Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டொலர்களைப் பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு சலுகை – அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டொலர்களைப் பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு சலுகை – அரசாங்கம்

dolar.webp

டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்பவர்களுக்கு 10 வீதம் சலுகை வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும்.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு மற்றொரு தீர்வாக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இரண்டு நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களான பொரளை ஓவல் வியூ வீடமைப்புத் திட்டத்தில் 608 வீடுகளும் அங்கொட லேக் ரெஸ்ட் திட்டத்தில் 500 வீடுகளும் உள்ளன.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டொலர்களை பயன்படுத்தி இந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1297735

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச காலம் செல்ல ..வெளி நாட்டவர் சொத்துக்கள் பறி முதல் செய்யப்படும் என்ற சட்டம் கொண்டுவர ...புலம்பெயர்ஸ்  டொலர் எல்லாம் சிங்களவன் மயமாகும் ..சுத்தி அடிச்ச டொலர்காரர்..பிறகு யாரையும் சுத்த வெளிக்கிடுவினம்...

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல்.. சிம்பாபே போல்.. டொரிலையே கொடுக்கல் வாங்கல்  செய்ய மக்களை கட்டாயப்படுத்தலாம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

கொஞ்ச காலம் செல்ல ..வெளி நாட்டவர் சொத்துக்கள் பறி முதல் செய்யப்படும் என்ற சட்டம் கொண்டுவர ...புலம்பெயர்ஸ்  டொலர் எல்லாம் சிங்களவன் மயமாகும் ..சுத்தி அடிச்ச டொலர்காரர்..பிறகு யாரையும் சுத்த வெளிக்கிடுவினம்...

உண்மைதான்...

ஊருலகம் முழுக்க கடனை வாங்கிப் போட்டு, தரேல்லது.... உங்களால முடிஞ்சதை செய்யுங்கோ எண்டு சொல்லிப்போட்டு, எங்களை டொலரை கொடுத்து, வீடுகளை வாங்க சொல்லுகினம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

உண்மைதான்...

ஊருலகம் முழுக்க கடனை வாங்கிப் போட்டு, தரேல்லது.... உங்களால முடிஞ்சதை செய்யுங்கோ எண்டு சொல்லிப்போட்டு, எங்களை டொலரை கொடுத்து, வீடுகளை வாங்க சொல்லுகினம்.

 

வேண்டுவதற்கு சனமிருக்கும்போது சிங்களத்துக்கு என்ன? இந்த ஆட்சியிலை வாங்கலாம். அடுத்த ஆட்சியிலை தேசியமயமாக்கலாக்கிவிட்டா அரசுக்கு இரட்டை லாபம்தானே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உண்மைதான்...

ஊருலகம் முழுக்க கடனை வாங்கிப் போட்டு, தரேல்லது.... உங்களால முடிஞ்சதை செய்யுங்கோ எண்டு சொல்லிப்போட்டு, எங்களை டொலரை கொடுத்து, வீடுகளை வாங்க சொல்லுகினம்.

 

சிங்களம் நினைக்குது இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து இலகுவாக தப்பிக்லாம் என்று இங்கு யாழிலும் குழுவாக காணாமல் போனவர்களின் பிரார்த்தனையும் அதுதான் ஆனால் யதார்த்தம் என்னவென்றால் சொரில்ன்காவுக்கு முக்கிய ஏற்றுமதி பொருள்களை விளைவித்து அந்த காட்டிலும் மேட்டிலும் தங்கள் உழைப்பை வழங்குபவர்கள் எங்களின்  சகோதர மலையக  தமிழர்கள் . இவ்வளவு நெருக்கடியிலும் எந்த ஒரு சிங்களவனாலும் நாட்டை முன்னேற்ற நான் கொழுந்து பறிக்க போறேன் அல்லது பாரிய மீன் இழுவை படகை கொண்டு மீன் பிடிக்க போறேன் என்று சொல்ல முடியவில்லை காரணம் அவர்கள் இந்த நாட்டுக்கு வந்த கொள்ளையர்கள் அவ்வளவே .இன்று வீடு வாங்க என்று  புளுகிக்கொண்டு காசை விட்டால் நாளை நாமம் தான் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல இனப்படுகொலைகளில் தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடிய கள்வர் எம்மை மீண்டும் முதலிட சொல்லும் நோக்கம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தமிழ் மக்கள் உள்ளார்களா? 
தேவைக்கு ஏற்றால் போல் எம்மை பயன்படுத்த நாம் தான் அனுமதிக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு வாழ்இலங்கை தமிழரை விடுங்கள்   ஒரு வெளிநாட்டு பிரசை டொலரில்  மேற்சொன்ன வீடுகளை வேண்டினாள் எந்தவித இழப்பீடும் கொடுக்காமல் பறிமுதல் செய்யமுடியுமா?. 

