Jump to content

பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அதிகளவு செயற்கை உரத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி

பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி!

மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவையாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கொழும்பு- கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வுஎ மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட ஏனைய அரச நிறுவனங்களையும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்குவதன் மூலம் அந்த சேவைகளை மிகவும் திறமையாக வழங்க முடியும் என்றும் இவ்வாறான முக்கிய நிறுவனங்களை ஒன்றோடு ஒன்று இணைப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றன என்றும் நாட்டின் அறுவடை விநியோகத்தின்போது, சுமார் 40 சதவீதம் அழிக்கப்படுகிறதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடுமையான அவதானம் செலுத்துவதன் மூலம் பாரியளவிலான உணவுப் பொருட்களை பாதுகாக்க முடியும் என்றும் அறுவடையை விநியோகிப்பதில் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலையை வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த நிறுவனங்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் வெற்றிகரமான பிரதிபலன்களை அடைய முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1287157

Link to comment
Share on other sites

இது மனோ கணேசன் பாராளுமன்றத்தில் பல நாட்களுக்கு முன் முன்மொழிந்த திட்டம். இப்போதுதான் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தமிழர்கள் இதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று பார்ப்பம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் பிடித்து வைத்திருக்கின்ற... தோட்டக் காணிகள் எல்லாம்..
அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கப் போகுது, போலை கிடக்கு. 🙃

  • Like 1
Link to comment
Share on other sites

5 minutes ago, தமிழ் சிறி said:

இராணுவம் பிடித்து வைத்திருக்கின்ற... தோட்டக் காணிகள் எல்லாம்..
அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கப் போகுது, போலை கிடக்கு. 🙃

தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கிறார்கள் என்றால் இந்தக் காரணத்தை வைத்து இராணுவ ஆக்கிரமிப்புக் காணிகளை அவர்கள் விடுவிக்க முயல வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கிறார்கள் என்றால் இந்தக் காரணத்தை வைத்து இராணுவ ஆக்கிரமிப்புக் காணிகளை அவர்கள் விடுவிக்க முயல வேண்டும்.

தமிழர் தரப்பு அரசியல்வாதிகள்... தமக்கு சம்பந்தம் இல்லாத,
மற்றைய இனத்தின்... அரசியலுக்கு வக்காலத்து வாங்குவார்களே தவிர,

தமிழ் மக்களால் தெரிவு செய்யப் பட்ட, தமது மக்களுக்காக..
ஒரு கோட்டில்... வரவே மாட்டார்கள்.

இது.. கடந்த கால அனுபவம். 
அதனை பார்க்க... இவர்கள் மீது வெறுப்புதான் வருகின்றது.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கமநல சேவை அலுவலகத்தில் இருப்பவர்களின் வேலை கானாது அல்லது வேலையே செய்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பயிர்ச் செய்கையில்... ஆர்வமுள்ள இளைஞர்களிடம், அரசுக்கு சொந்தமான... நிலங்களை ஒப்படைக்கவும் – ஜனாதிபதி

அரசு அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

வலி வடக்கு பலாலி மேற்கை விட்டால் நான் லண்டனில் இருந்து சென்று உற்பத்தியை மேற்கொள்ள தயாரக இருக்கின்றேன் வளமான 100 பரப்பு சொந்த காணி இருக்கிறது

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

எப்படி…?

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

மீரா....

காசிருந்தால்.... சொல்லுங்க..... என்ன சாமான் எங்க டெலிவரி வேண்டும் எண்டு.... தமிழகத்தில் அல்லது கேரளத்தில் இருந்து எடுப்பிக்கலாம்.

உதைதான் சொன்னார்கள்..... சிங்களவருக்கு, இலங்கையை விட்டால் நாதியில்லை என்று.... முடிந்தால், தமிழகத்தில் இருந்து ஒரு அரிசி மூட்டை இறக்கி காட்டட்டும்...

தமிழருக்கு..... உலகமெல்லாம்..... நாதியுண்டு.

