Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓகஸ்ட் மாதம்... முதலாம் திகதி முதல், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இறப்பு எண்ணிக்கை குறைவும்  கொரனோ வின் வழமையான அகோரத்தாண்டவமும் இல்லாமல் இரண்டு ஊசி போட்டவர்களுக்கு  சாதாரண காய்செல் போல் வந்து போவதாலும் இன்னும் பலருக்கு பொசிட்டிவ்  என்று சோதனைகள் காட்டியும் எந்த அறிகுறியும் இல்லாமல் வந்து போகுது இதெல்லாம் ஊசி போட்டவர்களுக்கே இருப்பதால் திறந்து விட்டுள்ளார்கள் ஆனால் சுகாதார அதிகாரிகள் மூன்றாவது  அலையை தவிர்க்க முடியாது என்று அலாரம் அடித்தபடி இருகிறார்கள் . போன வெள்ளி 52 ஆயிரம் பேருக்கு பரவியது என்று அதிகாரபூர்வ தளம் அறிவித்தது பின்பு ஏனோ 39 ஆயிரம் பேர் என்று குறைத்து காட்டுகிறார்கள் .

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

ஒரு மேலதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்கியவர்களை தன்னிஷ்டத்துக்கு விட்டதால் வந்த வினை இனி பாக்  டு நோர்மல் என்றால் வீட்டுக்குள் இருந்தவர்கள் ஒபிஸில் போய் இருக்க கை  கால் நடுங்க போகுது தண்ணியில்லாமல் .🤣

100% 

இணங்குகிறேன்...

E-on உடன் ஒரே புடுங்குப்பாடு....

தண்ணில கதைக்குது ஆள் எண்டு தெரியுது.... கொடுக்கிற மீட்டர் ரீடிங்கை வாங்கி, 127ஐ, 1027 எண்டு அடித்து பில்லும் வந்து, பிறகு, போன் ரெகார்ட் பார் எண்டு அடிச்சு சொல்லி, £20 goodwill எண்டு தந்திருக்கினம்.... (அதாவது, உந்த கேவலத்தை வெளிய சொல்லவேணாமாம்).

செப்டம்பர், furlough முடிய இருக்குது விளையாட்டு. அங்க பழைய முதலாளியே இல்லை.... வேலைக்கு எங்கை போறது?

Edited by Nathamuni

  • Replies 89
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இரண்டு ஊசி போட்டும் இவருக்கு கொரோனா வந்துட்டுது எண்டு என்ரை லண்டன் மச்சாள் ஒரே அலறல்😎

வைரசுக்கு மருந்து கண்டு பிடிக்கமுடியாமல் இருந்ததுக்கு ஒரே காரணம், அது உருமாறிக் கொண்டே இருப்பது.

கோவிட் 19 க்கு வீரியம் அதிகம் என்பதால், அதிவேகத்தில் மருந்தை கண்டு பிடித்தார்கள்.

அதுவும் இறைவன் தந்த வரம் எனலாம்.

கொரோனாவின் வீரியம், இந்த உருமாறுதல்களினால் குறையும். கோவிட் 19 என்பதன், மறுபக்கம் கோவிட்  1 இல் இருந்து 18 வரை ஆபத்து இல்லாமல் வந்து போய் இருக்கினம்.

இனி, சாதராண காச்சல் மாதிரி தான் வந்து போகும்.

இப்போதுள்ள பயம், அடுத்த உருமாறுதல்கள் வீரியமுள்ளதாக இருக்க கூடாது என்பதுதான்.

இந்தியாவில் வந்ததும் டெல்டா உருமாறல்.... இலங்கையில் வேறு உருமாறல் என்கிறார்கள்.... ஆனால் எதுவுமே ஆரம்பத்தில் வந்தது போன்ற கோவிட் 19 வீரியத்தில் இராது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்கள் விடியக் காலமையே சாராயம் வாங்க கடைகளில் நிற்பார்கள்

உண்மைதான் சிலரின் மன இயல்பு 100ML  அளவுகளில் சிறிய போத்தல்களில் மதுவை அடைத்து  விற்பார்கள் ஒரு முழு போத்தல்  மதுவே 20 பவுன் ஆனால் சிறிய போத்தல்களில் அப்படி விற்கப்படும் மது கொஞ்சம் கொஞ்சமாய் நாள் ஒன்றுக்கு  30 பவுனுக்கு மேல் சிலவழிப்பார்கள் கூடவே சுரண்டல் லொற்றி வேறு  சிறிய போத்தல்களில் அடைக்கப்படும் மது ஒரிஜினல் ஆக்கும் .🤣

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவை முற்றாக அழிக்க முடியாது. அது எனி சீசனல் புளூ அல்லது தடிமன் மாதிரி ஆகிவிட்டது. எனவே வக்சீனை போட்டு போட்டு பாதிப்பை குறைச்சு பாதுகாத்துக் கொண்டு மீண்டும் இயல்புக்குத் திரும்புவதை விட வேற வழியில்லை.

