Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமை!

spacer.png

தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமையொன்று தோன்றியுள்ளதாக அக்கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று(சனிக்கிழமை)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கட்சியினுடைய செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது இடைநடுவே ஆனந்தசங்கரி, வெளியேறியதாகவும் அதன் பின்னர் அங்கு கூடியிருந்த ஏனைய உறுப்பினர்கள் புதிதாக ஒரு தற்காலிகமான ஒரு நிர்வாகத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இன்று மாலை 6 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கட்சியின் ஒரு பிரிவினர் கட்சிக்கு தற்காலிகமாக புதிய நிர்வாகத்தை தெரிவு செய்ததாக தெரிவித்தனர்.

இதன்போது பங்கேற்று கருத்து தெரிவித்த அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ச.அரவிந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய விசேட பொதுச்சபைக் கூட்டம் கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது.

2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கட்சி தலைமைத்துவத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் கட்சியினுடைய நிர்வாக நடவடிக்கையை சரியான முறையில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அதற்கு முட்டுக்கட்டையாக செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி செயற்பட்டதன் காரணமாக அந்த நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் பின்னர் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பொதுக்கூட்டத்தை கூட்டி கட்சியில் புதிய நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவந்து கட்சியை தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்து கொண்டு முன் கொண்டு செல்ல வேண்டுமென நாங்கள் எடுத்த முயற்சியை இரண்டு ஆண்டுகளாக கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தை நடத்தாமல் பலவிதமான முட்டுக்கட்டைகளை போட்டு கொண்டு இன்றுவரை பல இடர்பாடுகளை தோற்றுவித்தார்.

தற்காலிகமான நிர்வாக செயலாளர் க.கௌரிகாந்தனும் செயலாளர் நாயகமாக க.யோகராஜாவும் புதிய பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எதிர்வரும் ஜனவரி 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி தீர்க்கமான முடிவை எடுப்போம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியை தொடர்பு கொண்ட போது புதிதாக தெரிவானதாக கூறப்படும் நிர்வாகம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்ததாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
 

https://athavannews.com/2022/1260818

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு கட்சி, அதுக்கு நாலு நிர்வாகி!🤦

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்த சங்கரியின்ரை… கட்சியும், உடைஞ்சுட்டுதா?  🧐
ஆர்… உடைச்சது? அவருக்கு… ஆயிரம் பொற்காசுகளை, பரிசளியுங்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

சங்கரி இன்னும் இருக்கா.. தமிழர் விடுதலைக் கூட்டணின்னு ஒரு கட்சியும் இருக்கா.. சொல்லவே இல்லை.

சங்கரிக்கு தமிழனுக்கு எதிரா எதிரிகளை நோக்கி பெட்டிசக் கடிதம் எழுதுவதை விட வேற எதுவுமே தெரியாது. மற்றும்படி தெரிந்ததெல்லாம்.. கிளிநொச்சி அந்தப்புர வாழ்க்கை தான். 

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய தவிகூ, தமிழர் மத்தியில் மிக பிரபல்யம் மிக்க ஒரு கட்சி தான்.

ஆனாலும், தந்தை செல்வா மரணத்தின் பின்னர், வந்த தலைவர் அமிர், சிவசிதம்பரம் போன்றோர், தம்மை கவிட்டு விடலாம் என, தலைமைப்பதவி தொடர்பில் ஒரு விதி மாறுதலை செய்வித்தார். அதாவது தலைவர் ராஜினாமா அல்லது மரணித்தால் மட்டுமே, பதவி வெற்றிடம் ஆகும்.

அமிர் பின்னர், சிவசிதம்பரம் மரணிக்கும் வரை தலைவர். பின்னர் வந்தவர், சங்கரியார்.

மனிசன், தானும் தின்னார், தள்ளியும் இரார் நிலையில் கட்சியை தனது பாக்கெட்டில் போட்டு விட்டார்.

ஆக, அவர் விரும்பினால் அன்றி பொதுக்குழு கூடாது. கூடாத படியால், தலைமைப்பதவி தொடர்பான விதி மாறாது.