21 hours ago, தமிழ் சிறி said:

இராணுவம் பிடித்து வைத்திருக்கின்ற... தோட்டக் காணிகள் எல்லாம்..
அதன் உரிமையாளர்களுக்கு கிடைக்கப் போகுது, போலை கிடக்கு. 🙃

இராணுவம் வீட்ட போகிற நிலைப்பாடு. சம்பளம் கொடுக்க காசில்லை. 😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

மீரா....

காசிருந்தால்.... சொல்லுங்க..... என்ன சாமான் எங்க டெலிவரி வேண்டும் எண்டு.... தமிழகத்தில் அல்லது கேரளத்தில் இருந்து எடுப்பிக்கலாம்.

உதைதான் சொன்னார்கள்..... சிங்களவருக்கு, இலங்கையை விட்டால் நாதியில்லை என்று.... முடிந்தால், தமிழகத்தில் இருந்து ஒரு அரிசி மூட்டை இறக்கி காட்டட்டும்...

தமிழருக்கு..... உலகமெல்லாம்..... நாதியுண்டு.

சிங்களவருக்கு... சீனா, ஜப்பான் எல்லாம் இருக்கு என்று முன்பு நினைத்தனான்.  
இப்ப பார்க்க... அவங்கள், தங்களுடைய காரியம் பார்ப்பதில், குறியாக இருக்கிறார்கள்.

4 minutes ago, Nathamuni said:

இராணுவம் வீட்ட போகிற நிலைப்பாடு. சம்பளம் கொடுக்க காசில்லை. 😁

எந்தக் காரணம் கொண்டும், 
இராணுவத்தை குறைக்க மாட்டேன்  என்று, கோத்தா சொல்லியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

எந்தக் காரணம் கொண்டும், 
இராணுவத்தை குறைக்க மாட்டேன்  என்று, கோத்தா சொல்லியுள்ளார்.

இப்படி கதைவிட்ட மகிந்த எங்க?

ஜஎம்எப்... நிபந்தனைபடி அரச ஊழியர் ஜந்து வருடம்... வெளிநாடு போகலாம் என்று முதல் பந்து அடிச்சாச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மீரா....

காசிருந்தால்.... சொல்லுங்க..... என்ன சாமான் எங்க டெலிவரி வேண்டும் எண்டு.... தமிழகத்தில் அல்லது கேரளத்தில் இருந்து எடுப்பிக்கலாம்.

உதைதான் சொன்னார்கள்..... சிங்களவருக்கு, இலங்கையை விட்டால் நாதியில்லை என்று.... முடிந்தால், தமிழகத்தில் இருந்து ஒரு அரிசி மூட்டை இறக்கி காட்டட்டும்...

தமிழருக்கு..... உலகமெல்லாம்..... நாதியுண்டு.

நாதம்ஸ், கள்ளச் சந்தையில் பொருட்கள் வாங்கி விவசாயம் செய்ய முடியாது.

மேலும் பெற்றோல் 950/= , 1000/= என்று போகிறது. டீசல் 850/= வரை போகிறது. U.K. விலையிலும் கூட. எரிவாயு 15,000/=. எல்லாத் தமிழர்களுக்கும் வெளிநாட்டு உதவி இல்லையே…!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

நாதம்ஸ், கள்ளச் சந்தையில் பொருட்கள் வாங்கி விவசாயம் செய்ய முடியாது.

மேலும் பெற்றோல் 950/= , 1000/= என்று போகிறது. டீசல் 850/= வரை போகிறது. U.K. விலையிலும் கூட. எரிவாயு 15,000/=. எல்லாத் தமிழர்களுக்கும் வெளிநாட்டு உதவி இல்லையே…!

 

லண்டன் ரஞ்சன் கேள்வி, உங்கள் பதில்.... உடன் தொடர்பானதே எனது பதிவு.....

