Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரிடம் பொலிஸார் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரத்தினை காண்பிக்குமாறும் சிங்களம் தெரியாமல் ஊடகத்திற்குள் ஏன் இருக்கின்றீர்கள் என்று கேட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் (03) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஊடகவியலாளர் இன்றைய தினம், (03) காரைநகர் பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

 
 

இதன்போது பொன்னாலை சந்தியில் வைத்து பொலிஸாரும் கடற்படையினரும் அவரை வழிமறித்து “தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில் எங்கே செல்கின்றீர்கள்” என சிங்களத்தில் கேட்டனர்.

அதற்கு அந்த ஊடவியலாளர் தான் ஊடகவியலாளர் எனக்கூறி தனது ஊடக அடையாளத்தினை உறுதிப்படுத்தினார்.

ஊடகவியலாளராக இருந்தாலும் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரம் தேவை என்று அவருடன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த ஊடகவியலாளர் தனக்கு முழுமையாக சிங்களம் தெரியாது என்றும் நீங்கள் பேசுவது விளங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அதற்கு அந்தப் பொலிஸார் ஊடகத்திற்குள் இருந்து கொண்டு சிங்களம் தெரியாமல் ஏன் இருக்கின்றீர்கள் எனக்கேட்டு சிறிது நேரம் விதண்டாவாதம் செய்துவிட்டு பின்னர் அவரை செய்தி சேகரிக்க செல்வதற்கு அனுமதித்தார்.

ஒரு தமிழர் பகுதிக்குள் தமிழே தெரியாத பொலிஸார் ஒருவர் தனியாக கடமையில் இருந்து தமிழ்பேசுபவர்களுடன் சரியான தொடர்பாடலைப் பேண முடியாமலும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தினை பறிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • Replies 165
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வசிப்பவர்கள் சிங்கள மொழியில் புலமை பெறுவது பல பயன்களை அவர்களுக்கு கொடுக்கும். ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியில் பரீட்சயம் காணப்படுவது அவர்கள் வேலையை இலகுபடுத்தும். சோம்பேறித்தனத்தில் நாட்டின் பிரதான மொழியை கற்று கொள்ளாவிட்டால் அதற்கு யார் பொறுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையில் வசிப்பவர்கள் சிங்கள மொழியில் புலமை பெறுவது பல பயன்களை அவர்களுக்கு கொடுக்கும். ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியில் பரீட்சயம் காணப்படுவது அவர்கள் வேலையை இலகுபடுத்தும். சோம்பேறித்தனத்தில் நாட்டின் பிரதான மொழியை கற்று கொள்ளாவிட்டால் அதற்கு யார் பொறுப்பு.

தமிழர் பகுதிகளில் தமிழ் நிர்வாகம் மற்றும் தொடர்பாடல் பிரதான மொழி.  ஒரு உள்ளூர் செய்தியாளர் உள்ளூரில் பணியாற்றுவதற்கு பிரதான சிங்கள மொழி எதற்கு அவசியம்?

ஒரு சிங்கள ஊடகவியலாளர் சிங்கள பகுதியில் செய்தி சேகரிக்கவேண்டுமென்றால் அவருக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியமா?

முற்றுமுழுதாக தமிழர் வாழும் ஒரு மாகாணத்தில் நிர்வாக கடமையாற்றும் காவல்துறை அறிந்து வைத்திருக்க வேண்டியது  சிங்களத்தையா தமிழையா?

உலகில் எங்காவது முழுக்க முழுக்க ஒரு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிசார் அந்த மொழியை தெரியாது காவல்துறை நிர்வாகம் செய்வது உண்டா? அங்கு வாழும் மக்களுக்கு தமது மொழி தெரியவில்லை என்று விதண்டாவாதம் செய்தது உண்டா?

நியாயத்தை கதைப்போம் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரே அநியாயமா கதைக்கிறீர்களே சித்தப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையில் வசிப்பவர்கள் சிங்கள மொழியில் புலமை பெறுவது பல பயன்களை அவர்களுக்கு கொடுக்கும். ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியில் பரீட்சயம் காணப்படுவது அவர்கள் வேலையை இலகுபடுத்தும். சோம்பேறித்தனத்தில் நாட்டின் பிரதான மொழியை கற்று கொள்ளாவிட்டால் அதற்கு யார் பொறுப்பு.

ஒரு மொழிக்குரிய அடிப்படை தகுதிகளே இல்லாமல் அவசர அவசரமாக காலசக்ரத்தில் பிரசவிக்கப்ட்ட குறைமாத சிசு போன்றது சிங்கள மொழி எங்களுக்கு அப்படியான மொழி தமிழர்களுக்கு தேவையில்லை என்றுதான் இங்கு வந்தோம்  சிங்களம் தேவையென்று வகுப்பு எடுக்கும் நீங்கள்  ஊரில் இருந்து இந்த கருத்தை சொன்னால் அதற்கொரு பெறுமதி இருக்கும் !

