Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் கைதிகள் எட்டு பேருக்கு விடுதலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகள் எட்டு பேருக்கு விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் எட்டு பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் நீதி அமைச்சருக்கு வடக்கு கிழக்கு மக்கள் சார்பாக  நன்றியும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் ஐந்து வருடம் முதல் 200 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களாவார்.

இவ்வாறு விடுவிக்கப்படுவோரின் பெயர்களையும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. வெளியிட்டார். அவர்களின் பெயர்கள் வருமாறு,

01) வரதராஜன்

02) ரகுபதி சர்மா

03) இலங்கேஷ்வரன்

04) நவதீபன்

05) ராகுலன்

06) காந்தன்

07) சுதா

08) ஜெபநேசன்
 

http://www.samakalam.com/அரசியல்-கைதிகள்-எட்டு-பே/

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் லைக்காவின் வேண்டுகோள் காரணமாக விடுவிக்கப்பட்டதாக ஒரு செய்தி உலாவருகிறதே??

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விசுகு said:

இவர்கள் லைக்காவின் வேண்டுகோள் காரணமாக விடுவிக்கப்பட்டதாக ஒரு செய்தி உலாவருகிறதே??

இவர்கள் விடுதலைக்கு இவர்கள் குடும்பத்தினர் நண்பர்கள் தான் மூலம். வெற்றி வரும் போது இப்படி புரளிகள் வருவது வியப்பில்லையே. 

இவர்களில் சிலருக்கு ஒருகாலம் யாழ் உறவுகள் உதவியும் கிடைத்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. இதே போல் ஏனையவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

இவர்கள் விடுதலைக்கு இவர்கள் குடும்பத்தினர் நண்பர்கள் தான் மூலம். வெற்றி வரும் போது இப்படி புரளிகள் வருவது வியப்பில்லையே. 

இவர்களில் சிலருக்கு ஒருகாலம் யாழ் உறவுகள் உதவியும் கிடைத்தது. 

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0NqYYkLr9Ub2xpFa4vNhrhcjbaR1mUL4xtxGEVNhFk3dVB7AB8svTGh3kEXwBCo4Rl&id=1221829824

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் விடுதலையடைந்தது மிக்க மகிழ்ச்சி, ஏனையோரும் விடுவிக்கப்படவேண்டும். அதேபோல் விடுதலையடைபவர்களை அரசியல் காரணங்களுக்காக பகடைக்காய்களாக பாவிப்பதும்,  பழிவாங்கலுக்காக சிறையிலடைப்பதும் நிறுத்தப்பட வேண்டும்.  ஏன் விடுதலையானோம் என்று நினைக்கவும் தோன்றும் அவர்களுக்கு கொடுக்கும் அலைச்சலில். புனர்வாழ்வளித்து விடுவித்தோம் என்று மார்பு தட்டுவதும் பிறகு பிடித்து அடைப்பதும் அடிப்பதும், புலிகளை அழித்துவிட்டோம் என்று விழா கொண்டாடுவதும், அவர்களை அடக்குவதற்காக இராணுவத்தை நம் நிலங்களில் நிறைப்பதும் தங்கள் போலித்தனத்தை, தங்கள் மேல் தங்களுக்கே இல்லாத நம்பிக்கையையும் காட்டுகிறது. இதில நல்லிணக்கத்தை கட்டியெழுப்புகினமாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சிலர் தீபாவளி அன்று விடுதலை செய்யப்பட உள்ளார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி! இனியாவது வாழட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி! இனியாவது வாழட்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

மேலும் சிலர் தீபாவளி அன்று விடுதலை செய்யப்பட உள்ளார்களாம்.