மற்றும்படி.... நீங்கள் சொன்னதில் தவறேதும் இல்லை. ஆயினும் சிங்களவர்களிலும் பார்க்க... தமிழர்கள் இந்த பிரச்சணையை சமாளிக்க அனுபவமும், வாய்ப்பும், உதவியும் உண்டு என்று சொல்ல வந்தேன்.

சிங்களவர்.... ஏதோ... தமக்கு மட்டுமே இலங்கையில் வாழ்க்கை என்று நிணைத்தாடியவர்கள், தமிழக உதவியை கூட.... தமக்கும் சேர்த்து அனுப்புமாறு கோரினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

லண்டன் ரஞ்சன் கேள்வி, உங்கள் பதில்.... உடன் தொடர்பானதே எனது பதிவு.....

மற்றும்படி.... நீங்கள் சொன்னதில் தவறேதும் இல்லை. ஆயினும் சிங்களவர்களிலும் பார்க்க... தமிழர்கள் இந்த பிரச்சணையை சமாளிக்க அனுபவமும், வாய்ப்பும், உதவியும் உண்டு என்று சொல்ல வந்தேன்.

சிங்களவர்.... ஏதோ... தமக்கு மட்டுமே இலங்கையில் வாழ்க்கை என்று நிணைத்தாடியவர்கள், தமிழக உதவியை கூட.... தமக்கும் சேர்த்து அனுப்புமாறு கோரினர்.

உண்மை சிங்களவர்கள் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டார்கள். 

அரசும் இதை உணர்ந்து சதோச விற்கு ஊடாக சில பொருட்களை விநியோகம் செய்கிறது.

கடவுச்சீட்டு எடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் நிற்கிறார்கள். எட்டாம் மாதம் முதற்கிழமைதான் முன்பதிவு செய்ய கூடியதாக உள்ளது. 

 

Link to comment
Share on other sites

3 hours ago, MEERA said:

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

வன்னி நிலம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இவையெல்லாம் இல்லாமலும் விவசாயம் செய்யப்பட்டது. விவசாயம் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது மாற்று வழிகள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, இணையவன் said:

வன்னி நிலம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இவையெல்லாம் இல்லாமலும் விவசாயம் செய்யப்பட்டது. விவசாயம் செய்தே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது மாற்று வழிகள் உண்டு.

13 வருடங்களுக்கு முன்னர் நடந்தவைகளை இன்று நடைமுறைப்படுத்த இயலாத நிலமை. அவற்றை பேசி இனி பயன் இல்லை. 

பூக்கன்றுகளுக்கே செயற்கை உரங்களை பயன்படுத்தும் நிலையில் மக்கள் சோம்பேறிகளாக.

Edited by MEERA
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Nathamuni said:

தமிழக உதவியை கூட.... தமக்கும் சேர்த்து அனுப்புமாறு கோரினர்.

தவறான தகவல், நாதம்ஸ்.
சிங்களவர் கேட்க முதல்...  தமிழர்கள் பலரும், 
சிங்களத்துக்கும் சேர்த்து உதவி செய்வதுதான் 
சரியாக இருக்கும் என்று, தமிழக முதல்வர்  ஸ்ராலினிடம் கூறியவர்கள். 
(சுமந்திரன், குணா கவியழகன் போன்றோர்.)

ஏனென்றால்... எமக்கு மட்டும், தமிழகத்தில் இருந்து உதவி வந்து...
நாம் அதனை... பயன்படுத்தும் போது, பசியில் உள்ள சிங்களவருக்கு..
எம் மீது, பயங்கர ஆத்திரத்தை ஏற்படுத்துவதுடன்....  
கலவரத்தைக் கூட உருவாக்கலாம் என்று கருதியதால்...
அப்படி கேட்டது, சரியான அணுகு முறை என்றே நினைக்கின்றேன்.

அத்துடன்... தமிழருக்கு மட்டும், தமிழக அரசு உதவி செய்வதாக இருந்தால்...
அத்த உதவியை... இந்திய ஒன்றிய அரசும், இலங்கை அரசும் 
நிச்சயம்  அனுமதித்து இருக்க மாட்டாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, MEERA said:

உண்மை சிங்களவர்கள் அடுத்த கட்டத்திற்கு வந்துவிட்டார்கள். 