இன்னுமொன்று சிங்கள பகுதிகளுக்குள் இருக்கும் போலீசார் அப்படி கூறியிருந்தால் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் அது கூட இலங்கை அரசியல் சட்டத்தின் படி பார்த்தால் பிழை என்ற விடயமாவது தெரியுமா ?

தமிழர் பகுதியில் கடமையாற்றும் போலீசார் முதலில் தமிழ் கற்க முடியாமல் என்ன இழவுக்கு வடக்குக்கும் கிழக்கிளையும் வேலை செய்கினமாம் ?

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்கு சின்னனில் சொல்லப்பட்டது அந்த மொழியை கதைக்கிறோமோ அல்லது இல்லையோ என்பது இரண்டாவது விடயம் ...மொழி தெரிந்திருந்தால் அவர்கள் எம்மை பற்றி என்ன கதைக்கிறார்கள் என்று எம்மால் அறிந்து கொள்ள முடியும் .

 

6 minutes ago, பெருமாள் said:

ஒரு மொழிக்குரிய அடிப்படை தகுதிகளே இல்லாமல் அவசர அவசரமாக காலசக்ரத்தில் பிரசவிக்கப்ட்ட குறைமாத சிசு போன்றது சிங்கள மொழி எங்களுக்கு அப்படியான மொழி தமிழர்களுக்கு தேவையில்லை என்றுதான் இங்கு வந்தோம்  சிங்களம் தேவையென்று வகுப்பு எடுக்கும் நீங்கள்  ஊரில் இருந்து இந்த கருத்தை சொன்னால் அதற்கொரு பெறுமதி இருக்கும் !

இன்னுமொன்று சிங்கள பகுதிகளுக்குள் இருக்கும் போலீசார் அப்படி கூறியிருந்தால் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் அது கூட இலங்கை அரசியல் சட்டத்தின் படி பார்த்தால் பிழை என்ற விடயமாவது தெரியுமா ?

தமிழர் பகுதியில் கடமையாற்றும் போலீசார் முதலில் தமிழ் கற்க முடியாமல் என்ன இழவுக்கு வடக்குக்கும் கிழக்கிளையும் வேலை செய்கினமாம் ?

பெருமாள் ,உங்களுக்கு சிங்களம் தேவையில்லை என்று நீங்கள் வந்திருக்கலாம் ...ஆனால் அங்கிருப்பவர்கள் முன்னேற ,தொழிலுக்கு என்று சிங்களம் அவசியம்...அதே மாதிரி சிங்கள போலீசாருக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்   
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஆனால் அங்கிருப்பவர்கள் முன்னேற ,தொழிலுக்கு என்று சிங்களம் அவசியம்...அதே மாதிரி சிங்கள போலீசாருக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்   

 

அப்படியாக எனக்கு தெரியவில்லை.

உங்கள் உற்ற உறவினர் என்று நீங்கள் சொல்லும் கருணா, சிங்களம் தெரிந்தா இவ்வளவு, Forbes இல் பேயெர் அடிபடும் அளவிடற்கு  முன்னேற்றம்? 

ஒரு உதாரணத்தை கொண்டு அளவெடுக்க முடியாது தான். 

ஆனால், கருணாவின் முன்னேற்றம் , சிங்களம்  தேவை அல்லது இல்லை என்ற போக்கில் செல்வ்வாக்கு செலுத்துவது தவிர்க்க முடியாதது.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையில் வசிப்பவர்கள் சிங்கள மொழியில் புலமை பெறுவது பல பயன்களை அவர்களுக்கு கொடுக்கும். ஊடகவியலாளர்களுக்கு சிங்கள மொழியில் பரீட்சயம் காணப்படுவது அவர்கள் வேலையை இலகுபடுத்தும். சோம்பேறித்தனத்தில் நாட்டின் பிரதான மொழியை கற்று கொள்ளாவிட்டால் அதற்கு யார் பொறுப்பு.

