Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமிக்க பிக்குகள் முயற்சி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலயத்தை ஆக்கிரமிக்க பிக்குகள் முயற்சி!

March 16, 2022

spacer.png

 

சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்ற நிலையில், இதைத் தடுத்து நிறுத்த அரசியல்வாதிகளும், மக்களும் முன் வரவேண்டும் என பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயமான பறாளாய் விநாயகர் ஆலயமாகும். இந்த ஆலயத்திற்கு அருகே முருகன் ஆலயமும் உண்டு. குறித்த ஆலய வளாகத்தில் பல ஆண்டுகள் பழமையான அரச மரம் காணப்படுகின்றது.

 

https://globaltamilnews.net/2022/174206

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புத்தசமயத்திலும் தமிழர்கள் இருக்கின்றார்கள்
புத்த சின்னங்கள் தமிழரின் சின்னங்கள்  என நாம் கூற வேண்டும் 
தமிழரின் கோவில்களில் புத்தர் சிலைகளை 
வைத்து வணங்க வேண்டும் இலங்கையில் புத்த 
கோவில்களும் தமிழர் கோவில் தான் என்று வழிபாடு செய்ய வேண்டும்
உலகிற்கு அவை தமிழனுடையது என காட்டி 
சிங்கள அரசின் நோக்கத்தை உடைக்க வேண்டும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

நாட்ல அவனவன் தொட்டுக்க சட்னி இல்ல சாம்பார் இல்ல என்டு அலையுறான்.. 

இவயள் மட்டும் என்ன செமிக்காமல் ஏப்பம் விட்டுக்கொண்டு வருதுகள்.. வீடு வீடா யாசகம் போடுவீனமோ.. 😢

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே இந்த விடயத்தை முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த கருத்துக்கு வலுச் சேர்க்க யாரும் முயற்சிக்கவில்லை. சுரேன் ராகவன் தான் தமிழன் என்கிறார், அவர் புத்தரையே வணங்குகிறார். தற்போதைய ஆளுநர் தான் தமிழ் இந்து என்கிறார் ஆனால்  தமிழர் பிரதேசம் எங்கும் பிரித்து ஓத ஆசைப்படுகிறார்.

2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாட்ல அவனவன் தொட்டுக்க சட்னி இல்ல சாம்பார் இல்ல என்டு அலையுறான்.. 

இவயள் மட்டும் என்ன செமிக்காமல் ஏப்பம் விட்டுக்கொண்டு வருதுகள்.. வீடு வீடா யாசகம் போடுவீனமோ.. 😢

இதுகளுக்கு நாட்டில எப்போதும் குருதி ஓட வேணுமென்று ஆசை. அடுத்தவன் சொத்தை பறித்து விகாரை கட்ட அலையுதுகள், கேட்டால் துறவி என்குதுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பறாளாய் முருகன் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் வெள்ளரசமரம் ஒன்று இருக்கிறது. அது சங்கமித்தை வைத்தது என்று சொல்லித்தான் இந்த நிகழ்விற்கு அடிகோலப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சச்சியரை இறக்கிவிடுங்கோ..☹️

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

பறாளாய் முருகன் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் வெள்ளரசமரம் ஒன்று இருக்கிறது. அது சங்கமித்தை வைத்தது என்று சொல்லித்தான் இந்த நிகழ்விற்கு அடிகோலப்பட்டுள்ளது.

அப்ப மாதகல்லை வைச்சதென்று மாதகற் கடங்கரை ஆக்கிரமிப்பு. இப்ப பறாளாய்...... எங்கட சம் சும் என்னவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

சச்சியரை இறக்கிவிடுங்கோ..☹️

ஏன்? பக்க வாத்தியம் வாசிக்கவோ? அவருக்கு யேசுவைத்தான் பிடிக்காது, புத்தரை மிகவும் பிடிக்கும்.

