Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி உரம் நாட்டுக்கு..!

உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி

இரசாயன உரம், பீடைக்கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரசாயன உரம், பீடைக்கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1251958

  • கருத்துக்கள உறவுகள்

“இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை முழுமையாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்”

சொன்னது என்னாச்சு????

இந்த மாதன முத்தாவினால் விவசாயிகள் நட்டமடைந்தது தான் மிச்சம்.

@ரதி இப்பவும் நாட்டை நல்லபடியாக ஆளுகிறார் என்ற வெள்ளையடிப்பா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, MEERA said:

“இரசாயன உரங்களைப் பயன்படுத்துவதை முழுமையாக நீக்கிய உலகின் முதல் நாடாக இலங்கையை மாற்றும் சவாலை தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்”

சொன்னது என்னாச்சு????

இந்த மாதன முத்தாவினால் விவசாயிகள் நட்டமடைந்தது தான் மிச்சம்.

@ரதி இப்பவும் நாட்டை நல்லபடியாக ஆளுகிறார் என்ற வெள்ளையடிப்பா?

இப்படியான விடயங்களில் ஜனாதிபதி தனியே முடிவு  மாட்டார்...துறை சார் நிபுணர்களின் முடிவின் படி தான் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது ...பொருளாதார நிபுணர்கள் நீண்ட கால நோக்கில் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை எடுத்து சொன்னதால் தடை நீக்கப்பட்டது .
நீங்கள் சொல்லுங்கள் இரசாயன உரம் பாவிப்பது நல்லதா அல்லது கூடாதா?

25 minutes ago, ரதி said:

இப்படியான விடயங்களில் ஜனாதிபதி தனியே முடிவு  மாட்டார்...துறை சார் நிபுணர்களின் முடிவின் படி தான் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது ...பொருளாதார நிபுணர்கள் நீண்ட கால நோக்கில் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை எடுத்து சொன்னதால் தடை நீக்கப்பட்டது .
நீங்கள் சொல்லுங்கள் இரசாயன உரம் பாவிப்பது நல்லதா அல்லது கூடாதா?

கோத்தா எந்த விடயத்திலும் துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பதே இல்லை என்பது அவர் மீது ஏனைய எம் பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளால் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு. இது கொவிட் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து இரசாயன உரத்தை பயன்படுத்துவதை ஒரே அடியாக நிறுத்த சொன்னது வரைக்கும் தொடர்கின்றது. தன்னிச்சையாக, அனேகமான நேரங்களில் அவது பிரதர் பிரதமர் மகிந்தவுடன் கூட கலந்தாலோசிப்பது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இப்படியான விடயங்களில் ஜனாதிபதி தனியே முடிவு  மாட்டார்...துறை சார் நிபுணர்களின் முடிவின் படி தான் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது ...பொருளாதார நிபுணர்கள் நீண்ட கால நோக்கில் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை எடுத்து சொன்னதால் தடை நீக்கப்பட்டது .
நீங்கள் சொல்லுங்கள் இரசாயன உரம் பாவிப்பது நல்லதா அல்லது கூடாதா?

அப்போ நாட்டை ஆள்வது துறைசார் நிபுணர்களா…? துறைசார் நிபுணர்களின் முடிவை ஏன் தனது சொந்த முடிவு போல் மக்களிடம் தெரிவித்தார் “நான் “ என்ற ஆணவத்துடன். 

துறை சார் நிபுணர்கள்,  பொருளாதார நிபுணர்கள் என்று மற்றவர்களை கைகாட்ட முடியாது. பொருளாதார நிபுணர்களின் முடிவை ஏன் தடை செய்ய முன்னர் கோரவில்லை.