நான் ஜேர்மனியில் இருக்கின்றேன். அதனால் எனக்கு ஜேர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
அந்த சிங்கள பொலிசு தமிழ்பகுதியில் வேலை செய்கிறான். அவனுக்கு தமிழ் தெரியவேணும் எண்டு நீங்கள் யோசிக்காதது உங்களுக்கு எங்கையோ இருந்து காசு வருகுது எண்டு அர்த்தம்...😎

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள தமிழர்கள் சிங்களம் படித்து மொழியை அறிந்துவிட்டால் பிறகு தங்கள் சொல் கேட்கமாட்டார்கள், உருப்பட தொடங்கி விடுவார்கள் என்று வெளிநாட்டில் உள்ள பெருந்தகைகளுக்கு பயம் போலும். தமிழ் மட்டுமே தெரியும் என்றால் சுத்துவது இலகுதானே. 😁😁

2 hours ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனியில் இருக்கின்றேன். அதனால் எனக்கு ஜேர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டும்.
அந்த சிங்கள பொலிசு தமிழ்பகுதியில் வேலை செய்கிறான். அவனுக்கு தமிழ் தெரியவேணும் எண்டு நீங்கள் யோசிக்காதது உங்களுக்கு எங்கையோ இருந்து காசு வருகுது எண்டு அர்த்தம்...😎

உங்களுக்கு வரும் அதே இடத்தில் இருந்துதான் எனக்கும் காசு வருகின்றது. 😄

5 hours ago, பெருமாள் said:

ஒரு மொழிக்குரிய அடிப்படை தகுதிகளே இல்லாமல் அவசர அவசரமாக காலசக்ரத்தில் பிரசவிக்கப்ட்ட குறைமாத சிசு போன்றது சிங்கள மொழி எங்களுக்கு அப்படியான மொழி தமிழர்களுக்கு தேவையில்லை என்றுதான் இங்கு வந்தோம்  சிங்களம் தேவையென்று வகுப்பு எடுக்கும் நீங்கள்  ஊரில் இருந்து இந்த கருத்தை சொன்னால் அதற்கொரு பெறுமதி இருக்கும் !

இன்னுமொன்று சிங்கள பகுதிகளுக்குள் இருக்கும் போலீசார் அப்படி கூறியிருந்தால் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் அது கூட இலங்கை அரசியல் சட்டத்தின் படி பார்த்தால் பிழை என்ற விடயமாவது தெரியுமா ?

தமிழர் பகுதியில் கடமையாற்றும் போலீசார் முதலில் தமிழ் கற்க முடியாமல் என்ன இழவுக்கு வடக்குக்கும் கிழக்கிளையும் வேலை செய்கினமாம் ?

 

ஆங்கிலத்தை விட சிங்களம் பழமை வாய்ந்த மொழி பாருங்கோ. 

அங்குள்ள அப்பாவிகள் உருப்படுவதற்கு நல்ல கருத்துக்களை வெளிநாட்டில் இருந்து கூறுவது ஒன்றும் தவறு இல்லை. தாயகத்தில் உள்ள மக்கள் சிங்களம் கற்ககூடாது என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என முதலில் சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, valavan said:

தமிழர் பகுதிகளில் தமிழ் நிர்வாகம் மற்றும் தொடர்பாடல் பிரதான மொழி.  ஒரு உள்ளூர் செய்தியாளர் உள்ளூரில் பணியாற்றுவதற்கு பிரதான சிங்கள மொழி எதற்கு அவசியம்?

ஒரு சிங்கள ஊடகவியலாளர் சிங்கள பகுதியில் செய்தி சேகரிக்கவேண்டுமென்றால் அவருக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டியது அவசியமா?

முற்றுமுழுதாக தமிழர் வாழும் ஒரு மாகாணத்தில் நிர்வாக கடமையாற்றும் காவல்துறை அறிந்து வைத்திருக்க வேண்டியது  சிங்களத்தையா தமிழையா?

உலகில் எங்காவது முழுக்க முழுக்க ஒரு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் கடமையாற்றும் பொலிசார் அந்த மொழியை தெரியாது காவல்துறை நிர்வாகம் செய்வது உண்டா? அங்கு வாழும் மக்களுக்கு தமது மொழி தெரியவில்லை என்று விதண்டாவாதம் செய்தது உண்டா?

நியாயத்தை கதைப்போம் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரே அநியாயமா கதைக்கிறீர்களே சித்தப்பு.

யதார்த்தம் தெரியாமல் விதண்டாவாதம் செய்கின்றீர்கள். வன்னி நிலப்பரப்பில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிருவாகத்தில் செயற்படும் நிதர்சனம் செய்தியாளர் இல்லை இவர். அந்தகாலம் எல்லாம் கடந்துபோய் 13 வருடங்கள் ஆயிற்று. 

4 hours ago, Kadancha said:

 

அப்படியாக எனக்கு தெரியவில்லை.

உங்கள் உற்ற உறவினர் என்று நீங்கள் சொல்லும் கருணா, சிங்களம் தெரிந்தா இவ்வளவு, Forbes இல் பேயெர் அடிபடும் அளவிடற்கு  முன்னேற்றம்? 

