Jump to content

டளஸ் அழப்பெரும எனும் தெற்கின் அதிதீவிர சிங்கள இனவாதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

PM praises South Asian Games medal winners | Page 3 | Daily News

இந்த டளஸ் அழப்பெரும (அழகப் பெருமாள் இல்லை) எனும் ஒப்பாரற்ற நாயகனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாக நிலையெடுத்திருக்கும் நிலையில், இந்த அழப்பெரும பற்றிய சில விடயங்களை முன்வைப்பது சாலப்பொறுத்தம் என்பதால் இங்கே முன்வைக்கிறேன்,

220715%20Alahapperuma%20%20(1).jpg

1. சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்கு மாறிய அதி தீவிர சிங்கள இனவாதி இவர். மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2005 இல் மகிந்த ராஜபக்ஷெ எனும் இனக்கொலையாளி அரியணை ஏறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் முன்னின்று இனவாதம் கக்கிய ஒருவர்.

220715%20Alahapperuma%20%20(4).jpg

2. 2009 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் டக்கிளஸ் தேவானந்தாவுடன் ஒரே மேடையில் அமர்ந்து, "மகிந்த உங்களுக்கு ஒரு தீர்வைத் தருவார்" என்று கூறிவிட்டு, டக்கிளஸ் அதே மேடையில் கூறிய 13 ஆம் திருத்தம் மூலமான தீர்வினை அங்கிருந்தே, "இல்லையில்லை, நிச்சயமாக அதனைத் தரப்போவதில்லை" என்று கர்ஜித்த மனிதர்.

3. 2012 இல், முதன்முறையாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் விசாரணைபற்றிய தீர்மானங்கள் ஐ நா வில் பேசப்படப்போகும் தறுவாயில் அப்போது இலங்கையின் இளைஞர் விவகார திறன் மேம்பாட்டு அமைச்சராக இருந்த டளஸ் இலங்கையின் 150 உள்ளூராட்சி சபைகளிலும் இந்த தீர்மானத்திற்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியதுடன், " மக்கள் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து ஜனாதிபதியையும் ராணுவத்தையும், நாட்டையும் காக்க ஒன்றிணையவேண்டும்" என்ற கோஷத்தினை தனது ஆர்ப்பாட்டங்களில் திருப்பத் திருப்பக் கூறி வந்தவர்.

4. 2013 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டபோது அதனை முற்றாக நிராகரித்த டளஸ், அது 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஒத்தது என்றும், அது புலிப்பயங்கரவாதிகளின் கழுத்தில் தொங்கும் சயனைட் வில்லைக்குச் சமமானது என்றும் கர்ஜித்தவர்.

5. 2014 இல் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டளஸ், புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதும் நாட்டில் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள், அவர்கள் அப்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் மீண்டும் புலிப்பயங்கரவாதிகளை நாட்டிற்குள் உருவாக்கிவிடுவார்கள் என்று கூறியவர். 


6. 2015 இல் ரணில் அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் தடைகளை நீக்கியபோது அதனைக் கடுமையாக எதிர்த்த டளஸ், பிரிவினைவாத எண்ணங்களுடன் இருக்கும் எந்த புலம்பெயர் அமைப்பும் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிவந்தவர்.

220715%20Alahapperuma%20%20(5).jpg

7. 2015 இல் தீவிர சிங்கள பெளத்த இனவாதிகளான உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோரின் சின்ஹலே அமைப்பில் தன்னையும் இணைத்து தனிச்சிங்களக் கொடியினை கையிலேந்தி தனது இனவாதத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர் டளஸ்.,

220715%20Alahapperuma%20%20(2).JPG

8. 2016 இல் ஐ நா முன்றலில் சிங்கள இனவாதிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டளஸ், "இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்றும், நடந்தது மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை என்றும், இலங்கை ராணுவ வீரர்கள் "யுத்த நாயகர்கள்" என்று கர்ஜித்தவர் இந்த டளஸ். 