இவரது காலத்துக்கு பின்னர், பொதுக்குழு புதிய தலைவரை தேடும் போது, விதியும் மாறலாம். ஆனாலும், கவுண்டமணி ஜோக் மாதிரி, அதுக்குபுறம, மாத்தினால் என்ன, மாத்தா விட்டால் என்ன?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் விடுதலை கூட்டணியின் 101 எம் பி களும் யார் பக்கமாம்?🤪

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

தமிழர் விடுதலை கூட்டணியின் 101 எம் பி களும் யார் பக்கமாம்?🤪

கட்சி உடைஞ்சு போச்சுது எண்டு… கவலையில இருக்கிறம். 🤪
அந்த 101 எம். பி. களையும், இரவோட… இரவாக,  கடத்திறம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

தமிழர் விடுதலை கூட்டணியின் 101 எம் பி களும் யார் பக்கமாம்?🤪

தமிழ் தேசியக்கட்சிகளின் கூட்டமைப்பில் மேலும் ஒரு கட்சி இணைய வழிபிறந்துள்ளதே!🤩

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கட்சி உடைஞ்சு போச்சுது எண்டு… கவலையில இருக்கிறம். 🤪
அந்த 101 எம். பி. களையும், இரவோட… இரவாக,  கடத்திறம். 🤣

கூவத்தூர் ரிசார்ட் புக் பண்றம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தமிழ் தேசியக்கட்சிகளின் கூட்டமைப்பில் மேலும் ஒரு கட்சி இணைய வழிபிறந்துள்ளதே!🤩

அப்ப நாங்கள் இலங்கையில் ஆட்சியே அமைக்கலாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கட்சி உடைஞ்சு போச்சுது எண்டு… கவலையில இருக்கிறம். 🤪
அந்த 101 எம். பி. களையும், இரவோட… இரவாக,  கடத்திறம். 🤣

 

3 hours ago, goshan_che said:

தமிழர் விடுதலை கூட்டணியின் 101 எம் பி களும் யார் பக்கமாம்?🤪

கடத்தி கொண்டு போய் கருணாவின் கொட்டேலில் வையுங்க.

அங்கையும் கொஞ்சநாள காஞ்சு போய் கிடக்காம்.

தேவையானபோது ரதி மூலமா பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த லெட்டர் பாட்டை தூக்கிட்டு ஓடிவந்தால்… நீங்கதான் கட்சி தலைவர்…🤣

5 hours ago, goshan_che said:

கூவத்தூர் ரிசார்ட் புக் பண்றம்🤣.

இவங்களுக்கு கூவர்தூர் ரிசாட் ரெம்ப ஜாஸ்தி.. மாங்குளம் காட்டுக்கை கண்ணக்கட்டி இறக்கிவிட்டா.. திசை தெரியாமல் வெளிய வரமாட்டானுவள்..😂😂

5 hours ago, goshan_che said:

அப்ப நாங்கள் இலங்கையில் ஆட்சியே அமைக்கலாம்🤣.

கடன கட்ட சொல்லி சீனக்காரனும் வங்காளியும் அடிப்பானுவள்… ஓகேயா..?😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவங்களுக்கு கூவர்தூர் ரிசாட் ரெம்ப ஜாஸ்தி.. மாங்குளம் காட்டுக்கை கண்ணக்கட்டி இறக்கிவிட்டா.. திசை தெரியாமல் வெளிய வரமாட்டானுவள்..

அடி சக்கை. ஆனந்த சங்கரி இருந்தா கொக்காவிலுக்காள பழைய கண்டி ரோட்ட பிடிச்சி வந்திருவார். இவையள் கதி அதோ கதிதான்🤣.

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

கடன கட்ட சொல்லி சீனக்காரனும் வங்காளியும் அடிப்பானுவள்… ஓகேயா..?😂

இஞ்ச பார்கிளேசும், நட்வெஸ்டும் அடிக்கிற அடிக்கு அது பரவாயில்லை. ஆக மிஞ்சினால் அம்பாந்தோட்டைல ஒரு அரை கிணறை எழுதி கொடுத்து தப்பிக்கலாம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அண்டைக்கு சங்கரி பல்லைக் கடிச்சுக்கொண்டு சின்னத்தை விட்டுக்குடுத்திருந்தா இயங்காமல் இருந்த தமிழரசுக்கட்சியும்>வுpட்டுச்சின்னமும் அதோ கதிதான் சங்கரிதான் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்குத் தலைவராய் இருந்திருப்பார். சம்பந்தர் லைலைத்தூக்கிக் கொண்டு பின்னால் அலைஞ்சிருப்பார். சம்பந்தரின் நலலகாலம்  சங்கரியின் கெட்டகாலம் சங்கரிளய அப்படியொரு முடிவை எடுக்க வைத்து விட்டது. சந்தர்பம் ஒருமுறைதான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

இது இனி வயசுக்கு வந்தால் என்ன வராவிட்டால் என்ன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.