ஒரு உதாரணத்தை கொண்டு அளவெடுக்க முடியாது தான். 

ஆனால், கருணாவின் முன்னேற்றம் , சிங்களம்  தேவை அல்லது இல்லை என்ற போக்கில் செல்வ்வாக்கு செலுத்துவது தவிர்க்க முடியாதது.  

கருணா அவர்களுக்கு சிங்களம் தெரியாது என்று யார் உங்களுக்கு சொன்னது? பல ஊடங்களினூடும் அவர் சிங்களம் அறிந்தவர் என்பதை இன்னுமா காணவில்லை?

11 hours ago, பிழம்பு said:

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரிடம் பொலிஸார் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரத்தினை காண்பிக்குமாறும் சிங்களம் தெரியாமல் ஊடகத்திற்குள் ஏன் இருக்கின்றீர்கள் என்று கேட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் (03) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஊடகவியலாளர் இன்றைய தினம், (03) காரைநகர் பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.

 
 

இதன்போது பொன்னாலை சந்தியில் வைத்து பொலிஸாரும் கடற்படையினரும் அவரை வழிமறித்து “தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில் எங்கே செல்கின்றீர்கள்” என சிங்களத்தில் கேட்டனர்.

அதற்கு அந்த ஊடவியலாளர் தான் ஊடகவியலாளர் எனக்கூறி தனது ஊடக அடையாளத்தினை உறுதிப்படுத்தினார்.

ஊடகவியலாளராக இருந்தாலும் ஊரடங்கு வழி அனுமதிப்பத்திரம் தேவை என்று அவருடன் விதண்டாவாதத்தில் ஈடுபட்டார்.

அந்த ஊடகவியலாளர் தனக்கு முழுமையாக சிங்களம் தெரியாது என்றும் நீங்கள் பேசுவது விளங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

அதற்கு அந்தப் பொலிஸார் ஊடகத்திற்குள் இருந்து கொண்டு சிங்களம் தெரியாமல் ஏன் இருக்கின்றீர்கள் எனக்கேட்டு சிறிது நேரம் விதண்டாவாதம் செய்துவிட்டு பின்னர் அவரை செய்தி சேகரிக்க செல்வதற்கு அனுமதித்தார்.

ஒரு தமிழர் பகுதிக்குள் தமிழே தெரியாத பொலிஸார் ஒருவர் தனியாக கடமையில் இருந்து தமிழ்பேசுபவர்களுடன் சரியான தொடர்பாடலைப் பேண முடியாமலும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தினை பறிப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சிங்களம் தெரியாமல் ஏன் ஊடகத்திற்குள் இருக்கின்றீர்கள் என ஊடகவியலாளரிடம் பொலிஸார் விதண்டாவாதம்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

உதயன் குமுறுவதை பார்த்தால் இந்த செய்தியை கொடுத்தவர் பாதிக்கப்பட்ட அதே ஊடகவியலாளரோ என்று சந்தேகம் தோன்றுகின்றது. உங்கள் முதலாளி திருவாளர் சரவணபவனிடம் கேளுங்கள் அவருக்கு சிங்களம் தெரியுமோ தெரியாதோ என்று. கற்று தருவார். 

Edited by நியாயத்தை கதைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

நிஞாயம் தெரிந்தவர்களுடன் வாதாடலாம், தெரியாதவரோடு வாதாடுவது நமக்குத்தான் கேவலம். சிங்களத்தை திணிப்பதற்கும்,  தெரிந்துகொள்வதற்கும் வித்தியாசம் தெரியாமல் நிஞாயப் படுத்த முனைகிறார்கள்.தமிழன் தன் பிரதேசத்தில் சிங்களம் தெரியாமல் இருப்பது தவறா? ஊடகவியலாளர் சிங்களவரிடமா செய்தி சேகரிக்கச் சென்றார்?  செய்தியாளர் சிங்களவரா அல்லது செய்தி சேகரிக்கச் சென்ற பிரதேசம் சிங்களப்பிரதேசமா? எதற்கு இங்கு சிங்களம் தேவைப்படுகிறது? தமிழருக்கு சேவை செய்ய வந்தவர்  தமிழ் தெரியாமல் மற்றவரை குறை கூறுவது தவறா? ஒரு தவறான வாதத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களின் தனி வாழ்க்கையும் அப்படிபட்டதே. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் காவல் கடமையில் உள்ளது தமிழீழ காவல் துறையா? 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் காவல்துறையை அழித்து, தமிழருக்கு சேவைசெய்ய வந்த படை அவர்கள் மொழியை அறிந்திருக்க வேண்டியது கட்டாயம். அதைவிட்டு  விட்டு தன் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று வாதாடுவது அடக்குமுறை என்றுகூட தெரியாதவர்கள் நிஞாயவாதியாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் வாழ்ந்தவர்களுக்கு, வாழ்பவர்களுக்கு தெரியும் சிங்கள மொழி தெரிந்தால் வேலைகளை எவ்வளவு இலகுவாக செய்யலாம் என்று அந்த மொழி தெரியாமல் இருப்பதை விட.