220715%20Alahapperuma%20%20(3).JPG

9. 2020 இல் கோத்தாவை வானளவாகப் புகந்த டளஸ், கோத்தாவின் நடவடிக்கைகள்  மூலம் நாடு ஊழல்களிலிருந்தும், லஞ்சங்களிலிருந்தும், போதைவஸ்த்துப் பாவனையிலிருந்தும், பாதாள உலக செயற்பாடுகளிலிருந்தும் விடுபட்டிருக்கிறதென்றும், அனைத்து இன மக்களும் அவரது ஆட்சியில் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் நற்சான்றுப் பத்திரம் கொடுத்தவர்.

10. இன்று இதே டளஸ் இன்னொரு புகழ்பெற்ற போர்க்குற்றவாளி சரத் பொன்சேக்காவுடனும், தெற்கின் இன்னொரு சிங்கள இனவாதி சஜித்துடன் இணைந்தும் ஜனாதிபதியாக முயன்று கொண்டிருக்கிறார்.


எனது கேள்வி என்னவென்றால், இவற்றுள் எதாவது இந்த கூத்தமைப்பு நாயகர்களுக்குத் தெரியுமா தெரியாதா? 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்படி இடையில் வந்தார்.வெளி நாடுகளின் தேர்வா அல்லது போராட்டக்காரர்களின் ரனிலுக்கு எதிரான மாற்றா.எது எப்படியோ ரனிலும் இவரும் மொட்டுக்கட்சியின் ஆட்க்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@ரஞ்சித்

சிங்கள இனவாதம் தற்போது வயிற்றுப் பசியால் சற்றே பதுங்கி உள்ளது….

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எண்ட டவுட்டு என்னவெண்டா..... டல்லசை நம்பி..... தன்னை போட்டியில் இருந்து விடுவித்த சஜித், மீண்டும், மீண்டும் தன்னை வேலைக்காகா அரசியல்வாதி என்று உறுதி செய்து கொண்டிருக்கிறார்.
 

மனோ கணேசன் போன்ற அவரது ஆதரவாளர்கள் கூட அவரை கைவிட்டு, ரணில் பக்கம் தாவியது தெளிவாக தெரிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

எண்ட டவுட்டு என்னவெண்டா..... டல்லசை நம்பி..... தன்னை போட்டியில் இருந்து விடுவித்த சஜித், மீண்டும், மீண்டும் தன்னை வேலைக்காகா அரசியல்வாதி என்று உறுதி செய்து கொண்டிருக்கிறார்.
 

மனோ கணேசன் போன்ற அவரது ஆதரவாளர்கள் கூட அவரை கைவிட்டு, ரணில் பக்கம் தாவியது தெளிவாக தெரிந்தது.

நாதம்ஸ்,

உங்கள் பார்வையில் சொல்வதானால் - சஜித், ரணில் போல விடாமுயற்சி செய்கிறார்😆.

2022 வரைக்குமான ரணிலின் நகர்வுகள் போலவே இப்போதைய சஜித்தின் நகர்வுகள் என்றும் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

நாதம்ஸ்,

உங்கள் பார்வையில் சொல்வதானால் - சஜித், ரணில் போல விடாமுயற்சி செய்கிறார்😆.

2022 வரைக்குமான ரணிலின் நகர்வுகள் போலவே இப்போதைய சஜித்தின் நகர்வுகள் என்றும் கொள்ளலாம்.

அவர் எங்கையா விடாமுயற்சி செய்தார், செய்கிறார்? கோத்தா பிரதமராக வருமாறு முதலில் கேட்டது அவரை.

நீங்கள் வெளியே போங்கோ முதலில் என்று சொன்ன மாங்காய் மடையர் என்று இங்கே கூட விவாதித்தோமே!

வேலை தர வேண்டிய மனேஜரிடம்.... நல்லது.... நீங்கள் ராஜினாமா செய்யுங்கள்.... பின்னர் நான் சேர்ந்து கொள்கிறேன் என்றா கேட்பார்கள்?

காரைநகர் பனித்தியாகர் மாதிரி... இவரும் ஒரு அரசியல் வெத்து வேட்டு.

டல்லஸ் பின்னால் போய் பிரதமர் என்று காவடி தூக்கியிராமல், ஜனாதிபதி ஆக நின்று போட்டியிட்டு தோத்திருக்க வேண்டும்!

வென்றும் இருக்கலாம். என்எம் பெரேராவுக்கு எதிராக நின்று தோற்ற தகப்பனின் அனுபவத்தில் இருந்து பாடம் படிக்கவில்லையே.