அரசும் இதை உணர்ந்து சதோச விற்கு ஊடாக சில பொருட்களை விநியோகம் செய்கிறது.

கடவுச்சீட்டு எடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் நிற்கிறார்கள். எட்டாம் மாதம் முதற்கிழமைதான் முன்பதிவு செய்ய கூடியதாக உள்ளது. 

 

கடவுச்சீட்டு எடுக்க லைனில் நிற்கத்தான் வேணும் போல கிடக்கு 8மாதம் 17 ற்கு பிறகுதான் எனக்கும் டேற் கொடுத்து இருக்கானுகள் நாட்டை விட்டு போக எத்தன பேரு யெப்பா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

கடவுச்சீட்டு எடுக்க லைனில் நிற்கத்தான் வேணும் போல கிடக்கு 8மாதம் 17 ற்கு பிறகுதான் எனக்கும் டேற் கொடுத்து இருக்கானுகள் நாட்டை விட்டு போக எத்தன பேரு யெப்பா 

நேற்று மாலை4ம் திகதிக்கு இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

நேற்று மாலை4ம் திகதிக்கு இருந்தது.

காலை 11 மணிக்கு இடையில் இத்தனை பேரா ஏற்கனவே போட்டோ எடுத்ததால் என்னவோ தெரியல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

முடியும் யாழ்ப்பாணத்தானால் ...செய்து காட்டி வாழந்தவன்....கல் உடைத்து கிணறு வெட்டி துலா மித்து விவாசயம் செய்தவன் ...ஒரு காலத்தில் இந்த மண்ணின் இந்த செயலை பாடப்புத்தகத்தில் எழுதி படிப்பித்தவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, MEERA said:

எப்படி…?

உழவு இயந்திரத்திற்கு டீசல் இல்லை

பசளை / உரம் இல்லை 

 வாகனங்களுக்கான OIL இல்லை

இயந்திரங்களுக்கான உதிரிப் பாகங்கள் இல்லை 

பொதி செய்வதற்கான பைகள் இல்லை 

இப்படி பல இல்லைகளை  மீறி எப்படி

ஆகாயத்திலிருந்தா வர வழைப்பது????

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/6/2022 at 23:58, ஈழப்பிரியன் said:

அரசு அடாத்தாக பிடித்து வைத்திருக்கும் நிலங்களையும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