அதேசமயம், சிங்கள மொழி தெரியாவிட்டால் எத்தனை பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் என்பதும் தெரியும்.

அரசாங்கம் நியாமாக செயற்படுகின்றதா, படைகள் நியாயமாக செயற்படுகின்றனவா என்பது வேறு பிரச்சனை.

ஆனால், ஒரு பொதுமகன் தமிழ் மட்டுமே தெரிந்தவர் சிங்களம் தெரியாதவர் என்றால் சிங்கள மொழியை கற்றுக்கொண்டால் இலங்கையில் வாழும் வரை அவருக்கு பல நன்மைகள் உள்ளன.

இல்லை இல்லை சிங்களம் கற்கக்கூடாது என்ன நடந்தாலும் தமிழிலேயே உரையாடுவோம் என நீங்கள் விடாப்பிடியாய் நின்றால், உங்கள் மீது பரிதாபப்படவே முடியும்.

இதற்கு மேல் முட்டையில் மயிரை புடுங்குபவர்கள் தொடர்ந்து புடுங்கலாம். 😉

வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

கருணா அவர்களுக்கு சிங்களம் தெரியாது என்று யார் உங்களுக்கு சொன்னது? பல ஊடங்களினூடும் அவர் சிங்களம் அறிந்தவர் என்பதை இன்னுமா காணவில்லை?

எனது கேள்வியை நீங்கள் புரியவில்லை. கருணாவுக்கு சிங்களம் தெரியுமா அல்லது தெரியாத என்பது எனது கேள்வி அல்ல.

சிங்களம் தெரிந்தா (அதாவது தெரிந்த படியால் தான்), இவ்வளவு முன்னேற்றம் அடைய முடிந்ததா? என்பதே எனது கேள்வி. 

மறு வளமாக, கருணா சிங்களம் அறியாமல், இப்போதுள்ள முன்னேற்றத்தில் பாதியை கூட அடைந்து இருக்க முடியாதா? 

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்புக்கு பொருத்தமில்லாத கருத்தோடு ஆடுவதால் சொல்கிறேன், சிங்களம் தெரிந்து சிங்களத்துக்கு முட்டுக்கொடுத்த கதிர்காமர், முத்தையா முரளிதரன் போன்றவர்கள் தகுதியிருந்தும் பலனை அடையவில்லையே. சிங்களம் தெரிந்த பலர் கொழும்பிலிருந்து விரட்டப்பட்டனரே. இங்கு யாரும் சிங்களம் கற்போம், கற்கமாட்டோம் என்று வாதாடவில்லை. ஒரு ஊடகவியலாளனுக்கு தேவைற்ற தடை ஏற்படுத்திய ஒரு காவற்துறையின் பொறுப்பற்ற செயலை பகிர்கிறோம்.  சிங்களம் படிப்பதைப்பற்றி வகுப்பெடுக்கிறார்கள். படிப்பவர்கள் தாராளமாக படிக்கலாம். அது அவரவர் விருப்பம். மற்றவரை படிக்கவேண்டுமென்று வற்புறுத்துவதும், அராஜகத்தை நிஞாயப்படுத்துவதும் தவிர்க்கப்படவேண்டும். ஊடகவியலாளருக்கு சிங்களம்  தெரியவில்லை, அவருக்கு அவசியமும் ஏற்படவில்லை, இந்த அதிகாரி தனது தேவைக்காக அவரை தடுப்பது ஒரு அதிகாரிக்கு அப்பாற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

எனது கேள்வியை நீங்கள் புரியவில்லை. கருணாவுக்கு சிங்களம் தெரியுமா அல்லது தெரியாத என்பது எனது கேள்வி அல்ல.

சிங்களம் தெரிந்தா (அதாவது தெரிந்த படியால் தான்), இவ்வளவு முன்னேற்றம் அடைய முடிந்ததா? என்பதே எனது கேள்வி. 

மறு வளமாக, கருணா சிங்களம் அறியாமல், இப்போதுள்ள முன்னேற்றத்தில் பாதியை கூட அடைந்து இருக்க முடியாதா? 