அவர்களின் விடுதலை நம்ம தலீவரின் வேண்டுகோளின்படி?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் தீபாவளி தினத்தன்று விடுதலை-டக்ளஸ்

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினர் தீபாவளி தினத்தன்று விடுதலை-டக்ளஸ்

தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டம் கட்டமாக அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ ஆகியோருக்கு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியையும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை “சில மாதங்களுக்கு முன்னர், எதிர்கால ஜனாதிபதி பற்றிய கேள்விகள் நாட்டில் தோன்றிய போது, பலரும் தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களே நாட்டை வழிநடத்தப் பொருத்தமானவர் என்பதை நாம் திட்டவட்டமாக தெரிவித்திருந்தோம் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை ஜனாதிபதியின் ஆரோக்கியமான செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1306150

  • கருத்துக்கள உறவுகள்
On 20/10/2022 at 13:14, விசுகு said:

இது ஒரு முகநூல் செய்தி. உண்மை அதுவல்ல.  அரசியல் செய்ய அரசியல் கைதிகள் வாழ்வுடன் விளையாடாமல் இருத்தல் நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்

யார் வந்தாலும் விளக்குப் பிடிக்கிற அய்யாவுக்கு நல்ல அபிசேக மந்திரமும் செய்யத் தெரியும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

இது ஒரு முகநூல் செய்தி. உண்மை அதுவல்ல.  அரசியல் செய்ய அரசியல் கைதிகள் வாழ்வுடன் விளையாடாமல் இருத்தல் நன்று. 

இந்த பதிவை எழுதியவர் லைக்காவின் பாட்னர் மற்றும் மூளை என்று சொல்லப்படும் பிரேம் இன் தம்பியார். எனவே ஏதாவது?????

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

இந்த பதிவை எழுதியவர் லைக்காவின் பாட்னர் மற்றும் மூளை என்று சொல்லப்படும் பிரேம் இன் தம்பியார். எனவே ஏதாவது?????

தற்போது விடுதலையான அனைவரும் தண்டனை கிடைத்து அடுத்த வருடம் தொடக்கம் 3,4,ம் மாதங்களில் வீடுகளுக்கு செல்லும் வாய்ப்புடன் இருந்தவர்கள். 

அவர்கள் சிலமாதங்கள் முந்தி வீடு செல்கிறார்கள். வேறு அதிசயம் எதுவும் இல்லை. 

 

ஒருக்கால் அந்த மூளையிடம் சொல்லி விடுங்கோ. இன்னும் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டவர்கள் எப்போது வீடு போவோம் என்று எதுவும் தெரியாது இருக்கும் கைதிகளை எடுத்து விடச்சொல்லுங்கோ. 

எருமை ஏறோப்பிளேன் ஓடும் கதை சொல்லிகள் கூடிப்போச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

தற்போது விடுதலையான அனைவரும் தண்டனை கிடைத்து அடுத்த வருடம் தொடக்கம் 3,4,ம் மாதங்களில் வீடுகளுக்கு செல்லும் வாய்ப்புடன் இருந்தவர்கள். 

அவர்கள் சிலமாதங்கள் முந்தி வீடு செல்கிறார்கள். வேறு அதிசயம் எதுவும் இல்லை. 

 

ஒருக்கால் அந்த மூளையிடம் சொல்லி விடுங்கோ. இன்னும் மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டவர்கள் எப்போது வீடு போவோம் என்று எதுவும் தெரியாது இருக்கும் கைதிகளை எடுத்து விடச்சொல்லுங்கோ. 

எருமை ஏறோப்பிளேன் ஓடும் கதை சொல்லிகள் கூடிப்போச்சு. 

அதாவது அடுத்த வருசம்  அவர்களை அரசு  தானாகவே விட்டிருக்கும்??

இது எருமை ஏறோப்பிளேன் ஓடும் கதையைக்கூட நம்பலாம் போல  கிடக்கு???😭😂

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அதாவது அடுத்த வருசம்  அவர்களை அரசு  தானாகவே விட்டிருக்கும்??

 

ஓம்.  வழக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டவர்கள். அவர்களது தண்டனைக் காலம் முடிய வீடு போக. இருந்தவர்களை கொஞ்ச காலம் முன்பு விட்டுள்ளார்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட அரசியல்கைதிகள் நால்வர் விடுதலை !

By DIGITAL DESK 5

22 OCT, 2022 | 07:18 PM
image

(நா.தனுஜா)

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 தமிழ் அரசியல்கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய நால்வரில் இரகுபதி ஷர்மா உள்ளடங்கலாக இருவர் ஏற்கனவே தமக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்திருப்பதனால், இதுவரை அவர்கள் விடுதலைசெய்யப்படவில்லை.

