Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் அந்தத் அஞ்சலகத்தில் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே அவனை அந்தக் கடைக்கு முன்னால் பார்த்தேன். அது குளிர்காலமாதலால் லண்டன் காற்றில் இருந்து தப்ப நல்ல குளிராடைகள் அணியாமல் போக முடியாது. ஒரு பல்பொருள் அங்காடியின் உள்ளேயே நான் வேலை செய்யும் அஞ்சலகம் அமைந்திருந்தது. முன்பக்கம் முழுக்க கண்ணாடித் தடுப்புடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கும் அதற்குள் நிற்கும்போதே குளிராக இருக்கும். ஆனால் அவனோ ஒரு கடதாசி மட்டையை விரித்து அதன்மேல் அமர்ந்திருப்பான். அவன் முன்னால் ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டிருக்கும்.

ஆளைப் பார்த்தால் நன்றாகத்தான் ஆடை அணிந்திருப்பான். ஆனாலும் அதில் ஒரு அசாதாரணமும் இருக்கும். முதல் சில நாட்கள் எனக்கு அவனைப் பார்க்க எரிச்சலாக இருந்தது. அவனை நான் போகும்போதோ  வரும்போதோ சட்டை செய்யவில்லை. அவன் நடந்து வரும்போது ஒரு நளினம் இருக்கும். இவன் ஒரு ஓரினச் சேர்க்கையாளனாகத்தான் இருப்பான் என நான் நம்பினேன்.

அடுத்த வாரம் என்னை நோக்கி வந்து நமஸ்தே கிறிஷ்ணா என்றபடி ஒரு தாளை நீட்டினான். நான் வேண்டுமென்றே வணக்கம் என்றேன். அவன் எதுவும் சொல்லாமல் நிற்க நான் அந்தத் தாளை விரித்தேன். அது கவுன்சில் வீடற்றவர்களுக்கு வாராவாரம் கொடுக்கும் உதவித் தொகைக்கானது. ஆனால் அதைக் கொண்டு வருபவர் தன் அடையாள அட்டையைக் காட்டினால்த்தான் நாம் பயணம் கொடுக்கலாம். ஏனெனில் வேறு ஒருவரினதை எடுத்துக்கொண்டு வந்து மற்றவர்கள் பணமாக்காதிருக்க அப்படியான முறையை வைத்திருந்தனர்.

“உனது ஐடியைத் தருகிறாயா?”

“என்னிடம் ஐடி இல்லை, ஜோன் ஒன்றுமில்லாமல் எனக்குப் பணம் தருவான்”

“யார் அது ஜோன்? அப்படி யாரும் இங்கு இல்லையே”

“ இந்தக் கடையின் ஓனர் தான். உனக்குத் தெரியாதா?”

எனக்குக் குழப்பமும் கோபமும் ஒன்றாக வர கொஞ்சம் பொறு  என்றுவிட்டு எனது முதலாளிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விபரத்தைக் கூற அவரும் வீடியோவில் அவனைப் பார்த்துவிட்டு “அவனுக்குக் கொடுங்கோ. அவன் காசை என் கடையில் தான் செலவழிக்கிறவன் என்று சொல்ல, யார் அந்த ஜோன் என்றேன்.

“ நான் தான். என்னை உந்த வெள்ளைச் சனங்கள் அந்தப் பெயரால்த்தான் அழைப்பார்கள்” என்று கூறி அவர் போனை வைக்க, தமிழராய் இருந்துகொண்டு உவருக்கு ஆங்கிலப் பேர் கேட்குது என மனதுள்  கறுவினாலும் வெளியே சொல்லவில்லை.

அதன்பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்லும்போது “நன்றி.  கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்றான்.

“நான் கிரிஷ்ணரை வணங்குவதில்லை” என்றேன்.

அவன் எதுவும் சொல்லாது போய்விட்டான்.