இருந்தாலும்... அதிக risk உள்ள ஆக்களை அதிக மருத்துவக் கவனிப்போடு தனிநபர் பாதுகாப்போட்டு நடந்து கொள்ள கேட்டுக் கொள்வது நல்லது.

இங்கிலாந்தை பொறுத்தவரை... தற்போது கொரோனா மரணங்களை விட மற்றைய நோய் மரணங்கள் அதிகம். கணக்கை வெளில காட்டாததால் ஆக்கள் கம்மென்று கொரோனாவை பார்த்து வெருண்டப்பட்டுக்கிட்டு இருக்கினம். தட் ஸ் ஆல். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

 

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

🤣

 .....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

16 hours ago, பெருமாள் said:

 

எல்லாம் இந்த வேர்க் பிரம்  ஹாம் கூட்டத்தின்  அட்டுழியம் தாங்க  முடியலை வீட்டில் இருந்து மது பாவித்து வேலை போனில் கதைக்க முடியாத அளவுக்கு நாக்கு தடித்து அலறி குளறுதுகள் .ஒரு வங்கி  அலுவல் செய்ய முன்பெல்லாம் 20 நிமிடம் காணும் இப்ப நான்கு மணிநேரத்துக்கும் அதிகம் அவ்வளவுக்கு உதாசீன தன்மை .

🤣

 .....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, putthan said:

வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....

நீங்கள்  சொல்வது போல் சில இடங்களில் நடக்குது சில இடங்களில் உபர்  தான் உணவு கொண்டு போகும் தேவ தூதன் .

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

....வீட்டிலிருந்து சமையல் வேலையும் பார்த்து  கொம்பனி  வேலையையும் பார்க்கிற பெண்களும் இருக்கினம் ....இதனால் வேலையால் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பாடு சுட சுட சில ஆண்களுக்கு கிடைக்குது ....
🤣

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

கண்டது சந்தோசம்.

இவர்களின் வேலையால மேலும் விகாரிகள் உருவாகலாம். முழு உலகத்துக்கும் ஆபத்தை உருவாக்கிறார்கள்.  அண்மையில் உலக விஞ்ஞானிகள் 100 பேர் இப்படி ஒரு கூட்டறிக்கை விட்டார்கள்.

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பெருமாள் said:

உண்மைதான் சிலரின் மன இயல்பு 100ML  அளவுகளில் சிறிய போத்தல்களில் மதுவை அடைத்து  விற்பார்கள் ஒரு முழு போத்தல்  மதுவே 20 பவுன் ஆனால் சிறிய போத்தல்களில் அப்படி விற்கப்படும் மது கொஞ்சம் கொஞ்சமாய் நாள் ஒன்றுக்கு  30 பவுனுக்கு மேல் சிலவழிப்பார்கள் கூடவே சுரண்டல் லொற்றி வேறு  சிறிய போத்தல்களில் அடைக்கப்படும் மது ஒரிஜினல் ஆக்கும் .🤣

எல்லாத்தையும் விட வீட்டில் இருந்து வேலை செய்பவர்களது மனநிலை கொடூரமான நிலைக்கு போய் கொண்டு இருக்கிறது ...சக மனுசனை மதிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒரு போன் மூலம் எல்லாத்தையும் சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் ...இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள் 

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

நான் லிப்ஸடிக் போட்டு கிட்டத்தட்ட 2 வருசமாயிட்டுது 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரதி said:

நான் லிப்ஸடிக் போட்டு கிட்டத்தட்ட 2 வருசமாயிட்டுது 

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, பெருமாள் said:

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

பயந்து சாகவில்லை.

சொல்லப்போனால் எனக்கு பெப்ரவரி 2020 வாக்கில் வந்து போய் இருக்கோ எண்டு ஒரு சந்தேகமும் உண்டு.

அதே போல் குடும்ப உறவு ஒருவருக்கு நெஞ்சு வலி வந்து, அவரை 2ம் அலை உச்சத்தில் இருந்த சமயம் A&E க்கும் கூட்டிப்போனேன். அந்த பெரிய வார்டில் நானும் அவரும் மட்டும்தான்😳. ஆகவே தேவைப்படும் போது தேவாரம் பாடினால் தைரியம் தானாய் வரும்🤣.

