Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தான், பேருந்து குண்டுவெடிப்பில்... 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் பேருந்து குண்டுவெடிப்பில் 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், பேருந்து குண்டுவெடிப்பில்... 9 சீனர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் சீன பொறியாளர்கள் மற்றும் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று பயங்கரவாத தாக்குதலினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 4 பொறியியலாளர்கள் உட்பட குறைந்தது 8 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

குறைந்தது 30 பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்த பேருந்தில் காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதால்உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் மேல் கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தாசு நீர் மின் நிலையம் அருகே இன்று புதன்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

https://athavannews.com/2021/1228588

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு 140 கோடியில் 9 தலைகள்  குறைவு😢

சீனா Uyghur இல் உள்ள இஸ்லாமியர்கள் மீது மனித வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மோசமான அடக்குமுறைகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது. பாலியல் வன்முறையை ஒரு பெரிய ஆயுதமாக அங்குள்ள இளம் மற்றும் நடுத்தர வயதுடைய பெண்களின் மிது பிரயோகித்துக் கொண்டு இருக்கின்றது. Uyghur மக்களின் மரபுவழி கலாச்சாரத்தை துறந்து சீன கலச்சாரத்தை பின்பற்ற வைப்பதற்காக கட்டாயப்படுத்தி Uyghur அல்லாதவர்கள் மூலம் கர்ப்பமாக்குதல், குடும்பங்களை பிரித்தல், பெரும் சிறைகளை  உருவாக்கி இளைஞர்களை சித்திரவதை செய்தல் / கொல்லுதல் போன்றவற்றைத் தொடர்கின்றார்கள். மேலை நாடுகளும், ஐ நா வும் மனிதவுரிமை மீறல் என்ற பலவீனமான பல்லவி மூலம் சீனாவை வழிக்கு கொண்டு வர இதனை ஒரு ஆயுதமாக பாவிக்கின்றனர். 

எதிர்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புகளின் கோபம் சீனா மீதும் சீனர்கள் மீதும் திரும்பப் போகின்றது என்பதற்கான ஒரு தாக்குதலாக இது அமைகின்றது என நினைக்கின்றேன்.
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சீனா Uyghur இல் உள்ள இஸ்லாமியர்கள் மீது மனித வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மோசமான அடக்குமுறைகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது. பாலியல் வன்முறையை ஒரு பெரிய ஆயுதமாக அங்குள்ள இளம் மற்றும் நடுத்தர வயதுடைய பெண்களின் மிது பிரயோகித்துக் கொண்டு இருக்கின்றது. Uyghur மக்களின் மரபுவழி கலாச்சாரத்தை துறந்து சீன கலச்சாரத்தை பின்பற்ற வைப்பதற்காக கட்டாயப்படுத்தி Uyghur அல்லாதவர்கள் மூலம் கர்ப்பமாக்குதல், குடும்பங்களை பிரித்தல், பெரும் சிறைகளை  உருவாக்கி இளைஞர்களை சித்திரவதை செய்தல் / கொல்லுதல் போன்றவற்றைத் தொடர்கின்றார்கள். மேலை நாடுகளும், ஐ நா வும் மனிதவுரிமை மீறல் என்ற பலவீனமான பல்லவி மூலம் சீனாவை வழிக்கு கொண்டு வர இதனை ஒரு ஆயுதமாக பாவிக்கின்றனர். 

எதிர்காலத்தில் இஸ்லாமிய தீவிரவாத மற்றும் அடிப்படைவாத அமைப்புகளின் கோபம் சீனா மீதும் சீனர்கள் மீதும் திரும்பப் போகின்றது என்பதற்கான ஒரு தாக்குதலாக இது அமைகின்றது என நினைக்கின்றேன்.
 

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி மிக மோசமான குற்றச்சாட்டை சீனா மீது கூறுகிறீர்கள் ? 

 

☹️

13 minutes ago, Kapithan said:

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இப்படி மிக மோசமான குற்றச்சாட்டை சீனா மீது கூறுகிறீர்கள் ? 

 

☹️

https://www.aljazeera.com/news/2021/6/10/china-accused-of-crimes-against-humanity-of-uighurs-in-xinjiang

https://www.bbc.com/news/world-asia-china-55794071

https://www.bbc.com/news/world-asia-china-22278037

https://en.wikipedia.org/wiki/Xinjiang_internment_camps#:~:text=The mass internment of Uyghurs,are held in the camps.