அடுத்த வாரம் நான் வேலைக்குச் செல்லும்போது கால்மேல் கால் போட்டபடி கடையின் கண்ணாடியில் சாய்ந்து அமர்ந்திருந்தான். என்ன  பிறப்பு இவன். இவனுக்குக் குளிர்வதே இல்லையா என எண்ணியபடி உள்ளே வந்தேன். சிறிது நேரத்தில் நான் என் அலுவல்களைப் பார்க்க அவன் கடைக்குள் வந்து அங்கும் இங்குமாக நடக்க எனக்கு எரிச்சல் அதிகரித்தது. எதையாவது களவெடுத்துக்கொண்டு போக எண்ணுகிறானோ என எண்ணியபடி அவன் எங்கு செல்கிறான் என என் அறையின் உள்ளே இருக்கும் கமராவின் ஸ்கிரீனைப் பார்த்துக்கொண்டிருக்க அவன் எதையும் எடுக்காது பொறுமையின்றி நடந்து திரிந்துவிட்டு என் பக்கமாக வந்தான்.

நீ அஞ்சலகத்தைத் திறந்துவிட்டாயா என்றபடி நிற்க, வா என்றபடி அவனின் தாளை வாங்கி அவனிடம் எதுவுமே கேட்காது பணத்தைக் கொடுத்தேன். மீண்டும் அவன் “கிருஷ்ணா உங்களை ஆசீர்வதிப்பார்” என்று கூற “நன்றி உன்னை சிவா ஆசீர்வதிப்பார்” என்றேன். அவன் எதுவுமே கூறாமல் செல்ல என மனதில் எத்தனையோ கேள்விகள் எழுந்தது.

அடுத்தடுத்த வாரங்களில் வரும்போது அவனைப் பார்த்ததும் காலை வணக்கம் சொல்ல, என்னை ஆச்சரியமாகப் பார்த்து தானும் சொன்னான். அன்று அவன் பணம் பெற்றுக்கொள்ள வரவில்லை. ஏன் அவன் வரவில்லை என்று எண்ணியபடி ஆட்கள் வராத நேரத்தில் நான் வெளியே சென்று அவன் இருக்கிறானா என்று பார்த்தபோது அவனைக் காணவில்லை. கடையில் வேலை செய்தவர்களைக் கேட்க தமக்குத் தெரியாது என்றுவிட்டு அப்படித்தான் அவன் அடிக்கடி காணாமல் போவான் பின் வருவான் என்றனர். நானும் அதன் பின் அவனைப் பற்றி மறந்துவிட்டேன். ஒரு வாரத்தின் பின்னர் வந்தவன் இரண்டு காசோலைகளை என் முன்னே நீட்டினான். ஒவ்வொன்றும் 100 பவுண்கள் பெறுமதியானவை. அவனுக்குப் பணத்தை வழங்கிவிட்டு “எங்கே சென்றாய் உன்னைக் காணவில்லையே ஒரு வாரமாக என்றேன். தனக்கு மன  அழுத்தம் கூடியதால் ஒருவாரம் வைத்தியசாலையில் இருந்தேன் என்றதும் மேற்கொண்டு என்ன கேட்பது என்று தெரியாது அவனை அனுப்பிவிட்டு மற்ற வாடிக்கையாளர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

நான் வேலைசெய்யும் கடையிலே சூடான உணவுப் பொருட்களும் உண்டு. நிரந்தர வாடிக்கையாளர்களுக்கு தேவை எனில் குளிரான உணவுகளை சூடாக்கிக் கொடுப்பார்கள். பிரியாணி சமோசா போன்றவற்றை அவன் சூடாக்கித் தரும்படி வாங்கி உண்பான். தேனீரும் கோப்பியுமாக அவன் பணம் அங்கேயே கரையும். ஆனால் ஒருநாள் கூட மலிந்த பியரைக் கூட அவன் வாங்குவதில்லை என அங்கு வேலை செய்பவர்கள் கூறுவார்கள்.

அன்று ஒரு மூன்று மணியிருக்கும். பள்ளிக்கூடம் அருகில் இருப்பதால் பள்ளி முடிந்து மாணவர்கள் வருவதும் போவதுமாக இருக்க, நான் காலையில் அவனுக்குக் கொடுத்த 20 பவுண்டஸ் தாள்களைக் கொண்டுவந்து பத்துப் பவுண்டஸ் தாள்களைத் தருகிறாயா என்றான். நானும் கொடுத்துவிட்டு எனக்கு வாடிக்கையாளர்கள் வாராதாபடியால் அறையை விட்டு வெளியே வந்து வீதியைப் புதினம் பார்க்கச் சென்றேன்.