ஒருதடவை தூஷண பிக்கரோடு உரையாடும்போது வி. முரளிதரனுக்கு மொழிபெயர்ப்பாளர் உதவி செய்துள்ளார். சிலர் அதை நகையாடி இவன் எப்பிடி மகிந்தாவோடு கதைக்கிறான் என்று பகிர்ந்திருந்தார்கள். அவர்களின் பாசறைக்குள் இருக்கும்போது அவர்கள் கதைக்கும்போது சிலதை படித்திருக்கலாம். யாழ்ப்பாணம் வேலைக்கு வந்த அரச உத்தியோகத்தர் போலீசுக்கு சிங்களம் தேவைப்படும்போது: ஆமியும், மஹிந்தவும் இவரோடு தமிழிலேயே கதைச்சிருப்பினம்? இவரோடு என்ன அரசியல் ஆலோசனையே செய்தவை? அவர்கள் இட்டதை இவர்  தலையால செய்து முடிச்சவர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆங்கிலத்தை விட சிங்களம் பழமை வாய்ந்த மொழி பாருங்கோ. 

அங்குள்ள அப்பாவிகள் உருப்படுவதற்கு நல்ல கருத்துக்களை வெளிநாட்டில் இருந்து கூறுவது ஒன்றும் தவறு இல்லை. தாயகத்தில் உள்ள மக்கள் சிங்களம் கற்ககூடாது என்று கூறுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி உள்ளது என முதலில் சொல்லுங்கோ.

ஒரு அறிவாளியுடன் தர்க்கம் செய்யலாம் உங்களுடன் என்னால் முடியவில்லை நன்றி வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

கருணா அவர்களுக்கு சிங்களம் தெரியாது என்று யார் உங்களுக்கு சொன்னது? பல ஊடங்களினூடும் அவர் சிங்களம் அறிந்தவர் என்பதை இன்னுமா காணவில்லை?

இதை இன்னொரு கோணத்திலும் ஆராயுங்கள்.

கருணா  புலிகலில் முக்கிய பங்கு இல்லாமல், சிங்களம் தெரிந்து இருந்தால், முன்னேறி இருப்பாரா?
 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதானே என்று சொல்பவர்கள் இரு வகையினர்.

முதலாமவர்கள் , இந்தச் சிங்களம் தெரிதலின் சூட்சுமத்தினை உள்நோக்கத்தினை அறியாதவர்கள், ஏமாளிகள்.

இரண்டாமவர்கள், நடப்பது என்னவென்று தெரிந்தே, அதனை ஆதரிக்கும் விலைபோனவர்கள் அல்லது இதன்மூலம் அரசியல் ரீதியிலான லாபம் அடைபவர்கள்.

முதலில் இந்தச் சிங்கள் தெரிந்தால் நல்லதுதானே என்கிற நிலை ஏன் உருவாகியது? யாரால் உருவாக்கப்பட்டது? எதற்காக உருவாக்கினார்கள்? இதற்கும் 1950 இன் தனிச் சிங்களச் சட்டத்திற்கும் என்ன தொடர்பு? இவை எவற்றுக்கும் உங்களிடம் பதில் இல்லையென்றால் நீங்கள் முதலாமவர்கள், முட்டாள்கள்.

அப்படியில்லை, இவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவை, ஆனால் அதனை நன்கு விளங்கிக்கொண்டே ஆதரிக்கிறோம் என்பவர்கள், இரண்டாமவர்கள். விலைபோனவர்கள், சந்தர்ப்பவாதிகள்.

தமிழர் பெரும்பான்மையினராக வாழும் பிரதேசத்தில் சிங்களம் தெரியவேண்டிய தேவை என்ன? தமிழர்களைப் போரில் தோற்கடித்துவிட்டோம், எமது ஆக்கிரமிப்பிற்குள் வாழும் அடிமைகள் எமது மொழியைக் கற்பதே எமது தேவை என்று எம்மை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களத்தின் அடையாளங்களான ராணுவமும் காவல்த்துறையும் சொல்கின்றன. இதனால் நமக்குக் கிடைக்கப்போகின்ற நலன்கள் என்ன? ஏன் இது ஒரு வித ஆக்கிரமிப்பு மனப்பான்மை என்று இங்கே குத்திமுறிபவர்களுக்குத் தெரியவில்லை? எமது தாயகத்தில் எமது மொழியைக் கதைக்கும் உரிமையினை மறுக்கும் இந்த ஆக்கிரமிப்பு மனப்பாங்கு இவர்களுக்கு எப்படி ஒரு நல்ல விடயமாகத் தெரிகிறது?

