Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு தேவையான... அனைத்து உதவிகளையும் செய்வதாக, மீண்டும் உறுதியளித்தது இந்தியா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழு நாட்டிற்கு விஜயம்!

இலங்கைக்கு தேவையான... அனைத்து உதவிகளையும் செய்வதாக, மீண்டும் உறுதியளித்தது இந்தியா!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு இடையில் பெற்றோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான பல அவசர விடயங்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

புதுடில்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர விவகார அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) மிலிந்த மொரகொட மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோலிய உற்பத்தி, விநியோகம் மற்றும் விநியோகத்தில் இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் மற்றும் சிரமங்கள் குறித்து உயர்ஸ்தானிகர் மொரகொட, இந்திய அமைச்சர் ஜூரிக்கு விளக்கமளித்துள்ளார்.

தற்போது இலங்கைக்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசலை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு சாதகமாக பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

https://athavannews.com/2022/1288768

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இதற்கு சாதகமாக பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ஐயா பூரி , முதலில் குழந்தைகளுக்கு தேவையான பால்மா , வெதுப்பகம் மற்றும் கொத்து , பூரி செய்வதற்கு உரிய கோதுமையை கொடும் ஐயா..👌

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசு கொடுத்த அரிசியினால் மலையக மக்கள் ஏழை மக்கள் பசியாறினாலும் கொஞ்சம் தரமானதாக இருக்கும் அரிசியை வழங்குங்கள் .

சோறு பொங்கும் போது வீட்டுக்குள் இருக்க முடியவில்லை மணம் தாங்க முடியல 🧐🧐

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

இலங்கைக்கு தேவையான... அனைத்து உதவிகளையும் செய்வதாக, மீண்டும் உறுதியளித்தது இந்தியா!

நிதியால் வீழ்ந்த இலங்கையை சதி ஏறி மிதிக்கிறது.🤫

th?id=OIP.rjqODyXFLJjKfvINgdEYWgHaEK&pid=Api&P=0&w=293&h=165

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவின் இன்றைய நிலைமை இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம்.......வாழவும் விடாது, சாகவும் விடாது.....கோமாவிலேயே வைத்திருக்கும்......தமிழரை அழிக்கிறன் சிங்களமக்களை முற்று முழுதாக பேய்காட்டிவிட்டு இன்று அந்த மக்களையே நடுத்தெருவில் கொண்டுவந்து இருத்தி விட்டிருக்கிறார்கள்.......!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சியில் இருந்த யோக்கியமானவர்களையே சாரும்......இந்தப் பாவம் எல்லாம் இவர்களை மட்டுமல்ல இவர்களின் சந்ததிகளையே கருவறுக்கும்......!

" ஏழை அழுத்த கண்ணீர் கூறிய வாளை ஒக்கும்"....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, suvy said:

ஸ்ரீலங்காவின் இன்றைய நிலைமை இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம்.......

நான் ஊரில் உள்ளவர்களுடன் தொலைபேசியில் கதைத்த போது அவர்களும் இதையே சொன்னார்கள். இந்தியா இந்த நிலைகாகத்தான் பத்து வருடங்கள் காத்திருந்ததாக...
எல்லாம் பிராந்திய அரசியல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்திய அரசு கொடுத்த அரிசியினால் மலையக மக்கள் ஏழை மக்கள் பசியாறினாலும் கொஞ்சம் தரமானதாக இருக்கும் அரிசியை வழங்குங்கள் .

சோறு பொங்கும் போது வீட்டுக்குள் இருக்க முடியவில்லை மணம் தாங்க முடியல 🧐🧐

எல்லாம் பேரும் புகழுக்கு மட்டும் தான்......
ரேசன் அரிசி ஒருவித மணம் மணக்கும் என்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ரேசன் அரிசி அங்கு கோழிக்கு போடுவது.தானம் கொடுத்த மாட்டை பல்லை பாக்க கூடாது என்டும் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, சுவைப்பிரியன் said:

ரேசன் அரிசி அங்கு கோழிக்கு போடுவது.தானம் கொடுத்த மாட்டை பல்லை பாக்க கூடாது என்டும் சொல்வார்கள்.

