Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி, ரணில் ஆகியோர்.... மக்களின் தீர்மானத்தை, புறந்தள்ளி.... அரசியல் முடிவுகளை எட்டியுள்ளனர் – அநுர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

UPDATE -தாக்குதலைக் கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் போராட்டம்!

ஜனாதிபதி, ரணில் ஆகியோர்.... மக்களின் தீர்மானத்தை, புறந்தள்ளி.... அரசியல் முடிவுகளை எட்டியுள்ளனர் – அநுர

ஜனாதிபதி மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மக்களின் தீர்மானத்தை புறந்தள்ளி அரசியல் முடிவுகளை எட்டியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரணில் நியமிக்கப்படும் விடயமானது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என ஓமல்பே சோபித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஓமல்பே சோபித்த தேரர், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட சமயத்தலைவர்கள் இவ்வாறு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2022/1281645

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயக ரீதியில் பார்த்தால்  சஜித் அல்லது அநுர தான் பிரதமராக வந்திருக்க வேண்டும். 
மகிந்தவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடியவர் ரனில் என்பதால் அவரை தெரிந்து இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

சனநாயக ரீதியில் பார்த்தால்  சஜித் அல்லது அநுர தான் பிரதமராக வந்திருக்க வேண்டும். 
மகிந்தவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடியவர் ரனில் என்பதால் அவரை தெரிந்து இருக்கிறார்கள்.

எங்கடை சம்பந்தர் சுமந்திரனுக்கு அந்த தகுதி இல்லையோ. இந்த சந்தர்ப்பத்திலை ஒரு தமிழ்ச்சிங்களவரை பிரதமராக்கினால் ஒரு கல்லிலை பத்து மாங்காய் அடிக்கலாம் அல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சனநாயக ரீதியில் பார்த்தால்  சஜித் அல்லது அநுர தான் பிரதமராக வந்திருக்க வேண்டும். 
மகிந்தவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க கூடியவர் ரனில் என்பதால் அவரை தெரிந்து இருக்கிறார்கள்.

இல்லை....

சரியான முடிவு. சஜித்திடம் தேவையான எண்ணிக்கை இல்லை......

வேறு யாரும் கொடுக்கவும் மாட்டார்கள்.

இப்போத நிலையில், மொட்டுக்கட்சி ஆதரவே ரணிலுக்கு போதும்.

ஆறுமாதம் பின்னர் மக்களிடம் வருவோம் என்பார், ரணி்ல். அதற்குள், பிரச்சணை முடித்தால், அவரே வெல்லுவார்.

சிலர், கோத்தா, ரணில் கூட்டே, எமது பிரச்சணை தீர்வுக்கும் நல்லது என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் இப்போ ஆடா ? நரியா ? 

சித்து விளையாட்டுகளை ஆரம்பிப்பாரா.? 

IMG-20220512-191755.jpg

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாதவூரான் said:

எங்கடை சம்பந்தர் சுமந்திரனுக்கு அந்த தகுதி இல்லையோ. இந்த சந்தர்ப்பத்திலை ஒரு தமிழ்ச்சிங்களவரை பிரதமராக்கினால் ஒரு கல்லிலை பத்து மாங்காய் அடிக்கலாம் அல்லோ?

அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக வந்த போதே சிங்களவருக்கு எல்லா பக்கமும் எரிந்தது. பிரதமரா?
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இல்லை....

சரியான முடிவு. சஜித்திடம் தேவையான எண்ணிக்கை இல்லை......

வேறு யாரும் கொடுக்கவும் மாட்டார்கள்.

இப்போத நிலையில், மொட்டுக்கட்சி ஆதரவே ரணிலுக்கு போதும்.

ஆறுமாதம் பின்னர் மக்களிடம் வருவோம் என்பார், ரணி்ல். அதற்குள், பிரச்சணை முடித்தால், அவரே வெல்லுவார்.

சிலர், கோத்தா, ரணில் கூட்டே, எமது பிரச்சணை தீர்வுக்கும் நல்லது என்கிறார்கள்.

அப்புறம் என்ன  ஆட்சி  மாற்றம் நடந்தது??

மக்கள்  என்ன புண்ணாக்குகளா???

போராட்டம் தொடர  வாய்ப்புண்டு???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அப்புறம் என்ன  ஆட்சி  மாற்றம் நடந்தது??

மக்கள்  என்ன புண்ணாக்குகளா???

போராட்டம் தொடர  வாய்ப்புண்டு???

நமதுவிருப்பு வெறுப்பு வேறு.

நிதர்சனம் வேறு....

அரசியலமைப்பு சட்டப்படி, ஜனாதிபதி தான் பிரதமரை தெரிவு செய்வார் அன்றி, பாராளுமன்றம் அல்ல.

இது புரியாமல், பிரச்சணை வேணாம் என்று நழுவிய சஜித்திடம் கொடுத்தால், பலம் இல்லாமல் இழுபறி தான்.

மேலும், சந்திரிக்கா, மைத்திரி என்று பழம் ஓநாய்களும், நிமல் சிறிபால, டல்லஸ், விமல், அநுர, வாசுதேவ, கரு ஜயசூரிய என்று பலரும் கிளம்பிவிட்டார்கள்.

இப்ப நாட்டுக்கு அரசியல்  உறுதிப்பாடு தான் தேவை என்று முடிவு எடுத்திருக்கிறார், கோத்தா.