அநுர குமார முன்று வாக்குகள் எடுத்தாலும் மானஸ்தன் என்று சொல்லக் கூடிய போட்டியாளன்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Nathamuni said:

 

டல்லஸ் பின்னால் போய் பிரதமர் என்று காவடி தூக்கியிராமல், ஜனாதிபதி ஆக நின்று போட்டியிட்டு தோத்திருக்க வேண்டும்!

இப்படித்தான் ரணில் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடாமல் மைத்திரியை போட்ட போதும் சொன்னார்கள் இல்லையா?

32 minutes ago, Nathamuni said:

காரைநகர் பனித்தியாகர் மாதிரி... இவரும் ஒரு அரசியல் வெத்து வேட்டு.

ரணில் ஒரு எம்பி சீட்டும் வெல்லாது போனபோது இப்படியும் எழுதினார்கள்.

 

நாம் 11 தோல்விகளுக்கு பின் 12 வதாக வெற்றி பெறும் போது - 11 தடவை நம்மை, மொக்கன், வெத்துவேட்டு, தந்தையிடம்/மாமனிடம் இருந்து பாடம் படிக்கத்தெரியாதவன் என்று கூறும் அதே வாய்கள்தான் 12வது வெற்றியின் பின் நம்மை விடாமுயற்சியின் சிகரம் என்றும் போற்றும். இதுதான் உலக நியதி

- உடான்ஸ் சாமியார் - 

பிகு

இதனால் சஜித் இனி வெல்லுவார் என்பதில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

இப்படித்தான் ரணில் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடாமல் மைத்திரியை போட்ட போதும் சொன்னார்கள் இல்லையா?

ரணில் ஒரு எம்பி சீட்டும் வெல்லாது போனபோது இப்படியும் எழுதினார்கள்.

 

நாம் 11 தோல்விகளுக்கு பின் 12 வதாக வெற்றி பெறும் போது - 11 தடவை நம்மை, மொக்கன், வெத்துவேட்டு, தந்தையிடம்/மாமனிடம் இருந்து பாடம் படிக்கத்தெரியாதவன் என்று கூறும் அதே வாய்கள்தான் 12வது வெற்றியின் பின் நம்மை விடாமுயற்சியின் சிகரம் என்றும் போற்றும். இதுதான் உலக நியதி

- உடான்ஸ் சாமியார் - 

பிகு

இதனால் சஜித் இனி வெல்லுவார் என்பதில்லை. 

அப்படி இல்லை, உடான்சர்.

சஜித் எதிர்கட்சி தலைவர். தனது கட்சிக் கொள்கைகளை (?) கடாசி விட்டு, வேறு ஒரு மக்களால் நிராகிரிக்கப்பட்டு, பிரதமர், நிதியமைச்சர், ஜனாதிபதி பதவிகளை, அரசையே இழந்த கட்சியின் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் டல்லசை ஜனாதிபதி ஆகவும், அவரின் கீழ் பிரதமர் ஆக ஒப்புக் கொண்டதும் தவறு.

அணைத்துக்கும் மேலே, ரணில், டல்லஸ் இருவருமே மொட்டுக் கட்சியின் போட்டியாளர்கள். அவர்களது அரசியல் சூழ்ச்சிக்குள் மாட்டக் கூடாது என்ற அடிப்படை அரசியல் அறிவே இல்லையே.

*****
Winners take all 😜🤪

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

6 hours ago, ரஞ்சித் said:

PM praises South Asian Games medal winners | Page 3 | Daily News

இந்த டளஸ் அழப்பெரும (அழகப் பெருமாள் இல்லை) எனும் ஒப்பாரற்ற நாயகனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாக நிலையெடுத்திருக்கும் நிலையில், இந்த அழப்பெரும பற்றிய சில விடயங்களை முன்வைப்பது சாலப்பொறுத்தம் என்பதால் இங்கே முன்வைக்கிறேன்,

220715%20Alahapperuma%20%20(1).jpg

1. சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுக்கு மாறிய அதி தீவிர சிங்கள இனவாதி இவர். மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2005 இல் மகிந்த ராஜபக்ஷெ எனும் இனக்கொலையாளி அரியணை ஏறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தில் முன்னின்று இனவாதம் கக்கிய ஒருவர்.