அங்கே கூட்டமாக ஒரு ஏழு பள்ளி மாணவர்கள் நிற்க இவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாளைக் கொடுத்துக்கொண்டிருந்தான். எனக்குப் பார்த்தவுடன் சுள் என்று கோபம் தலைக்கேறியது. கவுன்சில் அவனுக்குத் தரும் காசைச் சேமித்து வைத்துச் செலவழிக்காது இப்பிடி கொடுத்துக் கரைக்கிறானே என்று. ஏனெனில் அந்த வாரம் பணம் முடிந்தவுடன் எமது கடையில் கடன் சொல்லிவிட்டுத்தான் பொருட்களை வாங்குவான்.

ஆனாலும் அடுத்த நிமிடம் அவனின் செயலை எண்ணிய வியப்புத் தோன்றியது. எதுவும் இல்லாதவன். இருப்பவர்களே கொடுக்க யோசிக்கும் இந்தக் காலத்தில் தனக்கு என வைத்திருக்காமல் இவர்களுக்குக் கொடுக்கிறான் எனில் எத்தனை பெரிய மனது வேண்டும் என எண்ணியவுடனேயே எனக்குள் ஒரு கூச்சம் எழ நான் உள்ளே நகர்ந்தேன்.

அடுத்த வாரம் பணம் மாற்ற வருவதற்கு முன்னர் சில பொருட்களை கையில் எடுத்துக்கொண்டு வந்திருந்தான்.  ... ........

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை வாழ்க்கையிலை வந்தி அம்பிடுற ஆக்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமான ஆக்கள் தான்......😁

நல்லதொரு சமூகக்கதை......👍

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

உங்கடை வாழ்க்கையிலை வந்தி அம்பிடுற ஆக்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமான ஆக்கள் தான்......😁

நல்லதொரு சமூகக்கதை......👍

ஆளும் வித்தியாசமானமவர் தானே😎

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு......வழக்கமா நீங்கள் சந்தேகப்படுவதும் பிறகு "நே" என்று முழிப்பதும்தானே வாடிக்கை.....பார்ப்பம் இந்த வாடிக்கையாளனிடம் என்ன நடக்குதென்று.......!   😁

எழுதிச்செல்லுங்கள் .....தொடர்ந்து வருகின்றோம்.......!

  • கருத்துக்கள உறவுகள்

அவன் காசு கொடுக்கிறதைப் பார்த்திட்டு நீங்களும் உங்கள் சம்பளத்தைக் கொடுத்திட்டீங்களோ என எண்ணினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

உங்கடை வாழ்க்கையிலை வந்தி அம்பிடுற ஆக்கள் எல்லாம் கொஞ்சம் வித்தியாசமான ஆக்கள் தான்......😁

நல்லதொரு சமூகக்கதை......👍

என்ன செய்ய என தலைவிதி அது 😃

7 hours ago, உடையார் said:

ஆளும் வித்தியாசமானமவர் தானே😎

உது தானே கூடாது 😃

5 hours ago, suvy said:

நல்லாயிருக்கு......வழக்கமா நீங்கள் சந்தேகப்படுவதும் பிறகு "நே" என்று முழிப்பதும்தானே வாடிக்கை.....பார்ப்பம் இந்த வாடிக்கையாளனிடம் என்ன நடக்குதென்று.......!   😁

எழுதிச்செல்லுங்கள் .....தொடர்ந்து வருகின்றோம்.......!

இது வேறு அண்ணா ......

3 hours ago, ஈழப்பிரியன் said:

அவன் காசு கொடுக்கிறதைப் பார்த்திட்டு நீங்களும் உங்கள் சம்பளத்தைக் கொடுத்திட்டீங்களோ என எண்ணினேன்.

சீச்சீ அவ்வளவு பெருந்தன்மை எல்லாம் எனக்கு இல்லை. அண்ணா 😃

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல நல்ல ஒரு கதை…! தொடரும் என்றே நம்புகின்றேன்! நான் என்றால் ‘கிருஸ்ணா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்றால் பேசாமல் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வேன்! சிவனை அவனிடம் புகுத்த முயற்சித்து இருக்க மாட்டேன்! எமது மதத்தின் அழகே, மற்றவரிடம் தன்னைத் திணிக்காமல் இருப்பது தான்…! இதனால் தான் இஸ்லாமியர்களையும்,கிறிஸ்துவர்களையும் எனக்குப்  பிடிப்பதில்லை! இதைப் பற்றி உங்கள் கருத்தையும் அறிய ஆவல்…!