இரசாயண உரம் பாவிப்பது நல்லம் கூடாது என்னபதல்ல இங்கு விடயம். இவ்வளவு நாளும் இருந்த தடையினால் பாதிப்பு விவசாயிகளுக்கே உங்களுக்கும் இல்லை கோத்தாவிற்கும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் துறைசார் நிபுணர்களின் முடிவால் உரம், பீடை கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டதென்றால் இப்போ அதே துறைசார் நிபுணர்களால் தடை எடுக்கப்பட்டதா?  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, nunavilan said:

முதலில் துறைசார் நிபுணர்களின் முடிவால் உரம், பீடை கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டதென்றால் இப்போ அதே துறைசார் நிபுணர்களால் தடை எடுக்கப்பட்டதா?  

இல்லை நுணா, இப்போ பொருளாதார நிபுணர்கள்….

இது @ரதி அக்காக்கு மட்டும் தெரிந்த ரகசியம்

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி தன்னிறைவு அடைவது என்பது ஸ்ரீமாவோ காலத்திலேயே தோல்வி அடைந்த ஒன்றுதான், இயற்கை விவசாய முயற்சி வடிவில் இது இரண்டாவது தடவை.

பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையாத நாடுகள் இப்படியெல்லாம் முயற்சித்து பார்த்தால் மக்களின் வெறுப்பையும், ஆட்சிக்கு ஆபத்தையும்தான் உருவாக்கும் என்பதை மறுபடியும் உணர்ந்து கொண்டதால் கப்புனு சட்ட திட்டத்தை தளர்த்திவிட்டார்கள்,

அரசுக்கெதிரான போராட்ட சக்திகள் வலுப்பெறுவதை பார்த்து ஆடிபோனார்கள்.

இல்லாவிட்டால் கோத்தபாயவாவது யாருக்காச்சும் அடங்கி போறதாவது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

கோத்தா எந்த விடயத்திலும் துறைசார் நிபுணர்களுடன் கலந்தாலோசிப்பதே இல்லை என்பது அவர் மீது ஏனைய எம் பிக்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளால் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு. இது கொவிட் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து இரசாயன உரத்தை பயன்படுத்துவதை ஒரே அடியாக நிறுத்த சொன்னது வரைக்கும் தொடர்கின்றது. தன்னிச்சையாக, அனேகமான நேரங்களில் அவது பிரதர் பிரதமர் மகிந்தவுடன் கூட கலந்தாலோசிப்பது இல்லை.

யாரோ உங்களுக்கு பொய்யான தகவல் கொடுத்து இருக்கினம் ...அவர் தனது அண்ணரிடம் கேக்காமல் காலையில் தேனீரே குடிப்பதில்லை 🤣

19 hours ago, MEERA said:

அப்போ நாட்டை ஆள்வது துறைசார் நிபுணர்களா…? துறைசார் நிபுணர்களின் முடிவை ஏன் தனது சொந்த முடிவு போல் மக்களிடம் தெரிவித்தார் “நான் “ என்ற ஆணவத்துடன். 

துறை சார் நிபுணர்கள்,  பொருளாதார நிபுணர்கள் என்று மற்றவர்களை கைகாட்ட முடியாது. பொருளாதார நிபுணர்களின் முடிவை ஏன் தடை செய்ய முன்னர் கோரவில்லை.

இரசாயண உரம் பாவிப்பது நல்லம் கூடாது என்னபதல்ல இங்கு விடயம். இவ்வளவு நாளும் இருந்த தடையினால் பாதிப்பு விவசாயிகளுக்கே உங்களுக்கும் இல்லை கோத்தாவிற்கும் இல்லை.

அவர் ஜனாதிபதி இப்படியான முடிவுகளை அவர் தான் அறிவிக்க வேண்டும் ...ஒவ்வொரு விடயத்தையும் அந்தந்த துறை சார் நிபுணர்கள் தான் அறிவிக்க வேண்டும் என்றால் பிறகு ஏன் நாட்டுக்கு ஜனாதிபதிtw_lol: 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

இப்படியான விடயங்களில் ஜனாதிபதி தனியே முடிவு  மாட்டார்...துறை சார் நிபுணர்களின் முடிவின் படி தான் இரசாயன உரங்களுக்கு தடை விதிக்கப்பட்டது ...பொருளாதார நிபுணர்கள் நீண்ட கால நோக்கில் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை எடுத்து சொன்னதால் தடை நீக்கப்பட்டது .
நீங்கள் சொல்லுங்கள் இரசாயன உரம் பாவிப்பது நல்லதா அல்லது கூடாதா?

