Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோழிகளின்.... இறக்குமதி,  குறைவடைந்துள்ளதால்... முட்டைகளுக்கு தட்டுப்பாடு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முட்டை, மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு!

கோழிகளின்.... இறக்குமதி,  குறைவடைந்துள்ளதால்... முட்டைகளுக்கு தட்டுப்பாடு.

கோழிப் பண்ணைக்கு தேவையான, கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேநேரம், கோழிப்பண்ணை உற்பத்திக்குத் தேவையான கோழிகளின் இறக்குமதி 80,000 இலிருந்து 10,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் கோழிப்பண்ணை தொழிலின் எதிர்காலம் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2022/1301021

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடேய்களா........கோழி வளர்க்கவும் பஞ்சியா????? 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அடேய்களா........கோழி வளர்க்கவும் பஞ்சியா????? 🤣

கோழியை... இறக்குமதி செய்து, முட்டை போட வைக்கிறார்கள்.
உள்நாட்டில்.. நவீன முறையில் முட்டை  பொரிக்க வைக்கவும், முடியாமல் இருக்கு.
இவர்களுக்கு... வாழைப்பழத்தை உரித்து, தீத்தி விட வேணும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அடேய்களா........கோழி வளர்க்கவும் பஞ்சியா????? 🤣

 

19 minutes ago, தமிழ் சிறி said:

கோழியை... இறக்குமதி செய்து, முட்டை போட வைக்கிறார்கள்.
உள்நாட்டில்.. நவீன முறையில் முட்டை  பொரிக்க வைக்கவும், முடியாமல் இருக்கு.
இவர்களுக்கு... வாழைப்பழத்தை உரித்து, தீத்தி விட வேணும். 

இறக்குமதியாக செய்து தள்ளியதாலேயே நாட்டில் இவ்வளவு பிரச்சனைகளும் வந்துள்ளது.

இன்னுமா இவர்கள் திருந்தவில்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
30 minutes ago, தமிழ் சிறி said:

கோழியை... இறக்குமதி செய்து, முட்டை போட வைக்கிறார்கள்.
உள்நாட்டில்.. நவீன முறையில் முட்டை  பொரிக்க வைக்கவும், முடியாமல் இருக்கு.
இவர்களுக்கு... வாழைப்பழத்தை உரித்து, தீத்தி விட வேணும். 

8 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இறக்குமதியாக செய்து தள்ளியதாலேயே நாட்டில் இவ்வளவு பிரச்சனைகளும் வந்துள்ளது.

இன்னுமா இவர்கள் திருந்தவில்லை?

அங்கையிருந்து வாற செய்தி முழுக்க இறக்குமதி இல்லாட்டி கடன் வாங்குற செய்தியாத்தான் இருக்கு.....மற்றது புத்த விகாரை கட்டுறது தமிழ் சனத்தின்ர காணி பிடிக்கிறதும்.

உழைச்சு தின்னாத மடச்சாம்பிறாணியள் 😂

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

உழைச்சு தின்னாத மடச்சாம்பிறாணியள் 😂

இது இப்போது தான் தெரியுமா? ....நான் எனது சொந்த அனுபவங்களை சொல்லுகிறேன் .  கேளுங்கள்   2021.இல்    வறுமையை ஒழிப்போம். என்ற ஒரு அமைப்பு  என்னை தொடர்பு கொண்டு முல்லைத்தீவு கோப்புலவில்  ஒரு ஏழை பையனுக்கு சைக்கிள் வேண்ட 25 ஆயிரம் ரூபாய் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்கள்  அத்துடன் ஒரு கணணி உம் வேண்டித் தரலாம்  எவ்வளவு முடியும் என்று சொல்லும் படி கேட்டேன்   நல்ல கணணி க்கு 70 ஆயிரம் வேண்டும் என்றார்கள்  சரி தரலாமென்று  ஒரு இலட்சத்து ஐந்து ஆயிரம் அனுப்பினேன்   அவர்கள் முதல் அனுப்பிய பையனின் படமும் கணணி கொடுத்த பின் கணணி...சைக்கிள்..உடன் நின்ற பையனும் வெவ்வேறு நபர்கள்  எவனாவது பயன் படுத்தினால் சரி என்று விட்டுட்டேன்    😛