220715%20Alahapperuma%20%20(4).jpg

2. 2009 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் டக்கிளஸ் தேவானந்தாவுடன் ஒரே மேடையில் அமர்ந்து, "மகிந்த உங்களுக்கு ஒரு தீர்வைத் தருவார்" என்று கூறிவிட்டு, டக்கிளஸ் அதே மேடையில் கூறிய 13 ஆம் திருத்தம் மூலமான தீர்வினை அங்கிருந்தே, "இல்லையில்லை, நிச்சயமாக அதனைத் தரப்போவதில்லை" என்று கர்ஜித்த மனிதர்.

3. 2012 இல், முதன்முறையாக இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் விசாரணைபற்றிய தீர்மானங்கள் ஐ நா வில் பேசப்படப்போகும் தறுவாயில் அப்போது இலங்கையின் இளைஞர் விவகார திறன் மேம்பாட்டு அமைச்சராக இருந்த டளஸ் இலங்கையின் 150 உள்ளூராட்சி சபைகளிலும் இந்த தீர்மானத்திற்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்து நடத்தியதுடன், " மக்கள் தமக்கிடையிலான வேறுபாடுகளை மறந்து ஜனாதிபதியையும் ராணுவத்தையும், நாட்டையும் காக்க ஒன்றிணையவேண்டும்" என்ற கோஷத்தினை தனது ஆர்ப்பாட்டங்களில் திருப்பத் திருப்பக் கூறி வந்தவர்.

4. 2013 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டபோது அதனை முற்றாக நிராகரித்த டளஸ், அது 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஒத்தது என்றும், அது புலிப்பயங்கரவாதிகளின் கழுத்தில் தொங்கும் சயனைட் வில்லைக்குச் சமமானது என்றும் கர்ஜித்தவர்.

5. 2014 இல் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டளஸ், புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதும் நாட்டில் தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள், அவர்கள் அப்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்டால் மீண்டும் புலிப்பயங்கரவாதிகளை நாட்டிற்குள் உருவாக்கிவிடுவார்கள் என்று கூறியவர். 


6. 2015 இல் ரணில் அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் தடைகளை நீக்கியபோது அதனைக் கடுமையாக எதிர்த்த டளஸ், பிரிவினைவாத எண்ணங்களுடன் இருக்கும் எந்த புலம்பெயர் அமைப்பும் தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிவந்தவர்.

220715%20Alahapperuma%20%20(5).jpg

7. 2015 இல் தீவிர சிங்கள பெளத்த இனவாதிகளான உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோரின் சின்ஹலே அமைப்பில் தன்னையும் இணைத்து தனிச்சிங்களக் கொடியினை கையிலேந்தி தனது இனவாதத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொண்டவர் டளஸ்.,

220715%20Alahapperuma%20%20(2).JPG

8. 2016 இல் ஐ நா முன்றலில் சிங்கள இனவாதிகளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டளஸ், "இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்றும், நடந்தது மக்களை மீட்கும் மனிதாபிமான நடவடிக்கை என்றும், இலங்கை ராணுவ வீரர்கள் "யுத்த நாயகர்கள்" என்று கர்ஜித்தவர் இந்த டளஸ். 

220715%20Alahapperuma%20%20(3).JPG

9. 2020 இல் கோத்தாவை வானளவாகப் புகந்த டளஸ், கோத்தாவின் நடவடிக்கைகள்  மூலம் நாடு ஊழல்களிலிருந்தும், லஞ்சங்களிலிருந்தும், போதைவஸ்த்துப் பாவனையிலிருந்தும், பாதாள உலக செயற்பாடுகளிலிருந்தும் விடுபட்டிருக்கிறதென்றும், அனைத்து இன மக்களும் அவரது ஆட்சியில் சமமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் நற்சான்றுப் பத்திரம் கொடுத்தவர்.

10. இன்று இதே டளஸ் இன்னொரு புகழ்பெற்ற போர்க்குற்றவாளி சரத் பொன்சேக்காவுடனும், தெற்கின் இன்னொரு சிங்கள இனவாதி சஜித்துடன் இணைந்தும் ஜனாதிபதியாக முயன்று கொண்டிருக்கிறார்.