  • கருத்துக்கள உறவுகள்

யாயினின்ட ரைப் போலும்  அடிக்கடி இங்கு வருவதும் காணாமல் போவதும் இயல்பு .மனித மனம் அப்படித் தானே அக்கா...✍️🤭

  • கருத்துக்கள உறவுகள்

வீடில்லாதவர்கள் விசித்திரமானவ்ரகள் உதாரணத்துக்கு கீழே உள்ள படம் உங்களுக்கு நன்கு பரிச்சயமான இடத்தில் உள்ள வீடற்றவர்கள் அத்துடன் இந்த அம்மா மகன் அம்மா இந்த வருடப்பிறப்பில் ஆறுவருட பெஞ் வாழ்க்கையில் இருந்து விடுதலை தற்போது மகன் மாத்திரம் .

இன்று (ஜனவரி 5) எடுக்கப்பட்ட பெஞ்ச் ஹவா அப்டி ஷரிகே மற்றும் அவரது மகன்

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2022 at 09:16, புங்கையூரன் said:

வழக்கம் போல நல்ல ஒரு கதை…! தொடரும் என்றே நம்புகின்றேன்! நான் என்றால் ‘கிருஸ்ணா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்றால் பேசாமல் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வேன்! சிவனை அவனிடம் புகுத்த முயற்சித்து இருக்க மாட்டேன்! எமது மதத்தின் அழகே, மற்றவரிடம் தன்னைத் திணிக்காமல் இருப்பது தான்…! இதனால் தான் இஸ்லாமியர்களையும்,கிறிஸ்துவர்களையும் எனக்குப்  பிடிப்பதில்லை! இதைப் பற்றி உங்கள் கருத்தையும் அறிய ஆவல்…!

அதிலயும் சிவன் ஒரு படி மேல, உன்னில் என்னை தேடு என்று சொல்லி ஒதுங்கிட்டான்...

On 17/3/2022 at 00:41, suvy said:

நல்லாயிருக்கு......வழக்கமா நீங்கள் சந்தேகப்படுவதும் பிறகு "நே" என்று முழிப்பதும்தானே வாடிக்கை.....பார்ப்பம் இந்த 🤣வாடிக்கையாளனிடம் என்ன நடக்குதென்று.......!   😁

எழுதிச்செல்லுங்கள் .....தொடர்ந்து வருகின்றோம்.......!

தொடருமா? அவர் சொல்லவே இல்லை நான் வர மாட்டேன் வாசிக்க மாட்டேன்....நான் யாழ் வாரிசு ஆக்கும்🤣🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16/3/2022 at 23:16, புங்கையூரன் said:

எமது மதத்தின் அழகே, மற்றவரிடம் தன்னைத் திணிக்காமல் இருப்பது தான்…

வெறும் நெற்றிக்கு குங்குமம் இட்ட மாதிரி ஒரு கருத்து.🙏

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2022 at 18:16, புங்கையூரன் said:

வழக்கம் போல நல்ல ஒரு கதை…! தொடரும் என்றே நம்புகின்றேன்! நான் என்றால் ‘கிருஸ்ணா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்றால் பேசாமல் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வேன்! சிவனை அவனிடம் புகுத்த முயற்சித்து இருக்க மாட்டேன்! எமது மதத்தின் அழகே, மற்றவரிடம் தன்னைத் திணிக்காமல் இருப்பது தான்…! இதனால் தான் இஸ்லாமியர்களையும்,கிறிஸ்துவர்களையும் எனக்குப்  பிடிப்பதில்லை! இதைப் பற்றி உங்கள் கருத்தையும் அறிய ஆவல்…!

உங்களிடமிருந்தும் ஏதாவது வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது..முடியும் பட்சத்தில் எடுத்துட்டு வாங்கோ.✍️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2022 at 22:16, புங்கையூரன் said:

வழக்கம் போல நல்ல ஒரு கதை…! தொடரும் என்றே நம்புகின்றேன்! நான் என்றால் ‘கிருஸ்ணா உன்னை ஆசீர்வதிப்பார்’ என்றால் பேசாமல் சிரித்துக் கொண்டு பேச்சைத் தொடர்வேன்! சிவனை அவனிடம் புகுத்த முயற்சித்து இருக்க மாட்டேன்! எமது மதத்தின் அழகே, மற்றவரிடம் தன்னைத் திணிக்காமல் இருப்பது தான்…! இதனால் தான் இஸ்லாமியர்களையும்,கிறிஸ்துவர்களையும் எனக்குப்  பிடிப்பதில்லை! இதைப் பற்றி உங்கள் கருத்தையும் அறிய ஆவல்…!

கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என்று யாரும் சொன்னால் நன்றி என்று கடந்து போய்விடும் எனக்கு கடவுளர்களின் பெயர் சொன்னால் மட்டும் கோபம் வந்துவிடுகிறது. அவன் சொல்வதும் ஒருவகைத் திணிப்புத்தானே. எனக்கு மத வெறி இல்லை. ஆனாலும் இப்படியான விடயங்களை ஆமோதிக்கவும் முடியவில்லை.

On 16/3/2022 at 22:40, யாயினி said:

யாயினின்ட ரைப் போலும்  அடிக்கடி இங்கு வருவதும் காணாமல் போவதும் இயல்பு .மனித மனம் அப்படித் தானே அக்கா...✍️🤭

ஒரு சிலரைத் தவிர பலரும் உங்களையும் என்னையும் போலத்  தான் யாயினி.

On 16/3/2022 at 23:16, பெருமாள் said:

வீடில்லாதவர்கள் விசித்திரமானவ்ரகள் உதாரணத்துக்கு கீழே உள்ள படம் உங்களுக்கு நன்கு பரிச்சயமான இடத்தில் உள்ள வீடற்றவர்கள் அத்துடன் இந்த அம்மா மகன் அம்மா இந்த வருடப்பிறப்பில் ஆறுவருட பெஞ் வாழ்க்கையில் இருந்து விடுதலை தற்போது மகன் மாத்திரம் .

 

ஓ நான் அதிகம் அந்தப் பக்கம் போகாததானால் கவனிக்கவில்லை. ஆனாலும் அந்தத் தாய் இறந்துவிட்டார் என்றவுடன் மனதில் ஏதோ செய்ததுதான். இந்தக் குளிரில் நீட்டி நிமிர்ந்து படுக்காது எப்படித்தான் தொடர்ந்து கதிரையில் இருக்கிறார்களோ என்று அவர்களைக் கடந்து செல்லும் போது எண்ணியிருக்கிறேன்.

10 hours ago, putthan said:

அதிலயும் சிவன் ஒரு படி மேல, உன்னில் என்னை தேடு என்று சொல்லி ஒதுங்கிட்டான்...

தொடருமா? அவர் சொல்லவே இல்லை நான் வர மாட்டேன் வாசிக்க மாட்டேன்....நான் யாழ் வாரிசு ஆக்கும்🤣🤣

கட்டாயம் தொடருமாக்கும் 😀

9 hours ago, குமாரசாமி said:

வெறும் நெற்றிக்கு குங்குமம் இட்ட மாதிரி ஒரு கருத்து.🙏

உந்த உதாரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உந்த உதாரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது. 😀

ஏன்????? 😎

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி ரெண்டு இருக்கா இல்லையா சொல்லுங்க

வரிசையில் நிற்க இடத்த பிடிக்கணும் சாமானுகள் வாங்க 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2022 at 15:53, தனிக்காட்டு ராஜா said:

பகுதி ரெண்டு இருக்கா இல்லையா சொல்லுங்க

வரிசையில் நிற்க இடத்த பிடிக்கணும் சாமானுகள் வாங்க 

வரும் வரும் பொறுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பகுதி வரும் வரைக்கும் அந்த மனிதன் ஒரு புரியாத புதிர் தான்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடமுள்ள குறையே அதிக இடைவெளி விடுவது தான் 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/3/2022 at 18:10, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரும் வரும் பொறுங்கோ

எப்போ வரும்...punctuality, கொஞ்சமாவது கடைப் பிடித்தால் நன்று..✍️🖐️

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2022 at 04:00, யாயினி said:

எப்போ வரும்...punctuality, கொஞ்சமாவது கடைப் பிடித்தால் நன்று..✍️🖐️

சத்தியமாய் நான் இதை மறந்தே போனன். 