உரம் கூடாதுதான் ஆனால் அப்புவுக்கு ஆட்சி மாறும் என்ற பயம் ஒரு பக்கம் மற்றது விவசாயிகளின் கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளக ஆட்களை கூப்பிட்டு அவசரக்கூட்டம் வைத்து கருத்து கேட்ட பின்னரே அனுமதி அளிக்கப்பட்டதாக பட்சி சொல்லுது.

சேதன பசளை தற்போதுள்ள நோய்த்தாக்கத்துக்கு  ஈடுகொடுக்காது அதே போல பல ஆயிரம் ,லட்சங்களை போட்டு விவசாயம் செய்பவர் லாபத்தை அடையமாட்டார்கள் நட்டம்தான் வரும்.

பதுக்கிய பசளை ஒரு அந்தர் யூரியா14000ரூபா 

சாதாரண நேரத்தில் 1700 ரூபா ஒரு அந்தர் இங்க சம்பாதிப்பது யாரு??

3 hours ago, valavan said:

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி தன்னிறைவு அடைவது என்பது ஸ்ரீமாவோ காலத்திலேயே தோல்வி அடைந்த ஒன்றுதான், இயற்கை விவசாய முயற்சி வடிவில் இது இரண்டாவது தடவை.

பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையாத நாடுகள் இப்படியெல்லாம் முயற்சித்து பார்த்தால் மக்களின் வெறுப்பையும், ஆட்சிக்கு ஆபத்தையும்தான் உருவாக்கும் என்பதை மறுபடியும் உணர்ந்து கொண்டதால் கப்புனு சட்ட திட்டத்தை தளர்த்திவிட்டார்கள்,

அரசுக்கெதிரான போராட்ட சக்திகள் வலுப்பெறுவதை பார்த்து ஆடிபோனார்கள்.

இல்லாவிட்டால் கோத்தபாயவாவது யாருக்காச்சும் அடங்கி போறதாவது.

இதுதான் உண்மையானதும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

அவர் ஜனாதிபதி இப்படியான முடிவுகளை அவர் தான் அறிவிக்க வேண்டும் ...ஒவ்வொரு விடயத்தையும் அந்தந்த துறை சார் நிபுணர்கள் தான் அறிவிக்க வேண்டும் என்றால் பிறகு ஏன் நாட்டுக்கு ஜனாதிபதிtw_lol: 

சின்னப்பிள்ளைத்தனமான கருத்து. 

தடையை அறிவித்தவர் தடையை எடுக்கும் போது ஏன் விவசாயதுறை அமைச்சரை நாடினார்? இதிலிருந்தே தெரிகிறது கோத்தா மூக்குடைபட்டது….

  • கருத்துக்கள உறவுகள்

Daily_News_5842663049698.jpg

"நாம் இருவர் - நமக்கு இருவர் " என்டு இருந்தால் இயற்கை உரமன்ன .. பச்சையாகவே காய்கறிகளை உண்டு வாழலாம்

☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, valavan said:

உள்ளூர் வளங்களை பயன்படுத்தி தன்னிறைவு அடைவது என்பது ஸ்ரீமாவோ காலத்திலேயே தோல்வி அடைந்த ஒன்றுதான், இயற்கை விவசாய முயற்சி வடிவில் இது இரண்டாவது தடவை.

பிரபாகரனின் நிழல் அரசானது தமிழ் ஈழத்தை ஆட்சிசெய்த காலத்தில் அங்குள்ள மக்கள், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட, இயற்கை விவசாய முயற்சி தோல்வியடையவில்லை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.