இதுதான் அவரது ஓரே ஒரு சிறந்த முடிவு என்கிறார்கள்.

மேலும், ரணில் இழக்க எதுவுமே இல்லை. இறங்கி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நமதுவிருப்பு வெறுப்பு வேறு.

நிதர்சனம் வேறு....

அரசியலமைப்பு சட்டப்படி, ஜனாதிபதி தான் பிரதமரை தெரிவு செய்வார் அன்றி, பாராளுமன்றம் அல்ல.

இது புரியாமல், பிரச்சணை வேணாம் என்று நழுவிய சஜித்திடம் கொடுத்தால், பலம் இல்லாமல் இழுபறி தான்.

மேலும், சந்திரிக்கா, மைத்திரி என்று பழம் ஓநாய்களும், நிமல் சிறிபால, டல்லஸ், விமல், அநுர, வாசுதேவ, கரு ஜயசூரிய என்று பலரும் கிளம்பிவிட்டார்கள்.

இப்ப நாட்டுக்கு அரசியல்  உறுதிப்பாடு தான் தேவை என்று முடிவு எடுத்திருக்கிறார், கோத்தா.

இதுதான் அவரது ஓரே ஒரு சிறந்த முடிவு என்கிறார்கள்.

மேலும், ரணில் இழக்க எதுவுமே இல்லை. இறங்கி விட்டார்.

இப்ப கோத்தா இருக்கும் நிலையில், அவர் நல்ல முடிவு எடுத்துள்ளார், அவரின் பதவியையும் தக்க வைக்கலாம்,  கொஞ்ச காலம் மக்களின் வாயை அடக்கலாம், என்று நினைத்துள்ளார். அவர்தான் அந்த குடும்பத்தில் அதிகாரத்தில் இருக்கும் ஒரே ஆள், பதவி இறங்கினால், அந்த குடும்பம் எல்லாரையும் முடித்து விடுவார்கள். பொருளாதார பிரச்சனையின் ஆழத்தை பார்க்கும் பொது, ரணிலால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது, அதுவும் கோதாவுக்கு கீழே இருக்கும்போது இன்னும் கடினம். பிரச்னை எனவோ இப்போதைக்கு தீரப்போவதில்லை. 

1 hour ago, விசுகு said:

அப்புறம் என்ன  ஆட்சி  மாற்றம் நடந்தது??

மக்கள்  என்ன புண்ணாக்குகளா???

போராட்டம் தொடர  வாய்ப்புண்டு???

உங்கள் கவலை புரியுது, அதே கவலைதான் எனக்கும் 😀

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நீர்வேலியான் said:

இப்ப கோத்தா இருக்கும் நிலையில், அவர் நல்ல முடிவு எடுத்துள்ளார், அவரின் பதவியையும் தக்க வைக்கலாம்,  கொஞ்ச காலம் மக்களின் வாயை அடக்கலாம், என்று நினைத்துள்ளார். அவர்தான் அந்த குடும்பத்தில் அதிகாரத்தில் இருக்கும் ஒரே ஆள், பதவி இறங்கினால், அந்த குடும்பம் எல்லாரையும் முடித்து விடுவார்கள். பொருளாதார பிரச்சனையின் ஆழத்தை பார்க்கும் பொது, ரணிலால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது, அதுவும் கோதாவுக்கு கீழே இருக்கும்போது இன்னும் கடினம். பிரச்னை எனவோ இப்போதைக்கு தீரப்போவதில்லை. 

உங்கள் கவலை புரியுது, அதே கவலைதான் எனக்கும் 😀

இல்லை..... நான் நிணைக்கிறேன்.....

இந்தியா, அமேரிக்க வாழ்த்துக்கள் பார்க்கும் போது, கோத்தாவுக்கு சில உறுதி மொழிகள் உடன் இரண்டொரு வாரங்களிலில் கோத்தா வெளியே போக, ரணில் சட்டபூர்வமாக ஜனாதிபதி ஆவார்.

அதன் பின்னர் தான் ஸ்ராலினின் பொருட்கள், இந்திய, மேற்கு பண உதவி வந்து சேரும்.

மக்களும், அட இவரல்லோ தெய்வம் என்று வீடு போவர்.

சீனாக்காரன் தான் முழுசப்போறான்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

சீனாக்காரன் தான் முழுசப்போறான்.

அம்பாந்தோட்டையை சீனாக்காரனுடன் டீல்  பேசி வித்தவரும்  இவர்தானே ராஜபக்ச ஆட்சியில் தொடங்கியது இவர் முடித்துவைத்தவர் மைத்திரியின் ஆட்சியில் .

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அப்புறம் என்ன  ஆட்சி  மாற்றம் நடந்தது??

மக்கள்  என்ன புண்ணாக்குகளா???

போராட்டம் தொடர  வாய்ப்புண்டு???

கோத்தா கோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்னும் கலையவில்லை விசுகு! களத்தில காத்திருக்கிறார்கள், கோத்தாவை ஆட்டமிழக்க வைக்காமல் களத்தை விட்டு வெளியேறுவதில்லையாம். ஆனால் கோத்தா; களமிறங்காமலே முடிவை தெரிவித்துவிட்டார். ரணிலும் சேர்ந்து விரட்டப்பட்டாலும் ஆச்சரியமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.