மேலும் இருவருக்கு புனர்வாழ்வளிக்கப்படவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதனால் அதுகுறித்த உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவேண்டியுள்ளதால் அவர்களது விடுதலையும் தாமதமடைந்துள்ளது.

பலவருடகாலமாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த வரதராஜன், இரகுபதி ஷர்மா, இலங்கேஸ்வரன், நவதீபன், ராகுலன், காந்தன், சுதா மற்றும் ஜெபநேசன் ஆகிய 8 அரசியல்கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பதாக கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் அவர்கள் எண்மரும் நாளை தீபாவளி தினத்தன்று (24) விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பைச்சேர்ந்த வீரக்குமார் ராகுலன்,   இராமநாதன் நவதீபன், வவுனியாவைச்சேர்ந்த சக்திவேல் இலங்கேஸ்வரன் மற்றும் மன்னாரைச்சேர்ந்த ஜெபநேசன் பெர்னாண்டோ ஆகிய நால்வரும் நேற்று வெள்ளிக்கிழமை (21) விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சக்திவேல் இலங்கேஸ்வரன் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் 23 வருடங்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்ததுடன் ஏனைய மூவரும் 15 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

அத்தோடு தற்போது ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் அனைவரும் இன்னும் சிலகாலங்களில் விடுதலைசெய்யப்படவிருந்தவர்களாவர் என்று அரசியல்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதுஎவ்வாறிருப்பினும் தற்போது 8 தமிழ் அரசியல்கைதிகளை விடுவிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கையைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அவர், நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 40 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல்கைதிகளையும் விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/138224

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2022 at 01:07, satan said:

அவர்களின் விடுதலை நம்ம தலீவரின் வேண்டுகோளின்படி?

அவர் எவர் @satan😀

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, shanthy said:

அவர் எவர் @satan😀

நம்ம ட (ந)க்கிண்ணா

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, shanthy said:

அவர் எவர் @satan😀

அடுத்த தீபாவளிக்கு, பொங்கலுக்கு என்று ஒருவர் வெடி கொழுத்துகிறவர், நீங்கள் கேள்விப்படவில்லையோ?

 

On 21/10/2022 at 07:54, nunavilan said:

மேலும் சிலர் தீபாவளி அன்று விடுதலை செய்யப்பட உள்ளார்களாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 23/10/2022 at 04:56, satan said:

அடுத்த தீபாவளிக்கு, பொங்கலுக்கு என்று ஒருவர் வெடி கொழுத்துகிறவர், நீங்கள் கேள்விப்படவில்லையோ?

 

 

லைகா போட்ட வெடி எல்லாத்தையும் விழுங்கீட்டுது. 😀

On 22/10/2022 at 16:28, ஏராளன் said:

பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட அரசியல்கைதிகள் நால்வர் விடுதலை !

By DIGITAL DESK 5

22 OCT, 2022 | 07:18 PM
 .

அத்தோடு தற்போது ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும் அனைவரும் இன்னும் சிலகாலங்களில் விடுதலைசெய்யப்படவிருந்தவர்களாவர் என்று அரசியல்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

.

https://www.virakesari.lk/article/138224

விசுகு இந்த பந்தியை அந்த லைகா மூளைக்கு அனுப்பி வையுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

விசுகு இந்த பந்தியை அந்த லைகா மூளைக்கு அனுப்பி வையுங்கள். 

 

நீங்க இன்னும்  மூளையை  விடவே  இல்லைப்போலும்🤣

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2022 at 07:01, shanthy said:

லைகா போட்ட வெடி எல்லாத்தையும் விழுங்கீட்டுது. 😀

விசுகு இந்த பந்தியை அந்த லைகா மூளைக்கு அனுப்பி வையுங்கள். 

@shanthy

https://www.facebook.com/1221829824/posts/pfbid02fznVnSZUaydPSBtHVLwrxu91n4BTNoDLo4RNYrrAUpFMCiMJ3WXzkXKWY9W9HD7Sl/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.