 

 

 

 

 

இவை தவிர யாழில் உலகச் செய்திகள் பகுதியில் நுணாவால் இணைக்கப்பட்ட சில திரிகளும் உள்ளன. 

Edited by நிழலி
மேலதிக இணைப்புகளை வழங்க

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை ஊருக்கு போய் பஸ் பயணம் போக ஏறும்போது உள்ளே சீனாக்காரர் யாராவது இருக்கிறாங்களா என்று பார்த்துபயணம் செய்யுங்கப்பா. இதுபோல இலங்கையில் நடக்க இன்னும் அதிகம் நாளில்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா சீனாவை சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தும் வெற்றிடத்துள் சீனா நுழைய முயன்றால், உகிர் பிரச்சனை எல்லாத்தையும் சேர்த்து இஸ்லாமிய தீவிரவாதிகளோடு சிண்டு முடியும் ஐடியா போலப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக இது இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அமெரிக்கா சீனாவை சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தும் வெற்றிடத்துள் சீனா நுழைய முயன்றால், உகிர் பிரச்சனை எல்லாத்தையும் சேர்த்து இஸ்லாமிய தீவிரவாதிகளோடு சிண்டு முடியும் ஐடியா போலப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக இது இருக்கலாம்.

நாம் சீரியல் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

நாம் சீரியல் பார்ப்போம்.

இவங்கள் ஆளையாள் மாறி மாறி அடிபட குண்டு வெடிப்பில் எங்கட சனமும் மாட்டாதவரை ஓகே.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

இவங்கள் ஆளையாள் மாறி மாறி அடிபட குண்டு வெடிப்பில் எங்கட சனமும் மாட்டாதவரை ஓகே.

ஆப்கானிஸ்தானில் தொடங்கினால் கிந்திகளின் தலைகள் தானே??

நம்மை வந்தடைவதற்குள் உலகம் சுருண்டு விடும்?

மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் மனிதஉரிமை பேணல் குறைவாக இருக்கலாம். ஆனால் ஆசியநாடுகளுடன் ஒப்பிடும் போது அதன் தரத்தில் பெரிய மாற்றம் இல்லை. இந்தியாவின் காசுமீரில் நடப்பதைவிட. மியன்மாரில் நடப்பதை விட  சீனாவில் நடப்பது குறைவு

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, goshan_che said:

அமெரிக்கா சீனாவை சிக்கலில் மாட்டிவிட பார்க்கிறது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தும் வெற்றிடத்துள் சீனா நுழைய முயன்றால், உகிர் பிரச்சனை எல்லாத்தையும் சேர்த்து இஸ்லாமிய தீவிரவாதிகளோடு சிண்டு முடியும் ஐடியா போலப்படுகிறது.

இதன் முதற்கட்டமாக இது இருக்கலாம்.

எனக்கு இந்தியா மீது தான் சந்தேகம்.

5 minutes ago, manimaran said:

மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் மனிதஉரிமை பேணல் குறைவாக இருக்கலாம். ஆனால் ஆசியநாடுகளுடன் ஒப்பிடும் போது அதன் தரத்தில் பெரிய மாற்றம் இல்லை. இந்தியாவின் காசுமீரில் நடப்பதைவிட. மியன்மாரில் நடப்பதை விட  சீனாவில் நடப்பது குறைவு

மணிமாறா
ஏனையா இலங்கையை பட்டியலில் இருந்து எடுத்து விட்டீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

ஆப்கானிஸ்தானில் தொடங்கினால் கிந்திகளின் தலைகள் தானே??

நம்மை வந்தடைவதற்குள் உலகம் சுருண்டு விடும்?

சொல்ல முடியாது - பிராந்தியத்தில் சீனாவை குறி வைக்க அமெரிக்கா முடிவு செய்தால் இருக்கும் இடமெல்லாம் அடி விழும். 

ஆனால் இந்த அளவுக்கு அமெரிக்கா போகும் என்று நானும் நினைக்கவில்லை.

44 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு இந்தியா மீது தான் சந்தேகம்.

சீனாவை தனியே சீண்டும் அளவுக்கு தில் இல்லை. ஆனால் இவர்களின் மறை கரம் பாலூசிஸ்தான் வரை நீண்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

https://www.aljazeera.com/news/2021/6/10/china-accused-of-crimes-against-humanity-of-uighurs-in-xinjiang

https://www.bbc.com/news/world-asia-china-55794071

https://www.bbc.com/news/world-asia-china-22278037

https://en.wikipedia.org/wiki/Xinjiang_internment_camps#:~:text=The mass internment of Uyghurs,are held in the camps.