மேலும் அவர்கள் உதவியை எதிரபார்த்தார்கள்   நான் கடன் என்றால் தரலாம். சும்மா தர முடியாது   என்றேன்  கோழி பண்ணை அமைக்க உதவும்படி கேட்டார் சரி பத்து இலட்சம் கடனாகக் தர முடியும் என்றேன்    ஆறு மாதத்துக்குள் செலவு கூட சீமெந்து விலையேற்றம்  என்று மொத்தம் பதின்நான்கு இலட்சம் அனுப்பியுள்ளேன்“  இதே காரணம் சொல்லி சுவிஸ் அறக்கட்டளை இலும் பணம் வேண்டியவர்கள்  ஆரம்பத்தில் படம் அனுப்பினார்  பிறகு அனுப்பவில்லை  கோழி பண்ணையும் தொடங்கவில்லை மாறாக வீடு கட்டியுள்ளார்கள்    அதாவது உடம்பை முறித்துக் உழைக்க விருப்பமில்லை   இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள் பார்ப்போம் 🤣

மொத்தம் ஆறு ஆயிரம் யூரோ  அனுப்பியுள்ளேன்“   அவருக்கு சரிதா என்று பெயர் வங்கி கணக்கு பிரசான்ன நவரத்தினம் என்ற பெயரில் உண்டு   நான் அவருக்கு சொன்னேன் இன்று அந்த ஆறு ஆயிரம் யூரோ  21 இலட்சம் ரூபாய் வரும் என்று   அவர் சொன்னார் இப்ப அதை பற்றி யோசித்து என்ன பலன்   இதுகளைப் பற்றி கவலை படுவது சுத்த வெஸ்ட்       ஒரு நாலு ஐந்து போத்தல்கள் மட்டின் விரான்டியை  குடித்து விட்டு குப்பிறப் படுத்துக்கிடக்கலாம்  😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்திலும் கமிசனை எதிர்பார்த்ததால்.. இறக்குமதியை தெரிவு செய்து இருந்த டொலரை கண்ணாபின்னாண்ணு தூக்கி வீசினதால்.. வந்த வினை.

எந்த நாடும் உள்நாட்டு உற்பத்தி இன்றி வெறுமனவே இறக்குமதியால் முன்னேறினது கிடையாது. சிங்கப்பூரில் கூட அந்த நிலை இல்லை. 

சிங்களம்.. இனவாதம் பேசிப் பேசி.. போர் செய்து நாட்டை நாசமாக்கினது தான் மிச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இது இப்போது தான் தெரியுமா? ....நான் எனது சொந்த அனுபவங்களை சொல்லுகிறேன் .  கேளுங்கள்   2021.இல்    வறுமையை ஒழிப்போம். என்ற ஒரு அமைப்பு  என்னை தொடர்பு கொண்டு முல்லைத்தீவு கோப்புலவில்  ஒரு ஏழை பையனுக்கு சைக்கிள் வேண்ட 25 ஆயிரம் ரூபாய் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார்கள்  அத்துடன் ஒரு கணணி உம் வேண்டித் தரலாம்  எவ்வளவு முடியும் என்று சொல்லும் படி கேட்டேன்   நல்ல கணணி க்கு 70 ஆயிரம் வேண்டும் என்றார்கள்  சரி தரலாமென்று  ஒரு இலட்சத்து ஐந்து ஆயிரம் அனுப்பினேன்   அவர்கள் முதல் அனுப்பிய பையனின் படமும் கணணி கொடுத்த பின் கணணி...சைக்கிள்..உடன் நின்ற பையனும் வெவ்வேறு நபர்கள்  எவனாவது பயன் படுத்தினால் சரி என்று விட்டுட்டேன்    😛

மேலும் அவர்கள் உதவியை எதிரபார்த்தார்கள்   நான் கடன் என்றால் தரலாம். சும்மா தர முடியாது   என்றேன்  கோழி பண்ணை அமைக்க உதவும்படி கேட்டார் சரி பத்து இலட்சம் கடனாகக் தர முடியும் என்றேன்    ஆறு மாதத்துக்குள் செலவு கூட சீமெந்து விலையேற்றம்  என்று மொத்தம் பதின்நான்கு இலட்சம் அனுப்பியுள்ளேன்“  இதே காரணம் சொல்லி சுவிஸ் அறக்கட்டளை இலும் பணம் வேண்டியவர்கள்  ஆரம்பத்தில் படம் அனுப்பினார்  பிறகு அனுப்பவில்லை  கோழி பண்ணையும் தொடங்கவில்லை மாறாக வீடு கட்டியுள்ளார்கள்    அதாவது உடம்பை முறித்துக் உழைக்க விருப்பமில்லை   இதற்கு என்ன செய்யலாம் சொல்லுங்கள் பார்ப்போம் 🤣