இற்றைக்கு 40 - 50 வருடங்களுக்கு முன்னர் சிலாபம், புத்தளம், நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் பிறப்பால் தமிழர்களாகவிருந்து, சிங்கள இனவாதிகளினால் திட்டமிட்டு தமிழ்க் கல்வியும், தமிழ்ப் பாடசாலைகளும், தமிழ்மொழிப் பயன்பாடும் மறுக்கப்பட்ட ஒரு சமூகம் இன்று முழு சிங்களவர்களாக மாறியிருப்பது இந்த சிங்களச் செம்புதூக்கிகளுக்கோ அல்லது மகிந்தவின் கைகளை நக்கிப் பிழைக்கும் சிலரின் அடிவருடிகளுக்கோ நிச்சயமாகத் தெரியாமல் இருக்காது. ஆனால், இதனை அவர்கள் மிகவும் நாசுக்காக, சூட்சுமத்துடன் செய்கிறார்கள். 

தமிழில் சிங்களத்தைப் புகுத்தி, சிறிது சிறிதாக தமிழினத்தின் தனித்தன்மையினை குலைத்து, கலப்பினமாக அவர்களை மாற்றி, இறுதியில் தமிழர் எனும் இனத்தினை முற்றாக தனக்குள் உள்வாங்கும் கைங்கரியத்தைச் சிங்களம் செய்துவருவது இவர்களுக்குத் தெரியும்.. ஆனால், அப்படி நடக்கவில்லை என்பதைக் காட்டவே இவர்கள் இறக்கப்பட்டிருக்கிறார்கள். 

1990 களிலிருந்து  இலிருந்து தமிழ்ப் பெண்களை தமிழர் தாயகத்தில் ஆக்கிரமித்து நிற்கும் ராணுவமும் காவல்த்துறையினரும் மணப்பது பொதுவாக நடந்துவருகிறது. இப்போது தமிழர் தாயகத்தில் இயங்கும் பல்கலைக் கழகங்களில் வேண்டுமென்றே சிங்களத்தால் அனுமதிக்கப்படும் சிங்கள மாணவர்களை காதலித்து மணக்கும் ஒரு போக்கு இளைய தமிழ்ப் பெண்களிடையே பரவி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் அவ்வாறான சிங்கள மாணவனை காதலித்து மணந்த தமிழிச்சி ஒருவரின் பேட்டியினை கேட்டபோது, சிங்களம் இவர்களை எவ்வாறு மூளைச்சலவைசெய்து தமிழினத்திற்கெதிராகப் பாவிக்கிறது என்பது தெளிவாகியது.

இதில் வேடிக்கை என்னவென்றால், "சிங்களம் தெரிந்தால்த்தான் அவன் என்ன பேசுகிறான் என்பது தெரியும்" என்று வேறு பசப்பல்கள். தமிழரின் மொழி தெரிந்தபடியினால்த்தான், தமிழன்பற்றிச் சிங்களவனுக்குக் காட்டிக்கொடுத்து அழித்தீர்க்கள். இப்போது சிங்களம் கற்று யாருடன் சேர்ந்து யாரை அழிக்கப்போகிறீர்கள்? உங்களின் காட்டிக்கொடுப்புக்களுக்கும், துரோகங்களுக்கும் ஒரு அளவேயில்லையா?

ஜேர்மனியிலும் , ஜப்பானிலும் இருக்கும் தமிழர்கள் தமிழா பேசுகிறார்கள் என்று கேட்கும் மூடர்களுக்குப் புரியவில்லை அது எமது நாடு இல்லையென்பதும், நாம் அங்கே தஞ்சம் பிழைக்கப் போனவர்கள் என்பதும், அப்படியிருந்தபோதும்கூட, எமது மொழியினைக் கலாசாரத்தை நாம் பின்பற்ற அவன் ஒருபோதும் தடைவிதிக்கவில்லை. ஆனால், யாழ்ழ்ப்பாணமோ மட்டக்களப்போ இருப்பது ஜேர்மனியிலோ அல்லது ஜப்பானிலோ இல்லை. அது எமது தாயகத்தின் இரு முக்கிய நகரங்கள், அங்கு வசிப்பதற்கு நாம் தமிழைத் தவிர வேறு மொழியொன்றினைக் கற்கவேண்டிய தேவையில்லை. 

இதற்குள் புலம்பெயர் தமிழர்கள் உசுப்பேற்றுகிரார்களாம்.ஏன், நீங்கள் தொப்பியை மாற்றி மாற்றி அணிந்துகொண்டு சிங்களத்துக்குக் காவடி தூக்கி தமிழரை அழிக்கலாம், ஆனால் நாங்கள் எமது சொந்தங்களின் நலன்பற்றி அக்கறைப்படுவது உங்களுக்குக் கஷ்ட்டமாக இருக்கிறது? ஆக, தாயகத்திலுள்ளவர்களுக்குச் சார்பாக வெளியில் இருந்து எவரும் பேசக் கூடாது? எமது மொழியினைப் பேசிப்பேசியே எம்மைக் கருவறுத்த ஒரு சமூகம் புலம்பெயர் தமிழர்மேல் பழியினைப் போட்டுவிட்டு தாங்கள் சிங்களத்துடன் சேர்ந்து தமிழ் பேசியே எம்மை அழித்த கைஙரியத்தினை இங்கே மறைத்துக்கொண்டு உலாவருகிறார்கள் !