எனது கேள்வி என்னவென்றால், இவற்றுள் எதாவது இந்த கூத்தமைப்பு நாயகர்களுக்குத் தெரியுமா தெரியாதா? 

கட்டுரைக்கு நன்றி ரஞ்சித், இக் கட்டுரை தமிழ் கார்டியனில் வந்த இந்தக் கட்டுரையின் தமிழாக்கமா?

Dullas Alahapperuma - Another racist throws his hat in the ring to be Sri Lanka’s next president | Tamil Guardian

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கூட்டமைப்பு சரத் பொன்சேகாவிற்கு ஆதரித்த கோஷடியென்றபடியால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:

கட்டுரைக்கு நன்றி ரஞ்சித், இக் கட்டுரை தமிழ் கார்டியனில் வந்த இந்தக் கட்டுரையின் தமிழாக்கமா?

Dullas Alahapperuma - Another racist throws his hat in the ring to be Sri Lanka’s next president | Tamil Guardian

ஓம் நிழலி

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரஞ்சித் said:

எனது கேள்வி என்னவென்றால், இவற்றுள் எதாவது இந்த கூத்தமைப்பு நாயகர்களுக்குத் தெரியுமா தெரியாதா? 

நாங்க பெட்டி எவ்வளவு பெரிதென்று தான் பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னது டல்லசுக்கெண்டு.... ஆனால் கூட்டமைப்பு ரணிலுக்குத் தான் போட்டது. காரணம் பெரியண்ணர்!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுமரத்தின் கபடநாடகம்.
    • மீண்டும் 100% யதார்த்தமான பார்வை. நாட்டில் மட்டும் அல்ல, புலம்பெயர் தேசத்தில் எமது பிள்ளைகளின் பள்ளிகளில் கூட சிங்கள பிள்ளைகள் இனவாதமாகவே இன்றும் நடக்கிறார்கள்….ஏன் என்றால் வளர்ப்பு அப்படி. தமிழருக்கு எதிரான இனவாதம் இங்கிலாந்தில் வீட்டில் ஊட்டப்படுகிறது. நான் அடிக்கடி சொல்வதுதான் தனி மனிதர்களாக பழக இனிமையானவர்கள் எனிலும் கூட்டு மனோநிலை, இனவாதம் என்று வரும் போது ஒரு இஞ்சிதன்னும் 1948 இல் இருந்து அவர்கள் நகரவில்லை. அதேபோல் தமிழரசு கட்சி மீது “உசுப்பேத்தல்” போன்ற நியாயமான விமர்சனங்களை முன் வைத்தாலும்…. ஒட்டுமொத்த இனப்பிரச்சனையே அவர்களால் தூண்டபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. சிங்களவரின் இனவாதமும் அதை செயல்படுத்திய சிங்கள தலைமைகளுமே இனப்பிரச்சனைக்கு 95% காரணிகள்.
    • இன்று மீராவுக்கு தூக்கம் கிடையாது பிரியன்........சி.எஸ்.கே அந்தமாதிரி விளையாடி இருக்கு......எஸ்.ஆர்.எச் படு தோல்வி......சென்னை அதிக ஓட்டங்களினாலும் விக்கட்டினாலும் வென்று 3 ம் இடத்துக்கு வந்திருக்கு...... கூடவே திரிஷாவின் முத்தங்கள் வேறு.......!  😂
    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 02     தமிழர் சமுதாயத்தில் மட்டுமல்ல உலகின் எல்லாச் சமுதாயங் களிலும் பாரம்பரியங்கள் மாற்றம் அடைவதும் சில அழிந்து போவதுமான நிலைப் பாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல” என்பதன் உண்மைக் கருத்தை, அதன் வெளிப் பாட்டை நாம் மனித வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது காண்கிறோம். உதாரணமாக, தமிழர்களது பொற்காலம் எனப் போற்றப்படும் சங்ககாலத்தில் முதலில் நிலவிய