மொத்தம் ஆறு ஆயிரம் யூரோ  அனுப்பியுள்ளேன்“   அவருக்கு சரிதா என்று பெயர் வங்கி கணக்கு பிரசான்ன நவரத்தினம் என்ற பெயரில் உண்டு   நான் அவருக்கு சொன்னேன் இன்று அந்த ஆறு ஆயிரம் யூரோ  21 இலட்சம் ரூபாய் வரும் என்று   அவர் சொன்னார் இப்ப அதை பற்றி யோசித்து என்ன பலன்   இதுகளைப் பற்றி கவலை படுவது சுத்த வெஸ்ட்       ஒரு நாலு ஐந்து போத்தல்கள் மட்டின் விரான்டியை  குடித்து விட்டு குப்பிறப் படுத்துக்கிடக்கலாம்  😂🤣

எழுதத் தொடங்கினால் அழுதிடுவன் அண்ணை வேண்டாம் 😭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kandiah57 said:

ஒரு நாலு ஐந்து போத்தல்கள் மட்டின் விரான்டியை  குடித்து விட்டு குப்பிறப் படுத்துக்கிடக்கலாம்  😂🤣

நான் ஒரு வரியில் புதுக்கதை சொல்கிறேன் கேளுங்கள்.😄

சில தினங்களுக்கு முன் ஊரிலிருந்து ஒரு உறவு தொலைபேசி எடுத்தது. தான் ஒரு கோயிலுக்கு நேர்த்தி வைச்சு தூக்குகாவடி எடுத்து அன்னதானமும் குடுக்கப்போறனாம். ஒரு ஆயிரம் ஈரோ  அனுப்பட்டாம். 🙃

கவனிக்க⇉ கேட்டது ரூபாயிலை இல்லை ஈரோவில 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நான் ஒரு வரியில் புதுக்கதை சொல்கிறேன் கேளுங்கள்.😄

சில தினங்களுக்கு முன் ஊரிலிருந்து ஒரு உறவு தொலைபேசி எடுத்தது. தான் ஒரு கோயிலுக்கு நேர்த்தி வைச்சு தூக்குகாவடி எடுத்து அன்னதானமும் குடுக்கப்போறனாம். ஒரு ஆயிரம் ஈரோ  அனுப்பட்டாம். 🙃

கவனிக்க⇉ கேட்டது ரூபாயிலை இல்லை ஈரோவில 😎

அண்ணை அனுப்பி விட்டீங்களா ?. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, விசுகு said:

எழுதத் தொடங்கினால் அழுதிடுவன் அண்ணை வேண்டாம் 😭

நாங்கள் இருந்த இடத்திலேயே நிற்கின்றோம். அவர்கள் முன்னேறிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Kandiah57 said:

அண்ணை அனுப்பி விட்டீங்களா ?. 🤣

ஊரில் ஒரு வசனம்  சொல்வார்கள். கொடுத்தவன் கொடுக்கா விட்டால் வெட்டுப்பகை குத்துப்பகை வருமென.......:(

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

நான் அவருக்கு சொன்னேன் இன்று அந்த ஆறு ஆயிரம் யூரோ  21 இலட்சம் ரூபாய் வரும் என்று  

கந்தையா பச்சைத் தண்ணி என்று  யாரோ பறைஞ்சார்கள், மனதில என்று நினைக்கிறன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

கந்தையா பச்சைத் தண்ணி என்று  யாரோ பறைஞ்சார்கள், மனதில என்று நினைக்கிறன்!

அந்தச் சம்பவம் நடந்த பிறகுதான்…
கந்தையர் பச்சைத் தண்ணியாய் மாறினவர். 😁

  • கருத்துக்கள உறவுகள்

மனசில பச்சைத்தண்ணியாய் இருந்த மனிதரை இப்படி காசில பச்சைத்தண்ணியாய் மாத்திப்போட்டாங்களே படுபாவியள் யாரோ?  நல்லா வீட்டில வாங்கிக்கட்டியிருப்பார் கந்தையர்!