  • கருத்துக்கள உறவுகள்

டொலர் கறக்க எப்படியெல்லாம் தலைகீழாய் நின்றாடுது சிங்களம்.  நடந்ததெல்லாம் தப்பு, அதற்காக மனம் வருந்துகிறோம், உங்களிடம் இருந்து பிடுங்கியதெல்லாம் திருப்பி தருகிறோம், வாருங்கள் எங்கள் நாட்டை கட்டியெழுப்புவோம்   என்று சொல்லி அணைக்க தகுதியற்றவர்கள் தமிழர், அவர்களின்  முதலீடு தேவை. ஏற்கெனவே  வந்தேறு குடிகள் என அழைத்தவர்கள் நாளைக்கே புலம்பெயர்ந்தோர் இந்தக் காலக்கெடுவுக்குள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றால்; நம்ம அரசியல் வாதிகள் கைகொடுத்து முதலிட்டத்தை மீட்டுத்தருவார்களா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

பல இனப்படுகொலைகளில் தமிழ் மக்களின் சொத்துக்களை சூறையாடிய கள்வர் எம்மை மீண்டும் முதலிட சொல்லும் நோக்கம் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தமிழ் மக்கள் உள்ளார்களா? 

தமிழருக்கு இருக்கும் மிகப்பெரிய வியாதி மறதிகுணம் இன்னும் கொஞ்சபேருக்கு அடிமை விசுவாசம் தாலியில் தங்களை அடிமையாக்கின வெள்ளைகார அரச ராணியின் தலைகள் போடுமளவுக்கு அடிமை வெறி .இதைவிட ஓசி படிப்பு தந்தவர்களை மறக்க கூடாது என்று பரீட்சையில் மட்டும் வெற்றியடைந்த ஒரு கூட்டம் கதறும் அவர்களுக்கு வாழ்வியல் பற்றி தெரியாது  சுத்த சூனியம்தான் இருப்பதிலே இந்த கடைசி கூட்டம்தான் மிக ஆபத்தானது ஏனென்றால் பரீட்சைகளில் சித்தி அடைந்து விட்டார்களாம் . உலகத்தில் உள்ள அறிவு முழுக்க தங்கள் மண்டைக்குள் என்பது போல் நடந்து கொள்வார்கள் இவர்களிடம் ஏதாவது கருத்தை சொன்னால் உடனே அதற்கு மாற்று கருத்து கொண்டு சாடுவார்கள் கடசியில் இலங்கை அரசு செய்வதெல்லாம் 1௦௦ வீதம் சரி நாங்கள் கொண்ட கொள்கை பிழை என்பார்கள் . இவ்வளவு கூட்டத்துக்கும் திரும்ப திரும்ப நினைவு படுத்தி கொண்டே இருக்கணும் சிங்களவர் தமிழருக்கு எதிராக செய்த நாச வேலைகளை பற்றி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kandiah57 said:

வெளிநாடு வாழ்இலங்கை தமிழரை விடுங்கள்   ஒரு வெளிநாட்டு பிரசை டொலரில்  மேற்சொன்ன வீடுகளை வேண்டினாள் எந்தவித இழப்பீடும் கொடுக்காமல் பறிமுதல் செய்யமுடியுமா?. 

கண்டியா 57 க்கு வேறை ஏதோ பிளான் கிடக்கு போல....😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

வெளிநாடு வாழ்இலங்கை தமிழரை விடுங்கள்   ஒரு வெளிநாட்டு பிரசை டொலரில்  மேற்சொன்ன வீடுகளை வேண்டினாள் எந்தவித இழப்பீடும் கொடுக்காமல் பறிமுதல் செய்யமுடியுமா?. 

 

அதைப்பற்றி எந்த  கவலையும்  வேண்டாம் அண்ணை

திருப்பி எடுக்க நம்மவர்களே விடமாட்டார்கள்?😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, விசுகு said:

 

அதைப்பற்றி எந்த  கவலையும்  வேண்டாம் அண்ணை

திருப்பி எடுக்க நம்மவர்களே விடமாட்டார்கள்?😭

அதெண்டால் உண்மைதான்.👍🏼

 காசு பணம் குடுத்து என்ரை வீடு காணிய பார்த்துக்கொள்ளுங்கோ எண்டு சொன்னதையே மாறி விளங்கி தங்கடை பேருக்கு மாத்தி வைச்சிருக்கிற சனம் இருக்கிற பூமியெல்லோ??😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அதெண்டால் உண்மைதான்.👍🏼

 காசு பணம் குடுத்து என்ரை வீடு காணிய பார்த்துக்கொள்ளுங்கோ எண்டு சொன்னதையே மாறி விளங்கி தங்கடை பேருக்கு மாத்தி வைச்சிருக்கிற சனம் இருக்கிற பூமியெல்லோ??😂

 

அதையும்  தாண்டி விற்பம் என்றால்

மற்றவர்களை  வாங்கவும்  விடமாட்டார்கள்

தாங்களும்  வாங்கமாட்டார்கள்

பண்ணிப்பாருங்கோவன்???

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

 

அதையும்  தாண்டி விற்பம் என்றால்

மற்றவர்களை  வாங்கவும்  விடமாட்டார்கள்

தாங்களும்  வாங்கமாட்டார்கள்

பண்ணிப்பாருங்கோவன்???

இனாமா கேட்க்கிறார்கள் போலுள்ளது. நம்ம ஆக்கள் நன்றிக்கு பதிலா சண்டித்தனம் காட்டுவினம். நல்லா பட்டிருக்கிறீர்கள் போலுள்ளதே! சிலர் வெளிநாட்டிலிருந்து வந்து குடியிருந்த மக்களை வேறிடம் தேட முதல் அவர்கள் செலவழித்து பாதுகாத்த சொத்துக்களுக்கு நட்ட ஈடே கொடுக்காமல் குடும்பிப் பிடியில விரட்டியவர்களும் உண்டு. நீதி நிஞாயம் உள்ளவர்களே இரண்டு பக்கமும் பாதிக்கப்படுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.