அன்னதானம் கொடுத்தாலும் தரமானதாக கொடுக்க வேண்டும். :406:

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக கிணறு

மலசலகூடம்  வைத்திருக்கும்  நீங்கள்

எதுக்கு தமிழீழம்  கேட்கிறீர்கள்  என்ற  தரமுள்ளவர்களிடம்

வரம்  கேட்டால்?????😭

4 hours ago, suvy said:

ஸ்ரீலங்காவின் இன்றைய நிலைமை இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம்.......வாழவும் விடாது, சாகவும் விடாது.....கோமாவிலேயே வைத்திருக்கும்......தமிழரை அழிக்கிறன் சிங்களமக்களை முற்று முழுதாக பேய்காட்டிவிட்டு இன்று அந்த மக்களையே நடுத்தெருவில் கொண்டுவந்து இருத்தி விட்டிருக்கிறார்கள்.......!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சியில் இருந்த யோக்கியமானவர்களையே சாரும்......இந்தப் பாவம் எல்லாம் இவர்களை மட்டுமல்ல இவர்களின் சந்ததிகளையே கருவறுக்கும்......!

" ஏழை அழுத்த கண்ணீர் கூறிய வாளை ஒக்கும்"....!

 

மிகவும்  ஈசியாக தமிழருடன் பேசி நாட்டை முழுமையாக நிரந்தரமாக  காக்கும் வழியிருக்க...

குரங்கிடம்....???

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எல்லாம் பேரும் புகழுக்கு மட்டும் தான்......
ரேசன் அரிசி ஒருவித மணம் மணக்கும் என்பார்கள்.

ஊறல் மணம் அண்ண அரிசி ஒரு நாள் சமைத்தோம் கறி ஒட்ட வில்லை சோறில் தனித்தனி பருக்கையாக இருந்தது

அரிசியை பதுக்கல் வியாபாரிகள் பதுக்கியதால் அரிசி கிடைக்கவில்லை அதனால் அந்த இந்தியா கொடுத்த அரிசி சமைக்க நேர்ந்தது ஆனால் மகளுக்கு கொடுத்தபோது மகள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள அந்த சோற்றை உண்டதால்.

அடுத்த அடுத்த நாள் சமைக்க எடுக்கவில்லை அந்த அரிசியை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஊறல் மணம் அண்ண அரிசி ஒரு நாள் சமைத்தோம் கறி ஒட்ட வில்லை சோறில் தனித்தனி பருக்கையாக இருந்தது

அரிசியை பதுக்கல் வியாபாரிகள் பதுக்கியதால் அரிசி கிடைக்கவில்லை அதனால் அந்த இந்தியா கொடுத்த அரிசி சமைக்க நேர்ந்தது ஆனால் மகளுக்கு கொடுத்தபோது மகள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள அந்த சோற்றை உண்டதால்.

அடுத்த அடுத்த நாள் சமைக்க எடுக்கவில்லை அந்த அரிசியை

என்ன செய்வது. வாசிக்கவே விசர் வருகின்றது. அனுபவிக்கும் மக்களுக்கு எப்படியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

ஸ்ரீலங்காவின் இன்றைய நிலைமை இந்தியாவுக்கு ஒரு வரப்பிரசாதம்.......வாழவும் விடாது, சாகவும் விடாது.....கோமாவிலேயே வைத்திருக்கும்......தமிழரை அழிக்கிறன் சிங்களமக்களை முற்று முழுதாக பேய்காட்டிவிட்டு இன்று அந்த மக்களையே நடுத்தெருவில் கொண்டுவந்து இருத்தி விட்டிருக்கிறார்கள்.......!

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த ஆளுங்கட்சி எதிர்க்கட்சியில் இருந்த யோக்கியமானவர்களையே சாரும்......இந்தப் பாவம் எல்லாம் இவர்களை மட்டுமல்ல இவர்களின் சந்ததிகளையே கருவறுக்கும்......!

" ஏழை அழுத்த கண்ணீர் கூறிய வாளை ஒக்கும்"....!