சியாமா செட்டி, புக்காரா, அவ்ரோ, மண்ணணை குண்டு, மோட்டார் செல், ஆட்டிலறி எல்லாம் தாண்டித்தானே வந்தம். என்ன கடைசியில் அடிச்ச பொஸ்பர்சஸ் குண்டை மட்டும்தான் காணேல்ல. ஆகவே சாவுக்கு பயம்தான் (யாருக்கு இல்லை) ஆனால் இப்படி முடங்கி கிடக்க அது மட்டுமே காரணம் அல்ல.

ஆனால் ஏன் தேவையில்லாத ரிஸ்க்?

அத்தோடு இது நான் மட்டும் சம்பந்த பட்ட விடயமும் அல்ல. இதில் ஒரு சமூக கடைப்பாடும் உண்டு. நான் உடம்பில் வலு இருப்பதால், வக்சீனும் அடித்ததால் தாக்கு பிடித்தாலும், ஒரு கருவியாக, காவியாக இருந்து இன்னொருவரின் மரணத்துக்கு காரணம் ஆகலாம்.

எனது வீரத்தால் இன்னொரு உயிருக்கு ஏன் வீணான ஆபத்தை கொடுப்பான்?

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதமை.

கொவிட் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பருவகால ப்ளூ போல வரலாம் என்பது எனக்கும் புரிகிறது.

ஆனால் நிச்சயமாக அந்த நிலையை நாம் இன்னும் எட்டவில்லை.

இப்போ லொக் டவுண் தேவையில்லை ஆனால் மாஸ்க் போடாமை, நைட் கிளப்பை திறப்பது தேவையில்லாத ஆணி.

செப்டெம்பரில் மீண்டும் இறுக்க வேண்டி வரலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இன்னொன்றையும் மறந்துவிட்டீர்கள். வேலைக்கென வாங்கும் புதிய ஆடைகள், மேக்கப், இத்யாதிகளின் செலவும் குறைந்திருக்குமே🤔🤔

 

போக்குவரத்து செலவு மிச்சம்? ஆனால் 24/7 ஹீட்டிங் ஓடுது🤣.

1 hour ago, ரதி said:

இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள்

இது உண்மை. குறிப்பாக தனியே வாழ்பவர்கள். எங்கள் வேலையிடத்தில் “மன நல மேம்பாட்டுக்காக” வேலைதளத்து வர விரும்புபவர்கள் வரலாம் என ஒரு நடைமுறையை ஏற்படுத்தி உள்ளோம்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

ஐடியா வெள்ளை மாஸ்க்கில் லிப்ஸ்டிக் போல் வரைந்து  கொண்டு திரியலாம் ஆனால் அதே கோலத்தில் வீட்டுக்குள் புகுந்துவிடவேண்டாம் அத்தர்  பயந்து துளைத்து பிறகு ஆம்புலன்ஸை கூப்பிட வேண்டி வந்திடும் .🤣

 

55 minutes ago, குமாரசாமி said:

பெருமாள்!  யூ மீன் புருசன்காரன்?!?!?!?!?  :cool:

 

51 minutes ago, பெருமாள் said:

ஏற்கனவே எங்கள்  இருவரிலும் செம காண்டா  இருக்கிறா நீங்களும் !!! கனகாலமாய் இந்தப்பக்கம் வராதவ வந்திருக்காக ........🤣 அமைதியா இருங்க சாமியார் .

 

45 minutes ago, குமாரசாமி said:

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

என்னோட கன பேருக்கு காண்டு என்று வடிவாய் தெரியுது 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நமக்கும் வாய் சும்மா இருக்காது....எதுக்கும்  தேவாரம் திருவிசைப்பாவை படிச்சுக்கொண்டு சிவனே எண்டு திரிவம்....😎

சொற்றுணை வேதியன் சோதி வானவன்😂

முடிஞ்சா வெற்றிலை பாக்கு கிடைச்சா போட்டு மெல்லுங்கோ சாமியார். இல்லாட்டியும் பரவாயில்லை சும்மா பாசாங்கு செய்யலாம் வேண்டும்போது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இப்போ லொக் டவுண் தேவையில்லை ஆனால் மாஸ்க் போடாமை, நைட் கிளப்பை திறப்பது தேவையில்லாத ஆணி.

செப்டெம்பரில் மீண்டும் இறுக்க வேண்டி வரலாம்.  

