Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்... ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை,  பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய... 10 பேர் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஸ்பெயின் நாட்டுப்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 10 பேர் கைது!

யாழில்... ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை,  பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய... 10 பேர் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில்  வெளிநாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

அதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் இடத்துக்கு சென்ற பொலிஸார் போதையில் நின்ற 10 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2022/1300706

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

யாழில்... ஸ்பெயின் நாட்டுப் பெண்ணை,  பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய... 10 பேர் கைது!

யாழ் மண்ணுக்கே அவமானம்.
முன்னர் கலவர பூமி என உல்லாசபயணிகளை தடுத்தவர்கள் இனி இதுவுமென்றால்......????
 

  • கருத்துக்கள உறவுகள்

30 ஆண்டுகால போர் ஒரு சமூகத்தினை தரம் தாழ்த்தியுள்ளது போல இருக்கின்றது, ஒரு தாய் தனது 11 வயது குழந்தையினை போதைவஸ்து விற்பதற்கு பயன்படுத்துகின்ற நிலை  மனதை உடைக்கின்ற செயல்.

இந்த நிலையிலிருந்து மீழ முடியாதவகையில் தொடர்வதற்கு உதவியாக இருக்கும் சட்ட ஒழுங்கையோ அல்லது மக்கள் அடிப்படை தேவைகளை உறுதிப்படுத்தாமல் ஊழல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளாமல் செல்லும் நாம் அனைவரும் குற்றவாளிகளே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

மிகவும் மோசம்😡

 

5 hours ago, குமாரசாமி said:

யாழ் மண்ணுக்கே அவமானம்.
முன்னர் கலவர பூமி என உல்லாசபயணிகளை தடுத்தவர்கள் இனி இதுவுமென்றால்......????
 

 

5 hours ago, vasee said:

30 ஆண்டுகால போர் ஒரு சமூகத்தினை தரம் தாழ்த்தியுள்ளது போல இருக்கின்றது, ஒரு தாய் தனது 11 வயது குழந்தையினை போதைவஸ்து விற்பதற்கு பயன்படுத்துகின்ற நிலை  மனதை உடைக்கின்ற செயல்.

இந்த நிலையிலிருந்து மீழ முடியாதவகையில் தொடர்வதற்கு உதவியாக இருக்கும் சட்ட ஒழுங்கையோ அல்லது மக்கள் அடிப்படை தேவைகளை உறுதிப்படுத்தாமல் ஊழல் செய்யும் தமிழ் அரசியல்வாதிகளை கண்டுகொள்ளாமல் செல்லும் நாம் அனைவரும் குற்றவாளிகளே.

இதில் மட்டுமல்ல, பல விடயங்களில்... ஒரு தலைமுறை, தறுதலையாகி திரிகின்றது. 😢

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே தெற்கு போராட்டங்களாலும்  அடிதடியாலும் வெளிநாட்டவர் வருகை தடுக்கப்பட்டுள்ளதால்

வடக்குக்கு அண்மையில்  தான்  சுற்றுலா  பயணிகள் வரத்தொடங்கியுள்ள நிலையில்

இப்போராட்டங்களில் பங்கேற்காது தவிர்த்ததுடன் மட்டுமல்ல

அதே நேரம் விழாக்களை  கோதாகலமாக  நடாத்திக்கொண்டிருந்த வடக்கு மீது

இதை  ஊதிப்பெருப்பித்து மீண்டும் பழைய நிலைக்கு  கொண்டு  வரமுயல்கிறார்களா??

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, விசுகு said:

ஏற்கனவே தெற்கு போராட்டங்களாலும்  அடிதடியாலும் வெளிநாட்டவர் வருகை தடுக்கப்பட்டுள்ளதால்

வடக்குக்கு அண்மையில்  தான்  சுற்றுலா  பயணிகள் வரத்தொடங்கியுள்ள நிலையில்

இப்போராட்டங்களில் பங்கேற்காது தவிர்த்ததுடன் மட்டுமல்ல

அதே நேரம் விழாக்களை  கோதாகலமாக  நடாத்திக்கொண்டிருந்த வடக்கு மீது

இதை  ஊதிப்பெருப்பித்து மீண்டும் பழைய நிலைக்கு  கொண்டு  வரமுயல்கிறார்களா??