நன்றி உங்கள் கருத்துக்கு .

6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஊறல் மணம் அண்ண அரிசி ஒரு நாள் சமைத்தோம் கறி ஒட்ட வில்லை சோறில் தனித்தனி பருக்கையாக இருந்தது

அரிசியை பதுக்கல் வியாபாரிகள் பதுக்கியதால் அரிசி கிடைக்கவில்லை அதனால் அந்த இந்தியா கொடுத்த அரிசி சமைக்க நேர்ந்தது ஆனால் மகளுக்கு கொடுத்தபோது மகள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள அந்த சோற்றை உண்டதால்.

அடுத்த அடுத்த நாள் சமைக்க எடுக்கவில்லை அந்த அரிசியை

உங்கள் உடல்நலனில் கவனமாக இருங்கள் இதை சொல்வதை தவிர இப்போதைக்கு வேறுவழியில்லை .இன்று ஒரு நண்பன் கொழும்பு ஏர்  போர்ட்டில் நின்று படம் போட்டார்அவரை  தவிர இறங்கும் பகுதியில் ஒருத்தரும் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

சொந்தமாக கிணறு

மலசலகூடம்  வைத்திருக்கும்  நீங்கள்

எதுக்கு தமிழீழம்  கேட்கிறீர்கள்  என்ற  தரமுள்ளவர்களிடம்

வரம்  கேட்டால்?????

இந்தியன் ஆமிக்காலத்தில் எம்மக்களிடம் இந்தக்கேள்வி கேட்கப்பட்டதாக அறிந்தேன்.

12 hours ago, குமாரசாமி said:

எல்லாம் பேரும் புகழுக்கு மட்டும் தான்......
ரேசன் அரிசி ஒருவித மணம் மணக்கும் என்பார்கள்.

குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் குட்டுப்படணும்.

7 hours ago, விசுகு said:

மிகவும்  ஈசியாக தமிழருடன் பேசி நாட்டை முழுமையாக நிரந்தரமாக  காக்கும் வழியிருக்க...

குரங்கிடம்....???

ஆடி, ஓடி, களைத்து கடைசியாய் அங்கதான் வந்து நிக்கவேணும்! விடுங்கள்! சிந்திக்கத் தெரியாத முட்டாள்களை, ஓடிக்களைக்கட்டும்.

17 hours ago, தமிழ் சிறி said:

அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்த முக்கியமான தருணத்தில் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

ஆடு நனையுதென்று அழுததாம் ஒநாயொன்று.

சும்மா தொடுகிற மூக்கை சுத்தித்தான் தொடுவேன் என்று அலைகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/6/2022 at 03:08, குமாரசாமி said:

என்ன செய்வது. வாசிக்கவே விசர் வருகின்றது. அனுபவிக்கும் மக்களுக்கு எப்படியிருக்கும்.

அதுதான் எங்கேயாவது ஓட வேண்டும் என்ற எண்ணம் எங்க போனாலும் லைன்ல நிற்க வேணூம் எப்படி விசர் வரும் சொல்லுங்க லைன்ல 3 பணி நேரம் அல்லது 4 மணி நேரம் கால்கடுக்க நிற்க நாம் போகும் போது பொருள் முடிவடையும் அல்லது கரண்ட் போகும் பெற்றோலுக்கு லைனில் நின்று செல்ல எனது நேரம் பார்த்து கரண்டு கட்டாகும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதுதான் எங்கேயாவது ஓட வேண்டும் என்ற எண்ணம் எங்க போனாலும் லைன்ல நிற்க வேணூம் எப்படி விசர் வரும் சொல்லுங்க லைன்ல 3 பணி நேரம் அல்லது 4 மணி நேரம் கால்கடுக்க நிற்க நாம் போகும் போது பொருள் முடிவடையும் அல்லது கரண்ட் போகும் பெற்றோலுக்கு லைனில் நின்று செல்ல எனது நேரம் பார்த்து கரண்டு கட்டாகும் 

 உங்கள் நிலைமை புரிகின்றது. மன வருத்தமாக இருக்கின்றது. இலங்கை இவ்வளவு சீரழியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.