களவொழுக்கத்தில் மணம் செய்யும் முறைமை, பின்னர் ஆண் - பெண் உறவில் நம்பிக்கை மோசடிகளை - கர்ப்பமாக்கப்பட பெண்ணை, உறவின் பின்னர் கைகழுவி விடும் போக்கை -   "யாரும் இல்லை, தானே கள்வன், தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ? தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே"   என்ற குறுந்தொகை 25 பாடல் காட்சி போல் பல கண்டு, அதனை போக்க, சமூகத் தலைவர்கள் இணைந்து கற்பு மணம் எனும் முறையை உருவாக்கினர் எனலாம். “பொய்யும் வழுவும் முற்றிய பின்னர் அய்யர் வகுத்தது கரணம் என்பர்” தொல்காப்பியர். இதில் ஐயர் என்றால், தலைவர் என்று பொருள்- பார்ப்பன‌ர் அல்லர் என்பது குறிப்பிடத் தக்கது.   இதுவே கிரியை முறை திருமணம் வர காரணமாக இருந்தது. அவர்களின் திருமணத்தை உறுதிப் படுத்த அன்று தாலம் பனை என்ற பனை ஓலையில் இன்னாருக்கும் இன்னாருக்கும் இந்த நாளில் அல்லது இன்று அல்லது இந்த காலத்தில் திருமணம் என எழுதி அவர்களின் கழுத்தில் மக்கள் மத்தியில் கட்டுவார்கள். பின் காலப் போக்கில், மனித சிந்தனை, நாகரிகம் போன்றன வளர்ச்ச்சி அடைய பனையோலை, உலோக மாக, மஞ்சள் கயிறாக மாறி பின் இன்றைய பவுனாக அல்லது தங்கமாக மாறியது எனலாம்.   தாலி என்ற சொல் தாலிகம் என்ற, பனை மரத்தை குறிக்கும் சொல்லின் அடியாகவோ அல்லது வேலால் ஆனது வேலி என்பது போலத் தாலால் ஆனது தாலியா கவோ பிறந்தது எனலாம். இப்படித்தான் கால ஓட்டத்தில் மாற்றம் அடைகின்றன.   எனவே, பல மரபுகளை, பாரம்பரியங்களை நாம் உடைத் தெறிந்து கொண்டுதான் வந்துள்ளோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் தலை தாழத்தி கைகூப்பி வணக்கம் செலுத்துவது மரபு என்றாலும், இன்று பல வேளை நாம் கைகுலுக்கி வரவேற்கிறோம், எனவே எமது மரபுகள் மங்கிச் செல்கின்றன, மாற்ற மடைகின்றன என்பதுதான் முற்றிலும் உண்மை.   இன்றைய சூழ்நிலையில், எல்லா இடமும், எல்லா நேரமும், எமது பாரம்பரிய உடைகளான வேட்டி, சால்வை, சேலை இவற்றைத் தினமும் அணிய முடியுமா? தமிழர்களிடம் இருந்து வந்த விளையாட்டு முறைகள் என்பன இன்று அழிந்தொழிந்து வருவதனையும் காண்கின்றோம். தொன்மையான பல தமிழரின் விளையாட்டுகள் இன்று இலக்கியங்களில் காணமுடிகின்றதே யொழிய இந்த மரபு விளையாட்டுக்கள் வழக்கொழிந்து போயுள்ளன என்பது வெளிப்படை ஆகும். என்றாலும் சில விளையாட்டுக்கள் அன்று போல் இன்றும் தொடர்கின்றன, அவற்றில் ஒன்று ஊஞ்சல் ஆட்டம் ஆகும். நற்றிணை 90, வரி 3 - 7, மிக அழகாக கஞ்சியிட்டு உலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று, பனை நாரில் திரித்த கயிற்றில் தொங்கவிடப்பட்ட ஊஞ்சலில் ஏறி ஆடாமல் அப்பெண் அழுதபடி நின்றாள் என   "..... எல்லித் தோய்த்த புகாப்புகர் கொண்ட புன்பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க வூங்காள்"   என்று பாடுகிறது. இதில் நாம் இன்னும் ஒரு தமிழரின் பழம் பழக்கத் தையும் அது இன்னும் கிராமப் புறங்களில் அப்படியே இருப்பதையும் காண்கிறோம். தமிழர்கள் சங்க காலம் தொட்டே ஆடைகளை கஞ்சியிட்டு உலர்த்தி அணிந்தனர் என்பதே அந்த செய்தியாகும். இந்த பாடலில் வரும் சொல் "புகாப் புகர்' என்பது உணவுக் கஞ்சி யாகும். (புகா-உணவு; புகர்-கஞ்சி). அதே போல, பொழுதுபோக்குக் கலைகளாகவும், கருத்துக்களை முன்வைக்கும் கலை நிகழ்வுகளாகவும் கூத்து, பாட்டு என்பன தமிழர்களிடையே தொன்று தொட்டு நிழ்ந்து வந்துள்ளது. ஆனால் அதுவும் இன்று பல காரணங்களால் படிப்படியாக மறைந்து போகின்றன. இது தான் இன்றைய உண்மையான நிலை ஆகும்.   