 

சிங்களம் எமக்கெதிராக… கேவலமான வேலைகள் செய்யும் என்றாலும்,
எங்கடை ஆட்களும்… குழுவாக சேர்ந்து, தண்ணி அடித்தால்…
அவர்களும் கேவலமாக நடக்கக் கூடியவர்கள்.
(சம்பவம் நடந்த இடம்… கசோறினா பீச். பெண்… பிகினியில் நின்ற வெள்ளைக்காரி.)

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

சிங்களம் எமக்கெதிராக… கேவலமான வேலைகள் செய்யும் என்றாலும்,
எங்கடை ஆட்களும்… குழுவாக சேர்ந்து, தண்ணி அடித்தால்…
அவர்களும் கேவலமாக நடக்கக் கூடியவர்கள்.
(சம்பவம் நடந்த இடம்… கசோறினா பீச். பெண்… பிகினியில் நின்ற வெள்ளைக்காரி.)

 

குற்றம்  செய்தவர்கள் தண்டிக்கப்படணும் என்பதில்  மாற்றுக்கருத்தில்லை  சிறி

ஆனால் இதை  விசாரிப்பவர்கள் சார்ந்தே  எனது  கேள்வி?

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் சேட்டை; யாழ். இளைஞர்களுக்கு தண்டனை

 

Freelancer   / 2022 ஒக்டோபர் 01 , மு.ப. 11:17 - 0      - 211

எம். றொசாந்த்

யாழ்ப்பாணம் - காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தவிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டிலிருந்து காரைநகரிற்கு சுற்றுலா சென்ற பெண்ணும் அவரது நண்பரும் யாழ்.காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அண்மித்த கடற்கரை பகுதிக்கு கடந்த 24ஆம் திகதி சென்றுள்ளனர்.

அதன் போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த  இளைஞர்கள் அவர்களை தகாத வார்த்தையால் பேசி, குறித்த பெண்ணிற்கு பாலியல் தொல்லையும் கொடுத்தாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டில் 13 இளைஞர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, 4 இளைஞர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மாறினர்.

ஏனைய 09 இளைஞர்களுக்கும் எதிராக தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 09 இளைஞர்களையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டது.

வழக்கின் 7ஆவது குற்றவாளிக்கு, 2 வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருட காலத்திற்கு ஒத்திவைத்த நீதவான் , மூன்று குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணம் கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் , நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 1 வருட சாதரண சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் குற்றவாளிக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதவான், 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், இரண்டு குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் அரச செலவாக செலுத்தும் மாறும் நஷ்ட ஈட்டினை கட்டத்தவறினால் ஒரு வருட சிறைத்தண்டனையும், அரச செலவு பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் மற்றும் 7ஆம் குற்றவாளிகள் தவிர்ந்த ஏனைய ஏழு குற்றவாளிகளுக்கும், 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதித்து அதனை  5 வருடங்களுக்கு ஒத்திவைத்த நீதவான், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 1500  ரூபாயாக 7 பேருக்கும் தண்டம் விதித்துடன் , 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் , நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதித்தார். (R)

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வளநடடப-பணணடம-சடட-யழ-இளஞரகளகக-தணடன/71-305078

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் - காரைநகரில் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியுடன் சேட்டை புரிந்த குற்றம் சாட்டில் கைது செய்யப்பட்ட 9 இளைஞர்களுக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று தண்டப்பணம் விதித்ததுடன் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க உத்தவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 13 இளைஞர்களும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, 4 இளைஞர்கள் அரச தரப்பு சாட்சிகளாக மாறினர்.

ஏனைய 09 இளைஞர்களுக்கும் எதிராக தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, 09 இளைஞர்களையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டது.