இங்கே மற்றைய மாநிலங்களில் முக்கியமாக விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு அவுஸ்ரேலியா எல்லாம் lockdown இருந்த பொழுது NSWல் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை.. விக்டோரியா, குயின்ஸ்லாந்து மாநில Premier குறை கூறி வந்தார்கள்.. இப்பொழுது NSW lockdown.. 

இந்த மாதம் தொடக்கம் ஒரு நாள் அலுவலகம் வரலாம் என்றிருந்தார்கள்.. இப்போ எல்லாம் பழையபடி WFH ஆயிற்று.. 

உண்மையில் WFH மெடல் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் என்றால் மிகவும் நன்று.. 

மின்சார கட்டனம் ஒரு பக்கம் அதிகரிக்கிறது என்பது மட்டுமல்ல மனச்சோர்வு, எடை அதிகரிப்பு என நிறைய. 

அதைவிட வீட்டு வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், சமூகத்திடமிருந்து ஒரு ஒதுக்கம் என்பனவும் அதிகரித்துக்கொண்டே போகிறது..

இந்த கொரோனா எங்களை விட்டு போகுமா தெரியவில்லை, ஏதோவொரு வடிவில் இருந்து கொண்டுதான் இருக்கும்.. 

தடுப்பு ஊசியை போடுவது தனிப்பட்டவர் விருப்பம் என்றாலும் சமூக கடமை என்றும் ஒன்றுள்ளதால் தடுப்பு ஊசி போடுவதைப்பற்றி எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. 

 

4 hours ago, goshan_che said:

போக்குவரத்து செலவு மிச்சம்? ஆனால் 24/7 ஹீட்டிங் ஓடுது🤣.

இது உண்மை. குறிப்பாக தனியே வாழ்பவர்கள். எங்கள் வேலையிடத்தில் “மன நல மேம்பாட்டுக்காக” வேலைதளத்து வர விரும்புபவர்கள் வரலாம் என ஒரு நடைமுறையை ஏற்படுத்தி உள்ளோம்.

இதற்காகத்தான் எங்களது அலுவலத்திலும் அப்படி ஏற்பாடு செய்திருந்தார்கள்.. திரும்பவும் lockdownற்குள் போனதால் அது காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

தடுப்பு ஊசியை போடுவது தனிப்பட்டவர் விருப்பம் என்றாலும் சமூக கடமை என்றும் ஒன்றுள்ளதால் தடுப்பு ஊசி போடுவதைப்பற்றி எல்லோரும் சிந்திக்கவேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. 

 

..

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரதி said:

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

பிரபாவிடம் கேட்டதுக்கு நான் பதில் சொல்வதற்கு மன்னிகவும். ஆனால் கொரோனாவை இப்படி கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே ஊசியால்தான். 50,000+ இல் நாள் தொற்று இருக்க சாவு, கடும் நோய் வீதம் இவ்வளவு குறைவாக இருப்பது ஊசியால்தான்.

ப்ளு ஜாப் என்று வருடாவருடம் நியுமோனியா காய்சலுக்கு ஊசி அடிப்பார்கள்தானே? அதேபோல் வருடம் ஒரு முறை ஊசி போட வேண்டிய நிலையும் வரலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

என்ன நீங்கள் இப்படி பயந்து சாவுறீங்கள் ...கொரோனா வந்ததில் இருந்து நான் வேலைக்கு போய்கிட்டு தான் இருக்கிறேன் ...இன்னும் ஊசி போடவுமில்லை/போடப் போவதுமில்லை ...அப்பா நாங்கள் எல்லாம் மனுஷர் இல்லையா🙂 
 

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

உங்கட அனுதாபத்தை வைத்து நான் என்ன செய்யிறதுtw_lol: ...என் மீதான அக்கறைக்கு நன்றி😉 ...எனக்கு கொரோனா வந்து போயிருக்கும் என்று தான் நினைக்கிறேன் 😂
 

2 hours ago, goshan_che said:

பிரபாவிடம் கேட்டதுக்கு நான் பதில் சொல்வதற்கு மன்னிகவும். ஆனால் கொரோனாவை இப்படி கட்டுக்குள் கொண்டு வர முடிந்ததே ஊசியால்தான். 50,000+ இல் நாள் தொற்று இருக்க சாவு, கடும் நோய் வீதம் இவ்வளவு குறைவாக இருப்பது ஊசியால்தான்.

ப்ளு ஜாப் என்று வருடாவருடம் நியுமோனியா காய்சலுக்கு ஊசி அடிப்பார்கள்தானே? அதேபோல் வருடம் ஒரு முறை ஊசி போட வேண்டிய நிலையும் வரலாம்.