On 31/3/2022 at 14:19, P.S.பிரபா said:

அடுத்த பகுதி வரும் வரைக்கும் அந்த மனிதன் ஒரு புரியாத புதிர் தான்

மன்னியுங்கள் மறந்துவிட்டேன்

On 31/3/2022 at 20:39, ரதி said:

உங்களிடமுள்ள குறையே அதிக இடைவெளி விடுவது தான் 

உண்மையை ஒத்துக்கொள்ளத்தானே வேணும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

அவன் தூரத்தில் வரும்போதே துர்நாற்றம் ஒன்று வீச அந்தப் பெரிய கண்ணாடியை மீறி சிறிய கடிதங்கள் மட்டுமே போகக்கூடிய இடைவெளியூடாக அந்த நாற்றம் என் மூக்கில் அறைய நான் என்னை அறியாமலேயே கைகளால் மூக்கைப் பொத்திவிட்டு ஒரு வாடிக்கையாளருக்கு முன்  அப்படிச் செய்வது அழகல்ல எனறு எண்ணி கைகளைக் கீழே விட, அவன் அந்த இடைவெளியால் தாளைத் தருகிறான். அவனுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட வழமைபோல் நன்றி கிருஷ்ணா என்றபடி திரும்புகிறான். அவன் கைகளில் வைத்திருந்த பொருட்கள் அப்போதுதான் என் கண்ணில் தெரிகின்றன.

"உன் பெயர் என்ன"

"மார்ட்டீன்"

"எதற்கு இந்த வண்ணக் கட்டிகளையும் பென்சில்களையும் வாங்கிக்கொண்டு செல்கிறாய்"

"நான் ஆர்ட் கீறுவதில் மாஸ்ரேஸ் முடித்திருக்கிறேன். எனக்குத் தோன்றும் நேரங்களில் படங்கள் கீறுவேன்"

"உனக்குக் குடும்பம் இருக்கிறதா"

"யாரும் இப்போ இல்லை"

"வீடு கூட கவுன்சில் தரவில்லையா"

"எனக்கு வீடு இருக்கிறது. இரவில் மட்டும் அங்கு சென்று தூங்குவேன்"

"என்னைத் தவறாக நினைக்காதே. உன்னில் ஒரு கூடாத மணம் வருகிறது. இத்தனை படித்த நீ ஏன் சுத்தமாக இருக்கக் கூடாது."

"ஓகே"

என்றுவிட்டு அவன் செல்ல, வெளியே கடையில் தட்டுக்களில் பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்த ஒருவர்

"என்ன அக்கா. ஏன் இப்பிடி மணக்குது என்று அவனுக்குச் சொன்னீர்கள்"

"அப்பவாவது அவன் குளித்து உடைமாற்றிக்கொண்டு வருக்கிறானா என்று பார்ப்போம். எத்தனை நாட்கள்தான் அவனின் நாற்றத்தைத் தாங்குவது"

"நீக்கள் சொன்னது போலத்தான் எங்கட முதலாளியும் அவனுக்கு ஒருநாள் சொன்னவர். அவன் அதைக் கேட்டிட்டு "ஜோன் எனக்கு ஒண்டும் சொல்லாதை. நான் இப்பிடித்தான் இருப்பன். எனக்கு மில்லியன் வியூவேர்ஸ் இன்ஸ்ரகிறாமில் இருக்கினம். உனக்குப் பிடிக்காட்டில் நான் எதிர்ப்பக்கம் இருக்கிற கடையில போய் இருக்கிறன்" என்றானாம். அதன்பின் முதலாளி வாயே திறக்கிறேல்லை. ஆனால் நீங்கள் பொம்பிளை எண்டதால ஒண்டும் சொல்லாமல் போறான்.

நான் சிரித்துவிட்டு என் அழுவலைப் பார்க்கிறேன்.

அடுத்த நாள் வேலையை ஆரம்பித்து பத்து நிமிடம் செல்ல மார்ட்டீன் என்னை நோக்கி வந்து குட் மோர்னிங் கிருஷ்ணா என்கிறான்.

நேற்று அவனுடன் கதைத்த பின் எனக்கு அவன்மேல் ஒரு மதிப்புக் கூடியிருந்தது. அதற்குக் காரணம் அவன் படித்திருக்கிறான் என்பது மட்டுமல்லாமல் நான் வேலை முடிந்து செல்லும்போது அவன் மட்டையில் வரைந்து முடித்திருந்த அந்த அழகிய அர்த்தம்பொதிந்த ஓவியமும்தான்.