 

 

 

 

 

இவை தவிர யாழில் உலகச் செய்திகள் பகுதியில் நுணாவால் இணைக்கப்பட்ட சில திரிகளும் உள்ளன. 

நானும் வெள்ளயள் எண்டாப் பால் என நம்பின காலமொன்ரிருந்தது. 

😀

1 hour ago, manimaran said:

மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும்போது சீனாவின் மனிதஉரிமை பேணல் குறைவாக இருக்கலாம். ஆனால் ஆசியநாடுகளுடன் ஒப்பிடும் போது அதன் தரத்தில் பெரிய மாற்றம் இல்லை. இந்தியாவின் காசுமீரில் நடப்பதைவிட. மியன்மாரில் நடப்பதை விட  சீனாவில் நடப்பது குறைவு

மேற்கு; ஒழுங்குபடுத்தப்பட்ட சனனாயக உரிமை மீறல்.

மேற்கு அல்லாதது; ஒழுங்குப்டுத்தப்படாத மனித உரிமை மீறல்.

அம்புட்டுதே..😜

  • கருத்துக்கள உறவுகள்

Uyghur மக்களின் மரபுவழி கலாச்சாரத்தை துறந்து சீன கலச்சாரத்தை பின்பற்ற வைப்பதற்காக சீனா கட்டாயப்படுத்தவில்லை.
Uyghur மக்ககள் முஸ்லிம் மதத்தை பின்பற்ற தொடங்கியவுடனேயே தங்கள் மரபுவழி கலாச்சாரத்தை தூக்கி எறிந்துவிட்டு அரபிய காலாச்சாரத்தையே பின்பற்றி வருகின்றனர்.சீனாவின் கட்டுப்பாட்டில் இல்லையானால் அங்கே இன்னொரு அவ்கானிஸ்தானும் தலிபான்களும் தோன்றியிருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: சீனா கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்: சீனா கடும் கண்டனம்!

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு, சீனா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் சீன தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் சீனாவைச் சேர்ந்த 7 பொறியாளர்கள், 2 இராணுவ வீரர்கள் உள்பட 13பேர் உயிரிழந்தனர். 39க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் சீன நாட்டினர், அமைப்புகள் மற்றும் திட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக சீனா பல பில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கியுள்ளது. ஆனால் சீன நிதியுதவியுடன் நடைபெறும் திட்டங்களை பிரிவினைவாத குழுக்கள் எதிர்த்துவருகின்றன.

சீனா உதவியுடன் நடைபெறும் திட்டங்களால் உள்ளூர்வாசிகளுக்கு குறைந்த அளவே பலன் கிடைப்பதாகவும், பெரும்பாலான வேலைகள் வெளியாட்களுக்குச் செல்வதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

https://athavannews.com/2021/1228748

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பு பொர்ட் சிற்றிக்கு போகும் பொழுது கவனமாக போக வேண்டும்... ... 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, putthan said:

கொழும்பு பொர்ட் சிற்றிக்கு போகும் பொழுது கவனமாக போக வேண்டும்

வாய்ப்பிருக்கிறது 
ஆனால் முஸ்லீம் தீவிரவாதத்தால் இல்லாமல்  ஊரிலிருந்து வரும் கழுகாரின் தகவல்களின் படி 
சிங்கள நோனாக்களை யுவான்களை காட்டி சப்பைமூக்கன்கள் மடக்கி கொண்டு ஒய்யாரமாக போவதை பார்த்து பொருமிகொண்டிருக்கும் சிங்களே வாலிபர்களால் இந்த நிலைமை ஏற்படலாம்  

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, அக்னியஷ்த்ரா said:

வாய்ப்பிருக்கிறது 
ஆனால் முஸ்லீம் தீவிரவாதத்தால் இல்லாமல்  ஊரிலிருந்து வரும் கழுகாரின் தகவல்களின் படி 
சிங்கள நோனாக்களை யுவான்களை காட்டி சப்பைமூக்கன்கள் மடக்கி கொண்டு ஒய்யாரமாக போவதை பார்த்து பொருமிகொண்டிருக்கும் சிங்களே வாலிபர்களால் இந்த நிலைமை ஏற்படலாம்  

அதை பார்க்க எங்களுக்கே இரத்தம் கொதிக்கிறது  என்றால் எங்களுடைய சகோதரஜாக்களுக்கு எப்படியிருக்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.