 

9 minutes ago, nochchi said:

அப்ப மாதகல்லை வைச்சதென்று மாதகற் கடங்கரை ஆக்கிரமிப்பு. இப்ப பறாளாய்...... எங்கட சம் சும் என்னவாம்.

அது சங்கமித்தை வந்து இறங்கிய இடம். இது புத்தர் ஞானம் பெற்ற இடம். இன்னும் எந்தெந்த இடம் பாத்து வைச்சிருக்கிறாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, satan said:

ஏன்? பக்க வாத்தியம் வாசிக்கவோ? அவருக்கு யேசுவைத்தான் பிடிக்காது, புத்தரை மிகவும் பிடிக்கும்.

 

அது சங்கமித்தை வந்து இறங்கிய இடம். இது புத்தர் ஞானம் பெற்ற இடம். இன்னும் எந்தெந்த இடம் பாத்து வைச்சிருக்கிறாங்களோ?

வடக்கு கிழக்கில் உள்ள அரச மரங்களை இரவோடு இரவாக அழிச்சுவிடுங்கோப்பா.

அரைவாசிப் பிரச்சினை தீர்ந்தது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, Kapithan said:

வடக்கு கிழக்கில் உள்ள அரச மரங்களை இரவோடு இரவாக அழிச்சுவிடுங்கோப்பா.

அரைவாசிப் பிரச்சினை தீர்ந்தது. 

ஐயோ வேண்டாம் பிரபுவே வேண்டாம். நாங்கள் மனித நேயம் மிக்கவர்கள்.எமக்கு என்ன நடந்தாலும் சரி....அவர்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம்.நாங்கள் மிதித்தால் புல்லுக்கூட சாகாது.ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் காட்டுபவர்கள் நாங்கள்.ஐயோ வேண்டாம் பிரபுவே......😷

நான் இப்ப என்ன சொல்ல வாறனெண்டால் முட்டையை குடுத்தால் கோத மட்டும் தின்பம்.😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பறாளாய் முருகன் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் வெள்ளரசமரம் ஒன்று இருக்கிறது. அது சங்கமித்தை வைத்தது என்று சொல்லித்தான் இந்த நிகழ்விற்கு அடிகோலப்பட்டுள்ளது.

நல்லதொரு வயலும் வயல் சூழ்ந்த இடத்தில் இருக்கின்றது இந்த கோவில், கேணி கட்டில்  அமர்ந்திருந்தால் நல்ல காற்றுடன் மன அமைதி கிட்டும், இப்ப புத்தரும் வருவதால் இன்னும் மன அமைதி கூடும்

2 hours ago, ஏராளன் said:

பறாளாய் முருகன் ஆலய தீர்த்தக் கேணிக்கு அருகில் வெள்ளரசமரம் ஒன்று இருக்கிறது. அது சங்கமித்தை வைத்தது என்று சொல்லித்தான் இந்த நிகழ்விற்கு அடிகோலப்பட்டுள்ளது.

அது காக்கா எச்சத்தில் முளைத்தது😂

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை இடத்தில் சங்கமித்தை மரம் நட்டவா?

5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாட்ல அவனவன் தொட்டுக்க சட்னி இல்ல சாம்பார் இல்ல என்டு அலையுறான்.. 

இவயள் மட்டும் என்ன செமிக்காமல் ஏப்பம் விட்டுக்கொண்டு வருதுகள்.. வீடு வீடா யாசகம் போடுவீனமோ.. 😢

80 களில் கூட இவர்களில் பலர் வீடு வீடாக அலைந்து திரிந்து தட்டில் யாசகம் பெற்றே உண்டு வந்தனர். ஒவ்வொரு விகாரையிலும் இரந்து உண்டு வாழும் இவர்களுக்கு சிங்கள பெளத்தர்கள் பாவங்களை தீர்க்க தானம்  கொடுப்பர். பிரபலமான பீடங்களைச் சார்ந்த பிக்குகள் தவிர்ந்த ஏனைய பிக்குகளின் வாழ்க்கை கடும் வறுமையில் இருக்கும். 

ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் தம் தவறுகளை மறைக்கவும், பெளத்த பேரினவாதக் கொள்கையை மக்கள் மேல் திணித்து ஏனைய சிறுபான்மை இனங்களை அடக்கி அதன் மூலம் ஆட்சியை தொடரவும் இவர்களுக்கு ராஜ மரியாதை செய்ய வெளிக்கிட்டு, இவர்களை கவனிக்கவென்று பெளத்த சாசன அமைச்சர்களை நியமித்து, கோடிக்கணக்கில் செலவளிக்கின்றனர்.

இன்று அதன் பலனை கியூவில் நின்று மக்கள் அனுபவிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலில் புத்தர் சிலை வைப்பது தொடர்பான பத்திரிகைச் செய்தி

large.0-02-06-d5f38b1dc2a7d2e775bb48d69f

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, உடையார் said:

அது காக்கா எச்சத்தில் முளைத்தது😂

விபரம் தெரியாத காக்கா.

9 hours ago, nunavilan said:

எத்தனை இடத்தில் சங்கமித்தை மரம் நட்டவா?

இனிமேற்தான் தெரியவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் மற்றொரு அரச மரத்தையும் கண்டனர் பிக்குகள்: பழமை வாய்ந்த பிள்ளையார் ஆலயத்திற்கு ஆபத்து!

peepaltree-.jpg

சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசியல்வாதிகளும் பிரதேச மக்களும் முன்வரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் விநாயகர் ஆலயமும் ஒன்று. இந்த ஆலயத்திற்கு அருகே முருகன் ஆலயமும் உண்டு. இந்த ஆலய வளாகத்தில் உயரமாக வளர்ந்த அரச மரம் காணப்படுகின்றது.

அண்மைக் காலமாக வழிபாடு என்ற போர்வையில் படையினரின் உதவியுடன் பௌத்த பிக்குகள் அடிக்கடி இந்த ஆலயத்திற்கு வந்து சென்றனர். இதையடுத்து நாளை  (17) பௌர்ணமி தினத்தன்று இங்குள்ள அரச மரத்தடியில் படையினரின் உதவியுடன் பிக்குகள் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள முனைப்புக் காட்டியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும் பௌத்த பிக்குகள் தெரியப்படுத்தி உள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

பிக்குகளின் மேற்படி நடவடிக்கையை தடுத்து நிறுத்தி பறாளாய் விநாயகர் முருகன் ஆலயங்களை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து பாதுகாப்பதற்காக இன்று புதன்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு ஆலய வளாகத்தில் பொதுக் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

https://pagetamil.com/2022/03/16/யாழில்-மற்றொரு-அரச-மரத்த/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை வைக்க அனுமதிக்க முடியாது!

3 மணி நேரம் முன்
சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் புத்தர் சிலைகளை வைத்து பிரித் ஓதுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாதென ஆலய தர்மகத்தா சபையும் ஆலய பக்தர்களும் ஒன்றிணைந்து தீர்மானமொன்றை எடுத்துள்ளனர்.

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலய வளாகத்திலுள்ள அரச மரத்தடியில் பௌத்த பிக்குகள் பூஜை வழிபாடு மற்றும் பிரித் ஓதுவதற்கு முனைப்புக் காட்டி வருவதாக தகவல் வெளியான நிலையில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் ஆலய வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் பறாளாய் முருகன் ஆலயமும் ஒன்று.

ஆலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்திற்கு அருகே விநாயகர் ஆலயமும் உண்டு. இந்த ஆலய வளாகத்தில் உயரமாக வளர்ந்த அரச மரமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Gallery Gallery Gallery 

Gallery

https://ibctamil.com/article/jaffna-hindu-temple-issue-1647479724

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்துக்கு அனுப்புங்கள் செய்தியை, நிலக்கொள்ளையரை கைது செய்யும்படி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.