 

பதிலுக்கு நன்றி 
 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

எல்லாத்தையும் விட வீட்டில் இருந்து வேலை செய்பவர்களது மனநிலை கொடூரமான நிலைக்கு போய் கொண்டு இருக்கிறது ...சக மனுசனை மதிக்காமல் வீட்டில் இருந்து கொண்டு ஒரு போன் மூலம் எல்லாத்தையும் சாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் ...இப்படி வீட்டில் அடைந்து கிடந்தால் கொரோனாவால் பாதிக்கப்படடவர்களை விட மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டு போவார்கள்

நீங்கள் ஊசி போடுவது உங்களுடைய தனிப்பட்ட விடயம், ஆனால் 👆🏽நீங்கள் இப்படியும் சொல்லிவிட்டு ஊசியும் போடப்போவதில்லை என்றால் எப்படி? 

இந்த Corona இலகுவில் போகப்போவதில்லைதான் ஆனால் அதிகளவு மக்கள் தடுப்பு ஊசி போட்டபின்புதான் lockdown நீக்கப்பட்டால்தான் வேலையின்மை பிரச்சனை குறையும், இந்த COVID lockdown காலத்தில் பாடசாலைகளும் இல்லாதமையால் சிறுவர் சிறுமியர் மீதான வன்முறை அதிகரித்துள்ளது( சில இடங்களில் மாணவர்கள் பாடசாலை நேரம் என்பது வன்முறை மிகுந்த பெற்றோரிடம் இருந்து தப்ப ஒரு தற்காலிக புகலிடம்.. ) அதுவும் ஓரளவிற்கு குறையும். இப்படி நிறைய விடயங்கள் இந்த தடுப்பு ஊசி போடுவதில் தங்கியுள்ளது. 

மீண்டும் இது உங்களது தனிப்பட்ட விடயம், ஆனாலும் சமூக கடமை என்ற ஒன்றும் எங்களுக்கு உள்ளது. உங்களது குடும்ப வைத்தியருடன் கலந்தாலோசித்து செய்யுங்கள்.. 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நான் பொதுவாக தற்கொலை செய்பவர்களின் மரணங்களுக்கு அனுதாபங்கள் தெரிவிப்பதில்லை. அதுபோல கொரோனா தடுப்பூசி போடாமல் திரிந்துவிட்டு, பிறகு தொற்று வந்து உலைச்சாலோ, முடிச்சாலோ ஒரு சொட்டு அனுதாபமும் கிடைக்காது!

 

அது மட்டுமல்ல இவர்களே  மற்றவர்களை காவு  கொடுக்கப்போகிறார்கள்??

என்னைக்கேட்டால்

இவர்களுக்கான  மருத்துவ  செலவு  மட்டுமல்ல இவர்களால்  மற்றவர்களுக்கு  தொற்று  ஏற்பட்டால்

அவர்களுக்குமான  மருத்துவ  செலவையும்  இவர்கள்  தான்  கட்டணும் என்று  சட்டம்  கொண்டு  வரணும்

இங்கேயும்  கொஞ்சபேர்

ஒன்றுக்கும்  அடங்காம

ஊசியும்  போடாமல்  திரிஞ்சவ

கொரோனா  வந்து குடும்பமாக வாட்டில  கிடந்து  வந்திருக்கினம்??

அதோட இன்னும் 2 குடும்பத்துக்கு  கொடுத்திருக்கினம்

இவர்களைக்கண்டால்

எனக்கு பத்திக்கொண்டு  வரும்

Edited by விசுகு
ஒரு வசனம் சேர்க்கப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் . எதற்கு சுத்தி வளைக்கிறீர்கள்?..உங்களிடம் ஒரு கேள்வி கொரோனா வீரியம் அடைந்து செல்லும் போது அதற்கு ஏற்ற மாதிரி 5,6 ஊசி போடுவீர்களா? ...கொரோனா போன்றவற்றை ஊசி போட்டெல்லாம் குறைக்க முடியாது அது தானாய் குறைந்தால் அல்லது இல்லாமல் போனால்  தான் உண்டு 

சுத்தி வளைக்காமல் "எனக்கு ஊசி போட பயம்" என்று சொல்லுங்கோ அக்கா.

எறும்பு கடிச்சது நோவை விட குறைவானது ஊரில்  ஊசியை பார்த்து அரை நாள் வேப்பமரத்தில் நின்ற நானே போட்டு விட்டேன்  அடம்பிடிக்காமல் போய்  போடுங்கோ .

(மேல் உள்ளதை படித்து விட்டு பல்லை நறநறக்க வேண்டாம் 🤣)

Edited by பெருமாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.