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரஞ்சித் said:

அறியாதவர்கள், ஏமாளிகள்.

விலைபோனவர்கள்

முட்டாள்கள்.

விலைபோனவர்கள், சந்தர்ப்பவாதிகள்.


மூடர்களுக்குப் புரியவில்லை

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கற்பகதரு said:

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

கசக்குதில்ல, உண்மை எப்போதும் அப்படித்தானிருக்கும்.  பிரட்டிப்போட்டு தப்பிச்சுடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கற்பகதரு said:

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

எனக்கு மனநலம் பார்ப்பதைவிடுத்து, உங்களின் நேரத்திற்கு நேரம் சுருதி மாற்றிப் பேசும் நோய்க்கு வைத்தியம் பாருங்கள், அறளைபெயர்ந்துவிட்டால், ஒரு ஓரமாக போய் இருங்கள்.உங்களின் வண்டவாளங்களை நாம் பார்த்துத்தானே வருகிறோம்? எதற்கு வேஷம் போடுகிறீர்கள்? 

30 minutes ago, கற்பகதரு said:

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

2009 இல் தமிழர்கள் தமிழ் மொழியினை மறந்து, பெளத்தத்தினைத் தழுவுவதைத்தவிர அவர்களுக்கு வேறு கதியில்லை என்று இதே தளத்தில் எழுதுதியவர் அல்லவா நீங்கள்? ஆகவே நான் எழுதுவது கசக்கத்தான் செய்யும். தமிழர்கள் சிங்கள இனத்தில் உள்வாங்கப்படுவதே அவர்களுக்கு உள்ள ஒரே தெரிவு என்று எழுதியவர்தானே நீங்கள்?!

  • கருத்துக்கள உறவுகள்

அநியாயத்தையும் ஆணித்தரமாகக் கதைக்கக்கூடிய சுதந்திரம் கொண்ட ஒரு களம் யாழ்களம்.🙌  

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கற்பகதரு said:

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

2009 வரை புலிகளைக் கடுமையாக ஆதரித்துக்கொண்டு இருந்துவிட்டு, 2009 போரின்  பின்னர் நிதானம் இழந்து, கழிவிரக்கத்தால் அரண்டுபோய், சிங்களவராக மாறுவோம் என்று உபதேசம் செய்து, இன்று மற்றையவர்களை எள்ளி நகையாடும் நீங்கள் இதுபற்றிப் பேசக் கூடாது.

35 minutes ago, கற்பகதரு said:

பரிதாபமாக இருக்கிறது, குடும்பம் பிள்ளை குட்டிகள் இருக்கிறதா? முத்தமுதல் நல்ல மனநல மருத்துவரை பார்த்தால் குடும்பம் பிளைக்கும்.

ஓ, அப்போது நீங்கள் அந்த அறிவற்ற, ஏமாளிகள் கூட்டம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்? அதுதான் சுட்டுவிட்டது !!! இப்போது புரிகிறது,

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரஞ்சித் said:

எனக்கு மனநலம் பார்ப்பதைவிடுத்து, உங்களின் நேரத்திற்கு நேரம் சுருதி மாற்றிப் பேசும் நோய்க்கு வைத்தியம் பாருங்கள், அறளைபெயர்ந்துவிட்டால், ஒரு ஓரமாக போய் இருங்கள்.உங்களின் வண்டவாளங்களை நாம் பார்த்துத்தானே வருகிறோம்? எதற்கு வேஷம் போடுகிறீர்கள்? 

2009 இல் தமிழர்கள் தமிழ் மொழியினை மறந்து, பெளத்தத்தினைத் தழுவுவதைத்தவிர அவர்களுக்கு வேறு கதியில்லை என்று இதே தளத்தில் எழுதுதியவர் அல்லவா நீங்கள்? ஆகவே நான் எழுதுவது கசக்கத்தான் செய்யும். தமிழர்கள் சிங்கள இனத்தில் உள்வாங்கப்படுவதே அவர்களுக்கு உள்ள ஒரே தெரிவு என்று எழுதியவர்தானே நீங்கள்?!

ஒருதடவை நான் அதை சுட்டிக்காட்டியபோது, யானறியேன் என்று தப்பித்துக்கொண்டதாக நினைத்தார். அப்பவே இவர் ஒரு சந்தர்ப்பவாதி எனபுரிந்து கொண்டேன். 

சொல்லவே வேண்டாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.