Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

6.9 மில்லியன் மக்களின் ஆதரவு... இன்னும் இருப்பதால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால் ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன்

6.9 மில்லியன் மக்களின் ஆதரவு... இன்னும் இருப்பதால், ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை – ஜோன்ஸ்டன்

இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அமைச்சர், மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறு போராட்டங்களே எனத் தெரிவித்த அமைச்சர், எனினும் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1274916

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை போராட  விடாமல் ஊரடங்கு சட்டம் மூலம் அவர்களை நசுக்குவது. பின்னர் மக்கள்  சிறிய அளவில் போராடுகிறார்கள் என கணக்கு காட்டுவது.

துணிவிருந்தால் ஒரு தேர்தலை வைத்து 6.9 மில்லியன் கணக்கை சரி பார்க்கலாமே அமைச்சரே.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் கோத்தாவின் போர் நட்பு நாடு பாகிஸ்தானில் இம்ரான் கான் பதவி விலகி தேர்தலுக்கு வழிவிட்டது போல்.. கோத்தா பதவி விலகி.. நடப்பு பாராளுமன்றையும் களைத்து மீண்டும் மக்கள் விருப்பறிவதே.. மக்கள் சன நாயகமாகும். 

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவையை மாற்றி அமைப்பதை பார்த்தால் தொடர்ந்து ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் இருப்பதே மகிந்த சகோதரர்களின் திட்டம் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அமைச்சரவையை மாற்றி அமைப்பதை பார்த்தால் தொடர்ந்து ராணுவத்தின் உதவியுடன் ஆட்சியில் இருப்பதே மகிந்த சகோதரர்களின் திட்டம் போல் தெரிகிறது.

எனக்கும் அப்பிடித்தான் தெரிகிறது. அவ்வளவு இலகுவாக அதிகாரத்தை விட்டு இறங்க மாட்டார்கள், அதை விட்டால் பாதுகாப்பும் கிடையாது. அமைச்சர்களை ராஜினாமா செய்யவைத்து ஏதாவது திசை திருப்பலாமா என்ற முயற்சி நடக்கிறது, எடுபடாது என்று நினைக்கிறேன். நீங்கள்தான் இந்த நிலைக்கு காரணம், நீங்கள் பதவி இறங்காமல், அமைச்சர்களை மாத்தி நாடகமா ஆடுகிறீர்கள் என்று எங்கே பார்த்தாலும் சிங்களவர்கள் கேட்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உதவி செய்யும்...இதுதான் செய்தி..4 படகில் புலிகள்... முல்லைத்தீவில் ..தரை இறங்க முயற்சி...நடுக்கட்லில் கைது செய்யப்பட்டனர்.....

காத்தான்குடியில்...துப்பாக்கிப் பயிற்சியில்  ஈடுபபட்ட சகரானின் ஆட்கள்  கைது...

இதன் முடிவு..கோத்தா 80 இலட்சம் வாக்குகளால் ..மீண்டும் சனாதிபதியாகத் தெரிவு....படம் முடிந்தது..சுபம்..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

இந்தியா உதவி செய்யும்...இதுதான் செய்தி..4 படகில் புலிகள்... முல்லைத்தீவில் ..தரை இறங்க முயற்சி...நடுக்கட்லில் கைது செய்யப்பட்டனர்.....

காத்தான்குடியில்...துப்பாக்கிப் பயிற்சியில்  ஈடுபபட்ட சகரானின் ஆட்கள்  கைது...

இதன் முடிவு..கோத்தா 80 இலட்சம் வாக்குகளால் ..மீண்டும் சனாதிபதியாகத் தெரிவு....படம் முடிந்தது..சுபம்..

இந்த நேரத்தில் இது எடுபடும் என நான் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை

அங்க, இங்க என்று கண்டும் காணாமலும் இருக்கிறவர்களையும் உசுப்பி போராட அழைக்கிறார் இவர்.

11 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உதைத்தான் முதுகிலே குத்துறது என்கிறது. தெரியாமல் நடிப்பார்கள் தெரிந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய பேரணியில் அதன் ஒழுங்கமைப்பாளர் பேசும் போது மகிந்த குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேற விடக்கூடாது. நாட்டு மக்களின் சொத்தை கொள்ளை அடித்தவர்கள். பொன்சேகாவை போட்ட சிறையில் போட வேண்டும். மகிந்த சகோதரர்கள் அமெரிக்க குடியுரிமையை கொண்டவர்கள். " நான் கேள்விப்படுகிறேன் நாமலின் மனைவியும் அவரது பெற்றோரும் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் என".  மகிந்த குடும்பத்தை வெளியேற விடக்கூடாது. இவர்களால் தான் மக்கள் இவ்வளவு கஸ்டப்படுகிறார்கள். என்றார்

அடிப்படையில் ஜோன்ஸ்டன் ஒரு தமிழர். இவரது அப்பா குருணாகலின்  ஐ.தே.க சார்பாக நின்று மேயராக (முதல்வர்) இருக்கும் போது என் அப்பாவின் நண்பராக இருந்தவர் ( என் அப்பா குருணாகல் மாநகரசபையின் கணக்காளராக இருந்தமையால்). இவரது அப்பாவால் சரளமாக தமிழ் கதைக்க முடியும். ஜெயராஜ் பெர்ணாந்து புள்ளே போன்று தமிழ் அடையாளத்தை அரசியலுக்காக மறைத்தவர்களில் இவர் குடும்பமும் ஒன்று.

சிங்கள தலைவர்களை போற்றும் தமிழர்கள் சிங்கள மக்களை விட அதிகமாக அவர்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை இவரும் நிரூபிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

அடிப்படையில் ஜோன்ஸ்டன் ஒரு தமிழர். இவரது அப்பா குருணாகலின்  ஐ.தே.க சார்பாக நின்று மேயராக (முதல்வர்) இருக்கும் போது என் அப்பாவின் நண்பராக இருந்தவர் ( என் அப்பா குருணாகல் மாநகரசபையின் கணக்காளராக இருந்தமையால்). இவரது அப்பாவால் சரளமாக தமிழ் கதைக்க முடியும். ஜெயராஜ் பெர்ணாந்து புள்ளே போன்று தமிழ் அடையாளத்தை அரசியலுக்காக மறைத்தவர்களில் இவர் குடும்பமும் ஒன்று.

சிங்கள தலைவர்களை போற்றும் தமிழர்கள் சிங்கள மக்களை விட அதிகமாக அவர்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பதை இவரும் நிரூபிக்கின்றார்.

தகவலுக்கு நன்றி நிழலி .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.