இவற்றைத்தான் அரசுக்கு சொந்தமான நிலங்கள் என்று சொந்தம் கொண்டாடுகிறார்களோ? சிங்கள இளைஞர்களுக்கே இந்த அறிவித்தல் எல்லாம், எங்களுக்கல்ல. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 11:30 AM ஆர்.ராம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உள்ளகப் பொறிமுறையிலேயே தீர்வுகள் காணப்பட வேண்டும். வெளியகத் தலையீடுகள் காணப்படும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தல் அதிகரிக்கும் நிலைமைகளே ஏற்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மக்கள் 15 ஆண்டுகளாக ஐக்கிய இலங்கைக்குள்ளே கௌரவமாக வாழ்வதற்கு விரும்புகின்ற நிலையில் அவர்களின் பிரச்சினைகளையும்,  கோரிக்கைகளையும் உள்நாட்டுக்குள்ளேயே தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் விரைந்து எடுத்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். போர் நிறைவடைந்து 15 ஆண்டுகளாகின்ற போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக நீதிக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றதோடு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கான அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும்  கட்டியெழுப்புவதிலும் நாம் அதிகளவான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். குறிப்பாக, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றை வினைத்திறனுடன் செயற்படுவத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதுநேரம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்த நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையும் தற்போது கிடைக்கபெற்றுள்ளது. அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையில்ரூபவ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினை வழங்குவதில் நாம் கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அத்துடன் இன முரண்பாடுகளுக்கு முழுமையான தீர்வினை எட்டுவதிலும் கரினைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் நடைமுறைச்சாத்தியமான வகையிலேயே பிரச்சினைகளை கையாள்வதற்கு முனைகின்றோம். குறிப்பாக உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்ட முடியும். வெளியகப் பொறிமுறைகள் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை. ஆகவே சர்வதேசத்தினை மையப்படுத்திய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் பிரச்சினைகளே மேலும் அதிகரிக்கும். குறிப்பாக வெளியகத்தாரின் தலையீடுகள் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலையே அதிகமாக்கும். எனவேதான், இனங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் உள்ள ரீதியிலான தேசியப் பொறிமுறை ஊடாக பயணிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும். இந்த விடயத்தில் தமிழ் மக்களும் ஏனைய சிறுபான்மை மக்களும் நியாயனதொரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அழைப்பினை நான் பகிரங்கமாக விடுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/185096
    • 02 JUN, 2024 | 11:24 AM   தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பொதுசன நூலகம் எரிக்கப்பட்டு 43வது ஆண்டு நினைவேந்தல் நேற்று சனிக்கிழமை (01) மாலை நூலக முன்றலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்துகொண்டு  நினைவேந்தலுக்கான முதல் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து, ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் இதில் பங்கெடுத்து தமது ஆழ்ந்த இரங்கலினை வெளிப்படுத்தினர்.  https://www.virakesari.lk/article/185089
    • 01 JUN, 2024 | 11:27 PM   யாழில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்து தலையில் தீ மூட்டிய சம்பவமொன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக  சந்தேக நபரை பொலிசார் கைது செய்தனர். யாழ் நகரிற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இப் பரபரப்புச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, 42 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவரை ஆண் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு யாழ் குருநகர் பகுதியில் உள்ள சவக்காலைப் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண், பெண் மீது தலையில் பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில்  எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185082
    • 01 JUN, 2024 | 11:22 PM யாழ்ப்பாணம்,  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சின்னமடு பகுதியில் வீதிக்கு அருகேயுள்ள குட்டை போன்ற சிறிய நீர்நிலை ஒன்றில் இருந்து இரண்டு சிறுவர்களின் சடலங்கள் இன்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் மீட்கப்பட்டுள்ளன. 11 வயதுடைய நிரோசன் விதுசா, 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா என்ற இரண்டு சிறுவர்களுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவர்கள் துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றிருந்தனர். கடைக்கு சென்ற சிறுவர்களை காணவில்லை என தேடிய உறவினர்கள் வீதிக்கு அருகேயுள்ள குட்டையில் அவர்கள் இருவரது சடலங்களையும் அவதானித்துள்ளனர்.  இருவரும் துவிச்சக்கர வண்டியுடன் தவறுதலாக குட்டையில் விழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் இருவரது சடலங்களும் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/185081
    • Published By: DIGITAL DESK 7   02 JUN, 2024 | 09:58 AM (லியோ நிரோஷ தர்ஷன்) 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இந்த வாரம் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையடல் 5ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைவார்கள் என்று கூறப்படுவதுடன், அந்த வகையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன முதலில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய பேச்சுவார்த்தைகள் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது. அந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 17ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடுவதை உறுதியாக அறிவிக்க வேண்டும் என்பது பொதுஜன பெரமுன உட்பட அவருக்கு ஆதரவு வழங்கும் தரப்புகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறானதொரு நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தரப்பினரை ஒன்றிணைத்து அரசாங்கத்தில் இணையுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். மறுபுறம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அறிவிக்க உத்தேசித்துள்ளதாக மஹிந்த ராஜபகஷ ஜனாதிபதிக்கு தகவல் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் வரும் புதன்கிழமை ஜனாதிபதிக்கும் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. மறுபுறம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியினர் 8ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளனர். இந்த கூட்டத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்பாடு செய்கின்றார். அத்துடன் அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஏற்பாட்டில் மாத்தறையில் எதிர்வரும் 16ஆம் திகதி கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185092
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.