இந்தப் பாரம்பரியம் எந்தவித மாற்றங்களும் இன்றி ஒரு தலை முறையிடமிருந்து அடுத்த தலை முறையினருக்கு கொடுக்கப்படுகிறது என்றும் கூறுகிறோம். இதை நாமும் அவ்வாறே அடுத்த சந்ததியினருக்குக் கொடுப்போம் என்றும் நினைக்கிறோம். ஆனால், இந்தப் பாரம்பரியம், மரபு இவற்றை ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மரபுகளின் உள்ளடக்கங்கள் சில சமயங்களில் ஓரளவுக்கும் சில சமயங்களில் மிக அதிகமாகவும் மாறிக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. கடந்த காலத்தில் வழக்கத்தில் இருந்ததாக நாம் கருதிய விடயங்களும், நம்முடைய தற்போதைய குறிக்கோள்களும் மற்றும் எமது இன்றைய அறிவு வளர்ச்சியும் ஒன்றன்மீது ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைப்பற்றி நாம் ஆழ்ந்து ஆராயும் போது, நிகழ்காலத் தேவைகளுக்கு ஏற்ப, அந்த குறிப்பிட்ட பாரம்பரியம் பற்றி நமக்கு, ஒரு பொதுக் கருத்து உருவாகி, அதற்கு ஏற்றவாறு அவை மாற்றம் அடைகின்றன.   மேலும் சில சடங்குகளும் மரபுகளும் மிகப் பழமையானவை போல தோன்றினாலும், அவையை ஆராய்ந்து பார்க்கையில் அவை மிக அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டவை என்றே தெரிகிறது. பண்பாட்டை உருவாக்குவதாகக் கருதப்படும் பாரம்பரியம் எல்லாக் காலங்களிலும் மாறாது நிலைத்து நிற்பதல்ல. நம் முன்னோர் காலந்தொட்டு பழக்கத்தில் இருந்ததென்று நாம் கூறிக் கொள்வது சில விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதற்கான முயற்சியாகும். தொல் பண்பாட்டின் பல அம்சங்களில் பூர்வீகத்தை முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம். இதைச் சரியாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், எமது பாரம்பரியத்தின் சரியான நோக்கம் எமக்குத் தெரியாமல் போய்விடும் .   இதுகாறும் எமக்கு தெரிந்த விடயங்களைக் கொண்டு நோக்கும் போது இயற்கை வழி வாழ்வியலை முன்னிறுத்தும் அடிப்படைகளைக் கொண்டதாக எமது தமிழ் மரபு இருப்பதாகத் எமக்கு புரிகின்றது. கால மாற்றத்தால் ஏற்பட்ட மாற்றங்கள் அல்லது உள்வாங்கிக் கொண்ட பல சடங்குகள் இந்த இயற்கை வாழ்வியலை பின் தள்ளி தற்சமயம் அது தமிழர் மரபு போல எம் மரபிற்குள் ஊடுறுவி நிற்கின்றது. எனவே அந்த ஆரம்ப கால இயற்கை வாழ்வியல் முறைகளை தெரிந்து எடுத்து பட்டியலிட்டு, கால ஓட்டத்தில் இணைந்து கொண்ட, உண்மைக்கு புறம்பான அறிவியலுடன் ஒவ்வாத, சடங்குகளும் புராணங்களும் இம்மரபின் மேல் ஏற்றி வைத்திருக்கும் விடயங்களை ஒதுக்கி, அதனை மீள் அறிமுகம் செய்வது நல்லது என நாம் நினைக்கிறோம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 03 தொடரும்           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.