வழக்கின் 7ஆவது குற்றவாளிக்கு, 2 வருட சிறைத்தண்டனை விதித்து அதனை 5 வருட காலத்திற்கு ஒத்திவைத்த நீதவான் , மூன்று குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் தண்டம் விதித்ததுடன், 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணம் கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் , நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 1 வருட சாதரண சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் குற்றவாளிக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்த நீதவான், 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்துமாறும், இரண்டு குற்றங்களுக்கு தலா 1500 ரூபாய் அரச செலவாக செலுத்தும் மாறும் நஷ்ட ஈட்டினை கட்டத்தவறினால் ஒரு வருட சிறைத்தண்டனையும், அரச செலவு பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத சிறைத்தண்டனையும் விதித்தார்.

வழக்கின் 2ஆம் மற்றும் 7ஆம் குற்றவாளிகள் தவிர்ந்த ஏனைய ஏழு குற்றவாளிகளுக்கும், 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனை விதித்து அதனை  5 வருடங்களுக்கு ஒத்திவைத்த நீதவான், இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 1500  ரூபாயாக 7 பேருக்கும் தண்டம் விதித்துடன் , 20 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார். தண்டப்பணத்தினை கட்டத்தவறின் ஒரு மாத கால சாதாரண சிறைத்தண்டனையும் , நஷ்ட ஈட்டை கட்டத்தவறின் 6 மாத கால சிறைத்தண்டனையும் விதித்தார். (R)

https://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வளநடடப-பணணடம-சடட-யழ-இளஞரகளகக-தணடன/71-305078

அது என்ன... 13 பேர் சேர்ந்து சேட்டை விட்டிருக்கிறார்கள்.
அதில் நான்கு பேர் அரச  தரப்பு சாட்சிகளாக மாறினால்...
அவர்களுக்கு தண்டனை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அது என்ன... 13 பேர் சேர்ந்து சேட்டை விட்டிருக்கிறார்கள்.
அதில் நான்கு பேர் அரச  தரப்பு சாட்சிகளாக மாறினால்...
அவர்களுக்கு தண்டனை இல்லையா?

அவர்கள் சேட்டை பண்ணாது காட்டி குடுத்திருக்கினம் என்று நினைக்ககிறன்!

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

விருந்தினர்களை அவமானப்படுத்தும் நிலையில் எமது இளம் தலைமுறை.

அவமானம். 

😡

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இதே நீதிமன்றம்   புங்குடுதீவு இல பள்ளி சீருடையில் சென்ற மாணவியை பாலியல் உறவு கொண்டு மரணமடைய செய்தார்  வழங்கிய தீர்ப்பு என்ன?   பாலியல் சேட்டைக்கு ஒரு மாதத்தில் தீர்ப்பு    அதுவும் பிகினி உடையில் நின்ற ஒரு பெண்ணுடன   அழகிய பள்ளி சீருடை உடனே சென்ற மாணவியை பாலியல் உறவு கொண்டது மட்டுமல்லாமல் மரணமடையவும் செய்தார்கள்  தீர்ப்பு என்ன?எவ்வளவு காலம் வழக்கு நடத்தது?.   ஏன் அவ்வளவு காலம் எடுத்தார்கள்?. சட்டத்தை ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு ஆக ஏன் அமுல் செய்கிறார்கள்?. 

 

  • கருத்துக்கள உறவுகள்

இளவாலையில் தனித்திருந்த பெண்ணை போதை வஸ்து பாவித்துவிட்டு களவெடுக்கப்போன இடத்தில் அவளைக் கண்டதும் உணர்ச்சி பொங்கிவிட்டது அதுதான் கெடுத்துட்டன் என்று சொன்ன ஏழாலை வடக்கைச் சேர்ந்த ஒருத்தன் இப்பவும் வெளியில திரிகிறான் அவன் இன்னமும் துருந்தியபாடில்லை கஞ்சா கடத்தல் கசிப்புக்காய்ச்சுதல் வீடு புகுந்து கொள்ளை அடித்தல் என அவனது கதை தொடருகுது அவனையும் இப்படி குற்றச்செயலில் ஈடுபடும் ரவுடிகளையும் மல்லாகத்தில இருக்கிற ஒரு பெண் வக்கீல் அவரது பெயர் கீர்த்தனா என்பவர்தான் பிணை எடுத்துவிடுகிறா இப்போ அவருக்கு ஜூனியராக ஏழாலை வடக்கைச் சேர்ந்த ஒரு பெட்ட சேர்ந்திருக்கிறா ****

******

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.