6 hours ago, Kandiah57 said:

அவர்கள் முதல் அனுப்பிய பையனின் படமும் கணணி கொடுத்த பின் கணணி...சைக்கிள்..உடன் நின்ற பையனும் வெவ்வேறு நபர்கள்

 

6 hours ago, Kandiah57 said:

அவர் சொன்னார் இப்ப அதை பற்றி யோசித்து என்ன பலன்   இதுகளைப் பற்றி கவலை படுவது சுத்த வெஸ்ட்

இதுவும் ஒருவகைல ஏமாற்றி பணம் பறிப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு பலர் கோழி வளர்ப்பில் ஈடுபடுகின்றார்கள். நான் அறிந்த விடயம் தட்டுப்பாடு காரணமாக தவிடு/கோழி தீவனம் வாங்கி போடுவது அவர்களுக்கு கட்டுபடியாகவில்லை. இதனால் கோழிகள் முட்டை இடுவது இல்லை/குறைவு என சொன்னார்கள். மற்றைய பிரச்சனை இவற்றை பீடிக்கும் நோய்கள் காரணமாக இறப்பு/இழப்பு ஏற்படுவது. 

  • கருத்துக்கள உறவுகள்

சில காலங்கள் முன்பு வரை ஒரு நாள் கோழிக் குஞ்சுகளும் அடை வைக்ககூடிய முடடைகளும் ஏற்றுமதி செய்யப்பட்டது.இறச்சிக் கோழிகளின் தாய் தகப்பன் கோழிகள் டமட்டும் தான் இறக்குமதி செய்யப்பட்டது.மற்றது கோழித்தீவனம் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடும் ஒரு காரனம் கோழி சம்பந்தமான பொருட்களின் விலை எற்றத்துக்கு காரனம்.கால் நடைத் தீவனத்தின் முக்கிய முலப்பொருள் சோழம்.அதை உற்ப்பத்தி செய்ய வேண்டும்.இப்பதான் அரசு நித்திரையால் எழும்பியிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:


இவர்களுக்கு... வாழைப்பழத்தை உரித்து, தீத்தி விட வேணும். 

அது போன மாசம் 
இப்ப கிரைண்டரில் அடிச்சு பருக்கோணும் 
(வாயை அசைகிறது கூட பெரிய வேலையா நினைக்கிறார்கள்) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

அது போன மாசம் 
இப்ப கிரைண்டரில் அடிச்சு பருக்கோணும் 
(வாயை அசைகிறது கூட பெரிய வேலையா நினைக்கிறார்கள்) 

உண்மையில்… ஊரில் இருப்பவர்கள் பலர்,
நோகாமல் நொங்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

உண்மையில்… ஊரில் இருப்பவர்கள் பலர்,
நோகாமல் நொங்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

எனக்கு என்னமோ நாம் தான் பாவம் பாவம் என்று எண்ணி 
அவர்களை சோம்பேறி ஆக்குகிறோமோ என்று உறுத்துதலாக இருக்கு 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Maruthankerny said:

அது போன மாசம் 
இப்ப கிரைண்டரில் அடிச்சு பருக்கோணும் 
(வாயை அசைகிறது கூட பெரிய வேலையா நினைக்கிறார்கள்) 

ஆரோ சொல்லி வைச்சு எழும்பேலாத அளவுக்கு மரண அடி அடிச்சிருக்கிறாங்கள். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஆரோ சொல்லி வைச்சு எழும்பேலாத அளவுக்கு மரண அடி அடிச்சிருக்கிறாங்கள். :cool:

அவர் சொல்லும் அளவுக்குக்காவது தப்பி இருக்கிறார் 😭

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

உண்மையில்… ஊரில் இருப்பவர்கள் பலர்,
நோகாமல் நொங்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நொங்கு எடுப்பவை எல்லோரும்..நல்லா வெட்டி குட்டித்தூக்கமும்..போடுவினம்....அரசியல்,அரசியல் சம்பந்தமாகக் கதைத்தால் மட்டும்...புலம்பெயர் சமூகம்...என்று வேறுபாடுகாட்டி..ஒதுக்கிவைப்பினம்...அதுவும்  தீட்டுபட்ட இனமாகவே எடுப்பினம்....புலம் பெயர் காசு இல்லாவிட்டால் ...கோயில் திருவிழாவும் இல்லை...  மோட்டச்சயிக்கிளுமில்லை...அங்கிருந்துவரும் சிலரின் கருத்தை கேட்கும்போது விசர்தான் வரும்..அவையின் எண்ணம் இங்கு கக்கூசு எடுத்துத்தான் பிழைப்பு நடத்துகினம் என்று...அது ஒரு காலம்தான்...ஆனால் இனி வரும்காலம் ..மிகப்படி௹த ஒரு புலம் பெயர் தமிழர் பரம் பரை உலகிற்கே முன்னோடியகத் திகழும் என்பதை ...விரைவில் இலங்கைத் தமிழினம்..உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை....நெஞ்சில் உள்ள பொறமைத்தீயை கொட்டவென்றே..ஒருசில எழுத்து வெருளிகள் உள்ளார்கள்... இவையில் ..சிலர் ஒட்டு அரசியல் விரும்பிகளே...

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, alvayan said:

நொங்கு எடுப்பவை எல்லோரும்..நல்லா வெட்டி குட்டித்தூக்கமும்..போடுவினம்....அரசியல்,அரசியல் சம்பந்தமாகக் கதைத்தால் மட்டும்...புலம்பெயர் சமூகம்...என்று வேறுபாடுகாட்டி..ஒதுக்கிவைப்பினம்...அதுவும்  தீட்டுபட்ட இனமாகவே எடுப்பினம்....புலம் பெயர் காசு இல்லாவிட்டால் ...கோயில் திருவிழாவும் இல்லை...  மோட்டச்சயிக்கிளுமில்லை...அங்கிருந்துவரும் சிலரின் கருத்தை கேட்கும்போது விசர்தான் வரும்..அவையின் எண்ணம் இங்கு கக்கூசு எடுத்துத்தான் பிழைப்பு நடத்துகினம் என்று...அது ஒரு காலம்தான்...ஆனால் இனி வரும்காலம் ..மிகப்படி௹த ஒரு புலம் பெயர் தமிழர் பரம் பரை உலகிற்கே முன்னோடியகத் திகழும் என்பதை ...விரைவில் இலங்கைத் தமிழினம்..உணரும் காலம் வெகு தூரத்தில் இல்லை....நெஞ்சில் உள்ள பொறமைத்தீயை கொட்டவென்றே..ஒருசில எழுத்து வெருளிகள் உள்ளார்கள்... இவையில் ..சிலர் ஒட்டு அரசியல் விரும்பிகளே...

அண்மையில் ஒருவர் (அவரது கணவர் புலத்தில் சொந்த தொழில் வைத்திருப்பவர்)  தாயகத்தில் உள்ள ஒருவருடன் தொலைபேசி பேசிக்கொண்டிருந்த போது உங்கள் கணவர் எங்கே என்று தாயகத்தில் உள்ளவர் கேட்டதற்கு அவர் கடைக்கு போயிருக்கிறார் என்று இவர் சொல்ல தாயகத்தில் உள்ளவர் உடனே கூட்டி கழுவத்தானே போனவர் என்றாராம்.😭

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, விசுகு said:

அண்மையில் ஒருவர் (அவரது கணவர் புலத்தில் சொந்த தொழில் வைத்திருப்பவர்)  தாயகத்தில் உள்ள ஒருவருடன் தொலைபேசி பேசிக்கொண்டிருந்த போது உங்கள் கணவர் எங்கே என்று தாயகத்தில் உள்ளவர் கேட்டதற்கு அவர் கடைக்கு போயிருக்கிறார் என்று இவர் சொல்ல தாயகத்தில் உள்ளவர் உடனே கூட்டி கழுவத்தானே போனவர் என்றாராம்.😭

கற்காலத்தில் வாழுகினம்...அடிமையாய் வாழ்ந்தாலும்...கல்வியில் கருத்துடையோர் எமது இனம்...இதை எமது புலம்பெயர் சமூகம் .நிறுவிக்காட்டியிருக்கிறது..இதை உணராத கிணத்துத் தளைகள்தான் ..இப்பவும் சத்தமிடுகின்றன...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.