர்வேஜியன் மொழியில் வரும் சொல்ஹைமுக்கு எதிரான கட்சிகளுக்கு சார்பான செய்தித்தாள்களில் இவ்வாறான கேள்விகள் வந்திருக்கும், நோர்வேயில் உள்ள தமிழர்களை கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?
 

குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கேட்டு பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
 

நோர்வேஜியன் மொழியில் வரும் எதிர்க்கட்சிகளுக்கு சார்பான செய்தித்தாள்களில் இவ்வாறான கேள்விகள் வந்திருக்கும், நோர்வேயில் உள்ள தமிழர்களை கேட்டுப்பாருங்கள்.

1. கடவுளின் பெயரால் - என்பதற்கு பதிலாக உளப்பூர்வமாக என்று எந்த புத்தகத்திலும் கைவைக்காமல் உறுதிமொழி எடுக்கலாம்.

2. கேள்விபட்டதில்லை ஆனால் சிப்பாய்கள் தனி சிங்கள யூரிகளை கோருவதுபோல் தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கோர முடியும் என்றே ஊகிக்கிறேன். ஆனால் இது என்னை பொறுத்தவரை ஒரு சரியான நடைமுறை அல்ல - இருவருக்கும். அண்மையில் நடந்த வழக்கு ஒன்று trial at bar முறையில் ஜட்ஜுகள் மட்டுமே தீர்த்தது என நினைக்கிறேன். இதே போல் முன்பு தந்தை செல்வா மீதும் trial at bar முறையில் வழக்கு நடந்ததாக அறிந்துள்ளேன்.

https://www.bbc.co.uk/news/uk-24588854
 

The oath, still sworn by witnesses and defendants as they hold a holy book, has given the English language one of its most familiar sentences.

"I swear by Almighty God [to tell] the truth, the whole truth, and nothing but the truth."

Other faiths can take the oath on other books - Muslims on the Koran, Jews on the Old Testament, for example. 

Atheists are allowed to "solemnly, sincerely and truly affirm" instead of swearing.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?

யூரி சேவைக்கு அழைக்கப்பட்டால் அழைத்தவர்களிடம் கேட்டுப்பார்த்தால் விஷயம் தெளிவாச்சு.

On 10/7/2021 at 03:31, goshan_che said:

இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே

எதையோ வைச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணுகிற மாதிரி தெரியுது, அவிட்டு விட வேண்டியது தங்களின் அனுபவத்தை நாங்களும் ரசிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2021 at 03:10, Sasi_varnam said:

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

அருமையான விளக்கத்துக்கு நன்றி..சசி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2021 at 09:04, பெருமாள் said:

பலமுறை விளங்கப்படுத்தியும் விளங்காமல் நடிப்பது ஒரு கலை .

அப்படியல்ல பெருமாள்! தங்கள் கொள்கையை மற்றவர்கள் மேல் திணிக்கும்வரை விளங்காததுபோல் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 07:12, விசுகு said:

இப்பவும் என்ன?

அவர் வந்து வந்து எண்ணையை தானே விடுகிறார்?😂

இங்கு சிலர் தம் தலைக்கு பொருத்தமில்லாத தொப்பியை போட்டுகொண்டு உலவுகிறார்கள். சிலசமயம் தமது தலையை மறந்து சில கருத்துக்களால் குஷியாகி குதிக்கிற குதியில் தொப்பி கழண்டு விழுந்துடுது. இருந்தாலும்; அவர்களை பராக்கு பார்த்ததில் விழுந்துடுத்து என்று சொல்லி  மீண்டும் அதே தொப்பியை போட்டு தங்கள் தலையை மறைக்கப்பார்க்கிறார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்குது என்று  நாமும் கடந்து போவோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.