இன்று நான் சுத்தமாக வந்திருக்கிறேன் என்று தன் ஆடையையும் தொட்டுக் காட்ட அப்பதான் அட இவனில் இன்று எந்தத் துர்நாற்றமும் வீசாததை நான் கவனிக்கவில்லையே என வியந்தபடி மிக்க நன்றி மார்ட்டீன். என் பேச்சு உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள் என்கிறேன்.

இல்லை இல்லை. நான் ஒன்றும் நினைக்கவில்லை. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்றபடி திரும்பிச் செல்ல என் மனம் நிம்மதி அடைகிறது.

கடைக்கு வரும் பலரும் அவனுக்கு பணம் கொடுப்பது மட்டுமன்றி அவனைக் கூட்டிவந்து அவனுக்குத் தேவையான உணவுகளைக்கூட வாங்கிக் கொடுப்பார்கள். அங்கு மெசினில் கோப்பி அல்லது தேநீர் கூட அவனாகவே வாங்குவதுமுண்டு. மற்றவர்களும் வாங்கிக் கொடுப்பதும் உண்டு. சில நேரங்களில் கையில் பணம் இல்லாதபோது கடையில் நிற்போரிடம் கடன் சொல்லி வாங்கிவிட்டுப் பணம் சேரும்போது கொடுத்தும்விடுவான்.  

இப்ப இரண்டு வாரங்களாக அவனைக் கடைக்கு முன் காணவில்லை. அவன் மன அழுத்தம் காரணமாக மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டானோ? காலையில் எழுந்து பல்விளக்கி முகம் கழுவுகிறானோ என்று கூடத் தெரியாது. குடும்பம் இல்லை. வேறு தொந்தரவுகள் இல்லை. வீதியிலேயே இருப்பதால் வீடு இருந்தாலும் கரண்ட் காசுகூடக் கட்டும் தேவை இல்லாத அவனுக்கே மன அழுத்தம் என்றால் இத்தனை சுமைகளைத் தாங்கி இத்தனைகாலம் குடும்பமாய் வாழும் எனக்கு எத்தனை மனஅழுத்தம் இருக்கவேண்டும். அதனைக்கும் அசையாது இத்தனை மனத்திடத்துடன் நான் இருக்கிறேன் என்னும் பெருமிதமும் எனக்குள் ஏற்படாமல் இல்லை.

இருவாரம் ஒரு மாதமாகி ஆறு ஏழு மாதங்களாகியும் அவன் மீண்டும் வரவேயில்லை. அவன் தொடர்ந்தும் மருத்துவமனையில் தான் இருக்கிறானா?? அன்றி அவனுக்கு எதுவும் நேர்ந்துவிட்டதா என்னும் பதைப்பும் என்னுள் எழுந்து மடிய பலரிடம் விசாரித்தும் அவனைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியவேயில்லை. அவன் இருக்கும் இடத்தில் அவன் வைத்துவிட்டுப் போன அந்த மட்டையும் சில நிறம் தீட்டும் பென்சில்களும் கேட்பாரற்று அங்கேயே இன்றுவரை கிடக்கின்றன.              

 

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 27/3/2022 at 15:53, தனிக்காட்டு ராஜா said:

பகுதி ரெண்டு இருக்கா இல்லையா சொல்லுங்க

வரிசையில் நிற்க இடத்த பிடிக்கணும் சாமானுகள் வாங்க 

பகுதி 2 எழுதிப் போட்டாச்சு😀

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இருவாரம் ஒரு மாதமாகி ஆறு ஏழு மாதங்களாகியும் அவன் மீண்டும் வரவேயில்லை

உங்களைப் போலத் தான்.

இப்ப பிரச்சனை இதை வாசித்தாச்சு.முன்னுக்கு என்ன தான் எழுதியிருப்பீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உங்களைப் போலத் தான்.

இப்ப பிரச்சனை இதை வாசித்தாச்சு.முன்னுக்கு என்ன தான் எழுதியிருப்பீர்கள்.

கொஞ்சம் மவுசை உருட்டினீர்கள் என்றால் பழையது வரும் 😂

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் வருமா....... இவ்வளவுதானா .......!   😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.